Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகப்படங்கள்
#21
<img src='http://www.erimalai.com/img/maaveerar2001.jpg' border='0' alt='user posted image'>
#22
<img src='http://www.paadumeen.com/News/14.06.2003-1.jpg' border='0' alt='user posted image'>
#23
<img src='http://www.erimalai.com/2003-feb/images/tamilar.jpg' border='0' alt='user posted image'>
#24
<img src='http://www.erimalai.com/2003-feb/images/BATTL%7E23.jpg' border='0' alt='user posted image'>
#25
ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க
விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து
உங்களின் கரங்கள் நீளும்
நிற்போம்
"அண்ணை நானும்வரட்டா?"
என்பீர்கள்
வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம்.
ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள்
ஒரு கணம் நிதானம் இழந்து போனால்
"டிம்" இல்லையோடா?
என்று திட்டுவீர்கள்.
சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும்.


பாதுகாப்பாக பீரங்கிகளை நிலைப்படுத்தி
எண்ணியெண்ணி எறிகணை செலுத்திய
காலங்கள் விலகிப்போக
எதிரிகள் ஓடும் வேகத்திற்கேற்ப
எறிகணை செலுத்திகளை நகர்த்தும்
வாகனங்களைச் செலுத்தும் வல்லமை பெற்ற
சகோதரிகளினுடைய சகோதரர்களே.
இரவிலே வாகனங்கள் செலுத்தும் அனைவரும்
ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்று
எப்படி உறுதியாகத் தீர்மானிக்கிறீர்கள்?
உங்களின் எழுதாத சட்டங்களைத்
து}க்கி எறிந்துவிட்டு
தயவு செய்து கவனியுங்கள்.
நாளைக்கு உங்கள் அக்கா
ர்யைஉந செலுத்திச் செல்லக்கூடும்
உங்களது கடைசித் தங்கை
Pயளளழைn இல் பறத்தல் நேரும்
கப்பற் தொகுதிக் கட்டளைத் தளபதியாய்
மருமகள் பிறத்தல் ஆகும்.
தமிழீழத்தில் ஓர் நல்ல விமானியாய்
பெறாமகள் இருத்தல் நிகழும்.
சட்டங்கள் பெற்றாலும் சுதந்திர தமிழீழத்தில்
வேலையில்லாச் சிக்கலிற்குள்
சிக்காது உங்களது
புதல்வியால் கூட வீதிப் புனரமைப்பில் ஈடுபடும்
கனரகங்களை கன கச்சிதமாய்ச் செலுத்த முடியும்
உருளச் சிரமப்படும் உலகத்தை ஒற்றைக் கையால் உருட்டப் போகும் உங்களது
பேத்தியின் பெருமை காணும்
பேறு உங்களுக்கு இருத்தல் நல்லது.


எமதருமை உறவுகளே
இனியேனும் வாகனங்களை மறிக்கும் போது
பொதுப்பெயரில் விளித்துதவி கேளுங்கள்.
உறவுப் பெண்களாயிருந்தால் உந துருளிகளிலும்
ஏனையவர்களானால் ஏனைய வாகனங்களிலும்
இடமிருந்தால் நிச்சயம் உதவுவார்கள்.


நேற்றும் இன்றும் நாளையும்
ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது என்பதுடன்
இது
சூரியனின் புதல்விகள் உலவும் தேசம்.
இக்கவிதை எரிமலை டிசம்பா 2002 இதழில் அச்சுப்பிழையுடன்
வெளிவந்தமையால் மீண்டும் இவ விதழில் பிரசுரிக்கின்றோம்.
நிலா
#26
<img src='http://www.erimalai.com/2003-feb/images/kanni.jpg' border='0' alt='user posted image'>
#27
<img src='http://www.erimalai.com/2003-feb/images/s.jpg' border='0' alt='user posted image'>
#28
இனிக்கும் உம் உயிரை
அர்ப்பணிக்கத் துணிந்து விட்ட
எம்மண்ணின் புதல்வர்களே!
உம்மை நினைக்கயிலே-
கல்லும் கசிந்துருகும்,
காற்றும் நின்றசையும்,
வான வெளியும்
ஒளிப்பொட்டாய் நீர் சிந்தும்
எம்மினிய
புதல்வர்களே!
எம்மனமோ
எரிமலையாய் குமுறியெழும்

செல்வராசா அமைதியின்றித் தவித்தான். அவன் எதிர்பார்த்த மாதிரி எதுவுமே நடக்கவில்லை. காலத்தின் மந்தகதியான சுழற்சியில் எல்லாமே மாறிவிடுமென அவன் எதிர்பார்த்தான். மனிதர்கள் நல்லவர்களாகி விடுவார்கள். சுயநலத்தை மட்டுமல்லாமல் பரநலத்தைப் பற்றியும் சிந்திப்பவர்களாய் இருப்பார்கள். பேராசை பிடித்தவர்களாய் இருக்க மாட்டார்கள். தாம் வாழும் காலத்தைப்பற்றி அடிக்கடி நினைப்பவர்களாய்- நல்லவற்றை மட்டுமே செய்பவர்களாய் - நாம் வாழும் காலத்தின் உன்னதமான தியாகங்களை உணர்ந்தவர்களாய்லு}.
எல்லாமே வீணாகி விட்டது. மனிதன் அதே மாதிரித்தான் வாழ்கிறான் - முதல் மனிதனைப் போல, முரட்டுத் தோற்றம், கோரப்பற்கள், நீண்ட சடைகள், வெறித்த பார்வை, நிர்வாணக் கோலம் மாறி இருக்கலாம். ஆனால் அதே மாதிரித்தான்லு}. தவிh க்கப்பட்ட பழத்தைப் புசிக்கும் அங்கலாய்ப்புடன், வெறியுடன், தீராத மோகத்துடன், காட்டுமிராட்டித்தனத்துடன்லு}..
எல்லாரும் உபதேசிக்கிறார்கள் உபதேசம் செய்யும் உன்னதமான கலையில் எல்லாரும் வல்லவர்களாக இருக்கிறார்கள். உபதேசம், நன்னடத்தை, நற்பழக்க வழக்கங்கள், நல்வாழ்க்கை.
எள்ளானாலும் ஏழாகப் பகிர வேண்டுமென்பார்கள். ஆனால் சுவையான பண்டங்களை ஒருவருக்கும் கொடாது ஒழித்து வைத்துத் தின்பார்கள்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு உயிர்ச்சத்துக்களின் இன்றியமையாமை பற்றி உபதேசம் செய்வார்கள். ஆனால் அரிசியை நன்றாகக் குற்றித் தீட்டிச் சமைப்பார்கள். அரிசிக் கஞ்சியை வடித்து கன்றுக்குட்டிக்குக் கொடுத்துக் கொழுக்க வைப்பார்கள்.
சுகாதாரப் பழக்கவழக்கங்கள் என்று நீட்டிமுழக்குவார்கள். கை கால் அலம்பிச் சாப்பிட மாட்டார்கள். உடைகளைத் தோய்த்து உடுத்த மாட்டார்கள். மலசலம் கழித்த பின் கால் கழுவமாட்டார்கள்.
நீதி, நேர்மை, நியாயமெனப் பேசுவார்கள். ஆனால் மற்றவர்களுடனான கொடுக்கல் வாங்கல்களில் சரியாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
செல்வராசா ஏமாந்து போனான். வாழ்க்கையே வேஸம் போடுதல் என்பதாகப் போயிற்று. வேஸம் போடுபவர்களே வாழத்தெரிந்தவர்கள் என்பதாயிற்று. நன்றி மிக்கவர்களாய் வாலைக் குழைகின்றவர்கள் - எதிரிகளைக் கண்டால் குரைக்கின்றவர்கள் நாய் வேஸம் போட்டவர்கள், குழைந்து பதுங்கி ஏமாற்றுகின்றவர்கள் - நரி வேஸம் போட்டவர்கள், நம்மை விட ஆளில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி நடக்கின்றவர்கள், யானை வேஸத்தினர், எதற்கும் மருண்டு ஒதுங்குகிறவர்கள் - மான் வேஸதாரிகள், ஆடி மயக்குபவர்கள், மயில் வேஸம் போட்டவர்கள் உலகமே வேஸதாரிகளின் உலகமாகப் போயிற்று.
செல்வராசா செல்வராசாவாகவே இருக்க விரும்பினான். தான் நினைப்பதே - தான் உழல்வதே தனது வாழ்க்கை என்று நம்பினான். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். மற்றவர்கள் என்ன சொல்வார்களென்று எல்லாம் பார்க்காது, தன் வாழ்வு யாத்திரையின் நாற்பது வருடங்களைக் கடந்திருந்தான் அவன்.
இளமைப்பருவத்து நினைவுகள் வசீகரம் மிக்கவையாக இருந்தன. ஒரு இனிய கனவு போல அப்பருவம் கழிந்துவிட்டது. நடையாய் நடந்து தொலைதூர நகரத்துப் பாடசாலைக்குச் சென்ற நாட்கள் மங்கிய பதிவுகளாய் மனத்தில் மிதக்கின்றன. பரந்து விரிந்து விழுதூன்றி நிழல் பரப்பி நிற்கும் ஆலமரம்; மாரிவெள்ளத்தில் நிரம்பும் கோவில்குளம்; இலந்தை மரங்களும் விளா மரங்களும் நிறைந்த பற்றைக் காடுகள். இவற்றிலெல்லாம் இளம் பறவைகளாய் குதூகலித்துத் திரிந்த நண்பர்கள் கூட்டம். அப்போதெல்லாம் செல்வராசா செல்வராசாவாகவே இருந்தான். அவனின் நினைவுகள், அவனின் ஆசைகள், அவனின் கனவுகள் எல்லாம் அவனுடையனவாகவே இருந்தன. அவன் மகிழ்ச்சியாக இருந்தான். துக்கம் மிக்கவனாகச் சுற்றித்திரிந்தான். எல்லைகாண முடியாத சோகத்தில் ஆழ்ந்து கிடந்தான்.
இளமைப்பருவத்து இனிய கனவுகள் அவனுள் முளை கொண்டிருந்தகாலம். காணும் காட்சிகளெல்லாம் நளினமும், துடிப்பும், வசீகரமும் இழை இழையாய் பின்னி, இன்னிசை மயமாய் பொலிந்து கொண்டிருந்த பருவம். கண் அசைவும், கைவீச்சும், ஒய்யார நடையும், பின்னலின் நெளிவும், மின்னலடிக்கும் புன்னகையுமாய் - உலகமே கவர்ச்சிக் கண்களால் அவனை இனிமையான துயரத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்த வேளைகள். இனம் புரியாத ஏக்கத்தில் அவன் தவித்துக் கொண்டிருந்தான். என்னவென்று சொல்லமுடியாத ஒரு தவிப்பு. ஏதேதோ எதிர்பார்ப்பு, இரவெல்லாம் கனவுகள். பகலில் ஒரு மோன மயக்கம்.
இளமையின் தவிப்பு என்று சொல்வார்கள். அவனுக்கு இணையாக ஒருத்தியைப் பிணைத்து வைத்தார்கள்.
தாபம், மோகம், தவிப்பு எல்லாம் அடங்கிப் போயிற்று. வாழ்வின் அர்த்தங்கள் புரிந்தன போலிருந்தன. ஒரு இனம் புரியாத அமைதி கவிந்தது. ஒரு சாந்தம் மனதில் நிரம்பிற்று. எல்லாமே அழகாய் - அமைதியாய் பொலிந்து போயிருந்தது.
இதிலெல்லாம் செல்வராசா செல்லவராசாவாகவே இருந்தான்.
இணைந்த வாழ்க்கை தொடக்கத்தில் இரம்மியமானதாகவே இருந்தது. நாட்களின் நகர்வில் முரண்கள் தலை காட்டத் தொடங்கின. தான் நினைப்பது போல உலகம் இல்லை என்ற பாடத்தையும் முதன்முதலில் தன் இணையிடமே அவன் கற்றான்.
மனிதர்கள் வேறு வேறானவர்கள், மனங்கள் வேறு வேறானவவைகள், பழுத்து விழும் இலைகள் காற்றில் சுழன்று சுழன்று மிதக்கும் அழகில் அவன் திளைத்த போது - அவன் குப்பைகள் என்று மரங்களையே வெட்ட முற்பட்டான். அவன் நாயுடனும் கோழியுடனும், கன்றுக்குட்டியிடமும் பரிவாய் நடந்து, அவற்றுடன் ஒன்றிய போது - அவள் பைத்தியம் என்று கேலி பேசி, அவன் மனம் நோகச் செய்தாள். அவன் வானொலியில் மதுரை சோமுவின் சங்கீதத்தை இரசித்த போது - அவள் கிழவனின் உளறல் என்பதாய் அதைத் திருகிக் குலைத்தாள். அவன் அவளைத் தன் நேசத்திற்கும் நம்பிக்கைக்குமுரியவள் என்பதாகக் கொண்டு கரைந்த போது, அவள் அவனை தனக்கேயான வெறும் சடப்பொருள்களில் ஒன்றாகவே கருதி நடந்தாள்.
செல்வராசா தனக்குள் உடைந்து போனான். அப்போதும் கூட அவன் 'தானகவே' இருந்து ஒரு கவிதை எழுதினான்.


என்னுடைய காலங்கள்
இப்படியே போகிறது.
வர்ணமில்லை,
வடிவமில்லை
வார்த்தைகளை மீறிநிற்கும்
அமைதியில்லை
அழகுமில்லை.
எந்நாளும் ஒரு நாளாய்
தடமழியா அத்தடத்தில்
என்னுடைய காலங்கள்
இப்படியே போகிறது.
தரித்து நிற்க
முடியாமல்
தறிகெட்டுப் போகிறது.


என்னுயிரின் வேதனையை
இவ வுலகில் யாரறிவார்.
என் இதயத் தாபங்களை
இங்கெவரோ அறிந்திடுவார்.
என் நரம்பின் துடிப்பெல்லாம}.
என் இதயப் பிழிவெல்லாம்.
என் கவிதை
என் கனவு
என் காதல்
என் அன்பு
எல்லாமே இவ வுலகில்
பார்ப்பாரே இல்லாத
பால் நிலவாய் போகிறது.
எனக்கென்று எவருமில்லை
என்னை உணர்தற்காய்
என்னை உயர்த்துதற்காய்
என்னை உருக்கி
உயிரழிய வைப்பதற்காய்
என்னைக் கரைப்பதற்காய்லு}.
என்னுடனே ஒன்றியதில்
தானும் கரைவதற்காய}.
எனக்கென்று எவருமில்லை
எனக்கென்று எவருமில்லை.
நான் தனியன்
நான் தனியன்
என்னுடைய
காலங்கள்
இப்படியே போகிறது.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு செல்வராசா மாறிப் போனான். தன் சுயத்தை - தனித்துவத்தை இழந்தவனானான், வெறும் நடைப்பிணமாய்ப் போனான்.
கால நீரோட்டத்தில் ஒரு திவலையாய் அவன் வாழ்வும் ஓடும் போது - ஒரு பிரளயமாய் சம்பவங்கள் நிகழத்தொடங்கின. ஒழுங்கைகளில் இராணுவ ட்றக்குகள் ஓடத்தொடங்கின. எங்கிருந்தோ எல்லாம் இளைஞர்கள் திரண்டார்கள். வெடிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. மூட்டை முடிச்சுகளுடன் மக்கள் அகதிகளாய் இடம்பெயர்ந்தார்கள். விமானங்கள் குண்டுகளை வீசித்தள்ளின. எமது மண்ணில் அகால மரணங்கள் அதிகரித்தன. அங்கவீனர்கள் பெருகினார்கள். வாழ்வே சாவுக்கான எதிர்பார்ப்பு என்பதாய் மாறிப்போனது.
எங்கிருந்தெல்லாமோ இளைஞர்கள் ஆண்களும் - பெண்களுமாக முளைத்தெழுந்தார்கள். அவர்கள் அணிதிரண்டு போர்ப் பயிற்சி பெற்றார்கள். எமது மண்ணில் காற்றடம் பதித்த எதிரியை கலைக்க முனைத்தார்கள். விழுப்புண் பெற்றார்கள், மாவீரர்கள் ஆனார்கள். மீண்டும்லு}. மீண்டும் இளையவர்கள் முளைத்தார்கள்.
மாபெரும் தியாகம் - தம்மை ஆகுதியாக்கிடும் தியாகம். எதிரியிடமிருந்து எமது மண்ணை விடுவிக்கும் போரில்லு} தம்மையே அர்ப்பணிக்கும் எல்லை காண முடியாத தியாகம்லு}.
அவனின் புூமி விடுதலை பெறும். அவன் பிறந்த மண்ணிலிருந்து எதிரிகள் அகற்றப்படுவார்கள். பாடசாலை நாட்களில் அவன் திரிந்த இடங்களில் எல்லாம் சுதந்திரக்கொடி பறக்கும்- அகதிகளாய் ஆனவர்கள் மீண்டும் தமது மண்ணுக்குத் திரும்புவார்கள். பழையபடியே அர்த்தமுள்ள வாழ்வின் உயிர்த்துடிப்பின் சலனங்கள் எழும்பும்.
செல்வராசா உற்சாகம் மிக்கவனானான். தனித்த வாழ்வின் சோகங்களை மறந்து இயங்கத் தொடங்கினான். கதைகள், கவிதைகள், கட்டுரைகளென எழுதத்தொடங்கினான்.


இனிக்கும் உம் உயிரை
அர்ப்பணிக்கத் துணிந்து விட்ட
எம்மண்ணின் புதல்வர்களே!
உம்மை நினைக்கயிலே-
கல்லும் கசிந்துருகும்,
காற்றும் நின்றசையும்,
வான வெளியும்
ஒளிப்பொட்டாய் நீர் சிந்தும்
எம்மினிய
புதல்வர்களே!
எம்மனமோ
எரிமலையாய் குமுறியெழும்


ஆனால் மனிதர்களை நினைக்கும் போது, செல்வராசா அமைதியின்றித் தவித்தான். இந்த மண்ணில் நிகழும் மகத்தான நிகழ்வுகளைப் புரியாதவர்களாய்- சுயநலத்தை மட்டுமே சிந்திப்பவர்களாய் - சாதாரணமானவர்களாய்லு}. வேஸதாரிகளாய்
பேச்சொன்றும் செயலொன்றுமாய் வாழ்பவர்களாய்லு}. செல்வராசா செல்வராசாவாகவே
இருக்க முயன்றான்.
குப்பிளான் ஐ. சண்முகன்
#29
<img src='http://www.erimalai.com/2003-feb/images/anaiyathatheepam.jpg' border='0' alt='user posted image'>
#30
<img src='http://www.erimalai.com/2002-aug/images/army-2.gif' border='0' alt='user posted image'>
#31
<img src='http://www.erimalai.com/2002-aug/images/susai.gif' border='0' alt='user posted image'>
#32
<img src='http://www.erimalai.com/2002-aug/images/women.gif' border='0' alt='user posted image'>
#33
<img src='http://www.erimalai.com/2002-aug/images/muran.gif' border='0' alt='user posted image'>
#34
<img src='http://www.erimalai.com/2002-aug/images/kanni.gif' border='0' alt='user posted image'>
#35
<img src='http://www.erimalai.com/2002-aug/images/BATTLE-pen1.gif' border='0' alt='user posted image'>
#36
<img src='http://www.erimalai.com/2002-aug/images/aparithamana.gif' border='0' alt='user posted image'>
#37
<img src='http://www.erimalai.com/2002-aug/images/aparithamana1.gif' border='0' alt='user posted image'>
#38
<img src='http://www.erimalai.com/2002-aug/images/adel_tha.gif' border='0' alt='user posted image'>
#39
<img src='http://www.erimalai.com/2002-aug/images/adel3.gif' border='0' alt='user posted image'>
#40
<img src='http://www.erimalai.com/2002-aug/images/kadal.gif' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)