[size=14]தமிழன் என்ற நிலை பொய்க்காது.
இலங்கையில் மட்டுமே தமிழ் மொழியாக இல்லை.
இந்தியா, மலேசியா, சிங்கபுூர் மொரீசியஸ் போன்ற நாடுகளிலும் தமிழ் மொழி பேசப்படுகிறது.
இது தவிரவும் ஏனைய உலக நாடுகளிலும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் தமிழைப் பயன்படுத்துகிறார்கள்.
தற்போது இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக்கப் பட்டிருப்பதால் அம் மொழி பற்றிய தேடல் ஏனைய மொழி வல்லுனர்கள் மற்றும் ஆராச்சியாளர்களுக்கு ஏற்படலாம்.
எமது மொழி வாழ வேண்டுமென்பதற்காக எமது மொழி தவிர்த்து வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ளக் கூடாதென்ற கருத்து எனக்கில்லை.
எமது மொழியின் தன்மை அல்லது சிறப்புகளை வேறொரு மொழியாளனுக்கு விளக்கவும் அந்த மொழியாளரின் மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
நமது நாட்டில் இருக்கும் இரு மொழிகளில் ஒரு மொழி தெரிந்தவர்களுக்கு இருக்கும் பிரச்சனை தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
இரு மனிதர்கள் தமது எண்ணங்களை, பிரச்சனைகளை வெளிப்படுத்தவோ கலந்துரையாடவோ துணை செய்வது மொழிதான்.
இப்போதைய இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் கூட நன்றாக சிங்களத்தில் சிஙகள ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்குகிறார்கள்.
இவர்களே முன்னர் வேறு எந்த மொழியையும் படிக்க வேண்டாம் என்று சொன்னவர்கள்தான்.
சிங்கள அரசியல்வாதிகளும் இதையே செய்தார்கள்.
இப்படியான ஒரு கருத்தை முன் வைக்கும் போது சிலருக்கு பிடிக்காது.
இருந்தாலும் உண்மையான பிரச்சனைகளை அலசுவதாக இருந்தால் நாம் சொல்ல வேண்டியவற்றை சொல்லியே ஆக வேண்டும்.
எந்த ஒன்றையும் நாம் பலவந்தமாகத் திணிக்க முயன்றால் அது வெகு காலம் நின்று பிடிக்காது.
சிங்கபுூர் - மலேசிய நாடுகளில் வாழும் தமிழர்களையே இங்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அங்கும் ஆரம்ப காலத்தில் குடியேறிய (இந்திய-இலங்கை) தலை முறைக்குப் பின் உருவான 2வது தலை முறையினர் தமிழை ஆங்கிலத்திலோ அல்லது மலாயிலோதான் எழுதி வாசித்தார்கள்.
இது நம்மவர்கள் MSNனில் எழுதும் போது செய்கிறார்கள்.
ஆங்கிலத்தில் தமிழ் எழுதுகிறார்கள்.
இது ஒரேயடியாக தவறு என்று சொல்ல முடியாது.
இவர்களால் ஆங்கிலத்தில் எழுத முடியாதென்று ஒரு நிலையில்லை.
இப்படியும், ஏதோ ஒரு வகையில் தமிழ் வாழ்கிறது என்றே சொல்ல வேண்டும்.
சிங்கபுூர் - மலேசிய நாடுகளில்
ஆங்கிலத்தில் தமிழ் எழுதுவது என்பது மாறி,
காலப் போக்கில்
<b>தமிழை வாசிப்போம், தமிழை நேசிப்போம் </b>
என்றும்
<b>வீட்டில் தமிழ் பேசுவோம்</b>
என்றும் மாறியது.
சிங்கபுூர் - மலேசிய நாடுகளில் தமிழ் எழுதுவதையும் வாசிப்பதையும் உருவாக்கிய பெருமை சிங்கப்புூர்- மலேசிய தமிழ் காவலர்களையே சாரும். அவை கூடத் திணிக்கப்படவில்லை அவர்களுக்கு அது பற்றி உணர்த்தப்பட்டது.
<b>நாம் களத்தில் கூட அவற்றைச் செய்யலாம்.</b>
Mayuran Wrote:பாசல் நகரப் பாடசாலைகளில் ஏழுக்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் கல்வி கற்றால் அங்கே அவர்களுக்கு தமிழ் கட்டாய பாடமாகப் பயிற்றுவிக்கப்படவுள்ளதாக பாசல் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இவர்களைப் போன்ற எண்ணங்கள் எமது கடந்த கால அரசியல்வாதிகளுக்கு இருந்திருந்தால் ??????????????????