02-14-2006, 05:06 PM
ஒப்புவித்தல் மட்டுமே!
ஜெனீவாவில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அரசாங்கத்தரப்பு குழுவின் வாயும் கைகளும் கட்டப்பட்ட நிலையிலேயே அங்கு அனுப்பப்படவுள்ளனர். இதன் காரணமாக ஜெனீவாப் பேச்சுக்களில் எத்தகைய முன்னேற்றங்கள் காணப்படும் என்பது பெரிதும் கேள்விக்குரியதொன்றாக மாறியுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெனீவா செல்லும் அரசாங்கத்தரப்புக் குழுவினருக்கு பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனைகள் எனப்பல்வேறு வழிமுறைகளில் பேச்சுவார்த்தை மேசையில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பேசுவது என்பது குறித்து போதிக்கப்பட்டு வருகின்றது. சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனலாம்.
இதேவேளை பேச்சுவார்த்தையில் எதுவரையில் பேசப்படவேண்டும். என்பது குறித்து அரசாங்கத்தின் கூட்டணிக்கட்சிகள் ஒவ்வொன்றும் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு அறிவுறுத்தல்கள்; விடுத்தவண்ணம் உள்ளனர். ஆளும் கூட்டணிகளினதும் மற்றும் ஆதரவு வழங்கும் கட்சிகளினதும்; ஆலோசனைகளால் பேச்சுவார்த்தை மேசையில் எதைப்பேசுவது என்ற குழப்பமே அரசாங்கதரப்பு குழுவினருக்கு எஞ்சியிருக்கக்கூடும்.
பயிற்சிப்பட்டறைகள் கட்சிகளின் கருத்தமர்வுகள் என்பவற்றில் அரசாங்கம் எதை வெளிக்காட்ட முனைகின்றது எதைச்செய்ய முனைகின்றது என்பது இலகுவில் ஊகித்து அறிந்து கொள்ளத்தக்கதே. அதாவது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அரசியல் கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் செயற்பட முற்படுவதாக சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட முற்படுகின்றது.
இதேவேளை இச்சந்திப்புக்களை அடிப்படையாக வைத்து யுத்த நிறுத்த உடன்பாட்டில் தமக்குச்சாதகமான மாற்றங்களைக் கொண்டுவந்துவிடலாம் என அரசு கருதுகின்றது. அதாவது சர்வதேச hPதியில் மக்களின் ஒருமித்த கருத்துடன் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செயற்படுவதாகவும், யுத்தநிறுத்த உடன்பாட்டில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்த முற்படுவதாகவுள்ளது.
ஆனால் பயிற்சிப்பட்டறைகளை வைத்தாலும், கருத்தமர்வுகளை நடத்தி இருப்பினும் பேச்சுவார்த்தைக்குழுவினர் மீது அரசாங்கத் தரப்பும்- குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்றவை நம்பிக்கை கொண்டிருப்பதாக இல்லை. அத்தோடு சனாதிபதி ராஜபக்ஷ கூட அத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக தெரிகின்றது.
அவ்வாறு இல்லாது விடில் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் குழுவினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போதைய பேச்சுவார்த்தைகள் யுத்த நிறுத்தம்; பற்றியதாகையால் அது குறித்து எத்தகைய நிலைப்பாட்டை அரசதரப்பு எடுக்க வேண்டும் என்பதை சனாதிபதி தனது ஆலோசனைப்படி மட்டுமே எடுக்கவேண்டும் எனக்கருதுகின்றனர்.
இதனால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் தரப்பிற்கு போதிக்கப்பட்டுள்ள விவகாரத்திற்கு வெளியில் விடுதலைப் புலிகள் கேள்விகளை எழுப்பினாலோ விவகாரத்தைக் கொண்டு சென்றாலோ அரச தரப்பினருக்கு பதில் அளிப்பதற்கான உரிமை எதுவும் வழங்கப்படவில்லை. சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அது குறித்து முடிவை அரசகுழு மேற்கொள்ள முடியும்.
இத்தகைய நிபந்தனைகளையும் மீறி அரச குழுவினர் தடுமாற்றம் காரணமாக வாக்குறுதிகளை அளித்து விடுவார்களோ என்ற அச்சம் அரச தரப்பில் நிலவுவதாகக்கூட தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவிற்கு ஜெனீவாவிற்கு அனுப்பப்படும் து}}துக்குழுவினர் மீது ஆளும் கூட்டணியும் அதற்கு ஆதரவளிப்போரும் தீவிர அக்கறை கொண்டுள்ளனர்.
இது மாத்திரமின்றி பேச்சுவார்த்தை விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் எதுவும் வழங்கப்படக்கூடாது என்ற கட்டுப்பாடும் து}}துக்குழுவினருக்கு விதிக்கப்பட்டுள்ளது அதாவது வாய்கள் கட்டப்பட்ட நிலையிலேயே பேச்சுவார்த்தை தவிர்ந்த நேரத்திலும் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இந்த வகையில் சிறிலங்கா ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தைக்கென அனுப்பும் குழுவானது அரச தரப்பினரால் ஓதப்பட்டவற்றை ஒப்புவிக்கச் செல்லும் குழுவாகவே தயார் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையினால் ஜெனீவாப் பேச்சுவார்த்தை அரச தரப்பில் இருந்து முன்னேற்றமானதெதுவும் எதிர்பார்ப்பதற்கு இருப்பதாக இல்லை சிலவேளை அரச தரப்புக்குழுவினர்; ஏதாவது முன்னேற்றகரமான விடயம் குறித்து பேசிவிட்டால் அக்குழுவினர் நாடு திரும்ப முடியுமா? என்பது மிகைப்படுத்தப்பட்ட கேள்வியாகமாட்டது.
நன்றி: ஈழநாதம்
ஜெனீவாவில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அரசாங்கத்தரப்பு குழுவின் வாயும் கைகளும் கட்டப்பட்ட நிலையிலேயே அங்கு அனுப்பப்படவுள்ளனர். இதன் காரணமாக ஜெனீவாப் பேச்சுக்களில் எத்தகைய முன்னேற்றங்கள் காணப்படும் என்பது பெரிதும் கேள்விக்குரியதொன்றாக மாறியுள்ளது.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெனீவா செல்லும் அரசாங்கத்தரப்புக் குழுவினருக்கு பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனைகள் எனப்பல்வேறு வழிமுறைகளில் பேச்சுவார்த்தை மேசையில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பேசுவது என்பது குறித்து போதிக்கப்பட்டு வருகின்றது. சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனலாம்.
இதேவேளை பேச்சுவார்த்தையில் எதுவரையில் பேசப்படவேண்டும். என்பது குறித்து அரசாங்கத்தின் கூட்டணிக்கட்சிகள் ஒவ்வொன்றும் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு அறிவுறுத்தல்கள்; விடுத்தவண்ணம் உள்ளனர். ஆளும் கூட்டணிகளினதும் மற்றும் ஆதரவு வழங்கும் கட்சிகளினதும்; ஆலோசனைகளால் பேச்சுவார்த்தை மேசையில் எதைப்பேசுவது என்ற குழப்பமே அரசாங்கதரப்பு குழுவினருக்கு எஞ்சியிருக்கக்கூடும்.
பயிற்சிப்பட்டறைகள் கட்சிகளின் கருத்தமர்வுகள் என்பவற்றில் அரசாங்கம் எதை வெளிக்காட்ட முனைகின்றது எதைச்செய்ய முனைகின்றது என்பது இலகுவில் ஊகித்து அறிந்து கொள்ளத்தக்கதே. அதாவது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அரசியல் கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் செயற்பட முற்படுவதாக சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட முற்படுகின்றது.
இதேவேளை இச்சந்திப்புக்களை அடிப்படையாக வைத்து யுத்த நிறுத்த உடன்பாட்டில் தமக்குச்சாதகமான மாற்றங்களைக் கொண்டுவந்துவிடலாம் என அரசு கருதுகின்றது. அதாவது சர்வதேச hPதியில் மக்களின் ஒருமித்த கருத்துடன் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செயற்படுவதாகவும், யுத்தநிறுத்த உடன்பாட்டில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்த முற்படுவதாகவுள்ளது.
ஆனால் பயிற்சிப்பட்டறைகளை வைத்தாலும், கருத்தமர்வுகளை நடத்தி இருப்பினும் பேச்சுவார்த்தைக்குழுவினர் மீது அரசாங்கத் தரப்பும்- குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்றவை நம்பிக்கை கொண்டிருப்பதாக இல்லை. அத்தோடு சனாதிபதி ராஜபக்ஷ கூட அத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக தெரிகின்றது.
அவ்வாறு இல்லாது விடில் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் குழுவினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போதைய பேச்சுவார்த்தைகள் யுத்த நிறுத்தம்; பற்றியதாகையால் அது குறித்து எத்தகைய நிலைப்பாட்டை அரசதரப்பு எடுக்க வேண்டும் என்பதை சனாதிபதி தனது ஆலோசனைப்படி மட்டுமே எடுக்கவேண்டும் எனக்கருதுகின்றனர்.
இதனால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் தரப்பிற்கு போதிக்கப்பட்டுள்ள விவகாரத்திற்கு வெளியில் விடுதலைப் புலிகள் கேள்விகளை எழுப்பினாலோ விவகாரத்தைக் கொண்டு சென்றாலோ அரச தரப்பினருக்கு பதில் அளிப்பதற்கான உரிமை எதுவும் வழங்கப்படவில்லை. சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அது குறித்து முடிவை அரசகுழு மேற்கொள்ள முடியும்.
இத்தகைய நிபந்தனைகளையும் மீறி அரச குழுவினர் தடுமாற்றம் காரணமாக வாக்குறுதிகளை அளித்து விடுவார்களோ என்ற அச்சம் அரச தரப்பில் நிலவுவதாகக்கூட தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவிற்கு ஜெனீவாவிற்கு அனுப்பப்படும் து}}துக்குழுவினர் மீது ஆளும் கூட்டணியும் அதற்கு ஆதரவளிப்போரும் தீவிர அக்கறை கொண்டுள்ளனர்.
இது மாத்திரமின்றி பேச்சுவார்த்தை விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் எதுவும் வழங்கப்படக்கூடாது என்ற கட்டுப்பாடும் து}}துக்குழுவினருக்கு விதிக்கப்பட்டுள்ளது அதாவது வாய்கள் கட்டப்பட்ட நிலையிலேயே பேச்சுவார்த்தை தவிர்ந்த நேரத்திலும் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இந்த வகையில் சிறிலங்கா ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தைக்கென அனுப்பும் குழுவானது அரச தரப்பினரால் ஓதப்பட்டவற்றை ஒப்புவிக்கச் செல்லும் குழுவாகவே தயார் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையினால் ஜெனீவாப் பேச்சுவார்த்தை அரச தரப்பில் இருந்து முன்னேற்றமானதெதுவும் எதிர்பார்ப்பதற்கு இருப்பதாக இல்லை சிலவேளை அரச தரப்புக்குழுவினர்; ஏதாவது முன்னேற்றகரமான விடயம் குறித்து பேசிவிட்டால் அக்குழுவினர் நாடு திரும்ப முடியுமா? என்பது மிகைப்படுத்தப்பட்ட கேள்வியாகமாட்டது.
நன்றி: ஈழநாதம்

