01-07-2006, 08:38 PM
நாற்றோடு காற்றுவந்து மோதும் - -
கரைகழுவிபோகும் அலைகள் ஏதோ ராகம் பாடும்- -
பூ ஒன்றின் இதழெடுத்து பொட்டிடு தோழி- -
பொன்மாலையதன் வண்ணம் அள்ளிவந்து
வாயிலை அலங்கரி!
இராவென்ன பகல் என்ன சொல்லு?
நீ இரவுக்குள் பகலாகி நில்லு!
மழையென்ன வெய்யில் என்ன -சீ போ!
வாழ்வென்ன பலமுறை வருமா?
உந்தன் வாழ்வு முடிந்து போனால் -பூமி
அதை உனக்கு திருப்பி தருமா?
வானத்தை பாரடி தோழி- நீல நிறத்தை கரைத்தூத்தியங்கே
நிலவுக்குள் பின்னால் சென்று ஒழிந்து கொண்டதாரடி?
வானம் குடைபிடிக்கிறது பார்-பார்!
அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை- -
வாழ்ந்து பார்ப்போமே?- வா வா!
வரைமுறையென்ற தாலிகட்ட பிறர்யார்?
உந்தன் வாழ்வதற்க்கு வேலி போட அவர் யார்?
புன்னகைக்கும் நேரமதில் வந்து தோழணைப்பார்-அறி
பொங்கியழும் நேரமதில் போயே போவார்-
அவர் உறவை நீ முறி!
உயிர்-அது என்னவென்று நினைத்தாய்?
ஊசலாடும் ஒரு பயிர் நீ அறிவாய்!
அறிவு கிண்ணத்தில் நீர் எடுத்தற்க்கு ஊற்று
அகிலமெங்கும் சென்று உன் கொடி நாட்டு!
திரும்பி வா- உன் தெருவெங்கும் ஆனந்த கூத்தாடு!
பசியென்று வருபவன் எவனோ- உனக்கில்லையென்றானாலும்
ஒருபிடி அன்னம் அவன் வாயிலூட்டு- -
அன்பென்ற ஊஞ்சல் கட்டி அதில் அவனை இருத்தி ஆட்டு!
காதல் தவறென்று சொல்வார் பாரு- -
காதலில்லாமல் பூமியென்பது இங்கேது?
காதலிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவரே - காதல் அசிங்கமென்று சொல்வது அதிகம் நீ பாரு!
* * * *
மதம் என்ன குலம் என்ன போடா- -
மலையென்ன மடுவென்ன போடா- -
சதி பின்ன சிலரெதுவோ சொல்வார்
அடா சாகபோகும் மனிதனுக்கு சாதி சமயம் ஒரு கேடா?
நீ பெற்ற அறிவதனை பிறர்க்கு சொல்லு- -
பிறர் கொண்ட அறிவதனை கேட்டு வாங்கு!
அழகென்பதெது என்று சொல்லு?
ஐஸ்வர்யா- சந்தியா- அஜித்?
அமெரிக்கா - சுவிஸ்- அவுஸ்ரேலியா?
உலகமெல்லாம் சுற்றிவந்து ஒவ்வொன்று சொல்வாய் சீ..சீ
உன் வீட்டுக்குள்ளேயே விடை இருக்கு பார் பார்!
ஐயிரண்டு மாதம் சுமந்து பெற்றாளே எம் அன்னை
அவளே உலகத்தில் பேரழகு போ போ!
-வர்ணன் -
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->