07-16-2004, 01:50 AM
யாழ்.மாவட்ட பாடசாலைகளது கல்வித்தரம் சரிவடைகிறது - வெ.இளங்குமரன் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர்
"...வடகிழக்கின் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது இங்குள்ள பாடசாலைகள் வளமுடையவனவாக உள்ளன. தனியார் கல்வி நிலையங்களும் அவ்வாறே ஆகும். நிலையிலும் கல்வி பின்னடைவு காண்பது வேதனை தருகிறது என விடுதலைப்புலிகளின் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தினக்குரலுக்கு தெரிவித்தார்..."
1999ம் ஆண்டுக்கு முன்னர் முதல் நிலையிலிருந்த யாழ்.மாவட்டக் கல்வி நிலை இன்று பின்னோக்கிச் செல்கிறது. இதற்கான பொறுப்பைப் பாடசாலைகளும் தனியார் கல்வி நிலையங்களும் ஏற்க வேண்டும். பாடசாலைகளது செயற்பாடுகளுக்குத் தனியார் கல்வி நிலையங்கள் குந்தகமாகவுள்ளன என்று பாடசாலைகளும், பாடசாலைகளில் படிப்பு நடைபெறுவதில்லை. நாங்கள் படிப்பிப்பதால்தான் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைகின்றனர் என்று தனியார் கல்வி நிலையத்தினரும் உரத்துப் பேசுகின்றனர்.
வடகிழக்கின் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது இங்குள்ள பாடசாலைகள் வளமுடையவனவாக உள்ளன. தனியார் கல்வி நிலையங்களும் அவ்வாறே ஆகும். நிலையிலும் கல்வி பின்னடைவு காண்பது வேதனை தருகிறது என விடுதலைப்புலிகளின் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தினக்குரலுக்கு தெரிவித்தார்.
முன்னைக்காலத்தில் யாழ்.மாவட்டம் முழுவதற்கும் ஒரே கல்விப் பணிப்பாளர் ஒரே ஒரு கல்விப் பணிமனையிலிருந்து கடமையாற்றினார். தற்போது ஜந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டு ஜந்து கல்விப் பணிப்பாளர்களும் அவர்களுக்கான ஆளணியினரும் கடமையாற்றுகின்றனர். இதனால் ஒரே தொகையான பாடசாலைகளை வழிநடத்துவதற்கான நிர்வாக வலு 5மடக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கொள்வதிற் தவறு இல்லை. இப்படியான நிலையிலிருந்தும் கல்வியில் வீழ்ச்சி காண்பது விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகக் காணப்படுகிறது என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
கேள்வி - என்னத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு கல்வியில் யாழ்.மாவட்டம் பின்தங்கி விட்டது என்று கூறுகின்றீர்கள்?
பொதுப் பரீட்சை முடிவுகள் வந்ததும் ஊடகங்கள் வாயிலாக A/L பரீட்சையில் 3A எடுத்தது எத்தனைபேர்? O/L பரீட்சையில் 10A எடுத்தது எத்தனை பேர்? என்று சிறந்த பெறுபேறுகளை மட்டும் பாடசாலைகள் பறை தட்டி வெளியிடுகின்றன. இவற்றை ஒப்பீடு செய்து சிறந்த அடைவுடைய பாடசாலை எதுவென்று கணிப்பீடுகளும் நடைபெறுகின்றன. அவ்வளவோடு அலுவல்கள் சரி. இங்கு தரும் புள்ளி விபரங்களை அவதானியுங்கள்.
கேள்வி - யாழ் மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் இப்பாதிப்பு ஏற்பட்டிருக்குமா?
அது தவறு. வடகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டுதான். ஆனால் ஒப்பீட்டளவில் யாழ்.மாவட்டத்தில் மற்றைய மாவட்டங்களை விட ஆசிரியர்கள் பற்றாக்குறை குறைவு. அதிலும் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் 119 ஆசிரியர்கள் ஆளணியைவிடக் கூடவுள்ளனர். ஏனைய நான்கிலுமே பற்றாக்குறை உண்டு. சில பாடங்களுக்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லாது போனால் சுய முயற்சியுள்ள அதிபர்கள் அவ்விடயங்களுக்குத் தொண்டர் ஆசிரியர்களை நியமித்து சேவையாற்றுகின்றனர்.
கேள்வி - அப்படியானால் வீழ்ச்சிக்குரிய காரணங்கள் எவை எனக் கருதுகின்றீர்கள்?
<img src='http://www.yarl.com/forum/files/chat1.jpeg' border='0' alt='user posted image'>
கற்பித்தலிலுள்ள குறைபாடுகள் தான் முக்கிய காரணம். கல்வி அபிவிருத்தியில் ஆசிரியர்கள் இன்றியமையாத இடத்தை வகிக்கின்றார்கள். அவர்களது உளப்பாங்குகள் பெரிதும் மாறியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு. மாவட்டங்களில் நல்லபெறுபேறுகள் கிடைத்துவருவதற்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருகின்றமை தான் முக்கிய காரணம் ஆகும். அத்தோடு மாணவர்களும் சொந்த முயற்சியாக, ஆர்வமுடன் அங்கு கற்கின்றனர். ரியூட்டறிகள் அம் வட்டங்களில் இருந்தாலும் அவற்றின் தாக்கம் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைவு.
பாடசாலை 2.30க்கு முடிவடைத்தால் பெரும்பாலான பாடசாலைகள் வெறிச்சோடிவிடுகின்றன. அண்மையிலுள்ள பிள்ளைகளுக்குச் சில பாடசாலைகளில் அனுமதி வழங்கப்படுவதில்லை. அதுவும் இந்நிலைமையைக்கொரு காரணமாகும்.
படிப்பு மட்டும் பின்னடையவில்லை. விளையாட்டுத் துறைகளுங்கூட அருகிவருகின்றன. குறிப்பாக நகர்ப்புறப் பாடசாலைகளில் இப்பின்னடைவைத் தெளிவாக அவதானிக்க முடிகிறது.
கேள்வி - கல்விக் கழகம் இப் பின்னடைவுகளைச் சீராக்க நடவடிக்கை எடுக்கிறதா?
கல்விக் கழகம் நேரடியாக இவ்விடயங்களிற் பிரவேசிப்பதில்லை. பிரவேசிப்பது சரியுமல்ல. ஆனால் தான் கண்டறிந்த விடயங்களை மாகாணக் கல்வி அமைச்சு மட்டத்தில் சமர்ப்பித்து அவற்றை நடைமுறைப்படுத்தும்படி ஆலோசனைகள் வழங்குகின்றது.
கேள்வி - யாழ்.மாவட்டத்தில் கல்வி அபிவிருத்திக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?
மத்திய கல்வி அமைச்சோ தேசியக் கல்வி நிறுவனமோமாற்றான் தாய் மனப்பான்மையுடன் வடகிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையிற் செயற்படுகின்றன. இங்கு சில கட்டிட வேலைகள் நடைபெற்றுள்ளவே ஒழிய அதற்கு அப்பால் எதுவுமில்லை. எனவே நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு எமது தேசத்தின் விடிவுக்கு உழைக்க வேண்டும். அப்படியான ஒரு மனநிலை கல்விச் சமூகத்தில் ஏற்படாதுவிட்டால் விடிவுகாண முடியாது.
<img src='http://www.yarl.com/forum/files/chat2.jpeg' border='0' alt='user posted image'>
கல்வி என்றால் முதன்மைப் பொறுப்புடையவர்கள் ஆசிரியர்கள். யாழ்.மாவட்டத்தில் முன்னை நாள் ஆசிரியர்கள் எமது சமூகத்தினால் புகழ்ந்து பேசப்படுவார்கள். இன்றும் அந்த நிலை ஏற்பட வேண்டும்.
கல்வித் திணைக்களத்தின் மேற்பார்வையிலேயே ஆசிரியர்களை வளர்த்தெடுத்தல், வளப்படுத்தல் எல்லாம் தங்கியுள்ளது. எனவே இவ் அதிகாரிகள் அர்ப்பணிப்போடு களத்தில் இறங்க வேண்டும்.
ஆசிரியர் பற்றாக்குறை உண்டுதான். அதை மட்டும் குறிப்பிட்டுச் சமாளித்துக் கொண்டிராது இருக்கும் ஆசிரியர்களை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும்.
1990களில் ஏற்பட்ட கல்வி இழப்புக்களை வடமராட்சி கிழக்கில் ஈடு செய்ய நாம் ஆசிரியர்களை அங்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தோம். சேவையாற்றும் கால இறுதி எல்லையை இடமாற்றக் கடிதத்திலேயே போட்டு அந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் ஆசிரியர்கள் உற்சாகமாகச் சென்று வேலை செய்தனர். இதனால் நல்ல அடைவுகளையும் காண்டோம். அதேபோல இன்று தீவகம்,வலிகாமம், போன்ற பகுதிகளுக்கு ஆசிரியர் பங்கீடு செய்யப்பட வேண்டும். யாழ். வலயத்தில் மேலதிகமாக 119 ஆசிரியர்கள் இருந்தும் அதே வலயத்தில் அச்சுவேலி, கோப்பாய், பகுதிகளில் பற்றாக்குறை உண்டு என்றால் நாம் என்ன தான் செய்யலாம்? ஒரு பொதுத் திட்டத்தை இறுக்கமாகக் கடைப்பித்து நிலைமைகளைச் சீராக்க வேண்டும்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டுமென்று அங்கலாய்க்கின்றனரே ஒழிய சரியான வழியைக் கண்டறிவதில்லை.
பாடசாலைகளும், ரியூட்டரிகளும் அலையும் பிள்ளைகள் பரிதாபத்துக்குரியவர்கள். இப் பாடசாலைகளும் ரியூட்டறிகளும் சேர்ந்து ஏற்படுத்திய சாதனைகளை மேலே கண்டோம். மாணவர்கள் சுயமாகக் கற்பதனாலேயே இன்று இலங்கையில் முதலாவது இரண்டாவது இடங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் விளங்கக் காரணமாகும். அதனால் அங்கு ஆசிரியர்களும் மகிழ்வோடு கற்பிக்கின்றனர். எனவே சுயகற்றலைப் பெற்றோரும் ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும்.
தொழில்நுட்பப் பாடங்கள் பற்றியும் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். யாழ்.மாணவர்கள் வர்த்தக பாடத்தை மட்டும் பெருமளவுக்கு இன்று படிக்கின்றார்கள். இலத்திரனியல் தொழில்நுட்பம், நிர்மாணத் தொழில்நுட்பம் முதலான வாழ்க்கைக்கு மிகுந்த பயனளிக்கக்கூடிய பாடங்கள் பல இருந்தும் எமது மாணவர்களிடம் அவை சென்றடையவில்லை. சுமார் 95 சதவீதமான சிங்களமாணவர்கள் இப்பாடங்களைக் கற்க 5 வீதத் தமிழ் மாணவர்களே இவற்றைக் கற்கின்றனர். இதனாற் பின்விளைவுகள் விபரீதமாகவிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சங்கரன் தினக்குரல்
"...வடகிழக்கின் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது இங்குள்ள பாடசாலைகள் வளமுடையவனவாக உள்ளன. தனியார் கல்வி நிலையங்களும் அவ்வாறே ஆகும். நிலையிலும் கல்வி பின்னடைவு காண்பது வேதனை தருகிறது என விடுதலைப்புலிகளின் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தினக்குரலுக்கு தெரிவித்தார்..."
1999ம் ஆண்டுக்கு முன்னர் முதல் நிலையிலிருந்த யாழ்.மாவட்டக் கல்வி நிலை இன்று பின்னோக்கிச் செல்கிறது. இதற்கான பொறுப்பைப் பாடசாலைகளும் தனியார் கல்வி நிலையங்களும் ஏற்க வேண்டும். பாடசாலைகளது செயற்பாடுகளுக்குத் தனியார் கல்வி நிலையங்கள் குந்தகமாகவுள்ளன என்று பாடசாலைகளும், பாடசாலைகளில் படிப்பு நடைபெறுவதில்லை. நாங்கள் படிப்பிப்பதால்தான் மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைகின்றனர் என்று தனியார் கல்வி நிலையத்தினரும் உரத்துப் பேசுகின்றனர்.
வடகிழக்கின் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது இங்குள்ள பாடசாலைகள் வளமுடையவனவாக உள்ளன. தனியார் கல்வி நிலையங்களும் அவ்வாறே ஆகும். நிலையிலும் கல்வி பின்னடைவு காண்பது வேதனை தருகிறது என விடுதலைப்புலிகளின் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தினக்குரலுக்கு தெரிவித்தார்.
முன்னைக்காலத்தில் யாழ்.மாவட்டம் முழுவதற்கும் ஒரே கல்விப் பணிப்பாளர் ஒரே ஒரு கல்விப் பணிமனையிலிருந்து கடமையாற்றினார். தற்போது ஜந்து வலயங்களாகப் பிரிக்கப்பட்டு ஜந்து கல்விப் பணிப்பாளர்களும் அவர்களுக்கான ஆளணியினரும் கடமையாற்றுகின்றனர். இதனால் ஒரே தொகையான பாடசாலைகளை வழிநடத்துவதற்கான நிர்வாக வலு 5மடக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கொள்வதிற் தவறு இல்லை. இப்படியான நிலையிலிருந்தும் கல்வியில் வீழ்ச்சி காண்பது விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாகக் காணப்படுகிறது என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
கேள்வி - என்னத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு கல்வியில் யாழ்.மாவட்டம் பின்தங்கி விட்டது என்று கூறுகின்றீர்கள்?
பொதுப் பரீட்சை முடிவுகள் வந்ததும் ஊடகங்கள் வாயிலாக A/L பரீட்சையில் 3A எடுத்தது எத்தனைபேர்? O/L பரீட்சையில் 10A எடுத்தது எத்தனை பேர்? என்று சிறந்த பெறுபேறுகளை மட்டும் பாடசாலைகள் பறை தட்டி வெளியிடுகின்றன. இவற்றை ஒப்பீடு செய்து சிறந்த அடைவுடைய பாடசாலை எதுவென்று கணிப்பீடுகளும் நடைபெறுகின்றன. அவ்வளவோடு அலுவல்கள் சரி. இங்கு தரும் புள்ளி விபரங்களை அவதானியுங்கள்.
கேள்வி - யாழ் மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் இப்பாதிப்பு ஏற்பட்டிருக்குமா?
அது தவறு. வடகிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டுதான். ஆனால் ஒப்பீட்டளவில் யாழ்.மாவட்டத்தில் மற்றைய மாவட்டங்களை விட ஆசிரியர்கள் பற்றாக்குறை குறைவு. அதிலும் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் 119 ஆசிரியர்கள் ஆளணியைவிடக் கூடவுள்ளனர். ஏனைய நான்கிலுமே பற்றாக்குறை உண்டு. சில பாடங்களுக்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லாது போனால் சுய முயற்சியுள்ள அதிபர்கள் அவ்விடயங்களுக்குத் தொண்டர் ஆசிரியர்களை நியமித்து சேவையாற்றுகின்றனர்.
கேள்வி - அப்படியானால் வீழ்ச்சிக்குரிய காரணங்கள் எவை எனக் கருதுகின்றீர்கள்?
<img src='http://www.yarl.com/forum/files/chat1.jpeg' border='0' alt='user posted image'>
கற்பித்தலிலுள்ள குறைபாடுகள் தான் முக்கிய காரணம். கல்வி அபிவிருத்தியில் ஆசிரியர்கள் இன்றியமையாத இடத்தை வகிக்கின்றார்கள். அவர்களது உளப்பாங்குகள் பெரிதும் மாறியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு. மாவட்டங்களில் நல்லபெறுபேறுகள் கிடைத்துவருவதற்கு ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருகின்றமை தான் முக்கிய காரணம் ஆகும். அத்தோடு மாணவர்களும் சொந்த முயற்சியாக, ஆர்வமுடன் அங்கு கற்கின்றனர். ரியூட்டறிகள் அம் வட்டங்களில் இருந்தாலும் அவற்றின் தாக்கம் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைவு.
பாடசாலை 2.30க்கு முடிவடைத்தால் பெரும்பாலான பாடசாலைகள் வெறிச்சோடிவிடுகின்றன. அண்மையிலுள்ள பிள்ளைகளுக்குச் சில பாடசாலைகளில் அனுமதி வழங்கப்படுவதில்லை. அதுவும் இந்நிலைமையைக்கொரு காரணமாகும்.
படிப்பு மட்டும் பின்னடையவில்லை. விளையாட்டுத் துறைகளுங்கூட அருகிவருகின்றன. குறிப்பாக நகர்ப்புறப் பாடசாலைகளில் இப்பின்னடைவைத் தெளிவாக அவதானிக்க முடிகிறது.
கேள்வி - கல்விக் கழகம் இப் பின்னடைவுகளைச் சீராக்க நடவடிக்கை எடுக்கிறதா?
கல்விக் கழகம் நேரடியாக இவ்விடயங்களிற் பிரவேசிப்பதில்லை. பிரவேசிப்பது சரியுமல்ல. ஆனால் தான் கண்டறிந்த விடயங்களை மாகாணக் கல்வி அமைச்சு மட்டத்தில் சமர்ப்பித்து அவற்றை நடைமுறைப்படுத்தும்படி ஆலோசனைகள் வழங்குகின்றது.
கேள்வி - யாழ்.மாவட்டத்தில் கல்வி அபிவிருத்திக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?
மத்திய கல்வி அமைச்சோ தேசியக் கல்வி நிறுவனமோமாற்றான் தாய் மனப்பான்மையுடன் வடகிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையிற் செயற்படுகின்றன. இங்கு சில கட்டிட வேலைகள் நடைபெற்றுள்ளவே ஒழிய அதற்கு அப்பால் எதுவுமில்லை. எனவே நாம் ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு எமது தேசத்தின் விடிவுக்கு உழைக்க வேண்டும். அப்படியான ஒரு மனநிலை கல்விச் சமூகத்தில் ஏற்படாதுவிட்டால் விடிவுகாண முடியாது.
<img src='http://www.yarl.com/forum/files/chat2.jpeg' border='0' alt='user posted image'>
கல்வி என்றால் முதன்மைப் பொறுப்புடையவர்கள் ஆசிரியர்கள். யாழ்.மாவட்டத்தில் முன்னை நாள் ஆசிரியர்கள் எமது சமூகத்தினால் புகழ்ந்து பேசப்படுவார்கள். இன்றும் அந்த நிலை ஏற்பட வேண்டும்.
கல்வித் திணைக்களத்தின் மேற்பார்வையிலேயே ஆசிரியர்களை வளர்த்தெடுத்தல், வளப்படுத்தல் எல்லாம் தங்கியுள்ளது. எனவே இவ் அதிகாரிகள் அர்ப்பணிப்போடு களத்தில் இறங்க வேண்டும்.
ஆசிரியர் பற்றாக்குறை உண்டுதான். அதை மட்டும் குறிப்பிட்டுச் சமாளித்துக் கொண்டிராது இருக்கும் ஆசிரியர்களை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும்.
1990களில் ஏற்பட்ட கல்வி இழப்புக்களை வடமராட்சி கிழக்கில் ஈடு செய்ய நாம் ஆசிரியர்களை அங்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தோம். சேவையாற்றும் கால இறுதி எல்லையை இடமாற்றக் கடிதத்திலேயே போட்டு அந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதனால் ஆசிரியர்கள் உற்சாகமாகச் சென்று வேலை செய்தனர். இதனால் நல்ல அடைவுகளையும் காண்டோம். அதேபோல இன்று தீவகம்,வலிகாமம், போன்ற பகுதிகளுக்கு ஆசிரியர் பங்கீடு செய்யப்பட வேண்டும். யாழ். வலயத்தில் மேலதிகமாக 119 ஆசிரியர்கள் இருந்தும் அதே வலயத்தில் அச்சுவேலி, கோப்பாய், பகுதிகளில் பற்றாக்குறை உண்டு என்றால் நாம் என்ன தான் செய்யலாம்? ஒரு பொதுத் திட்டத்தை இறுக்கமாகக் கடைப்பித்து நிலைமைகளைச் சீராக்க வேண்டும்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டுமென்று அங்கலாய்க்கின்றனரே ஒழிய சரியான வழியைக் கண்டறிவதில்லை.
பாடசாலைகளும், ரியூட்டரிகளும் அலையும் பிள்ளைகள் பரிதாபத்துக்குரியவர்கள். இப் பாடசாலைகளும் ரியூட்டறிகளும் சேர்ந்து ஏற்படுத்திய சாதனைகளை மேலே கண்டோம். மாணவர்கள் சுயமாகக் கற்பதனாலேயே இன்று இலங்கையில் முதலாவது இரண்டாவது இடங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் விளங்கக் காரணமாகும். அதனால் அங்கு ஆசிரியர்களும் மகிழ்வோடு கற்பிக்கின்றனர். எனவே சுயகற்றலைப் பெற்றோரும் ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும்.
தொழில்நுட்பப் பாடங்கள் பற்றியும் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். யாழ்.மாணவர்கள் வர்த்தக பாடத்தை மட்டும் பெருமளவுக்கு இன்று படிக்கின்றார்கள். இலத்திரனியல் தொழில்நுட்பம், நிர்மாணத் தொழில்நுட்பம் முதலான வாழ்க்கைக்கு மிகுந்த பயனளிக்கக்கூடிய பாடங்கள் பல இருந்தும் எமது மாணவர்களிடம் அவை சென்றடையவில்லை. சுமார் 95 சதவீதமான சிங்களமாணவர்கள் இப்பாடங்களைக் கற்க 5 வீதத் தமிழ் மாணவர்களே இவற்றைக் கற்கின்றனர். இதனாற் பின்விளைவுகள் விபரீதமாகவிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சங்கரன் தினக்குரல்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->