Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறிலங்கா - ஈரான் இராசதந்திர உறவு சிக்கலடைகிறது
#1
<span style='color:brown'><b>சிறிலங்காவின் நிலைப்பாடு: ஈரான் கடும் அதிருப்தி </b>

[ஒஸ்ரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி சபையின் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்திருப்பதில் ஈரான் கடுமையாக அதிருப்தியடைந்துள்ளது.


தமது அதிருப்தியை கொழும்பில் உள்ள தூதரகத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளது.

வியன்னா மாநாட்டில் இந்தியா, சிறிலங்கா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்க அணியில் நின்று ஈரானுக்கு எதிராக வாக்களித்தன. கியூபா, சிரியா, வெனிசூலா ஆகிய நாடுகள் ஈரானை ஆதரித்தன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 5 ஆப்பிரிக்க நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குத்தான் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளதே தவிர ஈரான் மீதான தடைக்கான தீர்மானம் இது அல்ல என்று விளக்கம் அளித்தார்.

சிறிலங்காவுக்கு கடந்த ஆண்டு 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை ஈரான் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்சின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் இந்த நிலைப்பாட்டை மேற்கொள்வதற்காக பாரிய கடனுதவிகளை அளிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிக்கலஸ் பேர்ன்சும் கொழும்பு ஊடகவியலாளர் மாநாட்டில் சிறிலங்காவுக்கான கடனுதவித் திட்டங்கள் மற்றும் இராணுவ உதவிகள் பற்றி அறிவித்ததையும் கொழும்பு அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதற்கு முன்னதாக அமெரிக்கா சென்ற மங்கள சமரவீர, அந்நாட்டு அமைச்சர் கொண்டலீசா றைசுடனான சந்திப்பின் போதும் அமெரிக்கா தரப்பில் இத்தகைய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஈரானை விட அமெரிக்கா கூடுதலான கடனுதவி மற்றும் இராணுவ உதவி அளிக்க முன்வந்தமையால்தான் அமெரிக்க அணிக்கு சிறிலங்கா தாவியது என்றும் கொழும்பு கொள்கை வகுப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.</span>

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#2
<b>ஈரானுக்கு எதிராக வாக்களிப்பதா?: சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜே.வி.பி. கண்டனம்</b>

அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட ஈரான் எதிர்ப்பு தீர்மானத்தின் மீது சிறிலங்கா ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் அரசாங்கத்துக்கு ஜே.வி.பி. கண்டனம் தெரிவித்துள்ளது.


ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பில் மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதம்:

சிறிலங்கா அரசாஙக்த்துக்கு நீண்ட காலமாக உதவி வரும் ஈரானுக்கு எதிராக நிலைப்பாடு மேற்கொண்டுள்ளமை ஆட்சேபனைக்குரியது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கடைப்பிடித்து வரும் ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டையே அரசாங்கமும் தொடர்ந்து பின்பற்றுகிறது.

வெனிசூலா உள்ளிட்ட 3 நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளமை பாராட்டுக்குரியது என்று அந்க் கடிதத்தில் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#3
நல்லது தானே முந்தி தொப்பி நாடுகள் தான் இடையில்
கைவிடுவது வழக்கமாக இருந்தது இப்ப அது ஸ்ரீலங்காவுக்கும் அந்த நோய் வந்துட்டுது போல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


ஆனால் பாருங்கோ அரசு ஆயுதம் வாங்க ஒரு தொப்பி
அமைச்சரை தேயிலையோட அனுப்பி <b>இன்ச அல்ஹ </b>சொல்லிட்டு ஆயுதம் வாங்கும் ஈரானிடம் இருந்து.
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)