Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
தமிழ்த்தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால், ஆக்கிரமிப்புப் படை, ஒட்டுப்படையில் பலர் கொல்லப்படுவர் - யாழில் எச்சரிக்கை
Written by Paandiyan Thursday, 08 December 2005
தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு காரணமாக இருந்த ஆக்கிரமிப்பு படையிலும், துணைபுரியும் ஒடடுப்படையிலும் பலர் கொல்லப்படுவர் என பொங்கி எழும் தமிழீழ மக்கள் படை என்ற பெயரில் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் சிறீ லங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பப்பகுதிகளில், தொடர்நது இடம்பெற்றுவரும் இராணுவ வன்முறைகள், படுகொலைகள் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் இராணுவத்தினரின் நெருக்குவாரங்கள், அண்மைக் காலங்களில் அதிகரித்துக் கொண்டு செல்வதினால் மக்களின் இயல்புவாழ்வு சீர்குலைக்கப்பட்டு நெருக்கடியான ஒரு நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்வுகளுக்கு சிறீ லங்கா படையினரும். சிறீலங்கா புலனாய்வுப்பிரிவும், ஒட்டுக்குழுக்களுமே காரணமாக இருநது வருகின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக சிங்கள பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்ட அடிப்படையில் தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்துவதற்காக தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும், அறிஞர்களையும் அழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியள்ளன. இந்த வகையில் கடந்த மாதம் 20ம் நாள், நெடுந்தீவிலும், 24ம் நாள் நீர்வேலியிலும், 26ம் நாள் ஊர்காவற்துறையிலும் படுகொலை முதயற்சிகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் தேசியத்தைப் பலவீனப்படுத்தி தமிழ்த் தேசிய உணர்வாளர்களை தொடர்ந்தும் கொலை செய்வதற்கு நாம் இனி அனுமதிக்க மாட்டோம். இனிமேலும் தமிழ்த் தேசிய உணர்வாளர் ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு காரணமான ஆக்கிரமிப்புப்படையிலும், ஒடடுக்குழுக்களிலும் பலர் மோசமாகக்கொல்லப்படுவர்.
இனி பதிலுக்குப்பதில் நடவடிக்கைகள் பொங்கி எழும் தமிழீழ மக்கள் படையாகிய நாங்கள் மேற்கொண்டே தீருவோம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
<b>
?
- . - .</b>
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
[size=18]தேடுதல்கள் சுற்றிவளைப்புகளைப் படையினர்
நிறுத்தாவிட்டால் தாக்குதல்கள் தொடரும்!
பயிற்சி பெற்ற 250 வீரர்கள் தயார் நிலையில் என்கிறது மக்கள் படை
குடாநாட்டில் சுற்றிவளைப்புகள்,தேடுதல்கள்,கைதுகள் மற்றும் பொதுமக்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாவிடில் இராணுவத்தினருக்கு எதிராக அடுத்துவரும் நாள்களில் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்படும்.
இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது பொங்கி எழும் மக்கள் படை என்ற அமைப்பு.
இந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் 50 பேர் ஒப்பமிட்டு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் யாழ்.மாவட்டத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.தமது அமைப்பைச் சேர்ந்த 250 இற்கும் மேற்பட்ட வீரர்கள் குடாநாட்டில் இராணு வத்தினர் மீது தாக்குதல்களை நடத்தத் தயார் நிலையில் உள்ளனர் என்ற தகவலையும் மக்கள் படை வெளியிட்டிருக்கின்றது.
கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு முகவரியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குடாநாட்டில் அண்மைக்காலமாக எமது மக்கள் மீது இராணுவ அராஜகங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக குடாநாட்டில் எமது தேச விடுதலைக்கும்
தமிழ்த் தேசியத்திற்கும் ஆதரவாக குரல் கொடுத்த கல்வியலாளர்களையும் எமது ஆதரவாளர்கள் பலரையும் ஸ்ரீலங்கா ராணுவமும் அதனோடு இணைந்த ஒட்டுக்குழு வான ஈ.பி.டி.பியும் படுகொலை செய்துள்ளது. அதற்குப் பதிலடியாக நாமும் சிறிலங்கா இராணு வத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தோம். எனினும்,தொடர்ந்தும் இராணுவமானது எமது மக்களை அச்சுறுத்தும் வகையில் மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதிலும் அச்சுறுத்துவதிலும் சுற்றிவளைப்புக்கள் மூலம் தேடுதல் நடத்தி எமது மக்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
அண்øமக்காலப் பகுதிகளில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களை நாமே மேற்கொண்டோம்.கடந்த சில நாள்களாக எமது தாக்குதல்களை இடைநிறுத்தியிருந்தோம். ஆனால் இராணுவம் எம்மக்கள் மீது தனது அராஜகங்களைத் தொடர்ந்தும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனை இராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையேல் ஆயுதப் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான எமது படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குடாநாட்டில் 250இற்கும் மேற்பட்ட எமது வீரர்கள் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களைநடத்தத் தயாராகவுள்ளனர். இராணுவத்தினர் தமது சுற்றி வளைப்புக்கள், கைதுகள் என்பவற்றை உடன் நிறுத்தவேண்டும். இல்லையேல் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமே இருக்கும். எமது ஆதரவாளர் ஒருவர் கொல்லப்படின் இராணு வத்தினர் பலர் கொல்லப்படுவர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினராகிய நீங்கள் இராணுவ அராஜகங்களை நிறுத்துவதை உறுதிப்படுத்துவீர்களானால் நாம் எமது தாக்குதல்களை நிறுத்தி தங்களின் அலுவலகத்திற்கு முன்னால் வரத் தயாராகவுள்ளோம். இல்லையேல் இனிவரும் நாள்களில் இராணுத்தினர் மீது கடும் தாக்குதல்கள் தொடரும். இதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்
பொங்கியெழும் மக்கள்படை நேற்றிரவு பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்துள்ள மற் றொரு அறிக்கையில் :
அரச கூலிகளின் அதீத ஆக்கிரமிப்பின் உச்சம் எமது தாயக நிலங்களில் அதிகரித் துள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அண்மைக்காலங்களில் எமது மண்ணில் இராணுவ இயந்திரத்தின் ஆக்கிரமிப்புப் போரானது சுற்றிவளைப்பு என்றும், தேடுதல் என்றும், கைதுசெய்தல் என்றும், துன்புறுத் தல் என்றும், பெண்கள் மீதான பாலியல் வன் முறை என்றும் எமது மக்களின் இயல்பு வாழ்வு முற்றுமுழுதாகப் பாதிப்பு அடைந் துள்ளது. புலிகளைக் கைதுசெய்தல் அல்லது தாக்குதல் நடத்துவோரைக் கண்டுபிடித்தல் என்ற போர்வையில் அப்பாவி இளைஞர் கள் கைதுசெய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும், புலிகளும் அரசும் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையானது இராணுவ இயந்திரத்தின் உயிர்க்கொலை களிலிருந்து வீட்டு வேலிகளை வெட்டி அத்துமீறி உட்பிரவேசிக்கும் வரை நீண்டு செல்கிறது. இதை இனியும் அனுமதிக்க முடி யாது.
எனவே, பொங்கியெழும் மக்கள் படை யாகிய நாம் அணிதிரண்டு இராணுவத்தின் இச்செயற்பாடுகளை முழுமையாக எமது மண்ணிலிருந்து அகற்ற முடிவுசெய்துள் ளோம் அவ்வடிப்படையில் பின்வரும் விடயங்களை உடன் நிறுத்தவேண்டும்.
* தேடுதல் என்ற பெயரில் இடம்பெறும் சுற்றிவளைப்புக்கள் உடன் நிறுத்தல்வேண் டும்.
* கைதுசெய்யப்பட்ட எமது உடன்பிறப் புகள் விடுதலை செய்யப்படவேண்டும்.
* எமது மக்களின் இயல்புவாழ்நிலை களை பாதிக்கும்வண்ணம் தருவிக்கப்பட்ட இராணுவம், படைநிலைகளிற்கு திரும்பப் பெறுதல் வேண்டும்.
* புதிய இராணுவ முகாம்கள், காவ லரண்கள் அமைத்தல் நிறுத்தப்படல் வேண் டும்.
மக்களின் இயல்பு வாழ் நிலைத் தோற் றத்திற்கான இடையூறாக இருக்கும் இரா ணுவ இயந்திரமயமாக்கல் தொடருமானால் வேட்டொலிகளும் குண்டுச்சத்தங்களும இராணுவ பிணக்குவியல்களும் உருவாவதை அரச கூலிப்படைகளால் தடுக்கவோ, தவிர்க் கவோ முடியாது என்பதனை சிறிலங்கா பேரினவாத அரச கூலிப்படைகளுக்கு அறியத்தருகின்றோம் என்றுள்ளது.
உதயன்
" "
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
[size=18]படையினரையும் ஈ.பி.டி.பியினரையும்
வெளியேறுமாறுகோரி சுவரொட்டிகள்
படையினரையும் ஈ.பி.டி.பியினரையும் வெளியேறக் கோரும் சுவ ரொட்டிகள் வலி.கிழக்கு, வலி.தெற்குப் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக ஒட்டப்பட்டிருந்தன.
கட்டைப்பிராய்ச் சந்தி, கோப்பாய்ச் சந்தி, இருபாலைச் சந்தி, உரும் பிராய் சந்தி, புன்னாலைக்கட்டுவன் சந்தி உட்பட பல இடங்களில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது என்று தகவல் ஒன்று தெரிவித்தது.
படையினரை வெளியேறக் கோரும் சுவரொட்டியில்
""போர் வேண்டாம் போய்விடு சா வேண்டு மெனில் தங்கிநில்'', ""நின்றிடில் அழிவாய் சென்றிடு விரைவாய்''
என்றும்
ஈ.பி.டி.பியினரை வெளியேறக்கோரும் துண்டுச் சுவரொட்டியில்
"இது போராடும் தேசம் புயலாகும் காலம் பகைவர் மட்டுமல்ல துரோகிகளே! நீங்களும்தான் தமிழீழத்தை விட்டு வெளியேறுங்கள்''
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயன்
" "
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
[size=18]இராணுவமே உன் அட்டகாசத்தை உடன் நிறுத்து- இல்லையேல் நீ எரியப் போகிறாய்: பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கை!!
யாழ்ப்பாண குடாநாட்டில் சிறிலங்கா இராணுவம் தன் அட்டகாசத்தை நிறுத்தாவிட்டால் யாழ்ப்பாணத்திலேயே எரிந்து புதைகுழியாய் போவது நிச்சயம் என்று பொங்கியெழும் மக்கள் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொங்கி எழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சில நாட்களாக மக்களது இயல்பு வாழ்க்கையைச் சிதறடித்து போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா இனவெறிப்படைவாதிகள் அப்பட்டமாக மீறி வருகின்றனர். சமாதானத்திற்கான பாதை முடங்கிவிட்டது.
யாழ். மாவட்டத்தில் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தும் தக்கவைத்து, போரினைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கான தயாரிப்புகளை சிறிலங்கா அரசாங்கம் தொடங்கிவிட்டது. சிறிலங்காப் படைகளின் சிங்கள பௌத்த பேரினவாத போக்கு தமிழ்மக்ககளை கோரமாக பலி வாங்கத் தொடங்கிவிட்டது என்பதற்கு கடந்த நாள் சம்பவங்கள் சான்றாகின்றன.
கிருசாந்தி, ரஜனி, சாரதாம்பாள் பாலியல் படுகொலைகள் வரிசையில் மிருசுவிலில் வல்லிபுரக் கோவில், தீவகம், அல்லைப்பட்டி பகுதி எனத் தொடர்ந்து நேற்று முன்தினம் புங்குடுதீவுவில் தர்சினி மீதான பாலியல் கோரச் சம்பவங்கள் நீள்கின்றன.
புங்குடுதீவில் தர்சினியின் நடமாட்டத்தை கவனித்த சிறிலங்கா கடற்படை ஒநாய்கள் அவளை இழுத்துச்சென்று உடலைக் குதறி, மார்பகத்தை சிதைத்து கோரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொடூரமாகக் கொலையை செய்து கிணற்றுக்குள் வீசிவிட்டனர்.
இக்கோரச் செயலுக்கு அமைதி முறையில் கண்டனம் தெரிவித்த மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டும் பொல்லுகளால் தாக்கியும் தங்கள் அநாகரிகச் செயலை நிறைவேற்றிக் கொண்டனர்.
எங்கும் சுற்றிவளைப்பு, தேடுதல் என தமிழன் ஏறிமிதிக்கப்படுகின்றான். தெருத் தெருவாக சந்திக்குச் சந்தி இராணுவ அடாவடிக் கும்பல் நிலைகொண்டு விட்டது. தமிழினின் சுதந்திர நடமாட்டம் கட்டுப்படுகின்றது. அவனது மண்ணிலேயே அவன் அவமதிக்கப்படுகின்றான்.
சொந்த வீட்டிலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. வேலி பிரித்து வருகின்றான், விவரம் கேட்கின்றான். அடித்துக் துன்புறுத்துகின்றான். கட்டிப்போட்டு இழுத்தும் செல்கின்றான்.
தமிழ்மக்கள் மீது தொடரும் அடாவடித்தனங்களை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு அமைதி ஊர்வலமாகச் யாழ் பல்கலைக்கழக உபவேந்தனார் தலைமையில் சென்றோரையும் விட்டுவைக்கவில்லை.
யாழ். பல்கலைக்கழக அறிவுஜீவிகள், மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் தடியடியும் சப்பாத்துக்கால் உதையும் நடந்தேறின.
புண்பட்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் மருத்துவமனையில் கிடக்கின்றார்கள்.
எங்கும் சிறிலங்கா படையின் வன்முறையும், அச்சுறுத்தலும் கட்டவிழ்து விடப்படுகின்றன. உயர் அறிவுஜீவிகள் தொடக்கம் சாதாரண விவசாயிகள் தொழிலாளர்கள், பெண்கள், முதியோர், சிறுவர்கள் வரை எவரையும் பேரினவாத அரச பயங்கரவாதம் கடந்த காலத்தில் விட்டுவைக்கவில்லை.
இனியும் நீ வீட்டுவைக்கப் போவதும் இல்லை என்பது எம்ககுத் தெரியும். அதனால் உன் அராஜகத்தை அடக்க நாம் தயாராகிவிட்டடோம்.
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் கோரமுகம் வெளிப்பட்டு விட்டது.
சமாதானம் என்ற முகத்திரை கிழிந்துவிட்டது.
சமாதானம் என்ற கோசம் வெறும் பம்மாத்து என்பது தெளிவாகிவிட்டது.
எமது பெண்கள் நீ கிள்ளி எறியும் பகடக்காய்கள் அல்ல!
எமது பெண்கள் புரட்சித் தீயென கனல்கொண்டு விட்டனர்!
தமிழர் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள தயாராகிவிட்டனர்!
தமிழன் நிமர்ந்து விட்டான்!
இனியும் பொறுக்கப் போவதில்லை!!
பொங்கி எழும் மக்கள் படை தயாராகிவிட்டது!!
எனவேதான் சிங்களப் படைக்கு இது ஒர் எச்சரிக்கை-
உன் அடாவடித்தனத்தை நிறுத்து- இல்லையெனில் யாழ். மண் உனது புதைகுழியாகிவிடும்- அழிக்கப்படுவாய்!!
புதினம்
" "