01-02-2004, 05:19 PM
[size=18][b]விடியலைத்தேடும்
கனவுகள்...!
நாளாந்த விருந்தினர்போல்
கதிரோன்...
சிலநேரம் மட்டும் வந்தும்
பலநேரம் மறைந்தும்
கார்முகில்கள் அப்படியே...
கரையாமல் மண்ணோக்கி விழ
மழைநாளிலும்
குளிர்பனியிலும் நாட்கள்
நகர்ந்துகொண்டே செல்கிறது...!
"""என்னதம்பி....
சமாதானம் குழப்பிப்போச்சாம்...?
சண்டை வரப்போகுதாம்...???"""
இது...
எங்கள் தினசரிகள்
தேவாரம் பாடுவதுபோல்
தினம்தோறும் வீதியிலும்
தொலைபேசியிலும் பேசிக்கொண்டிருப்பது
வளமையாகிப்போய்விட்டது...!
விடியலைத்தேடிய
காயம்பட்ட கண்களுக்கு
விடியலென்பது கண்ணுக்கெட்டாத
கனவாகிப்போய்விடுமோ...?
தைபிறந்தால்...
கட்டாயம் வழி பிறக்கும் என்கிறார்கள்
இம்முறையும் வழமைபோல
தை பிறந்தாச்சு
ஒரு வழியும் பிறக்காமலே...!
சமாதானம் என்றார்கள்
சாக்கடைதான் ஓடிக்கொண்டிருக்கிறது
அலரி மாளிகைப் பக்கமாக..!
அம்மையாருக்கு அது
©க்கடை என்ற நினைப்பாகிப்போய்விட்டது...!
அமைதி தருகிறேன்
சுதந்திரமாய் வாழவைப்பேன் என்று
வாய்கிழியக் கத்திக்கொண்டு
சிம்மாசனம் ஏறிய அமச்சரய்யா
அமெரிக்காவுக்கும்
இந்தியாவுக்கும்
மாறி மாறி பறந்து பறந்து திரிகின்றார்...!
எந்தயர்மீது இப்போது...
உள்நாட்டு அரசுகள் காட்டும்
அக்கறையை விட
வெளிநாட்டு அரசுகளின்
அக்கறைதான் அதிகம்
புதிதாகப் பிறந்திருக்கிறது
இந்த புரியாத நேசம்..!
நல்லகாலம் பிறக்குது...
நல்லகாலம் பிறக்குதென்று
எங்கிருந்து வந்திருக்கிறது
எல்லைகடந்த இந்த ஞானம்...?
நல்லவேளை
எங்கள் நிலத்தில்
எண்ணைவளம் இல்லை
அதுவும் இருக்குமெனில்
இன்னும் பாசம் பொங்கிவழிந்திருக்கும்..!!
புரிந்துணர்வு ஒப்பந்தம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்...???
முன்பு...
முற்றுப்புள்ளியாய் இருந்தது
இப்போது
மிகப்பெரிய கேள்விக்குறியாய்
எழுந்து நிற்கிறது..!
அவசரமாய் ஒத்திவைத்தும்
அவ்வப்போது கூடும்
பாராளுமன்றம்
;இப்போது
அம்மையாரின் விளையாட்டு மைதானாம்
அமைச்சர்களை ஆட்சியில் இருந்து
தூக்கி விளையாடி
அடிக்கடி தடல்புடலாய்
ஏதேதோ செய்வார்
ஏன் என்று கேள்விகேட்க யார்உண்டு...?
ஏனெனில்
இது அம்மையார் அரசாட்சியாம்..!
அன்னையின்
அறுந்துபோன கனவுகளையும்
தாய்மாமனின்
எண்ணத்தில் தவழும் ஆசைகளையும்
தட்டாமல் அப்படியே
நினைவாக்க வேண்டுமாம்
ஒற்றைக்காலில் நிற்கின்றார் அம்மையார்..!
அது
அவர்கள் ஆட்சி
அவர்கள் அரசாங்கம்
யார்வேண்டுமானாலும் ஆளலாம்
என்னவேண்டுமானாலும் செய்யலாம்
எமெக்கென்ன....?
ஆனால்...
இதுதான் அரசு
இதுதான் ஆட்சி என்கிறார்களே
இப்படிச்சொல்பவரை என்னசெய்யலாம்...???
இது அம்மையின் ஆட்சியில் மட்டுமல்ல
அன்றிலிலுந்து இன்றுவரை இப்படித்தான்
ஆட்கள்தான் மாறி மாறி வந்துபோவர்
ஆனால்....
அடையாளம்
அன்றைக்கும் ஒன்றுதான்
இன்றைக்கும் ஒன்றுதான்..!
அது
அவர்கள் ஆட்சி
அவர்களின் அரசாங்கம்
அரசுமாறினால் நமக்கென்ன...?
அமச்சு மாறினால் நமக்கென்ன...?
எதுவரினும் வரட்டும்
எதுவாயினும் நடக்கட்டும்
நமக்கென்ன கவலை...
பகலோன்போல் எங்கள்
முதலோன் இருக்கும்வரை...???
எத்தடைவரினும்....
தாயாய் எமைத்தாங்க
தலைவன் இருக்கிறான் என்ற
தைரியம் எமக்கு....!
இடர்வென்று
பகைவற்கு இடியாய் இருப்பான்
என்ற இறுமாப்பு எமக்கு...!!!
அதனால்தான்....
புலத்தில் இருந்து
தாய் நிலம்நோக்கிப் பாய்கிறது
நாள்தோறும் நவரச நதி..!
இது பாசம் மட்டும்
சுமந்து பாயும் பாசநதி...!
ஊர்சென்று திரும்பிய உறவுகள்
பாடும் சந்தோஷப்பாட்டு...
வேர்களை தரிசித்துத்திரும்பிய
விழுதுகள்போல்...!
கொள்ளுப்பேரனின்
மழலைப் பிரஞ்சு மொழிகேட்டு
புல்லரித்துப்போனானம் தாத்தன்
செல்லப்பேத்தியின் குறும்புத்தனம்பார்த்து
கண்ணுhறுபட்டுப்போகுமென்று சொல்லிக்கொண்டே
சுற்றிப்போட்டாளாம் பாட்டி
ஒரு வாரம் மட்டும்தான் கண்முன்னே
உறவாடித்திரியுமாம் இந்த உள் ஊர்வேர்களின்
விழுதெறிந்த வெளிநாட்டு உறவுகள்..!
முற்றத்தில் மண்ணள்ளி விளையாடித்திரியும்
இந்தப் பிஞ்சுப் பாதங்கள்
பின்னேரம் புறப்பட்டு
கண்டிவீதி வழியே கொழும்புக்குச் சென்று
மறுநாளே...
தொலைதூரம் பறந்திடுமாம்...
மீண்டும் இனி
ஊர்திரும்பும் செய்திவேண்டி
உயிர்த் துளிர்களின்
பிஞ்சுப்பாதம் படவேண்டி...
கண்ணீருடன் காத்திருக்கின்றதாம்
பிறந்த மண்...!
தங்கைக்கு கைவளையல்
மருமகளுக்கு ஒட்டியாணம்
சித்திக்குச் சேலை
தாத்தாக்கு கரைவேட்டி
மாமாக்கு மோதிரம்
அத்தைக்குக் கால்சதங்கை
பாட்டிக்குக்கூட பட்டுப்புடவை
இவையெல்லாம்
அன்போடு வாங்கிவந்த என்சொந்தம்
இனியெப்போ ஊர்திரும்பும்...?
அழுகிறதாம் அயலட்டை...!
முற்றம் ஏங்கித்தவிக்கிறதாம்
விளையாடித்திரிந்த
செல்லக் குழந்தைகளின்
சின்னப்பாதம் தேடி....!
வீட்டுப் படிக்கட்டு விம்மியழுறதாம்
வெளிநாட்டுச் சிரிப்பொலியை
இனியெப்போ கேட்பதென்று...!
ஊர்சென்று...
ஒரே கோப்பைக்குள் உண்டு
ஒரே போர்வைக்குள் உறங்கி
தாத்தாவின் கையைப் பிடித்து
வீதிவழி நடந்து...
சந்தியில் இருக்கும்
மாவீரரின் தூபிகளைப்பார்து..
இது என்ன தாத்தாவென்று
வியப்பாகக்கேட்க
பேரனுக்கு நடந்தவற்றை
நடந்தபடியே...
விளக்கிக்கொண்டே
வீதியில் நடந்த நினைவுகளுடன்
தொலைபேசியில்...
மீண்டும் தாத்தனின் குரல்கேட்டு...
என் மடியில் அழுதுகொண்டே
பிஞ்சுக்கைகளால் என் முகத்தில்
அடித்து அடித்து
அடம்பிடித்து அழுகின்றான் என்தம்பி...!
எனக்கு தாத்தா வேணும் அண்ணாவென்று...!
நான் என்ன செய்வேன்...?
அவன் அழுகையை
நிறுத்தத்தான் என்னால் முடியும்...!
ஆசையை என்ன செய்ய...?
பொம்மைகளைக்காட்டி...
அவன் அழுகையை நிறுத்திவிட்டேன்
இப்போது
நான் மட்டும்
மனசுக்குள் அழுதுகொண்டிருக்கிறேன்...!
தைபிறந்தால்...
கட்டாயம் வழி பிறக்கும் என்கிறார்கள்
இம்முறையும் வளமைபோல
தை பிறந்தாச்சு...!
எமெக்கென்று...
ஒரு வழியும் பிறக்காமலே...!!!
த.சரீஷ்
02.12.2003 (பாரீஸ்)
கனவுகள்...!
நாளாந்த விருந்தினர்போல்
கதிரோன்...
சிலநேரம் மட்டும் வந்தும்
பலநேரம் மறைந்தும்
கார்முகில்கள் அப்படியே...
கரையாமல் மண்ணோக்கி விழ
மழைநாளிலும்
குளிர்பனியிலும் நாட்கள்
நகர்ந்துகொண்டே செல்கிறது...!
"""என்னதம்பி....
சமாதானம் குழப்பிப்போச்சாம்...?
சண்டை வரப்போகுதாம்...???"""
இது...
எங்கள் தினசரிகள்
தேவாரம் பாடுவதுபோல்
தினம்தோறும் வீதியிலும்
தொலைபேசியிலும் பேசிக்கொண்டிருப்பது
வளமையாகிப்போய்விட்டது...!
விடியலைத்தேடிய
காயம்பட்ட கண்களுக்கு
விடியலென்பது கண்ணுக்கெட்டாத
கனவாகிப்போய்விடுமோ...?
தைபிறந்தால்...
கட்டாயம் வழி பிறக்கும் என்கிறார்கள்
இம்முறையும் வழமைபோல
தை பிறந்தாச்சு
ஒரு வழியும் பிறக்காமலே...!
சமாதானம் என்றார்கள்
சாக்கடைதான் ஓடிக்கொண்டிருக்கிறது
அலரி மாளிகைப் பக்கமாக..!
அம்மையாருக்கு அது
©க்கடை என்ற நினைப்பாகிப்போய்விட்டது...!
அமைதி தருகிறேன்
சுதந்திரமாய் வாழவைப்பேன் என்று
வாய்கிழியக் கத்திக்கொண்டு
சிம்மாசனம் ஏறிய அமச்சரய்யா
அமெரிக்காவுக்கும்
இந்தியாவுக்கும்
மாறி மாறி பறந்து பறந்து திரிகின்றார்...!
எந்தயர்மீது இப்போது...
உள்நாட்டு அரசுகள் காட்டும்
அக்கறையை விட
வெளிநாட்டு அரசுகளின்
அக்கறைதான் அதிகம்
புதிதாகப் பிறந்திருக்கிறது
இந்த புரியாத நேசம்..!
நல்லகாலம் பிறக்குது...
நல்லகாலம் பிறக்குதென்று
எங்கிருந்து வந்திருக்கிறது
எல்லைகடந்த இந்த ஞானம்...?
நல்லவேளை
எங்கள் நிலத்தில்
எண்ணைவளம் இல்லை
அதுவும் இருக்குமெனில்
இன்னும் பாசம் பொங்கிவழிந்திருக்கும்..!!
புரிந்துணர்வு ஒப்பந்தம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்...???
முன்பு...
முற்றுப்புள்ளியாய் இருந்தது
இப்போது
மிகப்பெரிய கேள்விக்குறியாய்
எழுந்து நிற்கிறது..!
அவசரமாய் ஒத்திவைத்தும்
அவ்வப்போது கூடும்
பாராளுமன்றம்
;இப்போது
அம்மையாரின் விளையாட்டு மைதானாம்
அமைச்சர்களை ஆட்சியில் இருந்து
தூக்கி விளையாடி
அடிக்கடி தடல்புடலாய்
ஏதேதோ செய்வார்
ஏன் என்று கேள்விகேட்க யார்உண்டு...?
ஏனெனில்
இது அம்மையார் அரசாட்சியாம்..!
அன்னையின்
அறுந்துபோன கனவுகளையும்
தாய்மாமனின்
எண்ணத்தில் தவழும் ஆசைகளையும்
தட்டாமல் அப்படியே
நினைவாக்க வேண்டுமாம்
ஒற்றைக்காலில் நிற்கின்றார் அம்மையார்..!
அது
அவர்கள் ஆட்சி
அவர்கள் அரசாங்கம்
யார்வேண்டுமானாலும் ஆளலாம்
என்னவேண்டுமானாலும் செய்யலாம்
எமெக்கென்ன....?
ஆனால்...
இதுதான் அரசு
இதுதான் ஆட்சி என்கிறார்களே
இப்படிச்சொல்பவரை என்னசெய்யலாம்...???
இது அம்மையின் ஆட்சியில் மட்டுமல்ல
அன்றிலிலுந்து இன்றுவரை இப்படித்தான்
ஆட்கள்தான் மாறி மாறி வந்துபோவர்
ஆனால்....
அடையாளம்
அன்றைக்கும் ஒன்றுதான்
இன்றைக்கும் ஒன்றுதான்..!
அது
அவர்கள் ஆட்சி
அவர்களின் அரசாங்கம்
அரசுமாறினால் நமக்கென்ன...?
அமச்சு மாறினால் நமக்கென்ன...?
எதுவரினும் வரட்டும்
எதுவாயினும் நடக்கட்டும்
நமக்கென்ன கவலை...
பகலோன்போல் எங்கள்
முதலோன் இருக்கும்வரை...???
எத்தடைவரினும்....
தாயாய் எமைத்தாங்க
தலைவன் இருக்கிறான் என்ற
தைரியம் எமக்கு....!
இடர்வென்று
பகைவற்கு இடியாய் இருப்பான்
என்ற இறுமாப்பு எமக்கு...!!!
அதனால்தான்....
புலத்தில் இருந்து
தாய் நிலம்நோக்கிப் பாய்கிறது
நாள்தோறும் நவரச நதி..!
இது பாசம் மட்டும்
சுமந்து பாயும் பாசநதி...!
ஊர்சென்று திரும்பிய உறவுகள்
பாடும் சந்தோஷப்பாட்டு...
வேர்களை தரிசித்துத்திரும்பிய
விழுதுகள்போல்...!
கொள்ளுப்பேரனின்
மழலைப் பிரஞ்சு மொழிகேட்டு
புல்லரித்துப்போனானம் தாத்தன்
செல்லப்பேத்தியின் குறும்புத்தனம்பார்த்து
கண்ணுhறுபட்டுப்போகுமென்று சொல்லிக்கொண்டே
சுற்றிப்போட்டாளாம் பாட்டி
ஒரு வாரம் மட்டும்தான் கண்முன்னே
உறவாடித்திரியுமாம் இந்த உள் ஊர்வேர்களின்
விழுதெறிந்த வெளிநாட்டு உறவுகள்..!
முற்றத்தில் மண்ணள்ளி விளையாடித்திரியும்
இந்தப் பிஞ்சுப் பாதங்கள்
பின்னேரம் புறப்பட்டு
கண்டிவீதி வழியே கொழும்புக்குச் சென்று
மறுநாளே...
தொலைதூரம் பறந்திடுமாம்...
மீண்டும் இனி
ஊர்திரும்பும் செய்திவேண்டி
உயிர்த் துளிர்களின்
பிஞ்சுப்பாதம் படவேண்டி...
கண்ணீருடன் காத்திருக்கின்றதாம்
பிறந்த மண்...!
தங்கைக்கு கைவளையல்
மருமகளுக்கு ஒட்டியாணம்
சித்திக்குச் சேலை
தாத்தாக்கு கரைவேட்டி
மாமாக்கு மோதிரம்
அத்தைக்குக் கால்சதங்கை
பாட்டிக்குக்கூட பட்டுப்புடவை
இவையெல்லாம்
அன்போடு வாங்கிவந்த என்சொந்தம்
இனியெப்போ ஊர்திரும்பும்...?
அழுகிறதாம் அயலட்டை...!
முற்றம் ஏங்கித்தவிக்கிறதாம்
விளையாடித்திரிந்த
செல்லக் குழந்தைகளின்
சின்னப்பாதம் தேடி....!
வீட்டுப் படிக்கட்டு விம்மியழுறதாம்
வெளிநாட்டுச் சிரிப்பொலியை
இனியெப்போ கேட்பதென்று...!
ஊர்சென்று...
ஒரே கோப்பைக்குள் உண்டு
ஒரே போர்வைக்குள் உறங்கி
தாத்தாவின் கையைப் பிடித்து
வீதிவழி நடந்து...
சந்தியில் இருக்கும்
மாவீரரின் தூபிகளைப்பார்து..
இது என்ன தாத்தாவென்று
வியப்பாகக்கேட்க
பேரனுக்கு நடந்தவற்றை
நடந்தபடியே...
விளக்கிக்கொண்டே
வீதியில் நடந்த நினைவுகளுடன்
தொலைபேசியில்...
மீண்டும் தாத்தனின் குரல்கேட்டு...
என் மடியில் அழுதுகொண்டே
பிஞ்சுக்கைகளால் என் முகத்தில்
அடித்து அடித்து
அடம்பிடித்து அழுகின்றான் என்தம்பி...!
எனக்கு தாத்தா வேணும் அண்ணாவென்று...!
நான் என்ன செய்வேன்...?
அவன் அழுகையை
நிறுத்தத்தான் என்னால் முடியும்...!
ஆசையை என்ன செய்ய...?
பொம்மைகளைக்காட்டி...
அவன் அழுகையை நிறுத்திவிட்டேன்
இப்போது
நான் மட்டும்
மனசுக்குள் அழுதுகொண்டிருக்கிறேன்...!
தைபிறந்தால்...
கட்டாயம் வழி பிறக்கும் என்கிறார்கள்
இம்முறையும் வளமைபோல
தை பிறந்தாச்சு...!
எமெக்கென்று...
ஒரு வழியும் பிறக்காமலே...!!!
த.சரீஷ்
02.12.2003 (பாரீஸ்)
sharish


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->