Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவாரசியமான செய்திகள்
#1
10 ஆண்டுக்குப் பின் ஒரு பலவந்த குளியல்

நைரோபி, மார்ச் 8: மேற்கு கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் 10 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் அவரது உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டனர் அக்கம்பக்கத்தில் உள்ளோர்.

கடைசியாக ஒரு முடிவெடுத்து 4 பேர் கொண்ட ஒரு குழுவினர் அவரை கயிறு கொண்டு கட்டி வைத்து, ஆடைகளை பலவந்தமாகக் களைந்து பொதுமக்கள் முன்னிலையில் குளிப்பாட்டினர்.

10 ஆண்டு கால அழுக்கு ஆயிற்றே. சோப்பு போட்டால் போகுமா? உடல் முழுவதும் மணலைப் பூசி அழுக்கைச் சுரண்டி, தேய்த்து எடுத்தனராம்.

குளியல் முடிய 4 மணி நேரம் ஆகியதாம்.

இதைப்படிக்கும்போதே "உவ்..வே..' என்று குமட்டுகிறதே. அவரை குளிக்கவைத்த புண்ணியவான்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

இச்சம்பவத்துக்குப் பின் "புனிதப்பட்ட' அந்த நபருக்கு தினமும் ஒரு முறையாவது குளிக்க வேண்டும் என்ற "ஞானோதயம்' வந்துள்ளதாம். தனிமனிதராக இத்தனை காலம் வாழ்ந்துவிட்ட அவர், இப்போது தனக்கு ஒரு துணை கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளாராம்.

இத்தகவலை, கென்யா டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

நன்றி - தினமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
மாமிசத் தாவரங்கள் மனிதனைக் கொன்று தின்னுமா ... ?

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் ... நீங்கள் ஒரு காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள் ... திடீரென பக்கத்திலிருந்த மரத்தின் கிளைகள் உங்களை நோக்கி நீளுகிறது ... நீங்கள் சுதாரித்து விலகுவதற்குள் உங்களின் ஒரு கையைச் சுற்றிப் பிடித்துக் கொள்கிறது... இன்னொரு கையால் அதை விடுவிக்க நினைக்கிறீர்கள் ... ஆனால் பலனில்லை .. காலம் கடந்துவிட்டது .. உங்களின் இன்னொரு கையையும், இடுப்பையும் சுற்றிவளைத்துவிடுகிறது ... அதன் கிளைகள் உங்களை மொத்தமாக ஆக்கிரமித்துவிடுகிறது .. .. நினைப்பதற்கே கொஞ்சம் அச்சமாக இல்லை... ? இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் கதைகளில் படித்திருக்கலாம் ... உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சி சாத்தியமா ... ? இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது ... !

மாமிசத்தை உண்ணும் தாவரங்கள் நிறையவே இருக்கின்றன... மிகப் பிரபலமான உதாரணம் நெபந்தஸ் என்ற தாவரம் .. தாவரங்கள் என்பவை விலங்குகள் உண்பதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோமே.. எப்படி சில தாவரங்கள் நான்-வெஜிடேரியனாக மாறிவிடுகின்றன... சிங்கம் , புலி போல இத்தாவரங்கள் சுத்தமான அசைவப் பிரியர்களா இவை... ? இதற்குப் பதில் என்னவென்றால் இல்லை என்பதுதான் .. பிறகு ஏன் இவை மாமிசம் சாப்பிடுகின்றன ...? நமக்குப் போரடித்தால் வாரத்தில் ஒரு தடவை ஞாயிற்றுக் கிழமை சிக்கன் 65 சாப்பிடுகிறோமே அது போலவா..?

<img src='http://www.ucalgary.ca/~dmjacobs/edts325/flytrap/trap2.jpg' border='0' alt='user posted image'>

உண்மையில் மற்ற தாவரங்களைப் போலவே இத்தாவரங்களுக்கும் பச்சையம் உண்டு .. இவை வாழ நீர் , சூரிய ஒளி , காற்று அவசியம் ... ஆனால் இவை தவிர சில முக்கியத் தனிமங்களும் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன .. பெரும்பாலும் அத்தனிமங்கள் இவை வளரும் நிலத்தில் இருப்பதில்லை .. அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கும்.. எனவே இந்த நைட்ரஜன் போன்ற தனிமங்களுக்காகத்தான் பூச்சி போன்ற சிறிய விலங்குகளைத் தின்றுவிடுகின்றன..

சமீபத்தில் நெதர்லாந்து போயிருந்தபோது இந்த நெபந்தஸ் தாவரம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது .. சின்ன பூச்சட்டியில் முழுத்தாவரத்தையும் விற்பனைக்காகத் தொங்கவிட்டிருந்தார்கள் .. இத்தாவரம் பூச்சிகளைக் கவர அதற்கே உரிய ஒரு வாசனையைப் பரப்பும்.. இந்த வாசனையை நுகர்ந்து பூவுக்குள் பூச்சி நுழைந்தவுடன் தாவரம் தயாராக வைத்திருக்கும் மூடியைக்கொண்டு அப்பூவை மூடிவிடும் .. அப்புறமென்ன உள்ளே போன பூச்சியின் கதி அதோ கதிதான் ..

ஆனால் நாம் பொங்கலுக்குக் கரும்பைக் கடித்து, அரைத்து தின்பதுபோல பூச்சியைத் தின்ன அத்தாவரத்துக்குப் பற்கள் இல்லை .. ஆனால் மற்ற படி நாம் உணவைச் ஜீரணிப்பதுபோலத்தான் அதுவும் ஜீரணிக்கிறது... பூச்சியைப் பிடித்ததும் அந்தப் பூ ஒரு சின்ன வயிறு போலவே செயல்பட ஆரம்பிக்கிறது ... மெதுவாக ஒரு திரவத்தைச் சுரக்கிறது .. அந்தத் திரவம் பூச்சியின் முழு உடலையும் கரைத்த பின்னர் அதிலுள்ள , கனிமங்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது ... சரி .. இது சின்னப் பூச்சிகளுடன் நிறுத்திக்கொள்கிறதா ... இல்லை... சிறிய தவளைகள் , சில சமயம் எலிகள் கூட இத்தாவரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.. ஆனால் மனிதனைத் தின்னுமளவுக்கு தாவரங்கள் இல்லை என்பதே உண்மை .. மனிதனைத் தின்னும் என்ற வதந்தி பரவக் காரணம்... பல மீட்டர் வரை வளரும் அமர்போபாலஸ் டைட்டானியம் போன்ற அசைவத்தாவரங்களாக இருக்கலாம்.. இவை வளர்ந்தவுடன் பூச்சிகளை ஈர்க்க நம்மால் சகிக்கமுடியாத துர்நாற்ற்த்தைப் பரப்பும், கிட்டத்தட்ட அந்த நாற்றம் ஒரு மனிதன் அந்த பூவுக்குள் இறந்து,அழுகிக்கிடப்பதைப் போல் இருக்குமாம்... இது போல் நிறையத் தாவரங்கள் இருக்கின்றன.. இதனால் இத்தகைய கட்டுக்கதைகள் பரவியிருக்கலாம்...

<img src='http://static.userland.com/manilasites/images/rainforrestManilaSitesCom/whatabigflowerrainforest.jpg' border='0' alt='user posted image'>

உண்மையில் ஒருவர் சொன்னது போல , அசைவத்தாவரங்களால் மனிதனுக்கு ஆபத்து என்பதை விட மனிதனால அசைவத்தாவரங்களுக்கு ஆபத்து என்பதே பொருத்தமாக இருக்கும்... இவற்றிலன் பிரபலத்தன்மையே அவற்றுக்கு ஆபத்தாகிவிட்டது ... இதைக் கண்டவுடன் வேரோடு பிடுங்கி , விற்றுவிடுகின்றனர்.. இதனால் இப்போது இத்தாவரங்கள் அருகி வருகின்றன....

நன்றி - முத்து இணையம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
இந்தியா Vs பாகிஸ்தான் விவரங்கள்

<img src='http://www.kumudam.com/phototoday/09-03-04/1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/phototoday/09-03-04/t1.jpg' border='0' alt='user posted image'>

கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் டூருக்குச் செல்கிறது. இந்த தொடரில் 3 டெஸ்ட் மேட்ச்களும், 5 ஒரு தினப் போட்டிகளும் நடக்கவிருக்கின்றன. இந்த கிரிக்கெட் போட்டி இரு நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் எல்லா விளையாட்டு அரங்குகளின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துபோயின. பொதுவாக இந்தியா _ பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால் ஒரு யுத்தத்தைப் போன்றுதான் இரு நாடுகளின் மக்களுக்கு. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்கூலி, பல வெற்றிகளை கண்டவர்தான். ஆனால், பாகிஸ்தானுடன் ஏற்படும் மோதலில் மிகப்பெரிய வெற்றியை நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கவேண்டும் என்பதே அவருடைய அவா. அதற்காக தீவிரப் பயிற்சியில் இந்தியக் கிரிக்கெட் அணி இறங்கியிருக்கிறது. அப்படியே பாகிஸ்தான் அணியும் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறது. இதுவரை எந்த கேப்டனும் பாகிஸ்தானை, பாகிஸ்தானில் தோற்கடித்ததில்லை. அந்த சாதனையை கங்கூலி அண்ட் பார்ட்டி செய்வார்கள் என இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஒருதினப் போட்டிகள்

மார்ச் 13 பகல் கராச்சி
மார்ச் 16 பகல்/இரவு ராவல்பிண்டி
மார்ச் 19 பகல் பெஷாவர்
மார்ச் 21 பகல்/இரவு லாகூர்
மார்ச் 24 பகல்/இரவு லாகூர்


டெஸ்ட் போட்டிகள்

மார்ச் 28_ஏப்ரல் 1 முல்தான்
ஏப்ரல் 5_9 லாகூர்
ஏப்ரல் 13_17 ராவல்பிண்டி



போட்டிகள் நடக்கவிருக்கும் இடங்களைப் பற்றி...

கராச்சி : கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் பல டெஸ்ட் மேட்ச்கள் நடந்திருக்கின்றன. இந்த நேஷனல் ஸ்டேடியம் பாகிஸ்தானில் உள்ள பழைமையான விளையாட்டு அரங்குகளில் ஒன்று. பிட்ச் ரொம்ப ஸ்லோவாக இருக்கும். தற்போது, பிட்ச் புதுப்பிக்கப்பட்டது.


ராவல்பிண்டி : ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் அண்மைக்காலத்தில் கட்டப்பட்டது. இந்திய துணைக்கண்டத்தில் உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட்டபோது இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டது. பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்திலிருந்து 3 கி.மீ. தூரம் மட்டும்தான் இருக்கின்ற இந்த ஸ்டேடியத்தில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பார்வையாளர்கள் போட்டியைப் பார்த்து ரசிக்கலாம்.


பெஷாவர் : அர்பாப் நியாஸ் ஸ்டேடியம் 1995_ல் கட்டப்பட்டது. இந்த ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கும் ஸ்பின்னர்களுக்கும் கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.
ஃபைசலாபாத் : ஃபைசலாபாத் ‘மான்செஸ்டர் ஆஃப் பாகிஸ்தான்’ என்று குறிப்பிடப்படுகிறது. நம் மும்பையைப் போல் ஃபைசலாபாத்திலும் நூற்பாலைகள் அதிகம். இங்குள்ள இக்பால் ஸ்டேடியத்தின் கெபாசிட்டி 25,000 பேர்.


லாகூர் : லாகூரிலுள்ள கடாஃபி ஸ்டேடியம் அண்மைக்காலத்தில் கட்டப்பட்டது. 1996 உலகக் கோப்பைப் போட்டி இங்குதான் நடந்தது. இந்த ஸ்டேடியத்தில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அலுவலகம் உள்ளது.


முல்தான் : இங்குள்ள முல்தான் கிரிக்கெட் கிரவுண்ட் 20,000 பேர் கெபாசிட்டி கொண்டது. இந்த முல்தான் பட்டிணம் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்_உல்_ஹக் உடைய சொந்த ஊர். இது பாகிஸ்தானிலுள்ள பழைமையான ஊர்களில் ஒன்று.

நன்றி - குமுதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
நன்றி பிபிஸி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
[b]பிபிஸி
சுவாரஸ்யமான செய்திகளைத் தருவதற்கு நன்றி.
Nadpudan
Chandravathanaa
Reply
#6
நன்றி
Reply
#7
குண்டராய் பார்த்து குறைக்காவிட்டால்...

<img src='http://img.coxnewsweb.com/B/06/97/34/image_534976.jpg' border='0' alt='user posted image'>

<b>Big Mac, Double Cheese, Super Size fries and "DIET" Coke please</b>

மதிய உணவு எப்போதும் வெளியில்தான் சாப்பிடுவது வழக்கம் (மொத நாள் ராத்திரி (சமைச்சி)தின்னதுல மிச்சமிருக்கிறத மறுநாளும் திங்க மனசில்லீங்க :-) ). இலை தழை, சைனாக்காரன் சோறு (ஃபிரைடு ரைஸ் இல்லை; வெறும் சோறு!), Subway, Quizons, எப்போதாவது பீட்சா (இதை விவேக் பாணியில் சொன்னால் ஓடிப்போய்விடுவீர்கள் :-) பார்க்க படம்:எ20உ18) என்று ஒரு 'சிறிய' வட்டத்திற்குள்தான் சுற்ற வேண்டியுள்ளது.

போன வாரம் Quiznos-ல் ஒரு சின்ன சப் (small sub, size:6") ஆர்டர் செய்துவிட்டு நகரும்போது பின்னாலிருந்த ஒரு மாணவன் (12/13 வயது இருக்கலாம்), நான் ஆர்டர் செய்ததைவிட நான்கு மடங்கு பெரியதை ஆர்டர் செய்தான். அவனுடன் மூன்று நண்பர்களும் இருந்தார்கள். ஆனால், அவர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சரி, ஒன்று வாங்கி எல்லோரும் பிரித்து சாப்பிடப்போகிறார்கள் என்று நினைத்தேன்.

மாணவர்கள் இல்லையா? செலவு செய்ய கையில் அதிகம் பணம் இருக்காது, தனித்தனியாக வாங்குவதைக்காட்டிலும் இப்படிச் சேர்ந்து வாங்கினால் செலவு குறையும், பசங்க பயங்கரமாக யோசித்துச் செய்கிறார்கள் என்று அவர்களை மனசுக்குள் பாராட்டினேன்.

சப் ரெடியாகிவிட்டது. எடுத்துக் கொண்டு போய் சாப்பிட ஆரம்பித்தான். நானும், அவனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே. நான் மட்டுமில்லை அவன் நண்பர்களும் அவனை வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்; சாப்பிடவில்லல. சரி, அவன் பாகத்தை முடித்ததும் மற்றவர்கள் சாப்பிடுவார்கள் என்று நினைத்தேன் (சப், நான்கு துண்டுகளாக்கப்பட்டிருந்தது, வழக்கம் போல). ஒன்று முடிந்தது.

வாயை லேசாகத் துடைத்துவிட்டு, அடுத்த துண்டைக் கையிலெடுத்தான். இப்போது என் எண்ணம் வேறு மாதிரியாயிற்று. அதை இரண்டு பேர்தான் சாப்பிடப்போகிறார்கள். இப்போது அவன் கூட இருப்பவர்கள் யாரும் சாப்பிடப்போவதில்லை. இன்னொருவன் வந்தபிறகு (அவசர வேலைக்காக போயிருக்கலாமில்லையா?), மீதியை அவன் சாப்பிடுவானாயிருக்கும் என்று நினைத்தேன்.

இரண்டாவது துண்டும் முடிந்தது. ஒரு சுற்று சுற்றிப்பார்த்தேன். யாரும் இவர்களைத் தேடி வரவில்லை. பையன் வெற்றிகரமாக மூன்றாவது துண்டை கையிலெடுத்தான்.
இனிமேலும் வேறுமாதிரியாக நினைக்க முடியுமா என்னால்?

ஆஃபீஸில் சாப்பாட்டுப் பிரியர் ஒருவர் இருக்கிறார் (அமெரிக்கர்). எதன் மீதாவது "சாப்பாடு" என்று எழுதி ஒட்டிவிட்டால், அது எதுவாக இருந்தாலும் தின்றுவிடும் ரகம்.

ஒரு நாள் டீம் லஞ்ச்சில் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய 5 வயது மகன், வீட்டில் அவர் சாப்பிடும் அளவுக்கு சாப்பிடுகிறான் என்றார். 'அவன் வளர, வளர தீணி போட்டு மாளாது போலிருக்கிறது. என் சம்பளத்தில் பாதியை மளிகை சாமான்(grocery) வாங்குதற்கு ஒதுக்க வேண்டும் போலிருக்கிறது' என்று நகைச்சுவையாகச் சொன்னார்.

அளவுக்கதிகமாக திண்பதில் சிறுவர்களுக்கு பெரியவர்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை இங்கே. தின்றுவிட்டு சும்மா இருக்க மாட்டார்கள். 'இந்தக் கடையில் தொடர்ந்து நான் தின்றதால் கொழுத்துவிட்டேன். எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும்' என்று வழக்குத் தொடுப்பார்கள். இந்த மாதிரி ஆட்களை வைத்தே பிழைப்பை நடத்த வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள்.

இந்த மாதிரி வழக்குகளை எல்லாம் "அமெரிக்காவில் மட்டும்" (Only in America) என்ற தலைப்பிட்ட 'சாகா வரம்' பெற்ற பல மடல்களில் பார்த்திருக்கலாம்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து அமெரிக்கவின் 'ஹவுஸ்' அவையில் (இன்னொரு அவை செனட், பெரும்பாலானோர் அறிந்தது.), "Personal Responsibility in Food Consumption Act" என்ற சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்கூறிய 'கொழுப்பெடுத்த' வழக்குகளைத் தொடுக்க முடியாது.

என் கேள்வியெல்லாம், இதையெல்லாம் சட்டம் போட்டுதான் தடுக்க வேண்டுமா? எதைத் திண்ணலாம் எவ்வளவு திண்ணலாம் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாத மூடர்களாகிவிட்டார்களா மக்கள்?

குறைந்த விலையில் நிரம்பக் கிடைக்கிறதே (வாழ்க Sams Club, Costco இத்யாதி கடைகள்) என்று வாங்கி வந்து அதெல்லாம் வீணாகப் போய்விடக்கூடாதே என்று தின்று தீர்ப்பது எந்த வகையில் அறிவுப்பூர்வமான செயல்?

நல்ல நாடு, நல்ல மக்கள், (மக்களுக்கேற்ற) நல்ல அரசாங்கம் :-)

குறிப்பு:

இந்த சட்டம் "276-139" என்னும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுவிட்டது. செனட்டில் இருக்கும் நூறு பேரும் தலையாட்ட வேண்டும்; கடைசியாக பெருந்தலைவர் ஜி.டபிள்யூவின் கையெழுத்தும் பாக்கி. வெகு விரைவில் சட்டமாகி விடும். மெட்டொனால்டும், பிட்ஸா ஹட்டும் போண்டியாகக் கூடாது என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். தவறான உணவு வகைகளை மொக்குவது; அனுபவித்து ருசித்த இடத்தையே குற்றஞ்சொல்லி, வழக்கு தொடுத்து உணவின் சுவைதான் என்னை சாப்பிட வைத்தது என்று விதண்டாவாதம் செய்பவர்களைத் தடுக்க ஒரு சட்டம். என்ன நாடு இது?

நன்றி - பரி/பாலா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
வெளிநாட்டில் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்ட இந்தியர் ஒருவரின் அனுபவம் .....


<b>வேகாத உணவு</b>

அமெரிக்காவில் வந்த புதிதில் நண்பன் ஒருவன் ரொட்டி, ஜாம், சில மைக்ரோவேவில் வைத்து சாப்பிடும் சமாச்சாரங்கள் வாங்கி கொடுத்தான். ஓட்டலில் தங்கியிருந்த சில நாட்களில் சாப்பாட்டிற்கு அதை வைத்து ஒப்பேத்தியாயிற்று. அப்புறம் வீடு மாறி கார் வாங்கி நானாக வேலைக்குப் போக ஆரம்பித்தவுடன் நானே இரை தேட வேண்டிய நிலைமை. அரிசிச் சாப்பாடு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டுப்படவேயில்லை. ஆபீஸில் மதிய உணவிற்கு கேண்டீன் பக்கம் எட்டிப் பார்த்தேன். மெயின் அயிட்டங்களில் எது நடமாடும் அயிட்டங்கள் இல்லாதது என்று தெரியவில்லை. வெஜ்ஜீ பர்கர் என்று எழுதியிருந்தது ஒரு தட்டுக்கு மேல். அதை மட்டும் ஒன்று எடுத்துக் கொண்டு சாப்பிடும் இடத்துக்கு வந்தேன். டீக்கடை பன் மாதிரி தான் இருந்தது. ஒரு வாய் கடித்தால் கொஞ்சம் இலை தளைகள் தட்டுப்பட்டது. இரண்டாவது வாய் கடித்தால் எதோ ரப்பர் மாதிரி இருந்தது. என்னது வெஜ்ஜீ என்று போட்டிருந்தானே என்று பன்னை பிரித்து உள்ளே பார்த்தேன். வட்டமாக வடை சைசில் எதோ ஒன்று. மாமிசம் மாதிரி தெரியவில்லை. தைரியமாக இன்னொரு வாய். புண்ணாக்கு ஞாபகத்திற்கு வந்தது.

எள்ளுப் புண்ணாக்கு சாப்பிட்டுருக்கிறேன். செக்கில் போட்டு எண்ணை எடுத்த பிறகு மீதி இருப்பது தான் புண்ணாக்கு. அப்படியே சாப்பிட்டால் கசக்கும். அதனுடம் வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும். ஆனால் மாட்டுக்கு வேறு சில புண்ணாக்கு வகையறாக்களை வைப்பார்கள். அது போலத்தான் இருந்தது பார்ப்பதற்கு. இதை எப்படி திங்கிறார்கள். நைசாக நடுவில் இருந்ததை எடுத்து விட்டு மீதி இருந்த பன்னை மட்டும் சாப்பிட்டதும் மேலும் பசித்தது. இதை மட்டும் சாப்பிட்டு எப்படி உயிர் வாழ்கிறார்களோ. இதில் எப்படி எடையைப் பற்றி வேறு கவலை வருகிறதோ? பக்கத்தில் இருந்த வெண்டிங் மெசினுக்குப் போய் இரண்டு சாக்லேட் பார்கள் வாங்கிக் கொண்டு திரும்பினேன், வீட்டிற்கு போகும் போது மறக்காமல் டிபன் பாக்ஸ் வாங்கிக் கொண்டேன். எதோ சமைத்து எடுத்துட்டு வர்ர மாதிரி கனவெல்லாம் கிடையாது. இன்னும் சுடு தண்ணீர் எக்ஸ்பெர்ட் தான். வீட்டிருந்து நாலு சிலைஸ் பிரட் அந்த புண்ணாக்கு பர்கரை விட எவ்வளவோ தேவலை.

அப்புறம் பிட்ஸா. இது இந்தியாவிலேயே கொஞ்சம் சுவைத்திருந்தேன். ஆனால் நிறைய பேருக்கு அது தான் தினசரி உணவு இங்கே. கீழே பிரட், நிறைய சீஸ். அதன் மேல் கண்ட கருமாந்தரங்களையும் தூவினால் பிட்ஸா ரெடி. இதெல்லாம் தாங்க முடியாமல் பக்கத்திலிருந்த இந்திய உணவகத்திற்கு சென்றால் அங்கு சாம்பார் எதை வைத்து செய்கிறார்கள் தெரியவில்லை. அது மாதிரி சாம்பாரை இது வரை சுவைத்ததில்லை. சட்னி ஐந்தாட்டு திட்டம் மாதிரி தொலைநோக்கோடு செய்து வைத்து விடுவார்கள் போல.

வீட்டில் ரூம் மேட் தயவில் எப்போதாவது சமையல் நடக்கும். அவனுடைய முறையில் யார் வேண்டுமானாலும் சீக்கிரம் சமையல் கற்றுக் கொள்ளலாம். எந்த வகை சமையல் பொருட்கள் இருந்தாலும் சமையல் செய்வது எளிது. எல்லாவற்றிருக்கும் ஒரே அல்காரிதம்(செய்முறை) தான். காய்கறி எல்லாம் வெட்டி முடித்தவுடன் சட்டியில் கொஞ்சம் எண்ணை ஊற்றி சீரகம் கடுகு இவையெல்லாம் போட வேண்டும். சட்டி சூடானவுடன் வெங்காயம் வதக்க வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து என்ன காய் வெட்டி வைத்திருக்கிறோமோ அதை போட்டு மேலும் வதக்க வேண்டும். நடு நடுவே கலர் கலராய் ஊரில் இருந்து கொண்டு வந்த பாட்டிலில் உள்ள பொடிகளில் ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்பூன். கூட அரிசி என்றால் நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டும். அவ்வப்போது கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுப் பார்த்துக் கொண்டு, எப்போது அடுத்தவர்களும் வாயில் வைக்கிறமாதிரி இருக்கிறதோ அப்போது ஸ்டவ்வை நிறுத்தி விடலாம்.

இப்படி செத்துப் போன நாக்கோடு இப்போது பர்கர் கிங், டாகோ பெல் பக்கம் போக அதிகமாக பயப்படுவதில்லை. டாகோபெல் நான் போனாலே மெக்ஸிகன் பிட்ஸா நோ கௌ என்று சொல்லாமலே ஆர்டர் செய்து விடுகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட் என்பதற்கு வேக உணவு என்பதை விட வேகாத உணவு என்றால் தான் சரியாக இருக்கும்.

நன்றி - நவன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
அமெரிக்காவில் ஒரு 'தனுஷ்'

பாட்டுப் பாடி பரிசு வாங்குபவர்கள் உண்டு. பாட்டில் குற்றம் சொல்லியே பரிசு வாங்குபவர்களும் உண்டு. இதைச் சொன்ன தருமியும் நக்கீரன் அளவிற்கு நம் மனதில் நின்றவர்தான். இதே போல் அமெரிக்காவில் ஒரு 'பாட்டு திறன்' போட்டி.


எஸ் வி ரமணனின் சப்தஸ்வரங்கள் இன்னும் பிரமாண்டமாக நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு போட்டி 'அமெரிக்கன் ஐடல்'என்ற பாட்டுப் போட்டி. திறமைசலிகள் தேர்ந்தெடுக்க பட்டு உலகளாவிய அங்கீகாரம், பிரபல நிறுவனங்களிலிருந்து பாட அழைப்பு, ஒலினாடக்கள், ஆல்பங்கள் என்று வாய்ப்புக்கள் தேடி வரும். ஆனாலும் அமெரிக்க இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் அசாத்திய தன்னம்பிக்கை. கர்ண கடூரமாக கத்தி, ஒற்றை குரலும், இரட்டை குரலுமாகப் பாடி தேர்ந்தெடுக்க படவில்லையென்றால் அமெரிக்கன் ஆங்கிலத்தில் நடுவர்களையும் போட்டியையும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டி கம்பீரமாக வெளியேறுவதுதான் வழக்கம். இந்த முறையும் அதேபோலத்தான். நடுவர்களாக இறுக்கும் சைமோன்கோவெல், பாலா அப்துல்,ராண்டி ஜாக்சன் மூவரின் முக பாவங்களும், கேலியும், நையாண்டியும் பாட்டை விட அதிக ரசிப்பிற்குரியது. சைமோன் பாடி முடித்ததும் ரொம்ப உணர்ச்சிகரமாக 'அமேசிங்''அமேசிங்லி ட்ரெட்புல்' என்று சொல்வதை கேட்கவே படு காமெடியாக இருக்கும்.


வில்லியம் ஹங் ஹாங்காங் சீனர். ரிக்கி மார்டின் பாடிய பாட்டை 'ஷி பங்க் ஷி பங்க்' என்று கையை அந்த மூலைக்கும் இந்த மூலைக்கும் அசைத்துப் பாடி எல்லோர் மனதையும் தட்டிச் சென்றார். ஆனால் பாட்டினால் இல்லை. அவர் பாடிய பாட்டை கேட்ட சைமோன் "உன்னால் பாட முடியாது, நடனமும் ஆட முடியாது இதை பற்றி நீ என்ன நினைக்கிறாய்" என்று கேட்டதற்கு "என்னால் முடிந்த அளவிற்கு செய்தேன்.இதில் வருத்த படுவதற்கு ஒன்றுமில்லை" என்று சாதாரணமாகச் சொன்ன பதில் அசாதாரண விளைவை ஏற்படுத்தியது. வில்லியம் ஹங் பாடிய பாட்டும், அவர் சொன்ன பதிலும், அவரது அப்பாவிதத்தனமான முகமும் அவரை பிரபலமாக்கி விட்டது. அமெரிக்கன் ஐடலில் தேர்ந்தெடுக்கபடாவிட்டால் என்ன? ஏப்ரல் 6-ம் தேதி அவரது இசை வட்டு வெளிவரப்போகிறது. நம் பாஷையில் சொன்னால் பல்லும் பவிஷ§மாக இருக்கும் இந்த 18 வயது இளைஞனுக்கு கையையும் காலையும் கோணலாக அசைத்துக் கொண்டு சுருதி தப்பி பாடிய பாட்டுக்கு வெப்சைட்டே இருக்கிறது.


மக்களின் சைக்காலஜியே புரிவதில்லை. தனுஷ் எப்படி பிரபலமானார்? பொங்கலுக்கு 'புதுகோட்டையிலிருந்து சரவணன்' ரீலீசாகும் போது 'விருமாண்டி' ரீலீஸ் செய்ய கமல்ஹாசன் ஒரு நிமிடமாவது யோசித்துத்தான் இ¤ருப்பார்.


எது எப்படியோ அமெரிக்காவிலும் ஒரு 'மன்மத ராசா' பிரபலமாகி விட்டார். நம் தமிழர்களின் ரசனையும் உலகத்தோடு ஒத்துப் போய் உலகமயமாகும் முயற்சியின் முதல் வெற்றியாக எடுத்துக் கொள்ள வெண்டியதுதான்.


வில்லியம் ஹங், தனுஷ் இருவருக்கும் ஒரு பொது ஒற்றுமை இருப்பதை உணர முடிகிறது. எளிமையோடு கூடிய அப்பாவிதனம். ஆங்கிலத்தில் சொல்வார்களே 'ரஸ்டிக் பியூட்டி'. வில்லியம் ஹங் பல் டாக்டரிடம் போய் பல்லை சரி செய்து கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தையே மாற்றி கொண்டு விடலாம். தனுஷ் இன்னும் இரண்டு பட வெற்றிகளுக்குப் பிறகு இன்னும் சதை போட்டு இளம் பெண்களின் கனவு நாயகனாகி விடலாம். ஆனாலும் இவர்கள் இப்படி இருப்பதுதான் அழகு.

<b>இதோ அவரோட பாட்டை பாருங்க </b>....
http://www.williamhung.net/play.cfm?file=m...nce2_030104.wmv
நன்றி - சித்ரா ரமேஷ
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
உயரமான நாற்காலி

<img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/03/27_chair.jpg' border='0' alt='user posted image'>

ஜெர்மனியின் வெய்ல் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மிக உயரமான நாற்காலியின் கீழே நின்று பேசிக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள்.

நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#11
நோபல் பரிசைப் பாருங்க .... !!!

<img src='http://homepage.rub.de/muthu.karuthadurai/weblog/nobelmedal-front.jpg' border='0' alt='user posted image'><img src='http://homepage.rub.de/muthu.karuthadurai/weblog/nobelmedal-back.jpg' border='0' alt='user posted image'>

படத்தில் இருப்பதுதான் நோபல் பரிசு.. அதாவது நோபல் பரிசினை வெல்லும் சாதனையாளர்களுக்குக் கொடுக்கப்படும் பதக்கம்...

இப்பதக்கத்தின் ஒரு பக்கம் இருப்பது இப்பரிசை உருவாக்கிய, வெடிமருந்து கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் என்ற விஞ்ஞானி.. இப்பக்கத்தில் அவர் பிறந்த வருடமும் , மறைந்த வருடமும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.

அதன் மறுபக்கத்தில் இயற்கைத் தேவதையும் .அதற்கு ஆடைபோர்த்தும் விஞ்ஞானியும் இரு உருவங்களாய்ச் சித்தரிக்கப்பட்டுள்ளனர் .. இப்பக்கத்தில் " Inventas vitam juvat excoluisse per artes " என்ற இலத்தீன் மொழி வாசகம் உள்ளது. இவ்வாக்கியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தால் " அறிவியல் வாழ்க்கையை மேம்படுத்துகிறது , கலை அதை அழகுபடுத்துகிறது " என்பதுபோல வரும் ..

அருகிலுள்ள "REG. ACAD. SCIENT. SUEC." என்ற வாசகம் ராயல் சுவீடிஸ் அகாடமி ஆ·ப் சயின்ஸஸ் என்பதின் சுருக்கத்தைக் குறிக்கிறது .அப்பக்கத்தின் கீழ் பகுதியில் பரிசு அறிஞரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது ..

இன்னும் துல்லியமாய்ச் சொன்னால் நாம் பார்க்கும் இந்தப் பதக்கம் லினஸ் பாலிங் என்ற வேதியியல் அறிஞருக்கு 1954-ல் கொடுக்கப்பட்ட பதக்கம்.. இவரே 1962 - ல் அமைதிக்கான நோபல் பரிசையும் வென்று பகிர்ந்தளிக்கப்படாத இரு நோபல் பரிசுகளைப் பெற்ற ஒரே நபர் என்ற பெருமையையும் பெற்றிருப்பவர். மூலக்கூறுகளில் அணுக்கள் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்று லினஸ் பாலிங் ஆராய்ந்தமைக்காக அவருக்கு இப்பரிசு அளிக்கப்பட்டது...

இவ்வாண்டு இயற்பியல் மற்றும் வேதியியலுக்குக் கொடுக்கப்படும் பதக்கங்களும் இதே மாதிரியில்தான் இருக்கும் ஆனால் இவ்வருடம் பரிசு பெரும் அந்தந்த அறிஞரின் பெயர் பொறிக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் இப்பதக்கத்துடன் இன்றைய மதிப்புப்படி அவர்களுக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் ( நம்மூர் பணத்துக்குத் தோராயமாய் 6 கோடி ரூபாய் ) பரிசாக வழங்கப்படுகிறது ..

நன்றி - முத்து
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
பல விசயங்களை இங்கு கொண்டு வருகிறீர்கள். நன்றி பிபிசி!
.
Reply
#13
அப்ப சோழியான் அண்ணா இது வரைக்கும் இதுகலக் கண்டது கேட்டதில்லையே....????!
அட கடவுளே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதில போய்த் தேடுங்கோ எல்லாம் கிடைக்கும்...தேடப்பஞ்சி எண்டா....??! :roll:

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
எத்தனை என்று தேடுவது?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#15
நீ காயப்பட்டால் எனக்கு வலிக்கிறது.. !

சமீபத்தில் சயின்ஸ் என்ற பிரபலமான விஞ்ஞான இதழில் வெளிவந்த சுவாரசிய விஷயம் இது. நாம் பலதடவை "... நீ காயம்பட்டால் எனக்கு வலிக்கிறது..." , " ..உனது வலியை நானும் உணர்கிறேன்.." என்பது போன்ற டயலாக்குகளை சினிமாமாவில் கேட்டிருக்கிறோம் .. இது மேலோட்டமாய்ப் பார்ப்பதற்கு "...தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா..? " என்ற பழமொழியை ஞாபகப் படுத்தலாம். ஆனால் ஒருவருக்கு வலிப்பதை இன்னொருவர் உணரக்கூடிய சாத்தியம் உள்ளது என்று விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். லண்டனில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. மனமொத்து வாழும் 16 தம்பதியரைத் தெர்ந்தெடுத்து தம்பதியரில் ஆண் அல்லது பெண்ணுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்து மற்றவரின் மூளையை எம்.ஆர்.ஐ (மேக்னடிக் ரெஸனன்ஸ் இமேஜிங்) மூலம் ஆராய்ந்தபின் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இன்னும் இது பற்றிக் கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்வதென்றால் அவர்கள் செய்த சோதனை இதுதான். முதலில் தம்பதியர் இருவரில் ஒருவருக்கு கையில் ஒரு வினாடி மின்சார அதிர்ச்சி கொடுத்து அதன் விளைவாய் மூளையில் நிகழும் மாற்றங்களை எம்.ஆர்.ஐ மூலம் கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள். மின் அதிர்ச்சி கொடுக்கும்போது மூளையின் எப்பகுதி அதிகமாகத் தூண்டப்படுகிறது, பாதிக்கப்படுகிறது என்பதைக் கவனித்திருக்கிறார்கள். பின்னர் அவரது துணையை அழைத்து அதேபோல் ஒரு வினாடி மின் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள், இந்த முறை தனது துணைக்கு மின் அதிர்ச்சி கொடுக்கும்போது அவரால் துணையின் முகத்தை மட்டும் பார்க்கமுடியும்படி செய்திருகிறார்கள், ஆனால் துணைக்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்படுகிறதா இல்லையா, என்பதைத் அதிர்ச்சி கொடுக்கும் கருவியின் இண்டிகேட்டர் மூலம் பார்த்துத் தெரிந்துகொள்ள இயலாது. ஆனாலும்கூட அவருக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டால் எப்பகுதிகள் மூளையில் தூண்டப்படுமோ அதேபகுதிகள் துணைக்கு மின் அதிர்ச்சி கொடுக்கும்போதும் தூண்டப்பட்டது. மேலும் இந்த விளைவு மிக மனமொத்து இருக்கும் தம்பதியரிடையே வலிமையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி - முத்து
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
ஒரு சந்தேகம்! ஆணுக்கா பெண்ணுக்கா தூண்டப்பட்டது?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#17
எனக்கு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை மட்டும்தான் கிடைத்தது. அதில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. முழுக்கட்டுரையும் ஆங்கில வடிவத்தில் சயன்ஸ் இதழில் (http://www.sciencemag.org/) உள்ளது. அதனை பணம் கட்டித்தான் படிக்க முடியும் என்பதால் படித்து பதில் எழுத முடியவில்லை. மன்னிக்கவும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#18
sOliyAn Wrote:ஒரு சந்தேகம்! ஆணுக்கா பெண்ணுக்கா தூண்டப்பட்டது?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b] ?
Reply
#19
நாம எழுதுறது பேனாவுக்கு ஞாபகம் இருக்குமா.. ?

<img src='http://images.amazon.com/images/P/B00006JP23.01.PT01.LZZZZZZZ.jpg' border='0' alt='user posted image'>

நம்மில் பலருக்குத் தெரிந்த விஷயம்தான். பனைவோலைகளில் எழுத்தாணி கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்கள் எழுதியபின் பேனாவும் , காகிதமும் வந்தது.. முன்பெல்லாம் மாவாட்டும்போது உரல் அசையாமல் இருக்க ,குழவி மட்டும் சுற்றும். இன்று குழவி அசையாமல் இருக்க , உரல் மட்டும் சுற்றுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் உலகத்தில் என்னதான் வரப்போகுதோ என்று எங்கள் ஊரில் பலர் ஆச்சரியப்பட்டதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டேன். சில நாட்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேனா பற்றிப் பார்த்தேன். புதிதாய்ச் சந்தைக்கு வந்திருக்கிறது. பார்க்கும்போதே ஆசையாய் இருக்கிறது. விலை கொஞ்சம் அதிகம்(?). கிட்டத்தட்ட 100 யூரோ விலையுள்ள இந்தப் பேனாவில் என்ன விஷேசம் என்றால் பேப்பரில் எழுதிவிட்டு அந்தப் பேப்பரைக் கீழே கூடப் போட்டுவிட்டுப் போய்விடலாம். எழுதிய அனைத்தும் பேனாவுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும்.தேவைப்படும்போது USB போர்ட்டைப் பயன்படுத்தி பேனாவில் இருப்பதைக் கம்ப்யூட்டருக்குள் சேமித்துக் கொள்ளலாம். படம் வரைவது, எழுதுவது என்று சாதாரண பேனாவை வைத்து என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் இதை வைத்தும் செய்யலாம்.இந்தப் பேனாவை வாங்க எனக்கு ஆசையா இருக்குது. "..பேனாவைப் பயன்படுத்தியே பல நாள் ஆகுது.. ஒன்றரை வருஷத்துக்கு முன்னால் நம்ம ஊரிலிருந்து வாங்கி வந்த ரெனால்ட்ஸ் பேனாவே இன்னும் அப்படியே இருக்குது.. இதில் இந்த பேனாவை வாங்கி என்ன செய்யப்போற.." என்று மனச்சாட்சி கேட்பதும் நியாயமாகவேபடுகிறது.

நன்றி - முத்து

இந்த பேனா பற்றிய மேலதிக விபரங்கள் ஆங்கிலத்தில் ...

<b>The pen that remembers everything you write</b>

The Logitech io Pen digitially captures everything you write or draw: notes, ideas, sketches, drawings, email, calendar or To Do list entries, and anything else. Just place the Logitech io in the USB cradle to download your notes in their original, handwritten form to your PC- It's that easy! The Logitech io and its software automatically sort your hand-written notes by the boxes you checked on each page. Meeting notes and drawings go into file folders for easy organization and rapid retrieval. Email is sent. Calendar and To Do, entries are automatically added to your electronic organizer. With the Logitech io, there's no more paging through handwritten notes to find what you need. Just use your computer's search function to quickly and easily access the notes and drawings you want to review, copy, share, or send.

Quickly and easily capture, organize and retrieve everything you write. The Logitech io works with a range of pre-printed paper, from Mead Cambridge Limited notebooks to Post-it Notes from 3M, which are included in the box. What's unique about the paper is the Anoto pattern of tiny pre-printed dots that allows your pen to make an exact copy of your handwriting while you write, and then import it to your computer. Preprinted paper also includes convenient check-boxes to let you specify the type of document - notes, email, appointments, To Do lists. It also provides fields to let you "name" your documents for easy archiving, sending and retrieval. You may also edit and digitally update pages you've already written simply by writing on the original document and docking the pen.

Includes io Personal Digital Pen, Rapid recharging USB cradle, AC adaptor, 5 ink refills, 1 Mead Cambridge Limited Digital Notebook, 1 3M Post-It Notes Pad and software.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#20
டிஜிட்டல் பேனா பற்றிய தகவல் பயனுள்ளதாக இருந்தது நன்றி பிபிசி.

இதேபோல் BlueTooth பற்றிய தகவல் தமிழில் இருந்தால் பகிரிந்துகொள்ளுங்கள் ஒரு சிறு புத்தக ஆக்கத்திற்கு தேவைப்படுகின்றது. ஆங்கிலத்தில் இருப்பதை தமிழிற்கு மாற்ற நேரம் போதவில்லை
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)