01-19-2006, 02:18 PM
<b>நாடாளுமன்ற ஆசனத்தை இழந்தார் எஸ்.பி.திசநாயக்க </b>
சிறையில் உள்ள எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாது தொடர்ச்சியாக 3 மாதங்கள் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாமையினால் அரசியலமைப்புச் சட்டத்தின் 66 (ஈ) பிரிவின் கீழ் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதாக தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பிரியாணி விஜேசேகர எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றச் செயலாளரின் கடிதம் நேரடியாகவே தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எஸ்.பி. திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளரை நாடாளுமன்றச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதமும் நாடாளுமன்ற செயலாளர் எஸ்.பி.திசநாயக்கவின் விவகாரம் சம்பந்தமாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்த போதிலும் அத்தகைய கடிதம் கிடைக்கவில்லை என்று தேர்தல் செயலகம் தெரிவித்திருந்தது.
அதனால் மீண்டும் ஒருமுறை கடிதம் அனுப்புவதற்கு நேற்று முன்தினம் நடைபெற்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி இன்று நடைபெறவுள்ள கட்சித்தலைவர்களின் மாநாட்டில் கேள்வி எழுப்பவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.
முன் அனுமதியின்றி 3 மாதங்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாத எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகி உள்ளது என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடென்றும் அந்த நிலைப்பாட்டிலிருந்தே அரசாங்கம் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எஸ்.பி.திசநாயக்கவின் விவகாரம் ஆராயப்படும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
சிறையில் உள்ள எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாது தொடர்ச்சியாக 3 மாதங்கள் நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாமையினால் அரசியலமைப்புச் சட்டத்தின் 66 (ஈ) பிரிவின் கீழ் அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதாக தேர்தல் ஆணையாளருக்கு நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பிரியாணி விஜேசேகர எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றச் செயலாளரின் கடிதம் நேரடியாகவே தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எஸ்.பி. திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளரை நாடாளுமன்றச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதமும் நாடாளுமன்ற செயலாளர் எஸ்.பி.திசநாயக்கவின் விவகாரம் சம்பந்தமாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்த போதிலும் அத்தகைய கடிதம் கிடைக்கவில்லை என்று தேர்தல் செயலகம் தெரிவித்திருந்தது.
அதனால் மீண்டும் ஒருமுறை கடிதம் அனுப்புவதற்கு நேற்று முன்தினம் நடைபெற்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி இன்று நடைபெறவுள்ள கட்சித்தலைவர்களின் மாநாட்டில் கேள்வி எழுப்பவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.
முன் அனுமதியின்றி 3 மாதங்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளாத எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகி உள்ளது என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடென்றும் அந்த நிலைப்பாட்டிலிருந்தே அரசாங்கம் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற உள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எஸ்.பி.திசநாயக்கவின் விவகாரம் ஆராயப்படும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

