Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகள் பத்திரிகையின் செய்தி
#1
[url=http://www.eelampage.com/index.shtml?id=200406212110465961&in=http://[/url]]http://www.eelampage.com/i....&in=[url][/url]

'கேள்விக்குறியாக உள்ளது சமாதானத்தின் எதிர்காலம்" - விடுதலைப்புலிகள் பத்திரிகை

கேள்விக் குறியாக உள்ளது சமாதானத்தின் எதிர்காலம் என்ற முகப்புச் செய்தியுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ ஏடாக 'விடுதலைப்புலிகள்" பத்திரிகையின் ஆனி-ஆடி மாதத்திற்குரிய 117வது இதழ் இன்று வெளிவந்துள்ளது.

சமாதானப் பேச்சுக்ள் தொடர்பாக சந்திரிகா அம்மையாரின் குழப்பகரமான கருத்துக்களும் சிங்கள அரசின் ஸ்திரமின்மையும் ஒன்று சேர்ந்து சமாதான சூழலை கேள்விக்குறியாக்கி வருகின்றது.

சமாதானப் பேச்சை அர்த்தமுள்ளதாக்க தேவையான அரசியல் நடைமுறைகளை புலிகள் இயக்கம் தெளிவாக வரையறுத்து உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளது கசப்பான கடந்தகால அனுபவங்களை கருத்தில் எடுத்து பேச்சுக்களை இடைநடுவில் குழம்பா வண்ணம் விவேகமான வகையில் அரசியல் நிகழ்ச்சி நிரலை புலிகள் வரைந்து அரசிடம் கையளித்திருந்னர்.

ஆனால் சந்திரிகா அரசு இதுவரை புலிகளின் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ளவும் இல்லை முற்றாக நிராகரிக்கவும் இல்லை. அதற்குப் பதிலாக நேரத்திற்கு ஒரு கருத்தைக் கூறி காலத்தை கடத்தும் தந்திரத்தையே அது கடைப்பிடித்து வருகிறது.

1994ஆம் ஆண்டு அம்மையார் வெளியிட்ட தீர்வுப் பொதியின் அடிப்டையிலேயே பேச்சுவார்த்தை நடாத்தப்படவேண்டும் என்று அவர் பொதுக் கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். இத்துடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க ஒரு ஆலோசனை சபை வேண்டுமென்று கூறி அதற்கு நாடாளுமன்று உறுப்பினர்கள் கொண்ட சபை அமைக்கப்படும் என்றும் அம்மையார் கூறியுள்ளார்.

அம்மையாரின் முன்னைய தீர்வுப்பொதி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு எப்போதோ செத்துப் போய்விட்டது. பத்து வருடங்களின் பின் மீண்டும் அதற்கு உயிர் கொடுக்க அம்மையார் முனைவது எந்தப் பயனையும் கொடுக்கமாட்டாது. ஏற்கனவே இருக்கின்ற அமைப்பு முறையே சமாதானத்தை முன்நகர்த்த உதவாதபோது மேலும் ஒரு சபை என்ற கருத்து சலிப்பைத் தருவதாவவே உள்ளது.

இதேவேளை அம்மையாரின் ஆட்சிப் பங்காளிகளான ஜே.வி.பியினர் பேச்சுவார்த்தை எப்படி நடத்தப்பட வேண்டும் என்று சிங்கள மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்;டும் என்று கூறியுள்ளனர்.

இவையெல்லாம் தற்போதைய சமாதானச் சூழலுக்கு ஏற்புடைய விடயங்களல்ல. பேச்சை அரசு விரும்பவில்லை பேச்சை நடாத்தும் நிலையிலும் அரசு இல்லை என்ற உண்மையைத் தான் காட்டுகின்றன.

ஒரு கூட்டத்தில் சமாதானம் பற்றி அம்மையார் ஒரு கருத்தைக் கூறுகிறார். பின்னர் அதை அவரே மறுக்கின்றார். அம்மையார் கூறியதற்கு முரனாக ஜே.வி.பி இன்னொரு கருத்தைக் கூறுகிறது. அதை அம்மையாரும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று ஜே.வி.பி கூறுகின்றது. தமிழ்த் தேசிய கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சபையைவிட்டு விரட்டியடிக்க வேண்டும் என்று பச்சை இனவாதத்தை ஜே.வி.பி தலைவரே கூறுகிறார்.

புலிகள் சமர்ப்பித்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கு எதிராக நச்சுப்பிரச்சாரத்தை சிங்களப் பேரினவாத சக்திகள் வேகப்படுத்தியுள்ளன.

ஜே.வி.பி இதில் முன்னணி வகிக்கின்றது சிங்கள ஊடகங்களும் தமது பங்கிற்கு இனவாதப்பணி செய்கின்றன.

கிராமங்கள் தோறும் ஜே.வி.பி. இந்த நச்சுப்பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றது. சமாதான முயற்சிகள் தொடர்பாக புலிகளின் நிலைப்பாடுகள் எதையும் ஏற்க மறுத்துள்ள ஜே.வி.பி. இப்போதே போர்ப்பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டது சந்திரிகா அம்மையாரும் தமது கட்சியின் நிலைப்பாட்டை நிராகரிக்கவில்லை என்று ஜே.வி.பி. கூறிவருக்கின்றது.

இத்தைகய சமாதான விரோதக் கருத்துக்கள் தமிழ் மக்களை விரக்தியின் விளிம்புக்கு கொண்டு செல்கின்றது. சமாதான வழியில் தமிழரின் இன்பிரச்சினை தீர்க்கப்பட முடியாத ஒன்று எனத் தமிழ் மக்கள் எண்ணத் தலைப்பட்டுள்ளனர்.

சமாதானப் பேச்சைத் தட்டிக்கழிக்கும் அதேவேளை சிங்கள அரசு தமிழ்த் தேசியத்தை சிதைக்க முனையும் அரசியல் சதிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. தனது இராணுவப் புலனாய்வுப்பிரிவினரை பயன்படுத்தி கிழக்கில் கொலைகளிலும் குழப்பத்தை உண்டு பண்ணும் செயல்களிலும் ஈடுபடுகின்றது.

இத்தகைய சதி அரசியல் மூலம் புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தலாம் என்று சிங்கள அரசு நினைத்தால் அது பல வரலாற்றுப் பாடங்களை மறந்து விட்டது என்பது தான் அர்த்தமாகும்.

துரோகங்களும் சதிகளும் புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்துவதற்கு பதிலாக பலப்படுத்தியுள்ள பல வரலாற்றுச் சம்பவங்களை எமது போராட்ட வாழக்கையில் காணலாம்.

சமாதானத்திற்கு சாதகமாகவும் சிங்கள அரசு செயற்படவில்லை போர் நிறுத்தத்தையும் அது மதிக்கவில்லை. ஆனால் சமாதானச் சூழல் நிலவுகின்றது என உலகிற்கு காட்ட விரும்புகின்றுது.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் சமாதானமும் இல்லை அபிவிருத்தியும் இல்லை மீள்குடியேற்றமும் இல்லை. அகதி வாழ்வும் தொலைந்த பாடு இல்லை நிகழ்கால நிம்மதியுமில்லை எதிர்கால நம்பிக்கையும் இல்லை என்ற விரக்தி நிலையிலேயே உள்ளனர்.

தமிழ் மக்களின் இந்த அரசியல் மனநிலைக்கு மதிப்பளிக்கவேண்டிய நிர்பந்தம் புலிகள் இயக்கத்திற்கு உண்டு. போர்மூலம் தோற்கடிக்க முடியாது தமிழரின் விடுதலைப்போராட்டத்தை சமாதானம் என்ற சதி அரசியல் மூலம் தோற்கடிக்க சிங்கள அரசு முயல்கின்றதோ! என்ற ஐயம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

காலம் கடந்தபடி உள்ளது சமாதானத்திற்காக காத்திருக்க புலிகள் தயார். ஆனால் சிங்கள அரசு ஒரு சூழ்ச்சிகரமான நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதற்காக சமாதானச் சூழலை இழுத்தடிப்பதை உணர்ந்து கொண்டும் முட்டாள் தனமாக காத்திருக்க புலிகள் இயக்கம் தயார் இல்லை அதை தமிழ் மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழ் மக்களின் இந்த அரசியல் மனநிலையை சந்திரிகா அரசும் சர்வதேச சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி. புதினம்


Reply
#2
உந்தச் செய்திதான் முற்றத்தில இருக்கெல்லே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
குருவிகளே

முற்றத்தில் இருப்பது எனக்கும் தெரியும். இச் செய்தி தொடர்பாக கள நண்பர்களின் கருத்துக்களை அறிவதற்காகவே இப் பகுதிக்கு எடுத்துவந்தேன்.


Reply
#4
ஓ... அப்படியா அப்பச் சரி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<b>'இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை அடிப்படையின்றி பேச்சுக்கள் சாத்தியப்படப் போவதில்லை"</b>

<b>"தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க - புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைதான் - அடிப்படையாக அமைய முடியும். இது புலிகள் இயக்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும்"</b> என்று இன்று வெளிவந்துள்ள புரட்டாதி-ஐப்பசி மாதத்திற்குரிய 119ஆவது குரல் விடுதலைப் புலிகள் பத்திரிகையின் முகப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சமாதானப் பேச்சுக்கள் ஆக்கபுூர்வமானதாக அமைய வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பினால் இந்த அரசியல் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை ஏற்க மறுப்பதென்பது சமாதான வழிமூலமான அரசியல் தீர்வுக்கு சிங்கள அரசு தயாரில்லை என்பதையே காட்டுவதாக இருக்கும்.

புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான ஆவணம் சர்வதேச சட்டவல்லுனர்களின் துணையுடன் தயாரிக்கப்பட்டது. சர்வதேச சட்டங்களையும் - நியமங்களையும் - ஜனநாயக பண்புகளையும் உள்வாங்கி, இலங்கைத்தீவின் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்;ப தயாரிக்கப்பட்டதாகும்.

சமாதானப் பேச்சுக்கள் முன்னரைப் போலல்லாது அர்த்தமுள்ளதாகவும் - தமிழ்மக்களின் ஆதரவுடனும் நடாத்தப்பட வேண்டும். போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மனிதாபிமான தேவைகளை மற்றும் அவர்களின் சுய பாதுகாப்பு - இயல்பான வாழ்க்கை என்பவற்றை நிறைவேற்றக்கூடிய ஒரு தற்காலிக நிருவாக அமைப்பு முறைதான் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையாகும்.

எனவே, சந்திரிகா அரசு குற்றம் சாட்டுவதுபோல அந்த இடைக்கால வரைபு பிரிவினைக்கான அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்பது உண்மைக்குப் புறம்பானதாகும். சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் - எந்தவித மூடிமறைப்புகளுமற்று தயாரிக்கப்பட்ட இந்த இடைக்கால வரைபை - சந்திரிகா அரசு - சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது அபத்தமானது. சர்வதேச சமூகத்தையும் சந்தேகிப்பதாக உள்ளது.

புலிகள் இயக்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால தன்னாட்சி அதிகாரசபையின் அடிப்படையில்தான் பேச்சு வார்த்தைகள் அமையவேண்டும் என்பது தமிழ்மக்களின் அரசியல் ஆணையாகும். நாடாளுமன்றிற்காக அண்மையில் நடந்த பொதுத்தேர்தல் வாக்களிப்பின் வாயிலாக தமிழ்மக்கள் இந்த மக்கள் ஆணையை புலிகள் இயக்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

எனவே, இந்த மக்கள் ஆணைக்கு சந்திரிகா அரசு மதிப்பளிக்க வேண்டும்.

அதேவேளை, புலிகளின் இந்த இடைக்கால வரைபை அடிப்படையாகக் கொண்டு அமைதிப் பேச்சுக்களை சந்தி ரிகா அரசு ஆரம்பிக்கவேண்டும் என்று ஐ.தே.கட்சியே கோரியுள்ளது. தேவையேற்பட்டால் இதற்கான நாடாளுமன்றப் பலத்தை சந்திரிகா அரசுக்கு வழங்கி - உதவ தனது கட்சி தயார் என திரு.ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி அளித்துள்ளார். அத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற பிரதான கட்சிகளும் இதையேதான் சந்திரிகா அரசுக்குக் கூறி வருகின்றன.

அரசியல் கட்சிகள் மட்டுமல்ல முக்கியமான பல சிங்கள அமைப்புக்களும் புலிகளின் இடைக்கால வரைபின் அடிப்படையில் பேச்சை ஆரம்பிக்குமாறு கோரிவருகின்றன. முன்னெப்போதும் கிடைத்திராத இந்த வரலாற்று வாய்ப்பை சந்திரிகா அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் சமாதானத்தை நேசிப்போரின் வேண்டுகோளாக உள்ளது.

இந்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபுமீது சர்வதேச சமூகமும் ஆதரவுப் போக்குடனேயே உள்ளது. புலிகள் இயக்கத்திற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தற்போதைய ஆதரவு இதையே வெளிப்படுத்துகின்றது.

இந்த நிலையில், புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்கால வரைபின் அடிப்படையில் சந்திரிகா அரசு உடனடியாக பேச்சை ஆரம்பிப்பதே சாலச் சிறந்ததாகும்.

இதைவிடுத்து, மாற்றுத் தீர்வுத் திட்டம் ஒன்றை வரைந்து அதன் அடிப் படையிலேயே பேச்சை ஆரம்பிக்க முடியும் என்று சிங்கள அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமற்றது. வரலாற்றைப் பின்நோக்கி நகர்த்த முனையும் அந்த வீண்முயற்சிக்கு ஒத்துழைக்க புலிகள் இயக்கம் தயாராக இல்லை.

தனது தீர்வுத்திட்டத்தை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி புலிகளுக்கு எதிராக ஒரு சர்வதேசப் பரப்புரையை அம்மையார் நடாத்தத் திட்டமிடுவதும் பயனளிக்கப் போவதில்லை. சிங்கள அரசுகளின் அரசியல் கூத்துக்களை இனியும் தலையாட்டியவாறு பார்த்து - இரசிக்க சர்வதேச சமூகம் தயாராக இருக்கமாட்டாது என்று தமிழ்மக்கள் நம்புகின்றனர்.

சந்திரிகா அரசை நோக்கிப் புலிகள் இயக்கம் விடுக்கும் அழைப்பு இதுதான். 'இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபின் அடிப்படையில் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு துணிகரமான நகர்வுகளை - உறுதியுடன் முன்னெடுக்கவேண்டும்" என்பதுதான்.

இவ்வாறு "விடுதலைப் புலிகள்" பத்திரிகை தெரிவித்துள்ளது

நன்றி புதினம்
Reply
#6
<b>In a critical analysis of the Norwegian facilitated peace process in his new book "War and Peace"


He points out that the Tigers' demand for self-rule under the principle of internal self-determination, outlined in LTTE leader Vellupillai Pirapaharan's Heroes' Day speech of 2002, was twined with a clear warning that [b]if this is blocked or denied, the Tamils would be left with 'no alternative other than to secede and form an independent state.'</b>

Pointing out at that the decision by the LTTE and the Sri Lankan government (at the third session of talks in Oslo) to explore a federal solution has been projected as a major political break through, a paradigm shift, and has become known as the 'Oslo Declaration', with interpretations claiming that the LTTE has abandoned the right to external self-determination and secession, Mr. Balasingham states ' I feel it necessary to clarify our position on this controversial issue.'

Firstly, it must be stated that there was not any specific proclamation titled the 'Oslo Declaration'. The decision to explore federalism was included in the record of decisions at the Oslo talks and signed by the chief negotiators of both delegations and the head of the Norwegian facilitating team.

Secondly, the decision was made in accordance with the proposal outlined by the LTTE leader in his Heroes' Day speech. Mr. Pirapaharan operates his concepts and categories within the over-all framework of the right to self-determination, with its internal and external aspects.

In his 2002 speech, Mr. Pirapaharan stated: <b>'We are prepared to consider favourably a political framework that offers substantial regional autonomy and self' government in our homeland on the basis of our right to internal self-determination.'</b>

But at the same time, Mr. Balasingham points out, Mr. Pirapaharan cautioned that <b>if this internal element of self-determination is blocked or denied and that the demand for regional self-rule is rejected we have no alternative other than to secede and form an independent state.</b>

In this context [Mr. Pirapaharan] enunciates the right to external self-determination as the last and the final option. Therefore, it is very clear that he operates with both aspects, the internal and external elements of the right to self-determination, he writes.

Having provided the background, context and events at the third session of talks that led to the LTTE's decision to explore federalism, Mr. Balasingham, the movement's theoretician for several decades, proceeds to set out in 'War and Peace,' a detailed explanation of the LTTE's position on internal and external self-determination.

Citing the 'Principles of Equal Rights and Self-Determination' enshrined in the 1970 UN Declaration on Principles of International Law Concerning the Friendly Relations and Cooperation Among States, Mr. Balasingham points out that the right to self-determination is normally realised internally, within existing states. The Declaration upholds the territorial integrity and political unity of sovereign and independent states.

Nevertheless, 1970 UN Declaration on Self-Determination qualifies its statement by stating that states can only invoke the principle of territorial integrity if they are conducting themselves in compliance with the principle of equal rights and self-determination of peoples.

The internal and external aspects of the right to self-determination are [thus] interlinked. <b>If people are denied their right to internal self-determination, deprived of access to governance and subjected to conditions of oppression and discrimination, they are entitled to external self-determination.</b>

As such, whilst having invoked the principle of internal self-determination, <b>Mr. Pirapaharan calls upon the Sri Lankan state to offer self-rule to the Tamil people in their own homeland, the LTTE leader was not confining himself to the parameters of the principle of internal self-determination,</b> Mr. Balasingham points out.

The LTTE's theoretical position is based on the specificity of the conditions of oppression of our people and their political struggle, a legitimate struggle that combines the internal and external dimensions of the right to self-determination, Mr. Balasingham further argues.

In essence, the LTTE's policy orientation is charted in compliance with the principles of international law and UN resolutions.

Source TamilNet
Reply
#7
<b>தனிநாடு கோரிக்கையை கைவிடவில்லை: புலிகள்</b>

தனி நாடு கோரிக்கையை நாங்கள் இன்னும் கைவிடவில்லை என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

தமிழர் பகுதிகளில் சுயாட்சி அதிகாரம் மறுக்கப்பட்டால் தனி நாடு அமைப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.

பாலசிங்கம் எழுதியுள்ள 'வார் அண்ட் பீஸ்' என்ற புத்தகத்தில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்த புத்தகத்தின் விவரங்களை தமிழ்நெட் இணையத் தளம் வெளியிட்டுள்ளது. அதில் பாலசிங்கம் கூறியிருப்பதாவது:

கூட்டாட்சியின் அடிப்படையில் வட கிழக்கில் சுயாட்சி நிர்வாகம் அமைக்க ஒப்புக் கொண்டோம். நார்வே தலைநகர் ஓஸ்லோ நடந்த 3 சுற்றுப் பேச்சுவார்த்தையின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் கூட்டாட்சி முறையை பரிசீலிப்பதாகத் தான் சொன்னோம். ஆனால், அதை நாங்கள் பிரகடனமாக வெளியிடவில்லை.

இந்த விஷயத்தில் புலிகளின் நிலை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. ஓஸ்லோ பிரகடனம் என்ற பெயரில் எங்களது கருத்தை திரித்துக் கூறுவது தவறு.

தமிழர்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் வழங்க இலங்கை அரசு முன் வராவிட்டால் தனி நாடு அமைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எங்களது தனி நாடு கோரிக்கையை இன்னும் நாங்கள் கைவிட்டுவிடவில்லை. உரிமைகள் மறுக்கப்படும்பட்சத்தில் அது தான் எங்களுக்கு ஒரே வழி.

எக்காரணம் கொண்டும் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டுத் தர முடியாது என்று கூறியுள்ளார் பாலசிங்கம்.

இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் முயற்சிகளில் ஈடுபட ஜப்பானிய அமைதித் தூதர் யசுசி அகாசி இன்று கொழும்பு வருகிறார்.

இந் நிலையில் அயர்லாந்து தலைநகர் டாப்ளினில் புலிகளின் உயர் மட்டக் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளில் பயணம் மேற்கொண்ட புலிகளின் உயர் மட்ட அரசியல் குழுவினர், இறுதிக் கட்டமாக அயர்லாந்தில் இச் சந்திப்பை மேற்கொள்கின்றனர்.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன், அமைதிச் செயலக செயலாளர் புலித்தேவன் ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே போர் ஆயத்தப் பணிகளை முடுக்கிவிடும் வகையில் முப்படைகளின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

போர் திட்டமிடல் கமிட்டி என்ற இந்தக் குழுவுக்கு கடற்படைத் தளபதி சத் வீரசேகர தலைமை வகிப்பதாகத் தெரிகிறது.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<b>ஓஸ்லோ, டோக்கியோ பிரகடனங்கள் எந்த வகையிலும் எம்மைக் கட்டுப்படுத்தாது</b>: <i>அன்ரன் பாலசிங்கம்</i>

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலும், ஜப்பானிய தலைநகரான டோக்கியோவிலும் நிகழ்ந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாடுகளும் அவற்றில் நிறைவேற்றிய பிரகடனங்களும் விடுதலைப் புலிகளை எந்தவகையிலும் கட்டுப்படுத்தாதென விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான திரு. அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஓஸ்லோ பிரகடனம் தொடர்பாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக தமிழ்நெட் இணையத்தளத்துக்கு நேற்றைய தினம் கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவி வழங்கும் நாடுகள் ஆதரவு வழங்கலாம். சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இருதரப்பினரையும் ஊக்குவிக்கலாம். ஆனால் அரசியல் தீர்வு எவ்விதம் அமைய வேண்டுமென வரையறைகளை திணித்துவிட முடியாதென அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டை விடுதலைப் புலிகள் புறக்கணித்துள்ளனர். எனவே இந்த மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களைக் கொண்ட பிரகடனம் விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த முடியாது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தனது யோசனைகளை பலவந்தமாக திணித்துவிடும் நோக்கத்துடன் சிறிலங்கா அரசு தனது தோழமை நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பல தீர்மானங்களை நிறைவேற்றியது.

சமாதான முயற்சியில் அந்நிய சக்திகள் அநாவசியமாக தலையிடுவதாக குற்றம் சுமத்தி டோக்கியோ பிரகனடத்தை ஏற்கனவே நாம் நிராகரித்துவிட்டோம்.

கடந்த வருடம் ஜூன் மாதம் 22ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் விடுத்த அறிக்கையில், இலங்கையில் தலைதுாக்கிய அரசியல் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாத நிலையில், சர்வதேச சதிவலைப் பின்னலுக்குள் சராணகதி அடைந்திருப்பதாக ரணில் விக்கிரமசிங்க அரசை கடுமையாக சாடியிருந்தது.

இதனால் மூன்றாம் தரப்பு அனுசரணையுடன் நிகழ்ந்துவந்த சமாதான முயற்சிகள் சர்வதேச மத்தியஸ்தத்திற்கு திசை திருப்பப்பட்டுள்ளதாக அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான திரு. அன்ரன் பாலசிங்கம் கூறியுள்ளார்.

கூட்டாட்சி முறையை ஆராய்ந்து பார்ப்பது என்ற தீர்மானம் தொடர்பாக குறிப்பிடும் ஒஸ்லோ பிரகடனம் எதுவுமில்லையென்பதை பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஒப்புக் கொண்டமை குறித்து அவரைப் பாராட்டியுள்ள திரு. அன்ரன் பாலசிங்கம்,

மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் முடிவில் நோர்வே அரசாங்கம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையிலேயே ஒரு பிரகடனமாக பெரிதுபடுத்தப்பட்டு வித்தியாசமான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஒஸ்லோவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டின் போது ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்கதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த பிரகடனம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்ததுடன், வன்முறையைத் தவிர்த்து சமாதான வழிமூலம் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஒஸ்லோ, டோக்கியோ பிரகடனங்களையும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தையின் விபரங்களைக் கொண்ட பத்திரிகை அறிக்கையையும் அடிப்படையான ஆவணங்களாக முன்வைத்து இவற்றிலிருந்து அரசியல் தீர்வுக்காக கூட்டமைப்பு உருவாகி விட்டதென ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் வாதிடுவது அபத்தமானது. ஏற்றுக் கொள்ள முடியாதது.

உதவி வழங்கும் நாடுகளின் மநாடுகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பிரகடனங்களின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கான தீர்வின் வரையறைகளை முன்கூட்டியே நிச்சயித்துவிட முடியாது.

இனப்பிரச்சனையாது அந்நிய சக்திகளின் அழுத்தமும் தலையீடுமின்றி சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் பேசித்தீர்மானிக்க வேண்டியதொன்றாகுமென விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகருமான தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

நன்றி புதினம்
நன்றி TamilNet
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)