Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரா சமாதானமா? மக்கள் தீர்ப்பு
#41
இலங்கை இராணுவ அதிகாரிகள் பதினொருபேர் உட்பட பதினாறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கான கருத்தரங்குடன் கூடிய பயிற்சி நடவடிக்கை இன்று ஆரம்பமாகிறது. பெகாசஸ் றீவ் ஹோட்டலில் நடைபெறும் இப்பயிற்சிக் கருத்தரங்கை ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையில் இத்தகைய பயிற்சி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
Reply
#42
இன்று வெளிவந்துள்ள வைகாசி ஆனி விடுதலைப்புலிகள் ஏட்டில் முதன்மையான விடயமாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அனேகமான மீறல் சம்பவங்கள் புலிகளை சீண்டி சண்டைக்கிழுக்கும் உள்நோக்கத்துடன் செய்யப்படுகின்றன. சமாதான சூழலைக் குலைத்து போர்ச்சூழலை உண்டுபண்ண சிங்களப் பேரினவாதிகள் விரும்புகின்றனர்.

ஒரு புறம் போர் நிறுத்த மீறல்களை சனாதிபதி சந்திரிகா அம்மையார் தூண்டியும், தானே முன்னின்று நடாத்தி;யும் வருகின்றார். மறுபுறம், இத்தகைய மீறல் நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வெறும் பார்வையாளனின் மனநிலையில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் உள்ளது. சிங்களத்தின் இந்த அரசியல் யதார்த்தம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை அர்த்தமற்றதொன்றாக மாற்றி வருகின்றது.

இதேவேளை போர் ஓய்வைக் கண்காணித்து சமாதான சூழலை வளர்த்தெடுக்கும் இலக்குடன் பணியாற்ற வந்த வெளிநாட்டுக் கண்காணிப்பாளர் குழுவினரும் படையினரின் போர்நிறுத்த மீறல்களை தடுத்து நிறுத்தும் திராணியற்றிருக்கின்றனர். எல்லாம் நடந்த பின்னர் பத்திரிகையாளர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து செய்தி கூறுவது போல, போர் நிறுத்த கண்காணிப்பாளர்களை, சிங்களப்படைகள் நடாத்துகின்றனர்.

கடலில் சிங்களப் படைகள் அடுத்தடுத்து நடாத்தி வரும் அடாவடித்தனங்கள் புலிகளது பொறுமையை அளவுக்கதிகமாகச் சோதித்து விட்டன. சர்வதேசக் கடல் வழியே பொருட்களை ஏற்றிச் செல்லும் புலிகளின் கப்பல்களை வழிமறித்துத் தாக்கி மூழ்கடித்துவிட்டு அவை ஆயுதங்களுடன் சிறிலங்கா கடற்பரப்புக்குள் நுழைந்தன என்று புலிகள் இயக்கம் மீது பழிசுமத்துகின்றன.

புலிகளின் கடற்கலங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் கண்காணிப்புக்குழுவினரை அழைத்து அவர்கள் கண்முன்னால் சிங்களக்; கடற்படை தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது. ஆயினும் சிங்களக் கடற்படை எதேச்சாதிகாரமாக தொடர்ந்தும் புலிகளின் கப்பல்களைத் தாக்கி வருகின்றது. சர்வதேச கடற்பரப்பில் இரண்டு கப்பல்களை அதன் மாலுமிகளுடனும், பொருட்களுடனும் தாக்கி மூழ்கடித்துள்ளது.

நெடுந்தீவுக் கடலில் கடற்படகொன்றின் அழிவிற்கும் மூன்று கடற்புலி வீரர்களதும் சாவுக்குக் காரணமாக இருந்துள்ளது. அத்துடன் வடக்கு - கிழக்கு கரையோர மக்களின் தொழிலிற்கு தொடர்ந்தும் முட்டுக்கட்டை போட்டு - அவர்களின் சொத்துக்களை அழித்தும் அப்பட்டமான போர்நிறுத்த மீறல்களை செய்து வருகின்றது.

இதுபோல சிங்கள இராணுவமும் தமிழர் தாயகப் பகுதியெங்கும் போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. உடன்பாட்டிற்கு முரணாக ரோந்துகளை, வீதிச் சோதனைகளை மேற்கொண்டும், காவல் அரண்களை, இராணுவ தங்ககங்களை புதிது புதிதாக அமைத்தும் போர்நிறுத்த உடன்படிக்கையை கேலிக்கிடமாக்கி வருகின்றன.

படையினரின் கட்டுபாட்டிலுள்ள புலிகளின் அரசியல் அலுவலகங்களை சுற்றி வளைப்பதும், உள்நுழைந்து சோதனையிட முயல்வதும் அப்பட்டமான போர்நிறுத்த மீறல்களாகும். அதேபோல, படையினரின் போர்நிறுத்த மீறல்களை அந்த அந்த இடங்களிலேயே கண்டித்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் மக்களை, சிங்கள இராணுவம் பயமுறுத்தியும், சில சமயங்களில் தாக்கியும் வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில், திருமலை மாவட்டத்தில் படையினர் செய்த படுகொலைகள் அனைவரும் அறிந்ததே. மட்டக்களப்பில் அரசியல் பணியில் ஈடுபட்;டிருந்த போராளி ஒருவரைக் கைது செய்து சிங்கள நீதிமன்றில் நிறுத்தி தடுத்து வைத்துள்ளனர். சிங்கள வான்படையின் வேவு விமானங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது பறந்து, வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஒப்பந்த மீறல்களைப் புரிந்து வருகின்றன.

இவ்விதம், சிங்கள அரசின் முப்படைகளும், பாரபட்சமின்றி போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு அமைதிப் பேச்சை சீர்குலைத்து வருகின்றன. இதைத் தடுத்து நிறுத்த முடியாமலும் விரும்பாமலும் சிங்கள அரசம் உள்ளது. இந்நிலையில், சமாதான முயற்சி என்பது சிங்கள தரப்பால் கைவிடப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. எனவும் விடுதலைப்புலிகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி புதினம்
Reply
#43
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் லண்டன் வர உள்ளார்.என தெரியவருகிண்றது.
ஆதாரம் கேசரிகூடதகவல் வெளியிட்டுள்ளது
Reply
#44
சமாதானப்பேச்சுவார்த்தைகள் பின்னேக்கி நகரவுள்ளதாக நம்பகமாக தெரியவருகிறது.

பிரித்தானியா வீசாவை இறாஞதந்திரி ஒருவருடைய இறாயதந்திர கடவுச்சீட்டுக்கு வளங்கவில்லை என தெரியவருகிறது.
Reply
#45
[quote=sethu]சமாதானப்பேச்சுவார்த்தைகள் பின்னேக்கி நகரவுள்ளதாக நம்பகமாக தெரியவருகிறது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#46
[quote=GMathivathanan][quote=sethu]சமாதானப்பேச்சுவார்த்தைகள் பின்னேக்கி நகரவுள்ளதாக நம்பகமாக தெரியவருகிறது.
Reply
#47
உம்கொன்ன நீர் அங்கை போனால் அன்னியனிரை கால்நாக்கி வாழலாம் என்ற எண்ணமோ? சனம் தான் அடிக்கபோகுது அது விளங்கேல்லை உமக்கு என்னண்டால் தவிகூ பாருங்கோ இப்ப நடக்கிறது மக்கள் போரட்டம் பாருங்கோ உங்களைமாதிரி வ நக்கிறஆட்களை கண்டால் அந்தக் காலமில்லை கல்லெறிஞ்சு கொல்ல நிக்கவிட்டு சுடுங்கள். சனம் என்றுசொல்லிக் கொண்டு பாசம் வருகுதாக்கும். :oops: :oops: :oops:
. . . . .
Reply
#48
S.Malaravan Wrote:உம்கொன்ன நீர் அங்கை போனால் அன்னியனிரை கால்நாக்கி வாழலாம் என்ற எண்ணமோ? சனம் தான் அடிக்கபோகுது அது விளங்கேல்லை உமக்கு என்னண்டால் தவிகூ பாருங்கோ இப்ப நடக்கிறது மக்கள் போரட்டம் பாருங்கோ உங்களைமாதிரி வ நக்கிறஆட்களை கண்டால் அந்தக் காலமில்லை கல்லெறிஞ்சு கொல்ல நிக்கவிட்டு சுடுங்கள். சனம் என்றுசொல்லிக் கொண்டு பாசம் வருகுதாக்கும்.
ஆயுதமெல்லாத்தையும் ஒப்படைச்சுப்போட்டு.. ஒருக்கா.. நீங்கள்.. போங்கோ.. பார்ப்பம்.. கல்லெறிஞ்சு.. சாக்கொல்லுதுகளோ.. இல்லாட்டில்.. சுட்டுச்.. சாக்காட்டுதுகளோ.. எண்டு.. பார்க்கலாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#49
நோர்வேக்கு புலிகளை பொருளாதார hPதியாகவோ, அரசியல் hPதியாகவோ கட்டுப்படுத்தும் ஆற்றல் எதுவும் இல்லை. இதனால் புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவரும் சக்தி நோர்வேக்கு இல்லை. இவ்வாறு ஜப்பானிய து}துவரக அதிகாரிகள் கருதுவதாக சென்னையிலுள்ள ஈஎன்டிஎல்எப் எண்ற தேசத்துரொக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்படுகையில் ஜப்பானின் பொருளாதார பலம் காரணமாக புலிகளை வழிக்கு கொண்டு வரலாம் என்று ஜப்பான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜப்பானின் அனுசரணையுடன் கிளிநொச்சியில் 200 கட்டில்களைக் கொண்ட பாரிய நவீன வைத்தியசாலை 125 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது

இதேவேளை சென்னையில் தமிழ் அரசியல் கட்சி ஒன்றுடன் ஜப்பானிய து}துவரக அதிகாரிகள் இலங்கைப் பிரச்சினை குறித்த அரசியல் பேச்சுக்களில் ஈடுபட்டது குறித்து புதுடில்லி ஆச்சரியம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனதல் இந்திய அரசின் அடிவருடிகள் தொடர்ந்தும் காட்டிக்கொடுத்துவருவதுடன் அவர்கள்முலமாக சமாதானத்தைசீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிண்றனர் இதன் ஒரு செயற்பாடே டமில் வானொலியின் தோற்றம்.
Reply
#50
எமது தேசம் தனியான ஒரு நாடு என்பதனைக் காவல்துறை நிர்வாகக் கட்டமைப்பு அரசியல் hPதியில் பறைசாற்றியுள்ளது. இவ்வாறு புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் கூறியுள்ளார். மாங்குளத்தில் அண்மையில் உரையாற்றிய அவர் அங்கு மேலும் கூறுகையில், இந்த தீவில் இரண்டு இனங்கள்,இரண்டு தேசங்கள் இரண்டு ஆட்சி பீடங்கள் இருக்கின்றன. இதற்கு புலிகளின் காவல்துறை நல்லதொரு சான்றாகும். தமிழீழம் என்பது வேறுசிறீலங்கா என்பது வேறு இது வெளிப்படையானது. சிறீலங்கா அரசு எமக்கு நீதியான நியாயமான தீர்வினை வழங்கும் என்று நாம் எதிர்பார்த்து இருக்கவில்லை. போராடியே எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நிலைக்கு அரசாங்கம் எம்மைத் தள்ளுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Reply
#51
யாழ்ப்பாண குடாநாட்டின் சுழிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பிரதேச அரசியல் பணிமனை மூடப்பட்டுள்ளது. இங்கு பொறுப்பாளராக இருந்த அன்பரசன் தலமையிலான அரசியற்பிரிவு உறுப்பினர்கள் வன்னிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். புலிகளின் இந்த அலுவலகம் அண்மையில் படையினரின் சுற்றி வளைப்புக்கு இலக்காகி முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது தெரிந்ததே. மேலும் யாழ்ப்பாண குடாநாட்டில் புலிகளின் அரசியற்பிரிவு பணிமனைகள் பலவும் மூடப்பட்டு பாதுகாப்புடன் கூடிய சில இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அரசின் அனுமதியுடன் அரசியல் பணி புரிவதற்காக வன்னியிலிருந்து வந்தவர்கள் புலிகளால் வன்னிக்கு மீள அழைக்கப்படுகின்றனர்
Reply
#52
sethu Wrote:யாழ்ப்பாண குடாநாட்டின் சுழிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பிரதேச அரசியல் பணிமனை மூடப்பட்டுள்ளது. இங்கு பொறுப்பாளராக இருந்த அன்பரசன் தலமையிலான அரசியற்பிரிவு உறுப்பினர்கள் வன்னிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். புலிகளின் இந்த அலுவலகம் அண்மையில் படையினரின் சுற்றி வளைப்புக்கு இலக்காகி முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது தெரிந்ததே. மேலும் யாழ்ப்பாண குடாநாட்டில் புலிகளின் அரசியற்பிரிவு பணிமனைகள் பலவும் மூடப்பட்டு பாதுகாப்புடன் கூடிய சில இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அரசின் அனுமதியுடன் அரசியல் பணி புரிவதற்காக வன்னியிலிருந்து வந்தவர்கள் புலிகளால் வன்னிக்கு மீள அழைக்கப்படுகின்றனர்
14 நாள்.. அவகாசம்..பொதுமக்களுக்கு.. கடைப்பிடித்தாலச்சரி..14 நாள்.. அவகாசம்..பொதுமக்களுக்கு.. கடைப்பிடித்தாலச்சரி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#53
GMathivathanan Wrote:
sethu Wrote:யாழ்ப்பாண குடாநாட்டின் சுழிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பிரதேச அரசியல் பணிமனை மூடப்பட்டுள்ளது. இங்கு பொறுப்பாளராக இருந்த அன்பரசன் தலமையிலான அரசியற்பிரிவு உறுப்பினர்கள் வன்னிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். புலிகளின் இந்த அலுவலகம் அண்மையில் படையினரின் சுற்றி வளைப்புக்கு இலக்காகி முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது தெரிந்ததே. மேலும் யாழ்ப்பாண குடாநாட்டில் புலிகளின் அரசியற்பிரிவு பணிமனைகள் பலவும் மூடப்பட்டு பாதுகாப்புடன் கூடிய சில இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அரசின் அனுமதியுடன் அரசியல் பணி புரிவதற்காக வன்னியிலிருந்து வந்தவர்கள் புலிகளால் வன்னிக்கு மீள அழைக்கப்படுகின்றனர்
14 நாள்.. அவகாசம்..பொதுமக்களுக்கு.. கடைப்பிடித்தாலச்சரி..14 நாள்.. அவகாசம்..பொதுமக்களுக்கு.. கடைப்பிடித்தாலச்சரி..
அதுசரி..இப்ப ஒரு மாதத்திற்குள்.. யப்பான் சுரண்ட வந்திருக்கு.. அதுதான் ஓடியாடித்..திரியுது.. எண்டாங்கள்.. இப்ப கதை.. வேறையாத்தெரியுது.. நல்லது செய்யிறாங்களோ.. தொல்லைதாறாங்களோ.. எனக்கு விளங்கேல்லை.. சொல்லுங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#54
பாதுகாப்பு அமைச்சர் திலக்மாரப்பனவும், கடற்படைத் தளபதி தயா சந்தகிரியும் ஜோர்தான் ஊடாக இஸ்ரேலுக்கு அவசரப் பயணமொன்றை மேற்கொண்டு உள்ளனர். கடற்படையை நவீனமயப்படுத்துவது மற்றும் இலங்கை கடற்படையினருக்கான பயிற்சி வசதிகள் என்பன குறித்து இஸ்ரேலிய அரசுத் தரப்புடன் ஆராயப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Reply
#55
sethu Wrote:பாதுகாப்பு அமைச்சர் திலக்மாரப்பனவும், கடற்படைத் தளபதி தயா சந்தகிரியும் ஜோர்தான் ஊடாக இஸ்ரேலுக்கு அவசரப் பயணமொன்றை மேற்கொண்டு உள்ளனர். கடற்படையை நவீனமயப்படுத்துவது மற்றும் இலங்கை கடற்படையினருக்கான பயிற்சி வசதிகள் என்பன குறித்து இஸ்ரேலிய அரசுத் தரப்புடன் ஆராயப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
போய்வர.. வசதியும்.. செலவு..செய்யப்.. பணமும்.. வரவேற்க.. அரசாங்கமும்.. இருக்கும்போது.. பிரச்சனைக்கு.. இடமேது..
:?: :?: :?:
Reply
#56
உங்களுக்கெல்லோ? அதைத்தான் நான் தொடர்ந்து சொல்லுறன் உங்களுக்கு ம்.....
Reply
#57
sethu Wrote:
GMathivathanan Wrote:
sethu Wrote:பாதுகாப்பு அமைச்சர் திலக்மாரப்பனவும், கடற்படைத் தளபதி தயா சந்தகிரியும் ஜோர்தான் ஊடாக இஸ்ரேலுக்கு அவசரப் பயணமொன்றை மேற்கொண்டு உள்ளனர். கடற்படையை நவீனமயப்படுத்துவது மற்றும் இலங்கை கடற்படையினருக்கான பயிற்சி வசதிகள் என்பன குறித்து இஸ்ரேலிய அரசுத் தரப்புடன் ஆராயப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
போய்வர.. வசதியும்.. செலவு..செய்யப்.. பணமும்.. வரவேற்க.. அரசாங்கமும்.. இருக்கும்போது.. பிரச்சனைக்கு.. இடமேது..
உங்களுக்கெல்லோ? அதைத்தான் நான் தொடர்ந்து சொல்லுறன் உங்களுக்கு ம்.....
அப்ப நீங்கள்.. இவ்வளவுகாலம்.. சொன்னது???
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#58
முளுக்குடிகாறன் ஒஸ்............................ சீனாவுக்கு அயுதம் வாங்கபோட்டாராம்.
Reply
#59
இனியும் என்ன புதிதாக வாங்கிக் குவிக்கப் போகின்றார்கள். ஓடாத சுடாத ஆயுதங்களை விற்பதற்கு அன்னிய நாடுகளுக்கு ஒரு சந்தர்ப்பம். எந்த ஆயுதம் வந்துமேன்ன ஆன்மபலம் வேண்டும். ஆயுதபலம் பின்னால்தான். மறுமுறையும் தாண்டிக்குளத்தில் தமிழரின் வேட்டி சேலைக்குள் மறைந்து ஓடிய காட்சிகள் அரங்கேறும் காலம் வெகு விரைவினில் வரப் போகின்றதா? தலைவரின் மௌனம் விரைவில் பதில் சொல்லும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#60
வடக்கு - கிழக்குக்கான இடைக் கால நிர்வாகக் கட்டமைப்புத் தொடர் பாக அரசு அனுப்பியுள்ள புதிய திட்டவரைபை விடுதலைப் புலிக ளின் தலைமை விரிவாக ஆராய்ந்து வருகின்றது.நோர்வே சமாதானக்குழுவின் விசேட து}தர் ஜோன் வெஸ்பேர்க் நேற்றுமுன்தினம் அரசின் வரைபை புலிகளிடம் கையளித்திருந்தார். அதன் பின்னர் அரசியல்துறைப் பொறுப்பா ளர் சு.ப.தமிழ்ச்செல்வன், அந்தவரைபு குறித்து விடுதலைப் புலி களின் தலைவர் வே.பிரபாகரனுடன் ஆராய்ந்துள்ளார்.இந்த வரைபு குறித்து லண்டனில் தங்கியுள்ள மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்துடனும் அவர் தொடர்பு கொண்டு பரிசீலனை செய்து வருவதாக அரசியல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த வரைபு தொடர்பான புலிகளின் பிரதிபலிப்பு வெளியாக சில தினங்கள் எடுக்கும் என்று தெரிய வந்தது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)