Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கைக்கூ கவிதைகள்
#61
இரவெல்லாம் மழை
விடிந்தபோது
காணாமல் போயிருந்தது
நெல்வயல்
Reply
#62
வீரம் பேசிய கோடரி
தோத்துப்போனது
வாழைந்தண்டிடம்
Reply
#63
கோவிலில்
பக்திப்பாட்டு

கூட்டம் சேர்க்கும்
புூசாரி
Reply
#64
காவலுக்குவந்த
பெண்காவலர்கள்

கடைக்கண்ணால்
ரசிக்கும்
இளைஞர் கூட்டம்
Reply
#65
கட்ட மறந்த கைக்கடிகாரம்
கையை உறுத்தியது அடிக்கடி
Reply
#66
தேங்கிநின்ற மழை நீர்

குனிந்தவுன் முகம் பார்த்தேன்
Reply
#67
குளக்கரையில் குனிந்தபடி
முகம் பார்க்கும் மரங்கள்
Reply
#68
பரம்பரை பரம்பரையாக
நிலவைப்பிடிக்க முயற்சிக்கும் பனைமரங்கள்
Reply
#69
பிண ஊர்வலத்தில்
தப்பித்துவீழ்ந்த
ரோஜாபுூ
தரையில் புரண்டு
கெஞ்சும்

'மறுவாழ்வு கொடுங்கள்"
Reply
#70
பனைமரத்தில் சிக்கும் வரை
நீ சிறிது நான் பெரிது
சண்டைபோடும் காற்றாடிகள்...
Reply
#71
தாமரை இலையில்
ஓடிவிளையாடும் நீர்துளிகள்

தாம் உயர்ஜாதியென
இறுமாப்புக்கொள்ளும்
Reply
#72
ரோஜாப்புூக்கள்
தேன் எடுக்கும் பட்டாம்புூச்சி

வெட்கிப்போயின வீரம்பேசிய
முட்கள்
Reply
#73
புூ விற்கும் புூ
புூ வைத்துவிட யாரும் இல்லை
Reply
#74
கறையான் புற்றுகள்
பாம்பு ஒருநாள் வந்ததனால்
நாகாத்தம்மன்கோவிலென பெயர்பெற்றது
Reply
#75
எனக்கும் குழந்தைபிறந்துவிட்டது
இன்னும் அம்மா நிலவைப்பிடித்துதரவில்லை
Reply
#76
காற்றிலே மண்
காதலி கண்ணைப்பார்த்தபடி காத்திருக்கும் காதலன்
Reply
#77
..
Reply
#78
வெயிலுக்கு பிடித்த குடைக்குள்
எப்போது மாட்டிய விண்மீன்கள்
Reply
#79
உன்னைப்பார்த்தபின்
ஏதோ இடம் மாறிவிட்டது
தேடிக்கொண்டு இருக்கிறேன்...
Reply
#80
வறண்ட புல்வெளியில்
உறங்கிக்கொண்டிருக்கும் உயிர்கள்

தண்ணீர் தெளித்து எழுப்புங்கள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)