06-04-2004, 01:49 AM
தோல்வி முகம் நோக்கி லிபரல் கட்சி! இந்தியா போல் இங்கும் மத்தியில் கூட்டணி அரசு! - நக்கீரன்
இது தேர்தல் காலம். சிறீலங்காவின் 13வது நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 2இல் தேர்தல் நடந்தது. பக்கத்து நாடான இந்தியாவின் 14 வது மக்களவைக்கு (லோக் சபா) அதே மாதம் 20 தொடங்கி மே 10 வரை 5 கட்ட தேர்தல் நடந்தது. இந்த இரண்டு நாடுகளிலும் ஆளும் கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் இடம் பெற்றுள்ளது.
கனடாவில் இந்த மாதம் 28ஆம் நாள் 34வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வசந்த காலம் அல்லது இலையுதிர் காலத்தில்தான் நடைபெறுவது வழக்கம். இம்முறை வழக்கத்திற்கு மாறாக கோடையில் தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த மே 23 இல் பிரதமர் போல் மாட்டின் பொதுத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.
கனடா பரப்பளவில் உலகில் இரண்டாவது பெரிய நாடு. அதன் மொத்த பரப்பளவு 9.97 மில்லியன் சகிமீ ஆகும். மக்கள் தொகை 30.1 மில்லியன் (3 கோடி). வாக்காளர்களின் எண்ணிக்கை 22.7 மில்லியன். கடந்த நொவெம்பர் 2000 இல் நடந்த தேர்தலில் 13 மில்லியன் அல்லது 61.2 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பிர்களின் தொதை இம்முறை 301இல் இருந்து 303 ஆக அதிகரித்துள்ளது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சிக்கு 168, கனேடிய பழமைவாதக் கட்சிக்கு 73, பாட்டி கியூபெக்வாவுக்கு 33, புதிய மக்களாட்சிக் கட்சிக்கு 14, சுயேட்சைகள் 9, வெற்றிடம் 4 என மொத்தம் 301 ஆசனங்கள் இருந்தன.
கடந்த மூன்று தேர்தல்களிலும் (ஒக்தோபர் 1993, யூன் 1997, நொவம்பர் 2000) கனேடிய லிபரல் கட்சியே அமோக வெற்றி பெற்று பிரதமர் யேன் கிரச்சியன் தலைமையில் ஆட்சி செய்தது.
ஆனால் இம்முறை தேர்தல் அறிவிப்பு வெளிவந்து 11 நாட்கள் கூட ஆகாத நிலையில் லிபரல் கட்சி தோல்வி முகம் நோக்கிப் போகிறது என கருத்துக் கணிப்புக்கள் அடித்துச் சொல்கின்றன. மேலும் அடுத்த அரசு சிறுபான்மை அரசுதான் என இந்தக் கருத்துக் கணிப்புக்கள் சுட்டுகின்றன.
மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் களத்தில் இறங்கிய பிரதமர் போல் மாட்டினும் அவரது லிபரல் கட்சியும் கண்ணைக் கட்டி திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்டுள்ள நிலையில் உள்ளது. லிபரல் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை அட்லான்டிக் பகுதி நீங்கலாக எங்கும் பலத்து வீசுகிறது.
தேசிய அளவில் லிபரல் கட்சிக்கு 34, கனேடிய பழமைவாதக் கட்சிக்கு 30, புதிய மக்களாட்சிக் கட்சிக்கு (என்டிபி) 16 மற்றும் பசுமைக் கட்சிக்கு (Green Party ) 6 விழுக்காடு ஆதரவு இருப்பதாக Ipsos-Reid அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது.
ஒன்ரோறியோ மாகாணத்தை பொறுத்தளவில் லிபரல் - கனேடிய பழமைவாதக் கட்சி இரண்டுக்கும் முறையே 36 விழுக்காடு ஆதரவும், புதிய மக்கள் கட்சிக்கு 21 விழுக்காடு ஆதரவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை உறுப்பினர்களை ஒன்ரோறியோ மாகாணம் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறது.
இதுவரை காலமும் ஒன்ரோறியோ லிபரல் கட்சியின் கோட்டையாக விளங்கி வந்தது. முன்னைய தேர்தல்களில் லிபரல் கட்சி இரண்டு சூன்று தொகுதிகள் நீங்கலாக ஏனைய தொகுதிகளைக் கைப்பற்றி வந்திருக்கிறது. ஆனால் இம்முறை மொத்தம் 103 தொகுதிகளில் பாதிக்கு மேலான தொகுதிகளை இழக்கும் அபாயத்தை எதிர் நோக்குகிறது.
பிரதமர் மாட்டினுக்கும் லிபரல் கட்சிக்கும் என்ன நடந்தது? அடுத்த வசந்த காலத்தில் வைக்க வேண்டிய தேர்தலை அவசரப்பட்டு பத்து மாதம் முன்னரே வைத்து வெற்றிவாகை சூடி மீண்டும் ஆட்சிக் கதிரையில் அமரலாம் என்ற மாட்டினது கனவு இப்படி அசுர வேகத்தில் ஏன் கலைய வேண்டும்? மாட்டின் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டாரா?
போல் மாட்டினுக்கும் அவரது கட்சிக்கும் எதிராக வீசும் அலைக்கு நான்கு முக்கிய காரணிகளைக் குறிப்பிடலாம்.
1) பதினொரு ஆண்டு காலம் லிபரல் கட்சி ஆட்சி செய்து விட்டது. எனவே ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேளை வந்துவிட்டதென மக்கள் நினைக்கிறார்கள்.
2) கியூபெக் மாகாணத்தில் பிரிவதா இல்லையா என்பதையிட்டு நடந்த நேரடி வாக்கெடுப்பின் போது (1995) 250 மில்லியன் டொலர்களைச் செலவழித்ததில் ஊழல் நடந்துள்ளது என கனேடிய கணக்காய்வாளர் தெரிவித்தார். இதனை அடுத்து புலன் விசாரணை மேற்கொண்ட கனேடிய காவல்துறை இருவரைக் கைது செய்து கிரிமினல் வழக்குத் தொடுத்துள்ளது. இதனால் மக்களது கோபம் ஊழலுக்கு இடம் கொடுத்த லிபரல் கட்சி மீது திரும்பியுள்ளது.
3) என்ன நேர்ந்தாலும் எது வந்தாலும் வரியை உயர்த்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து ஒன்ரோறியோ மாகாண ஆட்சிக் கதிரையை ( ஒக்தோபர் 2003 ) பிடித்த மாகாண லிபரல் கட்சி இப்போது முன்னர் கைவிடப்பட்ட மருத்துவ காப்புறுதிக் கட்டணத்தை மீளக் கொண்டு வந்துள்ளது. இந்தக் கட்டணம் ஆண்டுக்கு 20,000 டொலர்களுக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் மீது விதிக்கப்படும். ஆகக் கூடிய கட்டணம் ஆண்டுக்கு 900 டொலர்கள். இது லிபரல் கட்சித் தலைவர்கள் படு பொய்யர்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத ஏமாற்றுப் பேர்வழிகள் என்ற கெட்ட பெயரை மக்கள் மத்தியில் எற்படுத்தியுள்ளது.
4) கனேடியன் அலயன்ஸ் கட்சியும் - புது முற்போக்கு பழமைவாதக் கட்சியும் ஒன்றாக இணைந்து பலமான கனேடிய பழமைவாதக் கட்சியாக உருப்பெற்றுள்ளது.
மக்கள் லிபரல் கட்சியை பழிவாங்கத் துடிப்பதற்கு மேற்காட்டிய காரணிகள்தான் முதன்மையானவை என நான் நினைக்கிறேன்.
இந்த வாக்காளப் பெருமக்கள் இருக்கிறார்களே அவர்கள் அரசியல்வாதிகள் அள்ளி வீசும் உறுதிமொழிகளைக் கேட்டு முதலில் ஏமாந்து விடுகிறார்கள். ஆனால் உண்மை தெரிந்ததும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் மன்னர்கள்.
இந்திய மக்களவைத் தேர்தலிலும் சட்டசபைத் தேர்தலிலும் ஆட்சியில் இருந்த கட்சிகளை வாக்காளர்கள் தோற்கடித்து விட்டார்கள். உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, குஜயராத் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி, ஆந்திராவில் (லோக்சபை, சட்டசபை) சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், கேரளத்தில் (லோக் சபை) இந்திய காங்கிரஸ், கர்நாடகத்தில் (லோக்சபை, சட்டசபை) காங்கிரஸ் கட்சி படு தோல்விகளைச் சந்தித்தன.
இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையில் பாரதூரமான கொள்கை வேறுபாடு கிடையாது. மார்க்சீச சித்தாந்த அடிப்படையில் கனேடிய பழமைவாதக் கட்சி வலது சாரிக் கட்சி. புதிய மக்களாட்சிக் கட்சி இடதுசாரிக் கட்சி. லிபரல் இரண்டுக்கும் நடுவில். ஒரு புறம் பார்த்தால் கொஞ்சம் வலதுசாரி. மறுபுறம் பார்த்தால் கொஞ்சம் இடதுசாரி.
பெரும்பாலும் கனேடிய அரசை இங்குள்ள உளவுத்துறை, காவல்துறை, அமைச்சு மேலதிகாரிகள் போன்றவர்களே இயக்குகிறார்கள்.
அதிகாரிகள் சொன்ன இடத்தில் அமைச்சர்கள் கையெழுத்து வைக்கிறார்கள். சுரேஷ் மாணிக்கவாசகம் கைது செய்யப்பட்டதற்கு அதிகாரிகளது கெடுபிடிதான் காரணம். உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தாங்கள் எடுக்கும் கொழுத்த சம்பளத்தை நியாயப்படுத்த அவ்வப்போது பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி வெள்ளையர் அல்லாதாரைக் கைது செய்கிறார்கள்.
மொகமட் சேகி மகூப் (Mohamed Zedki Mahjoub)
என்ற எகிப்பதியர் தேசிய பாதுகாப்பு சான்றிதழின் கீழ் யூன் 2000 இல் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ரொறன்ரோ தடுப்பு மையத்தில் (இது கியூபாவில் உள்ள அமெரிக்க Guantanamo Bay தடுப்பு முகாமுக்கு ஒப்பான கனேடிய தடுப்பு முகாம் என நீதிபதி ஒருவர் கண்டித்திருக்கிறார்) சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்தவித நீதி விசாரணையும் இதுவரை இல்லை. அவர் நாடு கடத்தப்படவும் இல்லை. பின் லேடனுக்கு சொந்தமான ஒரு பண்ணையில் வேலை செய்தததையும் அவரை நான்கு முறை சந்தித்ததையும் ஒப்கொள்ளும் மொகமட் பின் லேடன் அப்போது ஒரு பயங்கரவாதியாகப் பார்க்கப்படவில்லை என்கிறார்.
இப்படி கனேடிய உளவுத்துறையும் காவல்துறையும் அமெரிக்க உளவுத்துறைக்கு கொடுத்த முற்றிலும் பிழையான தகவலின் அடிப்படையில் அகப்பட்டுக் கொண்டவர் மாகர் அரார் (Maher Arar) என்ற கனேடிய குடிமகன். சிரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கிருந்து ஓடிவந்து கனடாவில் அரசியல் புகலிடம் தேடிக் கொண்டார். இவர் ஒரு கணனி மென்பொருள் பொறியியலாளர். செப்தெம்பர் 2002இல் விடுமுறையைக் கழிக்க தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் தியூனீசியா போனார். திரும்பும் போது அமெரிக்கா ஊடாக தனியே புறப்பட்டு வந்தார். அப்போதுதான் சனி உருவில் தோன்றிய அமெரிக்க உளவுத்துறையிடம் மாட்டிக் கொண்டார்.
அமெரிக்க உளவுத்துறை அவரைக் கைது செய்து தடுப்பு முகாமில் வைத்து வாரக் கணக்காக விசாரித்தார்கள். விசாரணையின் பின் எந்த நாட்டைவிட்டு உயிருக்குப் பயந்து ஓடி வந்தாரோ அதே சிரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு ஓராண்டு காலம் 6 அடி நீளம், 7 அடி உயரம், 3 அடி அகலம் உள்ள ஒரு பாதாள சிறையில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். அவருக்கு தெரியாத சங்கதி கனேடிய காவல்துறைதான் அமெரிக்க உளவுத்துறைக்கு அவரை பயங்கரவாதி எனக் காட்டிக் கொடுத்தது என்ற உண்மை. இது பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்ற கதைதான்.
கனடாவில் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசில் எந்தவித அதிகாரமும் கிடையாது. அவர்கள் வெறும் கை உயர்த்தும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அமைச்சர்களில் பிரதமருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் கொஞ்சம் அதிகாரம் உண்டு. அவர்களை அடுப்படி அமைச்சர்கள் (kitchen cabinet) என்று அழைப்பார்கள்.
போல் மாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 9 பில்லியன் (900 கோடி) டொலர்களை லிபரல் கட்சி நல்வாழ்வுத் திட்டங்களுக்குச் (health care) செலவழிக்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சித்தாந்த அடிப்படையில் மிக நெருக்கமாக இருக்கும் கனேடிய பழமைவாதக் கட்சி தொழில் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து இராணுவச் செலவை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
புதிய மக்களாட்சிக் கட்சி செல்வந்தர்கள் மீது விதிக்கப்படும் வரியை அதிகரித்து சமூக ஏணியில் கீழ் மட்டத்தில் உள்ள எளிய மக்களது நல்வாழ்வு, கல்வி, வதிவிட மேம்பாட்டுக்கு உதவப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதே சமயம் வரவு-செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படாது சமன் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?
முதலில் யாருக்கு வாக்கு அளிக்கக் கூடாது என்பதைப் பார்ப்போம். கனேடிய பழமைவாதக் கட்சி பணக்காரர்களது கட்சி. இந்த நாடு வெள்ளை இனத்தவர் கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிற கட்சி. இராக் மீது அமெரிக்கா நடத்திய சட்டத்துக்கு மாறான தாக்குதலை ஆதரிக்கும் கட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக வி.புலிகள் உட்பட அரச அடக்கு முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும் விடுதலை இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என நினைக்கிற கட்சி. எனவே மறந்தும் யாரும் இந்தக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்;பது சொல்லாமலே விளங்கும்.
அடுத்து லிபரல் கட்சி. அமெரிக்காவை முந்திக் கொண்டு வி.புலிகளை பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்திய கட்சி. இந்த விடயத்தில் முன்னைய முற்போக்கு பழமைவாதக் கட்சியின் வெளியுறவுக் கொள்கையையே இந்தக் கட்சியும் அட்சரம் தவறாமல் பின்பற்றுகிறது.
நோர்வே அரசின் அமைதி முயற்சியை ஆதரிக்கிறதாக லிபரல் அரசு வாயளவில் சொல்கிறதே ஒழிய நடைமுறையில் பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை மாதிரி நடந்து கொள்கிறது.
சென்ற ஆண்டு இலங்கைக்கு செலவு மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் பில் கிறகம் வன்னி போகவில்லை. அதையிட்டு யாழ்ப்பாணத்தில் கேள்வி கேட்கப் பட்டபோது 'அதற்கான வாய்ப்பு வரவில்லை' என்ற மழுப்பல் பதில் அமைச்சரிடம் இருந்து வந்தது.
வேடிக்கை என்னவென்றால் இலங்கைக்கான கனேடிய தூதுவர் வி.புலித் தலைவர்களை வன்னி சென்று நேரில் சந்திக்கிறார். கைகொடுத்து குசலம் விசாரிக்கிறார். அவர்களோடு நின்று படம் எடுத்துக் கொள்கிறார். ஆனால் கனேடிய அரசு வி.புலிகளை மட்டுமல்ல அதன் ஆதரவாளர்களையும் கனடா வருவதற்கு தடை விதித்துள்ளது.
தமிழீழத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மக்களுக்கு மகத்தான தொண்டு செய்கிறது. முன் பள்ளிகள், வீடுகள், சத்துணவு மையங்கள், குழந்தைகள் இல்லங்கள், கணனி பயிற்சி மையங்கள் என பல சமூக, நல்வாழ்வு, கல்விப் பணிகளை மேற் கொண்டு வருகிறது. அந்த அமைப்புககு வரி விலக்கு கொடுக்க கனேடிய வருவாய்த் துறை திணைக்களம் கடந்த 8 ஆண்டுகளாக மறுத்து வருகிறது.
தமிழர் புனர்வாழ்வுக் கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனடா வந்த வண.பிதா. கஸ்பர் ராஜ் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகள் கைது செய்து கை விலங்கு பூட்டி வந்த விமானத்தில் கனேடிய அரசு அவரை நாடு கடத்தியது. இதையிட்டு குடிவரவு அமைச்சர் மற்றும் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எழுத்தில் செய்து கொண்ட முறைப்பாடு செவிடன் காதில் ஊதிய சங்குபோல் பயனற்றுப் போனது. சாட்டுக்கு ஒரு லிபரல் நாடாளுமன்ற உறுப்பினராவது வாய் திறக்கவில்லை.
எனவே லிபரல் கட்சி கனேடிய தமிழ் மக்களின் உயிர் மூச்சான விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடிக்கிறதேயொழிய நடைமுறையில் அதற்கு மாறாகவே செயல் படுகிறது.
நாளை சிறீலங்கா அரசின் பிடிவாதப் போக்கால் அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் லிபரல் கட்சி அரசு வி.புலிகளை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத இயக்கம் என பிரகடனப்படுத்தி விடும். அiதிப் பேச்சு வார்த்தை நடப்பதால்தான் வி.புலிகள் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் சேர்க்கப்படாது விடப்பட்டுள்ளது.
எஞ்சி இருப்பது புதிய மக்களாட்சிக் கட்சி. இந்தக் கட்சி ஒரு முற்போக்கான கட்சி. குடிவரவாளர்களை நட்போடு பார்க்கும் கட்சி. அதன் தலைவர் யக் லேய்ரன் கனேடிய தமிழ் மக்களது சிக்கல்களையும் அபிலாசைகளையும் நன்கு அறிந்தவர். ரொரன்றோ மாநரக சபையின் நீண்ட கால உறுப்பினர். வீடில்லாத ஏழைகளுக்கு குரல் கொடுத்தவர். தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டத்துக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தவர்.
இவர் லிபரல் கட்சி வேட்பாளர் டெனிஸ் மில் போட்டியிடும் ரொறன்ரோ-டன்போத் தொகுதியில் போட்டி இடுகிறார். லேய்ரன் அவர்கது மனைவி ழுடiஎயை ஊhழற பக்கத்துத் தொகுதியான வுசinவைல-ளுpயனiயெ வில் போட்டி இடுகிறார். இந்தத் தொகுதியில் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை இவர்களுக்கு அளித்து வெற்றி அடையச் செய்ய வேண்டும்.
ஏனைய தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ள புதிய மக்களாட்சி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். அப்படி வாய்ப்பில்லாத போது லிபரல் கட்சிக்கு வாக்களித்து அந்தத் தொகுதியில் கனேடிய பழமைவாதக் கட்சி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
எப்படி வாக்களித்தாலும் யூன் 28 அன்று வேறு என்ன வேலை அல்லது சோலி இருந்தாலும் வாக்குச் சாவடிக்குத் தவறாது சென்று தமிழ் வாக்காளர்கள் தங்களது விலை மதிக்க முடியாத வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். மக்களாட்சியில் மக்களுக்கு உள்ள ஒரே பலம் வாக்குப் பலம் மட்டுமே என்பதை மறக்க வேண்டாம்.
நக்கீரன் / சூரியன் வெப்தளம்
இது தேர்தல் காலம். சிறீலங்காவின் 13வது நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 2இல் தேர்தல் நடந்தது. பக்கத்து நாடான இந்தியாவின் 14 வது மக்களவைக்கு (லோக் சபா) அதே மாதம் 20 தொடங்கி மே 10 வரை 5 கட்ட தேர்தல் நடந்தது. இந்த இரண்டு நாடுகளிலும் ஆளும் கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் இடம் பெற்றுள்ளது.
கனடாவில் இந்த மாதம் 28ஆம் நாள் 34வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வசந்த காலம் அல்லது இலையுதிர் காலத்தில்தான் நடைபெறுவது வழக்கம். இம்முறை வழக்கத்திற்கு மாறாக கோடையில் தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த மே 23 இல் பிரதமர் போல் மாட்டின் பொதுத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார்.
கனடா பரப்பளவில் உலகில் இரண்டாவது பெரிய நாடு. அதன் மொத்த பரப்பளவு 9.97 மில்லியன் சகிமீ ஆகும். மக்கள் தொகை 30.1 மில்லியன் (3 கோடி). வாக்காளர்களின் எண்ணிக்கை 22.7 மில்லியன். கடந்த நொவெம்பர் 2000 இல் நடந்த தேர்தலில் 13 மில்லியன் அல்லது 61.2 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பிர்களின் தொதை இம்முறை 301இல் இருந்து 303 ஆக அதிகரித்துள்ளது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சிக்கு 168, கனேடிய பழமைவாதக் கட்சிக்கு 73, பாட்டி கியூபெக்வாவுக்கு 33, புதிய மக்களாட்சிக் கட்சிக்கு 14, சுயேட்சைகள் 9, வெற்றிடம் 4 என மொத்தம் 301 ஆசனங்கள் இருந்தன.
கடந்த மூன்று தேர்தல்களிலும் (ஒக்தோபர் 1993, யூன் 1997, நொவம்பர் 2000) கனேடிய லிபரல் கட்சியே அமோக வெற்றி பெற்று பிரதமர் யேன் கிரச்சியன் தலைமையில் ஆட்சி செய்தது.
ஆனால் இம்முறை தேர்தல் அறிவிப்பு வெளிவந்து 11 நாட்கள் கூட ஆகாத நிலையில் லிபரல் கட்சி தோல்வி முகம் நோக்கிப் போகிறது என கருத்துக் கணிப்புக்கள் அடித்துச் சொல்கின்றன. மேலும் அடுத்த அரசு சிறுபான்மை அரசுதான் என இந்தக் கருத்துக் கணிப்புக்கள் சுட்டுகின்றன.
மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் களத்தில் இறங்கிய பிரதமர் போல் மாட்டினும் அவரது லிபரல் கட்சியும் கண்ணைக் கட்டி திக்குத் தெரியாத காட்டில் விடப்பட்டுள்ள நிலையில் உள்ளது. லிபரல் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை அட்லான்டிக் பகுதி நீங்கலாக எங்கும் பலத்து வீசுகிறது.
தேசிய அளவில் லிபரல் கட்சிக்கு 34, கனேடிய பழமைவாதக் கட்சிக்கு 30, புதிய மக்களாட்சிக் கட்சிக்கு (என்டிபி) 16 மற்றும் பசுமைக் கட்சிக்கு (Green Party ) 6 விழுக்காடு ஆதரவு இருப்பதாக Ipsos-Reid அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது.
ஒன்ரோறியோ மாகாணத்தை பொறுத்தளவில் லிபரல் - கனேடிய பழமைவாதக் கட்சி இரண்டுக்கும் முறையே 36 விழுக்காடு ஆதரவும், புதிய மக்கள் கட்சிக்கு 21 விழுக்காடு ஆதரவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை உறுப்பினர்களை ஒன்ரோறியோ மாகாணம் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறது.
இதுவரை காலமும் ஒன்ரோறியோ லிபரல் கட்சியின் கோட்டையாக விளங்கி வந்தது. முன்னைய தேர்தல்களில் லிபரல் கட்சி இரண்டு சூன்று தொகுதிகள் நீங்கலாக ஏனைய தொகுதிகளைக் கைப்பற்றி வந்திருக்கிறது. ஆனால் இம்முறை மொத்தம் 103 தொகுதிகளில் பாதிக்கு மேலான தொகுதிகளை இழக்கும் அபாயத்தை எதிர் நோக்குகிறது.
பிரதமர் மாட்டினுக்கும் லிபரல் கட்சிக்கும் என்ன நடந்தது? அடுத்த வசந்த காலத்தில் வைக்க வேண்டிய தேர்தலை அவசரப்பட்டு பத்து மாதம் முன்னரே வைத்து வெற்றிவாகை சூடி மீண்டும் ஆட்சிக் கதிரையில் அமரலாம் என்ற மாட்டினது கனவு இப்படி அசுர வேகத்தில் ஏன் கலைய வேண்டும்? மாட்டின் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டாரா?
போல் மாட்டினுக்கும் அவரது கட்சிக்கும் எதிராக வீசும் அலைக்கு நான்கு முக்கிய காரணிகளைக் குறிப்பிடலாம்.
1) பதினொரு ஆண்டு காலம் லிபரல் கட்சி ஆட்சி செய்து விட்டது. எனவே ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்த வேளை வந்துவிட்டதென மக்கள் நினைக்கிறார்கள்.
2) கியூபெக் மாகாணத்தில் பிரிவதா இல்லையா என்பதையிட்டு நடந்த நேரடி வாக்கெடுப்பின் போது (1995) 250 மில்லியன் டொலர்களைச் செலவழித்ததில் ஊழல் நடந்துள்ளது என கனேடிய கணக்காய்வாளர் தெரிவித்தார். இதனை அடுத்து புலன் விசாரணை மேற்கொண்ட கனேடிய காவல்துறை இருவரைக் கைது செய்து கிரிமினல் வழக்குத் தொடுத்துள்ளது. இதனால் மக்களது கோபம் ஊழலுக்கு இடம் கொடுத்த லிபரல் கட்சி மீது திரும்பியுள்ளது.
3) என்ன நேர்ந்தாலும் எது வந்தாலும் வரியை உயர்த்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து ஒன்ரோறியோ மாகாண ஆட்சிக் கதிரையை ( ஒக்தோபர் 2003 ) பிடித்த மாகாண லிபரல் கட்சி இப்போது முன்னர் கைவிடப்பட்ட மருத்துவ காப்புறுதிக் கட்டணத்தை மீளக் கொண்டு வந்துள்ளது. இந்தக் கட்டணம் ஆண்டுக்கு 20,000 டொலர்களுக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் மீது விதிக்கப்படும். ஆகக் கூடிய கட்டணம் ஆண்டுக்கு 900 டொலர்கள். இது லிபரல் கட்சித் தலைவர்கள் படு பொய்யர்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத ஏமாற்றுப் பேர்வழிகள் என்ற கெட்ட பெயரை மக்கள் மத்தியில் எற்படுத்தியுள்ளது.
4) கனேடியன் அலயன்ஸ் கட்சியும் - புது முற்போக்கு பழமைவாதக் கட்சியும் ஒன்றாக இணைந்து பலமான கனேடிய பழமைவாதக் கட்சியாக உருப்பெற்றுள்ளது.
மக்கள் லிபரல் கட்சியை பழிவாங்கத் துடிப்பதற்கு மேற்காட்டிய காரணிகள்தான் முதன்மையானவை என நான் நினைக்கிறேன்.
இந்த வாக்காளப் பெருமக்கள் இருக்கிறார்களே அவர்கள் அரசியல்வாதிகள் அள்ளி வீசும் உறுதிமொழிகளைக் கேட்டு முதலில் ஏமாந்து விடுகிறார்கள். ஆனால் உண்மை தெரிந்ததும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் மன்னர்கள்.
இந்திய மக்களவைத் தேர்தலிலும் சட்டசபைத் தேர்தலிலும் ஆட்சியில் இருந்த கட்சிகளை வாக்காளர்கள் தோற்கடித்து விட்டார்கள். உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, குஜயராத் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி, ஆந்திராவில் (லோக்சபை, சட்டசபை) சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், கேரளத்தில் (லோக் சபை) இந்திய காங்கிரஸ், கர்நாடகத்தில் (லோக்சபை, சட்டசபை) காங்கிரஸ் கட்சி படு தோல்விகளைச் சந்தித்தன.
இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையில் பாரதூரமான கொள்கை வேறுபாடு கிடையாது. மார்க்சீச சித்தாந்த அடிப்படையில் கனேடிய பழமைவாதக் கட்சி வலது சாரிக் கட்சி. புதிய மக்களாட்சிக் கட்சி இடதுசாரிக் கட்சி. லிபரல் இரண்டுக்கும் நடுவில். ஒரு புறம் பார்த்தால் கொஞ்சம் வலதுசாரி. மறுபுறம் பார்த்தால் கொஞ்சம் இடதுசாரி.
பெரும்பாலும் கனேடிய அரசை இங்குள்ள உளவுத்துறை, காவல்துறை, அமைச்சு மேலதிகாரிகள் போன்றவர்களே இயக்குகிறார்கள்.
அதிகாரிகள் சொன்ன இடத்தில் அமைச்சர்கள் கையெழுத்து வைக்கிறார்கள். சுரேஷ் மாணிக்கவாசகம் கைது செய்யப்பட்டதற்கு அதிகாரிகளது கெடுபிடிதான் காரணம். உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தாங்கள் எடுக்கும் கொழுத்த சம்பளத்தை நியாயப்படுத்த அவ்வப்போது பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி வெள்ளையர் அல்லாதாரைக் கைது செய்கிறார்கள்.
மொகமட் சேகி மகூப் (Mohamed Zedki Mahjoub)
என்ற எகிப்பதியர் தேசிய பாதுகாப்பு சான்றிதழின் கீழ் யூன் 2000 இல் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ரொறன்ரோ தடுப்பு மையத்தில் (இது கியூபாவில் உள்ள அமெரிக்க Guantanamo Bay தடுப்பு முகாமுக்கு ஒப்பான கனேடிய தடுப்பு முகாம் என நீதிபதி ஒருவர் கண்டித்திருக்கிறார்) சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்தவித நீதி விசாரணையும் இதுவரை இல்லை. அவர் நாடு கடத்தப்படவும் இல்லை. பின் லேடனுக்கு சொந்தமான ஒரு பண்ணையில் வேலை செய்தததையும் அவரை நான்கு முறை சந்தித்ததையும் ஒப்கொள்ளும் மொகமட் பின் லேடன் அப்போது ஒரு பயங்கரவாதியாகப் பார்க்கப்படவில்லை என்கிறார்.
இப்படி கனேடிய உளவுத்துறையும் காவல்துறையும் அமெரிக்க உளவுத்துறைக்கு கொடுத்த முற்றிலும் பிழையான தகவலின் அடிப்படையில் அகப்பட்டுக் கொண்டவர் மாகர் அரார் (Maher Arar) என்ற கனேடிய குடிமகன். சிரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கிருந்து ஓடிவந்து கனடாவில் அரசியல் புகலிடம் தேடிக் கொண்டார். இவர் ஒரு கணனி மென்பொருள் பொறியியலாளர். செப்தெம்பர் 2002இல் விடுமுறையைக் கழிக்க தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் தியூனீசியா போனார். திரும்பும் போது அமெரிக்கா ஊடாக தனியே புறப்பட்டு வந்தார். அப்போதுதான் சனி உருவில் தோன்றிய அமெரிக்க உளவுத்துறையிடம் மாட்டிக் கொண்டார்.
அமெரிக்க உளவுத்துறை அவரைக் கைது செய்து தடுப்பு முகாமில் வைத்து வாரக் கணக்காக விசாரித்தார்கள். விசாரணையின் பின் எந்த நாட்டைவிட்டு உயிருக்குப் பயந்து ஓடி வந்தாரோ அதே சிரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு ஓராண்டு காலம் 6 அடி நீளம், 7 அடி உயரம், 3 அடி அகலம் உள்ள ஒரு பாதாள சிறையில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். அவருக்கு தெரியாத சங்கதி கனேடிய காவல்துறைதான் அமெரிக்க உளவுத்துறைக்கு அவரை பயங்கரவாதி எனக் காட்டிக் கொடுத்தது என்ற உண்மை. இது பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்ற கதைதான்.
கனடாவில் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசில் எந்தவித அதிகாரமும் கிடையாது. அவர்கள் வெறும் கை உயர்த்தும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அமைச்சர்களில் பிரதமருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் கொஞ்சம் அதிகாரம் உண்டு. அவர்களை அடுப்படி அமைச்சர்கள் (kitchen cabinet) என்று அழைப்பார்கள்.
போல் மாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 9 பில்லியன் (900 கோடி) டொலர்களை லிபரல் கட்சி நல்வாழ்வுத் திட்டங்களுக்குச் (health care) செலவழிக்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சித்தாந்த அடிப்படையில் மிக நெருக்கமாக இருக்கும் கனேடிய பழமைவாதக் கட்சி தொழில் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து இராணுவச் செலவை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
புதிய மக்களாட்சிக் கட்சி செல்வந்தர்கள் மீது விதிக்கப்படும் வரியை அதிகரித்து சமூக ஏணியில் கீழ் மட்டத்தில் உள்ள எளிய மக்களது நல்வாழ்வு, கல்வி, வதிவிட மேம்பாட்டுக்கு உதவப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதே சமயம் வரவு-செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படாது சமன் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?
முதலில் யாருக்கு வாக்கு அளிக்கக் கூடாது என்பதைப் பார்ப்போம். கனேடிய பழமைவாதக் கட்சி பணக்காரர்களது கட்சி. இந்த நாடு வெள்ளை இனத்தவர் கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிற கட்சி. இராக் மீது அமெரிக்கா நடத்திய சட்டத்துக்கு மாறான தாக்குதலை ஆதரிக்கும் கட்சி. எல்லாவற்றிற்கும் மேலாக வி.புலிகள் உட்பட அரச அடக்கு முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடும் விடுதலை இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என நினைக்கிற கட்சி. எனவே மறந்தும் யாரும் இந்தக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்;பது சொல்லாமலே விளங்கும்.
அடுத்து லிபரல் கட்சி. அமெரிக்காவை முந்திக் கொண்டு வி.புலிகளை பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்திய கட்சி. இந்த விடயத்தில் முன்னைய முற்போக்கு பழமைவாதக் கட்சியின் வெளியுறவுக் கொள்கையையே இந்தக் கட்சியும் அட்சரம் தவறாமல் பின்பற்றுகிறது.
நோர்வே அரசின் அமைதி முயற்சியை ஆதரிக்கிறதாக லிபரல் அரசு வாயளவில் சொல்கிறதே ஒழிய நடைமுறையில் பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை மாதிரி நடந்து கொள்கிறது.
சென்ற ஆண்டு இலங்கைக்கு செலவு மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் பில் கிறகம் வன்னி போகவில்லை. அதையிட்டு யாழ்ப்பாணத்தில் கேள்வி கேட்கப் பட்டபோது 'அதற்கான வாய்ப்பு வரவில்லை' என்ற மழுப்பல் பதில் அமைச்சரிடம் இருந்து வந்தது.
வேடிக்கை என்னவென்றால் இலங்கைக்கான கனேடிய தூதுவர் வி.புலித் தலைவர்களை வன்னி சென்று நேரில் சந்திக்கிறார். கைகொடுத்து குசலம் விசாரிக்கிறார். அவர்களோடு நின்று படம் எடுத்துக் கொள்கிறார். ஆனால் கனேடிய அரசு வி.புலிகளை மட்டுமல்ல அதன் ஆதரவாளர்களையும் கனடா வருவதற்கு தடை விதித்துள்ளது.
தமிழீழத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மக்களுக்கு மகத்தான தொண்டு செய்கிறது. முன் பள்ளிகள், வீடுகள், சத்துணவு மையங்கள், குழந்தைகள் இல்லங்கள், கணனி பயிற்சி மையங்கள் என பல சமூக, நல்வாழ்வு, கல்விப் பணிகளை மேற் கொண்டு வருகிறது. அந்த அமைப்புககு வரி விலக்கு கொடுக்க கனேடிய வருவாய்த் துறை திணைக்களம் கடந்த 8 ஆண்டுகளாக மறுத்து வருகிறது.
தமிழர் புனர்வாழ்வுக் கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனடா வந்த வண.பிதா. கஸ்பர் ராஜ் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகள் கைது செய்து கை விலங்கு பூட்டி வந்த விமானத்தில் கனேடிய அரசு அவரை நாடு கடத்தியது. இதையிட்டு குடிவரவு அமைச்சர் மற்றும் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எழுத்தில் செய்து கொண்ட முறைப்பாடு செவிடன் காதில் ஊதிய சங்குபோல் பயனற்றுப் போனது. சாட்டுக்கு ஒரு லிபரல் நாடாளுமன்ற உறுப்பினராவது வாய் திறக்கவில்லை.
எனவே லிபரல் கட்சி கனேடிய தமிழ் மக்களின் உயிர் மூச்சான விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடிக்கிறதேயொழிய நடைமுறையில் அதற்கு மாறாகவே செயல் படுகிறது.
நாளை சிறீலங்கா அரசின் பிடிவாதப் போக்கால் அமைதிப் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் லிபரல் கட்சி அரசு வி.புலிகளை பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத இயக்கம் என பிரகடனப்படுத்தி விடும். அiதிப் பேச்சு வார்த்தை நடப்பதால்தான் வி.புலிகள் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் சேர்க்கப்படாது விடப்பட்டுள்ளது.
எஞ்சி இருப்பது புதிய மக்களாட்சிக் கட்சி. இந்தக் கட்சி ஒரு முற்போக்கான கட்சி. குடிவரவாளர்களை நட்போடு பார்க்கும் கட்சி. அதன் தலைவர் யக் லேய்ரன் கனேடிய தமிழ் மக்களது சிக்கல்களையும் அபிலாசைகளையும் நன்கு அறிந்தவர். ரொரன்றோ மாநரக சபையின் நீண்ட கால உறுப்பினர். வீடில்லாத ஏழைகளுக்கு குரல் கொடுத்தவர். தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டத்துக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தவர்.
இவர் லிபரல் கட்சி வேட்பாளர் டெனிஸ் மில் போட்டியிடும் ரொறன்ரோ-டன்போத் தொகுதியில் போட்டி இடுகிறார். லேய்ரன் அவர்கது மனைவி ழுடiஎயை ஊhழற பக்கத்துத் தொகுதியான வுசinவைல-ளுpயனiயெ வில் போட்டி இடுகிறார். இந்தத் தொகுதியில் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை இவர்களுக்கு அளித்து வெற்றி அடையச் செய்ய வேண்டும்.
ஏனைய தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ள புதிய மக்களாட்சி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். அப்படி வாய்ப்பில்லாத போது லிபரல் கட்சிக்கு வாக்களித்து அந்தத் தொகுதியில் கனேடிய பழமைவாதக் கட்சி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
எப்படி வாக்களித்தாலும் யூன் 28 அன்று வேறு என்ன வேலை அல்லது சோலி இருந்தாலும் வாக்குச் சாவடிக்குத் தவறாது சென்று தமிழ் வாக்காளர்கள் தங்களது விலை மதிக்க முடியாத வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். மக்களாட்சியில் மக்களுக்கு உள்ள ஒரே பலம் வாக்குப் பலம் மட்டுமே என்பதை மறக்க வேண்டாம்.
நக்கீரன் / சூரியன் வெப்தளம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

