06-26-2003, 06:48 AM
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
வார்த்தைகள் விழுங்கி
பார்வைகள் புதைக்கும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
இதயத்தினுள்ளே ஒரு
புூ விழும் உணர்வுகள் தோன்றும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
இதழ்கள் மூடி புன்னகைத்து
செவிமடல் சிவக்க நாணி நிற்கும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
மண்ணின் மார்பில் கோலம்போட்டு
பாதம் தேய மண்ணை நோக்கி
கவிழ்ந்து நிற்கும் பெண்மையின்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
கண்கள் செருக
கரங்கள் பிணைய
இதழ்கள் இணையும்
முத்தத்தின் போது தோன்றும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
வானின் மஞ்சத்தில் பள்ளிகொள்ளும்
பளிங்கு நிலாவை பார்வை வெறிக்க
தலையை வருடி உறங்க மறுக்கும்
விடலையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
விசையின் மீது கரம்வைத்து
இருளை வெறித்திருக்கும்
போராளியின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
கடலின் மீது து}ண்டில் வீசி
அலையை ரசித்துக்கொண்டே
து}ண்டில் அசையும்வரை காத்திருக்கும்
மீனவனின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
மண்ணின் மார்பில் முக்குளித்து
மூச்சுத்திணற வெளிவரத்துடிக்கும்
விதையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
மலர்களுடன் பேசிப்பார்த்தேன்
அர்த்தம் கிடைக்கவில்லை
நிலவிடம் இரந்து கேட்டேன்
விடை பகரவில்லை
உன்னிடம் கேட்கின்றேன்
மௌனத்தின் அர்த்தம் என்ன ?
கொலுசினால் பேசுகின்றாய்
கைவளையல்களால் மொழிகின்றாய்
மௌனத்தின் அர்த்தம் கேட்டேன்
மௌனத்தினால் கொல்கின்றாயே !
கரவை பரணீ
26-06-2003
வார்த்தைகள் விழுங்கி
பார்வைகள் புதைக்கும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
இதயத்தினுள்ளே ஒரு
புூ விழும் உணர்வுகள் தோன்றும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
இதழ்கள் மூடி புன்னகைத்து
செவிமடல் சிவக்க நாணி நிற்கும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
மண்ணின் மார்பில் கோலம்போட்டு
பாதம் தேய மண்ணை நோக்கி
கவிழ்ந்து நிற்கும் பெண்மையின்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
கண்கள் செருக
கரங்கள் பிணைய
இதழ்கள் இணையும்
முத்தத்தின் போது தோன்றும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
வானின் மஞ்சத்தில் பள்ளிகொள்ளும்
பளிங்கு நிலாவை பார்வை வெறிக்க
தலையை வருடி உறங்க மறுக்கும்
விடலையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
விசையின் மீது கரம்வைத்து
இருளை வெறித்திருக்கும்
போராளியின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
கடலின் மீது து}ண்டில் வீசி
அலையை ரசித்துக்கொண்டே
து}ண்டில் அசையும்வரை காத்திருக்கும்
மீனவனின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
மண்ணின் மார்பில் முக்குளித்து
மூச்சுத்திணற வெளிவரத்துடிக்கும்
விதையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
மலர்களுடன் பேசிப்பார்த்தேன்
அர்த்தம் கிடைக்கவில்லை
நிலவிடம் இரந்து கேட்டேன்
விடை பகரவில்லை
உன்னிடம் கேட்கின்றேன்
மௌனத்தின் அர்த்தம் என்ன ?
கொலுசினால் பேசுகின்றாய்
கைவளையல்களால் மொழிகின்றாய்
மௌனத்தின் அர்த்தம் கேட்டேன்
மௌனத்தினால் கொல்கின்றாயே !
கரவை பரணீ
26-06-2003
[b] ?

