Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனிதரைக் கடிக்கும் முஸ்லீம் மதப்பயங்கரவாதம்.!
#1
<b>ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிக்கும் முஸ்லீம் மதப்பயங்கரவாதம்...!</b>


<b>மட்டக்களப்பு காத்தான்குடியில் மீண்டும் பதட்டம் கிரனைட் வீச்சில் 15 காயம் </b>

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம் மதப் பிரிவினரிடையே மீன்டும் இன்றிரவு வன்முறை வெடித்துள்ளது. இதன் காரணமாக 15 ற்கும் மேற்பட்டவர்கள்; கிரனைட் வீச்சில் காயமடைந்து காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

காத்தான்குடி-4ல் உள்ள இரும்புத் தைக்கா பள்ளி வாசல் மீது இரவு 10.45 மணியளவில் இனந் தெரியாத நபர்களினால் கிரனைட் வீசப்பட்ட சம்பவத்தையடுத்தே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஜாமியத்துல் உலமா சபையின் கோட்பாட்டை பின்பற்றும் முஸ்லிம்கள் அப்துல் ரவ10ப் மௌலவியின் அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞானப் பேரவைக்குரிய -முசு மௌலானா கபுறடியை- தீ வைத்து எரித்துள்ளார்கள். இதனையடுத்தே மீண்டும் பதட்ட நிலை உருவாகியுள்ளது.

இரு தரப்பு பள்ளி வாசல்களிலும் ஒலிபெருக்கிகளில் விடுக்கப்பட்ட அறிவிப்புகளையடுத்து முஸ்லிம்கள் தத்தமது பள்ளிவாசல்களில் தற்போது கூடியிருக்கின்றார்கள்.

பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக நின்று வன்முறைகளை தூன்டிவிடும் வகையில் செயல்பட்டவர்கள் பொலிசாரினால் தடியடிப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகையடித்து கலைக்கப்பட்டுள்ளார்கள்.

தங்கள் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த கிரனைட் தாக்குதலுக்கு அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞானப் பேரவையே பொறுப்பு என ஜாமியத்துல் - உலமா சபை குற்றம் சுமத்தியுள்ளது.

மேலதிக பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் வன்முறைகள் வெடித்துள்ளது.

அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞானப் பேரவையின் மதக் கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் வசிக்கும் காத்தான்குடி-6 பிரதேசத்தில் மின்சாரம் அணைக்கப்பட்டு மக்கள் இருளில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

அவர்களுடய பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் மாற்று மதப் பிரிவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.

தைக்கா பள்ளி வாசல் மீதான தாக்குதல் சம்பவத்திற்கும் எங்களுக்கும் தொடர்புகள் இல்லை .இது ஒரு சதி நாசவேலை. உங்கள் பிரதேசத்தில் ஆங்காங்கே வசிக்கும் எமது சகோதரர்களுக்கு ஏதாவது நடக்குமானால் எமது பள்ளிவாசலுக்கு அருகில் உங்கள் ஆட்கள் வசிக்கின்றார்கள் என்பதையும் நினைவு படுத்த விரும்புகின்றோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

puthinam.com

+++++++++++++++++++++++

<b>காத்தான்குடியில் இந்திய பாகிஸ்தான் உளவுத்துறை மக்களைப்பகடைக்காய் ஆக்குகிறது. </b>

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான் குடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு முஸ்லீம் ஆயதக்குழுக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் நிகழ்வில் இந்திய றோ அமைப்பு ஈடுபட்டுள்ளது. காத்தான்குடியில் நீண்டகாலமாக இந்திய றோ அமைப்பினர் தமது பிரிவினரைத் தொழிற்பட வைத்துள்ளார்கள். இவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் உளவுத்துறையும் தற்போது மட்டக்களப்பில் நிலை கொள்ளத் தொடங்கியுள்ளது. எனவே இவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு செயலாக இரண்டு தரப்பினரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தொழிலில் இந்தியா தற்போது ஈடுபட்டுள்ளது.

தற்போது பாகிஸ்தான் நாட்டின் புதிய இலங்கைக்கான தூதுவரான முன்னைநாள் பாகிஸ்தான் நாட்டு புலனாய்வுத்துறை அதிகாரியான பசீர் வலியின் ஆதரவுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பள்ளிவாசலொன்றும் சேதமாக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதக்கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் தொடர்பான முரண்பாடுகளை உருவாக்கி அதன் எதிரொலியாக இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம் ஏவலாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடிகள், பொல்லுகள் சகிதம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தமிழனை கடிச்சு ஆடிஞ்சு இப்ப தங்கைள கடிக்கினம் போலை . அவையளை நாங்கள் தடுத்து நிறுத்த வேணும் அதுதான் எங்களுக்கு நல்லது.இல்லையெண்டால் சிங்களவர் குளிர் காய்வினம்
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply
#3
மதம் பிடித்த யானைக்கும் மதம் பிடித்த மனிதனுக்கும் நிறைய வித்தியாசம் இல்லை. மதம் இல்லாத யானையும் மனிதனும் எவ்வளவு சாதுவானது...... அந்த சாதுவும் மதத்தை விட வேண்டும்
Reply
#4
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

இந்த பீஸ் காலம் ஒரு பொல்லாதது போலிருக்குத்தான்! முதலின்னான்! இப்ப இவங்கள்! நாளை???????

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#5
Quote:தமிழனை கடிச்சு ஆடிஞ்சு இப்ப தங்கைள கடிக்கினம் போலை .
தயவுசெய்து இப்படியான கதைகளை நிறுத்துங்கள் அவர்களை தமிழரை அடித்ததையும் தமிழர்கள் அவர்களுக்கு அடித்ததையும் மறந்து அவர்களுடன் நல்லுறவைப் பேணுவோம்.
அது எங்களிற்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது
<b>
?
- . - .</b>
Reply
#6
இந்துமதப் பயங்கரவாதம் பள்ளிவாசலை உடைக்கும்
முஸ்லீம் பங்கரவாதம் புத்தர் சிலையை உடைக்கும்
புத்த பயங்கர வாதம் இந்துக் கோயிலை இடிக்கும்
இதன் மூலம் இரு மதங்களிற்கிடையே வன்முறை வெடிக்கும் இது உலகின் எழுதப்படாத விதி

இதைவிடக் கேவலமாக ஒரே மொழி பேசி ஓரே இடத்தில் வாழ்ந்து ஒரே மதத்தை வழிபடும் எம் முஸ்லீம் சகோதரர்கள் மதத்தின் பெயரைச் சொல்லி வன்முறையில் ஈடுபடுகிறார்கள். முஸ்லீளின் பிரதிநிதிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்பவர்களே முஸ்லீம்களிடையே தற்போது தோன்றியிருக்கும் பிரிவினையை நீக்க ஆக்க புூர்வமான நடவடிக்கையை எடுத்து முஸ்லீம்களை ஒற்றுமைப் படுத்துங்கள்.
<b>
?
- . - .</b>
Reply
#7
இந்து சமயம் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு சிறீரமணன் அவர்களே ஒரு உதாரணம் காட்டுங்கள்...தலாதா மாளிகைத் தாக்குதல் இந்துமத்ததின் தாக்குதல் அல்ல...! :roll: Idea

கிறிஸ்தவ மதத்தவர்களும் பெளத்த மதத்தவர்களும் இஸ்லாமிய மதத்தினரும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டது போல...குறிப்பாக வடக்குக்கிழக்குக்கு வெளியே....! :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:இந்து சமயம் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு சிறீரமணன் அவர்களே ஒரு உதாரணம் காட்டுங்கள்...தலாதா மாளிகைத் தாக்குதல் இந்துமத்ததின் தாக்குதல் அல்ல...!

கிறிஸ்தவ மதத்தவர்களும் பெளத்த மதத்தவர்களும் இஸ்லாமிய மதத்தினரும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டது போல...குறிப்பாக வடக்குக்கிழக்குக்கு வெளியே....!
ஐயா குருவிகளே
நான் பொதுவாக நடப்பவை பற்றியே குறிப்பிட்டுள்ளேன். தனிய இவை இலங்கையில் மட்டும்தான் நடக்கிறது என்று கூறவில்லை.

இந்துப் பயங்கரவாதம் பள்ளிவாசலை உடைத்தது இந்தியாவில்
முஸ்லீம் பயங்கரவாதம் புத்தர் சிலையை உடைத்தது ஆப்கானில்
புத்த பயங்கரவாதம் கோயிலை இடித்தது இலங்கையில்
(இதைத்தான் அப்படிக் கூறினேன்)
<b>
?
- . - .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)