01-06-2006, 05:49 AM
<b>நாங்கள் சாக துணிந்து விட்டோம்; போருக்கு தயார் : பெண் விடுதலை புலிகள் பகிரங்க அறிவிப்பு </b>
கிளிநொச்சி: இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் அரசுக்கு இடையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறினாலும், மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளன. பெண் விடுதலைப் புலிகள் பலர் போருக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ராணுவத்துடனான போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் பொருட்டு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் "மாவீரர் தின'த்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த நவம்பரில் நடந்த நினைவு தின கூட்டத்தில் உரையாற்றிய புலிகள் தலைவர் பிரபாகரன், "தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்த பிரச்னையில் தீர்வு காணப்படா விட்டால் புத்தாண்டு (2006) முதல் போர் தொடங்கும்' என்று எச்சரித்தார். புத்தாண்டு தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் முறையான போர் அறிவிப்பு வெளியிடப்படா விட்டாலும் இரு தரப்பும் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த டிசம்பரில் மட்டும் 39 ராணுவ வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி பலியாயினர். இந்த தாக்குதல்களுக்கு புலிகளே காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில், கடந்த திங்களன்று திரிகோண மலையில் உள்ள பல்கலை கழகத்தில் ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இலங்கை ராணுவம் ஈடுபட்டதாக புலிகள் அமைப்பு கூறியது.
இரு தரப்பும் அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில், "பகிரங்க தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக' புலிகள் அமைப்பில் உள்ள பெண்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். மாலதி என்ற 28 வயது பெண் விடுதலைப்புலி கூறும்போது, ""எனது சக தோழர்களின் மரணமே எனக்கு மிகுந்த மன உறுதியை தந்தது. கடந்த 10 வருடங்களாக இயக்கத்தில் உள்ள நான் மீண்டும் போர் புரிய தயாராக உள்ளேன். தமிழ் மக்களின் விடுதலை அமைதி வழியில் கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி தர வில்லை. எங்களது தலைவர் தனது மனதை மாற்றிக்கொண்டு புதிய உத்தரவை பிறப்பித்தால் உடனே நாங்கள் தயாராகி விடுவோம். சாகத் துணிந்து விட்டோம். போருக்கு தயாராக உள்ளோம்'' என மிகவும் ஆவேசமாக கூறினார்.
இதே போன்று மற்றொரு பெண் புலியான 32 வயது ஜெயந்தி, ""என்னுடைய பயிற்சி காலம் கடுமையாக இருந்தது. ஆனால், முதல் தாக்குதல் மிகவும் எளிதானது. வட கிழக்கு கடல் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 1996ம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தினேன். நாங்கள் நன்கு பயிற்சி பெற்று மிகவும் தயாராக உள்ளோம். வெற்றி ஒன்றே எங்களது இலக்கு. நாங்கள் அவர்கள் (இலங்கை ராணுவம்) மீது இரக்கமோ மரியாதையோ காட்ட மாட்டோம்'' என்றார்.
தங்களுக்கு எத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பது குறித்து தெரிவித்த பெண் புலிகள்,"அவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள பணிகள்' குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் 35 சதவீதம் பெண்கள் உள்ளனர். அவர்களது எண்ணிக்கை 18 முதல் 20 ஆயிரம் வரை இருக்கக் கூடும். அமைப்பில் புதிதாக சேரும் பெண்களுக்கு ஒரு வருட காலம் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். பல்வேறு வகையான ஏ.கே.47, மற்றும் துப்பாக்கிகள் உட்பட பல கருவிகளை இயக்கும் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது. அதன் பிறகே அவர்கள் படை வீரர்களாக சேர்க்கப்பட்டு தாக்குதல் களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்
<b>நன்றி : தின மலர்.</b>http://www.dinamalar.com/2006jan06/imp6.asp
கிளிநொச்சி: இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் அரசுக்கு இடையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறினாலும், மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளன. பெண் விடுதலைப் புலிகள் பலர் போருக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ராணுவத்துடனான போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் பொருட்டு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் "மாவீரர் தின'த்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த நவம்பரில் நடந்த நினைவு தின கூட்டத்தில் உரையாற்றிய புலிகள் தலைவர் பிரபாகரன், "தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்த பிரச்னையில் தீர்வு காணப்படா விட்டால் புத்தாண்டு (2006) முதல் போர் தொடங்கும்' என்று எச்சரித்தார். புத்தாண்டு தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் முறையான போர் அறிவிப்பு வெளியிடப்படா விட்டாலும் இரு தரப்பும் ஆங்காங்கே தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த டிசம்பரில் மட்டும் 39 ராணுவ வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி பலியாயினர். இந்த தாக்குதல்களுக்கு புலிகளே காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்நிலையில், கடந்த திங்களன்று திரிகோண மலையில் உள்ள பல்கலை கழகத்தில் ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இலங்கை ராணுவம் ஈடுபட்டதாக புலிகள் அமைப்பு கூறியது.
இரு தரப்பும் அறிவிக்கப்படாத போரை நடத்திக் கொண்டு இருக்கும் நிலையில், "பகிரங்க தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக' புலிகள் அமைப்பில் உள்ள பெண்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். மாலதி என்ற 28 வயது பெண் விடுதலைப்புலி கூறும்போது, ""எனது சக தோழர்களின் மரணமே எனக்கு மிகுந்த மன உறுதியை தந்தது. கடந்த 10 வருடங்களாக இயக்கத்தில் உள்ள நான் மீண்டும் போர் புரிய தயாராக உள்ளேன். தமிழ் மக்களின் விடுதலை அமைதி வழியில் கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி தர வில்லை. எங்களது தலைவர் தனது மனதை மாற்றிக்கொண்டு புதிய உத்தரவை பிறப்பித்தால் உடனே நாங்கள் தயாராகி விடுவோம். சாகத் துணிந்து விட்டோம். போருக்கு தயாராக உள்ளோம்'' என மிகவும் ஆவேசமாக கூறினார்.
இதே போன்று மற்றொரு பெண் புலியான 32 வயது ஜெயந்தி, ""என்னுடைய பயிற்சி காலம் கடுமையாக இருந்தது. ஆனால், முதல் தாக்குதல் மிகவும் எளிதானது. வட கிழக்கு கடல் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது கடந்த 1996ம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தினேன். நாங்கள் நன்கு பயிற்சி பெற்று மிகவும் தயாராக உள்ளோம். வெற்றி ஒன்றே எங்களது இலக்கு. நாங்கள் அவர்கள் (இலங்கை ராணுவம்) மீது இரக்கமோ மரியாதையோ காட்ட மாட்டோம்'' என்றார்.
தங்களுக்கு எத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டன என்பது குறித்து தெரிவித்த பெண் புலிகள்,"அவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள பணிகள்' குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் 35 சதவீதம் பெண்கள் உள்ளனர். அவர்களது எண்ணிக்கை 18 முதல் 20 ஆயிரம் வரை இருக்கக் கூடும். அமைப்பில் புதிதாக சேரும் பெண்களுக்கு ஒரு வருட காலம் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படும். பல்வேறு வகையான ஏ.கே.47, மற்றும் துப்பாக்கிகள் உட்பட பல கருவிகளை இயக்கும் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது. அதன் பிறகே அவர்கள் படை வீரர்களாக சேர்க்கப்பட்டு தாக்குதல் களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்
<b>நன்றி : தின மலர்.</b>http://www.dinamalar.com/2006jan06/imp6.asp
.
.
.


hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->