Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ்ப்பாண மாவட்ட நிலைமைகள்:கலந்துரையாடல்
#1
தற்போதைய யாழ்ப்பாண மாவட்ட நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக போர்நிறுத்தக்கண்காணிப்புக் குழு முன்னிலையில் இன்று விடுதலைப் புலிகளும் சிறிலங்கா இராணுவ தரப்பும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளின் தரப்பில் யாழ் மாவட்ட அரசியற் துறைப்பொறுப்பாளர் சி. இளம்பருதி அவர்களும், சிறிலங்கா இராணுவத்தின் பிரதிநிதியாக சிறிலங்கா இராணுவத்தின் யாழ் மாவட்டத் தளபதி மேஜர் ஜெனரல் தென்னக்கூன் அவர்களும் முகமாலையிலுள்ள யுத்த சூனியப்பிரதேசத்தில் இந்தக் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் அறியமுடிகிறது.

இந்தச் சந்திப்பு சிறிலங்கா நேரப்படி இன்று திங்கட்கிழமை மாலை 04 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கொழும்பிலுள்ள விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

<b>நன்றி:</b> தமிழ்நெற் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16474

<b>தமிழில்:</b> திருமகள்
Reply
#2
முகமாலையில் விடுதலைப் புலிகள் - படையினர் இன்று சந்திப்பு??


யாழில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தணிக்கும் நோக்குடன் விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. இளம்பரிதி அவர்களிற்கும், சிறீலங்கா படைகளின் யாழ். மாவட்ட தளபதி சுனில் தென்னக்கோனிற்கும் இடையே முகமாலை இராணுவ சூனியப் பிரதேசத்தில் சந்திப்பொன்றை நடாத்துவதற்கு போர் நிறுத்த கண்காணிப்புக்குழு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு. இளம்பரிதி அவர்கள் சங்கதியிடம் கருத்துத் தெரிவிக்கையில்: இச்சந்திப்பு தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தொடர்பு கொண்டதையடுத்து தலைமைப் பீடத்தின் முடிவைப் பெற்றுக் கொண்டு இச்சந்திப்பிற்கு தாம் இணக்கம் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச்சந்திப்புத் தொடர்பாக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நேரத்திற்கு மூன்று மணிநேரம் முன்பாக கொழும்பு ஊடகமொன்று யாழ். மாவட்ட சிறீலங்கா இராணுவத் தளபதி சுனில் தென்னக்கோனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இச்சந்திப்பு தொடர்பாக யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழு தம்மிடம் எதனையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழில் வெளிவரும் நாளேடு ஒன்று விடுதலைப் புலிகள் இச்சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்புத் தெரிவித்துவிட்டதாக உண்மைக்குப் புறம்மான செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த நாளேடு தம்மிடம் தொடர்பு கொண்டபோது, சந்திப்புத் தொடர்பான போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் கோரிக்கை தலைமைப் பீடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைப் பீடத்தின் முடிவு வந்த பின்பே தாம் முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தாக யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
<b>
?
- . - .</b>
Reply
#3
இலங்கை இராணுவத் தரப்பு சந்திப்புக்கு வராததால் இது நடைபெறவில்லை என் சங்கதியில் சொல்லுகிறார்கள்.

http://www.eelatamil.net/sankathi/index.ph...d=577&Itemid=26
Reply
#4
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.


இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பரிதி கூறியுள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.

இந்தத் தாக்குதல்களுக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று கண்காணிப்புக் குழுவினர் எங்களிடம் கேட்டனர். யாழ். குடா நாட்டில் எந்த ஒரு விடுதலைப் புலி உறுப்பினரும் இல்லை. சிறிலங்கா இராணுவத்தினர் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இந்தத் தாக்குதலை நாம் நடத்தவில்லை என்று திட்டவட்டமாக கண்காணிப்புக் குழுவுக்கு தெரிவித்துள்ளோம்.

யாழில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலுக்கு நாம் எந்த வகையிலும் காரணம் இல்லை என்று முற்றாக நாம் மறுத்திருக்கிறோம்.

அந்தப் பகுதியில் இராணுவ வன்முறைகள் அதிகரித்திருப்பதால் ஆத்திரமடைந்த மக்களே இத்தகையத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்று கூட பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் மாணவர்களது மகிழ்ச்சியான கற்றலுக்குத் தடை விதிக்கும் வகையில்- மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை முற்றாகக் கெடுக்கும் வகையில் ஒரு இராணுவ அரண் அமைக்கப்பட்டது.

அதற்கு எதிராக மாணவர்களும் அந்தப் பகுதி மக்களும் போராட்டம் நடத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் குண்டாந்தடிப் தாக்குதல்இ கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதோடு உயிர்க்கொலைகளை ஏற்படுத்துகிற வகையிலான துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியுள்ளனர்.

இத்தகைய நிகழ்வுகளினால் மக்கள் மேலும் மேலும் கிளர்ந்தெழ வேண்டிய சந்தர்ப்பமும் சூழலும்தான் ஏற்படும்.

எங்களுடைய மக்களைப் பாதிக்கின்றஇ மக்களைப் படுகொலை செய்கிற நிகழ்வுகளை மேற்கொள்ளாமல் இயல்பாகவே எம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கண்காணிப்புக் குழுவிடம் கேட்டுள்ளோம் என்றார் இளம்பரிதி.


நன்றி: புதினம்.
[size=14] ' '
Reply
#5
தூயவன் அண்ணா... ஏணண்ணா இப்படி... திருவிழா கொஞசநாள் நீடிக்கும் என்று எதிர்பார்த்தேன்.... ஒருநாளில் முடித்துவிட்டது... அதைவிட யாரோ அந்நியரின் திருவிழா என்பது வேடிக்கையாயிருக்கிறது.
8
Reply
#6
தூயவன் Wrote:யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.


இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பரிதி கூறியுள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.

இந்தத் தாக்குதல்களுக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று கண்காணிப்புக் குழுவினர் எங்களிடம் கேட்டனர். யாழ். குடா நாட்டில் எந்த ஒரு விடுதலைப் புலி உறுப்பினரும் இல்லை. சிறிலங்கா இராணுவத்தினர் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இந்தத் தாக்குதலை நாம் நடத்தவில்லை என்று திட்டவட்டமாக கண்காணிப்புக் குழுவுக்கு தெரிவித்துள்ளோம்.

யாழில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலுக்கு நாம் எந்த வகையிலும் காரணம் இல்லை என்று முற்றாக நாம் மறுத்திருக்கிறோம்.

அந்தப் பகுதியில் இராணுவ வன்முறைகள் அதிகரித்திருப்பதால் ஆத்திரமடைந்த மக்களே இத்தகையத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்று கூட பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் மாணவர்களது மகிழ்ச்சியான கற்றலுக்குத் தடை விதிக்கும் வகையில்- மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை முற்றாகக் கெடுக்கும் வகையில் ஒரு இராணுவ அரண் அமைக்கப்பட்டது.

அதற்கு எதிராக மாணவர்களும் அந்தப் பகுதி மக்களும் போராட்டம் நடத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் குண்டாந்தடிப் தாக்குதல்இ கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதோடு உயிர்க்கொலைகளை ஏற்படுத்துகிற வகையிலான துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியுள்ளனர்.

இத்தகைய நிகழ்வுகளினால் மக்கள் மேலும் மேலும் கிளர்ந்தெழ வேண்டிய சந்தர்ப்பமும் சூழலும்தான் ஏற்படும்.

எங்களுடைய மக்களைப் பாதிக்கின்றஇ மக்களைப் படுகொலை செய்கிற நிகழ்வுகளை மேற்கொள்ளாமல் இயல்பாகவே எம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கண்காணிப்புக் குழுவிடம் கேட்டுள்ளோம் என்றார் இளம்பரிதி.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி: புதினம்.
Reply
#7
kakaivanniyan Wrote:
தூயவன் Wrote:யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.


இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பரிதி கூறியுள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.

இந்தத் தாக்குதல்களுக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று கண்காணிப்புக் குழுவினர் எங்களிடம் கேட்டனர். யாழ். குடா நாட்டில் எந்த ஒரு விடுதலைப் புலி உறுப்பினரும் இல்லை. சிறிலங்கா இராணுவத்தினர் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இந்தத் தாக்குதலை நாம் நடத்தவில்லை என்று திட்டவட்டமாக கண்காணிப்புக் குழுவுக்கு தெரிவித்துள்ளோம்.

யாழில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலுக்கு நாம் எந்த வகையிலும் காரணம் இல்லை என்று முற்றாக நாம் மறுத்திருக்கிறோம்.

அந்தப் பகுதியில் இராணுவ வன்முறைகள் அதிகரித்திருப்பதால் ஆத்திரமடைந்த மக்களே இத்தகையத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்று கூட பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் மாணவர்களது மகிழ்ச்சியான கற்றலுக்குத் தடை விதிக்கும் வகையில்- மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை முற்றாகக் கெடுக்கும் வகையில் ஒரு இராணுவ அரண் அமைக்கப்பட்டது.

அதற்கு எதிராக மாணவர்களும் அந்தப் பகுதி மக்களும் போராட்டம் நடத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும் குண்டாந்தடிப் தாக்குதல்இ கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதோடு உயிர்க்கொலைகளை ஏற்படுத்துகிற வகையிலான துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியுள்ளனர்.

இத்தகைய நிகழ்வுகளினால் மக்கள் மேலும் மேலும் கிளர்ந்தெழ வேண்டிய சந்தர்ப்பமும் சூழலும்தான் ஏற்படும்.

எங்களுடைய மக்களைப் பாதிக்கின்றஇ மக்களைப் படுகொலை செய்கிற நிகழ்வுகளை மேற்கொள்ளாமல் இயல்பாகவே எம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கண்காணிப்புக் குழுவிடம் கேட்டுள்ளோம் என்றார் இளம்பரிதி.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி: புதினம்.

நல்ல தகவல். :wink:
.

.
Reply
#8
யாழில் நடைபெறும் சம்பவங்களுக்கு விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டுவதற்குப் போதிய சாட்சியங்கள் இல்லை என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.


கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்ட் கூறியுள்ளதாவது:

கடந்த 3 நாட்களில் யுத்தநிறுத்த உடன்படிக்கை 10 முறை மீறப்பட்டுள்ளன.

கடந்த 48 மணிநேரத்தினுள் 9 சிறிலங்கா இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இராணுவ வீரர்களும் பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்று கூறுவதற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றார் அவர்.

கோண்டாவில் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலானது யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான சம்பவம் என்று சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
http://www.eelampage.com/index4.php?cn=22265
Reply
#9
பின்ன என்ன ஆயுதமற்ற அரசியல்பிரிவின் மேல் நடத்தப்பட்ட கொலைகளினால், அவர்கள்தானே குடாநாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள், அங்கு நடத்திய தாக்குதல் எல்லாம் பொறுமை இழந்த பொதுமக்களின் தாக்குதல்கள், பொறுமைக்கும் எல்லை உண்டுதானே.
.

.
Reply
#10
ம்.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள், துப்பாக்கிகளையும் கைக்குண்டுகளையும் கிளைமோர் கண்ணிவெடிகளையும் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது, அதுவும் மிகவும் தேர்ந்த திறமையோடு கையாள்வது அவர்களின் பொறுமையின் எல்லையைக் காட்டுகிறது.
"பொங்கியெழும் எம் மக்கள் முன் பகைவன் பொடிப்பொடியாவது உறுதி"
Reply
#11
புலிகள் வேற்றுலகத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல, அதே சமுதாயத்தை சேர்ந்த எனது அண்ணாவும்,அக்காவும் ,உங்கள் தம்பியும்,தங்கையும்தான். அதே வீரமும் வேகமும் அதே சமுதாயத்துக்கும் இருக்கும்தானே, ஆயுதங்கள்தானே யாழ்குடாநாட்டில் இறைந்து கிடக்கிறது, பதுக்கி வைத்தவை எட்டப்பர் விட்டுவிட்டு ஓடியவை இப்படிஏராளம் இருக்கிறது, ஒருபகுதி மறைத்துவைத்தவர் உயிருடன் இல்லாததால் துருப்பிடித்துப்போகின்றன.
.

.
Reply
#12
Quote:ஆயுதங்கள்தானே யாழ்குடாநாட்டில் இறைந்து கிடக்கிறதுஇ பதுக்கி வைத்தவை எட்டப்பர் விட்டுவிட்டு ஓடியவை இப்படிஏராளம் இருக்கிறதுஇ ஒருபகுதி மறைத்துவைத்தவர் உயிருடன் இல்லாததால் துருப்பிடித்துப்போகின்றன

கடந்த சில மாதங்களாகக் குடாநாட்டில் வலுத்துக் காணப்பட்ட ஊர்ச்சண்டைகளின்போது சரமாரியாக துப்பாக்கிகள், கை எறிகுண்டுகள் போன்றன பாவிக்கப்பட்டன. இவ்வாறு நடந்த ஆயுதம் சகிதமான மோதல்களில் பல தமிழர்கள் படுகாயமடைய சிலர் இறக்கவும் நேரிட்டது.

அப்போது அது குறித்துக் கருத்துத் தெரிவித்த யாழ் மாவட்ட அரசியற் துறையினர் 'இந்த ஆயுதங்கள் வெடிகுண்டுகள் மக்களிடம் சிறிலங்கா புலனாய்வாளர்கள் மூலம் கொண்டுபோய்ச்சேர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் குரோதங்கள் கிளறி விடப்படுவதாகக்' குற்றம் சாட்டியிருந்தார்கள்.

ஈழநாதம் பத்திரிகையும் மேற்படி விடயம் குறித்துப் பலதடவைகள் பல்வேறு கட்டுரைகள் வாயிலாகக் கோடிகாட்டியிருந்தது.

அதுஅவ்வாறிருக்க நேற்றையதினம் பி.பி.சி தமிழோசைக்கு யாழ்மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் சி. இளம்பருதி அவர்கள் வழங்கிய செவ்வியின்போது 'கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் படைகளால் மக்களிடம் சட்டவிரோதமான முறையில் கொடுக்கப்பட்ட ஆயுதங்களை அவர்கள் தற்போது அப்படைகளுக்கு எதிராகவே பாவிக்கிறார்கள்" என்ற கருத்துப்படக் கூறியிருக்கிறார்.

இந்த விடயங்களும் இந்த இடத்திலே மனங்கொள்ளத்தக்கன என்பதால் இங்கே குறிப்பிட விழைந்தேன்.

கீழே தினக்குரல் பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த கட்டுரையின் சில பகுதிகளைத் தருகிறேன். கட்டுரையின் முழு வடிவம் பின்வரும் இணைப்பில் காணலாம்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6417
<b>நன்றி:</b> முகத்தார்

Quote:இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் கருணா குழு என்ற போர்வையில் தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ள படைத் தரப்புக்கு அவ்வாறானதொரு திட்டத்தை குடாநாட்டில் அரங்கேற்ற முடியவில்லை. இதையடுத்துஇ மாற்று வழி தேடிய அவர்களுக்கு இப்போது 'சாதி' என்ற ஆயுதம் கிடைத்துள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளில் செத்தொழிந்த சாதி வெறியை மீண்டும் உயிர்ப்பித்து நடமாடவிடும் நடவடிக்கையில் இறங்கிய படைத்தரப்புக்கு வேலை வெட்டியின்றி வெளிநாட்டுப் பணச் செழிப்புடன் தெருச் சுற்றும் காவாலிக் கூட்டமான இளைஞர் குழுக்கள் ஏவுதல் கருவிகளாகக் கிடைத்துள்ளன.

இவ்வாறான நாசகாரக் கும்பல்களுடன் நட்புறவு பாராட்டும் படைத்தரப்பு இக்கும்பல்கள் புரியும் அட்டகாசங்கள் குற்றச் செயல்கள் தொடர்பில் எதுவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காது அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமான செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றனர்.

குடாநாட்டில் அண்மைக் காலமாக பல கோஷ்டி மோதல்கள் ஊர்ச் சண்டைகள் இடம் பெற்று உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட போது கூட படைத்தரப்பு இது குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது வேடிக்கை பார்த்தது. <b>அண்மையில் கொடிகாமத்தில் இடம்பெற்ற ஊர்ச் சண்டைகளில் துப்பாக்கிகள் கிரனைட்டுகள் பாவிக்கப்பட்டமை இக் குழுக்களின் பின்னணியில் படைத்தரப்பு இருப்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது. </b>

படைத் தரப்புடன் சேர்ந்தியங்கும் சில தமிழ்க் குழுக்கள் கூட தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தமது சொந்த ஊர்களில் சாதி வெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இவ்வாறான சம்பவமொன்று அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியில் நடந்தேறியதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தின் இருப்புக்கு பலமான அத்திபாரமிட்ட சாதிவெறி ஒழிப்பை தகர்த்தெறிந்து மீண்டும் சாதிவெறியைத் தூண்டும் முயற்சியில் படைத் தரப்புடன் இவ்வாறான வன்முறைக் கும்பல்கள் கைகோர்த்துள்ளமை மிகவும் அபாயகரமானது. இதன் விளைவுகள் தமிழ்த் தேசிய போராட்டத்துக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறான நிலையில் யாழ். குடாநாட்டில் அதிகரித்து வரும் குழுச் சண்டைகள் அபாயகரமான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. <b>கத்தி வாள் பொல்லுகளுடன் மோதியவர்கள் இன்று கட்டுத் துவக்கு இயந்திரத் துப்பாக்கிகள் கிரனைட்டுகளைக் கொண்டு மோதுமளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது.</b>

கடந்த சில வாரங்களாக வலிகாமத்தின் சில பகுதிகளிலும் தென்மராட்சியில் கொடிகாமம் பகுதியிலும் இடம்பெற்ற குழுச் சண்டைகள் நிலைமையின் விபரீதத்தை நன்குணர்த்தியுள்ளன.

<b>இக் கிராமங்களுக்கிடையிலான மோதல்கள் ஆங்கிலப் படப் பாணியிலேயே நடத்தப்பட்டதுடன் இயந்திரத் துப்பாக்கிகள் கிரனைட்டுகளும் பயன்படுத்தப்பட்டமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.</b> மறைந்திருந்து தாக்குதல் அதிரடியாகப் புகுந்து தாக்குதல் தனிமைப்படுத்தி தாக்குதல் இலக்கு வைத்துத் தாக்குதல் தாக்குதலின்போது சிறைப்பிடித்தல் போன்ற பல வியூகங்கள் இம் மோதல்களின்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.

இவ்வாறு மோதல்கள் மிக மோசமாக நடந்த போதும் படையினரோ பொலிஸாரோ இது விடயத்தில் அதிகம் அக்கறை காட்டவில்லை. <b>அதேவேளை இளைஞர் குழுக்களின் கைகளில் துப்பாக்கிகள் கிரனைட்டுகள் போய்ச் சேர்ந்தமையும் இம் மோதல்களின் பின்னணி சக்திகள் குறித்த ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.</b>

இதேவேளை பொது மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வன்முறைகளைத் தூண்ட எதிரிகளும் எதிரிகளுக்குத் துணைபோகும் துரோகிகளும் முயற்சிப்பதாக விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

<b>நன்றி :</b> தினக்குரல்

<b>அன்புடன் திரு</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)