Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
[size=18]இதயம் அனலில் வேகுதடி-
எந்தன் இருவிழி - தூக்கம் கொன்றதடி!
செல்லமாய் என்னை கிள்ளு-
உந்தன் சிரிப்பால் என்னை கொல்லு!
சுட்டெரிக்கும் வெய்யில் கூட
மழையென்றாச்செனக்கு!
சுந்தரி நீ கள்ளி - பாரேன்
உன் உதட்டு சிவப்பில்
என் உயிர் ஒளிந்து கொண்டதடி!
நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!
ஆயிரம் பாஷை இங்காகலாம்!
உந்தன் செல்ல அதட்டல் பேச்சே-
தாய் மொழிடி எனக்கு!
ஏய்டா என்பாய் குட்டிமா-
என் ஜீவன் அர்த்தம் கொள்ளுமே!
ஏது வாழ்வு ? அதுவல்லவோ ?
என் இருகரங்களில் -தலை சாய்த்து
குழந்தை என்றாகி நீ தூங்கு!
நீ தூங்கும் அழகை நான் ரசிப்பேன்
தந்தையென்றாகாமலே - உன்னை
என் மழலை எண்றெண்ணி நான் மகிழ்வேன்!
இடம் ஒன்று நான் தருவேன் -
மாடப்புறாவே- என்
மடிமீது வந்து கூடு கட்டேன்!
-!
!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
கவிதை நன்றாக உள்ளது வர்ணன். உங்கள் மாடப்புறா மடிமீது வந்து கூடு கட்டிட்டா? :wink:
<b> .. .. !!</b>
Posts: 118
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
உங்கள் கவிதை அழகா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்
Posts: 203
Threads: 13
Joined: Jul 2004
Reputation:
0
கவிதையா என்று தெரியவில்லை வர்ணன். ஆனால் RAP இசையினூடு பாட நன்றாக இருக்கும். பாடட்டுமா?
..
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றாக உள்ளது வர்ணன். மேற்கண்ட வரிகள் பிடித்துப்
போயின. சயந்தன் சொன்னதுபோல் பாடலுக்கேற்ற
சந்தத்துடன் அமைந்துள்ளது. பாடலாக்க முயற்சியுங்களேன்.
நன்றி.
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
கவிதை நன்றாக உள்ளது வர்ணன்.
வாழ்த்துக்கள்...
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin-->எல்லாரும் கவிதை எழுதிறாங்க - நானும் எழுதி பார்த்தா என்ன- எண்ட வயிதெரிச்சல்ல- ஏதோ கிறுக்கினன் - அது கவிதை- எண்டு நீங்க நினைச்சா - யஸ்ற்- கவிதையா மட்டும் பாருங்க ரசிகை -! நன்றி! 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரியுங்கோ. ஏன் அதுக்கு கோவிக்கிறீங்கோஒ நான் சும்மா பகிடிக்குத்தான் கேட்டேனுங்கோ :roll:
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வர்ணன் கவிதை அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் .
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
தெரிந்தோ தெரியாமலோ யஸ்ற் எண்ட சொல்லை யூஸ் பண்ணிட்டன் - அதுக்காக இவ்ளோ யஸ்ற்றா?-
நன்றி ப்ரியசகி - ரசிகை- (கோவம் எல்லாம் இல்ல- இணைய தளத்தில கோவம் காட்டுறவன் கோழை -எண்ட அவ பெயர் எனக்கு வேண்டாம் சும்மா- சும்மா-எழுதினன் )-சண்முகி- ரமா! 8)
-!
!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
ரமா அப்பிடி இல்லை - உங்கள் பாராட்டை குறைச்சு நினைக்கல நான் - இளைஞனின் கவி திறமை இந்த களம் அறிந்தது- !
அதாலதான் - நான் எழுதியதும் நல்லா இருக்கு என்று - தலைகனம் இல்லாம அவர் சொன்ன கருத்தை - மதிச்சன் -! 8) அவ்ளோதான் !
-!
!
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
வரணன் இன்றுதான் இந்தக் கவிதை வாசித்தேன்.நல்ல கவிதை.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!
இந்த வரிகள் எனக்கும் பிடிச்சு இருக்கு.. கவிதை ரொம்ப நல்லா இருக்கு வர்ணன்...
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
நன்றி சினேகிதி & ஜெனனி 8)
-!
!