Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
விடுதலைப்புலிகளின் முகாம் மீதான தாக்குதல்களின் உள் நோக்கம் என்ன?
<b>புலிகளின் பகுதியில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க கருணா குழுவினர் திட்டம்
கொழும்புக்கு தப்பி வந்த கருணா குழு ஆயுதங்களை விற்க முயற்சி</b>
விடுதலைப்புலிகளுக்கு எதிராக, அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நீண்ட தூரம் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் நடவடிக்கை ஆரம்பமாகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று, தற்போதும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் புலிகளுக்கு எதிராக அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் நுழைந்து தாக்குதல்கள் நடத்தும் நடவடி க்கைகள் ஆரம்பமாகி விட்டதா என்ற ஐயத்தை வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற சம்பவங்கள் எழுப்பியுள்ளன.
வெள்ளை வானொன்றில் புலிகளின் பிரதேசத்திற்குள் நுழைந்த கோர்;டியொன்றே இந்தத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. கருணா குழுவே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் படையினரின் ஆதரவுடனேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும் புலிகள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆனாலும், இந்தத் தாக்குதலுக்கு தாங்கள் ஆதரவு வழங்கியதாகக் கூ றப்படுவதை படையினர் மறுத்தாலும்; தாக்குதல் நடத்த வாகனத்தில் வந்தவர்கள் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து நள்ளிரவு நேரம் இரானுவ சோதனைச் சாவடிய10டாக வந்தமை, இவ்விடயத்தில் படையினரின் மறுப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்பதை தெளிவுபடுத்துகின்றன.
கிழக்கில் கருணாவுக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளையடுத்து அங்கு இரு தரப்பும் மிகுந்த உர்hர் நிலையிலுள்ளன. கருணாவின் நடவடி க்கைகளுக்கும் அதன் பின்னர் அவர் தப்பிச் சென்றதற்கும் படையினரே உதவி வழங்கியதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்த நிலையில், வவுணதீவு-ஆயித்தியமலைச் சம்பவங்கள் இந்தச் சந்தேகங்களை உறுதிப்படுத்தியுள்ளன.
புலிகளுக்கு எதிரான புரட்சியில் கருணா ஈடுபட்ட போது படையினரின் முழு ஆசீர்வாதமும் இருந்தது.புரட்சி தோல்வியடைந்து அவர் தப்பிச்சென்ற போதும் படையினரின் உதவி கிடைத்தது. அவருடன் கொழும்புக்கு தப்பி வந்து, பின்னர் அவரால் கைவிடப்பட்ட நிலையில் புலிகளிடம் திரும்பிய கருணாவின், சகாக்கள் இது பற்றி பல தகவல்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் தான் வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவிய ஆயுத பாணிகள் புலிகளின் முகாமொன்றின் மீதும் முன்னரங்க காவல் நிலைகள் மீதும் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளன.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி புலிகளின் முக்கியஸ்தர்களைத் தாக்குவது இந்தக் கோர்;டியின் நோக்கமல்ல. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாகனமொன்றில் வெற்றிகரமாக ஊடுருவிச் சென்று அவர்களது முகாம்களில் எவரையாவது சுட்டுக் கொல்வதும் அவர்களது சொத்துக்களை அழிப்பதுமே இந்தக் கோர்;டியின் நோக்கமாகும்.
கருணா மட்டக்களப்பிலிருந்து துரத்தப்பட்டாலும் அவருக்குரியவர்கள் அந்தப் பிரதேசத்தின் எங்காவது ஒரு மூலையிலிருந்து கொண்டு புலிகளுக்கு நெருக்கடி களைக் கொடுப்பார்கள் எனக் காட்ட முயல்வதே இந்தத் தாக்குதலின் நோக்கமாகும்.
கிழக்கில் கருணா கிளப்பிய பிரதேசவாதத்திற்கு இதன் மூலம் சிறுகச் சிறுக உயிரூட்டுவதும் கிழக்கில் புலிகளை நிம்மதியாக இருக்க விடமாட்டோமெனக் காட்டுவதும் இந்தக் கோர்;டியின் பின்னணியிலிருப்பவர்களது எண்ணமாயிருக்கலாம்.
கருணாவின் புரட்சி புலிகளை பெரும் உலுக்கு உலுக்கி, கிழக்கை வடக்கிலிருந்து பிரித்து விட சிங்கள சக்திகள் திட்டமிட்டிருந்த போதும், புலிகளின் திட்டமிட்ட அதிரடி நடவடி க்கை எல்லாவற்றையுமே புஸ்வாணமாக்கி விட்டது. இதனை பலரால் ஜீரணிக்க முடியவில்லை. கருணா விவகாரத்துடன் விடுதலைப்புலிகள் அமைப்பே உடைந்து விடுமென மனப்பால் குடி த்தவர்களெல்லோரும் வாயடைத்துப் போகும் விதத்தில் புலிகளின் நடவடிக்கை அமைந்தது.
புலிகள் கூ றியது போன்று கருணா தனி மனிதனாகவே தப்பிச் சென்றார். அவர் மீது புலிகள் சுமத்திய குற்றச்சாட்டுக்களையெல்லாம் நிரூபிப்பது போன்று அவரது செயற்பாடுகளும் அமைந்தன. ஆனாலும், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது ஆபத்தை ஏற்படுத்தலாமென்பதால் தற்போதும் தென் பகுதியிலேயே கருணா மறைந்து வாழ்கிறார்.
ஆனாலும், தன்னிடம் எஞ்சியவர்களைப் பயன்படுத்தி கிழக்கில் ஆங்காங்கே இவ்வாறான தாக்குதல்களை நடத்தி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஸ்திரமற்றதொரு நிலையை உருவாக்க கருணா முயலக் கூடுமெனவும் கருதப்படுகிறது.
தன்னுடன் தப்பி வந்த முக்கிய பொறுப்பாளர்களையெல்லாம் கைவிட்ட பின்னர் கருணா இனிமேல் இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்க மாட்டாரென்றே பலரும் கருதினர். எல்லாமே முடி ந்த பின்னர் இந்தப் பொறுப்பாளர்களை தன்னுடன் வைத்திருப்பது தனக்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தலாமெனக் கருதியே கருணா இவர்களைக் கைவிட்டிருந்தார்.
தன்னுடன் புரட்சியில் ஈடுபட்டு பின்னர் தன்னால் கைவிடப்பட்ட இந்தப் பொறுப்பாளர்கள் இனியொரு போதும் புலிகளுடன் இணையும் சாத்தியமில்லை என்றும், ஒன்றில் அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டும், அல்லது இரானுவத்துடன் இணைய வேண்டும் என்றே கருணா கருதியிருந்தார்.
ஆனாலும், அவர்கள் அனைவரையும் புலிகள் தங்களுடன் இணைத்துக் கொண்டனர். இது கிழக்கு மக்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும், விசனத்தையும் ஏற்படுத்திய போதிலும் இவ்விடயத்தில் புலிகள் மிகுந்த இராஜதந்திரத்துடன் நடந்து கொண்டார்கள்.
எதிரிகளின் எண்ணிக்கையை கூட்டி, நெருக்கடிகள் ஏற்படுவதை புலிகள் விரும்பவில்லை என்பது இவர்களை இணைத்துக் கொண்டதன் மூலம் தெரிய வந்தது. ஆனாலும், இதனை ஜீரணிக்க முடியாத சக்திகள், தற்போது கருணாவுடன் எஞ்சி படை முகாம்களில் சரணடைந்தவர்களைப் பயன்படுத்தி கிழக்கில் இவ்வாறான சிறுசிறு அசம்பாவிதங்களை ஏற்படுத்தி அதனைப் பெரிதுபடுத்துவதன் மூ லம் பிரசார ரீதியிலாவது புலிகளுக்கு நெருக்குதல்களை ஏற்படுத்தலாமென எண்ணிக் கொண்டிருக்கின்றன.
இதனால், தற்போது கருணாவிற்கு புகலிடமளிப்பவர்கள் கருணாவையும் அவருடனிருப்பவர்களையும் அல்லது அவருடனிருந்து தற்போது புலிகளிடமிருந்து விலகிச் சென்றவர்களையும் பயன்படுத்தி கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் குழப்ப நிலைமைகளைத் தோற்றுவிக்க முயல்வதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கருணா குழுவினர் தப்பிச் செல்லும் போது அவர்கள் புலிகளுக்கு பல்வேறு நெருக்கடி களையும் ஏற்படுத்தியிருந்தனர். கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஸ்திர நிலைமையை தளம்பச் செய்ததுடன் புலிகளின் உட்கட்டமைப்பை பெரிதும் சீர்குலைத்திருந்தனர். கனரக ஆயுதங்கள், ஆயுதக் களஞ்சியங்கள், வெடி பொருட் களஞ்சியங்கள் எனப் போர்த் தளபாடங்கள் பெருமளவை அழித்ததுடன் படையணிகளையும் கலைத்து போராளிகளை கருணா வீடுகளுக்கு திருப்பியனுப்பினார்.
இதனால் கிழக்கில் சகல வளங்களையும் புதிதாக உருவாக்க வேண்டி ய கட்டாய சூழ்நிலை புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. போதிய ஆளணிகளை (போராளிகளை) திரட்டுவது, அவர்களுக்குத் துரித பயிற்சியளிப்பது, அதுவரை ஏனைய மாவட்டப் போராளிகளை மட்டக்களப்பில் நிறுத்துவது, மீண்டும் கனரக ஆயுதங்கள் உட்பட அனைத்து வகை ஆயுதங்களையும் கிழக்கிற்கு நகர்த்துவது, முன்னரங்க காவல் நிலைகளை மீளப் புனரமைத்து கண்காணிப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது, கருணாவின் நடவடி க்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களை உற்சாகப்படுத்தி, மீண்டும் போராட்டத்திற்கு அவர்களது முழு அளவிலான பங்களிப்பை பெறுவதென, குறைந்தது அடுத்த ஆறு மாத காலங்களுக்கு புலிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
இந்த நிலையில் தான் அங்கு ஸ்திர நிலையொன்று உருவாகுவதற்கு முன் குழப்பங்களை ஏற்படுத்த பல்வேறு தரப்பும் முயன்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் இரு பகுதிகளில் 'வாகனங்களில்" திடPரென ஊடுருவி அதிரடி த் தாக்குதல்களை நடத்தி புலிகளுக்கும் மக்களுக்கும் உளவியல் ரீதியில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் திட்டங்களை சில சக்திகள் கருணா குழுவுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகப் புலிகள் நம்புகின்றனர்.
ஜனாதிபதி சந்திரிகாவின் கடந்த ஆட்சிக் காலத்தில் 'நீண்ட தூரம் ஊடுருவும் படையணிகள்" வன்னிக்குள்ளும் மட்டக்களப்பிற்குள்ளும் ஊடுருவி புலிகளின் முக்கிய தலைவர்களையும் தளபதிகளையும் இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வந்தன. ஜனாதிபதியின் தற்போதைய ஆட்சியில் இந்தத் தாக்குதல் வடிவம் மாறியுள்ளது.
வாகனத்தில் அதிரடி யாக நுழைந்து எழுந்தமானமாகத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் செல்வதன் மூலம் வாகனங்களில் பல கிலோ மீற்றர் தூரம் நுழைந்து தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் செல்பவர்களைக் கூடத் தடுத்து நிறுத்தவோ அல்லதும் பதிலடி கொடுக்கவோ அல்லது தப்பிச் செல்லும் போது கூடத் தடுக்கவோ முடியாத நிலையில் புலிகள் அங்கு பலவீனமாக இருப்பதாய் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்க இந்தச் சக்திகள் முயல்கின்றன.
இதை விட கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் தப்பி வந்து பெருமளவில் ஆயுத விற்பனைகளில் ஈடுபடுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த தாங்கள் கொழும்பு மாநகரில் பாரிய தேடுதல்களை ஆரம்பிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை தோன்றியிருப்பதாகவும் காட்டுவதன் மூ லம், தொடர்ந்தும் கருணா விவகாரத்தைப் பெரிதுபடுத்தி புலிகளின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
தற்போது கருணா கொழும்பில் அல்லது தென் பகுதியில் படையினரின் பாதுகாப்புடனிருப்பது தெரிய வந்துள்ளது. இவரைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டும் வவுணதீவு-ஆயித்தியமலைச் சம்பவங்கள் போன்ற தாக்குதல்களை மேற்கொண்டவாறு இந்த அரசு புலிகளுடன் மீண்டும் சமாதானப் பேச்சுகளை ஆரம்பிப்பதென்பது சாத்தியமற்றதொன்றாகும்.
இந்த ஆட்சி எத்தனை நாட்களுக்குத் தொடருமென்ற கேள்விகள் தினமும் எழுப்பப்பட்டு வருகையில், வடக்கு-கிழக்கில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறுவது எதிர்காலப் பேச்சுகளைக் கூடத் திட்டமிட்டுக் குழப்பும் செயலாகவே கருதப்படுகிறது.
வவுணதீவு-ஆயித்தியமலை தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து படையினரின் சோதனை நிலையமூ டாக, அதுவும் எவ்வித போக்குவரத்தும் நடைபெறாத நள்ளிரவு நேரம் சென்று திரும்பியுள்ளனர்.
இவ்வாறு, வவுணதீவு-ஆயித்தியமலைத் தாக்குதல் சம்பவங்கள் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ள அதேநேரம், இவ்வாறான தாக்குதல்களை முறியடிக்கவும் தாக்குதல் கோர்;டி களின் பின்னணிகளை அம்பலப்படுத்துவதிலும் புலிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் இந்தச் சக்திகளைத் தேடுவதில் தீவிரம் காட்டியுள்ளது. பின்னணியில் இருப்பவர்கள் கண்டறியப்படாவிடி ல் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடருமென்பதில் ஐயமில்லை.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Police raid Tamil writer's home
<b>By Frances Harrison
BBC correspondent in Colombo </b>
<b>Police in Sri Lanka have raided the house of a prominent Tamil journalist, Dhamaratnam Sivaram, who edits the pro-rebel website TamilNet. </b>
A statement from the human rights group, Reporters Without Borders, said it now feared for his safety.
Mr Sivaram said at least 15 policemen searched his house on Monday night while he was not at home.
The raid came as Norwegian peace envoys are in Colombo trying to restart peace talks with the Tamil Tiger rebels.
This action against a well-known Tamil journalist does not send a positive signal as the Norwegian diplomats, led by Erik Solheim, try to get the government and the rebels back to the negotiating table.
<span style='color:#ff0009'><b>The raid... is an act of crude intimidation aimed at stepping up pressure on Mr Sivaram's family
R Thurairatnam
Sri Lanka Tamil Media Alliance</b>
Mr Sivaram said the police told his family that they were looking for weapons, possession of which would be an unbailable offence.
But Mr Sivaram, who was in eastern Sri Lanka at the time, said the police failed to find any weapons in his house.
<b>Intimidated </b>
A statement from Reporters Without Borders said the family was only shown an identification card by a police officer and they felt intimidated by the raid.
However, the police chief in Sri Lanka told the BBC that his men were acting on information and did have a warrant from a magistrate to conduct the search.
The Sri Lankan Tamil Media Alliance criticised the action against Mr Sivaram, calling it an act of crude intimidation, adding that the timing of the incident - on World Press Freedom Day - spoke volumes about the state of media freedom in Sri Lanka.
Reporters Without Borders called on the Sri Lankan government to provide a public explanation for the treatment of Mr Sivaram as well as "genuine guarantees" for his safety.
In recent weeks, the government has been increasingly concerned about the influx of illegal weapons into the capital from supporters of the breakaway rebel commander Colonel Karuna, in the east of the island.</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Chandrika faces major split in new alliance
<b>By Sinha Ratnatunga
Correspondent</b>
Colombo: President Chandrika Kumaratunga yesterday faced the tough choice of ceding to rebel Tamil Tiger (LTTE) demands to resume peace talks and thus face a major split in her newly formed Freedom Alliance (UPFA).
What was easily her biggest political challenge, since her coalition won the April 2 parliamentary elections, was when Norwegian peace brokers returned after talks with rebel leaders in the Wanni jungles north east of Sri Lanka to deliver her their major demands to return for talks.
Norwegian special envoy Eric Solheim conveyed to Foreign Minister Lakshman Kadirgamar the latest rebel demands to re-start negotiations with the Colombo government.
Main among them is the proposal for an interim self-governing authority (ISGA) in the island's north and east under their control being the sole basis for any future negotiations. The rebels have rejected a Sri Lanka government request to hold talks within the country and insisted that Norway should continue to play the role of peace facilitator.
However, an official Presidential Secretariat statement issued this afternoon gave a completely different picture when it said that the rebels had attached no pre-conditions for peace talks to resume and that the LTTE is "fully prepared to talk to the government at a time convenient to the government".
The statement also said that the Norwegian brokers "remained optimistic " that talks could re-commence early, though a formal statement issued by the Royal Norwegian embassy in Colombo the day before cautioned of any early resumption of negotiations.
The contradictions have taken diplomats and political observers by surprise here. The rebel demands, among others, are at variance with the position taken up by the Peoples Liberation Front (JVP), the constituent partner of the President Kumaratunga led Freedom Alliance. The JVP has held the ISGA proposal as a stepping-stone towards a separate state.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
முரணிகளின் கூட்டிலிருந்து சமாதானம் எப்படி வரும்...?
தேர்தல் முடிந்து ரணிலை சந்திரிகா வீழ்த்தி விட்டதால், இனி சந்திரிகாவின் பிரதான ஆடுகளத்தில் குறுக்கே நிற்பது சமாதானம்.சந்திரிகா ரணிலை வீழ்த்துவதற்கு பயன்படுத்திய ஆடுகள தந்திரங்களை சமாதானத்தின் மீது பிரயோகிக்கமுடியாது என்றொரு நிலையே இப்போது காணப்படுகின்றது.இந்த நிலையில் சந்திரிகா சமாதானத்தை அடியோடு வீழ்ந்த வேண்டும் அல்லது சமாதானத்தின் ஆட்டத்தைத் தொடர வேண்டும்.
சந்திரிகாவின் முன் இந்த இரண்டு தெரிவுகள்தான் உண்டு.
ஆனால் சந்திரிகாவால் சமாதான ஆட்டத்தை அடியோடு வீழ்ந்தமுடியாது என்ற நிலையே காணப்படுவதால் அவரால் சமாதானத்தின் ஆட்டத்தை தொடர வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
இப்போது இலங்கையின் பொருளாதாரயதார்த்தத்தில் சந்திரிகாவின் நிறைவேற்று அதிகாரமோ, நாடாளுமன்ற பலமோ சந்திரிகா நினைப்பதை நிறை வேற்றப்போதுமானதாக இல்லை.
இதனால் சந்திரிகா நினைப்பதையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்போகும் மசோதாக்களையும் செயற்பட வைக்கும். செயன்திறன் என்பது இலங்கைக்கு வெளியில் தான் இருக்கிறது.
இது ஜம்பது வருடங்களுக்கு மேல் அரச இயந்திரத்தை இயங்கி வந்தவர்கள் என்ற வகையில் ஜக்கிய தேசிய கட்சிக்கும் தெரியும். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தெரியும். ஆனால் அரச இயந்திரத்தை நேரடியாக இயக்கிய அனுபவமற்றவர்கள் என்ற வகையில் சந்திரிகாவோடு கூட்டுச்சேர்ந்திருக்கும்
ஜே.வி.பி இதனை குறைத்து மதிப்பிட முயலலாம்.
இந்த பின்னணியில் அரசை இயக்கும் செயற்திறன் என்பது இலங்கைக்கு வெளியிலிருந்து இலங்கைக்குள் உதவி வழங்குவோர்களால் பாச்சப்படும் நிதியில்தான் தங்கியிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டே சந்திரிகாவாக இருந்தாலும் சரிதான், ஜே.வி.பியாக இருந்தாலும் சரிதான் தீர்மானிக்க வேண்டிய கட்டாய நிர்ப்பந்தம் உண்டு.
இந்த வகையில் சந்திரிகாவுக்கு சமாதான ஆட்டத்தை தொடரவேண்டிய கட்டாய நிர்ப்பந்தமும் உண்டு.
இந்த வகையில் சந்திரிகாவுக்கு முன் இரண்டு கட்டாய நிர்ப்பந்தங்கள் உண்டு. இந்த இரண்டு நிர்ப்பந்தங்களும் ஒன்றுக்கொன்று இணைந்த தொடர்பைக் கொண்ட செயற்பாடுகளாகவே காணப்படுகிறது.
அதாவது சமாதான ஆட்டம் தொடரப்பட்டால் மாத்திரமே இலங்கைக்குள் நிதிபாச்சலுக்கான வாய்ப்பு உண்டு. மாறாக சமாதானம் வீழ்த்தப்படுமானால் நிதிப்பாய்ச்சல் வற்றிவிடும்.
இப்படி ஒரு நிலையை சந்திரிகா ஏற்படுத்துவாரானால் அவரால் ஒரு கட்டத்துக்குமேல் அசையமுடியாது. ஜே.வி.பி.யாலும் அசையமுடியாது.
ஆனால் இந்த யதார்த்தத்தை இதுவரை ஜே.வி.பி.யின் சார்பில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியத சந்திரிகாவின் அரச இயந்திரம் அசைய வேண்டுமானால் இலங்கைக்குள் நிதிபாச்சப்படவேண்டும். நிதிபாச்சப்பட வேண்டுமானால் சமாதானம் தொடரப்படவேண்டும். சமாதானம் தொடரப்படவேண்டுமானால் புலிகளோடு மட்டுமே பேசியாக வேண்டும். புலிகளோடு
பேசவேண்டுமானால் புலிகள் முன்வைத்திருக்கும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான திட்டவரைபிலிருந்தே பேசவேண்டும்.ஆனால் சந்திரிகா ஏற்படுத்தியிருக்கும் கூட்டுக்காரர்கள் முற்றிலும் இதற்கு முரணான முரணிகளாகவே உள்ளனர்.
அவ்வாறாயின் சமாதானத்தின் கதி என்னவாவது?
இதிலும் மேற்குறிப்பிட்டது போல ஒரு தொடர் சங்கிலியாக இருக்கும் இலங்கையின் எதிர்கால அசைவியக்கத்தின் காரணிகளில் புலிகளோடு மட்டுமே பேச வேண்டும் என்பதையும், புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான திட்டவரைபின் அடிப்படையிலேயே பேசவேண்டும் என்பதை சந்திரிகாவோ,
சந்திரிகாவின் பின்புலத்தில் இருக்கக்கூடிய எந்த சக்திகளினாலும் புரந்தள்ள முடியாத ஒரு நிலைமையை புலிகள் இயக்கம் ஏற்படுத்தி வைத்திருக்கின்றது.அதாவது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஜக்கியதேசிய முன்னணி அரசோடு புலிகள் இயக்கம் சமாதான பேச்சுக்களை தொடர்ந்தபோது இருந்ததுபோன்று இப்போது புலிகள் இயக்கம் இல்லை இப்போது இராணுவ ரீதியாகவும் அதேநேரம் சனநாயக ரீதியாகவும் முன்னிலும் பார்க்க அதிகமாகவே தன்னை நிரூபித்து நிற்கிறது.
அந்த வகையில் புலிகள் இயக்கம் பேச்சு மேசையிலும் சரி, சமாதான முன்நகரவு முயற்சியிலாயினும் சரி அதிக வலுவுடன் கூடிய சக்தியாகவே களத்தில் நிற்கிறது.
ஒட்டு மொத்தத்தில் புலிகள் இயக்கம் முன்னரிலும் பார்க்க பன்மடங்கு வீரியம் மிக்க மக்களின் இயங்கு சக்தியாக தன்தை நிரூபித்து அடுத்த கட்ட நகர்வை சந்திக்க தன்னை தயார் படுத்தவிட்டது.
இதன் ஒரு அங்கமே மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் வயது குறைந்த போராளிகளை யுனிசெப் ஊடாக பெற்றோர்களிடம் ஒப்படைத்தமையும்,
கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் சந்திரசேகரன், மனோகணேசன் ஆகியோரை தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் சந்தித்து பேசியுள்ளமையும் ஆகும்.
அந்த வகையில் அடுத்துவரும் எந்த நகர்வையும் சந்திப்பதற்கு ஏதுவாக புலிகள் இயக்கம் தனது நடவடிக்கைகளை செயல்களில் காட்டத் தொடங்கிவிட்டது.
இதேபோன்று இலங்கையின் வரலாற்றில் 1977இல் நடைபெற்ற தேர்தலையடுத்து அதிக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தது போன்று தற்போது தெளிவான ஒரு ஆணையோடு அதிக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை புலிகள் இயக்கம் நாடாளுமன்றம் அனுப்பி வைத்திருக்கிறது. இந்த வகையில் புலிகளின் சமாதானத்தின் மீதான பற்றைவெளிப்படுத்தி சிங்கள தேசத்திற்கு தமிழ் தலைமை வழங்கும் ஒரு வரலாற்று
சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
ஆனால் இதனை சிங்களதேசம் புரிந்து கொண்டு சமாதானத்தின் பாதையில் தங்களை இணைக்கப்போகின்றார்களா என்பதில் தான் இலங்கையில் வாழும் மக்களின் எதிர்காலத்திற்கு நல்ல சகுனங்களை ஏற்படுத்த முடியும்.
ஆனால் சிங்;கள தேசத்தில் சிங்கள மக்கள் தமது பொருளாதார நலன்கள்கூட சமாதானத்தின் அசைவிலேயே தங்கியுள்ளது என்பதை சரியாக எடைபோட தவறியதன், அல்லது நிராகரித்ததன் பலனை அனுபவிக்கக கூடிய வகையிலேயே தென்னிலங்கை சந்திரிகா ஜே.வி.பி கூட்டும், நாடாளுமன்ற குழப்பமும் காட்சி தருகின்றது.
இதனால் சந்திரிகா தன்னையும் தனது கட்சியையும் ஜே.வி.பியிடம் இருந்து பாதுகாக்க போராடுவாரா? சிங்கள மக்களின் பொருளாதாரi நலனிற்காக போராடுவாரா? அமைதியான இலங்கைத்தீவை உருவாக்க போராடுவாரா?
இதில் சந்திரிகா தன்னையும், தனது கட்சியையும் பாதுகாக்கவே அதிகம் போராடுவர் என்ற நிலையே அதிகம காணப்படுகின்றது.
சிறி.இந்திரக்குமார் ஈழநாதம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பாராளுமன்றம் வந்ததால் பஸ்ஸில் கூýட ஆசனமில்லை
பௌத்த பிக்குமார் தேர்தலில் போட்டிýயிட்டதை சில பௌத்த பீடங்கள் கண்டனம் செய்திருந்தன என்ற போதிலும் அவர்களைத் தேர்தல் களத்தில் இருந்து வெளியேற்ற எதையும் செய்ய முடிýயவில்லை. சிங்கள பொதுமக்கள் பிக்குமாரின் தேர்தல் களப் பிரவேசத்தை எதிர்க்கவில்லை. வாக்களித்து 9 பேரை பாராளுமன்றத்திற்குள்ளும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
பாராளுமன்றம் கடந்த ஏப்ரல் 22 இல் கூýடிý சபாநாயகரைத் தெரிவு செய்த போது, லொக்கு பண்டாரவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியுடனும் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்புடனும் சேர்ந்து ஜாதிக ஹெல உறுமயவின் இரு பிக்கு எம்.பி.மார் வாக்களித்ததையடுத்து, புலிகளின் பதிலுரிமையாளர்களாக சபைக்குள் வந்திருப்பவர்களுடன் சேர்ந்து விட்டதாக இந்தப் பிக்குமாருக்கு எதிராக ஜே.வி.பி.யினரும் அரசாங்க ஊடகங்களும் தாறுமாறான பிரசாரம்.
கடந்த மே தினத்தன்று கொழும்பில் ஜே.வி.பி.யினர் நடத்திய ஊர்வலத்தில் ஒரு ஊர்தியில் விழுந்து கிடக்கும் யானை மீது புலி ஏறியிருந்து கொண்டு சங்கு ஊதுகிறது. விளங்குகிறது தானே உங்களுக்கு விசயம்.
போதாதகுறைக்கு பிக்கு எம்.பி.மாரின் விகாரைகள் மீதும் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். இப்படிýயெல்லாம் அவமானப்படுத்தப்படுவோமென்று பிக்கு எம்.பி.மார் உண்மையில் நினைத்திருக்கமாட்டார்கள்.
நேற்று எனக்கு திக்குவெல்லையில் இருந்து நண்பர் எம்.ஏ.சி.முஹம்மத் ஹாஜியார் ஒரு கடிýதம் எழுதியிருந்தார். பஸ்களில் மதகுருமாருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள முன்வரிசை ஆசனங்களில் இப்போது தென்பகுதியில் பாமரமக்கள் துணிச்சலுடன் அமருகிறார்களாம். பிக்குமார் வந்து பஸ்ஸில் ஏறினாலும் அந்த ஆசனங்களை விட்டு எழுந்து இடம் கொடுக்கிறார்கள் இல்லையாம். முன்னரெல்லாம் பௌத்த பிக்குமாருக்கு அந்த ஆசனங்களைக் கொடுக்காமல் அமர்ந்திருக்கும் ஆட்களை ஒரு முறைப்பாகப் பார்த்து ஏசி எழுப்பி விடுவது தான் சிங்களப் பயணிகளின் வழமை. இப்போது அவர்களே ஆசனங்களைக் கொடுக்கிறார்கள் இல்லையாம்.
கடந்த வாரத்தில் இருந்து தான் இந்தக் காட்சிகளைக் காணக்கூýடிýயதாக இருக்கிறதாம். கடந்த மாதம் 26 ஆம் திகதி அம்பலாங்கொடையில் இருந்து அம்பாறை சென்ற தனியார் கடுகதி பஸ்ஸொன்று மாத்தறை தபாலகத்துக்கு முன்பாக வந்து நின்றது. கூýட்டத்துடன் கூýட்டமாக சனங்களுடன் இடிýபட்டுக் கொண்டு ஒரு பௌத்த பிக்குவும் ஏறினார் அந்த பஸ்ஸில்.
முன் ஆசனத்தில் இரு பெண்களும் ஒரு பையனும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகே அந்தப் பௌத்த பிக்கு போய் நின்று கொண்டார். பெண்களும் பையனும் எழும்பி அவருக்கு இடம் கொடுப்பதாக இல்லை. பஸ் நடத்துனர் வந்து பிக்குவுக்கு ஆசனத்தைக் கொடுக்குமாறு கேட்டார். அந்த மூýவரும் முடிýயாது என்று கூýறியதுடன் புலிகளைக் கட்டிýயணைப்போருக்கு ஆசனங்களைக் கொடுப்பதா என்று கேள்வியும் கேட்டனர் அந்தப் பெண்கள்.
பஸ் தொடர்ந்து ஓடிýயது. திக்குவல்லையில் ஒரு பெண்மணி இறங்கிக் கொண்டதும் 'அணே தெய்யனே" என்று கூýறிக் கொண்டு முன் ஆசனத்தில் அமர்ந்தார் அந்தப் பிக்கு. அதுவரைக்கும் அவர் பாமரப் பயணிகளுடன் நின்று கொண்டுதான் பயணம் செய்தாராம். இதை எல்லாம் எழுதியதால் கடிýதத்தில் முஹம்மத் ஹாஜியார் என்னிடம் சுகத்தைக் கூýட விசாரித்து ஒருவரில்லை.
எப்படிý இருக்கிறது நிலைமை பார்த்தீர்களா?
பாராளுமன்ற ஆசனத்தில் கண்வைத்து கடைசியில் பஸ்ஸில் இருந்த ஆசனத்தையும் பறிகொடுக்கும் நிலை வந்துவிட்டதோவென்று நினைக்கத் தோன்றுகிறது.
பட்டுவேட்டிýக்கு ஆசைப்பட்டு கட்டிýயிருந்த கோவணத்தையும் களவு கொடுத்த கதைதானோ?
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Norwegian peace negotiator makes unexpected visit to meet Sri Lanka 's Tamil Tiger rebels
Associated Press, Thu May 13, 2004 01:48 EDT . SHIMALI SENANAYAKE - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) A senior Norwegian peace negotiator flew Thursday to northern Sri Lanka - for unscheduled talks with leaders of the Tamil Tiger rebels in the latest attempt to salvage the country's fragile peace process, officials said. Norway has played a pivotal role in Sri Lanka - 's peace efforts and brokered a cease-fire between the government and the Tigers two years ago that halted their 19-year civil war. But the Tigers walked out of subsequent peace talks, demanding greater autonomy in the country's north and east. Nearly 65,000 people were killed before the truce.
Meanwhile, senior Japanese envoy Yasushi Akashi is scheduled to arrive in Sri Lanka - on Saturday for five days of talks with government and rebel officials on the peace process, the Japanese Embassy said.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Tamil rebels say they have reached agreement with government to restart stalled peace talks
Associated Press, Thu May 13, 2004 06:08 EDT . SHIMALI SENANAYAKE - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Tamil rebels said Thursday they have reached an agreement with the government to restart peace talks that have been stalled for a year. ``The LTT (Tamil Tigers) and the government of Sri Lanka - would reach a decision in a day or two on the time and place for restarting the peace talks,'' top rebel negotiator Anton Balasingham was quoted as saying by the pro-rebel TamilNet Web site.
``Norway would make an announcement about the consensus reached by the two parties in one or two days,'' he added.
A top rebel official contacted by The Associated Press, speaking on condition of anonymity, confirmed Balasingham's comments.
Senior government officials declined to confirm whether a deal had been struck. They said President Chandrika Kumaratunga would issue a statement Friday.
On Wednesday, government leaders said they expect to begin preliminary talks with the rebels by August. Government media minister Reginold Cooray said the talks would be aimed at making arrangement for peace negotiations, rather than discussions on the peace process.
Balasingham said Kumaratunga was showing keen interest to resume negotiations.
``The preliminary efforts and arrangements to restart the negotiations are very satisfactory,'' Balasingham was quoted as saying.
He added that talks would not take place this month.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Secretary of State Powell was in Sri Lanka as a young Army Officer
Bandula Jayasekara in Colombo, WT 1.05 P.M Thursday 13 May. By Bandula Jayasekara Washington DC - United States Secretary of State, General Collin Powell who will met with Sri Lankan Foreign Minister, Lakshman Kadragamar yesterday is no stranger to Sri Lanka. He visited the island in 1983, not as a General or a diplomat but as a young Lt. Colonel. Powell visited Sri Lanka along with US Secretary of Defence, Casper Weinberger in 1983 when. Weinberger called on President J.R.Jayawardane at the Presidents House in Colombo. Since then General Powell had not forgotten about the island of Sri Lanka and the large banyan tree at the Presidential garden. On several occasions the General had mentioned about the majestic banyan tree first to Foreign Minister Lakshman Kadiragamar when they met in 2001, May at the State Department. Subsequently the minister had gifted Powell with a photograph of the Banyan Tree. It also said that Secretary Powells deputy, Richard Armitage too had visited Sri Lanka with Weinberger.
Foreign Minister Kadiragamar who has an excellent rapport with the US Secretary of State described the US Secretary of State as a warm hearted and an understanding human being. They met at the State Department yesterday and had a warm and cordial discussion on US/Sri Lanka relations.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
'Breakthrough' in Sri Lanka talks
<b>Sri Lanka's Tamil Tiger rebels say they have reached an agreement to revive stalled talks with the government.</b>
The negotiations would be the first since the rebels walked out of talks a year ago, demanding more autonomy in the north and east.
The announcement came after the Norwegian deputy foreign minister travelled to the rebel-held town of Kilinochchi on Thursday.
The government said earlier that talks would start before the end of July.
The BBC's Frances Harrison in Colombo says that the negotiations will be extremely difficult and a settlement to the island's conflict is still a long way off.
<b>'Big gulf' </b>
Our correspondent says that it looks as if the new government has had to make concessions to the rebels that it bitterly criticised when in opposition.
She says the fact that the Tigers say they have agreed on most of the main issues relating to the resumption of talks is something of an achievement, because it looked as if there was a big gulf between the two sides.
The government said it wanted to hold the negotiations in Sri Lanka, as well as discuss an interim power-sharing arrangement and a final peace settlement.
The Tigers want any meeting to be held abroad, and have rejected the government's agenda.
Tigers spokesman Anton Balasingham says a precise date has not yet been set.
"There are practical problems to be sorted out when and where to hold the talks," said Anton Balasingham, chief negotiator for the rebels.
"The Norwegian government will make an official announcement regarding the basic agreements we have reached regarding the resumption of talks."
The agreement came after the Norwegian Deputy Foreign Minister, Vidar Helgesen, travelled to Kilinochchi for talks with the Tigers after meeting government ministers on Wednesday.
Government spokesman Reginold Cooray said negotiations with the Tigers would initially be "talks about talks".
"The president is keen to solve the matter through dialogue," he said.
Earlier this week the Sri Lankan Prime Minister, Mahinda Rajapakse, told the BBC that peace talks will resume before the end of July.
Mr Rajapakse told the BBC Sinhala service that the opposition United National Party had agreed to support the negotiations.
Norway successfully brokered a ceasefire between the rebels and government forces in February 2002 which is still in place.
Diplomats say the foreign minister's visit underscores Norway's commitment to the peace process, and its continuing efforts to bring an end to fighting that has claimed 60,000 lives.
http://news.bbc.co.uk
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஜனாதிபதிக்கும் தமிழீழ தேசியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு தற்போது அவசியமில்லை -புலிகள்
சிறிலங்கா ஜனாதிபதிக்கும், தமிழீழ தேசியத் தலைவருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக மறுத்துள்ளனர்.
நோர்வே தரப்பின் ஊடாக தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவை லண்டனில் சந்திக்கவுள்ளதாக "டெய்லி மிரர்" ஆங்கில நாளேடு உட்பட கொழும்பின் செய்தி ஸ்தாபனங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
இச்செய்தி குறித்து எமது அமைப்பும் உறுப்பினர்களும் ஆச்சரியம் அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்;டர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சந்திப்பொன்றில் அவசியம் இருப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கருதவில்லை எனத் தெரிவித்த அவர் சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து எமது நிலைப்பாட்டை ஏற்கனவே அரசுக்கு அறிவித்துவிட்டோம். அந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் கருத்துரைத்துள்ளார்.
தற்போதைய சமாதான முயற்சிகளுக்கு சாதகமான பதில் கிடைக்காமல் உலகம் சுற்றி எவரையும் சந்திப்பதில் தமிழீழு விடுதலைப் புலிகள் ஆர்வம் கொள்ளவில்லை எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் விளக்கியுள்ளார்.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஓரிரு தினங்களில் பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு: விடுதலைப் புலிகளின் மதியுரைஞர்
நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன், சிறிலங்காவிற்கான நோர்வேத்து}துவர் ஹான்ஸ் பிறஸ்கர் ஆகியோர் ஜனாதிபதியின் செய்தியுடன் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களை கிளிநொச்சியில் சந்தித்தனர்.
நோர்வே து}துக்குழுவினருடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:-
கேள்வி:- இன்று நோர்வே தரப்பினர் அரசாங்கத்திடமிருந்து என்ன விடயங்களை அல்லது முடிவுகளை கொண்டு வந்தார்கள் எனக் கூற முடியுமா?
பதில்:- தீர்க்கமான முடிவுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சில அடிப்படை பிரச்சனைகளை எழுப்பியிருந்தோம். அனேகமான பிரச்சனைகள் வந்து எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது. என்ன என்ன விடயங்கள் என்பதை விபரமாக சொல்ல விரும்பவில்லை.
அனால் ஒட்டுமொத்தமாக இந்தப் பேச்சுவார்த்தைகளை அரம்பிப்பதற்கான முன் முயற்சியை மிகவும் திருப்திகரமான முறையிலும், ஆக்கபூர்வமான முறையிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. சந்திரிகா குமாரதுங்க அவர்கள் எப்படியாவது இந்தப் பேச்சுவார்த்தைகளை விடுதலைப் புலிகளுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமான அக்கறை காட்டி வருவதால் சில அடிப்படை விஷயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டு வருகின்றது.
இந்தப் பேச்சுவார்த்தைகளை எங்கே நடத்துவது, எப்போது நடத்துவது என்ற விடயங்கள் குறித்த முடிவு இன்னும் ஓரிரு தினங்களில் காணப்படும். ஆகவே இப்போது நான் அதைப்பற்றி எதுவும் சொல்ல முடியாதுள்ளது. ஏனென்றால் இன்னும் சில பிரச்சினைகள் தொடர்பாக கதைத்து அவற்றை நோர்வேயின் சமாதானத் து}துவர் சந்திரிகா அம்மையாரிடம் எடுத்துச் சென்று அவருடன் கதைத்து எங்களுக்கு ஒரு இறுதி முடிவை சொல்வார்கள்.
ஆகவே, இரு தரப்பினருக்கும் மத்தியில் இணக்கப்பாடு கண்டு அடிப்படையான சில விடயங்களில் ஒத்திசைவு காணப்பட்டு பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான ஒரு நல்ல புறநிலை உருவாகி வருகிறது என்பதை மட்டும் நாங்கள் உறுதியாகச் சொல்லலாம்.
கேள்வி:- நீங்கள் நோர்வே வெளிவிவகார அமைச்சரிடம் முக்கியமாக பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து உங்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைதிருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றீர்கள். அதைவிட முக்கியமான விடயங்கள் குறித்து மேலதிகமாக ஆராயப்பட்டதா? அல்லது உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா?
பதில்:- சில அடிப்படை விடயங்கள் சம்பந்தப்பட்ட hPதியில் உதாரணமாக விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகள் அவர்களுடன் மட்டும் தான் பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்றும், பேச்சுக்கள் மேல் அவர்களுக்கு சமத்துவமான அந்தஸ்துகள் வழங்கப்படல் வேண்டும். பேச்சுக்கள் இலங்கைக்கு வெளியே நடைபெற வேண்டும். இப்படியான சில பிரச்சினைகளுக்கு இணக்கப்பாடு காணப்பட்டிருக்கின்றது.
இன்றும் திருப்திகரமான முறையில் இந்த இணக்கப்பாடு அமையப் பெற்றிருந்தது. ஆனால், மேலும் சில நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கின்றது. முதலாவது பேச்சு எங்கே நடத்துவது. எப்போது நடத்துவது என்ற hPதியில் இங்கே சில நடைமுறைப் பிரச்சினைகளிலும் சில சிக்கல்கள் இருப்பதும், இது சம்பந்தமாகத்தான் இன்றும் கதைத்து, இதற்கொரு தெளிவான முடிவை காண்பதற்கு நோர்வேத் து}துவரிடம் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே எல்லாவற்றுக்கும் ஒரு உறுதியான முடிவு காணப்படும். இறுதியில் இன்னும் ஓரிரு தினங்களில் அனேகமாக நோர்வே அரசுதான் ஒரு பொதுவான கூட்டறிக்கை மற்றும் இரு தரப்பிற்கும் மத்தியில் காணப்பட்ட இணக்கம் சம்பந்தமாக ஒரு அறிக்கையை விடுவார்கள்.
கேள்வி:- இறுதித்தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாகசபை தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் சமாந்தரமாக நடத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கூறுவது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- எங்கள் நிலைப்பாடு இதுதான் திரும்பி திரும்பி இதைத்தான் சொல்கிறோம் முதலில் இடைக்கால நிர்வாக கட்டமைப்பு பற்றித்தான் பேசப்படல்வேண்டும் அதில் ஒரு இணக்கப்பாடு காணப்படல் வேண்டும் அது நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் அதற்கு அப்புறம் தான் இனப்பிரச்சினை தொடர்பாக பேச்சுக்கள் தொடரவேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு அதைத்தான் நாங்கள் திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறோம் ஆகவே எங்களுக்கு திருப்திகரமான இணக்கப்பாடு வரும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கருணாவின் குடும்பத்தை கண்டுபிடிக்க புலிகளின் உளவுப்பிரிவினர் மலேசியாவிற்கு அனுப்பிவைப்பு
கருணாவின் குடும்பத்தைக் கண்டு பிடிப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இராணுவக் குழுவொன்றை மலேஷியாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இவர்கள் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவினர் கருணாவின் குடும்பத்தை கண்டு பிடிப்பதில் மும்முரமாக ஈடுபடுவர் என ஆசியன் டிரிபியூன் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆசியன் டிரிபியூன் சஞ்சிகை கருணாவின் மனைவி, பிள்ளைகள் ஆகியோர் உட்பட அவரின் குடும்பத்தினர் மலேஷியாவில் தங்கியிருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
அவர்கள் கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னரே மலேஷிய பயணத்தை மேற்கொண்டார்கள் என்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது. கருணாவின் சகாக்கள் கிழக்கில் பல கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.
கிழக்கிலிருந்து வெளியேறியுள்ள கருணாவின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதன் மூலம் கருணாவுக்கு பெருந்தாக்கத்தை ஏற்படுத்த முடிவு கட்டப்பட்டுள்ளது. அதேவேளை கருணாவின் சகோதரர் ரெஜி, சுமார் 80 கொமாண்டோக்களோடு, அம்பாறை மாவட்டக்காட்டுப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலிகள் படையினருக்கு பெருத்த சேதங்களை விளைவிப்பதே அவர்களின் நோக்கமாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மான், குட்டி என்பவரின் தலைமையில் நால்வரைக்கொண்ட குழுவினரை மே 10 ஆம் திகதி கோலாலம்பூருக்கு அனுப்பிவைத்துள்ளார். இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து அங்கு கிளம்பியுள்ளனர் என்றும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகம் அம்பலம்!-நக்கீரன் (கனடா)
"ஸ்ரீலங்கா படையினருக்கு கடந்த காலங்களில் போர்க்கள மனிதவுரிமைகள் பற்றி அமெரிக்க இராணுவம் கற்பித்துக் கொடுத்துள்ளது. இப்போதுதான் விளங்குகிறது ஸ்ரீலங்கா படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலைகள், சித்திரவதைகள் எல்லாவற்றையும் அமெரிக்க இராணுவத்திடம் இருந்துதான் கற்றுக் கொண்டார்கள் என்று! "
அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன் என்பது பழமொழி. உலக நாடுகளின் கருத்துக்களை ஒட்டு மொத்தமாகப் புறந்தள்ளிவிட்டு, ஐக்கிய நாடுகள் சபையை ஓரங்கட்டிவிட்டு இராக் மீது படையெடுத்த அமெரிக்க சனாதிபதி புஷ்சும் பிரித்தானிய பிரதமர் ரோனி பிளேயரும் இன்று புலியின் வாலைப் பிடித்தவன் கதையாக இராக்கில் தங்கவும் முடியாமல் மானத்தோடு வெளியேறவும் முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார்கள்.
நாளும் பொழுதும் அமெரிக்க இராணுவத்தினர் இராக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். சென்ற மாதம் மட்டும் 131 அமெரிக்க இராணுவத்தினர் இராக் தேசியவாதிகளால் கொல்லப்பட்டார்கள். இந்த மாதமும் இந்தக் கொலைகள் தொடர்கின்றன. இராணுவத்தின் கவச வாகனங்கள், தாங்கிகள், உலங்கு வானூர்திகள் இராக் தேசியவாதிகளால் அவ்வப்போது தாக்கி அழிக்கப்படுகின்றன.
பெரிய வல்லரசான அமெரிக்கா உலகின் மிக நவீன ஆயுதங்களை தாங்கியுள்ள 135,000 இராணுவத்தினரை இராக்கில் வைத்திருக்கிறது. இருந்தும் இராக் தேசியவாதிகளது ஓயாத ஒழியாத தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அமெரிக்க இராணுவம் திணறுகிறது.
சனாதிபதி புஷ் கடந்த ஆண்டு மே 1ம் திகதி 'இராக்குக்கு எதிரான போர் முடிந்துவிட்டது" என்று வளைகுடாவில் ஏப்ரகாம் லிங்கன் என்ற போர்க்கப்பலின் தளத்தில் நின்று கொண்டு மிக்க ஆணவத்தோடு அறிவித்தார். ஆனால் போர் இன்றும் தொடர்கிறது. இதுவரை 700க்கும் அதிகமான அமெரிக்க இராணுவத்தினர் இராக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இராக் தரப்பில் 15,000 மேலான பொது மக்கள் குண்டு வீச்சுக்கும் துப்பாக்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியாகி உள்ளார்கள். இராக் பொது மக்கள் கொல்லப்படுவதை அமெரிக்கா கணக்கில் எடுப்பதில்லை. கண்டு கொள்வதும் இல்லை. இருக்கிற தலைவலி தோதாதென்று இப்போது அபு கிராய்ப் (Abu Ghraib) சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட இராக் கைதிகள் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு இழித்துப் பழித்து அவமானப்படுத்தப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஐந்து நட்சத்திர சனநாயக நாடுகளான அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் பெரிய தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. இப்படிச் சித்திரவதை செய்யப்பட்டவர்கள் இராக்கிய தீவிரவாதிகள் அல்ல. வெறுமனே வீடுகளிலும் வீதிகளிலும் நின்ற சாதாரண பொது மக்களே!
இந்தச் சிறைச்சாலைச் சித்திரவதையை அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக் காட்சிதான் முதன் முதலில் ஒளிபரப்பி அம்பலமாக்கியது. ஆரம்பத்தில் சனாதிபதி புஷ் சிறைச்சாலை சித்திரவதைகளின் தாக்கத்தை பூசிமெழுக எடுத்த முயற்சிகள் தோற்றுப் போயின.
சித்திரவதை செய்யப்பட்ட இராக் கைதிகளின் படங்கள் ஊடகங்களில் வெளிவந்து முழு உலகத்தையும் உறைய வைத்துள்ளது.
உலகம் முழுதும் காட்டப்பட்ட இந்தப் படங்களில் ஒன்று இராக்கிய கைதிகள் பிறந்தமேனியுடன் பிரமிட் வடிவில் அடுக்கப்பட்டு பாலியல் உறவு வைத்துக்கொள்வதாக பாவனை செய்வதைக் காட்டுகிறது.
இன்னொரு படம் ஒரு இராக் கைதி நாய்ச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஒரு அமெரிக்க படை வீரனால் தரையில் கொற கொற என இழுத்து வருவதைக் காட்டுகிறது. பிறிதொரு படம் பிறந்த மேனியுடன் நிற்கும் இராக் கைதியைச் சுற்றி நாய்களுடன் அமெரிக்க இராணுவத்தினர் நிற்கும் காட்சியைக் காட்டுகிறது.
மேலும் ஒரு படம் ஒரு கைதி மீது பிரித்தானிய இராணுவத்தினன் சிறுநீர் கழிக்கும் காட்சியைக் காட்டுகிறது. இவற்றைவிட மோசமான படங்கள், வீடியோ நடாக்கள் இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கின்றன. இந்தப் படங்கள் அரபு நாடுகளது மக்களை மட்டும் அல்லாது உலக மக்களையும் கொதிப்படைய வைத்துள்ளன.
அமெரிக்க நாட்டு அரசியல்வாதிகளே அந்தப் படங்களைப் பார்த்து ஆடிப்போனார்கள். இராக் நாட்டை சர்வாதிகாரி சதாம் குசேனின் பிடியில் இருந்து விடுவித்து அங்கு சனநாயத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்டி விட்டோம் என்று புஷ் சொல்லி வந்தார். அது மட்டுமல்ல சதாம் குசேனின் ஆட்சிக் காலத்தில் இராக்கில் இருந்த சித்திரவதைக் கூடங்களையும் மனிதப் படுகுழிகளையும் இல்லாது செய்து விட்டோம் என்றும் புஷ் தம்பட்டம் அடித்துக் கொண்டார். உண்மை என்னவென்றால் சதாம் குசேனின் ஆட்சியைவிட மோசமான சித்திரவதைக் கூடத்தை அமெரிக்கா இராக்கில் இன்று உருவாக்கியுள்ளது.
இந்தச் சிறையில் இருந்த கைதிகள் பலர் சித்திரவதைக்குள்ளாகி இறந்துள்ளார்கள். பிரித்தானிய படை பிடித்து சிறையில் அடைத்த ஆயிரக்கணக்கான கைதிகளில் 37 பேர் இராணுவத்தினால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அகிலவுலக மன்னிப்புச் சபை பிரித்தானிய இராணுவம் எட்டு வயதுக் குழந்தை உட்பட பல இராக்கிய பொது மக்களை சட்ட விரோதமாகச் சுட்டுக் கொன்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. செஞ்சிலுவை சங்கமும் அமெரிக்க பிரித்தானிய இராணுவங்களின் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களைப் பலமாகச் சாடியுள்ளன.
யுத்தத்தில் சிறைப் பிடிக்கும் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தும் ஜெனிவா மரபுகள் அமெரிக்க பிரித்தானிய படைகளால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
முன்னர் ஆப்பாகனிஸ்தான் மீதான தாக்குதலில் சிறை பிடித்த அல் குவைத்தா தீவிரவாதிகளை அமெரிக்கா கியூபாவில் உள்ள கவுத்தனமோ குடாச் சிறையில் (Guantanamo Bay) நீதி விசாரணை எதுவும் இன்றி ஆண்டுக் கணக்காக சிறையில் பூட்டி சித்திரவதை செய்து வருகிறது. இந்தக் கைதிகளைப் பார்க்க உறவினரோ வழக்கறிஞர்களோ அனுமதிக்கப்படவில்லை. இந்த கைதிகள் விடயத்தில் ஜெனிவா மரபுகளைத் தான் கைப் பிடிக்கப் போவதில்லை என்று சனாதிபதி புஷ் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
இதற்குக் காரணம் அமெரிக்க வெள்ளை மாளிகை அனைத்துலக சட்டங்கள் மற்றும் மனிதவுரிமைகள் தங்களது கைகளைக் கட்டிப் போடுவதாக நினைக்கிறது. அல்லது அவை அமெரிக்காவிற்குப் பொருத்தமற்றவை என நினைக்கிறது. யுத்தவெறி பிடித்து அலையும் அமெரிக்கா தனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு இன்னொரு நீதி எனத் துக்கமோ வெட்கமோ இன்றி நடந்து கொள்கிறது.
அராபிய மக்கள் இராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை இஸ்லாமிற்கு எதிரான கிறித்தவர்களின் யுத்தம் எனக் கருதுகிறார்கள். சனாதிபதி புஷ்சும் இரண்டு நாகரிகங்களுக்கு இடையிலான யுத்தம் என வர்ணித்துள்ளார். இராக் கைதிகள் இழிவுபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் அமெரிக்க இராணுவம் அவர்களை மனிதர்களாக எண்ணிப் பார்க்க முடியாமல் இருப்பதே.
அமெரிக்க நாட்டுக்குள் இருக்கும் சிறைச்சாலைகளிலும் இப்படியான சித்திரவதைகள் இடம்பெறுவதாக மனிதவுரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தச் சிறைச் சாலைகள் தனியார் கம்பனிகளால் நடத்தப்படுபவை ஆகும்.
அமெரிக்க அரச திணைக்களம் உலக நாடுகளில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்களைப் பற்றி ஆய்வு செய்து ஆண்டு தோறும் அறிக்கை ஒன்றை வெளியிடுவது தெரிந்ததே. இந்த அறிக்கையில் அரசுகள் மட்டுமல்ல ஆயுதம் ஏந்திப் போராடும் கெரில்லா இயக்கங்களும் கண்டனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன.
வி.புலிகள் சிறார்களை படையில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும், வன்முறையை சொல்லிலும் செயலிலும் கைவிட்டு விட்டதாக அறிவிக்க வேண்டும் என இந்த அறிக்கையில் வற்புறுத்தப்படுவது உண்டு.
ஆனால் அபு கிராய்ப்பு சிறைச்சாலை சித்திரவதையை அடுத்து இந்த ஆண்டு அறிக்கையை வெளியிடுவதை அரச திணைக்களம் ஒத்திப் போட்டுள்ளது. ஒத்திப் போட்டதற்கு தொழில் நுட்பக் கோளாறு எனக் காரணம் சொன்னாலும் உண்மையான காரணம் சிறைச்சாலை வதைச் சாலையாக மாறியதுதான்.
மனிதவுரிமைகளைப் பற்றி மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் அமெரிக்கா, அதே மனிதவுரிமைகளை காலில் போட்டு மிதித்து விட்டு மற்றவர்களுக்கு மனிதவுரிமைகள் பற்றி உபதேசிப்பது ஊருக்குச் சொன்னேனடி கண்ணே உனக்கில்லையடி என் பெண்ணே எனச் சொன்ன பாதிரியார் கதையை நினைவூட்டுகிறது.
இந்த இலட்சணத்தில் அமெரிக்கா தன்னை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் உலகத்தின் பொலிஸ்காரனாக காட்டிக் கொள்வது பெரிய பகிடிதான்! அமெரிக்கா தான் உலகத்தின் ஒரே வல்லரசு என்ற நினைப்பில் மனிதவுரிமைகளை, அனைத்துலக சட்டங்களை, மரபுகளை சட்டை செய்வதில்லை.
ஸ்ரீலங்கா படையினருக்கு கடந்த காலங்களில் போர்க்கள மனிதவுரிமைகள் பற்றி அமெரிக்க இராணுவம் கற்பித்துக் கொடுத்துள்ளது. இப்போதுதான் விளங்குகிறது ஸ்ரீலங்கா படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலைகள், சித்திரவதைகள் எல்லாவற்றையும் அமெரிக்க இராணுவத்திடம் இருந்துதான் கற்றுக் கொண்டார்கள் என்று!
அமெரிக்காவிற்கு வரலாற்றில் சந்தித்திராத பழியையும் இழிவையும் தலைக்குனிவையும் சனாதிபதி புஷ் வலிந்து தேடிக் கொடுத்துள்ளார்!
புஷ்சின் புண்ணியத்தால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகம் அம்பலம் ஆகியுள்ளது!
நக்கீரன் (கனடா)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Sonia factor in Lanka peace talks
New Delhi, May 16: President Chandrika Kumaratungas government, eager to restart the peace process with the LTTE, is using the Congress victory to pressure the Tigers to return to the talks table.
Foreign minister Lakshman Kadirgamar has told reporters that with Sonia Gandhi and the Congress at the helm, the move for the extradition of LTTE chief Prabhakaran will gather steam.
In 1991, an LTTE suicide bomber had killed Rajiv Gandhi and Prabhakaran is wanted in India for his involvement in the assassination. The NDA government led by Atal Bihari Vajpayee had not pressed too hard for the extradition, but with Sonia in power things would be different, Kadirgamar said.
Sources in the Lankan establishment believe Kadirgamars words are an attempt to persuade the LTTE chief to begin negotiations. He is indirectly trying to tell Prabhakaran that if he continues his engagement with Colombo, New Delhi would not want to disrupt the peace proc- ess which has the sanction of the international community by demanding his extradition.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Eye of the Tiger: LTTE may get that hunted feeling, again
IANS[ MONDAY, MAY 17, 2004 12:50:49 AM ]
NEW DELHI: With Congress president Sonia Gandhi set to become prime minister, the man who ordered the assassination of her husband, over a decade ago, will certainly be worried. Those who follow Sri Lankas Tamil Tigers closely, will know that by now its chief Velupillai Prabhakaran, wanted in India for the 1991 killing of Rajiv Gandhi, will be holding consultations with his aides to discuss the unexpected political upheaval in New Delhi. There is no doubt he will be very, very concerned, a senior Indian official said, referring to Mr Prabhakaran, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) chief.
Significantly, the pro-LTTE media has made no comment on the dramatic election outcome that has catapulted Sonia Gandhi to power. A LTTE suicide-bomber blew up her husband at Sriperumpudur while he was on a comeback trail.
Tamil sources agree the LTTE would have even otherwise closely followed the election process in India, but Ms Gandhis dramatic victory would have certainly unnerved them. It may not have struck many, but the fact is that Mr Prabhakaran is the reason why Ms Gandhi is in politics today. Had he not killed her husband, she would have continued to be a housewife and would have remained at a safe distance from the hurly-burly of Indian politics.
Ms Gandhi has probably never expressed her views publicly on the Sri Lankan conflict, and the LTTEs fight for a Tamil state. But she met many actors of the Sri Lankan drama, including Tamils opposed to the LTTE.
The first consequence of Ms Gandhis rise to power is that the LTTE can forget the possibility, however remote, of India not extending the ban on the group in August this year. The LTTE was first outlawed by New Delhi in August 1992, and every two years the ban has been extended.
Since the Bharatiya Janata Party (BJP) took power in New Delhi in 1998, and even earlier, the LTTE had tried to warm up to it and its allied organisations, such as the Vishwa Hindu Parishad (VHP). The VHP is one of the rare groups the LTTE has allowed to operate in areas under its control in eastern Sri Lanka. When India exploded a nuclear device in May 1998, journals linked to LTTE wrote effusively about the feat.
In April 02, when Mr Prabhakaran addressed his first press conference in 12 years, he announced that the LTTE was in touch with India and expected New Delhi to lift the ban on the group. It also sought permission for its ideologue, Anton Balasingham, to be based in South India. New Delhi, however, did not accede to either of the requests.
The fact remains that the LTTE has not forgotten that it was Mr Gandhi who signed a peace pact with Sri Lanka in 1987 and sent the Indian Army to the island.
About a year ago, Mr Balasingham told a meeting of Sri Lankan Tamils in London that the LTTE is wary of three women Chandrika Kumaratunga, the Sri Lankan president, Jayaram Jayalalitha, the Tamil Nadu chief minister (who Mr Balasingham contemptuously referred to in Tamil as gundamma or fat woman) and Sonia Gandhi.
The LTTE is also constrained by the ban on it by the US, and is desperate to shed its terrorist tag. Also, knowing that killing Mr Gandhi cost the LTTE very heavily in the long run, it is highly unlikely that Mr Prabhakaran would try anything similar vis-à-vis Ms Gandhi. But the LTTE is a highly unpredictable group and it would do well for Indian agencies to review Ms Gandhis security arrangements.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அப்போது கேட்காத ஹக்கீம் இப்போது கேட்பது ஏன்?
ஜனாதிபதி, கேள்வி
கடந்த ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் அரசின் முக்கிய அமைச்சராய் இருந்த ரவ10ப் ஹக்கீம் அப்போது, அரசிற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடந்த சமாதானப் பேச்சுகளில் தனித்தரப்பாக கலந்து கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி யுள்ள ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, இப்போது ஹக்கீம் முஸ்லிம் மக்களின் சார்பில் தனித்தரப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அடம்பிடிப்பது ஏன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் மக்கள் சார்பில் தனது கட்சியும் பங்கு கொள்ள வேண்டும் என ஹக்கீம் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து பதிலளித்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருக்கும் பொழுது பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருந்த ஹக்கீம் சமாதானப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்தார். ஆனால், அப்போது அவர் தனித்தரப்பாகப் பேச்சுகளில் கலந்துகொள்ள எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு புலிகள் இயக்கத்தினால் சில பிரச்சினைகள் ஏற்பட்ட பொழுது, அந்தப் பிரதேச முஸ்லிம் தலைவர்கள் என்னைப் பல தடவை சந்தித்துப் பேசியுள்ளனர். அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அம்மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நான் பல நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இது சம்பந்தமகாப் பேச ரவ10ப் ஹக்கீமிற்கு பல தடவை அழைப்பு விடுத்தும் கூட அவர் ஒரு போதும் சமுகமளிக்கவில்லை. எனினும், பேரியல் அர்;ரப்பும் அதாவுல்லாவும் எம்முடன் இணைந்து கொண்ட பின்னர், சமாதானப் பேச்சுகளில் முஸ்லிம்கள் சார்பாக தாம் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்களின் வேண்டுகோளையடுத்து, பேச்சுவார்த்தையின் போது, முஸ்லிம் மக்களின் பங்களிப்புக் குறித்தும் அரசாங்கம் புலிகளுடன் கருத்துகளைப் பரிமாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கதிர்காமர் விரும்பினால் வன்னிக்கு வந்து தலைவரை நாடு கடத்த முயலட்டும்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவுக்கு நாடு கடத்துவதாயின், அமைச்சர் லடீ;மன் கதிர்காமர் வன்னிக்கு வந்து அதனைச் செய்யட்டுமென புலிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பிரபாகரனை நாடு கடத்துமாறு இந்திய அரசாங்கம் கோரக் கூடிய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கதிர்காமர் கடந்த வியாழக்கிழமை வார்pங்டனில் தெரிவித்திருந்தார்.
இது பற்றி கூ றும் போதே, கதிர்காமரின் இந்தக் கூற்று குறித்து புலிகள் ஏளனம் செய்துள்ளனர்கதிர்காமர் விரும்பினால் கிளிநொச்சிக்கு வந்து எமது தலைவரை நாடு கடத்த முயற்சிக்கட்டும் எனவும் முதிர்ச்சியற்ற, இந்தப் பேச்சுக்கள் நகைச்சுவைக்குரியவை எனவும் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
அடுத்த கட்டப் பேச்சுக்களில், முதல் சந்திப்பு நோர்வேயில் இடம்பெறும்?
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 17 மே 2004, 22:34 ஈழம் ஸ
புதிய அரசுடன் விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கவுள்ள அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளின் முதலாவது சந்திப்பு, நோர்வே நாட்டில் இடம்பெறுவதற்குத் தீர்மானமாகியிருப்பதாக எமது புதினம் நிருபர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடொன்றில் நடைபெறவேண்டுமென்று விடுதலைப் புலிகள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், நோர்வே நாட்டின் முக்கிய விடுதியொன்றில், இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்றும், நோர்வே பிரதமர் இப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைப்பார் என்றும் உத்தியோகப் பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலாவது பேச்சுவார்த்தைகளில், விடுதலைப் புலிகளின் தரப்பில் மதியுரைஞர் அன்ரன் பாரசிங்கமும், அரசு தரப்பில் திரு.nஐயந்த தனபாலவும், தலைமை தாங்க, நோர்வே அனுசரணையாளர்கள் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிப்பார்கள்.
இதற்கிடையில், அரச தரப்பில் nஐயந்த தனபாலவுடன், இரு முக்கிய அமைச்சர்களும், ஐ.ம.சு.மு.க்கு ஆதரவு வழங்கிய கூட்டணிக்கட்சியான பேரியல் அஸ்ரப்பின் முஸ்லிம் கட்சியிலிருந்து ஒருவரும் பங்கேற்கவுள்ளதாக கொழும்புப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நன்றி : புதினம்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினார் கடத்தப்பட்டார்
செவ்வாய்க்கிழமை, 18 மே 2004
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிக்கு ஒருவர் நேற்றிரவு இனந் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற சபாநாயகர் தெரிவின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினரான வண. களுதாலுவ ரதனசார தேரரே இவ்வாறு கடத்தப்பட்டிருப்பதாக மொறட்டுவ பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொறட்டுவ றாவத்தாவற்ற சிறி சம்புத்த விகாரையிலிருந்து இவர் கடத்தப்பட்டுள்ளார்.
இவருடன் கலந்துரையாட வந்த குழுவே தேரரைக் கடத்தியிருப்பதாக விகாரையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவின் போது இடம்பெற்ற வாக்களிப்பில் இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கொள்கைக்கு புறம்பாக அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பிரதி சபாநாயகராக கீதாஞ்சன குணவர்த்தன தெரிவு
பதின்மூன்றாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சன குணவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப செயலாளரும், பராளுமன்ற உறுப்பினருமான முருகன் சச்சிதானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு பதவிக்கான தெரிவுகளும் ஏகமனதாக இடம்பெற்றுள்ளன.
சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் இன்று காலை 10 மணியளவில் பதின்மூன்றாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமானது.
சபை அமர்வின் ஆரம்பத்தின் போது தேசிய பட்டியல் மூலம் தெரிவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூவரும், இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினரும் சத்தியப் பிரமாணம் செய்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மேர்வின் சில்வா, விஜயதாச ராஜபக்ஷ, ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஜனதாச பீரிஸ், வீ.ஆர்.வீரசேகர மற்றும் மேரி லுசிடா ஆகியோர் பதவி விலகியதனையடுத்து இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக பா.அரியநேந்திரன் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கிங்ஸ்லி இராசநாயகம் தமது பதவியை இராஜினாமா செய்தததையடுத்தே அரியநேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இன்று காலை பாராளுமன்றம் கூடிய வேளையில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரிமை பிரச்சனைகளை எழுப்பினர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் அப்பரிக்க பஞ்சானந்த தேரர் ஆகியோர் இந்த சிறப்புரிமை பிரச்சனையை எழுப்பினர்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான களுதாலுவ ரதனசார தேரர் நேற்றிரவு கடத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயராஐ; பெர்ணான்டோ புள்ளே பாராளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சனையை ஒன்றை எழுப்பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இது தொடர்பாக தாம் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்திருப்பதாக சபாநாயகர் லொக்கு பண்டார கூறினார்.
இதனையடுத்து பிரதி சபாநாயகர் தெரிவு அமைதியான முறையில் இடம்பெற்றதாக பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகராக கீதாஞ்சன குணவர்த்தன தெரிவு செய்யப்பட்டார். இவரது பெயரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிய அதனை மைத்திரிபால சிறிசேன வழி மொழிந்தார்.
குழுக்களின் பிரதித் தலைவராக முருகன் சச்சிதானந்தனின் பெயரை பாராளுமன்ற உறுப்பினரான முத்து சிவலிங்கம் முன்மொழிய அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன வழி மொழிந்தார்.
பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித்தலைவர் ஆகிய பதவிகளுக்கு உரியவர்களை போட்டியின்றி தெரிவு செய்ய அரசாங்கம் இணங்கியதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இந்த நியமனங்கள் தொடர்பாக பிரதமர், அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாட்டுக்கு வந்ததாக சமரசிங்க மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றம் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடுகின்றது.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|