02-14-2006, 12:05 PM
நான்கே மணி நேரத்தில் புது மார்பகம் * பிரிட்டன் நிபுணர்கள் புது சாதனை
லண்டன்: செயற்கை மார்பகம் பொருத்துவதில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புது சாதனை படைத்துள்ளனர். வெறும் நான்கு மணி நேரத்தில் புது மார்பகம் பொருத்தப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்கின்றனர்.
ஆம், உண்மை தான். பிரிட்டனில் இப்போது இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் திடீர் பிரபலமாகி விட்டது. அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளில் பரவும் என்று தெரிகிறது.
செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வது என்பது அமெரிக்காவின் ஹாலிவுட் நட்சத்திரங்கள், மாடல் அழகிகளிடம் இருந்து தான் பரவியது.
30 ஆண்டு முன்பே, செயற்கை மார்பகம் பொருத்தும், மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகள் ஆரம்பித்துவிட்டன என்றாலும், அதனால், பல வியாதிகள் வருகின்றன என்று சர்ச்சைகள் எழாமல் இல்லை.
அமெரிக்காவை தொடர்ந்து பல நாடுகளும் செயற்கை மார்பகம் பொருத்தும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். இப்போது இந்தியாவில் கூட, ஏன் சென்னையில் கூட மார்பகத்தை பெரிதாக்கி காட்டும் அறுவை சிகிச்சை வந்து விட்டது. ஆனால், பொதுவாக இது முறையல்ல, தேவையில்லாத பிரச்னைகளை தரும் என்று தொடர்ந்து நிபுணர்கள் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
இப்போது பிரிட்டன் நிபுணர்கள் இந்த "செயற்கை மார்பக' அறுவை சிகிச்சையில் இன்னொரு படி முன்னேறி உள்ளனர். மார்பகத்தை அதிகரித்து காட்டவும், குறைக்கவும், செயற்கை மார்பகம் பொருத்தவும் சில மணி நேரங்களே போதும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
பிரிட்டனில் சிஷயர் மாகாணத்தில் "மெடிஸ்பா கிளினிக்' என்ற பிரபல மருத்துவ மனை உள்ளது. அதன் உரிமையாளர் கார்ல் லெவிஸ் இந்த புது மார்பக பிளாஸ்டிக் சர்ஜரியை அறிமுகப்படுத்தியுள்ளார். சில மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இந்த புது அறுவை சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு வெறும் நான்கு மணி நேரம் போதும். முதல் நாள் இரவு, மருத்துவமனை வந்து தங்கினால் போதும், காலையில் வீடு திரும்பி விடலாம். எந்த பாதிப்பும், பக்க விளைவும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.
மார்பகத்தில் இயல்பாக உள்ள இடத்தில் சிறிய வெற்றிடம் உருவாக்கி, அதில் சிலிக்கான் நுரைபஞ்சுகளை (ஜெல்) வைக்கின்றனர் டாக்டர்கள். இதில், இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ளும் பெண்கள், முழு மயக்க நிலையில் கொண்டு செல்லப்படுவதில்லை. "லோக்கல் அனஸ்தீஷியா' முறையில் தான் மயக்க நிலையில் ஆபரேஷன் செய்யப்படுகின்றனர். எந்த கவலையும் பட வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.
இப்போது பிரிட்டனில் பல மருத்துவமனைகளில் இது போன்ற முறை பிரபலமாகி வருகிறது. சில மணி நேரங்களிலேயே பெண்கள், செயற்கை மார்பகம் வைத்துக்கொண்டு வீடு திரும்பி விடலாம் என்பதால் பல இளம் பெண்களும், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்படி செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ளும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 32 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
தினமலரிலிருந்து
லண்டன்: செயற்கை மார்பகம் பொருத்துவதில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புது சாதனை படைத்துள்ளனர். வெறும் நான்கு மணி நேரத்தில் புது மார்பகம் பொருத்தப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்கின்றனர்.
ஆம், உண்மை தான். பிரிட்டனில் இப்போது இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் திடீர் பிரபலமாகி விட்டது. அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளில் பரவும் என்று தெரிகிறது.
செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வது என்பது அமெரிக்காவின் ஹாலிவுட் நட்சத்திரங்கள், மாடல் அழகிகளிடம் இருந்து தான் பரவியது.
30 ஆண்டு முன்பே, செயற்கை மார்பகம் பொருத்தும், மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகள் ஆரம்பித்துவிட்டன என்றாலும், அதனால், பல வியாதிகள் வருகின்றன என்று சர்ச்சைகள் எழாமல் இல்லை.
அமெரிக்காவை தொடர்ந்து பல நாடுகளும் செயற்கை மார்பகம் பொருத்தும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். இப்போது இந்தியாவில் கூட, ஏன் சென்னையில் கூட மார்பகத்தை பெரிதாக்கி காட்டும் அறுவை சிகிச்சை வந்து விட்டது. ஆனால், பொதுவாக இது முறையல்ல, தேவையில்லாத பிரச்னைகளை தரும் என்று தொடர்ந்து நிபுணர்கள் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
இப்போது பிரிட்டன் நிபுணர்கள் இந்த "செயற்கை மார்பக' அறுவை சிகிச்சையில் இன்னொரு படி முன்னேறி உள்ளனர். மார்பகத்தை அதிகரித்து காட்டவும், குறைக்கவும், செயற்கை மார்பகம் பொருத்தவும் சில மணி நேரங்களே போதும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
பிரிட்டனில் சிஷயர் மாகாணத்தில் "மெடிஸ்பா கிளினிக்' என்ற பிரபல மருத்துவ மனை உள்ளது. அதன் உரிமையாளர் கார்ல் லெவிஸ் இந்த புது மார்பக பிளாஸ்டிக் சர்ஜரியை அறிமுகப்படுத்தியுள்ளார். சில மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இந்த புது அறுவை சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு வெறும் நான்கு மணி நேரம் போதும். முதல் நாள் இரவு, மருத்துவமனை வந்து தங்கினால் போதும், காலையில் வீடு திரும்பி விடலாம். எந்த பாதிப்பும், பக்க விளைவும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.
மார்பகத்தில் இயல்பாக உள்ள இடத்தில் சிறிய வெற்றிடம் உருவாக்கி, அதில் சிலிக்கான் நுரைபஞ்சுகளை (ஜெல்) வைக்கின்றனர் டாக்டர்கள். இதில், இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ளும் பெண்கள், முழு மயக்க நிலையில் கொண்டு செல்லப்படுவதில்லை. "லோக்கல் அனஸ்தீஷியா' முறையில் தான் மயக்க நிலையில் ஆபரேஷன் செய்யப்படுகின்றனர். எந்த கவலையும் பட வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.
இப்போது பிரிட்டனில் பல மருத்துவமனைகளில் இது போன்ற முறை பிரபலமாகி வருகிறது. சில மணி நேரங்களிலேயே பெண்கள், செயற்கை மார்பகம் வைத்துக்கொண்டு வீடு திரும்பி விடலாம் என்பதால் பல இளம் பெண்களும், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்படி செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ளும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 32 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
தினமலரிலிருந்து


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
hock: