03-20-2006, 11:34 PM
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று ஜெயா டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதிலிருந்து சில பகுதிகள்.
* ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் எனது சகாக்களில் சிலருக்கு ஏற்பட்டது. அப்போது அமைச்சரவையில் மதிமுகவை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று பிரதமரை சந்தித்தேன்.
அதற்கு அவர், உங்கள் கட்சிக்கும் சேர்த்துத்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கி விட்டதே என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் பிரதமரே என்று கேட்டேன். உங்கள் கட்சி திமுகவுடன் சேர்ந்து தனிக்கூட்டு அமைத்துள்ளதாகவும், திமுகவுக்குள் நீங்கள் உள் கூட்டு வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.
உங்களது கட்சி எம்.பிக்கள் நான்கு பேரையும் சேர்த்து திமுகவுக்கு மொத்தம் 20 எம்.பிக்கள் என்று கூறித்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கியிருக்கிறது என்றார்.
இது சோனியா காந்திக்குக் கூட தெரியுமே என்றார். இதையடுத்து சோனியா காந்தி அம்மையாரிடிம் சென்று கேட்டேன். அவரும் பிரதமர் சொன்னதையே கூறினார்.
எங்கள் எம்.பிக்களையும் தங்கள் கட்சி எம்பிக்கள் என்று கணக்கு காட்டி, எங்களை அடமானம் வைத்து அமைச்சர் பதவிகளை வாங்கியுள்ளது திமுக.
எங்களது எம்.பிக்களையும் சேர்த்துத்தான் மத்திய அமைச்சர் பதவிகளை வாங்கிய விஷயம் பற்றி திமுகவிடம் நான் இதுவரை பேசவில்லை.
நான் ஜீரணித்துக் கொண்டேன். எங்களுக்குத் தெரியாமல் எங்கள் எம்.பிக்களைக் காட்டி அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்களே, அப்படி என்றால் யார் யாருக்கு துரோகம் செய்திருக்கிறார்கள்?
நாங்களா துரோகம் செய்திருக்கிறோம்? தி.மு.க.வினர் வாஜ்பாய் மந்திரி சபையில் இருந்து கொண்டே கடைசி நிமிடம் வரைக்கும் அதை அனுபவித்துக் கொண்டே காங்கிரசுடன் உறவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். இதை நான் எந்த இடத்திலும் சொல்ல முடியும். இதுதான் பச்சை சந்தர்ப்பவாதம். தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க.வுடன் வைகோ எப்படி பேச்சு நடத்துகிறான் என்று கேட்கிறார்கள். ஒரு திறந்த புத்தகமாகத்தான் எங்கள் இயக்கத்தின் அணுகுமுறையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் பொதுக்குழுவிலும் அதைத்தான் சொன்னேன். நீங்கள் இப்படி நடத்துவீர்களேயானால் அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி வைக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விடும் என்று டாக்டர் கலைஞரிடமும் சொன்னேன்.
* முரசொலி மாறனின் இறுதிச்சடங்கிலே பெசன்ட் நகரிலே கலந்துகொண்டுவிட்டு வாஜ்பாய் இந்த பக்கம் விமானத்தில் ஏறி போகிறார்.
அவருக்கு டாட்டா காண்பித்துவிட்டு அதற்குப் பிறகு காங்கிரசுடன் உடன்பாடு வைக்க போய்விட்டார்கள் என்று கூட நான் சொல்லவில்லை. அந்த காலகட்டத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு காங்கிரசுடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று டாக்டர் கலைஞர் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உள்ள முக்கியமான தலைவர்கள் என்னிடத்திலே சொன்ன உண்மை. இப்போது கூட்டணி காரணமாக வெளியில் சொல்ல மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்று 2003-ம் ஆண்டு பிற்பகுதியிலேயே தொடங்கவிட்டார்கள். இப்படிதான் கூட்டணி வரும் என்பது கலைஞர் பேச ஆரம்பித்துவிட்டார். இது திடீரென்று ஒருநாளில் ஏற்பட்டது அல்ல. இதற்கு காரணம் தேடினார்கள். வெங்கையா நாயுடு சாதாரணமாக சொன்ன ஒரு விஷயத்தை காரணம் சொல்லிவிட்டு நாங்கள் வெளியே போகிறோம் என்று சொன்னார்கள். அதுதான் பச்சை சந்தர்ப்பவாதம்.
வாஜ்பாய் அரசில் இருந்து கொண்டே காங்கிரஸ் கட்சியுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு அவர் அதுமாதிரி ஈடுபட்டார்கள். ஆனால், நான் அதுமாதிரி எதுவும் செய்துவிடவில்லை. எங்களது கொள்கைகளை, லட்சியங்களை வென்றெடுப்பதற்கான நாங்கள் சிலவழிமுறைகளை தேர்ந்தெடுத்தோம். மனமகிழ்ச்சியுடன் இந்த உடன்பாடு ஏற்பட்டது என்று சொல்வதற்கு காரணம் சில நிகழ்ச்சிகளை கோர்வைப்படுத்திச் சொன்னால் சரியாக இருக்கும்.
2 மாதங்களுக்கு முன்பே வைகோ முடிவெடுத்துவிட்டார் என்று மதிப்பிற்குரிய அண்ணன் கலைஞர் சொல்கிறார்கள். நான் சொல்கிறேன். ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எங்களை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என்று நான் சொல்கிறேன்.
2004 பாராளுமன்றத் தேர்தல் முடிந்த உடனே போடப்பட்ட தோழமைக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க.வின் பெயர் கிடையாது. எங்கள் கட்சியை விட்டுவிட்டீர்களே என்று போனிலேயே நான் கேட்டேன். அதற்கு சட்டமன்றத்திலே அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் என்று பதில் சொன்னார்கள். பொதுக்கூட்டம் சட்டமன்றத்திலேயே நடக்கவில்லையே பொது இடத்தில்தானே நடக்கிறது என்று நான் சொன்னேன். அதன்பிறகு மறுநாள் எங்கள் கட்சியின் பெயரைச் சேர்த்து வெளியிட்டார்கள்.
எனது நடைபயணம் முடிந்து 7 நாள் கழித்து செப்டம்பர் 23-ந்தேதி முரசொலியில் டாக்டர் கலைஞர் ஒரு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், மிகக் கடுமையாக எங்களை நிந்தித்து, "இவர்கள் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தவர்கள். கட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள், துரோகிகள், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியுமா? இவர்கள் வட்டமிடும் கழுகுகளாக, வாய்பிளந்து நிற்கும் ஓநாய்களாக, வளைத்துவிட்ட மலைபாம்புகளாக சுருக்கமாகச் சொன்னால், வசந்த சேனையின் வடிவமாக இவர்கள் வாள்நீட்டிப் பார்த்தவர்கள். வலைக்குள் பதுங்கி இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார்.
எனக்கே ஒன்றும் புரியவில்லை. அதிர்ச்சி அடைந்தேன். எங்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் அன்றைக்கே இருந்தது. உடனே கலைஞரை சந்தித்து கேட்டேன். ஏதோ ஒரு கோபத்தில் அப்படி எழுதிவிட்டேன் என்று சொன்னார். கோபப்படும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லையே என்று சொன்னேன்.
நடை பயணத்தில் ஆலடி அருணா எப்படி வந்து பேசலாம் என்று கேட்டார். நான் அழைக்கவில்லை அவராகத்தான் வந்தார் என்று சொன்னேன். அவர் வேற ஒன்றும் பேசவில்லை. வருங்கால முதல்வராக வைகோவை நான் பார்க்கிறேன் என்று சொன்னார். அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றேன். அதற்காக கோபப்பட்டார்கள்.
இப்போது வருங்காலம், வராத காலம் என்று தினம்தினம் போஸ்டர் அடிக்கிறார்கள். வருங்கால முதல்வர் என்று கலைஞரின் மகனை பற்றி போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். விளம்பரம் பண்ணுகிறார்கள்.
இதற்கு கருணாநிதி எந்த விதமான விளக்கமும் சொல்ல முடியாது.
வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பதை விட கூட்டணியில் நான் நீடிப்பதை அவர்களைச் சுற்றியுள்ள சில சக்திகள் விரும்பவில்லை.
* இதுதான் இயல்பான கூட்டணி. இயற்கையான உணர்ச்சி. 1972-ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் டாக்டர் கலைஞரின் குடும்ப நலனுக்காக தூக்கி எறிந்தார், என்ன காரணத்திற்காக? சுயநலம், குடும்ப நலம். அதேபோல்தான் 1993-ம் ஆண்டு எந்த இயக்கத்திற்காக என் வாழ்நாளை நான் முழுமையாக அர்ப்பணித்தேனோ என் வாழ்வின் ஜீவனும் சுவாசமும் எல்லாம் நான் ஏற்றுக்கொண்டா அண்ணா உருவாக்கிய இயக்கமான தி.மு.க. என்று இருந்த என்னை குற்றமற்ற என்னை கொலைகாரன், சதிகாரன் என்று பழிசுமத்தி தூக்கி வெளியே எறிந்தார்கள். ஒரு கட்சியில் உள்ள ஒருவரை நீக்குவதற்கு குற்றச்சாட்டுகள் சொல்வது வழக்கம்.
ஆனால், கட்சிச் தலைமையை கொலைசெய்ய சதித்திட்டத்திலே ஈடுபட்டிருக்ககூடும் என்று குற்றம்சாட்டி கட்சியை விட்டு நீக்கியது எனக்கு தெரிய உலகத்திலே வேறு எங்குமே நடக்கவில்லை. எவ்வளவு பெரிய மனக்காயங்களுக்கு நான் ஆளாகியிருப்பேன்.
என்னை நீக்குவது கொடுமை என்று 5 தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தந்தார்கள். அவர்களின் படங்களை என் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறேன். அதை பார்த்துவிட்டுத்தான் தினமும் வெளியே போவேன். அவர்களை எனது காவல் தெய்வங்களாக நினைக்கிறேன்.
ஆனாலும் கூட எந்த இயக்கத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேனோ அந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் என்னோடு வந்துவிட்டார்கள். அவர்கள்தான் எனக்கு முகவரி. அவர்களால்தான் இன்று அரசியலில் இருக்கிறேன்.
அந்த தொண்டர்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் கரம் கோர்த்துள்ளதற்கு என்ன காரணம்? இது அடிப்படையில் இயல்பாக ஏற்படுகிற உணர்ச்சி.
* திமுக தலைமை தன்னை எப்படியெல்லாம் புறக்கணித்தது, சன் டிவி தன்னை எப்படியெல்லாம் இருட்டடிப்பு செய்தது என்பதை எல்லாம் மிக விளக்கமாகவே கூறிய வைகோ, பொடா குறித்த கேள்விக்கு மட்டும், அது ஊழ் வினை.. காலத்தின் தீர்ப்பு.. அது ஒரு அரசியல் நடவடிக்கை என்று பதிலளித்துவிட்டு நழுவிக் கொண்டார்.
நன்றி>இட்லிவடை
* ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் எனது சகாக்களில் சிலருக்கு ஏற்பட்டது. அப்போது அமைச்சரவையில் மதிமுகவை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று பிரதமரை சந்தித்தேன்.
அதற்கு அவர், உங்கள் கட்சிக்கும் சேர்த்துத்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கி விட்டதே என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் பிரதமரே என்று கேட்டேன். உங்கள் கட்சி திமுகவுடன் சேர்ந்து தனிக்கூட்டு அமைத்துள்ளதாகவும், திமுகவுக்குள் நீங்கள் உள் கூட்டு வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.
உங்களது கட்சி எம்.பிக்கள் நான்கு பேரையும் சேர்த்து திமுகவுக்கு மொத்தம் 20 எம்.பிக்கள் என்று கூறித்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கியிருக்கிறது என்றார்.
இது சோனியா காந்திக்குக் கூட தெரியுமே என்றார். இதையடுத்து சோனியா காந்தி அம்மையாரிடிம் சென்று கேட்டேன். அவரும் பிரதமர் சொன்னதையே கூறினார்.
எங்கள் எம்.பிக்களையும் தங்கள் கட்சி எம்பிக்கள் என்று கணக்கு காட்டி, எங்களை அடமானம் வைத்து அமைச்சர் பதவிகளை வாங்கியுள்ளது திமுக.
எங்களது எம்.பிக்களையும் சேர்த்துத்தான் மத்திய அமைச்சர் பதவிகளை வாங்கிய விஷயம் பற்றி திமுகவிடம் நான் இதுவரை பேசவில்லை.
நான் ஜீரணித்துக் கொண்டேன். எங்களுக்குத் தெரியாமல் எங்கள் எம்.பிக்களைக் காட்டி அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்களே, அப்படி என்றால் யார் யாருக்கு துரோகம் செய்திருக்கிறார்கள்?
நாங்களா துரோகம் செய்திருக்கிறோம்? தி.மு.க.வினர் வாஜ்பாய் மந்திரி சபையில் இருந்து கொண்டே கடைசி நிமிடம் வரைக்கும் அதை அனுபவித்துக் கொண்டே காங்கிரசுடன் உறவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். இதை நான் எந்த இடத்திலும் சொல்ல முடியும். இதுதான் பச்சை சந்தர்ப்பவாதம். தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க.வுடன் வைகோ எப்படி பேச்சு நடத்துகிறான் என்று கேட்கிறார்கள். ஒரு திறந்த புத்தகமாகத்தான் எங்கள் இயக்கத்தின் அணுகுமுறையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் பொதுக்குழுவிலும் அதைத்தான் சொன்னேன். நீங்கள் இப்படி நடத்துவீர்களேயானால் அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி வைக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விடும் என்று டாக்டர் கலைஞரிடமும் சொன்னேன்.
* முரசொலி மாறனின் இறுதிச்சடங்கிலே பெசன்ட் நகரிலே கலந்துகொண்டுவிட்டு வாஜ்பாய் இந்த பக்கம் விமானத்தில் ஏறி போகிறார்.
அவருக்கு டாட்டா காண்பித்துவிட்டு அதற்குப் பிறகு காங்கிரசுடன் உடன்பாடு வைக்க போய்விட்டார்கள் என்று கூட நான் சொல்லவில்லை. அந்த காலகட்டத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு காங்கிரசுடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று டாக்டர் கலைஞர் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உள்ள முக்கியமான தலைவர்கள் என்னிடத்திலே சொன்ன உண்மை. இப்போது கூட்டணி காரணமாக வெளியில் சொல்ல மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்று 2003-ம் ஆண்டு பிற்பகுதியிலேயே தொடங்கவிட்டார்கள். இப்படிதான் கூட்டணி வரும் என்பது கலைஞர் பேச ஆரம்பித்துவிட்டார். இது திடீரென்று ஒருநாளில் ஏற்பட்டது அல்ல. இதற்கு காரணம் தேடினார்கள். வெங்கையா நாயுடு சாதாரணமாக சொன்ன ஒரு விஷயத்தை காரணம் சொல்லிவிட்டு நாங்கள் வெளியே போகிறோம் என்று சொன்னார்கள். அதுதான் பச்சை சந்தர்ப்பவாதம்.
வாஜ்பாய் அரசில் இருந்து கொண்டே காங்கிரஸ் கட்சியுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு அவர் அதுமாதிரி ஈடுபட்டார்கள். ஆனால், நான் அதுமாதிரி எதுவும் செய்துவிடவில்லை. எங்களது கொள்கைகளை, லட்சியங்களை வென்றெடுப்பதற்கான நாங்கள் சிலவழிமுறைகளை தேர்ந்தெடுத்தோம். மனமகிழ்ச்சியுடன் இந்த உடன்பாடு ஏற்பட்டது என்று சொல்வதற்கு காரணம் சில நிகழ்ச்சிகளை கோர்வைப்படுத்திச் சொன்னால் சரியாக இருக்கும்.
2 மாதங்களுக்கு முன்பே வைகோ முடிவெடுத்துவிட்டார் என்று மதிப்பிற்குரிய அண்ணன் கலைஞர் சொல்கிறார்கள். நான் சொல்கிறேன். ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எங்களை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என்று நான் சொல்கிறேன்.
2004 பாராளுமன்றத் தேர்தல் முடிந்த உடனே போடப்பட்ட தோழமைக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க.வின் பெயர் கிடையாது. எங்கள் கட்சியை விட்டுவிட்டீர்களே என்று போனிலேயே நான் கேட்டேன். அதற்கு சட்டமன்றத்திலே அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் என்று பதில் சொன்னார்கள். பொதுக்கூட்டம் சட்டமன்றத்திலேயே நடக்கவில்லையே பொது இடத்தில்தானே நடக்கிறது என்று நான் சொன்னேன். அதன்பிறகு மறுநாள் எங்கள் கட்சியின் பெயரைச் சேர்த்து வெளியிட்டார்கள்.
எனது நடைபயணம் முடிந்து 7 நாள் கழித்து செப்டம்பர் 23-ந்தேதி முரசொலியில் டாக்டர் கலைஞர் ஒரு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், மிகக் கடுமையாக எங்களை நிந்தித்து, "இவர்கள் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தவர்கள். கட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள், துரோகிகள், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியுமா? இவர்கள் வட்டமிடும் கழுகுகளாக, வாய்பிளந்து நிற்கும் ஓநாய்களாக, வளைத்துவிட்ட மலைபாம்புகளாக சுருக்கமாகச் சொன்னால், வசந்த சேனையின் வடிவமாக இவர்கள் வாள்நீட்டிப் பார்த்தவர்கள். வலைக்குள் பதுங்கி இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார்.
எனக்கே ஒன்றும் புரியவில்லை. அதிர்ச்சி அடைந்தேன். எங்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் அன்றைக்கே இருந்தது. உடனே கலைஞரை சந்தித்து கேட்டேன். ஏதோ ஒரு கோபத்தில் அப்படி எழுதிவிட்டேன் என்று சொன்னார். கோபப்படும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லையே என்று சொன்னேன்.
நடை பயணத்தில் ஆலடி அருணா எப்படி வந்து பேசலாம் என்று கேட்டார். நான் அழைக்கவில்லை அவராகத்தான் வந்தார் என்று சொன்னேன். அவர் வேற ஒன்றும் பேசவில்லை. வருங்கால முதல்வராக வைகோவை நான் பார்க்கிறேன் என்று சொன்னார். அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றேன். அதற்காக கோபப்பட்டார்கள்.
இப்போது வருங்காலம், வராத காலம் என்று தினம்தினம் போஸ்டர் அடிக்கிறார்கள். வருங்கால முதல்வர் என்று கலைஞரின் மகனை பற்றி போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். விளம்பரம் பண்ணுகிறார்கள்.
இதற்கு கருணாநிதி எந்த விதமான விளக்கமும் சொல்ல முடியாது.
வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பதை விட கூட்டணியில் நான் நீடிப்பதை அவர்களைச் சுற்றியுள்ள சில சக்திகள் விரும்பவில்லை.
* இதுதான் இயல்பான கூட்டணி. இயற்கையான உணர்ச்சி. 1972-ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் டாக்டர் கலைஞரின் குடும்ப நலனுக்காக தூக்கி எறிந்தார், என்ன காரணத்திற்காக? சுயநலம், குடும்ப நலம். அதேபோல்தான் 1993-ம் ஆண்டு எந்த இயக்கத்திற்காக என் வாழ்நாளை நான் முழுமையாக அர்ப்பணித்தேனோ என் வாழ்வின் ஜீவனும் சுவாசமும் எல்லாம் நான் ஏற்றுக்கொண்டா அண்ணா உருவாக்கிய இயக்கமான தி.மு.க. என்று இருந்த என்னை குற்றமற்ற என்னை கொலைகாரன், சதிகாரன் என்று பழிசுமத்தி தூக்கி வெளியே எறிந்தார்கள். ஒரு கட்சியில் உள்ள ஒருவரை நீக்குவதற்கு குற்றச்சாட்டுகள் சொல்வது வழக்கம்.
ஆனால், கட்சிச் தலைமையை கொலைசெய்ய சதித்திட்டத்திலே ஈடுபட்டிருக்ககூடும் என்று குற்றம்சாட்டி கட்சியை விட்டு நீக்கியது எனக்கு தெரிய உலகத்திலே வேறு எங்குமே நடக்கவில்லை. எவ்வளவு பெரிய மனக்காயங்களுக்கு நான் ஆளாகியிருப்பேன்.
என்னை நீக்குவது கொடுமை என்று 5 தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தந்தார்கள். அவர்களின் படங்களை என் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறேன். அதை பார்த்துவிட்டுத்தான் தினமும் வெளியே போவேன். அவர்களை எனது காவல் தெய்வங்களாக நினைக்கிறேன்.
ஆனாலும் கூட எந்த இயக்கத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேனோ அந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் என்னோடு வந்துவிட்டார்கள். அவர்கள்தான் எனக்கு முகவரி. அவர்களால்தான் இன்று அரசியலில் இருக்கிறேன்.
அந்த தொண்டர்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் கரம் கோர்த்துள்ளதற்கு என்ன காரணம்? இது அடிப்படையில் இயல்பாக ஏற்படுகிற உணர்ச்சி.
* திமுக தலைமை தன்னை எப்படியெல்லாம் புறக்கணித்தது, சன் டிவி தன்னை எப்படியெல்லாம் இருட்டடிப்பு செய்தது என்பதை எல்லாம் மிக விளக்கமாகவே கூறிய வைகோ, பொடா குறித்த கேள்விக்கு மட்டும், அது ஊழ் வினை.. காலத்தின் தீர்ப்பு.. அது ஒரு அரசியல் நடவடிக்கை என்று பதிலளித்துவிட்டு நழுவிக் கொண்டார்.
நன்றி>இட்லிவடை
.
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->