Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இறைவா மீண்டும் வாராயோ....???!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/iraqi%20children.jpg' border='0' alt='user posted image'>

ஈராக்கிய தங்கச்சியே
பாசத்தம்பியுன் சட்டை பிடிக்க
பாதகர் உங்கள் தேசம் பிடித்து
நாசம் செய்யும் கோரம் தான் காரணமோ...!

உன் விழிகளில் தெரியுது
எதிர்காலத்தின் எதிர்காலம் பற்றியொரேக்கம்...
பாதகர் பார்வையோ சொல்லுது
தேசம் சுரண்டாமல்
அகலாது எங்கள் பாதணியென்று...!

யாரிருக்கார் மனிதருக்காய்
அவர்தம் அவலத்திற்காய் குரல் கொடுக்க....
மனிதர்கள் குரங்குகளாய் பகுத்தறிவிழந்து
கூர்ப்பில் பிந்தி அலையும் காலமெல்லோ இது...!

வேண்டுவோம் நாம் எல்லோரும்
இறைவா மீண்டும் ஒர் தடவை
வராயோ பூலோகம் என்றே.....
பாவிகள் வேரறுத்து மனிதம் கொள் மாசறுத்து
மனிதாபிமானம் வாழவைக்க.....!

நன்றி.... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<b>குருவிகள் இவை உங்கள் சொந்த சிந்தனையா?
ரொம்ப நன்றாக இருக்கின்றது.</b>
----------
Reply
#3
உங்களுக்கு எப்படி தெரிகிறதோ அப்படியே ஆகட்டும்... இவை பொது மனிதச் சிந்தனைகள்... உங்களுக்குள்ளும் எழ வேண்டுமே....??! நீங்கள் மனிதாபிமானத்தைக் கொண்டிருப்பின்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)