Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஓரு ? ? ?
#61
<b>அரசு - புலிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும்: இந்திய நிதிமைச்சர் ப.சிதம்பரம் </b>
[ கொழும்பிலிருந்து சேரலாதன் ] [ ஞாயிற்றுக்கிழமை, 18 யுூலை 2004, 18:36 ஈழம் ]

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவிக்கின்றார்.

இது விடயத்தில் இந்திய நிலைப்பாட்டில் எதுவித மாறுதலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோக புூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதம மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் கொழும்பு தனியார் வானொலியின் நிருபருக்கு புதுடில்லியில் வைத்து வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கான முதலாவது உத்தியோக புூர்வ விஜயத்தினை மேற்கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்று மாலை புறப்பட்டுச் சென்றார்.

இந்த விஜயத்தில் அமைச்சர்களான ஜெயராஐ; பெர்ணான்டோபுள்ளே அநுரகுமார திசநாயக்க ஆகியோரும் இடம்பெற்றார்கள்.

புதுடில்லி விமான நிலையத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சென்றடைந்தபோது இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் அவரை வரவேற்றார்கள்.

இதன்போது இந்தியாவிற்கான இலங்கைத் து}துவர் மங்கள முனசிங்கவும் பிரசன்னமாகி இருந்தார்.

இன்று காலை இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு இன்று காலை 11.30 மணியளவில் புதுடில்லியில் உள்ள ஒபராய் ஹோட்லில் நடைபெற்றது.

இதன்போது வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜெயராஐ; பெர்ணான்டோ புள்ளே, விவசாய அமைச்சர் அநுரகுமார திசநாயக்க ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை இடையிலேயே தடைப்பட்டமை தங்களுக்கு வருத்தத்தை தந்தது எனவும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் இந்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.

நோர்வே இந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முயற்சிகளை எடுத்து வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியதாகவும் இந்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.

நன்றி
புதினம்

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுதல் என்பது இதுதானோ?
Reply
#62
பேச்சுவார்த்தை ஆரம்பித்தால்தானே சிறிலங்காவை வளம்படுத்த நிதியுதவிகளைப் பெறலாம். ஆனால் இடைக்கால அரசு வரும்வரை தமிழீழத்திற்கு ஒரு பயனும் கிட்டப் போவதில்லை. ஜனாபதி இடைக்கால நிர்வாகத்தை ஒரு போதும் கையளிக்கப் போவதில்லை. அதற்குள் ஜனாதிபதி தேர்தல் வந்துவிடும்.
<b> . .</b>
Reply
#63
பேச்சுவார்த்தை நடைபெறாமல் இழுபறிப்படுவதன் காரணங்கள் கடந்த ஒரு மாதத்தினுள் நான்கு முறை மாறிவிட்டன.. ஒவ்வொரு காரணத்தையும் யாராவது ஒருவராவது ஏட்டில் எழுதி வைத்திருப்பார்கள்..
சரி பிழை பார்க்கும் நேரம்வர சரியான அறிவிப்பு வரும்.. அதுவரை பொறுத்திருப்பதுதான் நல்லது..
Truth 'll prevail
Reply
#64
சிங்கள அரசாங்கம் இதயசுத்தியுடன் பேச முன்வரவில்லை. தன்னுடைய நலனைப் பேணவே வருகிறது. அதுபோல புலிகளும் தமிழரின் நலனைக் காக்கத்தான் பேச்சுக்குப் போகலாம். போய் ஒன்றும் கிடைக்காது என்று தெரிந்தும் போய் ஏமாற அவர்கள் முட்டாள்கள் இல்லை.
<b> . .</b>
Reply
#65
தமிழ் மக்களின் நலனில் அக்கறையிருந்திருந்தால் அழிவுகள் இல்லாதபோதே தீர்வுகள் வந்திருக்கும்..
தமிழ் நலனில் அக்கறை என்பது ஆயுதத்தை போட்டுவிட்டு இவர்கள் கேக்கவேண்டும்..
பார்ப்போம்..
என்னைப்பொறுத்தவரை ஆயுதத்துடன் பேச்சுவார்த்தை தொடராது.. அப்படித் தொடருமானால் முதலாவதே சிறிதும் நகராது..
Truth 'll prevail
Reply
#66
ஆயுதம் கீழே போட்டால் எல்லோரும் ஏறி மிதித்து விடுவார்கள். இனப்பிரச்சினையே இலங்கையில் இல்லையென முன்பு விஜேயதுங்கா கூறியதை திரும்பவும் கூறுவார்கள்.

கண்ட தமிழ் படங்களைப் பார்த்து கற்பனாவுலகில் சஞ்சரிக்காமல் கொஞ்சம் பூமிக்கு வாருங்கள்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#67
ஓமொம் நீங்கள் சொல்லுறதும் சரிதான்.. தமிழருக்கிள்ளை இனப்பிரச்சனை இருக்கிறதாலைதான் சிங்கள தேசத்திலை 15 இலச்சம் தமிழா போயிருக்கிதுகளாக்கும்.. இப்ப கிட்டடியிலும் மட்டக்களப்பிலை அடிபட குருநாகலை பொலநறுவ.. கொழும்பெண்டு ஓடிச்சிதுகள்..
Truth 'll prevail
Reply
#68
சிங்கள தேசத்தில் 15 இலட்சம் இருந்திருந்தால் ஏழெட்டு தமிழர் எம்பிமாராக வந்திருப்பினமே.

அப்ப பொலநறுவ, குருநாகலையும் தமிழீழத்துக்கள் அகப்படுத்தலாம் என்கிறீர்கள். பொலநறுவ சோழர்களால் ஆளப்பட்டதுதானே. திருப்பி எடுக்க வேண்டியதுதான்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#69
முதலிலை சங்கிலியன் கோட்டையை பிடிச்சுப்போட்டு பிறகு மற்றதுகள பற்றி பற்றி கதைப்பமே.. பதுங்கிப்போக பொதுமக்கள தேவைப்பட்டுது.. இப்ப பதுங்கியிருக்க பொதுமக்கள் தேவைப்படுது..
Truth 'll prevail
Reply
#70
வணக்கம்.. மதிவதனன் ஐயா.. ஒரு மாறுதலுக்கு நீங்கள் எழுதினதுகளையும் தேடி வாசிக்கிறனான்.. சுப்பர்... நிறைய சிரிக்கிறனான்.. தொடர்ந்து எழதுங்கோ.. எனக்கு சிரிக்கிறது பிடிக்கும்..

..
Reply
#71
மதிவதனன் ஐயா.. எழுதியவற்றைப் பார்த்தால் சிரிப்பா வருகிறது.... ? ? ?
ம்.. என்னத்தைச் சொல்றது. போட்டுத்தள்ளாலாமா... என்றுதான் தோன்றுகிறது.
Reply
#72
shanmuhi Wrote:போட்டுத்தள்ளாலாமா... என்றுதான் தோன்றுகிறது.

எல்லோரையும் போட்டுத் தள்ளி என்ன பிரயோசனம்?

இயலுமானவரை அவர்களுக்கு விளங்கப்படுத்த முயற்சிக்க வேண்டும். பலனளிக்காவிட்டால் சாரைப்பாம்புதானே என்று விட்டுவிட வேண்டும்.
<b> . .</b>
Reply
#73
சிரிப்பு தானே வருது அவரின் கதையளை கேட்க, அவரின் கதையளை கேட்டு யாரும் தங்களின் நிலைப்பாடுகளை மாற்றி கொள்ள போவதில்லை. அப்படியிருக்க எதுக்கு போட்டுத்தள்ள வேணும்? இருந்திட்டு போகட்டும்.. மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தர வேணும் எல்லோ????? என்ன மதிவதன ஐயா நான் சொல்லுறது?
Reply
#74
தம்பிமார் கிருபன் சயந்தன்
எப்பிடியோ ஒரு விசயத்தை இரண்டுபேரும் ஒத்துக்கொள்ளுறியள்.
சமூகம் எண்டால் நாலு விதமான கருத்து இருக்கத்தான் செய்யும்.
உதை விட்டுட்டு போட்டுதள்ளி பிரச்சனையை தீர்கேலாது மட்டுமல்ல மனித தர்மமும் இல்லை அறமும் இல்லை.
Reply
#75
முற்றத்திலுள்ள செய்தியின்படி கருணாவின் முக்கியமான சகாக்கள் போட்டினம் போலுள்ளது. இது இன்னொரு யுத்தத்தை நிறுத்திவிடுமோ அல்லது தொடக்குவதற்கு வழிகோலுமோ?

அரசாங்கம் அடக்கி வாசிக்கிறதைப் பார்த்தால் கருணாவின் கட்சிச் செயற்பாடுகள் சரிவராது போலத்தான் தெரிகிறது.
<b> . .</b>
Reply
#76
ம்.. ம்.. வலு சந்தோஷமா களையெடுத்தது கொண்டாடுறாங்கள்போலை..

சுட்டதெல்லாம் தமிழர் தானே எண்டு யோசிக்க சிலகாலம் பிடிக்கும் அதுக்குப்பிறகுதான் உதுகளின்ரை விளைவுகளும் புரியும்..
Truth 'll prevail
Reply
#77
விளைவுகள் பாரதூரமாக வராமல் இருக்கத்தான் கூட இருந்தவர்களே சரியான முடிவை எடுத்துள்ளார்கள். இதனால் போராட்டம் வலுப்பெறுமேயொழிய தாழ்ந்துவிடாது.
<b> . .</b>
Reply
#78
என்ன தாத்தா புளொட் மோகனையும் போட்டாச்சாம். மக்களுக்கு அநியாயம் செய்தவையை மக்கள் எப்பவும் மன்னிக்க மாட்டினம் அது நீங்களாக இருந்தாலும் தான். சும்மா மாற்ருக்கருத்தெண்டு சொல்லிக் கொண்டு மாக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துக்களை எழுதுவாதால் எப்பயனும் இல்லை. அதனால் உமக்கு லாபம்கிடைப்பது தெரியும். சாவு என்பது துரத்தும் போது சங்கரா சங்கரா என்பதால் பயன் ஏதும் இல்லை. தாத்தா நீங்கள் எழுதும் கருத்துக்கள் உண்மையாகவே உங்களது வெளிப்பாடு இல்லை. இருந்தும் எதற்காய் எழுதுறீங்கள் திருந்த பாருங்கோ அல்லது மக்கள் தான் திருத்த வேண்டுமென்றால் சங்கரா சங்கரா என்பதல் பயன் இல்லை. :twisted: :evil: :evil: :twisted:
. . . . .
Reply
#79
போடுங்கோ.. போடுங்கோ.. நேற்று உங்களோடை இருந்நவங்களைத்தான் இண்டைக்கு போடுறியள்.. நாளைக்கு இதே படலம் தொடரத்தான்போகுது.. அப்ப வாறவன் போட நாங்கள் இதையே தான் சொல்லுவம்.. சிங்களவனும் எண்ணிக்கொண்டேயிருப்பான்.. யார் அநியாயம் செய்தலை.. எண்டு புலி சொல்லக்கூடாது.. மக்கள்தான் சொல்லவேனும்.. யாழ்ப்பாணம் போய் வந்தவன் இப்பவும் சொல்லிப்பொட்டுத்தான் போறான் நிலைமையை..
Truth 'll prevail
Reply
#80
மாற்றுக் கருத்தென்பது இயல்பாய் அப்படி ஏதாவது இருந்தால் சொல்லப் படவேண்டியது. ஆனால் பலர்(!!!) கருத்தைக் கேட்க முதலே இதற்கு ஏதாவது மாற்றாய் சொல்ல வேண்டும் என்றிருந்து.. நீண்ட நேரம் எடுத்து எப்படியாவது ஒரு மாற்றுக்கருத்தை யோசித்து அதன் பின் தான் வெளியிடுகிறார்கள்.. ஒரு விடயம் உண்மை... மாற்றுக்கருத்தை எதிர்த்து அதை ஏற்காமல் கருத்துச் சொல்வதும் மாற்றுக்கருத்து தான்.. மாற்றுக்கருத்துக்கு வழிவிட வேணும் என்று புலம்புகின்றவர்களுக்கு.......

..
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)