Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரலாறு
#1
ஈழம் என்று ஆதியில் அழைக்கபட்ட இலங்கையானது ( 65.610 ச.கி.மீ ) பரப்பளவில் அமைந்துள்ள தீவாகும். தமிழர் அந்நாளில் முழுத் தீவுக்கும் ஊரிமையாளராக இருந்தனா;. இன்று வடக்கு கிழக்கு பகுதிகளை மாத்திரம் தமது தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இன்று நாம் வாழும் பிரதேசத்தைத் தமிழீழம் என அழைக்கின்றனர்.

கி.மு.6 நூற்றாண்டு தொடக்கம் ஆண்டாண்டு காலமாக ஏற்பட்ட பல குடியேற்ற அரசியல் நிலைமை களினால்; இன்று நாங்கள் போரட வேண்டிய நிலைமை வந்தது. தமிழீழம் என்பது ஐரோப்பிய கடலோடிகள் வரும் போது தமிழர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த பிரதேசமாகும். தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த தமிழீழத்தின் சில பகுதிகளைப் போர்த்துக்கேயர் முதன் முதல் வெற்றி கொண்டு அடிமைப்டுத்தினர்.

தமிழீழத்தின் எல்லைகளை, எம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஐரோப்பியர் எல்லோரும் அறுதியிட்டுக் குறிப்பிட்டுள்ளனர். பிரித்தானிய ஆளுநர் நோர்த் அவர்களின் செயலாளர் கிளெக்கோண் இவர் 01.06.1799 திகதி எழுதிய குறிப்பு.

இலங்கைத் தீவானது இரு வேறு நாட்டினர்களால் வெவ்வேறு பகுதிகளாக உரிமை கொண்டாடி ஆட்சி செய்யப்பட்டது. இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையும் உள்ளமேற்குப்பகுதியும் சிங்களவரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும். தீவின் வடக்குக் கிழக்கு நிலப்பகுதிகள் தமிழர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும். இவ்விரு நாட்டினர்களும் மதத்தாலும் மொழியாலும் வாழ்கைப் பண்பாலும் முற்றிலும் வேறு பட்டிருந்தனர்."

<b>ஆதிகாலம் </b>
ஆதிகாலத்தில் இலங்கைத் தீவானது இந்தியாவுடன் இணைந்தே இருந்தது. அது மாத்திரமன்று அது தென்அமெரிக்க, ஆபிக்கா, அவுஸ்திரேலியா போன்ற கண்டங்களை உள்ளடக்கிய லெமூரியாக்கண்டம் தென் துருவம் வரை நீண்டிருந்தது எனவும், புவியில் ஏற்பட்ட பிரளயங்களினால் அவை பிரிந்துபோயின என்றும் இந்தியாவும் இலங்கையும் ஒன்றாக இருந்தபகுதி வடகிழக்கு நோக்கித் தள்ளப்பட்டதனால் இமயமலை தோன்றியது என்றும் புவியியலாளர் கருதுகின்றனர். இதன் பின்னர் ஏற்பட்ட கடற்பெருக்கு ஒன்றினால் ஈழம் இந்தியாவிலிருந்து(40கி.மி) நீர்ப்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளது. இது நிகழ்ந்தது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எனக் கருதப்படுகின்றது.

இராமாயணத்தை எழுதிய வால்மீகியின் காலத்திற்கு முன்னரேயே ஈழம் முழவதிலும் சிவ வழிபாட்டை உடைய நாகரிகம் மிக்க திராவிடத் தமிழ் இன மக்கள் வாழ்ந்தனர் என்ற முடிவுக்கு வரலாம். இராமாயணகாலம் கி;.மு 3500 ஆண்டுகளேனவும், முனிஸ்வர ஆலயம் கட்டுப்பட்டது அக் காலத்தில் எனவும் திரு.காமினி புஞ்சிகாவா என்னும் சிறீலங்கா சரித்திர ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.

இராமாயணத்தை இதிகாசக்கதை என்று கூறுவோரும் உளர். அதேவேளை சீதையைச் சிறை வைத்த இடம் சீதாஎலியா. திருகோணமலையில் உள்ள இராவணன் வெட்டு.மாரீசன் வாழ்ந்த இடம் மாரீசன் கூடல். இராமணை போன்ற பல இடங்கள் குறிப்பிடத்தக்கவை.


<b>ஆதிக்குடிகள் </b>
ஆதிகாலம் தொட்டு ஈழத்தில் இயக்கர். நாகர் எனப்படும் இரு திராவிட இன மக்கள் வாழ்ந்து வந்தனர். ஈழத்தில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல தொல்லியற் சான்றுகள் இதனை உறுதிப் படுத்துகின்றன. பழைய கற்காலம் தொட்டு (ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர்) திராவிட இனமக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். கி.மு 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே ஈழம் எங்கும் நாகாpகம் மிக்க மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. விவசாயத்திலும் நீர்பாசனத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் குடியிப்புகள் காணப்படுகின்றன. பயிர்செய்நிலம், சிறுகுளம், இடுகாடு கொண்ட குடியிருப்புகள், இம் மக்களின் இரும்பு உபயோகம், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, ஆழ்கடல் மீன்பிடி முறை, நீர்ப்பாசன முறை, கறுப்பு மட்பாண்ட உபயோகம் என்பன. ஆனைக்கோட்டை. கந்தரோடை ஆகிய இடங்களில் எலும்புக் கூடுடன் கிடைத்துள்ள 'கோவேந்தன்" 'கோவேதன்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட வெண்கல முத்திரையும், வடமேற்கே பூநகாp தொடக்கம் களனி ஆற்றங்கரைவரையும், தென்கிழக்கே மட்டக்களப்பு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரையும் காணப்படும் கறுப்பு--சிவப்பு மட்பாண்டங்கள் என்பனவும் கி.மு 10ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத்தில் நாகரிகம் மிக்க தமிழ் (திராவிட) இனம் வாழ்ந்ததைத் தெரிவிக்கின்றன.

<b>மொழி </b>
இத் திராவிட(தமிழ்) மக்களது மொழி தமிழாக இருந்தது. ஈழத்தின் தென்பகுதியில் வாழ்ந்த இயக்கர் எனப்படும் திராவிட மக்களது மொழி 'எலு" என வழங்கியது. இதுவே ஆதிச் சிங்கள மொழி ஆகும். பின்னாளில் திரிபு பெற்றது அதாவது எலு---கெல என சிங்கவம்சத்தவர் எனத் தம்மை அழைத்துக் கொண்டவர்கள் (சிங்க-கெல) சிங்களம் எனும் மொழி உண்டாயிற்று.

கி.மு 5ஆம் நூற்றாண்டளவில் வட இந்தியாவில் இருந்து இந்தோ--ஆரிய இனத்தைச் சேர்ந்த பாளி மொழி பேசும் விஜயன் எனப்படும் அரச குமாரனும் அவனது தோழர்களும் ஈழத்தை வந்தடைந்தன். விஜயன் என்பவன் இயக்கர் அரசி குவேனியை மணம் முடித்து அரசனான்.

அதனைத் தொடர்ந்து ஆரியர் பலர் கூட்டம் கூடடமாக வந்த குடியேறினர்கள். 'எலு" மொழி பேசிய சிங்கள மக்களின் மூதாதையர் பௌத்த மதத்தைத் தழுவிக் கொண்டதனால் அவர்களின் மொழியில் பாளி மொழியின் தாக்கம் அதிகமாயிற்று. இதனால் எலுமொழி மேலும் திரிபடைந்து தமிழ் மொழியில் இருந்து பெருமளவில் வேறுபட்டுவிட்டது. கி.மு முதலாம் நூற்றாண்டவில் இருந்துதான் சிங்கள மொழி மக்களிடையே வழக்கத்திற்கு வந்தது.

<b>சமயம் </b>
ஆதியில் இருந்து தமிழர் சமயம் இயற்கை வழிபாட்டை ஒட்டியதோடு பெண் தெய்வத்தையும்(கொற்றவை), மற்றும் லிங்க வழிபாட்டையும் கைக்கொண்டு இருந்தனர். தமிழ் இலக்கியங்களில் முருகன் போர்க் கடவுளாகச் சித்திரிக்கப்படுகின்றார். தமிழ்ர் வீரத்தை கடவுள் நிலையில் வைத்து வீர வழிபாட்டை மேற் கொண்டு வந்துள்னர். நாகர் (தமிழ்) இன மக்கள் நாகபாம்பு வழிபாட்டையும் மேற்கொண்டனர்.

நாகபாம்பினைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது உதாரணமாக நாகராசா, நாகமணி, நாகேந்திரன், நாகம்மா, தமிழன் மேலோர்ங்கிச் சிறப்புடன் வாழவும், பண்பாடும், வலிமையும் மிக்க ஒரு இனமாக வாழவும் வழிகாட்டும் ஒரு முறையாக இருந்தது. அவற்றிடையே ஆரியரால் புகுத்தப்பட்ட பல சமய. சமுதாய பழக்க வழக்கங்கள் தமிழரை; கூறு கூறாகப் பிரித்து தமிழருடைய எழுச்சியைத் தடுத்துத் திசைமாற்றியது.

ஆரியர் வரவின் பின் புகுந்த புத்த மதம் ஈழத்தில் வாழ்ந்து வந்த ஒரு பகுதியினரை முற்றாக பிரித்தெடுத்துச் சென்றது. தொடர்ந்து வந்த இசுலாம் மதம் இன்னோர் பகுதித் தமிழர்களையும் பிரித்தெடுத்துவிட்டது. தொடர்ந்து வந்த கிறித்தவ மதம் மேலும் ஒரு பகுதி மக்களை பிரித்தெடுத்துவிட்டது.

<b>தமிழீழமும் அரசுகளும்</b>
விஜயன் வரவு எனக் குறிப்பிட்ட காலத்திற்கோ அன்றி புத்த மதம் (மகிந்தன்) வரவிற்கு முன்னரேயே ஈழத்தில உள்ள அரசுகள் இந்திய நாட்டுடனும் மற்றும அரேபிய இந்து சமுத்திர நாடுகளுடனும வாணிபத்தில் ஈடுபட்டு இருந்தன. தீவின் மிகப் பெரிய துறைமுகமாக மாதோட்டம்(மன்னார்)விளங்கியது.

இலங்கைத்தீவில் ஆதிகாலத்தில் இருந்த அரசர்களைப் பற்றிய எந்த விபரத்தையும் அறிய முடியாது உள்ளது. மகிந்தன் புத்தமதத்தைப் பரப்ப தேவநம்பியதீசன் காலத்தில் அநுராதபுரத்திற்கு வந்ததினால் அநுராதபுர அரசு தீவில் புத்த மதத்தின் ஆரம்ப இடமாயிற்று. அங்கே வந்த நிலை கொண்ட புத்தபிக்குகள் அரசர்களது வரலாற்றைக் குறித்துவைத்துக் கொண்டனர். இதனால் அநுராதபுர அரசர்களது காலமும் அவ்வப்போது அநுராதபுர அரசைக் கைப்பற்ற நடைபெற்ற யுத்தங்களும் மாத்திரம் இக் குறிப்புக்களில் மூலம் அறியக் கிடக்கின்றது.

தேவநம்பியதீசன் கி.மு 147 முதல் கி.மு 101 வரை ஆட்சி செய்தான். இவன் தனது தந்தை மூத்தசிவன் இறந்த பின் ஆட்சிக்கு வந்தான். தீசனின் பின் அவனது சகோதரன் சூரதீசன் ஆட்சிக் காலத்தில் சேனன் குத்திகன் என்னும் இரு தென்னிந்திய தமிழர்கள் அநுராதபுர அரசைக் கைப்பற்றி ஆண்டனர். இவர்களை தேவநம்பியதீசன் பரம்பரையில் வந்த அசேலன் என்பான் வெற்றி கொண்டான். அசேலனை எல்லாளன் வெற்றி கொண்டு 40 ஆண்டுகள் ஆட்சி செய்தான். சரித்திரம் தெரிந்த காலம் முதற் கொண்டு தென்னிந்திய அரசுகள் இங்கு அரசு வாரிசு உரிமையினால் ஏற்பட்ட யுத்தங்களை அடக்குவதற்கே துணை செய்ய வந்தனர்.- காலத்துக்குக் காலம் ஆட்சியும் புரிந்தனர். இத் தீவைக் கைப்ர்ற்றி ஆளும் நோக்கோடு தென்னிந்தியரின் பெரும்பாலான படை எடுப்புகள் நடைபெறவில்லை.

<b>எல்லாளன் ஆட்சி</b>
எல்லாளன என்னும் தமிழ் அரசன் காலத்தில் தீவு முழவதும் அவன் ஆட்சி உட்பட்டு இருந்தது. எல்லாளனை(கி.மு 145--101) துட்டகைமுனு என்பவன் வெற்றிகொண்டதை சிங்களவர் இன்றும் முக்கிய நிகழ்வாக கருதுகின்றனர். படைகள் மோதாது நேருக்கு நேரான சண்டையின் போது எல்லாளன் யானையின் நின்றும் கீழே வீழ்ந்து இறந்தான். எல்லானின் பெருந்தன்மையும். வீரத்தையும் மதித்து அவன் ஞாபகமாகத் துட்டகைமுனு ஆயிரங்கால்மண்டபம் ஓன்றைக் கட்டினான்.

அவ்வழியாற் செல்வோர் தரித்து வணங்கிச்செல்ல வேண்டும் எனவும் ஆணையிட்டான். இப்பழக்கம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் இருந்தமை, நடைபெற்ற போர் .இனவாதப்போர் அல்ல என்பதையும், மக்கள் எல்லான் மேல் பொண்டிருந்த மரியாதையும் எடுத்துக்காட்டுகின்றன.

இவ் யுத்தம் சிங்கள-தமிழ் யுத்தமாக இருக்கமுடியாது. அத்துடன்; ஆங்கிலேயர் காலம் வரை கல்யாணி அரசு முதற் கொண்டு அநுராதபுர அரசு தீகவாவி அரசு மகாகமை அரசு வரையுள்ள கரையோiப் பகுதிகள் தமிழர் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக இருந்தமை வரலாற்று உண்மையாகும்.

சமயப் போட்டியும்-இனவாதமும் 3 ஆம் நூற்றாண்டு முதல் ஆரம்பித்து இச் சமயப் போட்டிகளும் ஈழத்தில் குழப்பமான அரசியல் நிலைதோன்ற ஒரு காரணியாக இருந்தன. இச்சமயப் போட்டிகளின் விளைவாக சைவசமயத்தைத் தழுவியோருக்;கும்.புத்மசமயத்தைத் தழுவியோகுக்கும் இடையில் வேற்றுமனப் பான்மை வளர்ந்தது ஆதலால் சமய வெறுப்புணர்வு இன வெறுப்புணர்வாக மாறியது. தமிழ்மக்கள் மீது வெறுப்புணர்வாக கொண்டவர்களாக வாழ புத்தமத அமைப்புகள் வழிவகுத்தன. இதனால் 3ஆம் நூற்றாண்டு முதல் துளிர் விடத் தொடங்கிய இனவாதம் புத்தமத அமைப்புககளால் இன்றுவரை வளர்க்கப்பட்டு வருகின்றன. இனவாதம் நிரந்தரமான ஒரு தன்மான உணர்வாகச் சிங்களமக்;களிடையே உருப்பெற்று விட்டது

கி.பி 140அளவில்; கிரேக்க புவியியல் அறிஞர் புகழ்பெற்ற உலகப் படத்தை வரைந்தர் இதில் இலங்கைத் தீவை ..சாலிக்கே..என்று குறிப்பிட்டதுடன் அவரது படத்தில்; குறிப்பிட்டுள்ள இடங்களின் பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்களாகவே உள்ளன.


<b>தென்னிந்திய ஆட்சி </b>
9ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் சோழப்பேராசு பாண்டிய நாட்டைக் கைப்பற்றப் போரிட்ட போது பாண்டியனுக்கு உதவியாக அநுராதபுரப் படைகள் சென்றன. இருப்பினம் தோல்வி கண்ட பாண்டிய அரசன் மானவர்மன் இராசசிங்கன் இலங்கைக்கு வந்து தனது முடியையும் சிங்காசனத்தையும்.

3ஆம் உதயன்(கி.பி 945-952) அடைக்கலமாகக் கொடுத்தார்;. சோழர் அதனை ஒப்படைக்கும்படி கேட்டனர். உதயன் கொடுக்க மறுத்தனால் கி.பி 949இல்; முதலாம்; பராந்தகச் சோழன் இலங்கையைத தாக்கி அநுராதபுர அரசைக்; கைப்பற்;றினான். இருப்பினும் பாண்டிய முடியும்;.சிங்காசனமும்; தெற்கு நோக்கி நகர்த்தப் பட்டன.கி.பி 993இல் இராசராசன் படையுடன் வந்து தீவின் மேலும் பல பகுதிகளை கைப்பற்;றிக் கொண்டான்.அப்போது இருந்த ஈழ அரசுகள் அனைத்தும் சோழரின் ஆட்சியின் கீழ் வந்தன

கி.பி 1070இல் சோழப் பேராசில் உள்நாட்டுக் கலகம் உண்டாக இலங்கையின் தென் முனையில் இருந்து படையுடன். கீர்த்தி என்பான(;விஜயபாகு)பொலநறுவை அரசை கைப்;பற்றிக்; கொண்டான். இதனைத் தொடர்ந்து கி.பி 1255இல் சந்திரபானு என்னும் பாண்டிய அரசன் பொலநறுவை ஆண்டான.; 14ஆம் நூற்றண்டின் முற்பகுதியில்(கி.பி 1330)பாண்டிய தலைநகர் மதுரையை முகமதியர் வெற்;றி பெற, பாண்டியர் மேலாட்சியில் இருந்து தமிழீழம்; விடுபட்டது.

<b>யாழ்ப்பாண அரசு </b>
இக்காலத்தில் இலங்கைத் தீவில் பின்வரும் அரசுகள் இருந்தன. அவை மாஒயா தொடக்கம் தெற்குக் கரையோரமாக வளவகங்கை வரையுள்ள தெற்கு, தென்மேற்கு. மத்திய பிரதேசங்களைக் கொண்ட சிங்கள அரசும், வளவகங்கை தொடக்கம மகாஒயா வரை வடக்குக்; கரையாக உள்ள தமிழ்ப் பிரதேசங்களை உள்ளடக்கிய தமிழீழ அரசும் ஆகும். இப் பிரதேசங்கள் பல சிற்றரசுகள்;(வன்னிமைகள்) கொண்;டிருந்தன. தமிழீழம் முழவதும் பல வன்னிமைகள் இருந்தன. இவை தமது சொந்தப்படை அமைப்புகள். அரசு சின்னங்கள் என்பனவற்றைக் கொண்டு விளங்கின. தமிழீழத்தில பின்வரும் வன்னிமைகள் இருந்தாக அறியப்படுகிறது.

1)பெரும் காற்றுப்ப்பற்று
2)முசலிப்பற்று
3)மேற்குழூலை
4)சின்னச் செட்டிகுளம்
5)நடுச் செட்டிகுளம்
6)கிழக்குமுலை தெற்கு
7)கிழக்குமுலை வடக்கு
8)மேல்பற்று கிழக்கு
9)மேல்பற்று தெற்கு
10)மேல்பற்று வடக்கு
11)பனங்காகம்
12)உடையாவு+ர் 29)புத்தளம்
13)துணுக்காய்
14)கரைச்சி
15)புதுக்குடியிருப்பு
16)முள்ளியவளை
17)காpக்கட்டுமுலை வடக்கு
18)காpக்கட்டுமுலை தெற்கு
19)மகாவன்னி
20)கொட்டியாரம்
21) ??
22) கட்டுக்குளம்
23)மட்டக்களப்பு
24)பழுகாமம்
25)மண்முனை
26)போரதீவு
27)பாணமை
28)யாலா

<b>கி.பி. 1215 இலிருந்து யாழ்பாண இராச்சியத்தை ஆண்ட அரசர்கள்</b>
இவ் வன்னிமைச் சிற்றரசுகள் யாழ்பாண இராச்சியமாகிய தமிழீழத்தைப் போர்த்;துக்கேயர் கைப்பற்றிய பின்னரும் ஆங்கிலேயர் காலம் வரை தத்தமது பிரதேசத்தை நிர்வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண அரசு 13ஆம் நூற்றாண்டின் ஆரம்மகாலம் முதல் உலகில் இருந்த ஒரே ஒரு சுதந்திர தமிழ் அரசாகவும் வலிமை மிக்கதாகவும் இருந்தது. இந்து சமுத்தரத்தின் வாணிபம் இவர்கள் கையில் பெருமளவில் இருந்தாக அறியப்படுகிறது.இக்காலத்தில் கோட்டை, கண்டி அரசுகள் யாழ்ப்பாண அரசின் ஆணையை ஏற்றுக் கொண்டு திறை செலுத்தின. இக்காலத் தமிழீழ நாணயங்கள் சேதுநாணயங்கள் என அழைக்கப்பட்டன..

கி.பி. 1215 இலிருந்து யாழ்பாண இராச்சியத்தை ஆண்ட அரசர்கள்

கலிங்கமாகன்---------(1215-1240)

குலசேகர பராசசேகரம்----------- (1240-1256)

குலொத்துங்கன்---------------(1256-1279)

விக்கிரமன்------------------ (1279-1302)

வரோதயன்------------------; (1302-1325)

செகராசசேகரன்----------------(1325-1348)

குணபூசணன்------------------(1348-1371)

வீரோதயன்-------------------(1371-1380)

ஜயவீரன்--------------------(1380-1410)

குணவீரன்-------------------(1410-1446)

கனகசூரியன்------------------(1446-1478)

பராசசேகரன்;------------------(1446-1519)

சங்கிலி செகராசசேகரன்------------(1519-1564)

புவிராசபண்டாரம் ----------------(1564-1565)

குஞ்சிநயினார்------------------(1565-1570)

பொpயபிள்ளை செகராசசேகரன்;----------(1570-1582)

புவிராசபண்டாரம்----------------(1582-1591)

எதிர்மன்னவசிங்க பராசசேகரன்---------(1591-1615)

சங்கிலிகுமாரன்------------------(1615-1619)

போர்துக்கேயர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றும் வரை 400 வருடங்கள் செழிப்பு மிக்க சுதந்திர நாடாக தமிழீழம் திகழ்ந்தது.


நன்றி : தாய்நிலம்.கொம்
Reply
#2
கோப்பாய் கோட்டை பற்றிய ஒரு சிறு குறிப்பு.
நல்லாரிலிருந்து கோப்பாய்க்கு சுரங்கமிருந்தது உண்மையாககூட இருக்கலாம்.

இந்த கட்டுரை பதிவுகள் தளத்திலிருந்து கொன்வேட்பண்ணி இங்கு இடுகிறேன்.

வரலாறு
கோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம்!
- வ.ந.கிரிதரன் -

[ 15-3-1981 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்த கட்டுரை இது. 35 ரூபா அனுப்பியிருந்தார்கள். தற்போது யாராவது இந்தக் கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய நிலை பற்றி அறிந்தால் அறியத் தரவும்- வ.ந.கி -]

நல்லூர் நகர் பற்றி ஆராய விளைந்த போது, கட்டடக் கலை மாணவனான நான் உதவி நாடி கலாநிதி கா.இந்திரபாலாவை நாடிய போது தான், அவர் தனது சிரமத்தைப் பொருடபடுத்தாது தனது வேலைகளுக்கு மத்தியில் எனக்கு உதவினார். அபோதுதான் அவர் கோப்பாயில் அமைந்திருந்த தமிழ் மன்னர்களின் கோட்டையைப் பற்றியும் அது பற்றிய சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரை பற்றியும் கூறினார். தமிழரின் பழமை வாய்ந்த சின்னங்களின் பரிதாப நிலை கண்டு மனம் நொந்திருந்த எனக்கு அந்தக் கோட்டை அந்தக் கோட்டையின் இன்றைய நிலையைப் பார்க்க வேண்டும் போலிருக்கவே , கோப்பாய் விரைந்தேன். கோப்பாய் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள சேர்ச்சைச் சேர்ந்த சற்குணசிங்கம் என்பவர் எனக்கு அப்பகுதியினைக் காட்டி உதவினார்.

மானிப்பாய் கைதடிச் சந்திக்குச் சற்று அப்பால் வீதியின் வலது புறமாக இருந்த ஒரு பழமையான வாயில் முகப்பை காட்டிய அவர் 'இதுதான் பழைய கோட்டை' (Old Castle) என்ற போது தனிமையான நிலையில் நீண்ட காலமாக அமைதியுடன் காத்து நிற்கும் ஒருமனிதனைப் போன்று அந்தப் பகுதி எனக்குத் தோன்றியது.

அந்த வாசலைக் கடந்து உள்ளே சென்றோம். சற்குணசிங்கம் சொன்னார்:

'அருகிலுள்ள எல்லாக் காணிகளுமே பழைய கோட்டை என்றுதான் அழைக்கப் படுகின்றன. ஆனால் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொருத்தரின் கைக்கு மாறிக் காலத்தின் கோலத்திற்கேற்ப வெகுவாக மாறி விட்டன. கடைசியாக உள்ள காணி மட்டும் இன்னும் விற்க படாமலுள்ளது..'

அந்தப் பின்புறக் காணித் துண்டை அடைந்ததுமே ஒருவித பழமை வாய்ந்த சூழலின் இனிமையில் மனது மூழ்கி விடுகின்றது. புதுமையானதொரு உலகிற்கு வந்து விட்டது போன்றதொரு உனர்வு ஏற்படுகின்றது. சற்குணசிங்கம் மேலும் கூறலானார்:

'இந்தக் காணியில் முன்பொருமுறை நான் வேம்பொன்றை வெட்டியபோது எலும்புத் துண்டுகள் அகப்பட்டன. நிலத்தில் செங்கற்கள் குவிந்து கிடக்கின்றன. அதோ அங்கே நிலத்தைப் பாருங்கள்.'

பார்த்தேன். அவர் காட்டிய இடத்தில்; பூமியினூடு எட்டிப் பார்த்தபடி செங்கற்கள் சிரித்தன. அவரே தொடர்ந்தார்:
'நிலத்தின் அமைப்பைப் பாருங்கள் தம்பி. ஒரு பக்கம் பதிந்தும், இன்னொரு பக்கம் உயர்ந்தும் கிடப்பதை. உயர்ந்து கிடக்கும் பகுதியைத் தோண்டிப் பார்ப்போமாயின் பழைய கோட்டையின் சரித்திரம் தெளிவாகலாம்'.

எனக்கு ஆச்சர்யமாகவிருந்தது. மனுஷன் எவ்வளவு ஆழமாகச் சிந்தித்திருக்கிறார். அத்துடன் அவர் ஒரு கதையையும் கூறினார்:
'நல்லூர்க் கோட்டையையும் , இந்தக் கோட்டையையும் இணைக்கும் ஒரு சுரங்கப் பாதை இருந்ததாக ஒரு கதை உள்ளது.'

அப்போதுதான் சுவாமி ஞானப்பிரகாசர் தனது கட்டுரையில் எழுதியிருந்த கோட்டை வாய்க்கால் பற்றி நினைவிற்கு வரவே கோட்டை வாய்க்காலைப் பற்றி வினவினேன். அந்தப் பழைய கோட்டை எனப்படும் காணித்துண்டுகளின் அருகாகச் செல்லும் சிறிய ஒழுங்கையையே கோட்டை வாய்க்கால் என்கின்றார்கள். அந்த ஒழுங்கையானது பழைய கோட்டை எனப்படும் நிலப் பகுதியிலும் தாழ்வானதாக அமைந்துள்ளது. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இந்தக் கோட்டை வாய்க்காலையே பழைய கோட்டையின் அகழியாகக் கருதுகின்றார்.

கோட்டை வாய்க்கால் என்னுமிப்பகுதி வயலுடன் முடிவடைகின்றது. பழைய கோட்டையின் பின்புறமாக உள்ள வயற்பகுதியும் வெகு தாழ்வானதாக உள்ளது. அவ்வயலில் பயிர் விளைவிக்கும் விவசாயியும் தான் மண்ணைக் கொத்துகையில் எலும்புகள் கிடைத்ததாகக் கூறினார்.

ஒரு காலத்தில் தனிச்சிறப்புப் பெற்று விளங்கிய அப்பகுதியின் இன்றைய பரிதாப நிலை கண்டு வயிறு பற்றியெரிந்தது. சற்குணசிங்கம் கூறினார்:'இப்பகுதியில் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு பாதுக்காக்கப்பட வேண்டும் ' அவரது குரலில் அப்பகுதியின் இன்றைய நிலைகண்டு படர்ந்த கவலை நியாயமானதுதான்.

வரலாற்றில் ஒரு தெளிவின்றிக் கிடக்கும் இலங்கைத் தமிழினத்திற்கு இன்றைய நிலையில் தேவையானது வெறும் வாய்ச் சவடால்களல்ல. ஆக்கபூர்வமான ஆய்வுகளே. இதற்கு தமிழ்ப்பகுதிகளில் காணப்படும் பழைமையான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், அழிபாடுகள் என்பவை பேணிப்பாதுகாக்கப்படல் மிகவும் அவசியமானதொன்றாகும்.

இலங்கையின் கடைசித்தமிழ் மன்னர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் புகழ்பெற்ற இராஜதானியாக விளங்கிய நகர்தான் நல்லூர். இன்றோ அது காலத்தின் கோலத்திற்கேற்ப வெகுவாக மாறிக்கொண்டு வருகின்றது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேணிபாதுகாக்கப்படவேண்டிய அந்நகரின் பழமையின் சின்னங்களைக் காண்பதே அரிதாகிக் கொண்டு வருகின்றது. பொதுமக்களோ, அரசியல்வாதிகளோ இது பற்றிக் கவனிக்காமல் இருப்பது வருத்ததிற்குரியது. யமுனாரி (யமுனா ஏரி) செல்லும் மண்பாதையிலும் நிலத்தில் காணப்படும் செங்கற்களை ஆராய்ந்து பார்ப்பின் அவை எத்தனையோ கதைகளைக் கூறக்கூடும்.

தமிழ் இனத்தின் சரித்திரத்தை விளக்கக்கூடிய சின்னங்களே அரிதாகக் காணப்படும் இன்றைய காலகட்டத்தில் , காணப்படும் ஒருசில சின்னங்களையாவது பேணிப்பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். இதையாவது நாம் செய்யாதுவிடின் வருங்காலச் சந்ததியினர் நம்மை என்றுமே மன்னித்து விட மாட்டார்கள்.
Reply
#3
'ஈழம்' தமிழர்களின் புூர்வீகத் தாயகம் என்பதை சிங்கள பௌத்தர்களின் வரலாறு கூறும் 'மகாவம்சம்' மறைக்க முயன் றாலும் வரலாற்றுச் சான்றுகளும், பழந்தமிழ் இலக்கியங்களும் புடமிட்டுக் காட்டுகின்றன. தமிழ் மணம் பரவிக்கொண்டிருந்த ஈழத்திலே வட இந்தியாவிலிருந்து துஸ்டச் செயல்களைச் செய்தமைக் காக தந்தையால் நாடுகடத்தப்பட்ட விஜயனும், அவனது நண்பர்களும் வந்திறங்கினார்கள். வந்தாரை வரவேற்கும் சிறந்த பண்பின் சொந்தக் காரர்கள் வாழ்ந்த ஈழமண் அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்தது. இவற்றை யெல்லாம் மூடிமறைத்து, தஞ்சமளித்த மண்ணின் சொந்தக்காரர் களையே வந்தேறுகுடி என்று கூறுமளவிற்கு வரலாறு திரித்துக் கூறப் படுகின்றது.
ஈழத்தின் உண்மையான பழங்கால வரலாறு வெளிக்கொண்டு வரப்பட வேண்டுமானால் தேரவாத பௌத்தத்தினதும், மகாவிகாரையினதும் புகழ்பாடும் புராணமான மகாவம்சத்தை, ஆயிரமாண்டுகளுக்குமேல் செவிவழி கேட்ட ஒருதலைப்பட்சமான செய்திகளின் தொகுப்பான மகாவம்சத்தை மையமாகக்கொண்ட வரலாற்று ஆய்வுப்போக்கை எமது வரலாற்று அறிஞர்கள் விலக்கிக்கொள்ளவேண்டும். எமது மண்ணின் மகிமையுள்ள வரலாற்று ஆதாரங்களை வெளிக்கொண்டுவர வேண்டும். மகாவம்சத்துக்கு முற்பட்டகால வரலாற்றையும் ஆய்வுசெய்ய முன்வர வேண்டும்.

சங்ககாலமும் ஈழமும்
வடவேங்கட (திருப்பதி) மலைதான் தமிழ் கூறும் நல்லுலகின் வடக்கெல்லை எனவும், தென்குமரியைத் தெற்கெல்லை எனவும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திற்கு சிறப்புப்பாயிரம் வழங்கிய அவரது முதன் மாணாக்கராகிய பனம்பாரனார்,
'வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து'
என்று சிறப்புப் பாயிரத்தின் முதலடியிலேயே கூறியுள்ளார். அவர் தமிழகத்தின் தெற்கெல்லையை குமரி என்று குறிப்பிட்டாரேதவிர, குமரிமுனை என்று கூறவில்லை. இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே அன்றிருந்த பெரும் நிலப்பரப்புக்கப்பால் பாய்ந்த குமரியாற்றைத்தான் அவர் குறிப்பிட்டார் என்றுதான் கொள்ளவேண்டும்.
ஏனெனில், இன்றைய தமிழகத்திற்குத் தெற்கே பாண்டியராட்சிக்குட் பட்ட ஏழ்பனை நாடு, ஏழ்தெங்கு நாடு உட்பட 49 நாடுகளைக்கொண்ட ஒரு பெரிய நிலப்பரப்பாகச் சங்ககாலத் தமிழகம் இருந்ததென்றும், பின்னர் கடல்கோளினால் அப்பகுதிகள் கடலினுள் மூழ்கி விட்டதென்றும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கின்றார். குமரி ஆறு பாய்ந்த அந்தப் பெரிய நிலப்பரப்பு கடலினுள் மூழ்கியதைத் தான்
'பஃறுளி யாற்றுடன் பன்மலைய டுக்கத்துக் குமரிக் கோடும்
கொடுங்கடல் கொள்ள'
என்று சிலப்பதிகாரம் (11:19-20) கூறுகின்றது.
தென்னிந்தியாவிற்குத் தெற்கே பரந்திருந்த லெமூரியாவிற்றான் முதன் முதல் மக்களினம் தோன்றிற்று எனவும், அவ இனமே தமிழ்நாட்டின் ஆதிக்குடிகள் எனவும் லெமூரியாக் கொள்கையினர் கருதுவர். லெமூரி யாக் கண்டத்தில் வாழ்ந்துவந்த மக்களின் வழிவந்தவர்கள் இப்போது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் வாழ்ந்துவருகின்றார்கள்.
இவர்களிடம் இன ஒற்றுமை, மக்கள் உடற்கூறு ஒற்றுமை, மொழி அமைப்பு ஒற்றுமை ஆகியவை காணப்படுகின்றன என்று வரலாற்றா சிரியரான டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் கூறுகின்றார்கள் (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்)
இவ வாறு, கடல்கொண்ட தென்நாடுதான் குமரிக் கண்டம் என்றும், லெமூரியா என்றும் வரலாற்றறிஞர்களால் குறிப்பிடப்படுகின்றது. இக்கடல்கோள் பற்றி காலவழிச் செய்திக் கோவையான மகாவம்சமும் எடுத்துக் கூறுகின்றது.
மறைந்துபோன குமரிக்கண்டத்திலிருந்த 49 நாடுகளில் ஏனைய நாடுக ளெல்லாம் அழிந்துபட ஏழ்பனை நாட்டின் ஒருபகுதி ஒரு தீவாக மாறிய தென்றும், அதனால்தான் அத்தீவு ஈழம் என்ற பெயர் பெற்றதாகவும் வரலாற்றறிஞர்கள் பலர் கருதுகின்றனர். ஏழ்பனை நாடு என்ற பெயரே ஈழம் எனத் திரிபடைந்ததாகவும் முதலியார் இராசநாயகம் (யாழ்ப்பாணச் சரித்திரம் அதி:2) குறிப்பிடுகிறார். தென்னிந்தியாவைப்பற்றி எழுதும் கிரேக்க அறிஞர் 'மெகஸ்தெனிஸ்' இலங்கையை 'தப்பிரபனே' என்று கூறுவதுடன், அஃது இந்தியாவினின்று தாமிரபரணி என்ற பொருனை ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கடற்பகுதி, அன்று நிலப்பகுதியாக இருந்தகாலத்தில், அந்த நிலத்தை ஊடறுத்து இலங் கையில் உள்ள புத்தளம்வரை தமிழகத்திலுள்ள தாமிரபரணி ஆறு பாய்ந்திருக்க வேண்டும். இலங்கையில் விஜயன் வந்திறங்கியதாகக் கூறப்படும் புத்தளத்திற்கருகே உள்ள பகுதிதான் தப்ரபனே என்று பல வரலாற்றறிஞர்கள் கருதுகிறார்கள்.
விஜயன் இலங்கையில் வந்திறங்கிய இடம் தம்பபாணி என்று மகா வம்சம் கூறுகின்றது (6:47)
சிந்துவெளி நாகாPகத்தின் சொந்தக்காரர்களான தமிழர்கள் முதலாம், இரண்டாம் தமிழ ச்சங்க காலங்களிலே தென்மதுரையும், கபாடபுரமும் உள்ளிட்ட குமரிக்கண்டத்தில் சிறப்புற்று வாழ்ந்ததை வரலாற்றுக் குறிப்பு களும், சங்க இலக்கியங்களும் சுட்டிக்காட்டி நிற்கின்றன. கடைச் சங்கம் இருந்த பாண்டி நாட்டில் நிலப்பரப்பு கி.மு. 2500 அளவில் கடல் கொள்ளப்பட்டபோது, ஈழத்தின் பெரும் பகுதியையும் கடல்கொண்டது.
'நாக நன்னாட்டு நானூறு யோசனை
வியன்பா தலத்து வீழ்ந்து கேடெய்தும்'
எனும் மணிமேகலை வரிகள் (9:21-22) குமரிக்கண்டத்தின் கடல்கொண்ட பகுதியில் நாகநாடு இருந்தது என்பதையும், அந்த நாடு நானூறு யோசனை (ஏறத்தாழ 4000 மைல்கள்) அளவுக்கு பரந்துபட்ட பெரிய நாடாக விளங் கியது என்பதையும் உறுதிசெய்கின்றது.
சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, ஈழத்தில் நாகர்கள் சிறப்புற ஆட்சி செலுத்தி வந்ததாக வும், புத்தர் இரண்டாவது தடவையாக இலங் கைக்கு வந்தபோது 'நாகதுவீபம்' என்னும் நாகநாட்டில் நாகமன்னர் குடும்பத்தில் அரச கட்டில் தொடர்பாக எழுந்த பிணக்கைத் தீர்த்துவைத்ததாகவும் மகாவம்சம் (1:45-70) கூறுகின்றது. இதை மணிமேகலையும்,
'வேக வெந்திறல் நாகநாட்டரசர்
சினமாசு ஒழித்து, மனமாசு தீர்த்தாங்கு,
அறச்செவி திறந்து, மறச்செவிஅடைத்துப்
பிறவிப்பணி மருத்துவன் இருந்தறம்
உரைக்கும்'
என்ற பாடல் வரிகளின் மூலம் (9:58- 61) உறுதிசெய்கின்றது.
அந்த நாகநாடு 500 யோசனைக்குப் பரந்திருந்தது என்று மகாவம்சம் கூறு கின்றது. (1:48)
புத்தர் மூன்றாவது தடவையாக இலங் கைக்கு வந்தபோது, கல்யாணியில் (இன்று தென்னிலங்கையில் உள்ள களனியில்) நாகர்கள் அரசு இருந்த தாகவும், அந்தநாட்டு மன்னனும் நாகத் வீப மன்னனும் உறவினர்கள் என்றும் மகாவசம்சத்திலேயே (1:63-78) கூறப் பட்டுள்ளது. இதிலிருந்து விஜயன் வரு கைக்கு முன்னர் இலங்கைத்தீவின் வட பகுதியிலும், தென்பகுதியிலும் நாகர்கள் ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகின்றது.
புத்தர் மூன்றாவது தடவை இலங் கைக்கு வந்துசென்று 37 ஆண்டுகளின் பின்னர்தான் விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பதும் மகாவம்சத்தின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே, சிங்களவர்களின் முன்னோடி யான விஜயன் வருவதற்கு நீண்டகாலத் திற்கு முன்னரே இலங்கைத்தீவு முழுவதும் நாகர் குடிமக்கள் சிறப்புற வாழ்ந்து, ஆட்சி நடத்தி வந்தார்கள் என்பது ஐயத்திற்கு இட மற்றது.
Reply
#4
போர்த்துக்கேயர் மட்டக்களப்பை 1622ல் கைப்பற்றி ஒல்லாந்தர் அதனை 1639ல் கைப்பற்றும் வரை தம் வசம் வைத்திருந்தனர். பின்பு கண்டி அரசன் பிடிபட்டவுடன் அதாவது 1815ம் ஆண்டு பங்குனி 2ம் திகதி செய்யப்பட்ட பிரகடணத்தின் கீழ் கிழக்குப் பிரதேசத்தின் புற எல்லைப்பகுதிகளும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 1833.10.01ந் திகதி பிரகடணத்தின் பிரகாரம் நிர்வாக நோக்கத்திற்காக நாடு ஜந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டு திருகோணமலை அதன் தலைநகராக்கப்பட்டது.

அன்றைய கிழக்கு மாகாணம், தற்போதுள்ள வடமத்திய மாகாணத்தின் பிந்தனைப் பகுதியையும் || மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டம்|| என அப்போதிருந்த பகுதியையும் உள்ளடக்கி இருந்தது. பின்னர் 1837ம், 1873ம் ஆண்டுகளில் முறையே பிந்தனை மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. 1870ம் ஆண்டு மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் தலைநகராக்கப்பட்டு திரு.ஆர்.டபிள்யுூ.ரி. மொறிஸ் முதலாவது அரசாங்க அதிபராக புதிய தலைமை அலுவலகத்தில் அமர்த்தப்பட்டார்.

கிழக்கு மாகாணத்தின் மூன்றாவது மாவட்டமாக 1961.04.10ல் அம்பாறை அமைக்கப்பட்ட போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாகம் பிரிக்கப்பட்டது. அத்துடன் 1963ல் அம்பாறை மாவட்டத்தில் கச்சேரி உகனையில் நிறுவப்பட்டது.



<span style='font-size:25pt;line-height:100%'>பிரதேசம் </span>


மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு ஏறக்குறைய 2632. 7 ச.கி.மீற்றராகும். இதில் 168.3 ச.கி. மீற்றர் நீர்ப்பரப்பாகும். இதன் வட எல்லை திருகோணமலை மாவட்டத்தையும் வெருகல் ஆற்றையும் கொண்டது. அதன் வடமேற்கும், வடமேற்கின் ஒரு பகுதியும் பொலனறுவை மாவட்டத்தை ஒரு எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கும், தென்மேற்கும், மேற்கின் ஒரு பகுதியும் அம்பாறை மாவட்டத்தை எல்லையாகவும், கிழக்கில் வங்காள விரிகுடாவையும் எல்லையாகக்கொண்டுள்ளது. நீர்ப்பரப்பான மட்டக்களப்பு ஏரி மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 73.6.கி.மீ. வெருகல் வரையும் தெற்கே 32.6.கி.மீ துறைநீலாவணை வரையுமுள்ளது. இந்த ஏரி மட்டக்களப்பு மாவட்டத்தை இரு பகுதிகளாகப் பிரித்துள்ளது. கிழக்கு கடலோரப்பகுதி பிரதான குடியிருப்புப் பகுதியாகும். மேற்கின் பெரும் பகுதி வயல் நிலங்களாக அமைந்துள்ளது. இம் மாவட்டமானது மொத்தப் பரப்பளவின் 3.8 வீதத்தினையும் நாட்டின் சனத்தொகையில் 2.2 வீதத்தினையும் வகிக்கின்றது.



பௌதீகத் தோற்றங்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலத்தோற்றம் சமதரையாகவும், கடல் மட்டத்திலிருந்து 10 மீற்றர் உயரத்திற்குட்பட்டதாகவும், அலைவரிசையான வண்டல் சமதரையாகவும் அமைவதோடு, ஊவா, மத்திய மாகாணங்களில் இருந்து பாயும் ஆறுகளையும் சிற்றாறுகளையும் கொண்டுள்ளது.

முழு மாவட்டமும் வரட்சி வலையத்திற்குள் அமைவதால் எல்லா சிற்றாறுகளும், ஆறுகளும் பருவகாலத்தவையாகும். திருகோணமலை மாவட்டத்தையும், மட்டக்களப்பையும் வெருகல் ஆறு பிரிக்கின்றது. மகிழவெட்டுவான் ஆறும், முந்தனை ஆறும், மாதுரு ஓயாவும் ஏனைய பிரதான பருவகால ஆறுகளாக உள்ளன.



பொருளாதாரம்


மாவட்டத்தின் பொருனாதாரம் பிரதானமாக விவசாயத்திலும், மீன்பிடித் தொழிலிலும் தங்கியுள்ளது. இம்மாவட்டம் கிழக்கின் தானிய உற்பத்திக் களஞ்சியம் எனச் சிறப்பாகக் குறிப்பிடப்படுவதோடு வரலாற்றுக் காலம் முழுவதும் தேவைக்கு அதிகமான நெல்லை உற்பத்தி செய்துள்ளது. மாவட்டத்தின் முயற்சியுள்ள சனத்தொகையில் ஏறக்குறைய 31 மூ மானோர் விவசாயத்திலும் அதேசமயம் 18மூ மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் பாரிய விவசாய நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. இப்பகுதிகள் நிலப்பரப்பின் 10மூ வீதத்தையும் மக்கள் தொகையில் 80மூ தையும் கொண்டுள்ளன. பொருளாதார hPதியாக இயங்கும் தொழிலாளர் தொகுதியில் விவசாயத்துறையைச் சார்ந்த நாள் வேலை செய்பவர்களே முக்கிய அங்கமாவார்கள்.

1981-1990 காலப்பகுதியில் (கிழக்கு மாகாணத்தின் உறுதி செய்யப்படாத கணக்கீடுகள்) மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 1.9மூ எதிர்மறையாக இருந்ததாக எடுத்துக் காட்டப்படுகின்றது. இது மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ச்சிப் பாங்கை ஓரளவு சுட்டிக் காட்டுவதாக அமைகிறது. கடந்த 6-9 வருடங்களாக மாவட்டத்தில் நிலவும் சாதகமற்ற நிலைமை காரணமாக விவசாய- உற்பத்தி, மீன்பிடித் தொழில் என்பன பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் திறந்த பொருளாதாரத் கொள்கை, ஒரு காலத்தில் வளமிக்கதாக இருந்த கைத்தறித் தொழிலையும் பாதித்தது. எனினும் தற்பொழுது அதற்குப் புத்துயிர் ஊட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Reply
#5
எல்லாளனின் சேனாதிபதி மற்றும் கைமுனுவின் தாய் தந்தையர் பெயர் விபரம் தெரிந்தவர்கள் அறியத் தரமுடியுமா?
.
Reply
#6
அவையளுக்கு பேத் சேட்டிவிக்கற் இல்லையாம்
Reply
#7
sethu Wrote:அவையளுக்கு பேத் சேட்டிவிக்கற் இல்லையாம்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#8
தாத்தா இதை நிறுத்துங்கோ தாத்தா?
Reply
#9
மாகாவம்சம் போன்ற சிங்கள பேரினவாதிகளின் புனைக்கதைகள் பொய்கதைகளாகிக் கொண்டு வருகின்றன. உலக தொல்பொருளாராச்சியாளர்கள் இவ் வரலாற்றுப் பொய்கள் மிக அண்மைய காலத்தில் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டுரை. நன்றி விதுரன்,சேது. எலி இதற்குள்ளும் புகுந்து விட்டதா?
ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#10
உந்த எலியின் வாலை அறுத்தால்தான் உது முகட்டுக்கை பதுங்கும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)