Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யார் இந்தக் கரும்புலிகள்...!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/blacktigers.jpg' border='0' alt='user posted image'>

'கரும்புலிகள் எமது இனத்தின் (ஈழத்தமிழரின்) தற்காப்புக்கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள் - எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்!" - தேசியத் தலைவர்...வே.பிரபாகரன்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
#3
எமது பார்வையில் கரும்புலிகள் ஞானிகளை விட மன உறுதி கொண்ட மாமனிதர்கள்....தியாகிகள்....! இதைச் கொஞ்சம் சாதாரண சமூகவியல் மனிதனுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் தெளிவாகத் தெரியும் உண்மைகள்....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
¸ÕõÒÄ¢¸û ÀüȢ ¸ðΨà ²¾¡ÅÐ þÕ󾡸 ¦º¡øÖí¸§Çý. ¦¾Ã¢óÐì ¦¸¡ûÇ ¬¨º.
Reply
#5
கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது. கரும்புலித்தாக்குதலை நாடத்தும் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிரமிப்பூட்டும் தியாகங்கள், உலக சமுதாயத்தை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. மனிதன் பிறந்ததே வாழ்வதற்காகத்தான். அப்படியானால் இறப்பதற்காகவே களம் புகும் இக் கரும்புலிகள் யார்..? இவர்களது உருவாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி என்ன. ஈடு இணையற்ற இவர்களது ஈகமும் மன ஓர்மமும் சமுதாயத்தில் எற்படுத்தும் தாக்கம் எத்தகையது, என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளானது மானிட ஆய்வாளர்கள் மத்தியில் ஆராச்சிக்குரியனவாகிவிட்டன.

இன்று உலகெங்குமுள்ள அடக்குமுறையாளர்கள் தங்களுக்குள் கைகோர்த்தபடி, சுதந்திரச் சுவாசிக்க விழையும் மக்களை மிருகத்தனமாக அடக்கி ஒடுக்க முனைகின்றனர். இவர்களிடம் ஆள், ஆயுத பலம் உண்டு. ஆட்சி அதிகாரம் உண்டு.தொழில் நுட்பவலுவுண்டு. இவற்றை தேவைப்படும் இடங்களுக்கு, தேவைப்படும் நேரங்களில் கொடுத்து மாறி, போராட்ட சக்திகளை பலம் இழக்க செய்து, தமது அடக்கு முறைகளை வலுப்படுத்துகின்றனர். இந்த நவீன அடக்கு முறையாளர்களுக்கு ஈடு கொடுக்க கூடிய அளவிற்கு ஆள் ஆயுத தொழில் நுட்பத்திறன்களைப் போராட்ட சக்திகள் கொண்டிருப்பதில்லை. மிகக் குறைந்த அளவில் இவர்களுக்கு இருக்கும் போராட்ட திறன்களில் இருந்து மிக உச்ச பயன்களைப் பெற்றாலொழிய போரட்ட சக்கரத்தை ஒர் எல்லைக்கப்பால் நகர்த்த முடியாது.

எனவே ஒடுக்கு முறையாளர்களின் நாடியை ஒடுங்கச் செய்யும் அளவுக்கு, பல்வேறு திசைகளில் இருந்தும் வேவ்வேறு வடிவங்களில் போர்ச்சக்கரம் நகர்த்தப்பட வேண்டும். இந்தப் போர் வடிவங்களுக்குள்ளே உயர்ந்ததும், உன்னதமானதுமான விடுததைப் புலிகளின் போர் வடிவம்தான் கரும்புலித் தாக்குதலாகும். தன்னை இழந்து அல்லது எதிரிகள் பலரை அல்லது எதிரியின் பலமிக்கதொரு இலக்கை அழிக்க கூடிய படையணி ஒன்றை அமைக்கும் யோசனையை, தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்தார். அந்த எண்ணக் கருவை செயற்படுத்தக் கூடிய ஆற்றலை விடுதலைப் புலி வீரர்கள் மத்தியில் சிறுகச் சிறுக எற்படுத்திக் கொண்டுவாந்தார். பின்னர் 'ஒப்றேசன் லிபறேசன்" என்ற பெயருடைய இரணுவ நடவடிக்கை மூலம் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் வெற்றிக்களிப்பில் ஆழ்ந்தன.

இதன் மூலம் சிங்கள இராணுவத்திற்கு உளவியல் ரீதியான போரிடும் ஆற்றல் திடிரெனக் கூடியது. சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளை அழித்துவிடலாம் எனத் திமிருடன் சிந்திக்க தொடங்கியது. இதே சமயம், அந்த இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து, மற்றைய பகுதிகளுக்கு சென்றதுடன், அந்த திடிர் நடவடிக்கையால் மக்கள் குழம்பியும், போராட்ட வெற்றியில் நம்பிக்கை இழக்கக் கூடிய,சூழலும் தோன்றியது. இந்த சூழ்நிலைகளில்தான் ஒரு கரும்புலித்தாக்குதலை நடத்த தமிழ் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்தார்.

1987 ஆம் ஆணடு ய10லை மாதம் 5ம் திகதி, நெல்லியடிச் மத்திய மகாவித்தியாலத்தில் அதைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவ முகாமிற்குள் முதலாவது கரும்புலி விரன் புகுந்து அம் முகாமை சின்னாபின்னமாக்கினான். சிங்கள அரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் கிலி கொள்ளச் செய்த அந்த முதலாவது கரும்புலித் தாக்குதல், கப்டன் மில்லர் செய்து முடித்தான். அன்றிலிருந்து இன்றுவரை பல கரும்புலித் தாக்குதல்கள் நிகழ்தப் பட்டுவிட்டன. அதில் பல கரும்புலிகள் விரச்சாவு அடைந்து உள்ளனர். ஒவ்வொரு விடுதலைப் புலி விரனும், விராங்கனையும் சாவைச் சந்திக்க தயாரான நிலையில்தான் இருக்கிறார்கள். அனால் தங்களுடைய சாவு எப்போது வரும் என்பது அவர்களுக்கு தெரியாது. போர்களத்திற்கு செல்லும் போதுகூடத் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையுடன்தான் ஒரு விடுதலைப் புலி விரன் செல்கிறான். சில வேளை அவன் அங்கே சாவை சந்திக்கலாம் அல்லது திரும்பி வரலாம்.

ஆனால் கரும்புலிகள் நிலை வேறுபட்டது. களம் புகுவதற்க்கு பல நாட்கள் முன்னமே தங்களுடைய சாவை தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அடுத்த நிமிடத்தில் சாகப் பொகிறேன் என்ற உண்மையை பூரணமாக தெரிந்து கொண்டுதான் கரும்புலிகள் வெடிமருந்தை தங்களுடன் கொண்டு செல்கிறார்கள். இராணுவ முகாங்களில் இருக்கும் பலநூறு எதிரிகளின் கரங்களில் இருந்து முழங்கி கொண்டிருக்கும் துப்பாக்கிகளை கருத்தில் எடுக்காது, உடைந்து நொருங்கி போய் கிடக்கும் பாதைவழியே சீராக நிதானமாக வெடிமருந்து வண்டியை ஓட்டி சென்று, எதிரி முகாமின் இதயத்திற்குள்ளே புகுந்து, தன்னையும் சேர்த்து வெடிக்கச் செய்வதென்பது சாதாரண விடயமல்ல.இயல்பாகவே அச்சமுட்டும் அலைகளை கொண்ட அகண்ட சமுத்திரத்துக்குள், நடு இரவில், எதிரியின் நவீன காவற் கருவிகளையும் புத்தி சாதுரியமாக மீறி, வெடி மருந்து படகுடன் உட்புகுந்து எதிரியின் கப்பலை நெருங்கி முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கை இனங்காண்பதற்காக ஒரு முறை கப்பலை சுற்றி வந்து,குறித்த இலக்கின் மீது மோதி, வெடிமருந்து படகுடன் சேர்ந்து வெடித்து சிதற ஒரு மனித மனம் உடன்படாது.

இவைகள் ஒரு சாதரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதை செய்வதற்கென்றொரு ஆத்மீக பலம் தேவை. தன்னை தற்கொடை செய்து கொள்ளத் தயாரண மனோதிடம் வேண்டும். தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றம் இன்றி, உறுதியுடன் குறி பிசகாது எதிரியை தேடி ஓடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்து கொள்ள தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின்படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல. இது அடிமைப் பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்து விசையாக விளங்கும் உயரிய போர் வடிவம்தான் எங்களது கரும்புலிகள்.

உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்த தொழில் நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும்தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.. இந்த மனோபலம் வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை எற்படுத்த போகும் சக்தி கொண்ட ஒரு அரசியல் வடிவமுமாகும். ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரை போக்கி கொள்ளும்போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலை போரட்ட சக்கரத்தை முன்னோக்கி தள்ளிவிடுவதுடன் வீரம்மீக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட தமிழ் சமுகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டி விடுகின்றது.

தேசபக்தியையும் விர உணர்வையும் அடித்தளமாக கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால், உலகில் எவரும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தை நாம் பெற்று கொள்ள முடியும். இன்று பல நூற்றுகணக்கான விடுதலைப்புலி விரர்கள் தங்களைக் கரும்புலி அணியில் இணைத்து கொண்டு இருக்கின்றனர்.ஓவ்வொரு முறையும் கரும்புலித்தாக்தலுக்கான திட்டம் தீட்டப்படும்போது, தன்னைத்தானே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு விரனும், விராங்கனையும் முண்டியடிக்கின்றார்கள். அலையலையாக கரும்புலித்தாக்குதலுக்கு தயாராகும் இந்த தியாகச் செயலை உலகில் எங்குமே காணமுடியாது. இது உலக அதிசயங்களில் புதியதொன்றாகும். களம்புகும் கரும்புலிகளின் பிரமிப்பூட்டும் வீரச் சாதனைகள், ஆழும்வர்க்கத்திற்க்கு கிலியை உண்டுபண்ணுகின்ற அதே சமயம், அந்த உன்னதமான அர்ப்பண உணர்வு எற்படுத்தும் சமுகத் தாக்கம், தமிழீழக் குடிமக்களின் மனதில் இருக்கும் சுதந்திர ஒளியை இன்னும் வளத்து செல்லும் என்பது உறுதி!

மூலம்: http://eelam.tamilpower.com/articles-blacktigers.htm
<b>
?

?</b>-
Reply
#6
கரும்புலி கப்டன் மில்லர்
முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது !
05-07-1987

Black Tigers என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.

ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.

மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.

வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.

பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்;தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.

திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்;கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும். வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும். சரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்

கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான். பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது.

மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான். அவன் அங்கு பணியாற்றிய காலத்தில் ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப் பெண்ணுடைய வீட்டுக்கு கமல் செல்வது வழக்கம். ஆரம்ப காலங்களில் நாட்டின் விடுதலைக்காக கமல் தன் உயிரை வைத்து பணியாற்றியது கமலின் பால் அந்தப் பெண்ணின் கவனத்தை ஈர்த்தது. கமல் வீட்டிக்குப் போகும் சமயங்களில் எல்லாம் அன்பாக உபசரித்து கமலுக்கு ஆதரவழித்து, அன்பு செலுத்தினாள். நாட்கள் நகர நகர இருவரும் அன்பால் இறுகப் பிணைக்கப்பட்டனர். ஒருவரை ஒருவர் மனமார நேசித்தனர். உலக வழக்கப்படி கூறினால் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இருந்தனர். அப் பெண் கமலின் உயிர் வாழ்வுக்காக எப்பொதும் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். ஆனால் ஒருபோதும் கமலின் தீவிரமான போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை.

மட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் வந்திருந்த வேளையிலே நெல்லியடி முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்ற முன்வந்தாள். முதல் நாள் கமலும் திலீபனும் ஒன்றாக இருந்த வேளையிலே திலீபனிடம் ஓர் வேண்டுதல் விடுத்தான். கமல் நான் சில வேளை இத்தாக்குதலில் சாவடைந்தால் என்னை நேசிப்பவளுக்கு அதை உடனடியாக தெரிவித்து விடு என்பதாகும். என்ன சத்தியமான வார்த்தைகள் ஏதோ தன் இறப்ளை தான் அறிந்து வைத்திருந்தது போல் கூறியிருக்;கிறான். தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை. கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்;லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.
அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்;டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.

பொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்.

முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது. கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். 'தடைகள் அகற்றப்டட்டு விட்டது" ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு.

மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது. அதைக் கேட்ட மில்லர்
'பிரபா பரவாயில்;லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்." என்றான்.

மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா.

மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. 'பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்;தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான். கமல் தன்னுடைய வோக்;கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.

மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.

வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது. மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து 'மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு" மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..

வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இ;டத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.

தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்;கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கன்.

மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்;தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்

மூலம்: http://www.tamilmaravan.com/heros/black-ti...tigers-main.htm
<b>
?

?</b>-
Reply
#7
நாங்களும் தேடிப்பாத்தம் தமிழில கிடைக்கேல்ல... மொழிபெயர்கிற பஞ்சியில விட்டாச்சு... தகவலுக்கு நன்றி ஆளவந்தான் அவர்களே... !

பரஞ்சோதி போன்று ஈழம் பற்றிய போரியல் வரலாறுகளைப் படிக்க விரும்புபவர்களுக்காக ஈழத்து முக்கிய போர் நிகழவுகள் சாதனைகள் பற்றிய தொகுப்பு எங்காவது இருந்தால் ஆரேனும் அறியத்தாருங்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
விடுதலைப் போரின் தடை நீக்கிகள்
கரும்புலிகளுக்கு தலைவர் புகழாரம்
விடுதலைப் போராட்டத்தின் மிக நெருக்கடியான காலகட்டங்களில் இக்கட்டான சூழ்நிலைகளில் எழுந்த தடைகளைத் தகர்த்து, விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர்கள் கரும்புலிகள் இவ வாறு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கரும்புலிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 5-7-2001 அன்று, கரும்புலிகள் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் முதற்கரும்புலியாகி தன்னைத் தற்கொடையாக்கிய கப்டன் மில்லர் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பிற்பகல் 7:05 மணிக்கு பொது ஈகைச்சுடரை ஏற்றி, கரும்புலிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, கரும்புலிகளின் போராட்டப்பங்களிப்பை புகழ்ந்து உரையாற்றினார்.
இன்று நாம் கொண்டாடுவது துக்கதினம் அல்ல. ஒவ வொரு தமிழனும் பெருமைப்படவேண்டிய பெருமைக்குரிய நாள். உலகத்திற்கே தமிழர்கள் யார்? என்பதை அறியவைத்த நாள். இவ வளவு காலமும், தமிழர்கள் - சிங்களவர்களைப் பொறுத்து, கள்ளத்தோணிகள் என்றும், உலகத்தவர்களைப் பொறுத்து, வெறும் கூலித்தமிழர்கள் என்ற பெயருடனும் வாழ்ந்த நிலை மறைந்து தற்போது தமிழர்கள் என்றால் ஒரு வீரம் மிக்க இனம் என்பதை நினைக்க வைத்த நாள் கரும்புலிகள் நாளாகும். என்று தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறினார்.
இந்தக் கரும்புலிகள் நாள் நிகழ்வில் ஆண், பெண் கரும்புலிகள் பங்குகொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய தலைவர் அவர்கள், எமது இனத்தின் விடுதலைக்கான தாங்கு தூண்களாக பலமான சக்திகளாகவே கரும்புலிகள் இயங்கி வருகின்றனர். என்று கரும்புலிகளின் போராட்டப்பங்கை எடுத்துக் கூறினார்.
மேலும் அங்கே தலைவர் உரையாற்றுகையில், இனி வருகின்ற காலத்திலும், எழப்போகின்ற தடைகளைத் தகர்த்து விடுதலையை வென்றெடுக்கின்ற பலம் பொருந்திய போராட்டசக்தியான கரும்புலி அணியாகிய நீங்கள் இலட்சியத்திற்காக எடுத்துக்கொண்ட பணியை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தேவை கருதி, காலத்திற்குக் காலம் தலைவர் பிரபாகரன் அவர்கள் புதிய புதிய போருபாயங்களை வரைந்து நடைமுறைப்படுத்தி போராட்டத்தை வளர்த்து வருகின்றார். இத்தகைய போருபாயங்களில் கரும்புலித்தாக்குதல் மிகமுக்கியமானது.
1987ஆம் ஆண்டு யூலை 5ஆம் திகதி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த சிங்களப்படை முகாமிற்கு முதன் முதலில் கரும்புலித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
முதலாவது கரும்புலி களமிறங்கிய யூலை 5ஆம் திகதியை கரும்புலி நாளாகத் தலைவர் அவர்கள் பிரகடனப்படுத்தியிருந்தார்.
கரும்புலி வீரர்களின் அதிஉயர் தியாகத்தை வீரத்தைக் கௌரவிக்கும் ஒரு தினமாகவும், இந்த மறத்தமிழ் வீரர்களின் ஆச்சரியமூட்டும் ஆன்ம உறுதியை மக்களுக்கு உணர்த்தும் ஒரு நாளாகவும் கரும்புலி நாள் கொண்டாடப்படுகின்றது.
போராட்டத்தை நசுக்கும் திட்டத்துடன், புலிகள் இயக்கத்தின் இராணுவபலத்திற்கு விலங்கிடும் நோக்குடன் தரையிலும் கடலிலும் எதிரியானவன் ஒரு பெரும் சவாலாக எழும்போது கரும்புலிகள் தங்களது வரலாற்றுப் பணியை ஆற்றுகின்றனர்.
குறைந்த உயிரிழப்புகளுடன் பாரிய வெற்றிகளை அடையவேண்டிய அவசியம் எமது போராட்டத்திற்கு உண்டு.
சிங்கள இனத்துடன் ஒப்பிடும்போது நாம் எண்ணிக்கையில் குறைந்த ஒரு தேசிய இனம். எதிரி இராணுவத்துடன் ஒப்பிடும்போது குறைந்தளவு போராளிகளையும் - மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போர்க்கருவிகளையும் கொண்டுள்ள ஒரு விடுதலை இயக்கம். எனவே எமது தரப்பில் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை இயன்றளவு குறைத்தும், அதேவேளை எதிரிக்கு பேரழிவை உண்டுபண்ண வேண்டிய தேவை எமது இயக்கத்திற்கு உண்டு. அப்படி நிகழும்போதுதான் நாம் இலக்கை அடையமுடியும்.
கரும்புலித்தாக்குதல் முறை ஈழத்தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றி வைக்கக் கூடியது.
உலகின் எந்த ஆயுதங்களினாலும் வெற்றிகொள்ளப்பட முடியாததுவும், உலகின் எந்தத் தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாததும் உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும்தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.
இந்த மனோபலம் ஒரு வீரஉணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை ஏற்படுத்திவரும் சக்தி கொண்ட ஒரு மாபெரும் அரசியல் வடிவமுமாகும்.
தேசபக்தியையும், வீரஉணர்வையும் அடித்தளமாகக் கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களது மனங்களை ஆழமாக ஊடுருவும்போது எதிரியால் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன் சுதந்திரத்துடனும், கௌரவத்துடனும் வாழும் பலத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
<b>
?

?</b>-
Reply
#9
தமிழீழ விடுதலைப்புலிகள் (Liberation Tigers of Tamil Ealam)

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே தமிழீழ மண்ணில் ஆயுதப் போராட்டத்திற்கான உறுதியான அடித்தளத்தை அமைத்து நீண்டகாலமாக தொடர்ச்சியான நிலையான ஆயுத அரசியல் போராட்டத்தினை முன்னெடுத் திருக்கிறது. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டமானது 25வது வருடத்தை நிறைவு செய்கிறது. உருக்குப் போன்ற உறுதியுடனும், உன்னதமான உணர்வுடனும் வீரகாவியங்கள் படைத்த வீரமறவர்களின் வரலாறு இது. புரட்சிகர வரலாற்றுச் சூழ்நிலையால் பிறப்பெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் தலை மறைவு கரந்தடி அணியாகத் தோன்றி இன்று பரந்து பட்ட மக்களின் அபிமானத்திற்கும் ஆதரவிற்கு முரிய மரபுவழி தேசிய விடுதலை இயக்கமாகப் பரிணமித்துள்ளது. விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றைச் சித்தரிக்கும் போது தமிழீழத்தின் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சியைப் பற்றிய வரலாற்று பின்னணியைக் குறிப்பிடுவது இன்றியமையாதாகும்.

அஹிம்சாரீதியாக, சாத்வீக - சட்ட ரீதியான - மென்முறை வடிவில் மோற்கொள்ளப்படும் அரசியல் கிளர்ச்சிகள் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கப்படும் போது, சாத்வீக அஹிம்சைப் போராட்டங்களில் இழையோடுகின்ற ஆத்தீக உணர்வுகளை ஒடுக்கு முறையாளன் நிர்த்தாட்சண்மாயமாக அசட்டை செய்யும்போது அரசியல் கிளர்ச்சியானது புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் வடிவத்திலேயே வெடித்துக் குமுறுகிறது. இதையே உலகின் ஒடுக்கப்பட்ட மக்களினது சுதந்திரப் போராட்ட வரலாறுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய ஒரு வரலாற்று நியதியிலேயே தமிழ் தேசியச் சுதந்திரப் போராட்டம் நெறிப்படுத்தப்பட்டு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.

தமிழ் மக்கள் காலங்காலமாக அஹிம்சை வழியிலேயே தங்களது அரசியற் போராட்டத்தினை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். தங்களது அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்ப தற்காக காந்திஜியின் அஹிம்சை வழிக்கோட் பாட்டினைப் பின்பற்றியே தமிழ் மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் சிங்கள ஆட்சியாளர்களால் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் உரிமைகளுக்கான போராட்டத்தினை மனிதாபிமான முறையில் தீர்த்து வைப்பதற்கு மாறாக, சிங்கள இனவாத அரசு இராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு தமிழ் மக்களின் அஹிம்சா ரீதியிலான சத்தியாக்கிரகப் போராட்டங்களை
தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் அலை அலையாகத் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் பேசும் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நாசகார இனப்படுகொலைத் திட்டத்தைச் சிங்கள பேரினவாத அரசே திட்டமிட்டு மேற்கொண்டது. தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவில் ஆயுதப் படைகள் குவிக்கப்பட்டன. இறுதியாக, தமிழ்ப் பிரதேசம் பூரண இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

இவ்வாறு தமிழருக்கெதிரான ஒடுக்கு முறையும், தொடர்ச்சியான இராணுவப் பயங்கர வெறியாட்டமும், சிங்களத் தலைவர்கள் நிரந்தரமாக இழைத்து வந்த நம்பிக்கைத் துரோகங்களும் சமாதான முறையில் தங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதில் தமிழருக்கிருந்த சகல நம்பிக்கைகளையும் அழித்து விட்டன. அரசியல் அரங்கில் தமிழர்கள் நிராதரவாக்கப்பட்டார்கள். வரலாற்றின் இந்த நெருக்கடியான கால கட்டத் தில்தான் புரட்சிகர ஆயுத எதிர்ப்பு இயக்கம் (சுநஎழடரவழையெசல யுசஅநன சுநளளைவயnஉந ஆழஎநஅநவெ) தோற்றம் பெற்றது. அரசு கட்ட விழ்த்து விட்ட காட்டு மிராண்டித்தனமான, இன வழிப்பு தழுவிய ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறெந்த வழியும் இருக்கவில்லை.

எனவே 1970களின் ஆரம்பத்தில் தமிழ் மண்ணில் தோற்றம் கண்ட ஆயுத எதிர்ப்பு இயக்கத்தை வளர்ச்சியும், விரிவாக்கமும் அடைந்த தமிழரின் அரசியற் போராட்ட வடிவமாகவே நாம் கொள்ள வேண்டும். தாங்கொணா ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டிய இறுதி கட்டத்திற்குத் தள்ளப்படும் மக்கள் வன்முறைப் போராட்டத்தை வரித்துக் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. எனவே இந்த வன்முறைப் போர் வடிவமானது எமது அரசியற் போராட்டத்தின் ஒரு புதுமுகத் தோற்றப்பாடன்றி வேறொன்றுமல்ல. இரு தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாடு முற்றி, அப்பிரதான முரண்பாட்டின் வரலாற்றுக் குழந்தையாகவே ஆயுதப் போராட்டம் பிறப்பெடுத்தது. இந்த முரண்பாடானது, காலப்போக்கில் அடக்குமுறையையும் அதற்கு எதிரான ஆயுத எழுச்சியையும் படிப்படியாக கூர்மையடையச் செய்தது.


புரட்சிகரத் தமிழ் இளைஞர்கள் மத்தியிலிருந்தே ஆயுதப் புரட்சிகர இயக்கம் கருக்கொண்டது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கையாண்ட ஒடுக்கு முறை இனவாதக் கொள்கைகளால் தமிழினத்தின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வில் ஏற் பட்ட பாரது}ரமான பாதிப்புக்களே தமிழ் இளைஞர்களைப் புரட்சிகரப் போராட்டப் பாதையை முன்னெடுக்க நிர்ப்பந்தித்தன. படித்த தமிழ் இளைஞர்களுக்கு அரசாங்கத்துறையில் வேலை வாய்ப்புகள் பூரணமாக நிராகரிக்கப்பட்டபோது அவர்களுக்கு இருள்மயமான எதிர்காலம் மாத்திரமே மிஞ்சிக் கிடந்தது.

சிங்கள அரசாங்கத்தின் பாரபட்சமான - தமிழர்களுக்கு எதிரான ஷதரப்படுத்தல்| கல்விக் கொள்கையும் ஷசிங்களம் மட்டும்| என்ற மொழிக் கொள்கையும் தமிழ் மக் களின் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்பினையும், வேலை வாய்ப்பினையும் இல்லாமல் செய்து விட்டது. மேலும் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் நாளாந்தம் மோசமாகிக் கொண்டிருந்தது. பொலீஸ், இராணுவ தரப்பால் தமிழ் இளைஞர்களைக் காரணம் ஏதுமில்லாமலேயே கைது செய்தும், மோசமாகச் சித்திரவதை செய்தும் கொன்றும் அட்டூழி யங்கள் இழைத்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தமிழ் இளைஞர்களே அரச பயங்கரவாதத்திற்கு நேரடியாக இலக்காகி கொடூரமான - மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை அனுபவித்தனர்.

தொழில் வாய்ப்புகளும் உயர் கல்வி வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட விரக்தியும், தொடர்ச்சியான பொலீஸ், இராணுவ அட்டூழியங்களால் சினங்கொண்ட தீவிரவாதத் தமிழ் இளைஞர்கள் தங்களின் இந்த மோசமான வாழ்நிலைமைகளைப் பூரணமாக மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் மூலமே தங்களின் தலை விதியை மாற்றியமைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டனர். இளைய தலைமுறையினர் சரியாக உணர்ந்து கொண்டதைப் போல, மோசமாகிக் கொண்டிருந்த தேசிய ஒடுக்கு முறையின் மத்தியில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் மாத்திரமே ஒரேயொரு தீர்வாக எஞ்சி நின்றது. 1970களின் ஆரம்பத்தில், எதேச்சையாகக் கட்டுப்பாடற்ற முறையில் பிரவாக மெடுத்த தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் அரசியல் வன்முறை எழுச்சிகள், புரட்சிகர அரசியற் கோட்பாட்டையும், நடைமுறையையும் கொண்ட புரட்சி அமைபொன்றை நாடி நின்றது. இந்தப் பிரத்தியேகமான அரசியற் சூழ்நிலையில்தான்.

அதாவது 1972ல், விடுதலைப்புலிகள் இயக்கம் தனது வரலாற்று ரீதியான பிறப்பை எடுத்தது. எமது இந்தப் புரட்சி இயக்கம் கரிகாலனால் ஆரம்பிக்கப்பட்டது. அந்த கரிகாலன்தான் இன்றைய தமிழீழத் தேசியத் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன். இயக்கம் தொடங்கப்பட்ட அதன் ஆரம்பக் காலத்தில் புதிய தமிழ்ப்புலிகள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, பின்னர் 1976ம் ஆண்டு மே 5 திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டது. விடுதலைப்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும், அர்ப்பணிப்பும், போரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை பெருமளவில் தேசிய விடுதலைக்கான நீண்ட கால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்தில் தோய்ந்த விடுதலைப்புலிகள் இயக்கம் வெகு விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர தேசிய விடுதலை இயக்கமாகப் பரிணமித்தது.

இச்சந்தர்ப்பத்தில் 1980களின் நடுப்பகுதியிலும் அதனையடுத்த காலகட்டத்திலும் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போர் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டதுடன் ஷகெரில்லா போர் வடிவமும், மரபுவழி யுத்த முறையாக| விஸ்தரிப்படைந்து முன்னேற்றமடைந்தது. இதன் விளைவாக ஆட்டம் கண்ட சிறிலங்கா அரசு இந்திய அரசின் துணையோடு திம்புப் பேச்சுவார்த்தையை முன் னெடுத்தது. ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளினால் முன் வைக்கப்பட்ட ஆகக்குறைந்த உரிமைகளைக் கோரும், அதாவது - பெரும்பான்மை இனத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத நியாயமான திம்புக் கோரிக்கைகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டியதனால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தை முன்பிருந்ததைவிட தீவிரப் படுத்தியதனால் பல கள வெற்றிகளையும், ஆயுதப் போராட்ட சாதனைகளையும் பெற முடிந்தது. அதனால், சிங்கள ஆயுதப்படையினரின் ஆட்டம் அடக்கப்பட்டு அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். ஆயுதப் போராட்ட சாதனைகளின் விளைவாக யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட எமது தாயகத்தின் பல பகுதிகளையும் விடுவித்ததன் மூலம் விடுதலைப் புலிகள், தமிழீழத்தின் தேசிய இயக்கமாகப் பரிணமித்தனர். அத்தோடு அவர்களுடைய மேலாதிக்கம் நிலவிய தமிழ்ப்பகுதிகளின் நிர்வாகத்தையும் அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டனர். அப்பகுதிகளில் சிறிலங்கா அரசிற்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய நிழல் அரசாங்கம் ஒன்று செயற்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழீழ மக்களின் நீண்ட நாள் கனவு நனவாக்கப்பட்ட காலமாக அக்காலம் மிளிர்ந்தது என்றே சொல்லவேண்டும்.

இதனைச் சகித்துக்கொள்ள இயலாத சிறிலங்கா அரசானது, வடமராட்சி மேல் ஷஒப்பரேசன் லிபரேசன்| எனப் பெயர் கொண்ட இரா ணுவ நடவடிக்கையை மேற்கொண்டு அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால், சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய முகாமான நெல்லியடி முகாமைத் தகர்த்தெறிந்ததன் மூலம் அந்த ஆக்கிரமிப்பை ஆட்டம் காண வைத்தனர் புலிகள். அந்தத் தாக்குதலின் மூலம் பிறந்தது கரும்புலிகள் என்னும் புதிய சகாப்தம். மில்லர் எனும் தியாக நெருப்பினால் அந்த முகாம் சாம்பலாக்கப்பட்டது.

சிறிலங்கா அரசின் இருப்பிற்கு பலவழிகளாலும் அவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக சிறிலங்கா அரசும், முக்கூட்டுப்படையும் குழம்பிப்போயின. செய்வதறியாது, இந்தியாவின் உதவியை நாடின. அதனையடுத்து தமிழர் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகளின் சம்மதமின்றியே இலங்கை - இந்திய ஒப்பந்தம் 29.07.1987ல் கைச்சாத்திடப்பட்டது. அமைதிப்படை என்ற போர்வையில் இந்திய வல்லாதிக்கக் கால்கள் தமிழீழ மண்ணில் பதிந்தன. அதன் பின்னர்தான் தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் இடம் பெற்றது. தேசியத் தலைவர் தமிழீழ மக்களின்முன் தோன்றி உரை நிகழ்த்தினார்.

ஆனால், இலங்கை - இந்திய ஒப்பந்தமானது, தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்கு வைக்கப்பட்ட பொறி என்பதை தொடர்ந்து வந்த நிகழ்வுகள் நிரூபித்தன. இலங்கை - இந்திய ஒப்பந்தம் மீறப்பட்ட நிலையில் 5 அம்சக்கோரிக்கை நிறைவேற்றப்படாததையடுத்து, திலீபன் உண்ணாவிர தமிருந்தார். ஆனால், இலங்கை - இந்திய அரசுகளின் பாராமுகத்தால் 26.09.1987ல் திலீபனுடைய ஆவி பிரிந்தது. அதனையடுத்து குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளின் வீரச்சாவுடன் இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் மூண்டது. இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுதலைப் புலிகளுடன் மோதிய இந்திய இராணுவம் பலத்த அனர்த்தங்களை விளைவித்தது. எனினும் இறுதியில் அரசியல் இராணுவத் தோல்வியுடன் இந்திய இராணுவம் 24.03.1990 அன்று தமிழீழத்திலிருந்து தனது இறுதிச் சிப்பாய்களையும் மீள அழைத்துக்கொண்டது. இதேவேளை, அந்நாள் சிறிலங்காவின் ஜனாதிபதி பிரேமதாஸ அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், வழமைபோல் திரைமறைவு வேலைகளில் பேச்சுவார்த்தையும் முறிவடைந்தது. 01.06.1990ல் 2ம் கட்ட நிர்வாகத்தின் கீழும் இருந்தன. பல இராணுவ முகாம்கள் விடுதலைப்புலிகளால் தகர்க்கப்பட்டன. விடுதலைப்புலிகள் தமிழீழத்தை நோக்கி விரைந்து சென்ற காலமது.

ஆனால், 1995ல் பதவிக்கு வந்த சந்திரிகா அரசு, தன்னை சமாதான தேவதையாக உலகிற்கும், மக்களுக்கும் காட்டும் முயற்சிகளில் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதனையும் நிறைவேற்றாது வெறுமனே ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதிலும், போர் ஆயத்தங்களில் சிறிலங்கா அரசானது, தனது அரசியல், இராணுவ சக்தி அனைத்தையும் பயன்படுத்தி யாழ். குடா நாடு மீது சூரியக்கதிர் எனும் இராணுவ நடவடிக்கையை 17.10.1995ல் ஆரம்பித்தது. விடுதலைப்புலிகள் பலத்த எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர்.

எனினும் மக்களினதும், போராளிகளினதும் இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு விடுதலைப்பலிகள் தந்திரோபாய ரீதியாகப் பின்வாங்க முடிவெடுத்தனர். மக்களும், விடுதலைப்புலிகளுடன் இடம் பெயர்ந்தனர். அந்த இடப்பெயர்வு ஒரு வரலாற்று நகர்வாகும். இராணுவ நடவடிக்கையிலிருந்தும் அதன் பின்னணியிலுள்ள அரசியற் பொறியிலிருந்தும் தப்பித்து வெளியேறிய மக்கள், சந்திரிகா அரசின் தந்திரோபாயத்தைப் பிசுபிசுக்கச் செய்ததன் மூலம் சாவுமணி அடித்தனர். சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ் அடிமைப்பட்டு வாழ தமிழினம் இனித் தயாராகயில்லை என்பதனையும், மக்களும், புலிகளும் வேறல்ல என்பதனையும் அந்த இடப்பெயர்வு சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டியது.

விடுதலைப்புலிகளை அழித்து விட்டதாக அகில உலகமெங்கும் ஓடி ஓடி கொக்கரித்துக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு ஓயாத அலைகள் -01 இராணுவ நடவடிக்கை மூலம் முலைத்தீவு இராணுவ முகாமை முழுமையாகக் கைப்பற்றி முல்லை மாவட்டத்தை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்ததன் மூலம் விடுதலைப்புலிகள் தமது இராணுவ, அரசியல் பலத்தை சிறிலங்கா அரசிற்கும், உலகிற்கும் எடுத்துக் காட்டினர். அந்த இராணுவ நடவடிக்கை 19.07.1996ல் இடம்பெற்றது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதை திறப்பதாகவும் அதன் மூலம் விடுதலைப்புலிக ளின் முதுகெலும்பை உடைப்பதாகவும் கூறி மே 13.1997ல் ஷஜெயசிக்குறு| எனும் இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டனர். அந்த இராணுவ நடவடிக்கையானது ஒரு வருடத்திற்கு மேல் நடைபெற்றது. மாங்குளம் பகுதியை அண்மித்த நிலையில் 27.09.1998ம் திகதி விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் -02 இராணுவ நடவடிக்கை மூலம், கிளிநொச்சி மாவட்டத்தைப் பூரணக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அதனால் பலவீனமடைந்த சிறிலங்கா இராணுவம் ஷஜெயசிக்குறு| இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததாயினும் வேறு பெயர்களில் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

ஆனால், இராணுவத்தினர் பலத்த ஆளணி, தளபாட இழப்பிற்கும் மத்தியில் கைப்பற்றிய வன்னி நிலப்பரப்பை ஐந்தே நாட்களில் விடுதலைப்புலிகள் மீட்டெடுத்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தி, சிறிலங்கா இராணுவத்தைப் புறமுதுகு காட்டி ஓட வைத்ததுடன், அகில உலகத்தையும் ஆச்சரியப்பட வைத்தனர். ஓயாத அலைகள் -03 இராணுவ நடவடிக்கை 02.11.1999ல் ஆரம்பமாகிய ஓயாத அலைகள் இராணுவ நடவடிக்கை வன்னி பெருநிலப்பரப்பின் மீட்பினைத் தொடர்ந்து கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, குடாரப்பு தரையிறக்கங்கள் மூலம் ஆனையிறவின் பாதுகாப்பு வலயங்களை மீட்டெடுத்தது. (குடாரப்பு தரையிறக்கம் இராணுவ ஆய்வாளர்களினால் ஷபிரான்ஸ் நோமண்டி| தரையிறக்கத்துடன் ஒப்பிடப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது).

இராணுவ தந்திரோபாயத்துடன் கூடிய முற்றுகையின் மூலம் ஆனையிறவுப் பெருந்தளம் ஏப்ரல் 22.02.2000ம் அன்று முற்றாக விடுதலைப்புலிகளின் கையில் விழுந்தது. தமிழீழ தேசத்தில் 240 வருடகாலமாக அடிமைச் சின்னமாக விளங்கிய ஆனையிறவுப் பெருந்தளம் தமிழீழத் தேசியத்தலைவரின் வழிநடத்தலில் ஓயாத அலைகள் -03 படையணிகளால் மீட்கப்பட்டது. 240 சதுரக் கிலோ மீற்றரில் பரந்திருந்ததும், 15,000 இராணுவத்தினரைக் கொண்டிருந்ததும், யாழ். குடா நாட்டின் வாசலில் பெரும் தடைக்கல்லாக இருந்ததுமான இப்படைத்தளம் மீட்கப்பட்டதானது, தமிழர்களின் விடுதலை வரலாற்றில் வெற்றியின் ஒரு மைல் கல்லாகும். 1000க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்ட இப்பெருந்தளத் தாக்குதலில் வெற்றிக்கு வித்தாக 35 போராளிகள் வீரச்சாவடைந்தார்கள்.

ஓயாத அலைகள் -03 இராணுவ நடவடிக்கையானது வடமராட்சி கிழக்குப் பகுதியால், நாகர்கோவில் வரையும், யாழ். நகர் நோக்கி எழுதுமட்டுவாள், பளை, சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை என யாழ். குடா நாட்டின் முக்கிய பகுதிகளை மீட்டெடுத்துக் கொண்டு யாழ். நகரின்மையப்பகுதியை அண்மித்த வேளை, இந்தியா உட்பட சில வல்லரசு நாடுகளின் அழுத்தம் காரணமாக யாழ். குடா மீட்பு நடவடிக்கையை தற்காலிகமாக மக்களின் பாதுகாப்புக் கருதி இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த ஓயாத அலைகள் -03 இராணுவ நடவடிக்கையானது, விடுதலைப்புலிகள் மரபார்ந்த படையணியாக வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதை அகில உலகிற்கும் எடுத்துக்காட்டியது. சிறிலங்கா அரசு தனது இராணுவத்தைக் குடா நாட்டிலிருந்து மீளப்பெறுவதற்கே வெளிநாட்டு உதவியைக் கோர வேண்டிய நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் ஆனையிறவு பெருநிலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஷகினிஹிர| இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்நிலையில் விடுதலைப்புலிகள் செப்ரம்பர் 26, 2000 அன்று ஓயாத அலைகள் -04 நடவடிக்கை மூலம் கிளாலியிலிருந்து நாகர்கோவில் வரையிலான நீண்ட இராணுவ முற்றுகையைத் தகர்த்து 8 கிலோ மீற்றர்கள் பரப்பளவை மீட்டெடுத்து இரா ணுவத்தை பின்னோக்கி நகரச் செய்தனர்.

இதேவேளை, நோர்வே அரசின் சிறப்புத் து}துவர் எரிக் சொல்ஹெய்ம் 02.11.2000ம் அன்று வன்னியில் தேசியத் தலைவரைச் சந்தித்து சர்வதேச அரசியலில் மாபெரும் அரசியல் இராஜதந்திர நகர்வொன்றை மேற்கொண்டார். இது சந்திரிகா அரசின் கடந்த 5 வருட கால பொய்த்திரையை ஒரே நாளில் கிழித்தெறிந்தது. அதன் மூலம் தேசியத்தலைவர் இராணுவ நகர் வில் மாத்திரமல்ல அரசியல் நகர்விலும் சாணக்கியன் என்பதை வெளியுலகமும், சந்திரிகா அரசும் புரிந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் பின்னர் டிசம்பர் 24ம் திகதியிலிருந்து விடுதலைப்புலிகள் சமாதானத்தின் நல்லெண்ண சமிஞையாக ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வந்தவராயினும் சிறிலங்கா அரசு அதனை அலட்சியம் செய்தே வந்தது. இதேவேளை, புலிகள் மீது இராணுவம் தாக்குதல்களை நடத்தியது, ஆனால், யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடித்தபடியால், தற்பாதுகாப்பு நடவடிக்கையை மட்டுமே புலிகள் மேற்கொண்டனர். அந்த நிலையிலும் 4 மாதங்கள் போர் நிறுத்தத்தை நீடித்து வந்த விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசின் கடும் போக்கான விட்டுக்கொடாத போர்க் குணம் காரணமாக ஒரு தரைப்பட்ச போர் நிறுத்தத்த நடவடிக்கையை ஏப்ரல் 24ம் திகதியுடன் நிறுத்திக ;கொண்டனர்.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை நிறுத்திய 5 மணி நேரத்தில் சிறிலங்கா அரசு இராணு வத்திற்கு உத்தரவிட்டதையடுத்து, இராணுவம் ஆனையிறவுத் தளத்தைக் குறிவைத்து நாகர் கோவில், எழுதுமட்டுவாள், கிளாலிப் பகுதிகளிலிருந்து ஷதீச்சுவாலை| என்ற பெயருடன் பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த இராணுவ நடவடிக்கையை விடுதலைப்புலிகள் ஷகொச்சைப்படுத்திய| இராணு வத்தை வீரஞ்செறிந்த தாக்குதல் நடவடிக்கை மூலம் முறியடித்தனர். அந்த முறியடிப்பு நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் அரசியல் பலத்தை மட்டுமல்ல, இராணுவ பலத்தையும் மீண்டும் ஒருமுறை மேற்குலகுக்கு நிரூபித்தது.

25 ஆண்டுகளுக்கு முன் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கரந்தடிப் படையானது, ஒரு சிறந்த தலைமையைப் பெற்றிருந்த காரணத்தால் படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று ஒரு தேசிய விடுதலை இயக்கமாக, தேசிய இராணுவத்திற்குரிய பண்புகளோடு தமிழர் இராணுவமாக வளர்ச்சியடைந்துள்ளதை உலகம் புருவமுயர்த்திப் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. பல படைப் பிரிவுகளை உள்ளடக்கிய ஒருங்கமைக்கப்பட்ட இராணுவமாக விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சியடைந்துள்ளது. விடுதலைப்புலிகளின் இராணுவப்படையணிகள் குறித்து எமக்குக் கிடைத்த விபரங்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தரைப்படை

சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு
சிறுத்தைப் படையணி
ஜெயந்தன் படைப்பிரிவு
கிட்டு பீரங்கிப் படைப்பிரிவு
விக்ரர் கசவ வாகன எதிர்ப்பு படையணி
இம்ரான் பாண்டியன் விமான எதிர்ப்பு படையணி
வேவுப்புலிகள்
வழங்கல் பிரிவு
மருத்துவப் பிரிவு
கரும்புலிகள்
கடற்புலிகள்

கொமாண்டோப் படையணி
நீரடி நீச்சல் தாக்குதல் பிரிவு
வழங்கற் பிரிவு
கடற்கரும்புலிகள்
மகளிர் படையணிகள்

மாலதி படையணி
சோதியா படையணி
அன்பரசி படையணி
சுகன்யா படையணி
மேலும் சில...

எல்லைக்காவற் படை
சிறப்பு எல்லைக்காவற்படை







என உபபிரிவுகளையும் விடுதலைப்பலிகள் இயக்கம் கொண்டுள்ளது. மேலும், ஆகாயப்படை (வான்புலிகள்) அணியைப் பொறுத்தவரை 1998ம் ஆண்டு மாவீரர் நாளின்போது மாவீரர் துயிலும் இல்லத்தின் மீது விமானத்திலிருந்து மலரஞ்சலி செலுத்தியதன் மூலம் விடுதலைப்புலிகளிடம் விமானப்படையணி உண்டு என உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது. இவற்றோடு ஒரு நாட்டின் கட்டு மானத்திற்குரிய பல நிர்வாக, அபிவிருத்தி, சமுதாய மேம்பாட்டு அமைப்புகளையும் அவற்றை வழிநடத்தக்கூடிய திட்டங்களையும் விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டுள்ளது.

விடுதலைப்புலிகள் எவ்வளவு து}ரம் இராணுவப் படையணியிலும் இராணுவ தந்திரோபாயத்திலும் வளர்ச்சியடைந்துள்ளார்களோ அந்தளவிற்கு அரசியலிலும் து}ர நோக்குடனும், மதி நுட்பத்துடனும் தந்திரோபாயத்துடனும் அரசியல் வளர்ச்சியடைந்து பலம் பொருந்திய இராணு வமாக நிலை பெற்றுள்ளார்கள். அத்தோடு அரசியல், நிர்வாக, சமூகக் கட்டமைப்பிலும் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பதை குடாநாடு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலங்கள் உணர்த்துகின்றன. அதே நிலையை சமகாலத்திலும் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பகுதிகளில் காண முடிகின்றது. ஒப்பீட்டு ரீதியில் பார்க்கும் போது சிறிலங்கா இராணுவத்தை விடவும் சக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

நோர்வே அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்வந்திருப்பதானது, தமிழீழ விடுதலைப்புலிகள்தான் தமிழீழ மக்களின் ஏகப் பிரநிதிகள் என்பதை உலக நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன என்பதை உணர்த்துகின்றது. இந்நிலையானது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச ரீதியில் ஒரு அங்கீகாரம் கிடைப்பதற்கான முன்னெடுப்பு எனவும் கூறலாம்.விடுதலைப்புலிகள் இயக்கம் 25வது ஆண்டை நிறைவு செய்யும் வேளை, யாழ். குடா நாட் டிலிருந்து சிறிலங்கா இராணுவம் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும், நோர்வே அரசின் சமாதான முன்னெடுப்புகளும் சேர்ந்து தமிழர்களுக்கென ஒரு சுதந்திரமான தாயகம் விரைவில் மலரும் என்கிற நம்பிக்கையைத் தருவதாக உள்ளன.இத்தகைய ஒரு வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும், மலர்ச்சிக்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருப் பவர், 25 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கி அதை செம் மையான பாசறையாக கட்டியெழுப்பிய தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றால் எதிரிகூட அதை ஏற்றுக்கொள்வான்.

தென் கிழக்காசியாவில் இராணுவம், அரசியல் ஆகிய இரண்டிலும் 25 வருடகால அனுபவம் பெற்ற சிறந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே என்பது பல உள்நாட்டு, வெளிநாட்டு இராணுவ ஆய்வாளர்களின் கருத்தாகவுள்ளது. இந்த யுகத்தில் தமிழ் மக்களுக்கு வரலாறு தந்த வரம், கொடை, நம்பிக்கைச்சுடர் தேசியத் தலைவர்தான். அத்தகைய மேன்மையும் மகத்துவமும் பொருந்திய தலைவனின் பின்னால் அணி திரண்டு தமிழீழம் நோக்கிய வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம். அன்றிலிருந்து இன்று வரை தமது இன்னுயிரைத் தாயக விடுதiலைக்காக ஆக்கிரமிப்பாளர்களின் கைகளால் உயிர் பறிக்கப்பட்ட எமது மக்களுக்கும் வணக்க அஞ்சலி செலுத்த தமிழினம் கடமைப்பட்டுள்ளது.

இக்கட்டுரையானது முழுமையான ஆராய்ச்சிக் கட்டுரையல்ல. இதில் கிடைக்கப்பெற்ற தரவுகள் மாத்திரமே தொகுக்கப்பட்டுள்ளன.

http://www.webtamilan.com/ealam/ltte_page03.htm
<b>
?

?</b>-
Reply
#10
Quote:¸ÕõÒÄ¢¸û ÀüȢ ¸ðΨà ²¾¡ÅÐ þÕ󾡸 ¦º¡øÖí¸§Çý. ¦¾Ã¢óÐì ¦¸¡ûÇ ¬¨º.

Quote:பரஞ்சோதி போன்று ஈழம் பற்றிய போரியல் வரலாறுகளைப் படிக்க விரும்புபவர்களுக்காக ஈழத்து முக்கிய போர் நிகழவுகள் சாதனைகள் பற்றிய தொகுப்பு எங்காவது இருந்தால் ஆரேனும் அறியத்தாருங்கள்....!

உங்களுக்கு வேண்டியவற்றை இங்கு பெற்றுக் கொள்ளலாம்.......!

www.eelamweb.com/shop
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
நன்றி நண்பர்களே! தகவல்கள் கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள். நீண்ட நாட்களாக தெரிந்துக் கொள்ள விரும்பிய தகவல்கள், கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
<b>
</b>
Reply
#12
கருமபுலிகளை வாழ்த்துவோரும், வணங்குவோரும் எம் மக்கள் மத்தியில் நிறையவே இருக்கின்றார்கள்.

ஆனால் ஏன் இவர்கள் ஊனமாகி உயிர் கொடுத்து தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது என்ற கேள்வியை நாம் ஏனோ கேட்பதில்லை.

ஏன் அமெரிக்க இராணுவமோ, இசுரேலிய இராணுவமோ அல்லது ஐரிஷ் போராளிகளோ தற்கொலைத்தாக்குதலை தேடவில்லை?

காரணம் தொழில்நுட்பரீதியாக அவர்கள் தங்கள் எதிரிகளை தகர்க்கும் ஆற்றல் கொண்டிருப்பது தான். இந்த வகையான பலத்தை விடுதலைப்புலிகளும் பெற்றுக்கொண்டு போராளிகளில் மிகச்சிறப்பானவர்களான கரும்புலிகளை நீண்டகாலம் வாழ்ந்து பயன்தர உதவவேண்டும்.
Reply
#13
ஏன் யூட் அமெரிக்க இஸ்ரேலிய ஜப்பானிய ரஷ்சிய இந்திய படைகளால் சூசைட் மிசன்கள் (Suicide missions) நடத்தப்படவில்லையா...இல்ல அதற்கான பயிற்சிகள் தான் அளிக்கப்படவில்லையா என்ன....!அதுமட்டுமன்றி....நீங்கள் குறிப்பிட்ட ஐரிஸ் போராளிகளைவிட புலிகள் பல மடங்கு ஆயுத ஆயுத தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றவர்கள்...! ஐரிஸ் போராளிகளால் ஒரு பிரிட்டிஷ் இராணுவ முகாமாவது தாக்கி கைப்பற்றப்பட்டிருந்ததா...அல்லது ஒரு பிரிட்டிஷ் யுத்த விமானத்தை சுட்டு விழுத்தக் கூடிய நிலை இருந்ததா....???! யுத்தம் என்றால் மரணம் சகஜம்... யுத்தத்தில் இலக்குத்தான் குறியே அன்றி மரணம் அல்ல....அதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்...!

அமெரிக்க உயர் தொழில்நுட்பம் அடைய முடியாத இலக்குகளைக் கூட கரும்புலிகள் அடையலாம்... மனிதனை விட சிறந்த ஒரு தொழில்நுட்பம் உலகில் உண்டோ...ஆனால் கரும்புலிகளும் வாழ வேண்டியவர்கள்... அதனால் யுத்தமே வேண்டாம்...அமைதி வழியில் தீர்வுகள் எட்டப்படுவதே எங்கும் சிறந்தது வரவேற்கத்தக்கதுடன் அநியாய அழிவுகளை அவலங்களைத் தவிர்க்கவும் உதவும்....குறிப்பாக தமிழர்கள் போன்ற சிறிய சனத்தொகை உள்ள சமூகத்தில்....!

Idea :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Quote:ஏன் யூட் அமெரிக்க இஸ்ரேலிய ஜப்பானிய ரஷ்சிய இந்திய படைகளால் சூசைட் மிசன்கள் (Suicide missions) நடத்தப்படவில்லையா...இல்ல அதற்கான பயிற்சிகள் தான் அளிக்கப்படவில்லையா என்ன..
ஜப்பானியர்களின் தற்கொலைத்தக்குதல்கள் அறியப்பட்டவை. ஆனால் மற்ற நாடுகள் ஆபத்தான, தப்புவது கடினமான தாக்குதல்களை செய்திருப்பதாக அறிந்திருக்கின்றேனே தவிர, தம்மையே வெடி குண்டாக பயன்படுத்தியதாக அறியவில்லை. இவ்வாறான தாக்குதல்களை அவை நடத்தியிருப்பது பற்றிய தகவல்களை இந்த கருத்துக்களத்துக்கு தருவீர்களா?
Reply
#15
Quote:அமெரிக்க உயர் தொழில்நுட்பம் அடைய முடியாத இலக்குகளைக் கூட கரும்புலிகள் அடையலாம்... மனிதனை விட சிறந்த ஒரு தொழில்நுட்பம் உலகில் உண்டோ..
அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் ஹோவிற்சர் பீரங்கியை விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய பின் விடுதலைப்புலிகளின் பலம் பலமடங்கு அதிகரித்திருந்ததையும், பின்னர் சிறிலங்கா அரசு கிளஸ்ரர் (கூட்டு) எறிகணைகளை பயன்படுத்தி சாவகச்சேரியை எரித்த போது விடுதலைப்புலிகள் பின்வாங்க வேண்டி வந்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கரும்புலித்தாக்குதல்களால் யாழ்ப்பாணம் பறிபோவதையோ, அல்லது மூத்த தலைவர்கள் ஊடறுப்பு தாக்குதல்களால் கொல்லப்படுவதையோ தடுக்க முடியவில்லை. ஆனால் அமெரிக்க தொழில்நுட்பம் எத்தனையோ எதிரிகளை கொண்ட அமெரிக்காவின் அரசியல்வாதிகளை இன்று பாதுகாப்பாக வைத்திருக்கின்றதை இன்று காண்க்கூடியதாக உள்ளது அல்லவா?
Reply
#16
யூட் அவர்களே உங்கள் கருத்துக்கு பதில் சொல்ல தாமதித்ததற்கு வருந்துகிறோம்....!

யூட் அவர்களே அமெரிக்க, இந்திய வீரர்கள் மட்டுமன்றி அனைத்து நாட்டு வீரர்களும் கள நிலைக்கு ஏற்ப தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியதாகவே போரியல் வரலாறு சொல்கிறது..ஆனால் அவர்கள் அதை ஒரு தனிப்படைப் பிரிவாக பரிகரிக்கவில்லை என்பது வேறுவிடயம்...ஆனால் களத்தில் தனி ஒரு வீரனின் விருப்புக்கிணங்கவோ அல்லது ஒரு குழுவின் விருப்புக்கிணங்கவோ தற்கொலைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன...! மேலதிக விபரங்களுக்கு போரியல் வரலாற்று நூல்களை வாசிக்கவும்...!

புலிகள் சாவகச்சேரியை விட்டுப் பின்வாங்கியதற்கு படைத்தளபாட தொழில்நுட்ப சமநிலையின்மை என்பதிலும் பார்க்க போராளிகளுக்கான வழங்கல் பிரச்சனைதான் காரணம் எனலாம்...காரணம் சாவகச்சேரி பின்வாங்கலுக்குப் பின்னர் படையினர் அனைத்து இராணுவ வளத்தையும் பாவித்து ஆரம்பித்த அக்கினிச் சுவாலையை எரிந்த கணத்திலேயே அணைத்து சமாதான நடவடிக்கையை நோக்கி அரசை நகர்த்திய பெருமை புலிகளைச் சாரும்....!

இத்தனை தொழில்நுட்பம் இருந்தும் செப்டம்பர் 11 தற்கொலைத்தாக்குதலை அமெரிக்கா தடுக்காமல் போனதும் ஈராக்கில் அமெரிக்கப்படைகளுக்கு எதிராக நிகழும் இதே போன்ற தாக்குதல்களை தடுக்கமுடியாமல் திணறுவதும் பற்றி யூட் அவர்களே என்ன சொல்கிறீர்கள்....?????!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
வணக்கம் வாருங்கள். பல நாடக்களுக்கு பிறகு கண்டது மகிழ்ச்சி..
[b][size=18]
Reply
#18
குருவிகாள்!

Quote:யூட் அவர்களே அமெரிக்க, இந்திய வீரர்கள் மட்டுமன்றி அனைத்து நாட்டு வீரர்களும் கள நிலைக்கு ஏற்ப தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியதாகவே போரியல் வரலாறு சொல்கிறது..ஆனால் அவர்கள் அதை ஒரு தனிப்படைப் பிரிவாக பரிகரிக்கவில்லை என்பது வேறுவிடயம்...ஆனால் களத்தில் தனி ஒரு வீரனின் விருப்புக்கிணங்கவோ அல்லது ஒரு குழுவின் விருப்புக்கிணங்கவோ தற்கொலைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன...! மேலதிக விபரங்களுக்கு போரியல் வரலாற்று நூல்களை வாசிக்கவும்...!

மற்ற இராணுவங்களில் களநிலைக்கேற்ப தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட வீர÷கள் தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பது உண்மைதான். ஆனால் தம்மைதாமே வெடிகுண்டுகளாக பயன்படுத்தும் பிரிவை ஒரு முக்கிய இராணுவப்பிரிவாக கொண்டிருப்பதை ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட இராணுவங்களில் காணவில்லை என நீங்களே ஏற்று கொள்கின்றீ÷கள்.

தனிப்பட்ட வீர÷கள் இனி தப்பமுடியாது, அல்லது பெரும் இழப்பை தவி÷க்க தற்கொலையே ஒரே வழி என்ற நிலையில் தான் மேற்படி தாக்குதல்களை, தாமாக முடிவு செய்து மேற்கொள்கின்றா÷கள்.

இவ்வாறான தாக்குதல்களுக்கு என்று ஒரு படைப்பிரிவே உருவாக்கப்படும் போது, மேற்குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையை நிரந்தரமாக கொண்ட ஒரு களநிலையை அது சுட்டிக்காட்டுகிறது அல்லவா? அதாவது, இனி தப்ப முடியாது, ஒரே வழி தற்கொலை தான் என்ற களநிலை. இவ்வாறான களநிலையும், அந்த மனநிலையும் தோல்விக்கு மிக நெருக்கமானவை. எனது கருத்து, போதிய தொழில்நுட்ப வலிமை இருந்தால், இவ்வாறான களநிலை நிரந்தரமாக காணப்படுவது தவி÷க்கப்பட முடியும் என்பது தான்.

பாருங்கள், இன்றும் சிறி லங்கா இராணுவம் கால்வைக்க முடியாத தமிழீழ பிரதேசம் வன்னி மட்டும் தான். ஆட்பலகுறைபாட்டுக்கு சரியான மாற்றீடு தற்கொலைத்தாக்குதல்கள் அல்ல, தொழில்நுட்பமே. தொலைக்காட்சி படப்பிடிப்பு கருவிகளை பயன்படுத்தியும், செய்மதிகளை பயன்படுத்தியும், ஆளில்லா விமானங்களை கொண்டும் ஏவுகணைகளை கொண்டும் ஓரிடத்தில் இருந்து கொண்டே பல களங்களில் போராட தொழில்நுட்பம் வழிசெய்யும். தற்கொலைதாக்குதல்கள் இவற்றையெல்லாம் செய்யமுடியாது.

Quote:இத்தனை தொழில்நுட்பம் இருந்தும் செப்டம்பர் 11 தற்கொலைத்தாக்குதலை அமெரிக்கா தடுக்காமல் போனதும் ஈராக்கில் அமெரிக்கப்படைகளுக்கு எதிராக நிகழும் இதே போன்ற தாக்குதல்களை தடுக்கமுடியாமல் திணறுவதும் பற்றி யூட் அவர்களே என்ன சொல்கிறீர்கள்....?????

தற்கொலை தாக்குதல்கள் எல்லாவற்றையும் தொழில்நுட்பம் தடுக்கமுடியும் என்பது எனது கருத்தல்ல. தற்கொலை தாக்குதல்களால் சாதிக்க கூடியவற்றை தொழில்நுட்பத்தாலும் செய்யமுடியும் என்பதே எனது கருத்தாகும். மேலும் தற்கொலை தாக்குதல்களை செய்யக்கூடிய கரும்புலிகள் இருந்தும் விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளை வன்னியிலேயே காப்பாற்ற முடியாமல் உள்ள அதேவேளை அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் தொழில்நுட்ப மேலாதிக்கத்தால் தமது இராணுவ பயிற்சியற்ற அரசியல்வாதிகளை பாதுகாத்து வருகிறது என்பதும் எனது கருத்தாகும்.

அப்பாவி பொது மக்களை செப்ரெம்ப÷ 11ல் கொன்ற தற்கொலையாள÷களையும் ஈராக்கிய÷களையும் உதாரணமாக காட்டியுள்ளீ÷கள். இவ÷கள் தொழில்நுட்பத்தின் முன்னால் தோற்றுப்போனவ÷கள். தமது இயலாமையால் மேற்படி போ÷முறையில் இறங்கியிருக்கிறா÷கள். விடுதலைப்புலிகள் அந்த நிலையில் உள்ளவ÷கள் அல்ல. திரும்பவும் இந்த பதிலின் முதல் மூன்று பந்திகளையும் வாசியுங்கள். உங்கள் உதாரணம் எவ்வளவு பொருத்தமானது என்பதை புரிந்து கொள்வீ÷கள்.
''
'' [.423]
Reply
#19
வணக்கம் வாருங்கள் ÌÕÅ¢¸û. பல நாðகளுக்கு பிறகு கண்டது மகிழ்ச்சி.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#20
யூட் உங்கள் பதிலும் தற்கொலைத்தாக்குதலும் ஒரு போரியல் உத்திதான் என்பதையே சொல்கிறது... பல கோடி செலவில் உற்பத்தி செய்து மிசைல்ஸ் அடிக்கிறது ஒரு உத்தி என்றால்... விலைமதிக்கமுடியாத உயிர்களை அர்பணித்து இலக்கை அடைய முனைவதிலும் தவறில்லை... தவறு இலக்கின் போரியல் நியாயம் எது என்பதை தவறாமல் சிந்திக்க மறப்பதுதான்...!

பனிப்போர் காலத்திலும் சரி இன்றும் சரி அமெரிக்க தொழில்நுட்பத்துக்கு நிகரான ஆயுத பலம் கொண்ட நாடுகளால் அமெரிக்க ஏகாதபத்தியத்துக்கும் அதன் அரச பயங்கரவாதத்திற்கும் எதிராக வெளிப்படையா செயற்பட முடியவில்லை... காரணம் அமெரிக்காவின் ஆயுத தொழில்நுட்ப பலம் அன்றி பண பலமே....! உலகை ஆட்டுவிக்கும் பொருளாதார மையம் அமெரிக்காவில் குவிந்து கிடப்பதும் உலகம் அமெரிக்க பொருளியல் சந்தையின் ஓட்டத்தில் தங்கி இருப்பதுமே அமெரிக்காவின் பலம்....!!

தொழில் நுட்பம் பற்றிக் கதைக்கும் தமிழர்கள் உங்கள் போன்றோர் மேற்குலகுசாரா தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் காண ஈழத்தில் உழைக்கத் தயாரா...?????! அதற்கேற்ப தொழில்நுட்பத்தையும் அறிவையும் அறிமுகம் செய்ய வேண்டியது உங்கள் கடமையே அன்றி..மாற்றாரினதல்ல.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)