Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்.மாவட்ட கல்வித்தரம் சரிவடைகிறது
#1
யாழ்.மாவட்ட பாடசாலைகளது கல்வித்தரம் சரிவடைகிறது - வெ.இளங்குமரன் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர்

"...வடகிழக்கின் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது இங்குள்ள பாடசாலைகள் வளமுடையவனவாக உள்ளன. தனியார் கல்வி நிலையங்களும் அவ்வாறே ஆகும். நிலையிலும் கல்வி பின்னடைவு காண்பது வேதனை தருகிறது என விடுதலைப்புலிகளின் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தினக்குரலுக்கு தெரிவித்தார்..."

1999ம் ஆண்டுக்கு முன்னர் முதல் நிலையிலிருந்த யாழ்.மாவட்டக் கல்வி நிலை இன்று பின்னோக்கிச் செல்கிறது. இதற்கான பொறுப்பைப் பாடசாலைகளும் தனியார் கல்வி நிலையங்களும் ஏற்க வேண்டும். பாடசாலைகளது செயற்பாடுகளுக்குத் தனியார் கல்வி நிலையங்கள் குந்தகமாகவுள்ளன என்று பாடசாலைகளும், பாடசாலைகளில் படிப்பு நடைபெறுவதில்லை. நாங்கள் படிப்பிப்பதால்தான் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைகின்றனர் என்று தனியார் கல்வி நிலையத்தினரும் உரத்துப் பேசுகின்றனர்.

வடகிழக்கின் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது இங்குள்ள பாடசாலைகள் வளமுடையவனவாக உள்ளன. தனியார் கல்வி நிலையங்களும் அவ்வாறே ஆகும். நிலையிலும் கல்வி பின்னடைவு காண்பது வேதனை தருகிறது என விடுதலைப்புலிகளின் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தினக்குரலுக்கு தெரிவித்தார்.

முன்னைக்காலத்தில் யாழ்.மாவட்டம் முழுவதற்கும் ஒரே கல்விப் பணிப்பாளர் ஒரே ஒரு கல்விப் பணிமனையிலிருந்து கடமையாற்றினார். தற்போது ஜந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டு ஜந்து கல்விப் பணிப்பாளர்களும் அவர்களுக்கான ஆளணியினரும் கடமையாற்றுகின்றனர். இதனால் ஒரே தொகையான பாடசாலைகளை வழிநடத்துவதற்கான நிர்வாக வலு 5மடக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கொள்வதிற் தவறு இல்லை. இப்படியான நிலையிலிருந்தும் கல்வியில் வீழ்ச்சி காண்பது விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகக் காணப்படுகிறது என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

கேள்வி - என்னத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு கல்வியில் யாழ்.மாவட்டம் பின்தங்கி விட்டது என்று கூறுகின்றீர்கள்?

பொதுப் பரீட்சை முடிவுகள் வந்ததும் ஊடகங்கள் வாயிலாக A/L பரீட்சையில் 3A எடுத்தது எத்தனைபேர்? O/L பரீட்சையில் 10A எடுத்தது எத்தனை பேர்? என்று சிறந்த பெறுபேறுகளை மட்டும் பாடசாலைகள் பறை தட்டி வெளியிடுகின்றன. இவற்றை ஒப்பீடு செய்து சிறந்த அடைவுடைய பாடசாலை எதுவென்று கணிப்பீடுகளும் நடைபெறுகின்றன. அவ்வளவோடு அலுவல்கள் சரி. இங்கு தரும் புள்ளி விபரங்களை அவதானியுங்கள்.

கேள்வி - யாழ் மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் இப்பாதிப்பு ஏற்பட்டிருக்குமா?

அது தவறு. வடகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டுதான். ஆனால் ஒப்பீட்டளவில் யாழ்.மாவட்டத்தில் மற்றைய மாவட்டங்களை விட ஆசிரியர்கள் பற்றாக்குறை குறைவு. அதிலும் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் 119 ஆசிரியர்கள் ஆளணியைவிடக் கூடவுள்ளனர். ஏனைய நான்கிலுமே பற்றாக்குறை உண்டு. சில பாடங்களுக்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லாது போனால் சுய முயற்சியுள்ள அதிபர்கள் அவ்விடயங்களுக்குத் தொண்டர் ஆசிரியர்களை நியமித்து சேவையாற்றுகின்றனர்.

கேள்வி - அப்படியானால் வீழ்ச்சிக்குரிய காரணங்கள் எவை எனக் கருதுகின்றீர்கள்?

<img src='http://www.yarl.com/forum/files/chat1.jpeg' border='0' alt='user posted image'>

கற்பித்தலிலுள்ள குறைபாடுகள் தான் முக்கிய காரணம். கல்வி அபிவிருத்தியில் ஆசிரியர்கள் இன்றியமையாத இடத்தை வகிக்கின்றார்கள். அவர்களது உளப்பாங்குகள் பெரிதும் மாறியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு. மாவட்டங்களில் நல்லபெறுபேறுகள் கிடைத்துவருவதற்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருகின்றமை தான் முக்கிய காரணம் ஆகும். அத்தோடு மாணவர்களும் சொந்த முயற்சியாக, ஆர்வமுடன் அங்கு கற்கின்றனர். ரியூட்டறிகள் அம் வட்டங்களில் இருந்தாலும் அவற்றின் தாக்கம் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைவு.

பாடசாலை 2.30க்கு முடிவடைத்தால் பெரும்பாலான பாடசாலைகள் வெறிச்சோடிவிடுகின்றன. அண்மையிலுள்ள பிள்ளைகளுக்குச் சில பாடசாலைகளில் அனுமதி வழங்கப்படுவதில்லை. அதுவும் இந்நிலைமையைக்கொரு காரணமாகும்.

படிப்பு மட்டும் பின்னடையவில்லை. விளையாட்டுத் துறைகளுங்கூட அருகிவருகின்றன. குறிப்பாக நகர்ப்புறப் பாடசாலைகளில் இப்பின்னடைவைத் தெளிவாக அவதானிக்க முடிகிறது.

கேள்வி - கல்விக் கழகம் இப் பின்னடைவுகளைச் சீராக்க நடவடிக்கை எடுக்கிறதா?

கல்விக் கழகம் நேரடியாக இவ்விடயங்களிற் பிரவேசிப்பதில்லை. பிரவேசிப்பது சரியுமல்ல. ஆனால் தான் கண்டறிந்த விடயங்களை மாகாணக் கல்வி அமைச்சு மட்டத்தில் சமர்ப்பித்து அவற்றை நடைமுறைப்படுத்தும்படி ஆலோசனைகள் வழங்குகின்றது.

கேள்வி - யாழ்.மாவட்டத்தில் கல்வி அபிவிருத்திக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

மத்திய கல்வி அமைச்சோ தேசியக் கல்வி நிறுவனமோமாற்றான் தாய் மனப்பான்மையுடன் வடகிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையிற் செயற்படுகின்றன. இங்கு சில கட்டிட வேலைகள் நடைபெற்றுள்ளவே ஒழிய அதற்கு அப்பால் எதுவுமில்லை. எனவே நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு எமது தேசத்தின் விடிவுக்கு உழைக்க வேண்டும். அப்படியான ஒரு மனநிலை கல்விச் சமூகத்தில் ஏற்படாதுவிட்டால் விடிவுகாண முடியாது.

<img src='http://www.yarl.com/forum/files/chat2.jpeg' border='0' alt='user posted image'>

கல்வி என்றால் முதன்மைப் பொறுப்புடையவர்கள் ஆசிரியர்கள். யாழ்.மாவட்டத்தில் முன்னை நாள் ஆசிரியர்கள் எமது சமூகத்தினால் புகழ்ந்து பேசப்படுவார்கள். இன்றும் அந்த நிலை ஏற்பட வேண்டும்.

கல்வித் திணைக்களத்தின் மேற்பார்வையிலேயே ஆசிரியர்களை வளர்த்தெடுத்தல், வளப்படுத்தல் எல்லாம் தங்கியுள்ளது. எனவே இவ் அதிகாரிகள் அர்ப்பணிப்போடு களத்தில் இறங்க வேண்டும்.

ஆசிரியர் பற்றாக்குறை உண்டுதான். அதை மட்டும் குறிப்பிட்டுச் சமாளித்துக் கொண்டிராது இருக்கும் ஆசிரியர்களை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும்.

1990களில் ஏற்பட்ட கல்வி இழப்புக்களை வடமராட்சி கிழக்கில் ஈடு செய்ய நாம் ஆசிரியர்களை அங்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தோம். சேவையாற்றும் கால இறுதி எல்லையை இடமாற்றக் கடிதத்திலேயே போட்டு அந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் ஆசிரியர்கள் உற்சாகமாகச் சென்று வேலை செய்தனர். இதனால் நல்ல அடைவுகளையும் காண்டோம். அதேபோல இன்று தீவகம்,வலிகாமம், போன்ற பகுதிகளுக்கு ஆசிரியர் பங்கீடு செய்யப்பட வேண்டும். யாழ். வலயத்தில் மேலதிகமாக 119 ஆசிரியர்கள் இருந்தும் அதே வலயத்தில் அச்சுவேலி, கோப்பாய், பகுதிகளில் பற்றாக்குறை உண்டு என்றால் நாம் என்ன தான் செய்யலாம்? ஒரு பொதுத் திட்டத்தை இறுக்கமாகக் கடைப்பித்து நிலைமைகளைச் சீராக்க வேண்டும்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டுமென்று அங்கலாய்க்கின்றனரே ஒழிய சரியான வழியைக் கண்டறிவதில்லை.

பாடசாலைகளும், ரியூட்டரிகளும் அலையும் பிள்ளைகள் பரிதாபத்துக்குரியவர்கள். இப் பாடசாலைகளும் ரியூட்டறிகளும் சேர்ந்து ஏற்படுத்திய சாதனைகளை மேலே கண்டோம். மாணவர்கள் சுயமாகக் கற்பதனாலேயே இன்று இலங்கையில் முதலாவது இரண்டாவது இடங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் விளங்கக் காரணமாகும். அதனால் அங்கு ஆசிரியர்களும் மகிழ்வோடு கற்பிக்கின்றனர். எனவே சுயகற்றலைப் பெற்றோரும் ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும்.

தொழில்நுட்பப் பாடங்கள் பற்றியும் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். யாழ்.மாணவர்கள் வர்த்தக பாடத்தை மட்டும் பெருமளவுக்கு இன்று படிக்கின்றார்கள். இலத்திரனியல் தொழில்நுட்பம், நிர்மாணத் தொழில்நுட்பம் முதலான வாழ்க்கைக்கு மிகுந்த பயனளிக்கக்கூடிய பாடங்கள் பல இருந்தும் எமது மாணவர்களிடம் அவை சென்றடையவில்லை. சுமார் 95 சதவீதமான சிங்களமாணவர்கள் இப்பாடங்களைக் கற்க 5 வீதத் தமிழ் மாணவர்களே இவற்றைக் கற்கின்றனர். இதனாற் பின்விளைவுகள் விபரீதமாகவிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சங்கரன் தினக்குரல்
Reply
#2
இளஞ்சமுதாயத்தை சீர்குலைத்தும்...அவர்களது கல்வியின்பாலான ஆர்வத்தை குறைத்து எதிர்கால தமிழ்ச்சந்ததியின் வளர்ச்சியைத் தடைசெய்தோர்....கல்வித்தரம் சரிந்த காலப்பகுதியில் ஆட்சியை அல்லது நிர்வாகப்பொறுப்பை வைத்திருந்தோர்...இதற்கு பதில்கூறவேண்டும்!!!
Reply
#3
Kanani Wrote:இளஞ்சமுதாயத்தை சீர்குலைத்தும்...அவர்களது கல்வியின்பாலான ஆர்வத்தை குறைத்து எதிர்கால தமிழ்ச்சந்ததியின் வளர்ச்சியைத் தடைசெய்தோர்....கல்வித்தரம் சரிந்த காலப்பகுதியில் ஆட்சியை அல்லது நிர்வாகப்பொறுப்பை வைத்திருந்தோர்...இதற்கு பதில்கூறவேண்டும்!!!
þÅ÷¸û À¾¢ø ¦º¡øÅ¡÷¸Ç¡? þ¾üÌ ¿¡í¸û (ÒÄõ ¦ÀÂ÷ó¾ ¾Á¢Æ÷¸û) ²¾¡ÅÐ ¦ºö ÓÊÔÁ¡?
Reply
#4
அவை எங்க சொல்லப் போகினம்... அவை எங்க சுருட்டலாம் எண்டு நிண்டவையோ கல்வி சமூகம் வளர்ச்சி என்று எப்ப எங்க சிந்திச்சினம்...அப்படிச் சிந்தித்திருந்தா... இப்ப ஆமிக்காரன் யாழ்ப்பாணத்தில் இருக்க மாட்டானே... எப்பவோ கிளம்பியிருப்பான் சொந்த ஊருக்கு.....! :twisted: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
இனி என்ன நடக்கம்......!
எப்படி மறுபடியும் முன்னைய நிலைக்கு வரும்.....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
வரவேண்டியவை வந்து இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சரியா வரும்... வன்னிக் கல்வித்தரம் இன்று முதன்மை பெற காரணத்தைக் கண்டால் புரியும் அனைத்தும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
¡ú Á¡Åð¼ ¸øÅ¢ ¦À¡ÚôÀ¡Ç÷¸û þ¨¾ ¸ÅÉ¢ì¸ Ü¼¡§¾¡? ÅýÉ¢¨ÂÔõ ¡¨ÆÔõ ´ôÀ¢ðÎ ±ýÉ À¢Ãîº¨É ±ýÚ «È¢óÐ ¾£÷× ¸¡½ìܼ¡§¾¡?
ÍõÁ¡ Üð¼í¸¨Ç ÜÊ ¸¨¾ò¾¡ø ÁðÎõ §À¡¾¡Ð. «Ãº¡í¸õ ±Ð×§Á ¦ºö¡Ð. «Ð ±øÄ¡Õõ «È¢ó¾Ð ¾¡§É.
¡¨Æ ¸øÅ¢Â¢ø Å¢Øò¾¢É¡ø ÁüÈ Á¡Åð¼í¸¨Ç Å¢Øò¾ ±ÅÇ× ¸¡Äõ À¢ÊìÌõ?
þÐ ±í¸û "Òò¾¢ìÜ÷¨Á" ¯ûÇ ¸øÅ¢ «¾¢¸¡Ã¢¸ÙìÌ ²ý Å¢Çí¸Å¢ø¨Ä?
¦ÀüÈ¡¨ÃÔõ ¬º¢Ã¢Â÷¸¨ÇÔõ þ¨½òÐ ´Õ §Å¨Äò¾¢ð¼ò¨¾ «Óø ÀÎò¾Ä¡õ.
âäºÛìÌ ¦ºÄÅÆ¢ì¸¢È ¸¡¨º À¡¼º¡¨Ä ź¾¢ìÌ ¦ºÄÅÆ¢ì¸Ä¡õ.
Åýɢ¢¼õ §¸ð¼¡ø «Å÷¸û ¾í¸û ӨȨ ¦º¡øÄ¢ò¾Ã¡ÁÄ¡ Å¢ÎÅ¡÷¸û?
Reply
#8
kuruvikal Wrote:வரவேண்டியவை வந்து இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சரியா வரும்... வன்னிக் கல்வித்தரம் இன்று முதன்மை பெற காரணத்தைக் கண்டால் புரியும் அனைத்தும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அப்படியா.........?......... எப்ப நடக்கும்........
:?: :?: :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
tamilini Wrote:
kuruvikal Wrote:வரவேண்டியவை வந்து இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சரியா வரும்... வன்னிக் கல்வித்தரம் இன்று முதன்மை பெற காரணத்தைக் கண்டால் புரியும் அனைத்தும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அப்படியா.........?......... எப்ப நடக்கும்........
:?: :?: :!:

பொறுங்கோ தலைவருக்குத் தெரியும் தானே...அதுதானே கணக்கெடுத்துக் கொண்டிருக்கார்.... கணக்கெடுப்பு முடிய கூட்டிக் கழிக்க.. எல்லாம் சரியா வரும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
மாணவர்களின் கல்வித்தரம் சமாதான காலத்தில்தான் அதலபாதாளத்திற்கு விழுந்துள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு முதலில் பெற்றோரும் ஆசிரியர்களும் ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டும்.

பல இளசுகளுக்கு மோட்டார் சைக்கிள்தான் இப்போதைய தேவை; படிப்பல்ல என்று வந்து விட்டது. மேலும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் இன்னுமொரு காரணம்.
பழயகாலம் மாதிரி ஆசிரியர்கள் மாணவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. இதற்கு பயம் ஒரு காரணமாக இருக்கலாம்.
<b> . .</b>
Reply
#11
கைக்கு எட்டியும் வாய்க்கெட்டாத <b>யாழ் நூலகம் </b>

குடாநாட்டு மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டு போகின்றமை இன்று பலராலும் எடுத்துக்காட்டப்பட்டு வருகின்றது. இந்தக் காலகட்டத்தில் யாழ் நூலகத்தின் நிலை மிகவும் வேதனைக்குரியது.
யாழ்ப்பாணம், யாழ்ப்பாணத்தவர் கல்வி, பச்சையான இனத்துரோகம் என்றெல்லாம் கதைக்கும் போது எவருக்கும் உடன் மனதில் தோன்றுவது யாழ் பொது நூலகம். இதன் வரலாறு, இதற்கு பின்னால் உள்ள அரசியல் உலகத்தமிழர் யாவரும் அறிந்ததே இருப்பினும்....

முக்கியமாக அனைவரின் மனதில் இருக்கவேண்டியவை

1. அன்றைய நாட்களில் தென்ஆசியாவில் மிகப்பெரிய நூலகமாக விளங்கியது யாழ் நூலகம்

2. மறைந்த ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் காமினி திசானாயக்காவின் நேரடி வழிநடத்தலில் தீ மூட்டி எரிக்கப்பட்டதுடன், யாழ் நூலகம் தமிழர்களின் அறிவியலோடு மட்டுமல்லாது அரசியலிலும் புகுந்து கொண்டது.

3. இலங்கை ஜனாதுபதி சந்திரிக்கா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வெண்தாமரை இயக்கம், புத்தகமும் செங்கல்லும் என்ற திட்டத்தின் ஊடாக எரிந்த நூலகம் மீண்டும் சிங்கள அரசால் அரசியலுக்காகப்பயன்படுத்தபட்டது.

4. பூர்த்திசெய்யப்பட்ட நூலகத்தினை திறப்பதற்கு முன்னாள் மாநகர சபை ஆணையாளர் செல்லன் கந்தையாவையும் அவரது குலத்தையும் இணைத்து ஆனந்தசங்கரியார் நடாத்திய அரசியலும் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

தொடர்ந்து வந்த காலப்பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது 2004ம் ஆண்டு மாசி மாதம் 23ம் திகதி (தகவல்- நூலக தகவல்ப்பிரிவு) யாழ்பொது நூலகம் பகுதி நேரமாக மாணவர்களின் நன்மை கருதி திறந்து வைக்கப்பட்டது.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க யாழ்ப்பாணத்தில் கால் ஊன்றுவதற்கு கடந்த சில காலமாக முயன்று வரும் அமெரிக்கா, தனது தகவல் மையத்தை யாழ் பொதுநூலகத்தை திறப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நூலகம் பொதுமக்களின் பாவனைக்காக முழுநேரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நூலகத்தில் குறையற்ற விதத்தில் அனைத்து வசதிகளும் உண்டு என்று சொல்லலாம்.

1. பொதிகள் வைப்பதற்கான பகுதி, முழுநேர காவலாளிகள்.
2. தகவல் பகுதி
3. சஞ்சிகைப்பகுதி, பத்திரிகைப்பகுதி ஒன்றாகவும்
4. இரவல் வழங்கும் பகுதி
5. மலசல கூடம்
6. சிறுவர்பகுதி
7. நிர்வாகப்பகுதி
8. உசாத்துணைப்பகுதி
9. கேட்போர் கூடம்
10. ஒடியோ, வீடியோ பகுதி
11. குளிரூட்டப்பட்ட கணினிப்பகுதி (இன்ரநெற் வசதிகளுக்காக)
12. நூலகத்தினைச்சுற்றி அழகான பூந்தோட்டம்.

என முழுமையான வசதிகளுடன் உள்ளது யாழ் நூலகம்.
சாதாரணமாக 50 ரூபா செலுத்தி அங்கத்துவம் பெறுவதன் மூலம் நூலகத்தின் பல பகுதிகளை உபயோகப்படுத்தலாம். (இன்ரநெற் உபயோகப்படுத்த 30 ரூபா அறவிடப்படுகின்றது.)


இங்குள்ள இன்ரநெற் இணைப்பானது சாதாரண டயலப் இணைப்பாகும். லீஸ் இணைப்பு குடாநாட்டில் வழங்க முடியாமல் இருப்பதகாவும் கூறப்படுகின்றது. இருப்பினும் பல தனியார் நிறுவனங்கள் லீஸ் இணைப்பு பெற்று வியாபாரம் செய்வதும் குறிப்பிடத்தக்கது. (நூலகம் திறந்தபின் இரண்டு தனியார் நிறுவனங்கள் இன்ரநெற் பாவனைக்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.) மேற்படி காரணத்தால் நூலகத்தில் இணையப்பக்கங்களை தரவிறக்கம் செய்வது மிகவும் மெதுவான செயற்பாடாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அங்கத்தவராக இணைபவர் யாழ் மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவராயின் 300 ரூபாவும் மாநகரசபைக்கு வெளியில் வசிப்பவர் எனின் 600 ரூபாவும் செலுத்தி இரவல் வழங்கும் பகுதியில் அங்கத்துவம் பெறமுடியும்.

இதேபோல் சிறுவர்களுக்கு 175 ரூபா செலுத்தி அங்கத்துவராக முடியும்.

மேற்படி தகவல்களோடு பின்வருவன முக்கியமானவை

1. நூலகத்தால் வழங்கப்படும் அங்கத்துவத்திற்கான விண்ணப்படிவத்தில் 30 ரூபா அல்லது 50 ரூபா அங்கத்துவப்பணம் எனவும் 100 ரூபா வைப்புப்பணமாகவும் அச்சிடப்பட்டுள்ளது ஆனால் அறவிடப்படுவது அங்கத்துவம் -300 ரூபாவும் வைப்புப்பணம் - 300 ரூபாவும் மொத்தம் 600 ரூபா.,

<img src='http://www.yarl.com/forum/files/bill.jpeg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/forum/files/form.jpg' border='0' alt='user posted image'>

2. பல தனியார் நிறுவனங்கள் லீஸ் இணைப்பு எடுத்து வியாபாரத்தில் ஈடுபடும் போது பொது நூலக்திற்கு லீஸ் இணைப்பு எடுக்க முடியாமல் போனது ஏன் ?

3. நூலக்தினைப்பராமரிப்பதற்கு நூலக நிர்வாகத்தினரால் மாதாந்தம் 500 000.00 (ஐந்து லட்சரூபா) உத்தியோகத்தர்கள் ஏற்கனவே பணியில் உள்ளவர்களாவர்கள், இவர்களைத்தவிர பெருந்தொகைப்பணம் எவ்வாறு பராமரிப்பிற்கு மட்டும் செலவாகின்றது ? (மேற்படி தொகை மின்சாரம், தொலைபேசி, பூந்தோட்டப்பராமரிப்பு என்பவற்றிக்கு மட்டும் என அறியக்கிடக்கின்றது.)

நூலகத்தின் கட்டண அதிகரிப்பு காரணமாக கற்றலில் ஆர்வமுள்ள பல வறிய மாணவர்கள் இன்னும் அங்கத்துவம் பெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய பல ஆசைகூட இன்று தான் நிறைவேறியது.

13.07.2004 ம் திகதியில் உள்ள மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 64 ஆகும்.

<img src='http://www.yarl.com/forum/files/membership.jpeg' border='0' alt='user posted image'>

நூலக்தின் ஆடம்பரத்தினால் செலவாகும் பணத்தினை அங்கத்துவப்பணத்தினை அதிகரிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுரை கூறிய முன்னாள் துணைவேந்தர் என்ன காரணத்திற்காக அங்கத்துவப்பணத்தை அதிகரிக்கச் செய்தார் ?(அங்கத்துவப்பணம் 600 ரூபாவாக அமுல்படுத்தலில் பல வாக்குவாதங்களுக்கு மத்தியில் முன்நின்று உழைத்தவர்)

குறிப்பிட்ட முன்னாள் துணைவேந்தர் காலத்திலேயே பல்கலைக்கழகத்தில் பல கல்விச்சீர்கேடுகளும் (வெளிவாரிப்பட்டப்படிப்பில்), பல நிர்வாக மோசடிகளும், இன்னும் பல கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகள் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை யாழ் நூலகத்திற்கு கொண்டுவர முயற்சிக்கும் சமயப்பெரியவர்கள் , கல்விமான்கள் குடாநாட்டிலுள்ள மாணவர்களை நூலகத்திற்கு கொண்டுவர முயற்சி செய்யாமை மனவருத்தத்திற்கு உரியது. இது வரை காலமும் மாணவர்களின் கல்வி பற்றிச்சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்திருக்க சந்தர்பம் இல்லாதிருந்திருக்கலாம். இனிவரும் காலங்களில் நூலகத்தினை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் மாணவர்கள், பொதுமக்களின் மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நாடாத்தி மாணவர்களையும் மக்களையும் நூலகங்கள் நோக்கி நகர்த்துவார்களா ?

குடாநாட்டில் பல முக்கிய பணிகளில் கடமை புரியும் பலர் தமது நாளாந்த வேலைகளை (தமக்கே உரிய வேலையை) செய்யாமல் அரசியலில் ஈடுபட முயற்சிப்பதும், தமது சொந்த நலனுக்காக பொதுமக்களின் வாழ்க்கையை அன்னியரிடம் அடகுவைக்கும் விதத்தில் நடந்துகொள்வதும் வேதனைக்குரிய விடயமாகும். இந்த நிலைமாறுமா ?

அல்லது
இவர்களை பெரியவர்களாக எண்ணி ஏமாந்துபோகும் அப்பாவி பொதுமக்கள் இவர்களின் சுயரூபங்களை அறிந்துகொள்வார்களா ?

காலம் பதில் சொல்லும்வரை காத்திருக்கமுடியுமா ?

யாழில் இருந்து குரு
Reply
#12
மட். மாவட்டத்தை கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக பிரகடனப்படுத்த வேண்டும்: தமிழ் எம்.பிக்கள் வலியுறுத்தல்
[ மட்டக்களப்பு ஈழநாதம் ] [ வியாழக்கிழமை, 05 ஓகஸ்ட் 2004, 13:12 ஈழம் ]

மட்டக்களப்பு மாவட்டத்தை கல்வியால் பின்தங்கிய கல்வி மாவட்டமாக பிரகடனப்படுத்துமாறு மட்டு. அம்பாறை தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், பா.அரியநேத்திரன், க. தங்கேஸ்வரி, எஸ்.ஜெயானந்தமூர்த்தி, த.கனகசபை மற்றும் பத்மநாதன் ஆகியோர் நேற்றுக் காலை கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி தரா டிமெல் அவர்களைச் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்தனர்.

இசுறுபாயாவிலுள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் சுமார் இருமணி நேரம் சந்திப்பு நடைபெற்றது.

வடக்குக் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே பின்தங்கிய கல்வி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்படாததால் பல்கலைக்கழக அனுமதி உட்பட பல விடயங்களால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இந்த மாவட்டத்தினை கல்வியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கல்வி அமைச்சின் செயலாளர் விரைவில் மாவட்டதினை பின்தங்கிய மாவட்டமாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதாக குறிப்பிட்டாரென மட். மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழநாதத்திற்குத் தெரிவித்தனர்.

நன்றி புதினம்
Reply
#13
குடாநாட்டில் 56 பேருக்கு 3A சித்தி

யாழ்.இந்து - 11, வேம்படி மகளிர் - 10

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஜி.சீ,ஈ உயர்தரப் பாPட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டன.
நேற்று மாலை முதல் பாPட்சைத் திணைக் களத்தின் இணையத்தளத்தினு}டாகவும் பாPட் சைப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடிந் தது.
நேற்று முற்கொண்டு கிடைத்த பெறுபேறுக ளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 56 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி (ஷஏ| சித்தி) பெற்றிருக்கின்றனர். அண் மைக்காலப் பாPட்சைப் பெறுபேறுகளுடன் ஒப் பிடுகையில் இது மிக முன்னேற்றகரமானது என்று கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
யாழ். இந்துக் கல்லு}ரி மாணவர்கள் 11 பேர் அதிவிசேட சித்திகளைப் பெற்று மாவட் டத்தில் முன்னணியில் திகழ்கின்றனர். அடுத்த நிலையில் வேம்படி மக ளிர் கல்லு}ரி உள்ளது. அங்கு பத்து மாணவிகள் மூன்று பாடங்களிலும் அதி விசேட சித்திகளைப் பெற்றிருக்கின்றனர்.
யாழ். இந்துக் கல்லு}ரி மாணவனான சதா னந்தசர்மா ரமணன் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தையும் தேசிய மட்டத்தில் 7ஆவது இடத்தையும் பெற்றிருக் கின்றார்.
உயிரியல் பிரிவில் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லு}ரி மாணவன் சிவகுமாரன் சயந்த் மாவட் டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 37 ஆவது இடத்தையும் பெற்றிருக்கிறார்.
கலைப்பிரிவில் யாழ். இந்துமாணவன் குமார வடிவேல் குருபரன் (2ஏபி) மாவட்ட மட்டத்தில் முத லிடத்தையும், தேசிய மட்டத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்றார். இவர் ஆங்கிலமொழி யில் பி சித்தி பெற்றுள்ளார்.
பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்டத் தில் மூன்றாவது இடத்தை சாவகச்சேரி இந்துக் கல்லு}ரி பெற்றிருக்கிறது. அங்கிருந்து ஆறு மாணவர்கள் 3 ஷஏ| சித்தி பெற்றிருக்கின்றனர்.
முற்கொண்டு கிடைத்த பெறுபேறுகளின் படி 3 ஷஏ| சித்தி பெற்ற மாணவர்களின் பெயர் கள் வருமாறு:-
யாழ். இந்துக் கல்லு}ரி
தங்கராஜா ஜனகராஜ் - கணிதம் (2.5489), சச்சிதானந்தம் மயூரன் - கணிதம் (2.4370), கோபாலகிரு~;ணன் நி~hந்தன் - கணிதம் (2.6526), சதானந்தசர்மா ரமணன் - கணிதம் (3.0554) (மாவட்டம் - முதலாவது, தேசியம் - 7ஆவது), கனகநாயகம் சயந்தன் - கணிதம் (2.7655), இராமநாதன் தனே~ன் - கணிதம் (2.6488), துரைசிங்கம் கேசவன் - உயிரியல் (2.5445), கோபாலமூர்த்தி ரஜீவ் - உயிரியல் (2.4842), அருளம்பலம் சுஜந்தன் - வர்த்தகம் (1.9853), பாலஸ்கந்தன் ஜெபேந்திரா - வர்த்தகம் (2.0416), லோகேஸ்வரன் கவிக்குமார் - வர்த்தகம் (1.9135), குமாரவடிவேல் குருபரன் (2யுடீ) கலை (2.3951) (மாவட்டம் - முதலாவது, தேசியம் - 3 ஆவது).
பருத்தித்துறை மெதடிஸ் மகளிர்
விக்னேஸ்வரன் விநோதிகா - உயிரியல் (2.6058) (மாவட்டம் - 2ஆவது, தேசியம் - 45 ஆவது).
உடுவில் மகளிர் கல்லு}ரி
அமிர்தலிங்கம் தர்~pயா - வர்த்தகம் (1.7055).
புத்து}ர் ஸ்ரீ சோமஸ்கந்தா
ஸ்ரீபராபரன் சிவதாஸ் - வர்த்தகம் (2.1582).
வேம்படி மகளிர்
அனு~h செல்வராஜா - கணிதம் (2.6924), சுகிர்தினி விநாயகவசீகரன் - கணிதம் (2.7698), மாதங்கி இராமச்சந்திரன் - உயிரியல் (2.3293), மதுராதா சிவசுப்பிரமணியம் - உயிரியல் (2.3231), சரண்யா நரேந்திரன் - உயிரியல் (2.3790), சிவப்பிரியா குணரத்தினம் - உயிரி யல் (2.1982), சுஜித்தா சிவராஜா - வர்த்தகம் (1.9439), விஜித்தா சக்திவேல் - வர்த்தகம் (1.8210), ரூபினி இரத்தினசிங்கம் - கலை (1.8903), சுகன்யா விநாசித்தம்பி - கலை (1.8585).
சுண்டுக்குழி மகளிர்
சச்சிதானந்தன் மயூரதி - உயிரியல் (2.6057), கீதபொன்கலன் மேரி லு}ஸியா - கலை (1.8596).
யாழ்ப்பாணக் கல்லு}ரி
இராஜேந்திரம் செந்து}ரன் - உயிரியல் (2.3531).
வயாவிளான் ம.வி.
கணேசலிங்கம் கார்த்திகேயன் - உயிரியல் (2.1569), பாலகௌரி சங்கரப்பிள்ளை - கலை (1.9966), தனபாலசிங்கம் கிரிதரன் - வர்த்தகம் (1.9706), குணரத்தினம் துர்க்காதரன் - வர்த்த கம் (1.8047).
நெல்லியடி ம.வி.
இராஜேஸ்வரன் அகிலன் - வர்த்தகம் (2.0738), சிவபாலன் தயாளினி - கலை (2.034).
மகாஜனா
தயாளினி சிவசுப்பிரமணியம் - வர்த்தகம் (1.6359).
சென்ஜோன்ஸ்
சிவகுமாரன் சயந்த் - உயிரியல் (2.6516) (மாவட்டம் - முதலாவது, தேசியம் - 37ஆவது), சிவலிங்கராஜா ரகுராமன் - உயிரியல் (2.3157), ஸ்ரீஸ்கந்தராஜா து~pயந்தன் - வர்த்தகம் (1.9560), விமலதாஸ் யுரே~; - வர்த்தகம் (1.8415).
யாழ். இந்து மகளிர்
வனஜா சோமசேகரம் - வர்த்தகம் (2.1139), பிருந்தா தங்கவேல் - கலை (1.9260), பாலினி பாலசுப்பிரமணியம் - வர்த்தகம் (1.7452), ஜொPனா பாலசுப்பிரமணியம் - கலை (1.7653).
கொக்குவில் இந்து
தர்ஜினி திருநாவுக்கரசு - உயிரியல் (2.3912), கார்த்திகா தர்மலிங்கம் - வர்த்தகம் (1.8013), தர்மேஸ்வரன் ராஜீவன் - வர்த்தகம் (1.9107).
சென். பற்றிக்ஸ் கல்லு}ரி
அந்தனிப்பிள்ளை சரத்குமார் - வர்த்தகம் (2.1778), அந்தனி சுஜீவன் - வர்த்தகம் (1.6224),
ஹாட்லிக் கல்லு}ரி
சண்முகநாதன் தனஞ்செயன் - கணிதம் (2.8408) (மாவட்டம் - 2ஆவது, தேசியம் - 20ஆவது)
யாழ் மத்திய கல்லு}ரி
வேலாயுதம் சிவகரன் - வர்த்தகம் (1.9878)
சாவகச்சேரி இந்து
கனகரத்தினம் கார்த்திபன் - வர்த்தகம் (1.7379), கனகசபை கயந்தன் - வர்த்தகம் (2.0494), முத்துலிங்கம் விஜிதா - வர்த்தகம் (1.8852), சிதம்பரநாதர் சிவாசினி - வர்;த்தகம் (1.6524), வீரசிங்கம் சிவரூபி - கலை (1.7520), நாதன் சிந்துஜா - கலை (1.8380)
வட இந்து மகளிர்
அனுயா யோகராஜா - வர்த்தகம் (1.6359) .



நன்றி - உதயன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#14
தகவல்களுக்கு நன்றி பிபிஸி.
Reply
#15
Well done guys.... well done....!

இந்துவின் மைந்தர்களே உங்கள் திறமையை மீண்டும் ஒரு தடவை வெளி உலகுக்கு காட்டியதற்கு எம் பாராட்டுக்கள்....! மற்றும் தமது திறமையை வெளிப்படுத்திய யாழ் மாவட்ட மற்றும் பிற மாவட்ட மாணவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
<img src='http://www.jaffnahindu.org/imgs/principal.jpg' border='0' alt='user posted image'>

இவர் தான் யாழ் இந்துவின் தற்போதைய அதிபர்...! ஐயா... பல நெருக்கடிகளின் மத்தியிலும் உங்கள் அயராத முயற்சிக்கு நீங்கள் நேசித்த மாணவ மணிகள் பெற்றுத்தந்த புகழ் ஒன்றும் போதும் உங்கள் பெயர் சொல்ல... தொடர்ந்து செல்லுங்கள் தொடர்ந்து வெல்லுங்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
பெயரைக் குறிப்பிடமுடியுமா?
Reply
#18
ஏன் அன்பளிப்பு அனுப்பப் போறீங்களா...பெயரென்ன விலாசம்...பாடசாலை அபிவிருத்திச் சபை எக்கவுண்ட் நம்பர் என்று எல்லாம் தரலாம்...! என்ன நீங்க பிரித்தானியாவில இருக்கிறபடியால... சர்வதேச ஒப்பந்த சட்டத்தின் பிரகாரம் எழுத்துமூல உத்தரவாதம் தர வேண்டும்...! ரெடியா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது அலட்டல் இல்ல கேட்ட கேள்விக்குப் பதில்....அலட்டலின் ஆரம்பம் யார் புரிகிறதா...????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
www.jaffnahindu.org



<img src='http://www.jaffnahindu.org/imgs/principal.jpg' border='0' alt='user posted image'>

MR. A.SRIKUMARAN - B.A.(Cey),Dip in Ed.,S.L.P.S.(I)

Telephone : +94-21-2222553, +94-21-2222431 Email : principal@jaffnahindu.org
[b][size=18]
Reply
#20
அட நீங்களும் பிரித்தானியா நானும் பிரித்தானியா இப்ப அதுவா பிரச்சனை?
பெயரை அறிந்து கொள்ளக் கேட்டேன். தெரியாது என்றால் விடுங்கள் பிரச்சினை இல்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)