Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்லவே முடியாது!
#1
[b]<span style='font-size:30pt;line-height:100%'>விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்லவே முடியாது: ஹக்ரூப் ஹொக்லெண்ட் </span>


[ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2006, 20:34 ஈழம்] [ம.சேரமான்]

[size=18]தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்ல முடியாது என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.


இது தொடர்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் ஒருவாரத்துக்கு முன்பாக விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்ல முடியாது என்று ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் இயக்கமானது அல்குவைடா போன்று பயங்கரவாத இயக்கம் அல்ல என்றும் அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளார்.

இதற்குக் கடும் கோபத்துடன் பதிலளித்த கோட்டபாய ராஜபக்ச, "இங்கே நீங்கள் வேலை செய்யத்தான் வந்துள்ளீர்கள். அதைச் சரியாக செய்யுங்கள். பாரபட்சமாக நடக்காதீர்கள்" என்று கூறியுள்ளார். மேலும் ஹக்ரூப் ஹொக்லெண்ட்டுக்குக்கும் புதிய கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சனுக்கும் சில அறிவுரைகளையும் கோட்டபாய ராஜபக்ச அளித்துள்ளார்.

சிறிலங்காவின் கலாச்சாரத்தை வரலாற்றை முதலில் கற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

"சிங்களவர்களும் தமிழர்களும் பலதசாப்தகாலங்களாக ஐக்கியமாகவே வாழ்ந்து வருகின்றனர். நீங்கள் இப்போது வந்து அது நடக்காது என்கிறீர்கள். இப்படியான பேச்சுக்கள் விரும்பத்தக்கது அல்ல" என்றும் கோட்டபாய ராஜபக்ச கடிந்துள்ளார்.

மேலும் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீதான அண்மைய தாக்குதல்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கண்டனம் செய்யவில்லை என்றும் கோட்டபாய ராஜபக்ச கூறியுள்ளார். அதற்குப் பதிலளித்த ஹக்ரூப் ஹொக்லெண்ட், எங்களிடம் ஆதாரம் ஏதுமில்லை என்றார். "எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒருநபரை குற்றம்சாட்டம் சாட்ட முடியாது" என்றும் ஹக்ரூப் கூறியுள்ளார்.

இச்சந்திப்பின் போது விடுதலைப் புலி போராளிகளுக்கான இராணுவ உலங்குவானூர்தி உதவிகள் தொடர்பாகவும் ஹக்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கிலிருந்து வன்னிக்கு அவர்களது தலைமைப்பீடத்துடனான சந்திப்பிற்குச் செல்லுகிற போராளிகளுக்கான உலங்குவானூர்தி பயணத்தை இராணும் மறுக்கிறது என்றும் ஹக்ரூப் ஹொக்லெண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த கோட்டபாய ராஜபக்ச, கொழும்பில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்குக் கூட இராணுவ தளபதிகளுக்கு உலங்குவனூர்தி சேவை வழங்கப்படுவதில்லை என்றார். இதையடுத்து இச்சந்திப்பும் முடிவுக்கு வந்தது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:
புதினம் புதினம் புதினம் புதினம் புதினம் புதினம் புதினம் புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)