04-05-2006, 07:19 PM
<img src='http://www.yarl.com/forum/files/20060405001_551.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்: சட்டவாக்கல் பொறுப்பாளர் சுடர் விளக்கம்
[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 20:44 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழக் காணிச்சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் நடைமுறைகள் என்ன? என்பது தொடர்பாக தமிழீழ நீதி, நிர்வாகத்துறையின் சட்டவாக்கல் பிரிவுப் பொறுப்பாளர் சுடர் விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலிற்கு தமிழீழ காணிச்சட்டம் தொடர்பாக சுடர் வழங்கிய நேர்காணல்:
<b>கேள்வி: தமிழீழ காணிச்சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?</b>
பதில்: தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகவும் பொதுத் தேவைகளுக்காக காணிகளை ஒதுக்கீடு செய்வதையும் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்வோரின் காணிகளை அவரிடமும், அவரின் உதிர உறவினர்களிடம் கையளிப்பதற்காகவும் காணிகளின் விலை மதிப்பீடு பற்றியும் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டதாகும்.
தற்போது தமிழீழத்தில் உள்ள நிர்வாக அமைப்பான தமிழீழ நிர்வாக சபையின் காணிப்பகுதியினரால் இந்த காணிகளை தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு சரியான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.
போர்ச் சூழல் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் காணிகளைப் பாதுகாத்து, அவர்கள் மீள இந்த மண்ணில் குடியேறுகின்ற போது அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
பெருமளவிலான அரச காணிகள் தனியாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை மீளப்பெற்று தமிழீழத்தின் பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவோம். இவற்றை காணிச்சட்டத்தினூடே செயற்படுத்துவோம்.
<b>கேள்வி: இந்த சட்டத்தை எந்த வகையில் நடைமுறைப்படுத்த உள்ளீர்கள்?</b>
பதில்: தமிழீழ நிர்வாக சேவையின் செயலகங்கள் ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் அவர்களுடைய நடுவப் பணியகத்தின் காணிப்பகுதிச் செயலகம் ஊடாக இந்தச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
<b>கேள்வி: காணியற்றோருக்கு காணி வழங்குதல் தொடர்பான விடயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?</b>
பதில்: தற்போது தமிழீழப் பகுதிகளில் காணியற்றிருப்போருக்கு குடியிருப்பதற்கான காணியை வழங்குவதற்கான நடவடிக்கையும் அதே சமயம் அவர்கள் விவசாயம் செய்யக்கூடிய வலுவுள்ளவர்களாக இருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்குரிய மேலதிக காணிகளையும் அவர்கள் ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்புத்திட்டங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தாலோ அல்லது விவசாயம் செய்பவர்களாக இருந்தாலோ அவர்களுக்குத் தேவையான காணிகளையும் அந்த, அந்த அளவுகளில் பகிர்ந்தளிப்பதற்காக இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
<b>கேள்வி: தாயகத்தில் உள்ள புலம்பெயர் மக்களின் காணிகள் எந்த வகையில் கையாளப்படுகின்றன? </b>
பதில்: காணிச்சட்டம் இயல் - 08 இல் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எமது தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மீண்டும் தாயகத்திற்கு திரும்பும் எண்ணம் உள்ளவர்களுக்கு அல்லது அவர்கள் தாங்கள் விரும்புகின்ற உதிர உறவிர்களிடம் காணிகளை கையளிப்பதற்காக இந்த இயல் ஏற்பாடுகளை செய்திருக்கின்றது.
அதாவது நாங்கள் இந்த இயலில் பிரதானமாக வெளிநாடுகளில் உள்ளோர் தமது காணிகளை விற்பனை செய்வதை இந்த சட்டம் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தடை செய்கின்றோம்.
ஆனால், அவர்கள் அதாவது சட்டமுறை உள்ள ஆவணங்களோடு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோர் தங்களுடைய காணிகளை நிர்வாக சேவையின் காணிப்பகுதிக்கு கையளிக்குமாறும் இந்த சட்டம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் மூலம் அவர்கள் எந்தக்காலப்பகுதியில் மீண்டும் தமிழீழத்திற்கு வருகின்றார்களோ அந்த காலப்பகுதியில் அவர்களுடைய காணி மீளவும் அவர்களிடம் கையளிக்கப்படும்.
<b>கேள்வி: அந்த காணிகள் கையகப்படுத்தல் தொடர்பான செயற்பாட்டிற்கான கால வரையறை ஏதாவது உண்டா?</b>
பதில்: புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகள் பத்து வருடங்களுக்கு மேலாக பராமரிப்புக்களின்றி காணப்படுமானால் நாங்கள் இந்த விதிமுறைகளுக்கு அமைய அதனை கையகப்படுத்தி பிற தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
<b>கேள்வி: புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகள் தாயகத்தில் உள்ள தமது காணிகளை தமது உறவினர்களுக்கோ அல்லது தமது நண்பர்களுக்கோ வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதாவது உள்ளனனவா?</b>
பதில்: இந்த சட்டத்தில் பிரிவு - 60 இல் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஒருவர் தனது காணியை தான் சுயமாக விரும்பும் தனது உதிர உறவினருக்கு மட்டும் தன்னுடைய காணியை கையளிக்கலாம்.
காணியினுடைய ஆட்சியுரிமையை மட்டும் கையளிப்பதற்கு இந்த சட்டத்தின் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எந்த நாட்டில் அவர் வாழ்கின்றாரோ அந்த நாட்டில் கடமை புரியும் சட்டவாளர் ஒருவர் ஊடாக வரையப்பட்ட தத்துவ ஆவணம் ஊடாக அதனை கையளிக்கலாம். அதே நேரம் அந்த ஆவணம் தமிழிலும் இணைக்கப்பட்டித்தல் வேண்டும்.
ஆனால் இந்த காணியை கையேற்பவர் தமிழீழத்தில் நிலையாக வாழ்பவராகவும் இருந்தால் வேண்டும். அத்தோடு இந்த சட்டத்தின் பிரிவு 64 இல் இன்னொரு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து இந்த காணிகளை கையேற்பவர் அது நெற்செய்கைக் காணி எனில், தன்னுடைய உடமையில் வைத்திருக்க வேண்டும். மாறாக அந்தக் காணியை அவர் பாட்டத்திற்கு (குத்தகை) அல்லது ஏனைய வேறு வழியில் வேறு ஒருவருக்கு கையளிப்பதோ இந்த சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அவர் கையேற்கின்ற காணி ஒரு மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்குரிய காணியாகவோ அல்லது ஒரு குடியிருப்புக் காணியாகவோ அல்லது ஒரு வணிகத்துக்குரிய காணியாகவோ இருப்பின் அவரே யார் கையேற்கின்றாரோ அவரே அதனை நேரடியாக பயன்படுத்துதல் வேண்டும். மாறாக அவர் தன் விருப்பிற்கோ அல்லது வேறொருவரிடம் கையளிப்பது இந்த சட்டத்தின் படி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
<b>கேள்வி: புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற மக்கள் இந்த விடயங்கள் தொடர்பான விளக்கங்களை பெறுவதற்கான ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படடுள்ளனவா?</b>
பதில்: புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் காணிகள் அனைத்தும் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதி செயலகத்தில் கையளித்தல் வேண்டும்.
அவ்வாறு கையளிக்கப்பட்ட காணிகளை தமிழீழ நிர்வாக சேவையினர் அவை கட்டடத் தொகுதிகளை கொண்டிருந்தால் அவற்றை தமிழீழ நிதித்துறையின் வருவாய்ப்பகுதியினூடாகவும் அவை வேளான் சேவைக் காணிகளாக இருந்தால் அவைகள் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஊடாகவும் தென்னந் தோட்டக்காணிகளாக இருந்தால் பெருந்தோட்டப் பகுதியினரிடம் ஒப்படைத்து அவைகளை தொடர்ந்தும் பயன்பாட்டில் இருப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருத்தல் வேண்டும்.
<b>கேள்வி: தமிழீழ காணி உரிமம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கை ஏதாவது முன்னெடுக்கப்படுகின்றதா?</b>
பதில்: இது தொடர்பான உரிமம் வழங்குகின்ற நடவடிக்கைகளை தமிழீழ நிர்வாக சேவை காணிப்பகுதி செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவைகள் முதலில் குடியிருந்த காணிகளை வழங்குகின்ற போது தற்காலிக காணிப்பத்திரங்களையும் மீண்டும் அந்த காணிகள் தொடர்ந்தும் பயன்படுத்தி தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்கும் காலப்பகுதியில் அதற்கான நிரந்தர அனுமதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதியினர் செய்துள்ளனர்.
<b>கேள்வி: காணி விற்பனை தொடர்பிலான விடயங்கள் ஏதாவது இதில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?</b>
பதில்: இந்த சட்டத்தில் எங்களால் ஒரு காணி விலை மதிப்பீட்டுக் குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விலை மதிப்பீட்டுக்குழுவானது தமிழீழ நிர்வாக சேவையினரின் ஆளுகைக்கு உட்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதாவது, அவர்கள் வருவாய்ப் பகுதி பிரதிநிதி ஒருவர், பிரதேச சபை ஆணையாளர் ஒருவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு பிரதிநிதி ஒருவர், தமிழீழ நிர்வாக சேவைப் பிரதிநிதி ஒருவரும் அதே சமயம் துறைசார் நிபுணர்கள் தொடர்பில் அதாவது மதிப்பீடு தொடர்பில் துறைசார் நிபுணர் ஒருவரும் இதில் அங்கத்தவராக இருப்பார்.
இந்த சட்டத்தில் இயல் - 08 இல் அதாவது காணியின் விலைகளை வரையறை செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தமிழீழத்தில் உள்ள காணி விற்பனை செய்யப்படுகின்ற போது காணியின் விலையினை தீர்மானிக்கின்ற குழுவாக இருக்கும்.
இந்த குழுவினர் சாதாரணமாக காணியை விற்பனை செய்பவரும் அந்த காணியை வாங்குபவரும் காணிப்பகுதிச் செயலகத்திற்கு தங்களுடைய வேண்டுகையை அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறான வேண்டுகை ஒன்று சாதாரணமாக மாவட்ட நிர்வாக சேவையில் உள்ள காணிப்பகுதி செயலகத்தில் கையளித்தல் வேண்டும்.
காணிப்பகுதிச் செயலகமானது அந்த வேண்டுகையை விலை மதிப்பீட்டுக் குழுவினரிடம் கையளித்து அந்த விலை மதிப்பீட்டுக்குழுவினர் நேரடியாக குறித்த காணிப் பகுதிக்குச் சென்று அந்த காணியினுடைய பெறுமதியை தீர்மானித்து அந்த வேண்டுகையாளருக்கு எழுத்து மூலமாக வழங்கப்படுதல் வேண்டும்.
இந்த சட்டத்தினுடைய பிரிவு 67 இல் காணி விற்பனை மேற்படி நடவடிக்கைகளை பின்பற்றாமல் யாராவது செய்திருப்பின் காணியை விற்பனை செய்பவரும் அந்த காணியை வாங்குபவரும் இந்த சட்டத்தின் நடவடிக்கைகளை பின்பற்றாது இவ்வாறான காணி விற்பனையை செய்திருப்பின் அது சட்டப்படியாக விற்பனை செல்லுபடியற்றதொன்றாகும். இந்த விதியை பின்பற்றாமல் செய்யப்பட்ட அந்த விற்பனையின் போது காணிக்குழுவினரால் மதிப்பிடப்பட்ட பெறுமதிக்கு மேலதிகமாக பெறுமதி போட்டு காணி விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த தொகை கையகப்படுத்தி அரசு உடமையாக்கப்படும்.
<b>கேள்வி: புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள காணிச்சட்டம் தொடர்பில் நீங்கள் மக்களுக்கு கூறும் செய்தி என்ன?</b>
பதில்: இன்று, தமிழீழப்பகுதியில் காணியற்றிருப்போருக்கு காணிகளை வழங்குவதற்கும் அவர்கள் வேளான் செய்யக்கூடிய வலுவுடையவர்களாக இருப்பின் அவர்களுக்கு வேளான் செய்யக்கூடிய காணிகளை அந்த அந்த அளவில் பகிர்ந்தளிப்பதற்கும் மற்றும் இன்று தமிழீழ அபிவிருத்தித்திட்டங்களுக்காக அதாவது காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கும் மற்றும் இன்று தமிழீழத்தில் உள்ள சகல பொதுக்காணிகளையும் நாங்கள் தமிழீழ அரசுக்கு சொந்தமாக்கி அதன்மூலம் தமிழீழத்தினுடைய புனர்நிர்மாண வேலைகளை செய்வதற்காகவும் தற்போது மீண்டும் எங்களுடைய தமிழீழப்பகுதிகளில் பெருமளவிலான குளங்கள், அறுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் இருப்பதனால் அப்பகுதிகளிலிருந்து அதாவது, சாதாரணமாக இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஒருவர் ஒரு குளப்படுக்கையில் உச்சநீர் பிடிக்கும் வான்பாயும் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் தன்னுடைய குடியிருப்புக்களை அமைப்பதற்காகவும் அதே சமயம் ஆற்றொழுக்கின் மையப்பகுதியிலிருந்தும் எமது சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அளவுகளுக்கு அமைய தமது குடியிருப்புக்களை அமைப்பதற்கும் கடல் வலயங்களிலிருந்து முந்நூறு மீற்றர் அதாவது உச்ச அலை வீச்சிலிருந்து நிலத்தை நோக்கி அமையும் பகுதியை நோக்கி அவர்களுடைய குடியிருப்பை அமைப்பதற்கும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம் எமது தெருக்களைப் பொறுத்த வரை "A" தர தெருக்கள் அதாவது தெருவின் இருமருங்கிலும் மையத்திலிருந்து 66 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் "B" தர தெருக்கள் தெருவின் மையத்திலிருந்து இருமருங்கும் 33 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் பொதுவாக உள்ளுராட்சித் தெருக்கள் தெருவின் மையத்திலிருந்து இருமருங்கும் 15 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் சிறிய ஒழுங்கைகள் 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் எதிர்காலத்தில் எங்களுடைய தமிழீழ அபிவிருத்தியை நாங்கள் மேற்கொள்கின்ற போது இன்று வெளிநாடுகளில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை அதாவது வீதி அபிவிருத்தியை சரியாக செய்வதற்கு அவர்கள் தயாராகும் போது குடியிருப்புக்களை நகர்த்துவதற்கோ அல்லது அங்கிருந்து குடியிருப்புக்களை அகற்றி புதிய தெருக்களை அமைப்பதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவ்வாறான பிணக்குகளை நாங்கள் எதிர்நோக்காது இன்றே இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்ற போது எமது தேசத்தை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புகின்ற போது அதற்கான சரியான ஒழுங்மைப்பு முறையில் அதனுடைய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம். அத்தோடு தமிழீழ அரசுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள காணிகளை தனியாருக்கு அல்லது அரச, அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஏல முறையில் பாட்டத்திற்கு (குத்தகை) விடுவது தொடர்பாகவும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
இதன்மூலம் தமிழீழ அரச காணிகளை நாங்கள் தேவைகள் ஏற்படும் போது மீளக் கையகப்படுத்தி அதனை அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு இலகுவான ஒரு முறையாகவும் இது காணப்படுகின்றது. இந்த சட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தமிழீழத்தில் உள்ள எமது மக்கள் அனைவரும் ஒழுகி தங்களுடைய காணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக இருந்தால் அது தமிழீழ அரசு எதிர்காலத்தில் தமது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் காணி தொடர்பான பிணக்குகளையும் இலகுவான முறையில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார் சுடர்.
குறிப்பு: பாட்டம் = குத்தகை
http://www.eelampage.com/?cn=25289
தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்: சட்டவாக்கல் பொறுப்பாளர் சுடர் விளக்கம்
[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 20:44 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழக் காணிச்சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் நடைமுறைகள் என்ன? என்பது தொடர்பாக தமிழீழ நீதி, நிர்வாகத்துறையின் சட்டவாக்கல் பிரிவுப் பொறுப்பாளர் சுடர் விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலிற்கு தமிழீழ காணிச்சட்டம் தொடர்பாக சுடர் வழங்கிய நேர்காணல்:
<b>கேள்வி: தமிழீழ காணிச்சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?</b>
பதில்: தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகவும் பொதுத் தேவைகளுக்காக காணிகளை ஒதுக்கீடு செய்வதையும் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்வோரின் காணிகளை அவரிடமும், அவரின் உதிர உறவினர்களிடம் கையளிப்பதற்காகவும் காணிகளின் விலை மதிப்பீடு பற்றியும் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டதாகும்.
தற்போது தமிழீழத்தில் உள்ள நிர்வாக அமைப்பான தமிழீழ நிர்வாக சபையின் காணிப்பகுதியினரால் இந்த காணிகளை தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு சரியான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.
போர்ச் சூழல் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் காணிகளைப் பாதுகாத்து, அவர்கள் மீள இந்த மண்ணில் குடியேறுகின்ற போது அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
பெருமளவிலான அரச காணிகள் தனியாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை மீளப்பெற்று தமிழீழத்தின் பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவோம். இவற்றை காணிச்சட்டத்தினூடே செயற்படுத்துவோம்.
<b>கேள்வி: இந்த சட்டத்தை எந்த வகையில் நடைமுறைப்படுத்த உள்ளீர்கள்?</b>
பதில்: தமிழீழ நிர்வாக சேவையின் செயலகங்கள் ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் அவர்களுடைய நடுவப் பணியகத்தின் காணிப்பகுதிச் செயலகம் ஊடாக இந்தச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
<b>கேள்வி: காணியற்றோருக்கு காணி வழங்குதல் தொடர்பான விடயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?</b>
பதில்: தற்போது தமிழீழப் பகுதிகளில் காணியற்றிருப்போருக்கு குடியிருப்பதற்கான காணியை வழங்குவதற்கான நடவடிக்கையும் அதே சமயம் அவர்கள் விவசாயம் செய்யக்கூடிய வலுவுள்ளவர்களாக இருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்குரிய மேலதிக காணிகளையும் அவர்கள் ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்புத்திட்டங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தாலோ அல்லது விவசாயம் செய்பவர்களாக இருந்தாலோ அவர்களுக்குத் தேவையான காணிகளையும் அந்த, அந்த அளவுகளில் பகிர்ந்தளிப்பதற்காக இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
<b>கேள்வி: தாயகத்தில் உள்ள புலம்பெயர் மக்களின் காணிகள் எந்த வகையில் கையாளப்படுகின்றன? </b>
பதில்: காணிச்சட்டம் இயல் - 08 இல் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எமது தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மீண்டும் தாயகத்திற்கு திரும்பும் எண்ணம் உள்ளவர்களுக்கு அல்லது அவர்கள் தாங்கள் விரும்புகின்ற உதிர உறவிர்களிடம் காணிகளை கையளிப்பதற்காக இந்த இயல் ஏற்பாடுகளை செய்திருக்கின்றது.
அதாவது நாங்கள் இந்த இயலில் பிரதானமாக வெளிநாடுகளில் உள்ளோர் தமது காணிகளை விற்பனை செய்வதை இந்த சட்டம் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தடை செய்கின்றோம்.
ஆனால், அவர்கள் அதாவது சட்டமுறை உள்ள ஆவணங்களோடு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோர் தங்களுடைய காணிகளை நிர்வாக சேவையின் காணிப்பகுதிக்கு கையளிக்குமாறும் இந்த சட்டம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் மூலம் அவர்கள் எந்தக்காலப்பகுதியில் மீண்டும் தமிழீழத்திற்கு வருகின்றார்களோ அந்த காலப்பகுதியில் அவர்களுடைய காணி மீளவும் அவர்களிடம் கையளிக்கப்படும்.
<b>கேள்வி: அந்த காணிகள் கையகப்படுத்தல் தொடர்பான செயற்பாட்டிற்கான கால வரையறை ஏதாவது உண்டா?</b>
பதில்: புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகள் பத்து வருடங்களுக்கு மேலாக பராமரிப்புக்களின்றி காணப்படுமானால் நாங்கள் இந்த விதிமுறைகளுக்கு அமைய அதனை கையகப்படுத்தி பிற தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
<b>கேள்வி: புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகள் தாயகத்தில் உள்ள தமது காணிகளை தமது உறவினர்களுக்கோ அல்லது தமது நண்பர்களுக்கோ வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதாவது உள்ளனனவா?</b>
பதில்: இந்த சட்டத்தில் பிரிவு - 60 இல் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஒருவர் தனது காணியை தான் சுயமாக விரும்பும் தனது உதிர உறவினருக்கு மட்டும் தன்னுடைய காணியை கையளிக்கலாம்.
காணியினுடைய ஆட்சியுரிமையை மட்டும் கையளிப்பதற்கு இந்த சட்டத்தின் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எந்த நாட்டில் அவர் வாழ்கின்றாரோ அந்த நாட்டில் கடமை புரியும் சட்டவாளர் ஒருவர் ஊடாக வரையப்பட்ட தத்துவ ஆவணம் ஊடாக அதனை கையளிக்கலாம். அதே நேரம் அந்த ஆவணம் தமிழிலும் இணைக்கப்பட்டித்தல் வேண்டும்.
ஆனால் இந்த காணியை கையேற்பவர் தமிழீழத்தில் நிலையாக வாழ்பவராகவும் இருந்தால் வேண்டும். அத்தோடு இந்த சட்டத்தின் பிரிவு 64 இல் இன்னொரு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து இந்த காணிகளை கையேற்பவர் அது நெற்செய்கைக் காணி எனில், தன்னுடைய உடமையில் வைத்திருக்க வேண்டும். மாறாக அந்தக் காணியை அவர் பாட்டத்திற்கு (குத்தகை) அல்லது ஏனைய வேறு வழியில் வேறு ஒருவருக்கு கையளிப்பதோ இந்த சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அவர் கையேற்கின்ற காணி ஒரு மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்குரிய காணியாகவோ அல்லது ஒரு குடியிருப்புக் காணியாகவோ அல்லது ஒரு வணிகத்துக்குரிய காணியாகவோ இருப்பின் அவரே யார் கையேற்கின்றாரோ அவரே அதனை நேரடியாக பயன்படுத்துதல் வேண்டும். மாறாக அவர் தன் விருப்பிற்கோ அல்லது வேறொருவரிடம் கையளிப்பது இந்த சட்டத்தின் படி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
<b>கேள்வி: புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற மக்கள் இந்த விடயங்கள் தொடர்பான விளக்கங்களை பெறுவதற்கான ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படடுள்ளனவா?</b>
பதில்: புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் காணிகள் அனைத்தும் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதி செயலகத்தில் கையளித்தல் வேண்டும்.
அவ்வாறு கையளிக்கப்பட்ட காணிகளை தமிழீழ நிர்வாக சேவையினர் அவை கட்டடத் தொகுதிகளை கொண்டிருந்தால் அவற்றை தமிழீழ நிதித்துறையின் வருவாய்ப்பகுதியினூடாகவும் அவை வேளான் சேவைக் காணிகளாக இருந்தால் அவைகள் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஊடாகவும் தென்னந் தோட்டக்காணிகளாக இருந்தால் பெருந்தோட்டப் பகுதியினரிடம் ஒப்படைத்து அவைகளை தொடர்ந்தும் பயன்பாட்டில் இருப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருத்தல் வேண்டும்.
<b>கேள்வி: தமிழீழ காணி உரிமம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கை ஏதாவது முன்னெடுக்கப்படுகின்றதா?</b>
பதில்: இது தொடர்பான உரிமம் வழங்குகின்ற நடவடிக்கைகளை தமிழீழ நிர்வாக சேவை காணிப்பகுதி செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவைகள் முதலில் குடியிருந்த காணிகளை வழங்குகின்ற போது தற்காலிக காணிப்பத்திரங்களையும் மீண்டும் அந்த காணிகள் தொடர்ந்தும் பயன்படுத்தி தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்கும் காலப்பகுதியில் அதற்கான நிரந்தர அனுமதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதியினர் செய்துள்ளனர்.
<b>கேள்வி: காணி விற்பனை தொடர்பிலான விடயங்கள் ஏதாவது இதில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?</b>
பதில்: இந்த சட்டத்தில் எங்களால் ஒரு காணி விலை மதிப்பீட்டுக் குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விலை மதிப்பீட்டுக்குழுவானது தமிழீழ நிர்வாக சேவையினரின் ஆளுகைக்கு உட்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதாவது, அவர்கள் வருவாய்ப் பகுதி பிரதிநிதி ஒருவர், பிரதேச சபை ஆணையாளர் ஒருவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு பிரதிநிதி ஒருவர், தமிழீழ நிர்வாக சேவைப் பிரதிநிதி ஒருவரும் அதே சமயம் துறைசார் நிபுணர்கள் தொடர்பில் அதாவது மதிப்பீடு தொடர்பில் துறைசார் நிபுணர் ஒருவரும் இதில் அங்கத்தவராக இருப்பார்.
இந்த சட்டத்தில் இயல் - 08 இல் அதாவது காணியின் விலைகளை வரையறை செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தமிழீழத்தில் உள்ள காணி விற்பனை செய்யப்படுகின்ற போது காணியின் விலையினை தீர்மானிக்கின்ற குழுவாக இருக்கும்.
இந்த குழுவினர் சாதாரணமாக காணியை விற்பனை செய்பவரும் அந்த காணியை வாங்குபவரும் காணிப்பகுதிச் செயலகத்திற்கு தங்களுடைய வேண்டுகையை அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறான வேண்டுகை ஒன்று சாதாரணமாக மாவட்ட நிர்வாக சேவையில் உள்ள காணிப்பகுதி செயலகத்தில் கையளித்தல் வேண்டும்.
காணிப்பகுதிச் செயலகமானது அந்த வேண்டுகையை விலை மதிப்பீட்டுக் குழுவினரிடம் கையளித்து அந்த விலை மதிப்பீட்டுக்குழுவினர் நேரடியாக குறித்த காணிப் பகுதிக்குச் சென்று அந்த காணியினுடைய பெறுமதியை தீர்மானித்து அந்த வேண்டுகையாளருக்கு எழுத்து மூலமாக வழங்கப்படுதல் வேண்டும்.
இந்த சட்டத்தினுடைய பிரிவு 67 இல் காணி விற்பனை மேற்படி நடவடிக்கைகளை பின்பற்றாமல் யாராவது செய்திருப்பின் காணியை விற்பனை செய்பவரும் அந்த காணியை வாங்குபவரும் இந்த சட்டத்தின் நடவடிக்கைகளை பின்பற்றாது இவ்வாறான காணி விற்பனையை செய்திருப்பின் அது சட்டப்படியாக விற்பனை செல்லுபடியற்றதொன்றாகும். இந்த விதியை பின்பற்றாமல் செய்யப்பட்ட அந்த விற்பனையின் போது காணிக்குழுவினரால் மதிப்பிடப்பட்ட பெறுமதிக்கு மேலதிகமாக பெறுமதி போட்டு காணி விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த தொகை கையகப்படுத்தி அரசு உடமையாக்கப்படும்.
<b>கேள்வி: புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள காணிச்சட்டம் தொடர்பில் நீங்கள் மக்களுக்கு கூறும் செய்தி என்ன?</b>
பதில்: இன்று, தமிழீழப்பகுதியில் காணியற்றிருப்போருக்கு காணிகளை வழங்குவதற்கும் அவர்கள் வேளான் செய்யக்கூடிய வலுவுடையவர்களாக இருப்பின் அவர்களுக்கு வேளான் செய்யக்கூடிய காணிகளை அந்த அந்த அளவில் பகிர்ந்தளிப்பதற்கும் மற்றும் இன்று தமிழீழ அபிவிருத்தித்திட்டங்களுக்காக அதாவது காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கும் மற்றும் இன்று தமிழீழத்தில் உள்ள சகல பொதுக்காணிகளையும் நாங்கள் தமிழீழ அரசுக்கு சொந்தமாக்கி அதன்மூலம் தமிழீழத்தினுடைய புனர்நிர்மாண வேலைகளை செய்வதற்காகவும் தற்போது மீண்டும் எங்களுடைய தமிழீழப்பகுதிகளில் பெருமளவிலான குளங்கள், அறுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் இருப்பதனால் அப்பகுதிகளிலிருந்து அதாவது, சாதாரணமாக இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஒருவர் ஒரு குளப்படுக்கையில் உச்சநீர் பிடிக்கும் வான்பாயும் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் தன்னுடைய குடியிருப்புக்களை அமைப்பதற்காகவும் அதே சமயம் ஆற்றொழுக்கின் மையப்பகுதியிலிருந்தும் எமது சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அளவுகளுக்கு அமைய தமது குடியிருப்புக்களை அமைப்பதற்கும் கடல் வலயங்களிலிருந்து முந்நூறு மீற்றர் அதாவது உச்ச அலை வீச்சிலிருந்து நிலத்தை நோக்கி அமையும் பகுதியை நோக்கி அவர்களுடைய குடியிருப்பை அமைப்பதற்கும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம் எமது தெருக்களைப் பொறுத்த வரை "A" தர தெருக்கள் அதாவது தெருவின் இருமருங்கிலும் மையத்திலிருந்து 66 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் "B" தர தெருக்கள் தெருவின் மையத்திலிருந்து இருமருங்கும் 33 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் பொதுவாக உள்ளுராட்சித் தெருக்கள் தெருவின் மையத்திலிருந்து இருமருங்கும் 15 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் சிறிய ஒழுங்கைகள் 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் எதிர்காலத்தில் எங்களுடைய தமிழீழ அபிவிருத்தியை நாங்கள் மேற்கொள்கின்ற போது இன்று வெளிநாடுகளில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை அதாவது வீதி அபிவிருத்தியை சரியாக செய்வதற்கு அவர்கள் தயாராகும் போது குடியிருப்புக்களை நகர்த்துவதற்கோ அல்லது அங்கிருந்து குடியிருப்புக்களை அகற்றி புதிய தெருக்களை அமைப்பதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவ்வாறான பிணக்குகளை நாங்கள் எதிர்நோக்காது இன்றே இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்ற போது எமது தேசத்தை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புகின்ற போது அதற்கான சரியான ஒழுங்மைப்பு முறையில் அதனுடைய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம். அத்தோடு தமிழீழ அரசுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள காணிகளை தனியாருக்கு அல்லது அரச, அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஏல முறையில் பாட்டத்திற்கு (குத்தகை) விடுவது தொடர்பாகவும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
இதன்மூலம் தமிழீழ அரச காணிகளை நாங்கள் தேவைகள் ஏற்படும் போது மீளக் கையகப்படுத்தி அதனை அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு இலகுவான ஒரு முறையாகவும் இது காணப்படுகின்றது. இந்த சட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தமிழீழத்தில் உள்ள எமது மக்கள் அனைவரும் ஒழுகி தங்களுடைய காணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக இருந்தால் அது தமிழீழ அரசு எதிர்காலத்தில் தமது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் காணி தொடர்பான பிணக்குகளையும் இலகுவான முறையில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார் சுடர்.
குறிப்பு: பாட்டம் = குத்தகை
http://www.eelampage.com/?cn=25289


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->