12-01-2005, 03:56 PM
வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இந்திய இராணுவ தளபதி ஆலோசனை
[வியாழக்கிழமை, 1 டிசெம்பர் 2005, 16:58 ஈழம்] [வவுனியா நிருபர்]
இந்தியாவின் தென்பகுதி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் பி.எஸ் தக்கார் இன்று வியாழக்கிழமை வவுனியாவின் சிறிலங்கா இராணுவ முன்னரங்க காவல் நிலைகளுக்கு சென்று பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.
இன்று காலை வவுனியாவுக்கு உலங்குவானூர்தியில் சென்ற அவர் சிறிலங்கா இராணுவ தளபதியை வவுனியா ஜோசப் முகாமில் சந்தித்தார்.
பின்னர் வவுனியா ஓமந்தை பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக அப்பகுதி இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன் பின்னர் முன்னரங்க காவல் நிலைக்கும் சென்று அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுகளை செய்து செய்ய வேண்டிய மாற்றீடுகள் தொர்டபாகவும் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது வவுனியாவின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும் வவுனியா மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு இருப்பதாகவும் இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.eelampage.com/index9.php?cn=22162
[வியாழக்கிழமை, 1 டிசெம்பர் 2005, 16:58 ஈழம்] [வவுனியா நிருபர்]
இந்தியாவின் தென்பகுதி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் பி.எஸ் தக்கார் இன்று வியாழக்கிழமை வவுனியாவின் சிறிலங்கா இராணுவ முன்னரங்க காவல் நிலைகளுக்கு சென்று பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.
இன்று காலை வவுனியாவுக்கு உலங்குவானூர்தியில் சென்ற அவர் சிறிலங்கா இராணுவ தளபதியை வவுனியா ஜோசப் முகாமில் சந்தித்தார்.
பின்னர் வவுனியா ஓமந்தை பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக அப்பகுதி இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன் பின்னர் முன்னரங்க காவல் நிலைக்கும் சென்று அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுகளை செய்து செய்ய வேண்டிய மாற்றீடுகள் தொர்டபாகவும் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது வவுனியாவின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாகவும் வவுனியா மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு இருப்பதாகவும் இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.eelampage.com/index9.php?cn=22162
" "

