12-31-2005, 10:15 PM
<b>ராஜீவ் நினைவு சொற்பொழிவு: சோனியாவுக்கு இலங்கை அழைப்பு</b>
இலங்கையில் நடைபெற உள்ள முதலாவது ராஜீவ் காந்தி நினைவு சொற்பொழிவில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சய.
நான்கு நாள் பயணமாக புதுடில்லி வந்திருந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகையில் தன்னைச் சந்தித்த சோனியா காந்திக்கு இந்த அழைப்பை விடுத்தார் இலங்கை அதிபர்.
இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான நட்புறவு நிலவும் சூழ்நிலையில், சோனியா காந்திக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய அமைதிப் படையினருக்காக நினைவு மண்டபம் கட்டும் பணியை இலங்கை விரைவுபடுத்த உள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்தார்.
அப்போதைய அதிபர் ஜெயவர்தனே கோரிக்கையின் பேரில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
www.dinamani.com
இலங்கையில் நடைபெற உள்ள முதலாவது ராஜீவ் காந்தி நினைவு சொற்பொழிவில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சய.
நான்கு நாள் பயணமாக புதுடில்லி வந்திருந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகையில் தன்னைச் சந்தித்த சோனியா காந்திக்கு இந்த அழைப்பை விடுத்தார் இலங்கை அதிபர்.
இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான நட்புறவு நிலவும் சூழ்நிலையில், சோனியா காந்திக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் உயிரிழந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய அமைதிப் படையினருக்காக நினைவு மண்டபம் கட்டும் பணியை இலங்கை விரைவுபடுத்த உள்ளதாக இலங்கை அதிபர் தெரிவித்தார்.
அப்போதைய அதிபர் ஜெயவர்தனே கோரிக்கையின் பேரில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
www.dinamani.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

