Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாடல்கள்(திரைப் படம்..., மெல்லிசை......., துள்ளிசை......)
#1
படம் - மறுபடியும்
பாடியவர்- எஸ்.பி.பாலா

<span style='font-size:25pt;line-height:100%'>நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

கிழக்கினில் தினம்தோன்றும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!</span>
Nadpudan
Chandravathanaa
Reply
#2
பாடல்கள் முதலில் இடம் மாறி
<span style='color:#880000'>ஏனையவிடயங்களுக்குள் போய் விட்டது.
இனி இங்கே தொடரும்.</span>
Nadpudan
Chandravathanaa
Reply
#3
[size=18]கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் படைத்தார்- இரு
காதில்லாத மனிதர் முன்னே பாடலிசைத்தார்

கண்ணிருந்தும் ஓவியத்தைக் காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாடலினை இடையில் முடித்தார்

ஆடவந்த மேடையிலே முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின் சிறகை ஒடித்தார்

பெண் பெருமை பேசிப் பேசி காலங் கழிப்பார்
தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அடிப்பார்

முன்னூமில்லை பின்னூமில்லை முடிவுமில்லையே
மூடர் செய்த விதிகளுக்குத் தெளிவுமில்லையே
Nadpudan
Chandravathanaa
Reply
#4
[quote=vaanoly]படம் - ஜொனி
பாடியவர் - ஜென்சி
இசை - இளையராஜா
வரிகள் - கங்கை அமரன்

<span style='font-size:25pt;line-height:100%'>காற்றில் எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே..
அலைபோல நினைவாக.. சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே..

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட..
என்னுள்ள வீணை ஒரு ராகம் தேட..
அன்புள்ள நெஞ்சைக் காணாதோ..
ஆனந்த ராகம் பாடாதோ..

கண்கள் ஏங்கும்.. நெஞ்சின் பாவம் மேலும் ஏற்றும்..
காற்றில் எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே..

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்..
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்..
மோனத்தின் ராகம் கேளாதோ..
மௌனத்தின் தாளம் போடாதோ..

வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்..
காற்றில் எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே..

அலைபோல நினைவாக.. சில்லென்று வீசும் மாலை நேரக்
காற்றில் எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே.</span>
Nadpudan
Chandravathanaa
Reply
#5
பாடல்வரிகள் - ???????
பாடியவர்கள் - ரமேஸ், ஜெகதேவி.விக்னேஸ்வரன்
இசை - மோகன்ராஜ்

ஜெகதேவி -
<span style='color:#b60000'>என் தேசக் காற்றும் என் தோட்டப் புூவும்
என் தாயின் மடியும் எனக்கில்லையா

நான் வாழ்ந்த வீடும் நாம் ஆண்ட நாடும்
நாம் பேசும் மொழியும் நமக்கில்லையா
நாம் என்ன பாவம் யாருக்குச் செய்தோம்
தாய் தந்தையோடோர் வாழ்வில்லையா

என் தேசக் காற்றும் என் தோட்டப் புூவும்
என் தாயின் மடியும் எனக்கில்லையா

ரமேஸ் -
அலை.....................
அகதி வாழ்வு தந்த வேதனையைச் சொல்லு..

ஜெகதேவி -

[size=18]ஓர் கோடி மக்கள் ஊர் கூடி வாழ்ந்த
அந்................................. நின்றோம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேதி
நம் காதில் நுழைய தலை குனிந்தோம்
கண்முன் எம் தேசம் கண்ணீரில் நனைய
கண்மூடி நாம் ஏன் ஓடி வந்தோம்.
கல்லூரி வாழ்வைக் காற்றோடு விட்டு
கை காட்டி நாம் ஏன் ஏறி வந்தோம்

என் தேசக் காற்றும் என் தோட்டப் புூவும்
என் தாயின் மடியும் எனக்கில்லையா</span>

ரமேஸ் -சனங்கள் யாருக்குத்தான் ஊருக்குப் போக........
கவலை.........எனக்கும் .............. பாட்டுப் பாட ஆசை[/color]


ஜெகதேவி -

<span style='font-size:25pt;line-height:100%'>போர் கொண்ட புூமி யார் தந்த சாபம்
புூங்காற்றில் கூட செங்குருதியின் நாற்றம்
வாழ்வோடு நாளும் சாவோடு சேதி
வான் மூடும் புூமி வழி விடுமா

பொன்னான புூமி முன்னேற நாளும்
அன்போடு நாங்கள் வழி செய்வோம்
எம்மோடு போகும் மண்ணோடை தோசம்
நாளை நம் தலைமுறை வளம் பெறட்டும்.</span>
Nadpudan
Chandravathanaa
Reply
#6
[quote=Chandravathanaa]பாடல்வரிகள் - ???????
பாடியவர்கள் - ரமேஸ், ஜெகதேவி.விக்னேஸ்வரன்
இசை - மோகன்ராஜ்

ஜெகதேவி -
<span style='color:#b60000'>என் தேசக் காற்றும் என் தோட்டப் பூவும்
என் தாயின் மடியும் எனக்கில்லையா

நான் வாழ்ந்த வீடும் நாம் ஆண்ட நாடும்
நாம் பேசும் மொழியும் நமக்கில்லையா
நாம் என்ன பாவம் யாருக்குச் செய்தோம்
தாய் தந்தையோடோர் வாழ்வில்லையா

என் தேசக் காற்றும் என் தோட்டப் பூவும்
என் தாயின் மடியும் எனக்கில்லையா

ரமேஸ் -
அலை.....................
அகதி வாழ்வு தந்த வேதனையைச் சொல்லு..

ஜெகதேவி -

[size=18]ஓர் கோடி மக்கள் ஊர் கூடி வாழ்ந்த
அந்................................. நின்றோம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேதி
நம் காதில் நுழைய தலை குனிந்தோம்
கண்முன் எம் தேசம் கண்ணீரில் நனைய
கண்மூடி நாம் ஏன் ஓடி வந்தோம்.
கல்லூரி வாழ்வைக் காற்றோடு விட்டு
கை காட்டி நாம் ஏன் ஏறி வந்தோம்

என் தேசக் காற்றும் என் தோட்டப் பூவும்
என் தாயின் மடியும் எனக்கில்லையா</span>

ரமேஸ் -சனங்கள் யாருக்குத்தான் ஊருக்குப் போக........
கவலை.........எனக்கும் .............. பாட்டுப் பாட ஆசை[/color]


ஜெகதேவி -

<span style='font-size:25pt;line-height:100%'>போர் கொண்ட பூமி யார் தந்த சாபம்
பூங்காற்றில் கூட செங்குருதியின் நாற்றம்
வாழ்வோடு நாளும் சாவோடு சேதி
வான் மூடும் பூமி வழி விடுமா

பொன்னான பூமி முன்னேற நாளும்
அன்போடு நாங்கள் வழி செய்வோம்
எம்மோடு போகும் மண்ணோடை தோசம்
நாளை நம் தலைமுறை வளம் பெறட்டும்.</span>
Nadpudan
Chandravathanaa
Reply
#7

படம் - ஆயிரத்தில் ஒருவன்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் டி..எம். செளந்தரராஜன் குழுவினர்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

<span style='font-size:16pt;line-height:100%'>குழு -அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

குழு -சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

குழு -
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

குழு -பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே

குழு -
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

குழு -ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் </span>
Reply
#8
படம் - மன்னாதி மன்னன்
இசை - விஸ்வநாதன் - ராம்முர்த்தி
பாடியவர் டி..எம். செளந்தரராஜன்

அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உரிமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நு¡றிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ.........
கனக விசயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நு¡றிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பான் தமிழன்னை
ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நு¡றிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நு¡றிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
Reply
#9
இது எந்த வானெலி
Reply
#10
பேச்சில் வராத ஆசைகள்
தோளில் விழாத மாலைகள்
லாபமோ..?
nadpudan
alai
Reply
#11
வணக்கம்

சிகரம் படத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய ஒரு பாடல்
அந்த பாடலின் தொடக்கம் ஞாபகம் இல்லை

அந்த பாடல் இப்படி வரும்என நினைக்கின்றேன்

தகரம் இப்போ தங்கம் ஆச்சு
சிரகம் இப்போ .................
என வரும்.

அந்தபாடலின் ஒலி வடிவமோ வரிவடிவமோ யாரிற்காவது முடிந்தால் இங்கு இணைக்க முடியுமா ?
[b] ?
Reply
#12
அகரம் இப்போ சிகரம் ஆச்சு... பாடல் பாடியது. .


அந்தப் பாடலுக்கான இசை


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்

அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமாயில்லை
தலைகோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்iயே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
Reply
#13
[quote=Mullai]
நம்பிக்iயே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
Reply
#14
நன்றி முல்லை அவர்களே
அருமை அருமையான வரிகள்
அதைப்பாடியது ஜேசுதாசா

நான் நினைத்தேன் பாலசுப்பிரமணியம் பாடி இருப்பார் என. இசை பாலா என எழுதியுள்ளீர்கள். அதுவும் ஆச்சர்யம்தான்.

நல்லது
வரிகள் எல்லாம் வைரங்களாக இருக்கின்றன. அந்த வரிகளின் உடைமையாளன் யார் வைரமுத்துவா ?
[b] ?
Reply
#15
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->
வரிகள் எல்லாம் வைரங்களாக இருக்கின்றன. அந்த வரிகளின் உடைமையாளன் யார் வைரமுத்துவா ?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வரிகள் வைரம்தான். ஆனால் யார் எழுதியது என்பது தெரியவில்லை.
தெரிந்தவர்கள் தருவார்கள்
Reply
#16
படம் - அரசகட்டளை
பாடியவர் - பி.சுசிலா

பண்பாடும் பறவையே என்ன து}க்கம்
உன் பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்
தண்ணீரும் இரத்தமும் ஒன்றுதானா
நீ தாயற்ற கன்று போல ஆகலாமா..!

ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு
தோன்றாமற் தோன்றும் வீரர் சொந்த நாடு
து}ங்கித் து}ங்கி சோர்ந்து விட்டது இந்த நாடு!

அடிமை வாடும் பாடம் இன்று படிக்கலாமா
நல்ல அமுதமென்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா
தன்னலத்தில் இன்பங்காண நினைக்கலாமா
பெற்ற தாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா..!

பகுத்தறிந்து வாழ்பவனைச் சரித்திரம் பேசும்
அவர் பரம்பரையின் கால்கள் மீது மலர்க்கணை வீசும்
பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும்
அவன் பால் குடித்த தாயைக் கூட பேயெனப் பேசும்!

குடித்த பாலில் வீரம் கலந்து
கொடுத்தாள் உந்தன் அன்னை
குடித்த பின்னூம் குருடாய் இருந்தால்
கோழை என்பாள் உன்னை
உரிமைக் குரலை உயர்த்தி இங்கே
விடுதலை காணத் துடித்துவா
உறங்கியதெல்லாம் போதும் போதும்
உடனே எழுந்து ஓடிவா!
Nadpudan
Chandravathanaa
Reply
#17
வரிகள்- சோதியா
குரல் - ஜேம்ஸ்

முற்றத்து வேம்பருகில் முல்லைக் கொடி பந்தலில்
தனிமை போக்கிய என் தண்ணொளி நிலவே
புலம் தேடிப் போன புலவனைக் காணவோ
நிலம் நீங்கி வந்தனை நீள் விழி நிலவே

நிலவு கழுவிய என் முற்றத்தைப் பிரிந்தேன்
புலவில் ஆடிய என் சுற்றத்தைப் பிரிந்தேன்
நிதமும் ஊர் நினைவில் உள்ளம் எரிந்தேன்
கனவில் கூட எந்தன் கண்கள் சொரிந்தேன்

அருகில் கால் நனைத்த அலையினைத் தொலைத்தேன்
உருகி எனை அழைத்த குயிலினைத் தொலைத்தேன்
போரில் ஊர் உயிர்க்கும் கண்டு மலைத்தேன்
நீரில் வேர் பதிக்கும் கனவு கலைத்தேன்

முற்றத்து வேம்பருகில் முல்லைக் கொடி பந்தலில்
தனிமை போக்கிய என் தண்ணொளி நிலவே
புலம் தேடிப் போன புலவனைக் காணவோ
நிலம் நீங்கி வந்தனை நீள் விழி நிலவே!


ஜேம்ஸ் இன் குரல் மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் அமைந்துள்ளது:
பாடலின் வெற்றிக்கு அவரின் குரலும் காரணம்.
Nadpudan
Chandravathanaa
Reply
#18
Karavai Paranee Wrote:நல்லது
வரிகள் எல்லாம் வைரங்களாக இருக்கின்றன. அந்த வரிகளின் உடைமையாளன் யார் வைரமுத்துவா ?
நீங்கள் நினைத்தது சரி
Reply
#19
பாடல் வரிகள் -
படம்-
பாடியவர்-


காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவறவிட்டால்
கண்ணுறக்கம் ஏது?

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
முடிவில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கமில்ல

நாலு வயதான பின்னே
பள்ளி விளயாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெ ள்ளுத் தமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லயடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி

மாறும் கன்னிமனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும் போது
தூக்கம் என்பதேது .... ?
தான் நினத்த காதலனை
சேர வரும் போது
தந்தையதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது..... ?

மாலையிட்ட தலவன் வந்து
சேலை தொடும் போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது.. ?

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ள பெறும் போது
அன்னையென்று வந்த பின்னும்
கண்னுறக்கம் போகும்

கை நடுங்கி கண் மறைந்து
காலம் வந்து தேடும்
காணாத தூக்க மெல்லாம்
தானாகச் சேரும்
Reply
#20
அது என்ன பெண்ணாக பிறந்தவளிற்குத்தான் இரண்டுமுறை மட்டும் உறக்கம்.ஏன் ஆண்கள் வாழ்க்கை முழுவதும் உறங்குகின்றார்களா ?
கண்ணதாசா நீங்கள் முரண்படுகின்றீர்களே......


பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
முடிவில் ஒரு தூக்கம்

[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)