Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
குடாநாட்டில் பாடசாலைகள் இரா ணுவ ஆக்கிரமிப்பு முகாம்களாகவும் இராணுவ அச்சுறுத்தல்களின் மத்தி யிலுமே இருக்கின்றன. இந்தப் பாட சாலைகளை மீள ஒப்படைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சிறீலங்கா அரசின் எந்த ஓர் அமைச்சராக இருந் தாலும் புனரமைக்கப்பட்ட பாடசாலை களைக் கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொள்ள அருகதையற்றவர்கள்.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:-நேற்று காலை 11 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பாடசாலைகள் மீள் கையளித்தல் தொடர்பான நிகழ் வொன்று ஜேர்மன் தொழில்நுட்ப நிறு வனத்தினால் ஒழுங்கு செய்யப்பட் டது. மேற்படி நிறுவனத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட பாட சாலைகள் ஏற்கனவே உரிய அதிபர்களிடம் பல மாதங்களிற்கு முன்னர் உத்தியோகபுூர்வமாக கையளிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் இந்நிகழ் வோடு எந்த வகையிலும் தொடர்புபட்டிராத சிறீலங்கா அரசின் புனர்வாழ்வு அமைச்சரினால் நேற்று மீண்டும் வைபவாPதியாக கையளிக்கப்பட இருந்தது.யாழ்.குடாநாட்டில் இன்று பாட சாலைகள் இராணுவ ஆக்கிரமிப்பு முகாம்களாகவும் இராணுவ அச்சு றுத்தல்களின் மத்தியிலுமே இருக்கிறது. இப்பாடசாலைகளை மீள ஒப் படைக்க எதுவித நடவடிக்கையும் எடுக்காத சிறீலங்கா அரசின் எந்த அமைச்சர்களாக இருந்தாலும் இவ்வாறான ஒரு வைபவத்தில் கலந்து கொள்ள அருகதையற்றவர்கள். இதனாலேயே இந்நிகழ்விற்கு வருகை தந்த அமைச் சரை கலந்துகொள்ளவேண்டாம் என பல்கலைக்கழக மாணவர்களும் பொதுமக்களும் திருப்பி அனுப்பிவிட்டு, இந்நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தினரை சகல மரியாதைக ளோடு மட்டுமல்லாது எமது மாணவர்களும் மக்களும் அழைத்துச் சென்று இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு சில மணி நேரங்களின்பின் மீண்டும் இந் நிகழ்வை அரசியல் இலாபம் தேட முயற்சித்தவர்கள் அமைச்சரை மீண் டும் அழைத்து யாழ்.பல்கலைக்கழக வளாக வாயிலில் வைத்து மாலை அணிவித்து பாடசாலைகளை மீண் டும் இரண்டாவது தடவையாக அதிபர் களிடம்கையளிக்க முயற்சித்தவேளை மாணவர்களும் மக்களும் மீண்டும் அமைச்சரை உரிய மரியாதையோடு திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்ட தற்கிணங்க அமைச்சர் திரும்பிச் சென்றார்.அத்தோடு, நிகழ்வு பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து மேற்கொண்டு நடத்தப்படுவதற்கு மாணவர்கள் அனுமதி வழங்கவில்லை. இந்நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் இந்நிகழ்வை நடத்துவதில் எமக்கு எதுவித ஆட் சேபனையுமே இல்லை. இதனால்தான் அவர்கள் இந்நிகழ்வை நடத்த அனு மதித்தோம். ஆனால், அவர்கள் எமது மாணவர்களை ஏமாற்றிவிட்டு மீண் டும் நிகழ்வை அமைச்சரை அழைத்து நடத்த முயற்சித்தமை எமக்கு மிகவும் ஆத்திரமூட்டும் செயலாகவே இருந் தது. அதனாலேயே நாம் இந்நிகழ்வை பல்கலைக்கழகத்தில் நடத்தவிடாது இடைநிறுத்தியுள்ளோம். - என உள்ளது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இன்றும் நீக்க முடிýயாத மனச்சிதைவுகளுடன் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்து தமிழ்ச் சமூýகத்திற்கு இழைக்கப்பட்ட சின்னாபின்னத்திற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்திருக்கும் மூýன்று பெண் கள் அமைப்புகள், தமிழ்ச் சமூýகத்திற்கு இழைத்தவற்றை ஏற்றுக் கொள்ளாமலும் அவற்றிற்கு இழப்பீடு செய்யாமலும் தொடர்ந்து மௌனித்திருக்கும் அரசாங்கத்தை வன்மையாகக் கண்டிýத்துள் ளன.
இலங்கையின் அன்னையரும் புதல்விகளும் அமைப்பு, சமாதானத்திற்கான பெண்களின் கூýட்ட மைப்பு, சமாதானத்திற்கான பெண்கள் கருத்தரங்கு ஆகிய மூýன்று அமைப்புகளும் இணைந்து விடுத்துள்ள கூýட்டறிக்கையொன்றில், 1983 ஜூலை சம்பவத்திற்காக தமிழர்களிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்திருக்கின்றன.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிýருப்பதாவது:
1983 ஜூலையில் நிகழ்ந்த அரசியல்மயமான திட்டமிடப்பட்ட துயர்மிகு இனவன்முறை காரண மாக தமது உயிர் மற்றும் வீடுவாசல்களை இழந்த தமிழ்ப் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர் களை மிகுந்த வருத்தத்துடனும், பச்சாதாபத்துடனும் நினைவு கூýர்கிறோம்.
அன்றிலிருந்து தமது அன்புக்குரியோரை, நண்பர்களை இழந்து, போற்றிப் பாதுகாத்து வந்த நினைவுகளை இழந்து, காயப்பட்டு வடுப்பட்ட நினைவுகளும் மனச்சிதைவுகளும் படிýந்து கிடக்க வாழ்ந்துவரும் தமிழ்ச் சமூýகத்திற்கு எமது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவிக்கின்றோம்.
பாரிய அளவில் இடப்பெயர்வுகளை உருவாக்கியதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை தமது பிறந்த நாட்டை விட்டுத் தப்பியோடிý உலகின் பல பாகங்களிலுமுள்ள நாடுகளில் தஞ்சம்புக வைத்த தமிழ் சமூýகத்தின் துயர்மிகு சின்னா பின்னத்துக்கு வழிவகுத்த, இவ்வன்முறையின் விளைவுகளுக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.
நவீன இலங்கையின் மிகப் பயங்கரமான, திட்டமிட்ட இனப்படுகொலைகளில் ஒன்றான 1983 ஜூலைச் சம்பவம் நடந்து 20 ஆண்டுகளைக் குறிக்கும் இவ்வருடத்தில், அந்தச் சம்பவமும் அதன் பின் விளைவுகளும் ஏற்படும் வண்ணம் அதிகாரத்தைக் கையெலடுத்து திட்டமிட்டு செயற்பட்டோ ரையும், அதிகாரத்தைத் தட்டிýக்கழித்துப் பராமுகமாக இருந்தோரையும் மிக வன்மையாகக் கண்ட னம் செய்கிறோம். தமிழ் சமூýகத்திற்கு இழைத்தவற்றை ஏற்றுக் கொள்ளாமலும் அவற்றிற்கு இழப்பீடு செய்யாமலும் மேலும் மௌனித்திருக்கும் அரசை நாம் வன்மையாகக் கண்டிýக்கிறோம். இலங்கையின் இன மோதலுக்கு சுமுகமானதும், நீதியானதுமான அரசியல் தீர்வை எட்டுவதற்காக உழைத்து வந்திருக்கும் பெண்களாகிய நாம் 1983 ஜூலைச் சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரு கின்றோம். இலங்கையில் இனி எந்த சமூýகத்திற்கும் இவ்வகையான திட்டமிட்ட படுகொலை என்ற தலைவிதி அமையாதிருக்க வேண்டிý ஒவ்வொரு முயற்சியையும் எடுப்போமெனச் சத்தியம் செய்கிறோம்.
எங்களுடைய சகல மக்களதும் மனித, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எமது நாட்டிýல் நின்று நிலைக்கக் கூýடிýய சமாதானமொன்றை எட்டுவதற்கு உண்மையான நம்பிக்கை கொண்டுள்ளோம். இது இலங்கைத் தமிழ்ச் சமூýகத்தினரதும் இன்னொரு 1983 ஐ விரும்பாத சகல இலங்கையரதும் விசுவாசமான எதிர்பார்ப்பாகுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
மானமுள்ள பல்கலைக் கழகமாணவர்கள் அல்லற்பட்ட தமது இனத்திற்கு தமது கடமையைச் செய்கின்றார்கள். வாழ்த்துக்கள். அரசியல்வாதிகளின் சுயநலம் துன்பப்பட்டவர்களை தமது அரசியல் இலாபங்களுக்கு அடகு வைக்கப்பார்க்கின்றார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நீங்கள் கருத்தெளுதினால் தாத்தா கப் சிப் அதுதான் குப்பிட்டனான். கல்லெறி பட்ட நாய்மாதிரி ஓடி ஒளிச்சிட்டார்