01-10-2006, 07:18 AM
நளினிமுருகன் மகள் தமிழகம் வந்தார்: சிறையில் பெற்றோரை சந்திக்கிறார்
ஜனவரி 10, 2006
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் நளினி, முருகன் தம்பதியினரின் மகள் ஆரித்ரா 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார்.
இன்று வேலூர் சிறைக்குச் சென்று தனது பெற்றோரை அவர் சந்திக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் முருகன் மற்றும் நளினி. கணவன், மனைவியான இவர்களில் முருகன் இலங்கையைச் சேர்ந்தவர், நளினி தமிழகத்தைச் சேர்ந்தவர். சிறையில் வைத்து நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது.
முருகன் மற்றும் நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இருப்பினும் நளினியின் வேண்டுகோளை ஏற்று அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. முருகன் தாக்கல் செய்துள்ள கருணை மனு இன்னும் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.
ஆரித்ராவுக்கு 6 வயது ஆகும் வரை தனது தாயாருடன் இருந்தார். அதன் பின்னர் முருகனின் தாயாருடன் ஆரித்ரா இலங்கை சென்று விட்டார். இந் நிலையில் தனது பெற்றோரைக் காண ஆரித்ரா விரும்பினார்.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்தனர் முருகன் குடும்பத்தினர்.
ஆனால், விசா கொடுப்பதில் இந்திய தூதரகம் தாமதம் செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். முருகன் சிறையிலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இதையடுத்து உடனடியாக ஆரித்ராவின் விசா விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து விசா வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஆரித்ராவுக்கு விசா கிடைத்தது. இதையடுத்து ஆரித்ரா தனது உறவினர்களுடன் சென்னை வந்துள்ளார்.
தற்போது வேலூர் சென்றுள்ள அவர் இன்று தனது பெற்றோரை சந்திக்க சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார். இன்றே அனுமதி கிடைத்தால் 8 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தாய், தந்தையை சந்திப்பார் ஆரித்ரா.
6 வயதில் இலங்கைக்குப் போன ஆரித்ராவுக்கு இப்போது 14 வயதாகிறது. அவர் தங்கியிருக்கும் இடத்தை போலீஸார் படு ரகசியமாக வைத்துள்ளனர்.
http://thatstamil.indiainfo.com/news/2006/...1/10/lanka.html
ஜனவரி 10, 2006
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் நளினி, முருகன் தம்பதியினரின் மகள் ஆரித்ரா 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார்.
இன்று வேலூர் சிறைக்குச் சென்று தனது பெற்றோரை அவர் சந்திக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் முருகன் மற்றும் நளினி. கணவன், மனைவியான இவர்களில் முருகன் இலங்கையைச் சேர்ந்தவர், நளினி தமிழகத்தைச் சேர்ந்தவர். சிறையில் வைத்து நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது.
முருகன் மற்றும் நளினிக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இருப்பினும் நளினியின் வேண்டுகோளை ஏற்று அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. முருகன் தாக்கல் செய்துள்ள கருணை மனு இன்னும் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.
ஆரித்ராவுக்கு 6 வயது ஆகும் வரை தனது தாயாருடன் இருந்தார். அதன் பின்னர் முருகனின் தாயாருடன் ஆரித்ரா இலங்கை சென்று விட்டார். இந் நிலையில் தனது பெற்றோரைக் காண ஆரித்ரா விரும்பினார்.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்தனர் முருகன் குடும்பத்தினர்.
ஆனால், விசா கொடுப்பதில் இந்திய தூதரகம் தாமதம் செய்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். முருகன் சிறையிலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இதையடுத்து உடனடியாக ஆரித்ராவின் விசா விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து விசா வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஆரித்ராவுக்கு விசா கிடைத்தது. இதையடுத்து ஆரித்ரா தனது உறவினர்களுடன் சென்னை வந்துள்ளார்.
தற்போது வேலூர் சென்றுள்ள அவர் இன்று தனது பெற்றோரை சந்திக்க சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார். இன்றே அனுமதி கிடைத்தால் 8 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தாய், தந்தையை சந்திப்பார் ஆரித்ரா.
6 வயதில் இலங்கைக்குப் போன ஆரித்ராவுக்கு இப்போது 14 வயதாகிறது. அவர் தங்கியிருக்கும் இடத்தை போலீஸார் படு ரகசியமாக வைத்துள்ளனர்.
http://thatstamil.indiainfo.com/news/2006/...1/10/lanka.html
.
.
.

