பேராதனைப் பேராசிரியர் ஒருவருக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பைப் பற்றியும் அதற்கு அவர் தெரிவித்த மறுப்புக்களையும் பத்திரிகைகளில் காண நேர்ந்தது.
"THE EXILE RETURNED'-A Self Portrail of Tamil Vellahlas of Jaffna என்ற அந்த பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹீலின் புத்தகத்தை வாசிக்கும் போது ஒரு ஆபாச சஞ்சிகையை வாசிக்கும் எண்ணம்தான் தோன்றுகின்றது. பொது இடங்களில் நாம் கதைக்கக் கூச்சப்படும் விடயங்கள் தான் கிளறப்பட்டிருக்கின்றன. இப் புத்தகம் Harvey Mudd College, Claremont. USA என்ற வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் எழுதப்பட்டிருக்கிறது.
தமிழரின் கலை கலாச்சாரப் பாரம்பரியங்களை உலக அரங்குகளில் வெளிக் கொணர்ந்த புத்தி ஜீவிகளைப் பற்றிக் ள்விப்பட்டிருக்கிறோம். அதைக் கிண்டலடித்துத் தன்னைப் புத்திஜீவியாகக் காட்ட நினைக்கும் புத்திஜீவிகளும் இருக்கின்றனர்.
தமிழர் பாரம்பரியத்தையும், சைவசமயத்தையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவுக்குக் கேவலப்படுத்தியிருக்கிறது இந்த நூல். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது மதத்தில் பற்று இருக்கு வேண்டும் தான். ஆனால், அதற்காக இன்னொரு மதத்தைக் கேவலப்படுத்திக் கிண்டலடித்துத் தான் தன்து மதப்பற்றைக் காட்ட நினைப்பது வரவேற்கப்படக் கூடிய தொன்றல்ல. அது மதவேறி (Religious Fanaticism) அதனால் உருவாகக் கூடிய பின்விளைவுகளைப் பேராசிரியர் அறியாமலிருக்க முடியாது.
தன்னுடைய அந்தப் புத்தகத்தில் நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, சங்கிலியன் அரசன், சாயி பாபா என்று குறைவைக்காமல் எல்லோரையும் கிண்டலடிக்கிறார். தன்னை ஒரு இந்து சமயத்தை வேத,ஆகம,புராணங்களையெல்லாம் நன்கு கற்ற ஒரு மேதாவி போல் மேலை நாட்டாருக்குக் காட்டுவதற்காகவும் இந்து சமுதாயத்தை முடிந்தவரை கேவலப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் ஆங்கிலேயரின் மொழபெயர்ப்புகளை அடிக் குறிப்பாகக் கொடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் புகுத்தியிருக்கிறார்.
வேதாகமங்களிலுள்ள எந்ந நல்ரல விஷயமும் மனிதனுடைய கண்ணுக்குத் தென்படவில்லை. யாருக்குமே தென்படாமல் இருக்கிற அவ்வளவு செக்ஸ் சம்பந்தமான விடயங்களையும் தேடிப்பிடித்திருக்கிறார்.
O'Flaherth மொழிபெயர்ந்த Shatapatha Brahmana வைத் தனது புத்தகத்தின் 239 ஆவது பக்கத்தில் குறிப்பிடுகிறார். அஸ்வமேத யாகத்தைப் பற்றிய ஒரு குறிப்பு 'ஆர்வமுள்ள வாசகருக்காக" என்று தருகிறார். யாகம் முடிவில் குதிரையைப் பலியிட்டு பட்டத்து அரசியைக் குதிரைக்கு அருகே படுக்க வைத்து (மிகுதியை அவரது புத்தகத்திலுள்ளபடியே") "The they draw our the penis of the horse and place it vagina of the chief queen while she says, "may the vigorous virile male, the layer of seed, lay the seed' this she says for sexual intercourse"
யாழ்ப்பாணத்துப் பெண்கள் தமது 42 வயது வந்தவுடன், புருஷன் வேறிடங்களில் மேயாமல் இருப்பதற்காகத் தென்பகுதியிலிருந்து கன்னிகளை வரவழைத்து வீட்டில் அக்காலத்தில் சேவைக்கு அமர்த்துவார்களாம். பிள்ளை உண்டானால், அவர்களுக்குப் பணவெகுமதிகளைக் கொடுத்துத் திருப்பி அனுப்பி விடுவார்களாம் (பக்கம் 168) எங்கோ ஒரு மூலையில் இப்படி ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால் இதை வாசிக்கும் யாழ்ப்பாணத் தமிழரல்லாதவருக்கு இது எவ்விதமான உருவகத்தை ஏற்படுத்தும்? அதுதான் இதன்நோக்கமா?
கதிர்காமத்தில் கலையாடும் பெண்களைப் பற்றி Princetion University யைச் சேர்ந்த பேராசிரியர் கணநாத் ஒபயசேகர ஆராய்ந்தாராம். பக்கம் 111இல் இவர் எழுதுகிறார். ".....Well married Hindu women who went into a trance and danced, Their rapid back and forth hip movements signified that they saw themselves as in copulation with Lord Muruha.... 'கதிர்காமத்தில் கலையாடும் மணமுடிந்த பெண்களின் பின்புற அசைவு. அவர்கள் முருகனுடன் உடலுறவு கொள்ளுவதாகப் பாவனை செய்தலைக் காட்டுகிறதாம்.
Young and Jebanesan (தற்போதைய பேராயர் ஜெபனேசன்) எழுதிய "the Bible Trembled" என்ற புத்தகத்தின் 171 ஆவது பக்கத்தைக் குறிப்பிடுறார். "extensive quotations from the secular (Newa paper,the) Jaffna freeman on the robbery, and violencee including rape, accompained by opium use in the 1860s around the Nallur and Maviddaouram Temples, especially at festival time பக்கம் 104 இல் கந்தபுராணத்தில் முருகன் வள்ளியைக் கடத்தி வல்லுறவு செய்கிறாராம். பிள்ளையாரின் உதவியுடன்!
228ஆவது பக்கத்தில் பரதநாட்டியம் பற்றி "during the dance where the dancer invited Krishna to copulate with the her.. sang and danced of sex with god, and whose dances included moments when the legs would be spread...."நடன மாடும் பெண் காலை விரித்துக் கிருஷ்ணரை உடலுறவு கொள் அழைக்கின்றாராம்.
ஒரு தாழ்ந்த ஜாதிக் குடும்பத்துக்கு 'மாவீரர் குடும்பம்" ஆனதால் வந்ந மௌசைப் பற்றியும் Fasist Nafianalism பற்றியும் 316 ஆம் பக்கத்தில் விபரிக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் 227 ஆவது பக்கத்தில் யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் வளாகத்துக்கு அருகிலுள்ள கணவன்மார், கொழும்பில் வேலை பார்க்கும் வீட்டுப் பெண்களை 'விசிட்' பண்ணுவார்களாம்.
'மதம்' என்பது ஒரு மனிதனை மனிதனாக வாழவைக்கத்தான் என்பதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள். ஆனால் இன்று அது வெறியாகி தத்தமது மதம் போதிக்கின்ற (0 ஜயும் உதாசீனப்படுத்திவிட்டு, 'மதம்' பிடித்த யானையின் நிலைக்குப் போய்விடுகிறார்கள். இப்படி வாழச்சொல்லி எந்த மதத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது? ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால் - மதம் சார்ந்த நூல் என்றால்கூட, அதிலிருக்கும் கருத்துக்கள் அந்நூல் எழுதப்பட்ட காலகட்டம் (Time frame) அக்காலத்துச் சமுதாய அமைப்பு என்பவற்றை மனதில் கொண்டே எழுதப்பட்டிருக்கிறதைக் காணலாம்.
எனவே, புராதன நூல்களில் சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றையும் இப்போதைய (Time frame) இல் வைத்து ஆராய்ந்தால் ஒவ்வாமல்தான் இருக்கும். அதனால்தான், விவிலிய பழைய ஏற்பாட்டுக்கு ஒரு புதிய ஏற்பாட்டை உருவாக் வேண்டிய தேவை வந்தது. ஆனால், பழைய ஏற்பாட்டையே இன்றும் பின்பற்றவேண்டும் என்று வாதிடும் ஒரு சாராரும் இன்னும் உலகில் இருக்கின்றார்கள்தான். மனிதன் பரிமாணத்தில் எத்தனையோ படிகளைத் தாண்டியிருக்கிறான். எமது தந்தைமாருடைய சிந்தனைப் போக்குக்கும் எமது போக்குக்குமே பாரிய வித்தியாசம் காணப்படுகிறது. அப்படியிருக்கும்போது, ஆயிரமாயிரம் தலைமுறையாகளுக்கு முன் வாழ்ந்தவருக்கும் எமக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்? அன்னம் போன்று, தண்ணீரைத் தவிர்ந்த்துப் பாலைப் பிரித்துக் குடிக்கிற தன்மையை ஒத்த தன்மையை நாம் நமது பகுத்தறிவு மூலம் வளர்க்க வேண்டும். 'பன்னாடைப்புத்தி' என்று யாழ்ப்பாணத்தில் பகிடி விடுவார்களோ, சாற்றையொல்லாம் ஓட விட்டு விட்டு, மிதக்கிற கஞ்சல் குப்பைகளைப் பொறுக்கவா கடவுள் எமக்கு அறிவைத் தந்தார்? மேலும் நூல்கள் காலப் போக்கில் திரிபடைந்து போதலும், பல்வேறு நோக்கங்களுக்காக வலிந்து சேர்க்கப்பட்ட இடைச் செருகல்களும் தாராளமாயுள்ளன. அத்துடன் செய்யுள் நடையிலுள்ள நூல்களுக்கு உரை செய்பவர்கள். தத்தமது சிந்தனைத் தராதரத்துக்கேற்ப வியாக்கியானம் பண்ணுவார்கள். உதாரணத்துக்கு 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்ற பழ மொழியை எடுக்கலாம். எந்தவித தொடர்புமில்லாத, இரு வேறுபட்ட வியாக்கியானங்கள் இருப்பதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
மதம் என்பது மனிதனுக்கு நன்மை செய்யும் ஊடகமாக அமைய வேண்டுமேயொழிய, அதுவே மனிதனுக்கு கேடு விளைவிக்கக் கருவியாகிவிடக் கூடாது.
இ.பஞ்சாட்சரம் தினக்குரல்