Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய இராணுவம் செய்தது .....
#41
யார் மணிதன் இவனா மனிதன் ஓஓஓஓஓ இது அந்த இந்திய ஆக்கிரமிப்பு பேய்களுக்கு எம்மினப்பெண்களை கூட்டிக்கொடுத்த மிருகயாதி தமிழ்இனம் பட்ட துன்பத்தை கேலி செய்யும் சிகளவனுக்கு பிறந்து இந்தியனுக்கு மாமா வேலைபாத்த மானம் கெட்டவரோடு பேச்சா எம்மின அழிவுபற்றி என்ன பேச்சு வேண்டி கிடக்கு தன்மiனைவி தனக்குமுன் சேலைஅவிள்கப்பட்டாலும் அவனுக்காய் சலாம் அடிக்கும் கூட்டம் பெற்ர தாயை விற்ருப்பிழைக்கும் கூட்டம் ஒவ்வெரு அழிவுகளையும் நேரில் பார்த எம்வேதனை அதனை இழிவுபடத்த பணம்பட்டம வாங்கியவனுக்கு எங்கு விளங்கும் தாயை கேட்டாலும் கொடுக்க நினை;க்கும்கூட்டம் சங்கரா சங்கரா என்பதில் பயன் இல்லை. :twisted: :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :twisted:
. . . . .
Reply
#42
நீக்கப்பட்டுள்ளது - மேர்கன்
Truth 'll prevail
Reply
#43
<b>வலைப்பூவில் நடக்கும் சர்ச்சையின் தொடர்ச்சியாக மூக்கு சுந்தரின் இன்னுமொரு பதிவு ....</b>

தொட்ட பாவத்திற்கு....
==================

1986-87 ல் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு குடும்பம் குடி வந்தது. தகப்பன் தவறிப்போய், தாய் தன் இரு பெண்களோடும், இளைய மகனோடும் வசிக்க, மூத்தமகன் லண்டனில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாக சொன்னார்கள். செல்வமும் , செழுமையும் இருந்தாலும், எப்போதும் எதையோ பறிகொடுத்ததைப் போலவே இருப்பார்கள். அவர்கள் மகள்களின் நடை உடை பாவனைகள் தமிழ்நாட்டுக்கு கொஞ்சம் அந்நியப்பட்டு இருந்ததால், அவர்களைப் பற்றி தேவையற்ற பேச்சுகள், பிரச்சினைகள் என்று பிடுங்கி நடப்பட்ட செடிகள் போல தவித்துக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் இலங்கை கலவரத்தினால் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள்

*******

கல்லூரியில் படிக்கும்போது ஜூனியர் விகடன் பகுதி நேரப் பத்திரிக்கையாளராக பணி புரிந்து கொண்டிருந்தேன். சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன் கோட்டை முகாமில், ஒரு துப்பாக்கிச் சூடு நடந்ததை பற்றி எழுதி அனுப்ப சென்னையிலிருந்து தகவல் வந்திருந்தது. கிராமத்துக்கு சென்று முகாமிலும், கிராமத்திலும் அதைப் பற்றிக் கேட்டால் யாரும் வாயே திறக்கவில்லை. பஸ் ஏறும் சமயம் பின் தொடர்ந்து வந்த ஓரிரண்டு இளைஞர்கள் மருண்ட கண்களோடும், யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்துடனும் திக்கித் திணறி விவரித்தது நினைவுக்கு வருகிறது.

அது நாட்டரசன்கோட்டை இலங்கை அகதிகள் முகாம்.

*********

திருச்சியில் வேலை பார்க்கையில், என் நண்பரின் தோழரொருவர் இலங்கையிலிருந்து வருவார். தமிழ்நாட்டு யுனிவர்ஸிடியில் படித்துக் கொண்டிருந்தார். "பொடியன்களைப்" பற்றியும், எத்த்னை கொடூரம் இழைத்தாலும் இலங்கை தமிழர்களுக்கு அவர்களை விட்டால் வேறு நாதி இல்லாமையால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருப்பது பற்றியும், யுத்தகால நெருக்கடியால் சாதாரன சுசூகி எஞ்சினை மாற்றியமைத்து மண்ணெண்ணையிலேயே யாழ்ப்பாணத்தில் பைக் ஓடுவது பற்றியும், கதைத்துக் கொண்டிருப்பார்.

****************

வளர்ந்த , நினைவு தெரிந்த நாள் முதல் இப்படி ஏதாவதொரு வகையில் இலங்கையும், தமிழ் அவலமும் என் மனதில் பதிந்தே வளர்ந்திருக்கிறேன். அதனால்தான், என் பக்கம் நியாயம் இருப்பினும், தூக்கி எறிந்து பேசாமல் அடக்கி வாசிக்கிறேன். சாவுக்கு வா என்றால் கருமாதிக்கு வருகிறாயே என்பதற்கேற்ப தம்பி ஈழநாதன் லேட்டாக வந்து புள்ளி விவரங்களால என்னை புளகாங்கிதப்படுத்திக் கொண்டிருக்கிறார். பொறுமையிழந்து OTL கவிதைகள் எழுதும் நிலைக்கு என்னையும் தள்ளி விடுவீர்கள் போலிருக்கிறது. ஏனெனில் எந்த அளவுக்கு நானும் பேசுவேன் என்பது ரமணிக்கும் தெரியும்.

தம்பி ஈழநாதன்... ஒன்றாக, ஒற்றுமையுணர்வோடு இருந்து வந்த வலைப்பதிவாளர்கள் இருகூறாய்ப் பிளவு பட எங்கே பொறி கிளம்பியது என்று சற்றே யோசியுங்கள். வலைப்பூ ஆசிரியராய் இத்தனை பேர் இருந்து இருக்கிறார்கள் . ஆனால் நீங்கள்தான் "ஈழத்து வலைப்பதிவுகள்" என்று வகைப்படுத்தும் திருப்பணியை தொடங்கி வைத்தீர்கள். இது நாளை எங்கே தொடர்ந்து எவ்விதம் முடியுமென்று சற்றேனும் யோசித்தீர்களா..?? பிரிவினையும், வேறுபடுத்திப் பார்ப்பதும் எந்த ரத்தத்தில் ஊறியிருக்கிறது ...யோசியுங்கள். நீங்கள் இளைஞர். வளர வேண்டியவ்ர். கொதிக்கும் குருதியையும், முகிழ்க்கும் எண்ணங்களையும் ஆக்கபூர்வமாக உபயோகிக்க எண்ணிக்கொள்ளுங்கள். இந்தியத் தமிழன் எவனும், ஈழத்தவனை அயலானாக பார்ப்பதில்லை. அயலானாக பார்த்திருந்தால் ஊர் ரெண்டு பட வேண்டும் என்று ஆயுதம் கொடுத்திருக்க மாட்டோம். பிராந்திய வல்லரசு நாங்கள். இலங்கை வேண்டுமென்று நினைத்திருந்தால் இம் மாதிரி ஈன வழிகளில், குழப்பம் விளைவித்து உள்ளே நுழைந்திருக்க வேண்டியதில்லை. ஹார்லிக்ஸ் விளம்பர ஸ்டைலில் "அப்டியே ச்சாப்பிட்டிருப்போம்" . உங்கள் அச்சுபிச்சு ராசதந்திர சிந்தாந்தங்களை நிறுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ipkf கொடுமைக் கதைகள் தொடர்வதற்கு தார்மீக ரீதியான காரணங்கள் இல்லை இன்று. எப்படி அமைதிபடையில் வந்த ஒவ்வொரு ஜவானுக்கும் வக்காலத்து வாங்கி நான் பொறுப்பேத்துக்க முடியாதோ, அதே போலத்தான், விடுதலைப் புலிகளோட ஒவ்வொரு படுகொலைக்கும் நீங்க பொறுப்பேத்துக்க முடியாது. ராஜீவோட ரத்தத்தால, அமைதிப்படை அட்டூழியக் கறைகளை உங்காட்களே துடச்சு கழுவீட்டிங்க...பிறகு பேச்சென்ன.,கவிதையென்ன...வக்காலத்தென்ன..???

இரண்டையும் பற்றி நாம ரெண்டு தரப்புமே பேசாதிருந்தா தான் இலங்கைப் பிரச்சினை பற்றி உபயோகமா பேச இயலும்.

ஆமாம் , நடு நிலைமையோட எழுத பதிவு ஒண்ணு துவங்கி இருக்கிறீர்களே, அதுக்கு படம் என்ன போட்டு இருக்கிறீர்கள், தெரிகிறதா,,..??
இதுதான் உங்க ஸோ- கால்ட நடு நிலையோட லட்சணம். அங்க எழுதறவன் என்ன எழுதுவான்னு நான் சொல்லணுமா..??

இத்தனை திட்டிகிட்டு, எழுதிட்டு, கூட்டு சேர்ந்து கும்மாளம் அடிச்சுகிட்டு இருக்கீறீர்களே, உங்க குடுமபத்தில் இந்த க்ஷணம் இந்திய மண்ணில இருக்கிற, இந்திய சர்வகலாசாலையில படிக்கிற, இந்தியாவில வாழற உறவுகளை எல்லாம் வெளியே கூப்பிட்டுக்க வேண்டியதுதானே. மிருக வெறி பிடிச்ச போலிஸும், ஆமிக்காரனும் அங்கே இருக்கானே...தன் அரிப்புக்கு அங்க சொறிஞ்சுக்க மாட்டான்னு என்ன நிச்சயம்..என்ன பாதுகாப்பு அங்க உங்களுக்கு...?? நீங்க பண்ண மாட்டீங்க..!! ஏன்னா, எங்களோட ஜனநாயகம் உங்களுக்கு பாதுகாப்பு, எங்களுடைய பரிதாபம் உங்களோட பலம் ( அது எங்க பலவீனம்...!!! ) எங்க அரசியல்வாதிகள் உங்க ஜால்ரா மாடுகள். அதனால நீங்க எப்படி வேணா இருக்கலாம். ப்ரான்ஸிலயும், கனடாவிலும், யூ.கே அரசாங்கமும் மாதிரி தமிழக அரசாங்கமும், அரசியல் வாதிகளும் விலக்கி வைச்சு பாக்க மாட்டாங்க அப்படித்தானே...

எங்க ஊர் பிரச்சினை பிடிச்சது தான் சாமி. திண்ணியத்துல பீயைக் கரைச்சு
ஊத்துவாங்க. கோயில்கள்ள தமிழ்ல மந்திரம் சொன்னா தீட்டும்பாங்க. தமிழனை எல்லாம் இந்தி படிக்காதன்னு சொல்லிட்டு, பேரனுக்கு இந்தி சொல்லிக் கொடுத்து அமைச்சராக்குவாங்க. தேர்தலுக்கு தேர்தல் விதவிதமா பிரியாணியும் சாராயமும் ஊத்தி மாறி மாறி சவாரி பண்ணுவாங்க. பவுடர் மூஞ்சிக்கு ஏமாந்து போய் அரசுப் பொறுப்பை கையில் குடுப்பாங்க. பெரிய வீட்டு மனுசஙக வப்பாட்டி கதையை பத்தி பத்தியா எழுதுவாங்க. இரட்டை டம்ளர் முறை இன்னமும் இருக்கு எங்க கிராமங்கள்ள...
மணிப்பூரில கலவரம்தான். குஜராத்துல கொடுமைதான்( அந்தக் கட்சிக்கு தேர்தல என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா)

இந்த அத்தனை குறையும் எதிர்த்துக்கிட்டும், எழுதிக்கிட்டும், என்னைக்காவது இதையெல்லாம் மாத்திடலாம்ங்கிற நம்பிக்கையோடும், ஜனநாயகத்துலயும் , பேச்சு வார்த்தையிலயும் இதெல்லாம் எதிர்கொள்ளலாம் என்ற சாத்வீகமான நம்பிக்கைகளோடவும் எங்க திருக்கூட்டம் வாழ்ந்துகிட்டிருக்கு. மாறும்ங்கிற நம்பிக்கைதாம் ஆதாரம் எங்களுக்கு

அம்மா குணம் சரியில்லைனா, பக்கத்து வீட்டுக்காரிய அம்மாவா ஏத்துக்க முடியாது எங்களால - தங்கமணி மாதிரியும், சுந்தரவடிவேலு மாதிரியும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#44
<b>மூக்கு சுந்தருக்கு ஈழ்நாதனின் பதில் ...</b>

ஒரு பதிவிற்கான எதிர்வினையும் சில விளக்கங்களும்

அன்பின் சுந்தர் அவர்கட்கு.முதலில் மூத்தவர் என்ற முறையிலும் பலமுறை நான் நெகிழ்ந்த பதிவுகளை எழுதியவர் என்ற முறையிலும் நீங்கள் நீ இள வயது வளரவேண்டிய பிள்ளை.ஆக்க பூர்வமாகச் செய்ய எவ்வளவோ இருக்கு என்று சொன்னதை உண்மையான வாழ்த்தாக எடுத்துக்கொண்டு அதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இப்படியான பதிவுகள் பின்னூட்டங்கள் மூலம் இருவருக்கும் இடையில் இதுவரை இல்லாத நட்பு ஆகக்குறைந்தது புரிந்துணர்வாக ஆவது வளரும் என்று நம்புகிறேன்.

உங்களுக்குப் பல ஆண்டுகளாக இலங்கைத் தமிழரோடு பழக்கம் உண்டு என்ற தன்னிலை விளக்கத்துக்குப் பதிலாக நானும் தன்னிலை விளக்கத்தை முன்வைக்கிறேன்.உங்களுக்கு ஈழத்தமிழருடன் பழக்கம் தான் உண்டு.எனக்கோ படிக்க என வந்த இடத்தில் இந்தியச் சகோதரர்கலுடன் ஒன்றாக உண்டுறங்கும் வாழ்க்கை கடந்த மூன்றாண்டுகளாக இதுதான் தொடர்கிறது நீ இந்தியன் நான் ஈழத்தவன் என்ற வித்தியாசமின்றி அனைவரையும் தமிழன் என்ற குறு இனவாதம் சேர்த்து வைத்திருக்கிறது.எங்களிடையே விவாதங்கள் வரும் ராஜீவைக் கொன்றது சரியா தவறா என்பதிலிருந்து ஈழத்தில் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகள் வரை உணர்ச்சிக் கொந்தளிப்பை விடுத்து ஆராய்ச்சி பூர்வமாகப் பேசுவோம்.அப்போதெல்லாம் நான் அடிக்கடி சொல்லும் விடயம் ராஜீவின் கொலை தவிர்த்திருக்கப்படவேண்டியது.பல கொலைகள் உள் நாட்டில் நடந்தாலும் சர்வதேச ரீதியில் கெட்ட பெயரை உண்டாக்கியது என்ற ரீதியில் தவிர்த்திருக்கலாம்.ஆனால் ராஜீவ் செய்தது சரியென்பதை நானோ அந்த இந்தியச் சகோதரர்களோ முற்றுமுழுதாக ஒத்துக்கொண்டதில்லை.

ஈழத்துப்பூக்கள் என்னும் தலைப்பிலான பதிவு வெறுமனே உங்கள் அனைவருக்கும் இவர் இவர் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்துவதற்காகவே அன்றி எவ்விதத்திலும் பாகுபடுத்தவன்று என்பதைத் தெளிவாகச் சொல்லியிருந்தேன்.வலைப்பதிவில் ஏனெனில் வலைப்பதிவாளர் அனைவருமே ஏதோ ஒருவகையில் யாகு குழுமங்களிலோ மன்றங்களிலோ அறிமுகமானவர்கள்.ஆனால் ஈழத்தைச் சேர்ந்தவர்களை இங்கே மட்டுமே முதலில் கண்டிருப்பீர்கள் அதிலும் எவர் ஈழத்தைச் சேர்ந்தவர் எவர் பிறநாட்டவர் என்று பலரை உங்களால் அடையாளப்படுத்தவே முடியாது.அதனால் தான் ஈழத்து வலைப்பதிவாளர் அனைவரையும் ஏதோ ஒருவகையில் அறிந்திருக்கும் நான் அவர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தேன் ஒழிய நீங்கள் சொல்லும் இரத்தத்தில் ஊறிய பிரிவினை என்றால் வலைப்பதிவுகள் அறிமுகத்தை அத்துடன் நிறுத்தியிருப்பேன் மற்றையவர்கள் பதிவுக்குப் போய் ஊக்கு வித்துக் கொண்டிருக்க மாட்டேன்.

இதையெ உங்கள் எழுத்து நேர்மைக்குச் சான்றாய் அன்றைய தினமே வலைப்பூவின் பின்னூட்டத்தில் கொடுத்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பேன் இன்று உங்களுக்குச் சாதகமில்லா ஆடுகளத்தை திசைதிருப்ப இது உபயோகிக்கப் பட்டுவிட்டது நாளையே ஏதேனும் சிக்கல் வந்தால் ஈழநாதன் இட்ட பொறி என்று தமிழ்கூறும் நல்லுலகம் இவ்வுலகில் உள்ளவரை ஈழநாதன் பெயர் வாழும்.அதற்கான முதல் வித்தை நீங்கள் இட்டிருக்கிறீர்கள் நன்று புலிமுத்திரையோடு இந்தச் சின் முத்திரையையும் ஏற்றுக்கொள்கிறேன்.

எனது பதிவில் சொல்லியது பிளவு வந்துவிடுமோ என்று பயப்படாமல் உண்மைகளை எழுதும்படி மற்றவர் வலைப்பதிவுகளை எட்டிப் பார்க்கும் வழக்கம் இருந்திருந்தால் அவ்வார்த்தைக்கான காரணம் புரிந்திருக்கும்.நாங்களெல்லாம் இப்படி காரசாரமாக விவாதித்துக்கொள்வதால் எங்கே ஈழத்தவர் இந்தியர் என்ற பிளவு வந்துவிடுமோ என்று ஒரு உறவு எழுதியிருந்தது அதையே பல உறவுகள் மனதில் நினைத்திருக்கும் அதற்காகத் தான் எழுதினேன் நெருப்பு என்று சொன்னால் வாய் சுட்டுவிடாது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய அறிவு மட்டுமல்ல இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய நெளிவு சுழிவுகள் உங்களுக்கு விளக்கமின்மையே //ஊர் ரெண்டு பட வேண்டும் என்று ஆயுதம் கொடுத்திருக்க மாட்டோம். பிராந்திய வல்லரசு நாங்கள். இலங்கை வேண்டுமென்று நினைத்திருந்தால் இம் மாதிரி ஈன வழிகளில், குழப்பம் விளைவித்து உள்ளே நுழைந்திருக்க வேண்டியதில்லை. ஹார்லிக்ஸ் விளம்பர ஸ்டைலில் "அப்டியே ச்சாப்பிட்டிருப்போம்" . உங்கள் அச்சுபிச்சு ராசதந்திர சிந்தாந்தங்களை நிறுத்துக் கொள்ளுங்கள்.//
என்ற வாக்கியத்துக் காரணம்.இந்தியா எங்கே தனது பிராந்திய வல்லாதிக்கம் பறிபோய்விடுமோ என்று பயப்படுவதே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இலங்கையை தனது கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவது என்பது அரிச்சுவடியன்றி அச்சுப்பிச்சுச் சித்தாந்தமல்ல.

நாம் வல்லரசு எவனையும் பிடுங்கி விடுவோம் என்ற அதீத நம்பிக்கைதான் கார்கிலில் தீவிரவாதிகளின் ஊடுருவலாய் முடிந்தது.அவ்வாறான ஒரு கதையே இலங்கையிலும் நடந்தது.புலிகள் மற்றும் யாழ்ப்பாணத்தமிழ் மக்கள் பற்றிய எந்தவித விளக்கமும் இன்றி இந்திய இராணுவம் தான் ஒரு வல்லரசு என்று கொண்டிருந்த இறுமாப்பே ஆரம்பத்தில் அதுபெற்ற கசப்பான தோல்விகளுக்குக் காரணமாயிற்று.அதுவே முதற் கோணல் முற்றுங் கோணல் என்றமாதிரி ஆகிப்போனது.இன்று உங்கள் படையில் ஆயிரம் பேரை இழந்துவிட்டோம் என்று நீங்களும் எங்களில் பல்லாயிரக்கணக்கானவரை இழந்துவிட்டோம் நாங்களும் புலம்பக் காரணமாயிற்று.

பிராந்திய வல்லரசு நினைத்தால் எதுவும் செய்யலாம் என்று சொல்பவர்களுக்கு அமெரிக்காவின் குரல் என்றொரு வானொலி நிலையத்தை அமெரிக்கா புத்தளம் பகுதியில் அமைத்தபோது அதைத் தடுத்து நிறுத்த இந்திய இராஜ தந்திர வட்டாரங்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமற் போனது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.அதற்கான காரணமும் இந்தச் சின்னஞ்சிறு நாட்டில் அவ்வளவு பொருட்செலவில் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை நிறுவவேண்டியதன் அவசியம் என்னவென்று புரிந்திருந்தால் துளியூண்டு இலங்கையின் சிறு பகுதியைத் தானும் உங்கள் நாட்டால் விளம்பரத்தில் சொல்வதுபோன்று அப்படியே சாப்டுவேன் என்று சாப்பிட முடியாது என்ற சிறிய உண்மை புரிந்துபோயிருக்கும் இதெல்லாம் புள்ளிவிபரம் இல்லை அரசியல் சாதாரண ஈழத்தமிழனாய் எமது நாட்டின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்கள் யார் என்று தோன்டிப்பார்க்கப் புறப்பட்டு தோன்டத் தோட்டப் பூதமாய்ப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் புழுத்துபோன அரசியல்.

இதனை விட இன்னொன்று தெரியுமா எப்போதும் ஈழத்தமிழ் ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாகக் காட்டப்படும் இன்னொரு விவகாரம் திருகோணமலைத் துறைமுகமும் அதனை அண்டியதாகக் கட்டப்பட்டுள்ளது பாரிய எண்ணைக் குதங்களும்.இதனை ஆரம்பத்தில் நானும் நம்பவில்லை அப்படித் துறைமுகத்தாலும் எண்ணைக்குதத்தாலும் வரும் வருமானம் பெரிதல்ல என்றாலும் அதுபற்றிட்த் தொடர்ந்து வாசித்தபோது பொருளாதாரம் என்பதைவிட இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் என்ற புதிய காரணியைத் தெரிந்துகொண்டேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#45
<b>ஈழநாதனின் பதில் தொடர்கின்றது ...</b>

ஒரு பதிவிற்கான எதிர்வினையும் சில விளக்கங்களும்

உலக வல்லரசுக்கு துறைமுகத்தைக் கையகப்படுத்துவதன் மூலம் கிழக்கிலிருந்து மேற்கேயான கடற்போக்குவரத்தை தனது கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசை அதற்குப் பசுபிக்கில் ஜப்பானும் பிஜியும் கிடைத்தது போல இந்துசமுத்திரத்தில் வாய்ப்பாக அமைந்துள்ளது இந்த தீவு.அதே நேரம் அண்ணணுக்கோ திகில் எங்கே தனது பிராந்திய ஆதிக்கம் காணாமற் போய்விடுமோவென்று.இலங்கையில் அமெரிக்காவைக் காலூன்றவிட்டால் அது தனக்குத் தானே தோண்டும் புதைகுழி என்று அண்ணணுக்குத் தெரிந்தது அதற்கு வாகாய் மூக்கை நீட்டத் தருணம் பார்த்திருந்த வேளையில் கிடைத்ததுதான் தமிழர் சிங்களவர் முறுகல்.

அன்றைய காலம் தொட்டு இந்தியாவைத் தமிழர்கள் தமது தாயகமாகத் தான் கருதி வந்திருக்கிறார்கள்.அரசியல் பொருளாதார உறவுகள் மாத்திரமின்றி கலாசார மத பெண் கொடுக்கல் வாங்கல் கூட உண்டு.இலங்கையில் ஏற்பட்ட முறுகல் நிலையைச் சமாளிக்க முடியாத இந்தியத் திராவிடக் கடிகளை அடியொற்றி உருவான இலங்கைத் தமிழ்க்கட்சிகள் வெளிப்படையாக இந்தியா இலங்கை இனப்பிரச்சனையில் தலையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.அப்படியே காலத்துக்காலம் அறிக்கைகளை மட்டுமே விட்டுக்கொண்டிருந்த இந்திய அரசியல் தலைவர்கள் 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்தனர்.ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் சார்பாக அமைந்தன.

அதனைத் தொடர்ந்து வடமராச்சியைக் கைப்பற்றுவதற்காக ஒப்பறெஷன் லிபரேஷன் என்ற பெயரில் சிங்களப்படைகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை இந்து முதற்கொண்டு இந்திய ஊடகங்கள் அனைத்துமே கண்டித்தன.அப்பாவி மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின தலைவர்களும் நாளொரு அறிக்கையும் பொழுதொரு கண்டனக் குரலுமாக வெளியிட்டனர்.

அதன் பின்னர் இந்தியத் தலையீடு பர்றி எழுந்த ஆழமான குரல்களின் விளைவாய் ராஜீவ்-ஜெயவர்த்தன இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது.கவனியுங்கள் ஒப்பந்தம் ராஜீவ்-ஜெயவர்த்தனவுக்கு இடையே ஒழிய புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் இல்லை அதனை ஏற்றுக்கொள்ளுமாறு புலிகளின் தலைமை நிர்ப்பந்திக்கப்பட்டது.தமிழ் மக்களின் பாதுகாப்பு,குடியேற்ற விடயங்கள் எல்லாவற்றையும் விட ஒப்பந்தத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்ட விடயம் திருகோணமலைத் துறைமுகம்.திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பது ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இந்தியா அமைதி காக்கவும் தமிழ் மக்களைக் காப்பாற்றவுமே இலங்கை வந்தது என்ற இந்திய ஊடகங்களின் திரித்த கதைகளை நம்புவோர் வந்ததும் வராததுமாக திருகோனமலைத் துறைமுகத்தைக் கையகப்படுத்தவும் தனது நிலையை நிலைப்படுத்தவும் விரும்பியமைக்கு என்ன காரணம் சொல்வார்கள்?

பிற்பாடு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வண்ணம் குடியேற்றப்பிரச்சனைகள் முகாம்களை அகற்றல் போன்ற செயற்பாடுகளாலும் புலிகளுக்கு எதிராகப் போட்டி இயக்கங்களை வளர்க்க முயன்ற காரணத்தாலும் புலிகள் அதிருப்தியுற்றதைத் தொடர்ந்து யுத்தம் வெடித்தது.எந்த மக்களைக் காப்பாற்றவென இலங்கை போனார்களோ அந்த மக்களுக்கு எதிராக அவர்களது துப்பாக்கிகள் உயர்ந்தன.இதிலே இந்திய இராணுவத்தைச் சீண்டுவதில் புலிகளும் பங்கு வகித்தனர் என்றால் அமைதி காக்கவெனச் செல்லும் ஒரு படையானது இவ்வாறான நிலவரத்தை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தத்துடனும் திட்டவரைபுடனும் போயிருக்கவேண்டும்.ஆனால் பெரிய இராணுவம் என்ற பெயரை மட்டுமே நம்பி ஆரம்பிக்கப்பட்ட ஒப்பரேஷன் பவான் நடவடிக்கை யாழ் நகரைக் கைப்பற்ற மதக்கணக்கில் ஆனது.

நீங்கள் சொல்வதுபோல அப்படியே சாப்பிடிருக்கலாம் சாப்பிடவில்லையென்று கூடச் சொல்வதற்கில்லை இந்திய டாங்கிகள் யாழ் நகர் செல்லும் பாதைகளில் வீடுகளையும் தங்கியிருந்தவர்களையும் சாப்பிட்டன.மோட்டார் ஷெல்கள் அப்பாவிப் பொதுமக்களை அப்படியே சாப்பிட்டன.ஆனாலும் ஒருநாளில் சகலதையும் நாசம் பண்ணி அப்படியே சாப்பிடுவதற்கு இந்தியா இலங்கையில் காட்டிக்கொண்ட கனவான் பிம்பம் இடங்கொடுக்கவில்லை.அதன் காரணமாக பகுதி பகுதியாகச் சாப்பிட்டுவிட்டு தன்னில் 1200 சொச்சப் பேரை இழந்து வீடு திரும்பியது இந்திய இராணுவம்.

இடைப்பட்ட காலத்தில் நடந்தவை என்னவென்பதை சாதாரண இந்தியக் குடிமகனுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் பதிவை ஆரம்பித்தேன் அன்றி பழசுகளைக் கிளறி வேதனை தரும் ரணங்களை ரசிக்கவல்ல அது தரும் வலி உங்களை விட எங்களுக்கு அதிகம்.

இந்தத் திரி எப்படி ஆரம்பமானது என்று பாருங்கள்.இந்திய இராணுவத்தின் இலங்கைச் செயற்பாடுகள் அறிந்திருந்தும் வலைபதியும் நாலைந்து மாதங்களாக இலங்கை இராணுவம் பற்றி எழுதியிருந்தேனே தவிர இந்திய இராணுவம் பற்றி எழுதியதில்லை.ஆயினும் உங்கள் பதிவில் நீங்கள் சொன்ன வாக்கியங்களும் அதற்கு மற்றவர்கள் அளித்த பின்னூட்டங்களும் என்னைச் சுட்டுவிட்டன.

இலங்கையில் இந்திய இராணுவம் செய்தவை அத்தனை கறையும் ராஜீவைப் புலிகள் கொன்றது மூலம் கழுவப்ப்ட்டுவிட்டதென்பது எந்தவகையிலும் ஏற்புடைய கூற்றாகத் தெரியவில்லை.புலிகளுக்கும் இந்தியாவுக்கும் கணக்குத் தீர்ந்துவிட்டது எனக் கொண்டாலும் இடையில் அகப்பட்டு நசுங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராஜீவ் இருந்தென்ன செத்தென்ன அவர்களுக்கு இந்தியா என்ன செய்தது வரும்போது அரிசியுடன் வந்த இந்தியா போகும் போது விட்டுச் சென்றதெல்லாம் சீரழிவுதான்.

ஒட்டுமொத்தமாக இந்தியப் படையே கூடாது காமுகர்கள் என்று சொல்லவரவில்லை ஒரு சிலரின் வார்த்தையாடலில் நானும் அவ்வகைக் கூற்றைப் பிரதிபலித்திருந்தால் யாவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.ஆனால் ராஜீவ் கொலையால் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கொலையை மறைக்க முடியுமென்றால் இந்திராகாந்தியைச் சுட்டதன் மூலம் தமக்கு இழைக்கப்பட்ட துன்பங்களுக்கு சீக்கிய இனம் பரிகாரம் தேடிக்கொண்டது என்றுதான் கூறவேண்டும்.

தயவுசெய்து ராஜீவ் கொலை என்ற பின்னணியில் ஈழத்தமிழர் பிரச்சனையை மூடி மறைக்காதீர்கள் ஒரு முன்னைநாள் பிரதமரின் இழப்பை பல்லாயிரக்கணக்காண அப்பாவிகளின் இழப்புக்கு ஈடாக்காதீர்கள்.பிடிக்காதவர்களைப் போட்டுத்தள்ளும் என்கவுண்டர்கள் நடக்கும் நாட்டில் இருந்துகொண்டு என் நாடு ஜனநாயக நாடு என்று பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளாதீர்கள் மற்றவனைப் பாசிசம் என்று சொல்லவரும்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அரசியலில் நடக்கும் காலில்விழுதல் பிடிக்காதவரைப் போட்டுத்தள்ளுதல் போன்ற பாசிச செயற்பாடுகளுக்கு ஜனநாயகப் போர்வை போர்த்தாதீர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எல்லோரும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்ற புதிய முத்திரையைக் குத்தாதீர்கள் அதனால் இந்தியாவில் படிக்காத வசிக்காத எனது குடும்பத்தினருக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லையென்ற போதும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#46
<b>ஈழநாதனின் பதில் தொடர்கின்றது ...</b>

எனது இந்தியச் சகோதரனுக்கு

என்னடா இது இவ்வளவு நாளும் பின்னூட்டங்களிலும் தனிப்பதிவுகளிலும் வாங்கு வாங்கென வாங்கிவிட்டு இப்போது சகோதரனே என்றழைக்கிறானே என்கிறீர்களா.என்ன செய்வது வரலாறு கூறும் உண்மை அதுதானே.

எனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு இந்தியக்குடும்பம் இருக்கிறது அதனுடன் அடிக்கடி பேசிப்பழகி இருக்கிறேன்,பாடசாலையில் எனக்கொரு இந்தியச் சகோதரன் இருக்கிறான் என்று சின்ன சின்ன பூச்சுற்றல்கள் மூலம் எனக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவை விளக்க முன்வரவில்லை அது விளங்குபவர்களுக்கு விளங்கட்டும் வேண்டாதவர்கள் விட்டுவிடட்டும்.இப்போது விடயத்துக்கு வருவோம்.

எப்போதும் அதீத கோபமும் விரக்தியும் எப்போது வரும் தெரியுமா ஒரு விடயம் எமக்குக் கிடைக்கும் என நம்பி அது கிடைக்காமற் போனபோதோ அல்லது நாம் மிகவும் நம்பிய ஒருவர் அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறியும் போதோ அதீத கோபம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.அதே கோபம் தான் இந்தியா மீது எனக்கு ஏற்பட்டதும் இதை இந்திய வெறுப்பென்றோ இந்தியர்களுக்கு எதிரானவன் நானென்றோ எடுத்துக்கொள்பவர்களை பார்த்துப் பரிதாபப்படுவதை விட நானென்ன செய்யமுடியும்.

சிறுவயது முதலே வரலாற்றுப்புத்தகங்களை விரும்பிப்படிப்பேன் காலப்போக்கில் அதுவே அரசியல் மீதான ஈர்ப்பாக மாறிவிட்டது.அன்நேரத்திலெல்லாம் நான் விரும்பிப்படித்ததெல்லாம் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றுக்கதைகள் தான்.இலங்கையும் போராடித்தான் சுதந்திரம் பெற்றதுதான் என்றாலும் சொல்லிக்கொள்ளும்படி சுதந்திர வீரர்கள் இருக்கவில்லை.ஆகவே எனக்கு காந்தியடிகளும் பகத்சிங்கும்,நேதாஜியும்,வாஞ்சிநாதனும் கதாநாயகர்களாகத் தெரிந்ததில் வியப்பில்லை.

அது போதாதென்று மத இன கலாசார சம்பந்தமான வரலாற்றுத் தகவல்களையும் கதைகளையும் படித்து எனக்குள் ஒரு பிம்பத்தை வளர்த்து வைத்திருந்தேன்.இந்தியா ஒரு புண்ணிய பூமி அகிம்சையின் பிறப்பிடம் மனிதத்துக்கு மதிப்பளிக்கும் நாடென்று சிறுவனின் பிம்பமாக அது இருந்தது
அரசியல் விளங்கிக்கொள்ளாத வயதில் ஏழோ எட்டில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த ஒருநாளில் எனது தந்தையார் பெரிய தந்தையார் மற்றும் அவர்களது நண்பர்கள் கூடியிருந்து கதைத்துக்கொண்டிருந்தபோது இந்திய விமானங்கள் வானில் தோன்றி அரிசி மூட்டைகளைப் போட்டன.அன்றிருந்த கவலைதரும் நாட்டுநிலையால் மனம்நொந்திருந்த அத்தனை பெரியவர்கள் முகத்திலும் உண்மையான ஒளியைக் கண்டேன் நான் மட்டுமல்ல அவர்கள் கூட இந்தியா பற்றியதொரு பிம்பத்தை மனதில் வைத்திருந்திருக்கவேண்டும்.

இந்தியா வந்துவிட்டது இனி நிம்மதி தான் என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டது மட்டுமன்றி அவர்களை வரவேற்கச் சென்றவர்களில் பெரியப்பாவும் ஒருவர்.அப்படிச் சென்றது மட்டுமல்லாது சில நாட்களில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்பாடலை ஏற்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்ட பிரஜைகள் குழுவில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் தலைவராக தானக முன்வந்து பொறுப்பேற்ற காரணத்தால் யாழ்ப்பாணக் குடாநாடு பூராவும் இந்தியப்படையினரின் நிகழ்கால எதிர்காலச் செயற்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ள உதவிற்று.

அப்போதெல்லாம் இந்தியா பற்றியும் அமைதிப்படையாக வந்த இந்தியப்படையினர் பற்றியும் நான் கொண்டிருந்த பிம்பம் வளர்ந்தது.

ஆனால் ஒருமாத காலத்துக்குள் பிரஜைகள் குழுத்தலைவர் என்ற ரீதியில் பெரியப்பா அறிந்துவந்து சொன்ன செய்தி இந்தியப்படையினர் பொதுமக்களைத் தாக்குகிறார்கள் என்பது.அதை முதலில் நம்பவில்லை என்றாலும் பெரியப்பா பாடசாலை அதிபர் பிரஜைகள் குழுத்தலைவர் என்ற பாரபட்சம் இன்றி எங்கோ புலிகளால் நடைபெற்ற ஒரு தாக்குதலுக்குப் பழிவாங்கும் முகமாக தெருவில் போவோர் வருவோரைப் பிடித்து அடித்ததில் அகப்பட்டு மண்டை உடைந்து பெரியப்பா வீடுவந்தபோது இந்தியா பற்றி நான் கொண்டிருந்த பிம்பம் கண்ணாடிச்சில்லாய் உடைந்து சிதறிப்போயிற்று.

இடம்பெயர்ந்து தங்கியிருந்த இடத்தை விட்டுச் சொந்த இடம் வந்தபோது ஒவ்வொருநாளும் நடைபெற்ற சம்பவங்கள் இதுவரை நான் கொண்டிருந்த பிம்பம் எதிர்மறையாய் வளர ஆரம்பித்தது.நிச்சயமாக அந்தச் சிறுவயதிலேயே இந்தியப்படை என்றாலெ வெறுக்கும் அளவுக்கு என்னை பாதித்தன நடு இரவில் நடைபெறும் சுர்றிவளைப்புகளும் அலற அலற யாராவது பிடித்துச் செல்லப்படுவதும் அடுத்தநாள் வயல் வரப்பிலோ ஒழுங்கை ஓரத்திலோ சடலமாக மீட்கப்படுவதும் இந்தியா காந்தீய நாடா என்ற கேள்விகளை எழுப்பின.

இத்தனைக்கும் எங்கள் ஊரின் ஓரிடத்தில் முகாம் அமைத்து புலிகள் தங்கியிருந்தனர் இராணுவம் சுற்றி வளைக்கும் போது அவர்களில் யாரும் பிடிபட்டது கிடையாது சுற்றிவளைத்தவர்கள் சும்மா போகக்கூடாது என்று யாராவது நாலைந்து பேரைப்பிடித்து நாயடி பேயடி அடித்துவிட்டுப்போவார்கள்.

எங்கள் பாடசாலையிலிருந்து பார்க்கப்படும் போது முகாம் முற்றத்தில் வைத்து கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் என் பாடசாலையில் உயர்தரம் படிக்கும் அண்ணன்களே உதைபடுவது அன்றாடக் காட்சி.அவர்கள் விடுதலை செய்யப்பட்டதும் ஒன்றில் வெளிநாடுகளுக்கு ஓடினார்கள் அல்லது புலிகளுடன் இணைந்து கொண்டார்கள்.சும்மா இருந்தவைப் புலியாக்கி பின் ஒன்றுமறியாத அவனது குடும்பத்தினரைத் துன்புறுத்தும் இந்திய இராணுவத்தின் செயல் எனக்கு ஆத்திரமூட்டியது.

இவ்வாறான செயல்களில் ஒருவர் இருவர் செய்யவில்லை இராணுவம் உலாப்போகும் போது ஓரிருவர் போவதில்லை குழுவாகவே போவார்கள் அதில் நாலோ ஐந்தோ பேர் வழியில் செய்யும் செயல்களை மற்றவர்களும் பார்த்து ரசிப்பதே வழமை இவ்வாறான செயல்கள் அதிகாரி தரத்திலுள்ளவர்களு தெரிந்தவாறே நடத்தப்பட்டன அவர்கள் இதனை செய் என்று ஏவாவிட்டாலும் செய்தவர்களை திருத்தாமல் விட்டதால் இன்னுமின்னும் ஊக்குவித்தனர்.

இவ்வாறான நிகழ்வுகளுக்கு இந்திய இராணுவம் திரும்பிய வேளையில் எந்தவிதமான வருத்தமோ கவலையோ தெரிவிக்கப்படவில்லை.ஊடகங்களும் சரி அரசும் சரி இந்திய இராணுவத்தின் இழப்புகளை மட்டுமே பெரிதுபடுத்தின தவிர ஈழத்தில் இறந்தவர்கள்,பாலியல் வன்புணர்சிக்கு ஆளானோர்,சொத்திழந்தோர் ஆகிய விபரங்களை மறைத்துவிட்டன.

இதுவே இன்றுவரை தொடரும்போதும் நடைபெறும் கருத்தாடல்களில் வார்த்தைகள் எண்ணற்றுப் பிரயோகிக்கப்படும்போதும் என்னுள் இருக்கும் உணர்வுகள் கிளர்கின்றன.ஒரு காந்திதேசம் அகிம்சை நிறைந்த உலகின் மிகப்பெரிய ஜனனாயக நாட்டின் குடிமக்களுக்கு உண்மைகள் மறைக்கப்பட்டதை உணரும் திறனோ அல்லது அத்ற்காக வருந்தும் மனமோ குறைந்து போய்விட்டதை நினைத்து இனிமேல் இந்தியா பற்றிய நேர்,மறை பிம்பங்களுக்கு மனதில் இடங்கொடுப்பதில்லை எனத் தீர்மானித்திருக்கிறேன்

அது ஜனநாயக நாடு அங்கு எதுவும் நடக்கும் யாரும் என்னவும் செய்வார் அனைத்தையும் ஜனநாயகத்தின் பெயரால் செய்கிறோம் என்று சொல்வதால் நானும் ஏற்றுக்கொள்கிறேன்

http://kavithai.yarl.net/archives/001665.html#more
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#47
இந்திய ராணுவச்சண்டை ஓய்ந்து வெளி உலகிற்கு ஒரு ஷோ காட்டேக்கை இங்கையிருந்து ஓடிப்போய் அங்கை நக்கின நா..கள் இங்கை வந்து வக்காலத்து வாங்குதுகள்.
இந்திய இராணுவம் வந்து இறங்கி யுத்தம் மம்மரமாக இருக்கேக்கை பள்ளிக் கூட முகாம்களிலை அகதிகளாளக சாப்பிடில்லாமல் இருந்து நாம் புதைத்த அனாதைப்பிணங்கள் இன்னமும் நம் கண்ணை விட்டகலவில்லை. பதுங்கு குழியில் குண்டுவீச்சிலிருந்து தப்ப ஒதுங்கிய முன்று பெண்களை அங்கேயே பாலியல் பலாத்காரம் செய்து கிரனைட் வெடிக்க வைத்து கொன்று விட்டு போக மூன்று நாட்களின் பின் நாற்றமெடுத்த இந்த பதுங்கு குழிகளை மீண்டும் தோண்டி அதை ஒழங்காக புதைக்க நாம் பட்ட கஸ்டங்கள்.ஒருபுறம் இந்திய இராணுவ பயம் மறுபுறம் அகோர ஆட்லறி செல் வீச்சு! இந்த அனுபவம் இங்கிலாந்திலற்கு படிக்க வந்த சீமான்கழுக்கு எங்;கே இருக்கப் போகுது. இந்த லட்சணத்திலை ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு வக்காலத்து வாங்குதுகள். இந்திய ஒரு வல்லரசாக இருக்கலாம் ஆனால் அவை இப்ப தங்கடை அலுவலை பார்ப்பது நல்லது. அது சரி ஒண்டு கெட்கிறன். உங்கட பக்கத்து வீட்டுக்காறஙன் சரியான பணக்காறன் அப்ப உங்கட வீட்டு பிரச்சனைiயை அவரே தீர்த்து வைக்கிறவர். ஆர் கண்டது அதைததான் இப்பவும் செய்யிறியளோ?
Reply
#48
பாதுகாப்புப்படையா வந்தவங்களுக்கு அரசாங்கத்தோடை கூட்டுச்சேர்ந்து பிறேமதாசாவிட்டை லோட் லோட்டா ஆட்டிலறி..ஷெல்.. கிறனைற்.. ஆர்பிஜி யளும் வேண்டி பள்ளிக்கூடங்களுக்கும் ஆசுப்பத்திரியளுக்கும் கோயிலுகளுக்கும் பின்னாலையிருந்து எறிஞசு போட்டு கதையளக்கிறாங்கள்..

2000 இந்திய இராணுவம் செத்ததெண்டா எவ்வளவு கை கட்டப்பட்ட நிலையிலை இருந்திருக்கிறாங்கள் எண்டது தெரியிது.. இந்தியன் ஆமி வந்தநேரம் நடந்த கதைசொல்ல கன சனம் இருக்கிது..
மற்றவங்களும் எழுதிறாங்களே தங்களுடைய கதையளை.. தங்கள் தங்கள் இணையத்தளங்களிலை..

இந்தியன் உதுக்குள்ளை வரான்..
இலங்கை கூப்பிட்டு வாறதெண்டாலும் சர்வதேச அங்கீகாரத்தோடைதான் வருவான்.. ஒண்டுமட்டும் நிச்சயம்.. இனிமேல் பாதுகாப்புப் படையா வரான்.. ஒருவேளை வேறையாரும் வந்து முடிச்சாப்பிறகு இடம் துப்பரவு செய்து திரும்பக் கொண்டுவந்து குடியமர்த்த வருவானோ என்னவோ..
Truth 'll prevail
Reply
#49
±øÄ¡ «ÛÀÅí¸Ùõ ±øÄ¡ÕìÌõ þÕìÌõ ±ýÀ¾¢ø¨Ä. «¾ü¸¡¸ ¸ÕòÐî ¦º¡øÄÓÊ¡¦¾ýÀÐÁ¢ø¨Ä. þó¾¢Â¡ ÅóÐ ±í¸û À¢Ãɨ ¾£÷츧ÅñΦÁýÚ þÄí¨¸¾Á¢Æ÷¸û ±¾¢÷ À¡÷ì¸Å¢ø¨Ä. ¿Î¿¢¨Ä¡¸ þÕó¾¡§Ä §À¡Ðõ. ¬É¡ø «ôÀÊ¡ ¿¼ì¸¢ÈÐ? þí¸¢Ä¡ó¾¢ø þó¾¢Â÷¸§Ç¡Î ÀÆÌõ Å¡öôÒ ÀÄÕìÌõ ¯ñÎ. «Å÷¸û º¡¾¡Ã½ Áì¸û. «Å÷¸Ç¢ý ¸Õò¦¾øÄ¡õ ²§¾¡ þÄí¨¸ò¾Á¢Æ÷ÙìÌ þó¾¢Â¡ ¯¾Å Åó¾ Á¡¾¢Ã¢Ôõ «¨¾ ÒÄ¢¸û ¦¸ÎòÐÅ¢ð¼É÷ ±ýÀÐõ ¾¡ý. ¯ñ¨ÁÂ¡É §¿¡ì¸ò¨¾ ¦º¡øÄ¢Â¡ þó¾¢Â¡ ¯û§Ç Åó¾Ð? þÂÖÁ¡É ŨÃ, ´ýÈ¡¸ ÀÊìÌõ «øÄÐ §Å¨Ä ¦ºöÔõ ¿ñÀ÷¸û ±ýÈ Å¨¸Â¢Öõ, þó¾ °Ã¢ø «Å÷¸ÙìÌõ ±í¸ÙìÌõ ¦À¡ÐÅ¡É À¢Ãɸû ¯ñÎ ±ýÈ Ó¨È¢Öõ «Å÷¸ÙìÌ ¿¡í¸û ¯ñ¨Á¨Â ¦¾Ç¢× ÀÎò¾ ÓÂø¸¢§È¡õ. «Ð×õ µÃÇ×¾¡ý ÓÊÔõ. «§¾§Å¨Ç «Å÷¸Ç¢ý ¸Õò¨¾Ôõ ¿¡í¸û §¸ð¸§ÅñÊÂÅ÷¸Ç¡¸¢§È¡õ. «¾¢ø ´ýÚ¾¡ý þó¾¢Â¡Å¢ý ÅøÄÃÍ ¸É×ìÌ þÄí¨¸ò¾Á¢Æ÷ À¢Ãîº¨É ´Õ «îÍÚò¾ø ±ýÀÐ. þó¾¢Â¡Å¢ý ºÁ£Àò¾¢Â º¡¾¨É¸û þó¾¢ÂÁì¸¨Ç ¾¨Ä ¿¢Á¢÷óÐ ¿¼ì¸ ¨ÅôÀÐ ÁðÎÁøÄ, ¿¢È¦ÅÈ¢ò¾ý¨Á À¢Êò¾ ¦Åû¨ÇÂ÷¸û (±øÄ¡ ¦Åû¨ÇÂ÷¸ÙÁøÄ) þó¾¢Â÷¸¨Ç ¾í¸Ç¢Öõ º¢Èó¾Å÷¸û ±ýÚ ¿¢¨Éì¸ ¨Å츢ÈÐ. ¦ÅÇ¢¿¡Î¸Ç¢ø ¯ûÇ ¬º¢Â ¿¡ð¼Å÷ ±øÄ¡Õõ þ¾É¡ø ÀÂɨ¼¸¢È¡÷¸û, ¦ÀÕ¨ÁôÀθ¢È¡÷¸û. ¾Á¢Æ£Æô§À¡Ã¡ð¼õ ±ýÀÐ §ÅÚ¾¡ý. «¾¢ø þó¾¢Â¡ ã쨸 ѨÇôÀÐ §¾¨Å¢ø¨Äò¾¡ý. ¬É¡Öõ þó¾¢Â¡×ìÌ þÄí¨¸ôÀ¢ÃÉ¡ø ÒÐôÀ¢Ãîº¨É ÅÕÁ¡É¡ø «Ð ã쨸òШÇì¸ò¾¡ý ¦ºöÔõ.
¯í¸¼ À¢Ãîº¨É Àì¸òРţðÎ측ÃÛìÌ À¢Ãîº¨É ÌÎìÌÁ¡É¡ø «øÄÐ ÌÎìÌõ ±ýÚ «Åý ¿¢¨Éò¾¡ø «Åý ã쨸òШÇôÀ¡ý ¾¡§É. ¯¹¸¨¼ À¢ÃÉ¡ø «ÅÛìÌ ´Õ À¢ÃÉÔÁ¢ø¨Ä ±ýÚ ¦º¡øÄ§ÅñÊ ¸¼¨Á ¡ը¼ÂÐ? §À¡¾¡¾¾üÌ ±¾¢Ã¢Ôõ þ¾¡¨Ä þó¾¢Â¡×ìÌ À¢Ãîº¨É "þó¾¢Â¡, µÊ Å¡, µÊ Å¡" ±ýÚ ¸òÐÈ¡ý.
¯½÷źôÀ¼¡Áø ¿¢¾¡ÉÁ¡¸ §Â¡º¢ò¾¡ø, ¾É¢¿¡Î ¸¢¨¼ì¸¢È§¾¡ þø¨Ä§Â¡, þÄí¨¸ò¾Á¢Æ÷¸û, ¦¾ü¸¢§Ä º¢í¸Ç Á츧ǡÎõ ż츢§Ä þó¾¢Â¡§Å¡Îõ þÕì¸ò¾¡ý §ÅñÎõ. þó¾ þÃñÎ §À§Ã¡Îõ ¾Á¢Æ÷¸û À¨¸òÐì ¦¸¡ñξ¡ý þÕì¸ §ÅñΦÁýÚ ±¾¢Ã¢ Å¢ÕõÒÅ¡ý. «¨¾ò¾¡ý ¾Á¢Æ÷¸Ùõ Å¢ÕõÒ¸¢È¡÷¸Ç¡?
þí§¸ ¡Õõ þó¾¢ÂôÀ¨¼ ¦ºö¾ «ðÞÆ¢ÂòÐìÌ Å측ÄòÐ Å¡í¸ò§¾¨Å¢ø¨Ä. þÉ¢§Áø ¦ºö§ÅñÊÂÐ ±ýÉ ±ýÀÐ ¾¡ý Ó츢Âõ. ±¾¢Ã¢ ¾Á¢Æ¨ÃÔõ þó¾¢Â¡¨ÅÔõ ÁÚÀÊÔõ º¢ñÎ ÓÊòРŢðÎ ÌÇ¢÷ ¸¡Â ¿¢¨É츢ȡý. «¾üÌ þ¼õ ¦¸¡Îì¸ô§À¡¸¢§È¡Á¡? «¾ü¸¡¸ þó¾¢Â¡ ¦ºö¾¨¾ ÁÈ츧ÅñΦÁýÀÐÁ¢ø¨Ä. ÁýÉ¢ì¸ÓÊÔÁ¡É¡ø ÁýÉ¢ì¸Ä¡õ, ¬É¡ø ÁÈì¸ ÓÊ¡Ð.

±ý ¦º¡ó¾ «ÛÀÅõ ´ýÚ. þó¾¢Â þáÏÅõ ÅóÐ ¦¸¡ØõÒ Â¡ú ÀŠ §À¡ìÌÅÃòÐõ ¿¼ó¾§À¡Ð ±ý ¦Àü§È¡¨ÃÔõ ¾í¨¸¨ÂÔõ À¡÷ì¸ Äñ¼É¢ø þÕóР¡ú Åó§¾ý. ¡Ƣø þÕó¾ ºÁÂõ ¾¡ý ¾¢Ä£Àý Áýõ, ÌÁÃôÀ¡ Áýõ ±ýÚ ¦¾¡¼í¸¢ ¦¸¡Î¨Á ¿¼ó¾Ð. ±ý ¾ó¨¾Â¡÷, ¾í¨¸¨Â âäºÉ¢ø þÕóÐ ÜðÊ ÅÃô§À¡É¡÷. ±ý ÅÂÐ À¢¨ÆÂ¡É ÅÂÐ ±ýÚõ ±ý¨É ¦ÅÇ¢§Â §À¡¸ìܼ¡¦¾ýÚõ ¦º¡øÄ¢Å¢ðÎô §À¡ÉÅ÷, ±ý ¾í¨¸ ¾¢ÕõÀ¢ ÅóÐ ÀÄ Á½¢ §¿ÃòÐìÌ À¢ÈÌõ ÅÃÅ¢ø¨Ä. «ô§À¡Ð ¿¡í¸û þÕó¾Ð Åñ½¡÷Àñ¨½Â¢ø. ±ý ¾¡Â¡Õõ ¿¡Ûõ þó¾¢Â þáÏÅ §º¡¾¨ÉÅÊ¢ø §¸ð¼ §À¡Ð, ´Õ º¡õÀø ÌõÀ¢¨Â측ðÊ «í§¸ §¾ÊôÀ¡÷ì¸î¦º¡ýÉ¡÷¸û. þí¸¢Ä¡óÐìÌ ÀÊì¸ Åó¾ ±ó¾î º£Á¡ý¸ÙìÌõ «ÛÀÅõ ÅçÅϦÁýÈ¡ø Åó§¾ ¾£Õõ. þ¨¾ ¿¡ý ÁÈôÀ¾¡ ÁýÉ¢ôÀ¾¡ ±ýÚ þýÉÓõ ÓÊ× ¦ºöÂÅ¢ø¨Ä. «¾üÌ ±ÉìÌ ¯Ã¢¨ÁÔõ þø¨Ä. ±ý ¾¡Â¡Õõ ¾í¨¸Ô§Á «¨¾ ¾£÷Á¡É¢ì¸ §ÅñÎõ. ¿¼ó¾¾ü¸¡¸ ¿¡í¸û ÅÕò¾ôÀθ¢§È¡õ, ÍôÀ¢ÃÁ½¢Â ÍÅ¡Á¢ §À¡ýÈÅ÷¸û "¬¾¡Ãò§¾¡Î Å¡Õí¸û. ÌüÈšǢ¸¨Çò ¾ñÊ츢§È¡õ" ±ýÛõ §À¡Ð ¦¸¡¾¢ì¸¢§È¡õ. ¬É¡Öõ þÄí¨¸Â¢ø ¯ûÇ ¾Á¢úÁì¸Ç¢ý ±¾¢÷¸¡Ä ¿¢õÁ¾¢ìÌõ þó¾¢Âò¾Á¢Æ÷¸§Ç¡ÎûÇ «ù÷¸Ç¢ý ¯È×ìÌõ ¿¡í¸û ¾¨¼Â¡¸ þÕì¸ô §À¡Å¾¢ø¨Ä.
Reply
#50
Mathivathanan Wrote:பாதுகாப்புப்படையா வந்தவங்களுக்கு அரசாங்கத்தோடை கூட்டுச்சேர்ந்து பிறேமதாசாவிட்டை லோட் லோட்டா ஆட்டிலறி..ஷெல்.. கிறனைற்.. ஆர்பிஜி யளும் வேண்டி பள்ளிக்கூடங்களுக்கும் ஆசுப்பத்திரியளுக்கும் கோயிலுகளுக்கும் பின்னாலையிருந்து எறிஞசு போட்டு கதையளக்கிறாங்கள்..

2000 இந்திய இராணுவம் செத்ததெண்டா எவ்வளவு கை கட்டப்பட்ட நிலையிலை இருந்திருக்கிறாங்கள் எண்டது தெரியிது.. இந்தியன் ஆமி வந்தநேரம் நடந்த கதைசொல்ல கன சனம் இருக்கிது..
மற்றவங்களும் எழுதிறாங்களே தங்களுடைய கதையளை.. தங்கள் தங்கள் இணையத்தளங்களிலை..

இந்தியன் உதுக்குள்ளை வரான்..
இலங்கை கூப்பிட்டு வாறதெண்டாலும் சர்வதேச அங்கீகாரத்தோடைதான் வருவான்.. ஒண்டுமட்டும் நிச்சயம்.. இனிமேல் பாதுகாப்புப் படையா வரான்.. ஒருவேளை வேறையாரும் வந்து முடிச்சாப்பிறகு இடம் துப்பரவு செய்து திரும்பக் கொண்டுவந்து குடியமர்த்த வருவானோ என்னவோ..

முன்னமே எழுதிவிட்டேனே இருந்தாலும் மீண்டும்.. நீங்கள் கூறியதுபோல வதந்திகளைக்கேட்டு பயந்து பயந்துதான் நானும் ஊருக்குப் போனேன்.. நான் பயப்பட்டபோது எனக்கு உற்சாகமூட்டி உவங்களும் உவங்கடை கதையளும்.. அவர்கள் அப்படி எதுவும் செய்யமாட்டார்கள் என்று தைரியம் தந்ததே சகோதரங்களும் பெண் உறவினர்களும்தான்.. இவையெல்லாம் கட்டுக்கதை என்பதை சொல்லியதுடன் நிறுத்தாமல் அதை செய்கைமூலம் நிரூபித்தும் காட்டினார்கள்.. இரவு 9.30 மணியளவில் இருவர் அத்தனை இந்திய இராணுவத்தூடாக 2 மைல்கள் நடந்துவந்து எனக்கு தைரியம் தந்ததார்கள் அதனை என்னால் மறக்கமுடியாது.. இரவில் ஷெல் சத்தம் கேட்டபோதுகூட இந்தியன் ஆமியை ஒருபொழுதும் பேசியது கிடையாது.. பேச்சு வேண்டியது யாரென்று நினைக்கிறீர்கள்.. ஷெல்லடிச்ச பிராணிகள்தான்..
:wink:
Truth 'll prevail
Reply
#51
®Æ¿¡¾ý ¦º¡ýÉÐ §À¡ø, ტù ¸¡ó¾¢Â¢ý Áýõ ±ý ¾ó¨¾Â¢ý ÁýòÐìÌ ®Î ¦ºö¡Ð. þÐ ±ýÉ ¸½ì§¸¡ ¦¾Ã¢Â¡Ð, ¬É¡ø þ¨¾ ±ý ¾¡Â¡ÕìÌõ À¡¾¢ì¸ôÀð¼ ÁüÈ ¾Á¢ú Áì¸ÙìÌõ Å¢Çí¸ôÀÎò¾ ÓÊÔÁ¡?
ტù ¸¡ó¾¢ ¦¸¡øÄôÀð¼ §À¡Ð þí¸¢Ä¡ó¾¢ø º¢Ä þó¾¢Â÷¸û þÉ¢ôÒ ÀâÁ¡È¢ì¦¸¡ñ¼É÷. «Ð ±ó¾ì ¸½ì¸¢ø?
Reply
#52
பாதுகாப்புப்படையாக வந்தவர்களை கொன்றது மாத்திரமல்லாது ரஜீவ் காந்தியையும் கொலைசெய்துவிட்டு அவர்கள்மீது வீண் பழிசுமத்தி தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறார்கள்..

பாதுகாப்புப்படையா வந்தவங்களுக்கு பிறேமதாசா அரசாங்கத்தோடை கூட்டுச்சேர்ந்து லோட் லோட்டா ஆட்டிலறி..ஷெல்.. கிறனைற்.. ஆர்பிஜி யளும் வேண்டி பள்ளிக்கூடங்களுக்கும் ஆசுப்பத்திரியளுக்கும் கோயிலுகளுக்கும் பின்னாலையிருந்து எறிந்தவர்கள் நம்மவர்கள்தான்.. ஒப்பரேஸன் லிபரேசனின்போது கூக்குரலிட்டு வரவழைத்ததை மறைத்து இப்படி கதையளக்கிறார்கள்..
Cry
Truth 'll prevail
Reply
#53
¾¡òŠ ¦º¡ýÉ Á¡¾¢Ã¢ ´ôÀ§Ãºý Ä¢À§ÃºÉ¢ý §À¡Ð "Mother India, Save the Tamils" ±ýÚ ¸ò¾¢ì¦¸¡ñÎ Äñ¼ý ¦¾Õì¸Ç¢ø SOLT (Student Organisation of Liberation Tigers) ´ØíÌ Àñ½¢É °÷ÅÄò¾¢ø §À¡ÉÅ÷¸Ç¢ø ¿¡Ûõ ´Õò¾ý. (¦Åû¨Ç¸û «ô§À¡Ð ±í¸ÙìÌ þÃð¨¼ Å¢Ãø ºøäð «Êò¾Å÷¸û) ¯ñ¨Á¾¡ý ¾¡òŠ. ¬É¡Öõ À¡Ð¸¡ôÒôÀ¨¼Â¡¸ò¾¡ý Åó¾Å÷¸û ±ñ¼¨¾ ÁðÎõ ²ü¸ ¸Š¼Á¡¸ þÕ츢ÈÐ.
Reply
#54
அவர்கள் பாதுகாப்புக்காகத்தான் வந்தார்கள்.. ஆரம்பத்தில் வரவேற்ற இவர்கள் சமஸ்டிக்குக்கூட ஒப்புக்கொண்டார்கள்.. அதனால்த்தான் ஆயதம் ஒப்படைப்பதற்கு ஒத்துக்கொண்டார்கள்.. ஆனால் தலைமைப்பதவியென்று வந்தபோது விட்டுக்கொடுப்புடன் நடக்க மறுப்புத்தெரிவித்து போர்க்கொடி உயத்தினார்கள்.. அதற்கு ஒருசாரார் தந்திரோபமாக உபயோகித்ததுதான் இந்த தனிநாடு கோரிக்கை.. ஒற்றுமையாக இருந்த யாழ் சமூகத்தை பிரித்ததுகூட தலைமைப்பதவிக்கான போராட்டம்தான்.. ஓடியோடி இயக்கத்தை இயக்கம் கொன்றழித்ததுகூட தலைமைப் பதவிக்காகத்தான்.. அப்போது இந்திய இராணுவத்து பாதுகாப்பை நாடியவர்கள் துரோகியாக்கப்பட்டார்கள்.. இவனுடன் சேர்ந்தான் அவனுடன் சேர்ந்தான் அதனால்த்தான் கொன்றழித்தோம் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை.. இந்தியா தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கொடுத்ததை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததுகூட பதவியாசைபிடித்து அலைந்தவர்கள்தான்.. அதே படலம் தொடர்ந்தவண்ணமிருக்கிறது.. கிழக்கிலங்கையின் தற்கால நிலைமை அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது..

தற்போது நடப்பது ஈழத்தமிழாகளுக்கான போராட்டமாக எனக்குத் தெரியவில்லை.. தமிழர்களை மேலும் மேலும் சிதறடித்து ஓடப்பண்ணும் போராட்டமாகவே தெரிகின்றது..
500 க்கும் குறைவான போராளிகளை இழந்த நேரத்தில் ஒற்றுமையாக ஒத்துழைத்து வாங்கவேண்டியவற்றை வாங்கவேண்டிய முறையில் வாங்காது அவர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இத்தனையையும் வாங்கி வைத்துக்கொண்டு என்னென்ன கதையெல்லாம் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.. எல்லாம் நம் தலைவிதி.. உண்மை அறிய மற்றவர்களின் ஊடகங்களையும் படியுங்கள்..
Truth 'll prevail
Reply
#55
எழுதப்பட்ட விடயத்தில் புதிதாக எதுவும் இல்லாத காரணத்தால் நீக்கப்படுகின்றது - மோகன்
Reply
#56
தாத்தா சும்மா புலம்பாதையுங்கோ. நீங்கள் சொல்லுறதைப்பார்ததால் இந்தியன் (குறிப்பா ரஜீவ் காந்‌தி) ஏதோ தமிழ்மக்களில இரங்கித்தான் இலங்கையில கால்வைச்சவன் எண்டு எல்லா தமிழ்மக்களும் 87இல நினைச்சமாதிரி நீங்கள் இண்டைக்கும் நினைச்சுக்கொண்டு இருக்கிறியள் எண்டு விளங்குது.

ஒண்டு சொல்லுறன் வடிவா விளங்கிக்கொள்ளுங்கோ. ரஜீவ் காந்‌தியின் ஒரே நோக்கம் இந்திய நலனொழிய வேறொன்றுமில்லை. அவனுக்கு எப்பிடியாவது இலங்கைக்குள்ள கால் வைக்கவேண்டிய தேவை இருந்தது. (இதுக்கு காரணம் அன்றைய பனிப்போரும் அதனால திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவமும்) அதனாலதான் குத்தி முறிஞ்சு, தலைகீழா நிண்டு, இரட்டை வேடம் போட்டு காலடி வைச்சவன்.
எண்டைக்கு காலடி வைச்சானோ அண்டையில இருந்து அவன்ர ஒரே குறிக்கோள் நீண்ட காலம் எப்பிடி இங்கயே தங்கியிருக்கிறதெண்டது. அதுக்காகத்தான் அவன் பிரச்சனைய தீர்க்காமல் தன்பாட்டில இழுபட விட்டவன். ஏன் அவன் நினைச்சிருந்தால் தமிழீழத்தை பெற்றுத்தந்‌திருக்கலாம் தானே? ஏன் தரேல்லை? ஏனெண்டால் அவன் நினைத்தது நடக்குது பிறகேன் தேவையில்லாத வேலை?

எங்கட தமிழ் மக்கள் இந்தியாதான் எங்களுக்கு எல்லாம் பெற்றுத்தரும் எண்டு அன்றைக்கு கனவு கண்டவை (இயக்கங்கள் உட்பட) இல்லையெண்டு சொல்லேலாது. ஆனால் இப்ப எல்லாருக்கும் உண்மை தெரியும்.

ஆனால் எனக்கென்ன ஆச்சரியமும் சிரிப்பும் எண்டால் நீங்கள் இதொண்டும் இத்தின வருசமா விளங்காமல் அரசியலில் கொமெண்ட் குடுக்கிறியள். அதுவும் சலிக்காம விளாசித்தள்ளுறியள் எதோ பெரிய கருத்தாளன் எண்ட நினைப்போட ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#57
குறிப்பா உதுசொல்ல அவதாரம் எடுத்து வந்தனீரோ..?

கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த திருகோணமலையிலை இப்ப கப்பலுகள்வந்து கொட்டுண்ணுது அதை மனேஜ்பண்ணமுடியாமல்த்தானே கஸ்ரப்படுறாங்கள்..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கை ஒருத்தருக்கும் திருகோணமலை பெரிசா முக்கியமில்லை.. மன்னார் ஒண்டுதான் இந்தியாவுக்கு முக்கியம்.. அது இல்லாமலும் கொழும்பை பாவிக்க அவங்கள் றெடி.. கடல் அவங்களதாயிருக்க நல்லா றீல் விடுறாங்கள்..
:wink:
மற்றவங்களுக்கு உங்கை ஆயுதம் விக்கவேணும் அதுதான் அவங்களுக்கு முக்கிமே தவிர வேறை ஒண்டுமில்லை.. மற்றது கூலிவேலைசெய்ய அப்ப அப்ப ஆக்கள்தேவை அதுக்குத்தான் மிச்சம்.. மற்றப்படி பிள்ளையள் படிப்பிச்சு அதுகளையும் நல்லா பயன்படுததுறாங்கள்.. வேறை என்னதேவை..?

இந்தியன்ரை தீர்ப்பு சமஸ்டிதான்.. அதுக்கு மேலை ஒண்டுமில்லை.. உவங்களுக்கும் அது நல்லாத் தெரியும்.. அதோடை நீங்கள் கறவைமாடு எண்டு உவங்கள் கண்டுபுடிச்சிட்டாங்கள்.. இப்ப சண்டையை உண்டாக்கினால்த்தான் உவங்கள் சீவிக்கலாம்.. அதுக்குத்தான் உவங்கள் உவ்வளவு கூத்தாடுறாங்கள்.. அவங்களும் றெடி.. இனி எங்கை எப்படி முடியுமோ..?
Truth 'll prevail
Reply
#58
தாத்தா
நீங்கள் என்னன்டாலும் எழுதுங்கோ ஆனால் ஏன் மற்றவர்கள் பட்ட அனுபவங்களையும் கொச்சைப் படுத்துகிறீர்கள் என்பதுதான் வேதனை. நீங்கள் அனுபவப் பட்டிருந்தாலும் இப்படித்தான் கதைத்திருப்பீர்களோ தெரியாது.....
அது எப்படி ஊரிலுள்ள மொத்தச் சனமும் இந்தியன் அனியாயம் செய்தான் என்டு சொல்லியும் சொல்லிக் கொண்டு இருக்கும் போதும் சிலர் சொன்னார்கள் என்டு ஒரு முடிவுக்கு வருவீர்கள்.

நீங்கள் சில பிரச்சினைகளுக்கு விளக்கம் காணாமல் இருப்பதையே இது காட்டுகிறது.
ஊரிலிருந்து அனுபவப் பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதாலேயே இதை எழுதுகிறேன்
Reply
#59
சில நாய்கள் நிஜத்தை கண்டு குலைக்கும் சிலதுகள் நிழலைக்கண்டு குலைக்கும்! மொத்த்தில் நாய்கள் குலைக்கும்! நாய்களிற்கு மனிதாபிமான உணர்வுகள் கிடையாது. புலைப்பது மட்டுமே அதன் தொழில். ஆனால் சில மனிதத்திற்கும் அது சரிவரும் போது அதை மனிதம் என்பதா அல்லது?
Reply
#60
உதில எழுதிறாக்கள் எல்லாருக்கும் மனச்சாட்சி ஒன்று இருக்குத்தானே... நெஞ்சில கையை வச்சுச் சொல்லுங்கோ இந்தியன் ஆமி வரேக்க ரோட்டு ரோட்டா நிண்டு கையசைச்சவையும் ஏன் சயிற்றடிச்சவையும் பின்னர் கலியாணம் முடிச்சவையும் எண்டு ஒரு பகுதி நிலமை விளங்காம தலைகால் புரியாமல் ஆடவில்லையோ என்று....!

பொடியள் கரும்புலித்தாக்குதல் நடத்தினதும் ஒப்பரேசன் லிபரேசன் சற்றுத் தணிந்ததும் உண்மை...ஆனா அதுவே ஒப்பரேஸன் லிபரேசனை முழுசா நிப்பாட்டிச்சென்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை... காரணம் பொடியளட்டத் திறமை இருந்திச்சு ஆனா போதிய பலம் இருக்கேல்ல.... எது எப்படியோ சிறிலங்கா அரசையும் இராணுவத்தையும் பொறுத்தவரை அது சூரியக்கதிரால 95 இல அப்ப விட்ட குறைய நிறைவேறிட்டுது.....எண்டதையும் ஆரும் மறுக்கேலாது.....!

ஆனா பொடியளைப் பொறுத்தவரை அவங்கள் சிறிலங்கா அரசு போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாங்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளா முடியாது.... அதேபோல அவங்கள் இந்திய இராணுவத்தை பற்றி ஆரம்பத்திலையே மக்களுக்கு விளங்கப்படுத்தினார்கள்.... ஆன அதையெல்லாம் மக்கள் விலாவாரியாக் கேட்டதோட சரி...அவற்றில் கவனம் எடுத்துச் செயற்பட்டது குறைவு...அதுதான் இன்றும் நடக்குது....! மக்களில் பலர் எப்ப தாங்கள் பெரியாக்கள் ஆகலாம் என்றுதான் இருக்கிறார்களே தவிர அவர்களுக்கு தாயகம் விடுதலை தேசியம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாத்தான் இருக்கு என்பதும் உண்மை....! இவை ஒவ்வோர் ஈழத்தமிழனதும் இதயத்தில் இருந்தும் அவனது வாரிசுகளும் இதயத்தில் இருந்தும் எங்கும் உண்மையான தேசப்பற்றோடு மண்பற்றோடு வரவேண்டியவை....அதற்கான நியாயம் இருக்கு...ஆனா வருகின்றனவா...????! :evil: :twisted: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)