Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டங்கள் படும் பாடு..!
#1
<img src='http://tamilamutham.net/images/stories/kaddurai/img2.gif' border='0' alt='user posted image'>

[size=16]<b>உனக்கு நான் தாறன் எனக்கு.....?</b>

புலம்பெயர் நம்மவர் மத்தியில் பட்டங்கள் கொடுக்கவும் வாங்கவும் என ஒரு பட்டாளமே திரண்டிருக்கிறது. இந்தப் பட்டங்களின் பெறுமதியானது எனக்குத் தந்துவிடு உனக்குத் தருகிறேன் என்ற நிலையில் வஞ்சகமில்லாமல் வழங்கப்படுகிறது. சிலருக்குப பட்டம் கொடுக்கும் நோய் முற்றிப்போயிருப்பதையும் பட்டம் வாங்குதலே பெறுதற்கரிய பேறெனக் கருதும் பட்டம் கொடுப்போரையும் பட்டம் வாங்குவோருடனும் பழகிப் பார்த்ததிலிருந்து தெரிய வருகின்றது.

பத்திரிகையென்ற பெயரில் தன் சொந்த விலாசத்தை வர்ணம் தீட்டித்தருவதையெல்லாம் பத்திரிகையெனவும், கவிதையெழுதினால் ஞானக்கவி , மானக்கவி, மணிக்கவி, கவிமணி, கவிச்செம்மல், கவிச்சித்திரா, கவிவல்லி, கவிச்செல்லி எனவும் நாலு மேடையில் பேசினால் கோடையில் இடிக்கும் புயல், மாரியில் தெறிக்கும் மின்னல் எனவும் நடன ஆசிரியர்களென்றால் நாட்டியவாணி, நாட்டியச்செல்வி, நாட்டியவல்லி எனவான பட்டங்கள் நீள்கிறது.

நல்லகுரல் வளமிருந்தால் போதும் வெண்கலமும், பொன்கலமும் மட்டுமல்ல தேன், மா, பலாவென கனிகளின் பெயர்களும் ஒட்டப்பட்டுவிடும். ஒரு புத்தகம் வெளியிட்டால் போதும் கவிச்சித்திரமாகவும், கலைச்சத்திரமாகவும் ஏன் மானக்கவிஞனாகக் கூட ஆகிவிடலாம் என்ற நிலை எம்மவர் மத்தியில் ஏன் எழுதாத விதியாய் போய்விட்டது.

கதாசிரியர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், பாடகர்கள் உட்பட எல்லாத் துறைக்குள்ளும் இருக்கும் குறிப்பிட்ட நபர்களது பெயர்களின் பின்னால் இத்தகைய பட்டங்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன! இல்லை ஒட்டப்படுகின்றன. இந்தப் பட்டங்களுக்கான புதிய வரலாறொன்றையே எழுத வேண்டிய கட்டாயத்தை இக்காலத்துப் புலத்துப் பட்டங்கள் தந்து விட்டிருக்கின்றன.

தற்போது புலம்பெயர் நாடுகளில் சேலைகட்டி மார்கழி மாதக் குளிரிலும் மேடை நிகழ்ச்சிகளுக்குப் போவோர் சிலருக்கு சேலைகட்டிய மின்னல், தாவணியணியும் தமிழச்சி என்றெல்லாம் பட்டங்கள் வழங்கும் முறைமையும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜீன்ஸ் அணிவோருக்கும் இனிமேல் ஏதாவது பட்டங்கள் நிர்ணயமாகலாம்.

ஒரு நூல்வெளியீடு செய்யும் ஒரு இளம் கலைஞரின் நூல்பற்றிக் கதைப்பவர்களின் பட்டங்களைப் போட்டால்தான் அந்த நூல் பெருமையடைவதாகக்கூட சொல்லிக் கொள்ளும் இந்தப்பட்டங்கள் சுமப்பவரின் கைகளுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு வெளியில் வருவதில் இருக்கும் சிக்கலும், இந்தப் பட்டம் சுமப்போரின் வட்டத்தைத் தாண்டி வருவதென்பதும் அனுபவித்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

இத்தகையதொரு சிக்கலில் இருந்து தலையை வெளியெடுக்க நானும் அவதிப்பட்டிருக்கிறேன். எனது அனுபவமும் இங்கு இத்தகையதொரு கட்டுரையை எழுத வைத்துள்ளது என்பதனையும் மறுதலிப்பதற்கில்லை.

ஒரு துறையில் படித்து பட்டம் பெறுவதென்பது இலகுவான விடயமன்று. அந்தப் பட்டங்களுக்காக பட்டங்கள் பெற்றவர்கள் எத்தனையோ தியாகங்களைச் செய்து தங்கள் துறைசார் பட்டங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒருவர் கலாநிதியென்றால் அவரது கலாநிதிக்கான வரலாறொன்று நிச்சயம் இருக்கும். அல்லது தமிழ்மணியென்றால் அதற்கான கற்றலில்கூட மூன்று வருடங்களைச் செலவழிக்க வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு துறையிலும் பட்டம் பெறுவோர் தங்களை ஒறுத்துக் கற்று பட்டங்களைப் பெறுகிறார்கள். இந்தப்பட்டங்கள் இவர்களது தகுதிக்கேற்ற தொழில் வாய்ப்பினை அல்லது அத்துறை சார்ந்த அவர்களது திறனை அடையாளம் சொல்கிறது.

எனினும் தாங்கள் பெற்ற பட்டங்களை எந்தநாளும் தங்களுடன் ஒட்டி வைத்துக் கொண்டோ பட்டங்களை அச்சடித்து அடிக்கடி வெளியில் சொல்லிக் கொண்டோ இருப்பதில்லை. அதை நாம் நமது மண்ணில் பட்டம் பெற்ற பெரியவர்களைப் பார்த்தே அறிந்தும் கண்டும் இருக்கிறோம்.

பட்டங்களுக்கு அப்பால் தன்னடக்கமாகத் தங்கள் பணிகளைக் கவனிக்கும் கடமைகளை முடிக்கும் காரியவல்லோரையெல்லாம் பெற்ற எங்கள் மண்ணுக்குள்ளிருந்து புலம்பெயர்ந்த நாங்கள் இந்தப் பட்டங்கள் சூட்டுவதிலும் மகுடங்கள் ஏற்றுவதிலும் ஏன் முன்னிற்கிறோம்? ஒருவரின் திறனை எடையிடுவது அவரது தனித்துவமேயன்றி வேறில்லை.

ஒரு இலக்கியப் படைப்பின் வெளிப்பாடு வெற்றி என்பவை அதை எழுதிய கலைஞரையே சாரும். அந்தப்படைப்பிற்கு விமர்சனம் செய்யும் ஒருவரின் பட்டத்திலிருந்து அந்தக்கலை வெளிப்பாடு வெற்றி பெறுவதில்லை. இந்த யதார்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாத பட்டங்களுக்கு உரியோரின் சிந்தனை ஆற்றலை என்னவென்று சொல்ல?

பட்டங்கள் நல்ல தரமான படைப்புக்களைத் தந்ததா என ஆராய்வோமாயின் தேடித்தான் பெறவேண்டும். அந்தளவுக்கு பட்டங்களின் பின்னிருக்கும் படைப்புக்களை தராசிட்டு நிறுக்க வேண்டியிருக்கிறது. பட்டங்கள் பெற்றவரின் ஆக்கத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். அந்த ஆக்கத்திலிருக்கும் குறைகள் சுட்டப்படக்கூடாது. அப்படிச் சுட்டும் படைப்பாளி இளையவராக இருந்தால் அவரது கதை முடிந்துவிடும்படி பட்டம் கொடுத்தவரும் பட்டம் வாங்கியவரும் பதறியடிப்பதால் உண்மை பொய்யாகவோ பொய் உண்மையாகவோ போய்விடாது.

எங்கள் மண்ணுக்குள்ளிருந்து எத்தனையோ கலைஞர்களும் கலைப்படைப்புக்களும் பிறப்பெடுத்திருக்கின்றது. அந்தக்கலைஞர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் அவர்கள் பெயர்களைத் தவிர எந்தப்பட்டமும் ஒட்டப்படவில்லை. கவிஞர்களாக, சிறுகதை எழுத்தாளர்களாக, பத்திரிகையாளர்களாக, நாடகக்கலைஞர்களாக, ஓவியர்களாக, ஒளிக்கலைஞர்களாக எத்தனையோ பேர் தங்கள் பெயர்களைக்கூட புனைபெயர்களுக்குள் அடக்கி தங்கள் படைப்புக்களால் மனங்களை வென்றிருக்கிறார்கள். அந்த வெற்றியானது அவர்களது படைப்புக்களாலேயே பெறப்பட்டது. பட்டங்களால் அல்ல.

http://www.tamilamutham.net/index.php?opti...ask=view&id=261
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
வணக்கம் குருவிகள்!

பட்டங்கள் பற்றிய உங்கள் கட்டுரையோடு நானும் ஒன்றி நிற்கவே விரும்புகின்றேன். பட்டங்கள் ஒரு புறம் கொடுத்து பலரை எட்டங்கள் தள்ளிய திட்டங்கள் உடையோரை எனக்கும் தெரியும். சிலநேரங்களில் சமூகத்தோடு ஒன்றிப்போதலே சாலச்சிறந்ததென எண்ணுவேன். மௌனம்தான் சிலநேரங்களில் சிறந்த மருந்து. படிப்பென்பது எல்லாநேரங்களிலும் கைகூடும் கருவியன்று. அதற்காய் படித்தவந்தான் மேதை என எண்ணி ஒடுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் பலர் உள. தாய் தந்தையர் இழைக்கின்ற தவறிற்கு தனயன் சுமக்கின்ற கடனைப்போன்றது நமது வாழ்க்கை. படித்தவன் தான் படைக்க முடியும் பட்டம் பெற முடியுமென்றால் உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை. நான் படித்த காலங்களில் தமிழில் எனது மதிப்பெண் 28. இந்த இருபத்தி எட்டிலும் விட பட்டங்கள் வழங்குவதில் தவறு இருப்பதாக எனக்குப் புரியவில்லை. இந்த 28 மதிப்பெண்களை நான் பெற்றதனால் தமிழ் பயில்வதில் ஆர்வத்தைவிட வெறுப்பே அதிகரித்தது. ஒருவனை தட்டிக்கொடுத்தல் போன்றதுதான் பட்டங்கள் என ஏன் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏழ்நிலை வேண்டாம், இழிநிலைவேண்டாம், ஓராமாய் மனிதனை ஒதுக்குதல் வேண்டாம். ஆயிரம் பேசி என்ன பயன் பொருளினை ஈட்டுபவன் முன்னே செல்கிறான். போதனை கேட்டவன்
ஆண்டியாய் ஆனான்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#3
நன்றி குருவிகள். தினக்குரலில் வெளியாகி, தமிழமுதத்தில் மீள் பிரசுரமான சாந்தி ரமேஸ் வவுனியனின் கட்டுரையை இங்கே இணைத்தமைக்கு நன்றி.
குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து உற்சாகமூட்டக்கூடியவை. அதேபோல புதுவருடம்.. நத்தார் போன்ற சிறப்பான நாட்களில் வாழ்த்துகளின் பரிமாற்றங்கள் ஒரு மனிதனை உற்சாகப்படுத்துவனவாக அமைகின்றன. அதேபோல, பட்டங்கள் என்ற பெயரிலே கலைஞரையோ எழுத்தாளரையோ நாடும் கௌரவங்களால் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக உற்சாகமடைவார்கள். அதனால் அவர்களது திறமைகள்கூட பொறுப்புணர்வுடன் பரிணாம வளர்ச்சியை எட்டிவிடவும் முயலலாம்.
மற்றும், குறிப்பிட்ட துறையில் ஆர்வமோ அக்கறையோ உள்ளவர்கள்தான் அத்துறை சார்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் பட்டத்தைப்பற்றி அக்கறை கொண்டு, அதன் தகுதியைப்பற்றி ஆராயவோ தராதரம் பார்க்கவோ முற்படுவார்கள். அப்போது உண்மையான தகுதியுடையோருகஇகு வழங்கப்படும் பொருத்தமான பட்டங்கள் நிலைநிற்கின்றன. மற்றவை போலிகளாய்பொசுங்குகின்றன.
உண்மையான தகுதியுடையவர்கள் நிச்சயம் பேசப்படுவார்கள். மற்றவர்கள் என்னதான் அர்த்த இராத்திரியில் குடைபிடித்தாலும்நகைப்புக்குத்தான் உரிமையாளர்களாவார்கள்.
ஆகவே, பட்டங்களை வரவேற்பதில் தவறில்லை. ஆனால் அவை எவ்வளவு தூரம் பொருத்தம் என்பதை காலம் காட்டி நிற்கும்.
உதாரணமாக, எம்ஜிஆருகஇகு பல பட்டங்கள் இருப்பினும், 'மக்கள் திலகம்" எனும் பட்டமே அழியாமல் நிலைநிற்கிறது.அதேபோல 'நடிகர் திலகத்'தையும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆக, என்னதான் பட்டங்களைப் பொருத்திக் கொண்டாலும், பட்டங்கள் அவரவர் திறமையைப் பொறுத்துத்தான் அவரவர்களுடன் வாழும் எனக் கொள்வதுதான் உசிதம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#4
நன்றிகள் குருவிகள் இந்த அருமையான கட்டுரையை இங்கு இனைத்தமைக்கு.
அந்த கட்டுரையில் சொன்னது அனைத்தும் நிஐமாக நடக்கின்ற உண்மைகள்.
பலருக்கும் மிகவும் கெளரமான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்னார் அவர்களின் தகுதிகளை எடை போடும் போது சிறந்த குடும்ப தலைவர் அல்லது தலைவி என்ற பட்டத்திற்கே அருகதையற்றவர்களாக இருக்கின்றார்கள். இப்போது நீ எனக்கு பட்டத்தை தா நான் உனக்கு தருகின்றேன் என்ற நிலைமை தான். கெளவரமான மதிப்புக்குரிய பல பட்டங்கள் இவர்களால் சிறுமை படுத்தப்படுகின்றது.

Reply
#5
சோழியான் அண்ணா பட்டங்கள் திறமைக்காக வழங்கப்படுவதும் அவை திறமையாளர்களை ஊக்குவிக்கப் பயன்படுவதும் சாதாரணம்..! ஆனால் திறமைக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் சாந்தி அக்கா சொன்னது போல கண்மூடித்தனமாக வழங்கிறது..எதிர்பார்க்கும் நல்ல விளைவுகளுக்குப் பதில் தேவையில்லாத விளைவுகளையும் தரலாம் இல்லையா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
நீங்கள் குறிப்பிடுவைப்போல சிலவேளைகளில் இருக்கலாம். அனால் ஒல்லோருக்கும் பொருந்துமா என்பதுதான் கேள்விக்குறி.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#7
kuruvikal Wrote:சோழியான் அண்ணா பட்டங்கள் திறமைக்காக வழங்கப்படுவதும் அவை திறமையாளர்களை ஊக்குவிக்கப் பயன்படுவதும் சாதாரணம்..! ஆனால் திறமைக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் சாந்தி அக்கா சொன்னது போல கண்மூடித்தனமாக வழங்கிறது..எதிர்பார்க்கும் நல்ல விளைவுகளுக்குப் பதில் தேவையில்லாத விளைவுகளையும் தரலாம் இல்லையா..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
அவ்வாறு தான் இப்போது எல்லாம் காணும் விடங்கள் பொன்னாடை போர்த்தல். உண்மையில் ஒருவரின் திறமையைக் கௌரவித்து வழங்கப்படும் பாராட்டு அமைப்பை, இப்போது எல்லாக் கலைநிகழ்வுகளுக்கும் வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு போடுவது தான் இப்போதைய நாகரீகமாகி விட்டது.
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)