Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<b>[u]<span style='font-size:30pt;line-height:100%'>பொங்கி எழடா தமிழா..!</span>
[b]
<i><span style='font-size:23pt;line-height:100%'>அனைத்து தமிழ் மக்களுக்கும் வணக்கம்,
யாழ் மண்ணில் பொங்க தொடங்கிய பொங்குதமிழ் இன்று உலகம் முழுவதும் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் வருகிற 25ம் திகதி கனடா நாட்டின் ரொறன்ரோ மாநகரத்தில் குயின்ஸ் பார்க்கில் நடை பெற உள்ள பொங்குதமிழுக்கு உங்கள் அனைவரையும் வருகை தருமாறு கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்மாணவன் என்ற வகையில் அன்புடன் கேட்டு கொள்கிறேன். இது பொழுது போக்குக்காக வைக்கப்படும் நிகழ்ச்சி அல்ல பொங்கும் தமிழரின் உணர்ச்சிகளை உலகுக்கு எடுத்து காட்ட கனடா தமிழ் மாணவர் அமைப்பின் ஒருங்கமைப்பின் கீழ் தமிழர் நாம் பொங்கி எழும் நிகழ்ச்சி. எங்கள் தமிழ், தமிழர், ஈழம், வாழ என்றும் எங்கள் கை ஓங்கவேண்டும். புறப்படுங்கள் தமிழர்களே புறப்படுங்கள்... தமிழர் எம் பலம் உலகுக்கு உணர்த்திட செப்ரம்பர் 25 எமக்கு கிடைக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம்..................</i></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/canadapongu.jpg' border='0' alt='user posted image'>
[u]<span style='font-size:25pt;line-height:100%'>[b]
பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!</b></span>
<span style='font-size:22pt;line-height:100%'>பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொறுமையய் இருந்தது போதும்...! பொங்கு தமிழுக்கு வாடா..!
போர்க்களம் எங்கிலும் எம் படை வெல்லுது
போகும் இடத்திலும் எம் தமிழ் வென்றிட
பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
போதனை செய்பவர் ஆளும் அரசுக்கு
தமிழரை அழிக்க போதனை செய்வது முறையோ..?
போக்கிரி அந்த ஆனந்தசங்கரி
கனடாவில் வந்து காக்கா பிடிப்பது முறையா...?
பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொறுமையய் இருந்தது போதும்...! பொங்கு தமிழுக்கு வாடா..!
எங்கள் விடுதலை பெற்றிட..! எங்கள் உரிமை கேட்டிட...!
எங்கள் கெளரவம் காத்திட...! எங்கள் சுதந்திரத்தை அடைந்திட
இது தான்ரா காலம் ..., இனியுமேன் தாமதம்...
இது வரை பொறுத்தது காணும் கனடிய தமிழனே.
பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொறுமையய் இருந்தது போதும்...! பொங்கு தமிழுக்கு வாடா..!
மாவீரர் கனவு பலித்திட, மறைந்த மக்களின் மனவேட்கை தணித்திட
தமிழன் பிரதேசத்தில் இருந்து மாற்றானை துரத்திட
தமிழன் பயங்கரவாதி அல்ல என்று உலகுக்கு உணர்த்திட
எழுந்து வாடா கனடிய தமிழா..! பொங்கு தமிழுக்கு,,!
பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொறுமையய் இருந்தது போதும்...! பொங்கு தமிழுக்கு வாடா..!
தேசிய தலைவர் பிரபாகரனே எம் தேசத்தின் தலைவர் என்றும்
அவர் ஆணை நிறைவேற்றும் போராளிகளே எம் தேசத்தின் ராணுவம் என்றும்
ஆண்டாண்டு காலமாக நாம் ஆண்ட எங்கள் பூமி ஈழம் என்றும்
உண்மைகளை உலகுக்கு உணர்த்த ஊர் திரண்டு வாருங்கள்
செப்ரம்பர் 25 ரொறன்ரோ குயின்ஸ் பார்க்குக்கு.
பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொறுமையய் இருந்தது போதும்...! பொங்கு தமிழுக்கு வாடா..! வாடா..! வாடா..!</span>
நன்றி
கவிதன்
17/09/2004
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கவிதனின் அழைப்பிற்கு நன்றிகள்... கண்டிப்பாக தமிழர்கள் திரண்டு வருவார்கள்.....என்று நினைக்கிறேன்....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
<b>மாவீரர் கனவு பலித்திட, மறைந்த மக்களின் மனவேட்கை தணித்திட
தமிழன் பிரதேசத்தில் இருந்து மாற்றானை துரத்திட
தமிழன் பயங்கரவாதி அல்ல என்று உலகுக்கு உணர்த்திட
எழுந்து வாடா கனடிய தமிழா..! பொங்கு தமிழுக்கு,,! </b>
பொங்குதமிழ் நிகழ்வு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்....
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
shanmuhi Wrote:<b>மாவீரர் கனவு பலித்திட, மறைந்த மக்களின் மனவேட்கை தணித்திட
தமிழன் பிரதேசத்தில் இருந்து மாற்றானை துரத்திட
தமிழன் பயங்கரவாதி அல்ல என்று உலகுக்கு உணர்த்திட
எழுந்து வாடா கனடிய தமிழா..! பொங்கு தமிழுக்கு,,! </b>
பொங்குதமிழ் நிகழ்வு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்....
http://www.naatham.com/gallery/pic/thumbna...ils.php?album=4
Posts: 64
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
காகம் திட்டி மாடுசாகாது.....
சங்கறுபது எங்கள் குணம் சங்கரியாருக்கு ஏது குணம் கொள்கை......
கனடா பொங்குதமிழ்நிகழ்வு சிறப்புடன்இடம் பெற எமது வாழ்த்துக்கள்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
[b]பொங்குதமிழ் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'> <b>பொங்கு தமிழ் தொடர்பாக கனேடிய செய்தி ஸ்தாபனங்களின் தவறான போக்கு</b></span>
<span style='font-size:23pt;line-height:100%'>இலட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை பற்றி கனடிய செய்தி ஸ்தாபனங்கள் தவறாக செய்தியை வெளியிட்டு வருகின்றன இதற்கான காரணம் என்ன என தெரியவைல்லை. CBC தொலைக்காட்சியிலும் மற்றும் , ரொறன்ரோ சண் பத்திரிகையிலும் இதில் கலந்து கொண்ட மக்கள் எண்ணிக்கை 10000 என கேலிக்குரிய வகையில் செய்தியை வெளியிட்டிருக்கின்றன. [மற்றைய பத்திரிகைகளை நான் பார்க்கவோ கேட்கவோ இல்லை] நேரடியாக பார்த்த என்னை போன்றோர்களுக்கும், மற்றும் நேரடி வர்ணனையை பார்த்த உங்களூள் பலருக்குமே தெரியும் 10000 க்கும் இதில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று. 10000க்கும் 100000 ஒரு பூச்சியம் தான் வித்தியாசம் என்றாலும் மக்களின் அணிதிரள்வை பார்த்த இவர்கள் ஏன் இவ்வாறு தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பது எனக்கு கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் கனடாவில் இருக்கும் துரோகிகளின் கும்பலா? ஒரு சிறுவனை பார்த்து கேட்டாலே தம்பி எவ்வளவு அப்ப இருக்கும் என்றால் 50000 இருக்கும் என சாதாரணமாக சொல்வான் . ஆனால்,இப்படி யான செய்தி ஸ்தாபங்களின் செய்தியாளர்களுக்கு இதைக்கூடவா கணிக்க தெரியவில்லை...! அல்லது இவர்களின் பின்னால் யாராவது செயற்படுகிறார்களா...? எல்லா மக்களூம் ஒன்று சேர்ந்து சம உரிமை, கடமையுடன் வாழும் நாடு கனடா. அங்கு எங்கள் உரிமைக்காக, எங்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த நாங்கள் நடாத்திய நிகழ்வில் வருகை தந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதால் இவர்களுக்கு என்ன இலாபம்,..?
என்ன தான் நடக்குது இங்கு..?</span>
<span style='font-size:23pt;line-height:100%'>இது எனது மனதில் எழுந்த கேள்விகளே உங்கள் உங்கள் கருத்துக்களையும் எதிர் பார்க்கிறேன்</span>
http://www.kavithan.yarl.net
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'>பொங்குதமிழ் தொடர்பாக நேற்று நான் எழுதியவை இதோ</span>
<b><span style='font-size:30pt;line-height:100%'>ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட கனடா பொங்கு தமிழ் நிகழ்வு</b></span>
[u][i]<span style='font-size:25pt;line-height:100%'>பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவோடு நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. </span>
<span style='font-size:23pt;line-height:100%'>
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் ரொறன்ரோ நகரில் இன்று 25/09/2004 சனி 2.00 மணிக்கு தொடங்கிய பொங்குதமிழ் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்ற இவ் நிகழ்வில் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் உரைகளும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. தமிழீழத்தில் இருந்து யாரும் வரமுடியாத சூழல் இங்கு நிலவினாலும், பல தளபதிகளின் உரைகள் இங்கு திரையிடப்பட்டு காட்டப்பட்டன. அந்தவகையில் தமிழீழ அரசியல் துறைபொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் அவர்கள் நேரடியாக தொலைபேசி வழியாக தனது உரையை தமிழீழத்தில் இருந்து வழங்கினார். அதன்போது மக்கள் தமது குரல்களை எழுப்பி தமது ஏகோபித்த ஆதரவை தெருவித்ததுடன், தமிழீழ தேசியக்கொடி ,தமிழீழ தேசிய தலைவரின் புகைப்படம் ஆகியவற்றை அசைத்தும் தமது ஆதரவை தெருவித்தனர். அத்துடன் தமிழீழ காவல் துறை பொறுப்பாளர் திரு. நடேசன் அவர்களின் உரை , கெளசல்யன் ஆகியோரின் உரையும் ஒளிப்பதிவு வடிவில் காண்பிக்கப்பட்டன. மற்றும் மாணவர்களால் நடாத்தபட்ட கலைநிகழ்வுகளும், பலரின் கவிதைகள் , பேச்சுக்கள் என்பனவும் இடம் பெற்றன.</span>
http://www.kavithan.yarl.net
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[u]<span style='color:red'><b>இது கனடாவா..? தமிழீழமா..? என் அனுபவத்தில் கொஞ்சம்...</b>
[size=16]சாரி.. சாரியாக திரண்ட மக்கள் கூட்டம் இது கனடாவா..? அல்லது தமிழீழமா..? என என்னை ஒரு கணம் சிந்திக்க வைத்தது. எங்கு பார்த்தாலும் எம் இனம்..! எம் சனம்..! எம் குரல்...! அக் குரலில்..! அவ் சனத்தில்..! அவ் இனத்தில்..! நானும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஆம்..! இன்று காலையில் இருந்து இவ் செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் வரைக்கும் ரொறன்ரோ நிலக்கீழ் தொடரூந்துகளில் தமிழ் மக்கள் கூட்டம் அலை மோதியவண்ணமே உள்ளது.
இன்று மதியம் நான் நிலக்கீழ் தொடரூந்தில் எனது நண்பர்களுடன் இவ் நிகழ்வுக்கு பயனித்த போது அவ் நிலக்கீழ் தொடரூந்து எம்மக்களாலேயே நிறைந்திருந்தது. எங்கு பார்த்தாலும் தமிழ் மக்கள் கூட்டம் .தொடரூந்து ஓட்டுனரோ இடையிடை அடுத்த தொடரூந்தில் ஏறுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விட்டபடி கதவுகளைமூடி சென்றார். என்ன அதிசயம் இதுவரை ரொறன்ரோ மாநகரின் தொடரூந்தில் காணாத ஒரு சன நெருசல். மூன்று தொடரூந்துகளை தொடர்ச்சியாக எடுத்து ஒருவாறாக ரொறன்ரோ பாராளுமன்ற திடலுக்கு அருகில் உள்ள தொடரூந்து நிலையத்தில் இறங்கினோம். யாழ்தேவியில் பயணித்தவர்களுக்கு இதை விபரிக்கவே தேவையில்லை அப்படி ஒரு அனுபவம் தான் இதுவும். ஆனாலும், அவ் அனுபவத்தை இன்று தான் நான் அனுபவித்தேன் என்று கூறலாம். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் தண்டவாளத்தை மட்டும் தான் கண்டிருக்கிறேன், அதன் பின் அதுவும் இல்லை, ஆனால் அவ் அனுபவம் பற்றி அம்மா, அப்பா சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் தான் அதற்கு ஒப்பிட்டிருக்கிறேன். தொடரூந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்து பார்த்தால் எல்லா பக்கங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக இராணி பூங்காவை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். நாமும் அதற்குள் இடையில் பூந்து நூறு மீற்றர் தூரத்தில் இருந்த பூங்காவை நோக்கி நடந்து சென்றோம். வழி எங்கும் மாணவர் அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் பொங்குதமிழ் என எழுதப்பட்ட உடைகளை அணிந்து வருகை தந்துகொண்டிருந்த்த மக்களின் வீதிப்பாதுகாப்பு உட்பட மற்றும் பல உதவிகளையும் வழங்கிய வண்ணம் இருந்தார்கள். பூங்காவை நோக்கினால் அங்கு சும்மார் 75000 க்கு மேற்பட்ட மக்கள் ஓரிடத்தில் கூடி பூங்கா நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு மக்கள் கூட்டத்தை இதுவரைக்கும் என்வாழ் நாளில் கண்டேனோ என்று எனக்கு தெரியவில்லை. பார்க்க போனால் நல்லூர் திருவிழா போல் இருந்தது.
அப்படியான , எம்மக்கள் நிறைந்த அச் சூழலில், ஒரு புலம்பெயர்ந்த நாட்டில், நான் எனக்கு கிடைத்த சிலமணி நேரங்களை செலவழித்ததை இட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதன்பின் ஆரம்ப நிகழ்வுகள் , மற்றும் பல பேச்சாளர்களின் உரைகள், இளம் தலைமுறையினரின் நிகழ்ச்சிகள், என பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இடையிடை மக்கள் கோசங்களை கூறியும், கைகள் ,கொடிகள், தேசியத்தலைவரின் படங்களை அசைத்தும் தமது ஆதரவை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.
இவ்வாறு நடந்து கொண்டிருந்த இவ் நிகழ்வுக்கு மக்கள் தொடர்ந்து வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருந்தனர். ஆனால், நிகழ்ச்சி நிறைவு பெறும் மட்டும் பூங்கா நிறைந்து வழிந்த வண்ணமே இருந்தது. இவ்வாறு மக்கள் ஒரே சீராக வருவதும் போவதுமாக இருந்தது தான் கனேடிய காவல் துறையினரின் வேலையை இலகுவாக்கியது என்பது என்கருத்து. இல்லாவிட்டால் பூங்காவை சுற்றியுள்ள வீதிகளை மூடி மக்கள் கூட்டம் வீதியிலும் நிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஆனாலும், வீதிப் போக்குவரத்தில் ஓரளவு நெரிசல் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் முதல் ஆர்வத்தோடு கலந்து கொண்ட இவ் நிகழ்வு கனடாவில் இடம்பெற்ற ஒரு மிகப்பெரிய நிகழ்வு. இது எம் மக்களின் பலத்தை காட்டிய நிகழ்வு. இது மேன்மேலும் பொங்க என் வாழ்த்துக்கள்.
திரும்பவும் அதே யாழ்தேவி பயணத்தில் வீடுவந்து சேர்ந்துவிட்டேன்.................
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும், இணையத்தளம் வாயிலாகவும் , வானொலி மூலமாகவும் , தொலைக்காட்சி மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், வாசித்து, கேட்டு,பார்த்து மகிழ்ந்த அனைத்து உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள்</span>
கவிதன்
2004/09/25
http://www.kavithan.yarl.net
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றி கவிதன் உங்கள் குடிலிலும் பிரமாண்டமாக நன்றாக இது பற்றி போட்டிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
tamilini Wrote:தகவலுக்கு நன்றி கவிதன் உங்கள் குடிலிலும் பிரமாண்டமாக நன்றாக இது பற்றி போட்டிருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நன்றி.. என்ன செய்ய பொய்யான தகவல்களை அவர்கள் வழங்கும் போது நாமும் சரியான தகவல்களை எங்களுக்கு தெரிந்தால் வழங்கதானே வேண்டும். நாம் வழங்கிய கணக்கும் அப்படியே சரி என்று கூறவில்லை.. ஏறத்தாள தான் சொன்னோம் அளவை. இனி நீங்கள் ஊகித்து பாருங்கள்
[b][size=18]
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Quote:ஒரு சிறுவனை பார்த்து கேட்டாலே தம்பி எவ்வளவு அப்ப இருக்கும் என்றால் 50000 இருக்கும் என சாதாரணமாக சொல்வான் . ஆனால்,இப்படி யான செய்தி ஸ்தாபங்களின் செய்தியாளர்களுக்கு இதைக்கூடவா கணிக்க தெரியவில்லை...! அல்லது இவர்களின் பின்னால் யாராவது செயற்படுகிறார்களா...? எல்லா மக்களூம் ஒன்று சேர்ந்து சம உரிமை, கடமையுடன் வாழும் நாடு கனடா. அங்கு எங்கள் உரிமைக்காக, எங்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த நாங்கள் நடாத்திய நிகழ்வில் வருகை தந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதால் இவர்களுக்கு என்ன இலாபம்,..?
இந்த எண்ணிக்கை இதுவரை எதை சாதித்திருக்கின்றது கவிதன்? விடுதலைப்புலிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை பல நாடுகளில் அவர்களுக்கு இருக்கும் தடை. தமிழ்மக்கள் பெரும் தொகையில் திரள்வது இது முதல்முறையல்ல. ஆனால் அதனால் விடுதலைப்புலிகளுக்கும் போராட்டத்துக்கும் என்ன பயன்கிடைத்தது என்பது தான் ஆராயப்பட வேண்டிய விடயம். மேலும் இதற்கு பெருமளவு செலவானது என்பதையும் இந்தப்பணம் வாடகை, சேவைகள் என்று கனேடிய நிறுவனங்களுக்கே போய்ச்சேர்ந்தது நாம் மறக்க கூடாது.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Jude Wrote:Quote:ஒரு சிறுவனை பார்த்து கேட்டாலே தம்பி எவ்வளவு அப்ப இருக்கும் என்றால் 50000 இருக்கும் என சாதாரணமாக சொல்வான் . ஆனால்,இப்படி யான செய்தி ஸ்தாபங்களின் செய்தியாளர்களுக்கு இதைக்கூடவா கணிக்க தெரியவில்லை...! அல்லது இவர்களின் பின்னால் யாராவது செயற்படுகிறார்களா...? எல்லா மக்களூம் ஒன்று சேர்ந்து சம உரிமை, கடமையுடன் வாழும் நாடு கனடா. அங்கு எங்கள் உரிமைக்காக, எங்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த நாங்கள் நடாத்திய நிகழ்வில் வருகை தந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதால் இவர்களுக்கு என்ன இலாபம்,..?
இந்த எண்ணிக்கை இதுவரை எதை சாதித்திருக்கின்றது கவிதன்? விடுதலைப்புலிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை பல நாடுகளில் அவர்களுக்கு இருக்கும் தடை. தமிழ்மக்கள் பெரும் தொகையில் திரள்வது இது முதல்முறையல்ல. ஆனால் அதனால் விடுதலைப்புலிகளுக்கும் போராட்டத்துக்கும் என்ன பயன்கிடைத்தது என்பது தான் ஆராயப்பட வேண்டிய விடயம். மேலும் இதற்கு பெருமளவு செலவானது என்பதையும் இந்தப்பணம் வாடகை, சேவைகள் என்று கனேடிய நிறுவனங்களுக்கே போய்ச்சேர்ந்தது நாம் மறக்க கூடாது.
என்ன பலன் கிடைதிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
[b][size=18]
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Quote:Quote:இந்த எண்ணிக்கை இதுவரை எதை சாதித்திருக்கின்றது கவிதன்? விடுதலைப்புலிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை பல நாடுகளில் அவர்களுக்கு இருக்கும் தடை. தமிழ்மக்கள் பெரும் தொகையில் திரள்வது இது முதல்முறையல்ல. ஆனால் அதனால் விடுதலைப்புலிகளுக்கும் போராட்டத்துக்கும் என்ன பயன்கிடைத்தது என்பது தான் ஆராயப்பட வேண்டிய விடயம். மேலும் இதற்கு பெருமளவு செலவானது என்பதையும் இந்தப்பணம் வாடகை, சேவைகள் என்று கனேடிய நிறுவனங்களுக்கே போய்ச்சேர்ந்தது நாம் மறக்க கூடாது.
என்ன பலன் கிடைதிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
_________________
கவிதன்
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தேவையான கனேடிய அரசின் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் பொங்குதமிழால் கிடைத்ததாக தெரியவில்லை. கனேடிய துதுவர் பொங்குதமிழுக்கு முதல் விடுதலைப்புலிகளை சென்று சந்தித்திருந்த போதும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கனடாவுக்கு வர அனுமதியை மறுத்திருக்கின்றது. கனேடிய ஆளும் கட்சி உறுப்பினர்கள் பொங்குதமிழை புறக்கணித்துள்ளனர். அடிப்படையில் கனேடிய அரசு விடுதலைப்புலிகளை வரவேற்காது என்பதை வெளியுலகுக்கு கனடா தெரிவிக்க நல்ல சந்தர்ப்பமாக பொங்குதமிழ் அமைந்து விட்டது. இது விடுதலைப்புலிகளை பொறுத்தளவில் ஒரு பின்னடைவாகும்.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Jude Wrote:Quote:Quote:இந்த எண்ணிக்கை இதுவரை எதை சாதித்திருக்கின்றது கவிதன்? விடுதலைப்புலிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை பல நாடுகளில் அவர்களுக்கு இருக்கும் தடை. தமிழ்மக்கள் பெரும் தொகையில் திரள்வது இது முதல்முறையல்ல. ஆனால் அதனால் விடுதலைப்புலிகளுக்கும் போராட்டத்துக்கும் என்ன பயன்கிடைத்தது என்பது தான் ஆராயப்பட வேண்டிய விடயம். மேலும் இதற்கு பெருமளவு செலவானது என்பதையும் இந்தப்பணம் வாடகை, சேவைகள் என்று கனேடிய நிறுவனங்களுக்கே போய்ச்சேர்ந்தது நாம் மறக்க கூடாது.
என்ன பலன் கிடைதிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
_________________
கவிதன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தேவையான கனேடிய அரசின் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் பொங்குதமிழால் கிடைத்ததாக தெரியவில்லை. கனேடிய துதுவர் பொங்குதமிழுக்கு முதல் விடுதலைப்புலிகளை சென்று சந்தித்திருந்த போதும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கனடாவுக்கு வர அனுமதியை மறுத்திருக்கின்றது. கனேடிய ஆளும் கட்சி உறுப்பினர்கள் பொங்குதமிழை புறக்கணித்துள்ளனர். அடிப்படையில் கனேடிய அரசு விடுதலைப்புலிகளை வரவேற்காது என்பதை வெளியுலகுக்கு கனடா தெரிவிக்க நல்ல சந்தர்ப்பமாக பொங்குதமிழ் அமைந்து விட்டது. இது விடுதலைப்புலிகளை பொறுத்தளவில் ஒரு பின்னடைவாகும்.
ஆனால் நீங்கள் அறியவில்லையா பின்னடைவுகள் தான் வாழ்க்கையின் முதல் படி என்று. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். இது விடுதலைபுலிகளுக்காக நடத்த பட்டதோ என்னாவோ.. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் இலங்கை அரசில் அங்கம் வகிப்பவர்கள் அவர்கள் விடுதலை புலிகள் அல்ல.. அவர்களுகே இத்தடை விதைக்கிறார்கள் என்றால் அதன்பின்னால் இலங்கை அரசோ வேறு கனடிய அரசுக்கு வேண்டிய ஒரு சக்தியோ செயற்படுகிறது என்று தானே அர்த்தம். என்னை பொறுத்தளவுக்கும் அரசியல் ரீதியாக கனடிய அரசு என்ன நினததோ... அதுவும் அமெரிக்காவின் தாலாட்டு பிள்ளை தானே ....ஆனால் கனடாவாழ் தமிழ் மக்கள் மத்தியில் இது ஒரு மாபெரும் வெற்றி .. புலம் பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி.. அவ்வாறு இருக்கும் போது இதனால் கனடாவோ வேறு எந்த நாடோ உண்மைக்கு புறம்பாகவும் .. தமிழர்களை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிப்பது போலவும் செயற்படுவது அவர்களினதும் சிங்கள அடிவருடிகளினதும், தமிழ் தேசதுரோகிகளினதும்.. சொல்கேட்டு நடக்கின்ற கிளிப்பிள்ளைகளே.. இதனால் இவர்களுக்கு என்ன நன்மை என்பது தான் எனக்கு புரியவில்லை...... பல தமிழ் துரோகிகள் உலக நாடெங்கும் இருந்து தமிழர்கழுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகிறார்கள் இதனால் என்னதான் சாதிக்கா போகிறார்கள் என்று பார்ப்போம்..... அந்த வரிசையில் நீங்களும் இல்லாதிருந்தால் மகிழ்ச்சி.. இருப்பவர்களும் ஒருநாள் உணர்வார்கள் தங்கள் தவற்றை..... இப்படி பட்டவர்களின் தவறான கருத்துக்களால் பாதிக்கபடப்போவது தமிழ் சமுதாயமே ஒழிய வேறு ஒருவரும் இல்லை... எனவே நீங்களும் தவறான பாதையில் சிந்திக்காமல் இன்னொருபக்கத்தில் பல நன்மைகளையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை கருத்தில் கொண்டு செயற்படுங்கள். உங்கள் கருத்துக்களையும் இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
என்னை பொறுத்தளவுக்கு எனக்கு அரசியல் எழுதுவதற்கு தெரியாது.. ஒரு உண்மை சம்பவம் என்ற ரீதியில் தான் பொங்குதமிழ் பற்றி இங்கு வழங்கி உள்ளேன்.
[b][size=18]
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
தம்பி கவிதன்,
நீங்கள் பொங்கு தமிழ்பற்றி; எழுதியதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பொங்கு தமிழுக்கு இடம் இறுதிநேரத்தில் மறுக்கப்பட்ட போது அதற்காக இரவுபகல் பாராமல் தமது முழுமையான அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி இடம் எடுத்துக்கொடுத்தவர்கள் கூட விசனப்படும்படி நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகளும் அமைந்திருந்தன.
சுருக்கமாக சொல்லப்போனால் எமது மக்கள் உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அறிவுபுர்வமாக சிந்தித்து இவ்வளவு பணத்தையும் நேரத்தையும் மக்களையும் இன்னும் பயனுள்ளபடி நாம் பயன்படுத்தியிருக்க முடியும்.
உதாரணமாக இலங்கையில் கொலைகளும் வன்முறைகளும் பெருகி வருகின்றன. இவையெல்லாம் இன்று விடுதலைப்புலிகள் செய்ததாக சொல்லப்பட்டு அவர்கள் பயங்கரவாதிகளாக காட்டப்படுகின்றார்கள். இதைச்செய்பவர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் தேவையில்லை. ஒரு சிலராகவே இதைச்செய்கின்றார்கள். இதனால் விடுதலைப்புலிகளை ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிய பாதிப்பு இது.
இந்த பயங்கரவாதிகளாக காட்டும் முயற்சிகளுக்கெதிராக கனேடியதமிழர் இன்று வரை செய்தது என்ன? இவற்றை விடுதலைப்புலிகள் செய்யவில்லை என்று ஒரு அறிக்கை தானும் விடப்பட்டதா? தனித்து நின்று விடுதலைப்புலிகள் தாம் செய்யவில்லை என்று சொல்லும் நிலை. அன்று பொங்கு தமிழில் கூடிய அத்தனை ஆயிரம் மக்களும் விடுதலைப்புலிகள் இந்த கொலைகளை செய்யவில்லை என்று சொன்னால் எவ்வளவு பயனுள்ளதாக அது இருந்திருக்கும்? யோசித்து பாருங்கள். முடிந்தால் மற்றவர்களுக்கு சொல்லிப்பாருங்கள். இனியவது உணர்ச்சிகளுக்கு அடிமையாகி செயல்படுவதை விட்டு நிலைமையை ஆராய்ந்து உச்ச பயன்தரத்தக்க வகையில் செயற்திட்டங்களை நாம் அமைக்கவேண்டும்.
இதைச்சொல்வதற்காக என்னை எதிரியாக பார்க்கதீர்கள். பொங்கு தமிழில் பேசிய முன்னாள் பேராசிரியர் இலகுப்பிள்ளை சில மாதங்களுக்கு முன்னர்தான் நஷனல் போஸ்ற் பத்திரிகைக்கு விடுதலைப்புலிகளை குறிப்பிட்டு அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னவர். அப்படிப்பட்வரையே பொங்கு தமிழ் மேடையேற்றியிருக்கிறது. ஆகவே என்னை எதிரியாக பார்க்காதீர்கள்.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Quote:சுருக்கமாக சொல்லப்போனால் எமது மக்கள் உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அறிவுபுர்வமாக சிந்தித்து இவ்வளவு பணத்தையும் நேரத்தையும் மக்களையும் இன்னும் பயனுள்ளபடி நாம் பயன்படுத்தியிருக்க முடியும்.
நீங்கள் சொல்வது சரிதான்... இதை திட்டமிட்டவர்கள் இன்னும் சிறப்பாக பெரிய வெற்றி அடையவைத்திருக்கலாம்.. இனி வரும் காலங்களில் அவர்கள் இன்னும் சிறப்பாக அவர்களால் முடிந்தால் நடாத்துவார்கள் என நினைகிறேன்.... இது யாருமே எதிர் பார்க்காத அளவுக்கு பொங்கியது தமிழ் மக்களால்.... இங்கு ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது என்றால் எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியும்... சிறிதாக நடபெறும் ஒரு பிறந்தநாள் விழாவுக்கே எனக்கு வேலை, எனக்கு பாடசாலை, என்று ஒவ்வொருவரும் ஏதாவ்து ஒரு காரணம் சொல்லும் இவ் புலம்பெயர் நாட்டில் ஒருங்கிணைத்தவர்களும் எத்தனையோ கஸ்டத்தின் மத்தியில் தான் இதனை செய்திருப்பார்கள்.. எனவே அவர்களை குறை சொல்வதில் பிரயோசனம் இல்லை . இனிவரும் காலங்களில் அவர்கள் இதனை திருத்தி கொள்வார்கள் என்று நம்புவோம்....
. எனக்கு பெரிதாக அரசியலில் எதுவித அனுபவமோ எதுவும் இல்லை ஏதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும் .......யூட் அண்ணா நான் உங்களை தப்பாக நினைக்கவில்லை.. வேறு நண்பர்களும் தமதுகருத்தை சொல்வார்கள் தானே..
எனது கருத்து பொங்குதமிழில் பங்குபற்றிய ஒரு தமிழன் என்ற ரீதியில் தான் உள்ளதே ஒழிய .. ஏனைய விடையங்கள் நான் அறியாதவையே.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
கவிதன்,
உங்களை சிறப்பான ஒரு தம்பியாகவே நான் பார்க்கிறேன். உங்கள் கருத்துக்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் நீங்கள் எப்போதும் போல எழுதவேண்டும்.
நன்றி
''
'' [.423]
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
பொங்கி எழுந்த மக்களும் அடங்கிப்போன சங்கரியும் - செங்குட்டுவன்
தமிழ் மக்களின் எழுச்சி நிகழ்வான பொங்குதமிழுக்கு அதன் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை உலகெங்கும் அது நடைபெற்ற வேளைகளில் அதற்குப் புலிச்சாயம் பூசிக் குழப்ப முயன்ற பொறுக்காத பேரின வாதிகளும் அவர்களின் எடுபிடிகளும் கைக்கூலிகளும் தொடர்ந்து அவர்கள் முயற்சிகளில் மக்களின் எழுச்சிக்கு முன்னாள் படு தோல்வி கண்டு வந்துள்ளனர்.
இம்முறை கனடாவிலும் அது மிக வெற்றிகரமாக வரலாறு காணத வகையில் உயிர்ப்புணர்வு மிக்க ஒன்றாக நடந்தேறியுள்ளது.
லட்சத்திற்கும் அதிகமான மக்களின் தமிழுணர்வு கரை கடந்த வெள்ளமென அலையெறிந்து திரண்ட போது எதிர்பாளர்களின் வெற்றுக்கோ~ம் அர்த்தமற்றதாக போயிற்று.
இப்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இம்முறை இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டிய ஜாதிக ஹெலஉறுமயவின் இனவாத பிக்குகளும் இனவெறிப்புத்திஜீவிகளும் இப்போது எங்கே மொட்டாக்குப்போட்டுக் கொண்டு தலைமறைவாக இருக்கிறார்களோ தெரியவில்லை.
மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறு எனப் பேதம் பார்க்க முடியாது என்பது களநடவடிக்கையின் போது சரியான விடயமே...விடுதலைப்புலிகள் வழிநடத்த மக்கள் தான் போராடினார்கள், போராடுவார்கள், இதில் ஒளிவு மறைவுக்கே இடமில்லை. ஒடுக்கப்படும் மக்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடாவிடில் அவர்கள் எதிரிகளால் அழிக்கப்பட்டு விடுவார்கள். எனவே அவர்கள் பேராடியே தீரவேண்டும். அதனை பயங்கரவாதம் என எவரும் கூறுவார்களேயானால் அவர்கள் பைத்தியக்காரர்களாக அல்லது மேலாதிக்க வல்லாதிக்க சிந்தனை கொண்ட ஆக்கிரமிப்புணர்வுடன் கூடிய அரச பயங்கர வாதிகளாக இருக்க வேண்டும்.
அது வேறு விடயம் கனடிய பொங்கு தமிழுக்கு கடும் எதிர்ப்பை தன் பின்னணி சக்திகளின் உந்துதலுக்கேற்ப சுயபுத்தியின்றி காட்ட முயன்ற அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கர தேரர் (ஆச்சரியப்படாதீர்கள் ஆனந்த சங்கரியாரை இனி இப்படித்தான் அழைக்கவேண்டியுள்ளது) இந்த பொங்கு தமிழ் எழுச்சியால் எந்த மூலையில் புழுங்கிக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கப்போகிறார் என்று தெரியவில்லை. தமிழ் பொதுமக்கள் மத்தியிலே அவரது பிரசாரப் பொய்மைகள் எடுபடவில்லை. தேர்தலில் தமிழ் மக்கள் அவரைத் தங்கள் இனத்தின் துரோகியாக அடையாளப்படுத்தி தூக்கியெறிந்து விட்ட நிலையில் தனது வரலாற்றுத் தவறுகளை சுயவிமர்சனம் செய்து பார்த்து திருத்திக்கொண்டிருக்கலாம்.
ஆனால் அயலார் புத்திகேட்டு இப்படி அலறிக்கொண்டிருக்க வேண்டிய நிலையாகி விட்டது பொங்கு தமிழ் வேகம் சங்கதேரரின் அகமுகத்தை முழுமையாகவே அம்பலப்படுத்தி விட்ட நிலையில் இனி என்ன செய்யப் போகிறாராம்?
பேசாமல் ஹெலஉறுமயவுடன் இணைந்து அவர்களுக்கு ?ஜல்ரா? போட்டாலாவது ஏதாவது பயன் இருக்கும்..... அல்லது அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டு அஞ்ஞாத வாசமாவது போகலாம்... ஆனால் கெடுபுத்தி சொற்கேளாதே! ஆனந்த மாக இருக்கவேண்டியார் அயலார் அடிபணிந்து சங்கரா என்று சொல்லி அரசியல் சன்னியாசம் கொள்ள வேண்டியதாயிற்று.
செங்குட்டுவன்/Eelanatham
நன்றி சூரியன் இணையம்
ஆனந்த சங்கர தேரர் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: நல்ல பெயர்
|