06-17-2004, 02:38 PM
யாழ்ப்பாணத்தைப் பற்றி பெருமை பேசுகின்ற யாழ்ப்பாணத்தவரே அதிகம். ஒருகாலத்தில் அப்படித்தான் பெருமை பேசும் வகையில் இருந்தது. ஆனால் இன்று எல்லாத் திசையிலும் தனது சரியான பாதையிலிருந்து தவறி தடம்புரண்டு செல்கின்றது. உள்நாட்டுப் போர் நடக்கின்ற எல்லா நாடுகளைப்போலும் சீரழிவுகள் நடக்கத்தான் செய்யும் என பொதுவான காரணம் பலர் சொல்லி வாதிடலாம்.
இருப்பினும் சில சந்தர்பங்களில் தவறுகள் திட்டமிட்டு அல்லது விபரம் அறியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. அனேகமான தமிழர்கள் தேசவிடுதலையில் கவனத்தை செலுத்த, சாதாரண மக்கள் சரியான வழிநடத்தல் இன்றி தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. இருந்தாலும் வழிகாட்ட வேண்டியவர்களும் (பத்திரிகைகள், பத்திரிகை ஆசிரியர்கள்) தடம்புரள்வதும் அதன் விளைவாக வழிநடத்தப்படுவர்கள் தடம்புரள்வதும் தான் வேதனைக்குரியது.
கல்வி
தமிழர்களின் எதிர்காலம் கல்வியில்தான் முற்றுமுழுதாகத் தங்கியிருக்கின்றது என நம்பிச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்கும்போது கூடக் கல்வியைக் கட்டியெழுப்பியவர்கள்தான் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள். மாணவர்களுக்கு கல்வியில் காட்டப்பட்ட துரோகத்தனத்தால் எழுந்ததே இந்த விடுதலைப் போராட்டம் என்பதும் யாவரும் அறிந்ததே!
கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் காரணமாக குடாநாட்டில் அரச பாடசாலைகளில் கற்பித்தலில் ஏற்படும் குறைபாடுகளைப் போக்கவும், சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
<img src='http://www.tamilnatham.com/articles/kuru/jaffna/advert1.jpg' border='0' alt='user posted image'>
நாவலர் கலாசார மண்டபத்தில் இவ்வாறான நிகழ்வுகளுக்கு அனுமதி அளிப்பது எந்த வகையில் கலாசாரம் என்று இதற்கான அனுமதியளித்த மாநகர சபையினரும் அதன் நலன் விரும்பிகளும் விளக்கம் தருவார்களா?
பிற்பட்ட காலப்பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களின் தேவை குடாநாட்டில் அத்தியாவசியம் எனக் கருதப்பட்டது. அதாவது பரிசோதனைக் கூடங்கள் எதுவும் பாடசாலைகளில் முற்றாக இயங்காத நிலையில் விஞ்ஞான பாடங்களை சில ஆசிரியர்கள் ரியூசன் கொட்டகையில் கற்பனையில் செய்து காட்டியமை அளப்பரிய சாதனைகளே. சில ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையால் பயன்பெற்றோரில் நானும் ஒருவன். அந்த வகையில் நன்றிக்குரியவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களும் அதன் ஆசிரியர்களும்.
ஆனால் இன்று நிலைமை வேறு, தொடர் போரினாலும், 1995 குடாநாட்டு இடப்பெயர்வினாலும் அதிகளவில் மனதில், பண்பாட்டில், ஒழுக்கத்தில் உறுதிமிக்கவர்களில் பெரும்பாலோனோர் குடாநாட்டை விட்டு வெளியேறவும் மிகுதியாக இருந்தவர்கள் பலமில்லாது போகவும், சமுதாயத்தின் ஒழுங்குமுறைகள் தலைகீழாக மாறத்தொடங்கியது.
முன்னெடுக்கப்படும் ஒரு விடயம், காலம் செல்லச்செல்ல அவற்றில் உள்ள குறைபாடுகள் நீங்கி முற்றிலும் கூர்ப்படைந்து நல்ல நிலைக்கே வருவது வழமை (கூர்ப்புக்கொள்கை). ஆனால் யாழ்ப்பாணத்தில் அனேகமான செயல்கள் இயற்கை விதிகளுக்கே முரணான வகையிலேயே அண்மைக் காலங்களில் மாற்றம் பெற்று வருகின்றன.
ஒரு காலத்தில் (1995ற்கு முன்) அத்தியாவசியமாக கருதப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று, அழகு கலைப்பயிற்சி வகுப்புக்களுக்கு மாணவர்களைப் பதிவு செய்யும் இடமாக மாறியுள்ளது. ஏககாலத்தில் பாடசாலைப் பாடங்களுக்கான கற்பித்தலும் நடைபெறுவதனால், இந்த மேல்நாட்டு மோகத்தில் தவறிப் போவதும் மாணவர்களே.
<img src='http://www.tamilnatham.com/articles/kuru/jaffna/advert2.jpg' border='0' alt='user posted image'>
12.06.2004 குடாநாட்டின் பிரபல பத்திரிகையில் வெளிவந்த விளம்பரங்கள்
அண்மைக் காலமாக புதிது புதிதாகக் குடாநாட்டில் தோன்றிவரும் அழகுப் பயிற்சி மையங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் நிபுணர்கள் என்றும், பெண்களுக்கான பிரத்தியேகமான பயிற்சி என்றும் குடாநாட்டுப் பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் வியாபார உத்திகள் அதிகமாகவே காணப்படுகின்றது. இவை நம்மில் சிலருக்கு பெருவாரியான பணத்தை அள்ளிக் கொடுப்பதால் தாம் சமுதாயத்திற்கு செய்யும் துரோகத்தனத்தையும் புரிந்தும் புரியாததுபோல் துணை போகின்றனர்.
பெண்கள் தம்மைச்சுழ இருந்த அடிமைத்தளைகளை உடைத்து, பெண்களே படைநகர்த்தி போராடி தங்களது ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கும் காலகட்டத்தில், சில சக்திகள் பெண்களில் காணப்படும் சில பலவீனங்களைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யவும் சமுதாயத்தை பிழையான வழிகளில் வழிநடத்தவும் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகின்றன. விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுப்பதும், அதன் முனைப்பை கெடுத்து அழித்து கொச்சைப்படுத்த நினைப்பதும் தேசத்துரோகம். சமுதாயத்தை, அங்குள்ள மக்களை பிழையான வழியில் நடத்திச்சென்று சீரழிப்பதும் தேசத்துரோகமே என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அதாவது இன்று அழகுப்பயிற்சி, மணப்பெண் அலங்காரம் என்று சொல்பவர்கள் தங்களுக்கு இடையில் போட்டிகள் நடாத்தி பரிசில்கள் கொடுப்பார்கள், பின்பு இங்குள்ள வெளிநாட்டுத் தொடர்புகளைப் பயன்படுத்தி சமாதானத்திற்காக உலக அழகிப்போட்டி என்று ஏதாவது சொல்லி பெண்களை உலக சந்தைக்கு அனுப்புவார்கள். இவ்வளவும் நடந்தபின்பு தான் இங்குள்ள பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் ஆரம்பிப்பார்கள். ஆகவே விபாPதங்களை முளையில் கிள்ளிவிடுதலே நல்ல சமுதாய வாழ்விற்கு ஏற்ற வழி. நல்ல கட்டுக்கோப்பான அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் வாழ்வு காலஓட்டத்தால் கீழ்நோக்கி சென்று மக்களின் வாழ்வு துன்பமடைய கற்றவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
குடாநாட்டு ஊடகங்கள் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டாமல் மௌனம் சாதிக்கின்றது. அத்தோடு நின்றுவிடாமல் இவற்றுக்கு துணைபோகின்றது. (பிரபல பத்திரிகைக் காரியாலயத்திற்கு சொந்தமான கட்டிடத்திலேயே முன்பு பல பயிற்சிகள் நடைபெற்றறதும் குறிப்பிடத்தக்கது.) பெண்கள் சம அந்தஸ்து பெறவேண்டும், பெண்ணடிமை உடைக்கப்பட வேண்டும். அதற்காக அவர்களுக்கு சிறந்த கல்வி கொடுக்கப்பட வேண்டும். கல்வியின் மூலம் சிந்திக்கும் ஆற்றலைப் பெண்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதை உறுதிசெய்வதில், ஒரு சமுதாயத்தின் பெரும்பங்கு ஊடகங்களிடமே இருக்கிறது என்பதை இவர்கள் புரிய மறுப்பதேன்?
பெண்களில் ஏற்படுகின்ற முன்னேற்றமே சமுதாய முன்னேற்றம். பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் 10 மாதம் தாயின் கருவறையில் இருந்து பெறுகின்ற உணர்வே அந்தப் பிள்ளையின் உணர்வு. குழந்தை வளர்ப்பிலும் பெண்களே அதிகம் ஈடுபடுவதால் முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியர்களாக பெண்களே கடமையாற்றுவதாலும் தமிழ் சமுதாய எதிர்கால நலன் கருதி பெண்களுக்கான சரியான வழிகாட்டல்கள் குடாநாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது இவ்வாறு இருக்க, குடாநாட்டின் கல்வித் தரம் குறைந்து போயுள்ளமையை ஆராய்வதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றுள்ளார்கள். குடாநாட்டு பெண்களை அழகுபடுத்த எண்ணுபவர்கள், பெண்களை கல்வியில் மேம்படுத்த வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரலாமே? இவர்கள் தங்களது பெண் பிள்ளைகளை இதே வழியில் செல்ல அனுமதிப்பார்களா?
சுய லாபங்களுக்காக தன்இனத்தையோ, சுற்றத்தையோ ஏமாற்ற நினைப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவன் மட்டும் தான் தேசத்துரோகி அல்ல, மக்களின் பலவீனங்களைப் பணமாக்க முயல்பவனும் தேசத்துரோகிதான் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
பணம் யாரும் உழைக்கலாம், ஆனால் நுகர்வோன் (குறிப்பாக சிந்தனையில் வறுமைப்பட்டவன்) ஏமாற்றப்படக் கூடாது. எந்த நிறுவனத்திற்கும் தரநிர்ணயம் முக்கியம், இந்த தரநிர்ணயத்தை தமிழர்களை நிர்வகிப்பவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
வியாபார உலகில் தரநிர்ணயம் ஒன்றே மக்களை பாதிக்காமல் காப்பாற்றக்கூடியது. வியாபாரத்தில் பாதிப்படையும் மக்களைக் காப்பாற்ற நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் நேர்த்தியாக அமுல்படுத்தப்பட வேண்டும். பலவீனத்தைப் பணமாக்குவது முற்றாக நிறுத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும், ஆவன செய்யவேண்டும்.
அழகுப் பயிற்சி நிலையங்களின் வளர்ச்சி அழகுராணிப் போட்டிகள் என்று வளர்ந்து தமிழர்களின் ஆணிவேரிலேயே கைவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை எதற்காக இரத்தம் சிந்திப் போராடினார்களோ அந்தப் போரில் வெற்றி பெறும்போது நாம் எமக்கிருந்த அழியாத சொத்து, பண்பாடு, கலாச்சாரம், விழுமியங்களை இழந்து இரவல் பண்பாடு, கலாசாரங்களை வலிந்து எமக்குள் இணைத்துக் கொள்பவர்களாக இருந்து விட்டால், எமது போராட்டமே அர்த்தமற்றதாகி விடுமல்லவா? குறுகிய ஆயுள் உடைய நிரந்தரமற்ற வாழ்வில், சந்தோஷமான சமூக வாழ்வே மனித வாழ்க்கை. இதனை நன்கு ஆராய்ந்து அறிந்து உருவாக்கப்பட்டது தமிழர்களின் பண்பாடும், கலாசாரமும்.
ஒளிமயமான சமூகவாழ்வை நோக்கி வெற்றி வேங்கைகளாகப் பயணிக்கும் எம் புரட்சித்தமிழ்ப் பெண்களின் உள்ளங்களைச் சிதைக்கும் கலாச்சாரச் சீரழிவிற்கான மூலவேர்களை இனம்கண்டு அப்புறப்படுத்த தமிழ் ஊடகங்கள் விரைந்து செயற்படுமா ...........?
(கலாசார பண்பாட்டுச் சின்னங்கள் அணிவது கலாசாரம், பண்பாடு ஆகிவிடாது. நாம் வாழும் சமூகத்தோடு சேர்ந்து உடைகள், சின்னங்கள் மாறினாலும், சிந்திப்பதும் செயற்படுவதும் தமிழர்களாக இருக்க வேண்டும்).
யாழிலிருந்து குரு... தகவல் மூலம்...tamilnatham.com
இருப்பினும் சில சந்தர்பங்களில் தவறுகள் திட்டமிட்டு அல்லது விபரம் அறியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. அனேகமான தமிழர்கள் தேசவிடுதலையில் கவனத்தை செலுத்த, சாதாரண மக்கள் சரியான வழிநடத்தல் இன்றி தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. இருந்தாலும் வழிகாட்ட வேண்டியவர்களும் (பத்திரிகைகள், பத்திரிகை ஆசிரியர்கள்) தடம்புரள்வதும் அதன் விளைவாக வழிநடத்தப்படுவர்கள் தடம்புரள்வதும் தான் வேதனைக்குரியது.
கல்வி
தமிழர்களின் எதிர்காலம் கல்வியில்தான் முற்றுமுழுதாகத் தங்கியிருக்கின்றது என நம்பிச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்கும்போது கூடக் கல்வியைக் கட்டியெழுப்பியவர்கள்தான் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள். மாணவர்களுக்கு கல்வியில் காட்டப்பட்ட துரோகத்தனத்தால் எழுந்ததே இந்த விடுதலைப் போராட்டம் என்பதும் யாவரும் அறிந்ததே!
கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் காரணமாக குடாநாட்டில் அரச பாடசாலைகளில் கற்பித்தலில் ஏற்படும் குறைபாடுகளைப் போக்கவும், சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
<img src='http://www.tamilnatham.com/articles/kuru/jaffna/advert1.jpg' border='0' alt='user posted image'>
நாவலர் கலாசார மண்டபத்தில் இவ்வாறான நிகழ்வுகளுக்கு அனுமதி அளிப்பது எந்த வகையில் கலாசாரம் என்று இதற்கான அனுமதியளித்த மாநகர சபையினரும் அதன் நலன் விரும்பிகளும் விளக்கம் தருவார்களா?
பிற்பட்ட காலப்பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களின் தேவை குடாநாட்டில் அத்தியாவசியம் எனக் கருதப்பட்டது. அதாவது பரிசோதனைக் கூடங்கள் எதுவும் பாடசாலைகளில் முற்றாக இயங்காத நிலையில் விஞ்ஞான பாடங்களை சில ஆசிரியர்கள் ரியூசன் கொட்டகையில் கற்பனையில் செய்து காட்டியமை அளப்பரிய சாதனைகளே. சில ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையால் பயன்பெற்றோரில் நானும் ஒருவன். அந்த வகையில் நன்றிக்குரியவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களும் அதன் ஆசிரியர்களும்.
ஆனால் இன்று நிலைமை வேறு, தொடர் போரினாலும், 1995 குடாநாட்டு இடப்பெயர்வினாலும் அதிகளவில் மனதில், பண்பாட்டில், ஒழுக்கத்தில் உறுதிமிக்கவர்களில் பெரும்பாலோனோர் குடாநாட்டை விட்டு வெளியேறவும் மிகுதியாக இருந்தவர்கள் பலமில்லாது போகவும், சமுதாயத்தின் ஒழுங்குமுறைகள் தலைகீழாக மாறத்தொடங்கியது.
முன்னெடுக்கப்படும் ஒரு விடயம், காலம் செல்லச்செல்ல அவற்றில் உள்ள குறைபாடுகள் நீங்கி முற்றிலும் கூர்ப்படைந்து நல்ல நிலைக்கே வருவது வழமை (கூர்ப்புக்கொள்கை). ஆனால் யாழ்ப்பாணத்தில் அனேகமான செயல்கள் இயற்கை விதிகளுக்கே முரணான வகையிலேயே அண்மைக் காலங்களில் மாற்றம் பெற்று வருகின்றன.
ஒரு காலத்தில் (1995ற்கு முன்) அத்தியாவசியமாக கருதப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று, அழகு கலைப்பயிற்சி வகுப்புக்களுக்கு மாணவர்களைப் பதிவு செய்யும் இடமாக மாறியுள்ளது. ஏககாலத்தில் பாடசாலைப் பாடங்களுக்கான கற்பித்தலும் நடைபெறுவதனால், இந்த மேல்நாட்டு மோகத்தில் தவறிப் போவதும் மாணவர்களே.
<img src='http://www.tamilnatham.com/articles/kuru/jaffna/advert2.jpg' border='0' alt='user posted image'>
12.06.2004 குடாநாட்டின் பிரபல பத்திரிகையில் வெளிவந்த விளம்பரங்கள்
அண்மைக் காலமாக புதிது புதிதாகக் குடாநாட்டில் தோன்றிவரும் அழகுப் பயிற்சி மையங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் நிபுணர்கள் என்றும், பெண்களுக்கான பிரத்தியேகமான பயிற்சி என்றும் குடாநாட்டுப் பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் வியாபார உத்திகள் அதிகமாகவே காணப்படுகின்றது. இவை நம்மில் சிலருக்கு பெருவாரியான பணத்தை அள்ளிக் கொடுப்பதால் தாம் சமுதாயத்திற்கு செய்யும் துரோகத்தனத்தையும் புரிந்தும் புரியாததுபோல் துணை போகின்றனர்.
பெண்கள் தம்மைச்சுழ இருந்த அடிமைத்தளைகளை உடைத்து, பெண்களே படைநகர்த்தி போராடி தங்களது ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கும் காலகட்டத்தில், சில சக்திகள் பெண்களில் காணப்படும் சில பலவீனங்களைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யவும் சமுதாயத்தை பிழையான வழிகளில் வழிநடத்தவும் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகின்றன. விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுப்பதும், அதன் முனைப்பை கெடுத்து அழித்து கொச்சைப்படுத்த நினைப்பதும் தேசத்துரோகம். சமுதாயத்தை, அங்குள்ள மக்களை பிழையான வழியில் நடத்திச்சென்று சீரழிப்பதும் தேசத்துரோகமே என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அதாவது இன்று அழகுப்பயிற்சி, மணப்பெண் அலங்காரம் என்று சொல்பவர்கள் தங்களுக்கு இடையில் போட்டிகள் நடாத்தி பரிசில்கள் கொடுப்பார்கள், பின்பு இங்குள்ள வெளிநாட்டுத் தொடர்புகளைப் பயன்படுத்தி சமாதானத்திற்காக உலக அழகிப்போட்டி என்று ஏதாவது சொல்லி பெண்களை உலக சந்தைக்கு அனுப்புவார்கள். இவ்வளவும் நடந்தபின்பு தான் இங்குள்ள பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் ஆரம்பிப்பார்கள். ஆகவே விபாPதங்களை முளையில் கிள்ளிவிடுதலே நல்ல சமுதாய வாழ்விற்கு ஏற்ற வழி. நல்ல கட்டுக்கோப்பான அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் வாழ்வு காலஓட்டத்தால் கீழ்நோக்கி சென்று மக்களின் வாழ்வு துன்பமடைய கற்றவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
குடாநாட்டு ஊடகங்கள் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டாமல் மௌனம் சாதிக்கின்றது. அத்தோடு நின்றுவிடாமல் இவற்றுக்கு துணைபோகின்றது. (பிரபல பத்திரிகைக் காரியாலயத்திற்கு சொந்தமான கட்டிடத்திலேயே முன்பு பல பயிற்சிகள் நடைபெற்றறதும் குறிப்பிடத்தக்கது.) பெண்கள் சம அந்தஸ்து பெறவேண்டும், பெண்ணடிமை உடைக்கப்பட வேண்டும். அதற்காக அவர்களுக்கு சிறந்த கல்வி கொடுக்கப்பட வேண்டும். கல்வியின் மூலம் சிந்திக்கும் ஆற்றலைப் பெண்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதை உறுதிசெய்வதில், ஒரு சமுதாயத்தின் பெரும்பங்கு ஊடகங்களிடமே இருக்கிறது என்பதை இவர்கள் புரிய மறுப்பதேன்?
பெண்களில் ஏற்படுகின்ற முன்னேற்றமே சமுதாய முன்னேற்றம். பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் 10 மாதம் தாயின் கருவறையில் இருந்து பெறுகின்ற உணர்வே அந்தப் பிள்ளையின் உணர்வு. குழந்தை வளர்ப்பிலும் பெண்களே அதிகம் ஈடுபடுவதால் முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியர்களாக பெண்களே கடமையாற்றுவதாலும் தமிழ் சமுதாய எதிர்கால நலன் கருதி பெண்களுக்கான சரியான வழிகாட்டல்கள் குடாநாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது இவ்வாறு இருக்க, குடாநாட்டின் கல்வித் தரம் குறைந்து போயுள்ளமையை ஆராய்வதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றுள்ளார்கள். குடாநாட்டு பெண்களை அழகுபடுத்த எண்ணுபவர்கள், பெண்களை கல்வியில் மேம்படுத்த வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரலாமே? இவர்கள் தங்களது பெண் பிள்ளைகளை இதே வழியில் செல்ல அனுமதிப்பார்களா?
சுய லாபங்களுக்காக தன்இனத்தையோ, சுற்றத்தையோ ஏமாற்ற நினைப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவன் மட்டும் தான் தேசத்துரோகி அல்ல, மக்களின் பலவீனங்களைப் பணமாக்க முயல்பவனும் தேசத்துரோகிதான் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
பணம் யாரும் உழைக்கலாம், ஆனால் நுகர்வோன் (குறிப்பாக சிந்தனையில் வறுமைப்பட்டவன்) ஏமாற்றப்படக் கூடாது. எந்த நிறுவனத்திற்கும் தரநிர்ணயம் முக்கியம், இந்த தரநிர்ணயத்தை தமிழர்களை நிர்வகிப்பவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
வியாபார உலகில் தரநிர்ணயம் ஒன்றே மக்களை பாதிக்காமல் காப்பாற்றக்கூடியது. வியாபாரத்தில் பாதிப்படையும் மக்களைக் காப்பாற்ற நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் நேர்த்தியாக அமுல்படுத்தப்பட வேண்டும். பலவீனத்தைப் பணமாக்குவது முற்றாக நிறுத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும், ஆவன செய்யவேண்டும்.
அழகுப் பயிற்சி நிலையங்களின் வளர்ச்சி அழகுராணிப் போட்டிகள் என்று வளர்ந்து தமிழர்களின் ஆணிவேரிலேயே கைவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை எதற்காக இரத்தம் சிந்திப் போராடினார்களோ அந்தப் போரில் வெற்றி பெறும்போது நாம் எமக்கிருந்த அழியாத சொத்து, பண்பாடு, கலாச்சாரம், விழுமியங்களை இழந்து இரவல் பண்பாடு, கலாசாரங்களை வலிந்து எமக்குள் இணைத்துக் கொள்பவர்களாக இருந்து விட்டால், எமது போராட்டமே அர்த்தமற்றதாகி விடுமல்லவா? குறுகிய ஆயுள் உடைய நிரந்தரமற்ற வாழ்வில், சந்தோஷமான சமூக வாழ்வே மனித வாழ்க்கை. இதனை நன்கு ஆராய்ந்து அறிந்து உருவாக்கப்பட்டது தமிழர்களின் பண்பாடும், கலாசாரமும்.
ஒளிமயமான சமூகவாழ்வை நோக்கி வெற்றி வேங்கைகளாகப் பயணிக்கும் எம் புரட்சித்தமிழ்ப் பெண்களின் உள்ளங்களைச் சிதைக்கும் கலாச்சாரச் சீரழிவிற்கான மூலவேர்களை இனம்கண்டு அப்புறப்படுத்த தமிழ் ஊடகங்கள் விரைந்து செயற்படுமா ...........?
(கலாசார பண்பாட்டுச் சின்னங்கள் அணிவது கலாசாரம், பண்பாடு ஆகிவிடாது. நாம் வாழும் சமூகத்தோடு சேர்ந்து உடைகள், சின்னங்கள் மாறினாலும், சிந்திப்பதும் செயற்படுவதும் தமிழர்களாக இருக்க வேண்டும்).
யாழிலிருந்து குரு... தகவல் மூலம்...tamilnatham.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->