04-14-2004, 03:06 PM
[b]<span style='color:red'>வெளிநாட்டு மாப்பிள்ளை...சிறுகதை...!
[size=16]கந்தனின் முன்னேற்றத்தைக் கண்டு ஊரே வியந்தது. படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு கொழும்புக்குச் சென்று கந்தன் ஜந்து வருடங்களில் முதலாளியாகிவிடுவான் என எவரும் எதிர்பார்க்கவில்லை. விவசாயத்தையும், வியாபாரத்தையும் நம்பி இருக்கும் அந்தக் கிராமத்திலிருந்து முதன் முதலாக, கந்தன் பல்கலைக்கழகம் செல்வான் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஊர்மக்களின் எண்ணக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளியிட்ட கந்தன் மற்றவர்களைப் போலவே வியாபாரத்துக்காகக் கொழும்புக்குச் சென்றான்.
கந்தனின் மாமா ஒருவரின் கடையில், கந்தன் உதவியாளராகச் சேர்ந்தான். அவனின் திறமையும், மருமகன் என்ற பாசமும் தனியாகக் கடையை நிர்வகிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தின. கந்தனின் மாமா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பம்பலப்பிட்டியில் அவனுக்கு ஒரு கடையை நடத்த ஏற்பாடு செய்தார். இரண்ட வருடங்களில் வாடகைக் கடையை சொந்தமாக்கினான் கந்தன்.
கொழும்பில் உள்ள முதலாளிகள் அனைவரும் யாழப்பாணத்துக்குப் படையெடுத்தபோது கந்தனும் யாழ்ப்பாணத்தில் கடை ஒன்றை ஆரம்பித்தான். பம்பலப்பிட்டிக்கடையைப் போன்றே யாழ்ப்பாணத்துக்கடையும் சிறப்பாக நடைபெற்றது. வவுனியாவில் கடை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்த கந்தன் மாமாவிடம் ஆலோசனை கேட்டான். அவர் தன்னிடம் கணக்காளராக வேலை செய்யும் குமாரைக் கந்தனுக்கு அறிமுகப்படுத்தினார்.
குமார் வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவன். வவுனியாவில் உள்ள பல முதலாளிகளை குமாருக்குத் தெரியும். என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்த கந்தன், குமாரையும் அழைத்துக் கொண்டு தனது காரில் வவுனியா நோக்கிச் சென்றான். குமாரின் வீடு பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்தாலும் வீடு வறுமையின் கொடுமையினை சித்திரிப்பதாகக் காணப்பட்டது. வறுமையின் கொடுமைகளை கடந்த காலத்தில் அனுபவித்தவன் என்பதால் எதுவித அருவருப்புமின்றி குமாரின் வீட்டினுள் நுழைந்தான் கந்தன்.
அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் குடு குடுவென ஓடிவந்த சிறுவன் குமாரைப் கட்டிப்பிடித்தான். கொழும்பிலிருந்து வவுனியா வரும் வரை வியாபாரம் பற்றியே கதைந்து வந்த கந்தன் குமாரின் குடும்பம் பற்றி கேட்காததையிட்டுக் கவலைப்பட்டான். 'குமார் அண்ணா உங்களுக்கு திருமணமானது பற்றிச் சொல்லவில்லை" 'அவ சமையல் அறையில் வேலையாயிருக்கா போல இப்போ வரச் சொல்கின்றேன்" என்று கூறியபடி சமையல் அறையில் நுழைந்தாhன் குமார்.
சிறிது நேரத்தில் சமையல் அறையிலிருந்து வெளியே தேநீர் கொண்டு வந்த குமாரின் மனைவியைப் பார்த்து திகைத்து நின்றான் கந்தன். கந்தனைப் பார்த்து சாந்தி நடுங்கிப் போனாள். தேநீரைக் கொண்டு வந்து மேசையின் மேல் வைத்து விட்டு அறைக்குள் நுழைந்தாள் சாந்தி.
'குமார் அண்ணா உங்கள் மனைவி எங்கள் ஊர்தான்" என்றான் கந்தன்
'அப்படியா உங்கள் ஊரா" என குமார் வியந்தான்.
'அப்ப நானும் உங்கடை ஊர் ஆள்தான்" என்றான் குமார். அவர்களின் உரையாடலைக் கேட்ட சாந்தியின் உடல் மேலும் நடுங்கியது. தேநீர் குடித்துவிட்டு இருவரும் வெளியே போனார்கள்.
'கந்தன் நீங்கள் சாந்தியின் ஊர் என்றபடியால் உங்களை ஒரு உதவி கேட்பேன் செய்வீங்களா?
'சரி சொல்லுங்கோ"
'நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்துகின்றோம். இந்த பிணக்கை நீங்கள் தான் தீர்க்க வேண்டும்."
'உங்களுக்கிடையே என்ன பிரச்சினை?"
குமார் தனது கதையைச் சொல்லத் தொடங்கினான்
'நான், யுத்தத்தினால் லண்டனுக்கு போக வேண்டியதாயிற்று. அங்கே சாதாரணமாகத்தான் நான் வேலை செய்தேன். எனக்கு வவுனியாவில் ஒரு தங்கச்சி இருந்தாள். அவளை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அம்மாவிற்கு ஆசை. அதனால் அவளுக்கு ஒரு எஞ்சினியர் மாப்பிள்ளை பார்த்தனர். மாப்பிள்ளைக்குச் சீதனமாக முப்பது லட்சம் தேவைப்பட்டது. என்னால் அவ்வளவு பணத்தைச் சேர்க்க முடியாது என்பதை அம்மாவிற்குச் சொன்னேன். இருபது லட்சம் அனுப்பினேன்.
அதன் பின்னர் அம்மா சொன்னா தங்கச்சி திருமணம் நடத்துவதற்கு முன்னர் உனக்கு திருமணம் நடத்த வேண்டும். அப்பதான் உன்னுடைய சீதனமாக பத்து லட்சத்தை வாங்கி முப்பதை தங்கைச்சிக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு நான் ஒத்துக்கொண்டேன்.
அதன் பின்னர் பொருத்தம் பார்ந்து சாந்தியைத் தேர்ந்து எடுத்தனர். அந்தநேரம் எனக்கு லண்டனில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் சாந்தி வீட்டாரிடம் சீதனப் பணத்தை வாங்கிவிட்டனர். என்னை லண்டனிலிருந்து திருப்பி அனுப்பினார்கள். நான் கொழும்பு வந்த போது என்னிடம் செலவுக்குக்கூட பணமில்லை. நான் இதைப் பற்றி வீட்டிலே கூறிய போது ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் என அம்மா கூறினாள்.
சாந்தி வீட்டாருடன் எல்லாப் பிரச்சினைகளும் கதைத்த படியால் முதல் போட்டு வியாபாரம் செய்யலாம் என்று அப்பா கூறினார். அவர்கள் கூறியதை நம்பி நான் திருமணத்திற்குச் சம்மதித்தேன். அவசர அவசரமாகக் கொழும்பிலே எனது திருமணம் நடைபெற்றது. ஒருமாதம் எதுவிதப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்தோம்.
ஒரு நாள் எத்தனை மாத லீவில் வந்தனீங்கள் எப்போ லண்டன் போகப் போகிறீர்கள் என்று சாந்தி கேட்டாள். நான் எனது நிலைமையை சாந்திக்கு விளக்கமாக கூறினேன். நான் லண்டனில் இருந்து திரும்பி வந்ததும் இனி லண்டன் செல்லமுடியாது என்பதும் நான் கூறித்தான் சாந்திக்குத் தெரியும் சாந்தி வீட்டாருக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று அன்றிலிருந்து எனது வாழ்க்கை கேள்விக்குறியாகியது. நான் விருப்பப்படாமல் நடைபெற்ற இத் திருமணத்தால் சாந்தியின் வாழ்க்கை இருண்டு விட்டது."
.................................
சாந்தியின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த கந்தன், குமாருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவிந்தான்
கந்தனும், சாந்தியும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராகக் காதலித்ததையும், வெளிநாட்டு மோகத்தில் அவள் காதலை நிராகரித்ததையும், பல்கலைக்கழக கனவைத் துறந்து படிப்பைக் கைவிட்டதையும் எப்படி குமாரிடம் சொல்வது என்று தெரியாது கந்தன் தவித்தான்.
வார்த்தையால் எதுவும் கூறாத கந்தன், குமாரின் முதுகில் தட்டியபடி மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தினான். தமது பிரச்சனைகளுக்குத் முடிவு வந்துவிட்டதைப் போன்று குமார் சந்தோஷப்பட்டான்.</span>
யாவும் கற்பனை..
-எஸ்.ரமேஷ
நன்றி sooriyan.com
------------------
இக்கதையின் எழுத்தாளர் யாவும் கற்பனை என்றுதான் போட்டுள்ளார்...ஆனால் யாவும் உண்மை என்றும் துணிந்து போடலாம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=16]கந்தனின் முன்னேற்றத்தைக் கண்டு ஊரே வியந்தது. படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு கொழும்புக்குச் சென்று கந்தன் ஜந்து வருடங்களில் முதலாளியாகிவிடுவான் என எவரும் எதிர்பார்க்கவில்லை. விவசாயத்தையும், வியாபாரத்தையும் நம்பி இருக்கும் அந்தக் கிராமத்திலிருந்து முதன் முதலாக, கந்தன் பல்கலைக்கழகம் செல்வான் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஊர்மக்களின் எண்ணக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளியிட்ட கந்தன் மற்றவர்களைப் போலவே வியாபாரத்துக்காகக் கொழும்புக்குச் சென்றான்.
கந்தனின் மாமா ஒருவரின் கடையில், கந்தன் உதவியாளராகச் சேர்ந்தான். அவனின் திறமையும், மருமகன் என்ற பாசமும் தனியாகக் கடையை நிர்வகிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தின. கந்தனின் மாமா, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பம்பலப்பிட்டியில் அவனுக்கு ஒரு கடையை நடத்த ஏற்பாடு செய்தார். இரண்ட வருடங்களில் வாடகைக் கடையை சொந்தமாக்கினான் கந்தன்.
கொழும்பில் உள்ள முதலாளிகள் அனைவரும் யாழப்பாணத்துக்குப் படையெடுத்தபோது கந்தனும் யாழ்ப்பாணத்தில் கடை ஒன்றை ஆரம்பித்தான். பம்பலப்பிட்டிக்கடையைப் போன்றே யாழ்ப்பாணத்துக்கடையும் சிறப்பாக நடைபெற்றது. வவுனியாவில் கடை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்த கந்தன் மாமாவிடம் ஆலோசனை கேட்டான். அவர் தன்னிடம் கணக்காளராக வேலை செய்யும் குமாரைக் கந்தனுக்கு அறிமுகப்படுத்தினார்.
குமார் வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவன். வவுனியாவில் உள்ள பல முதலாளிகளை குமாருக்குத் தெரியும். என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்த கந்தன், குமாரையும் அழைத்துக் கொண்டு தனது காரில் வவுனியா நோக்கிச் சென்றான். குமாரின் வீடு பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்தாலும் வீடு வறுமையின் கொடுமையினை சித்திரிப்பதாகக் காணப்பட்டது. வறுமையின் கொடுமைகளை கடந்த காலத்தில் அனுபவித்தவன் என்பதால் எதுவித அருவருப்புமின்றி குமாரின் வீட்டினுள் நுழைந்தான் கந்தன்.
அவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் குடு குடுவென ஓடிவந்த சிறுவன் குமாரைப் கட்டிப்பிடித்தான். கொழும்பிலிருந்து வவுனியா வரும் வரை வியாபாரம் பற்றியே கதைந்து வந்த கந்தன் குமாரின் குடும்பம் பற்றி கேட்காததையிட்டுக் கவலைப்பட்டான். 'குமார் அண்ணா உங்களுக்கு திருமணமானது பற்றிச் சொல்லவில்லை" 'அவ சமையல் அறையில் வேலையாயிருக்கா போல இப்போ வரச் சொல்கின்றேன்" என்று கூறியபடி சமையல் அறையில் நுழைந்தாhன் குமார்.
சிறிது நேரத்தில் சமையல் அறையிலிருந்து வெளியே தேநீர் கொண்டு வந்த குமாரின் மனைவியைப் பார்த்து திகைத்து நின்றான் கந்தன். கந்தனைப் பார்த்து சாந்தி நடுங்கிப் போனாள். தேநீரைக் கொண்டு வந்து மேசையின் மேல் வைத்து விட்டு அறைக்குள் நுழைந்தாள் சாந்தி.
'குமார் அண்ணா உங்கள் மனைவி எங்கள் ஊர்தான்" என்றான் கந்தன்
'அப்படியா உங்கள் ஊரா" என குமார் வியந்தான்.
'அப்ப நானும் உங்கடை ஊர் ஆள்தான்" என்றான் குமார். அவர்களின் உரையாடலைக் கேட்ட சாந்தியின் உடல் மேலும் நடுங்கியது. தேநீர் குடித்துவிட்டு இருவரும் வெளியே போனார்கள்.
'கந்தன் நீங்கள் சாந்தியின் ஊர் என்றபடியால் உங்களை ஒரு உதவி கேட்பேன் செய்வீங்களா?
'சரி சொல்லுங்கோ"
'நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்துகின்றோம். இந்த பிணக்கை நீங்கள் தான் தீர்க்க வேண்டும்."
'உங்களுக்கிடையே என்ன பிரச்சினை?"
குமார் தனது கதையைச் சொல்லத் தொடங்கினான்
'நான், யுத்தத்தினால் லண்டனுக்கு போக வேண்டியதாயிற்று. அங்கே சாதாரணமாகத்தான் நான் வேலை செய்தேன். எனக்கு வவுனியாவில் ஒரு தங்கச்சி இருந்தாள். அவளை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அம்மாவிற்கு ஆசை. அதனால் அவளுக்கு ஒரு எஞ்சினியர் மாப்பிள்ளை பார்த்தனர். மாப்பிள்ளைக்குச் சீதனமாக முப்பது லட்சம் தேவைப்பட்டது. என்னால் அவ்வளவு பணத்தைச் சேர்க்க முடியாது என்பதை அம்மாவிற்குச் சொன்னேன். இருபது லட்சம் அனுப்பினேன்.
அதன் பின்னர் அம்மா சொன்னா தங்கச்சி திருமணம் நடத்துவதற்கு முன்னர் உனக்கு திருமணம் நடத்த வேண்டும். அப்பதான் உன்னுடைய சீதனமாக பத்து லட்சத்தை வாங்கி முப்பதை தங்கைச்சிக்குக் கொடுக்கலாம் என்றார். அதற்கு நான் ஒத்துக்கொண்டேன்.
அதன் பின்னர் பொருத்தம் பார்ந்து சாந்தியைத் தேர்ந்து எடுத்தனர். அந்தநேரம் எனக்கு லண்டனில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் சாந்தி வீட்டாரிடம் சீதனப் பணத்தை வாங்கிவிட்டனர். என்னை லண்டனிலிருந்து திருப்பி அனுப்பினார்கள். நான் கொழும்பு வந்த போது என்னிடம் செலவுக்குக்கூட பணமில்லை. நான் இதைப் பற்றி வீட்டிலே கூறிய போது ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் என அம்மா கூறினாள்.
சாந்தி வீட்டாருடன் எல்லாப் பிரச்சினைகளும் கதைத்த படியால் முதல் போட்டு வியாபாரம் செய்யலாம் என்று அப்பா கூறினார். அவர்கள் கூறியதை நம்பி நான் திருமணத்திற்குச் சம்மதித்தேன். அவசர அவசரமாகக் கொழும்பிலே எனது திருமணம் நடைபெற்றது. ஒருமாதம் எதுவிதப் பிரச்சினையும் இன்றி வாழ்ந்தோம்.
ஒரு நாள் எத்தனை மாத லீவில் வந்தனீங்கள் எப்போ லண்டன் போகப் போகிறீர்கள் என்று சாந்தி கேட்டாள். நான் எனது நிலைமையை சாந்திக்கு விளக்கமாக கூறினேன். நான் லண்டனில் இருந்து திரும்பி வந்ததும் இனி லண்டன் செல்லமுடியாது என்பதும் நான் கூறித்தான் சாந்திக்குத் தெரியும் சாந்தி வீட்டாருக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று அன்றிலிருந்து எனது வாழ்க்கை கேள்விக்குறியாகியது. நான் விருப்பப்படாமல் நடைபெற்ற இத் திருமணத்தால் சாந்தியின் வாழ்க்கை இருண்டு விட்டது."
.................................
சாந்தியின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த கந்தன், குமாருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவிந்தான்
கந்தனும், சாந்தியும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராகக் காதலித்ததையும், வெளிநாட்டு மோகத்தில் அவள் காதலை நிராகரித்ததையும், பல்கலைக்கழக கனவைத் துறந்து படிப்பைக் கைவிட்டதையும் எப்படி குமாரிடம் சொல்வது என்று தெரியாது கந்தன் தவித்தான்.
வார்த்தையால் எதுவும் கூறாத கந்தன், குமாரின் முதுகில் தட்டியபடி மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தினான். தமது பிரச்சனைகளுக்குத் முடிவு வந்துவிட்டதைப் போன்று குமார் சந்தோஷப்பட்டான்.</span>
யாவும் கற்பனை..
-எஸ்.ரமேஷ
நன்றி sooriyan.com
------------------
இக்கதையின் எழுத்தாளர் யாவும் கற்பனை என்றுதான் போட்டுள்ளார்...ஆனால் யாவும் உண்மை என்றும் துணிந்து போடலாம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

