Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முகத்தார் வீடு
நல்லா இருக்கு அங்கிள் சமுகத்தில நடக்கிறத புட்டு புட்டு வைக்கிறிங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
[quote=MUGATHTHAR]முகத்தார்


நகைசுவையோட ஆரம்பித்த முகத்தார் வீடு இப்போ சமூகத்தில் நடக்கும் பட பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து செல்கிறது. நல்லா இருக்கு அங்கிள் மேலும் தொடருங்கள்
<b> .. .. !!</b>
Reply
சும்மா சொல்லக் கூடாது முகத்தார் சொன்னாலும் சொன்னீங்கள் சில விடயங்களை சுருக்கென்று தைக்கிற மாதிரி.
Reply
இந்த தொடரும் நல்லாயிருக்கு அங்கிள்...... வயது போன முதியவர்களின் நிலையை நன்றாக சொன்னீர்கள். புலம் பெயர்ந்த மக்கள் தான் இதை கட்டாயம் வாசித்து திருந்த வேணும்

Reply
முகத்தார் உங்களின் ஒவ்வொரு தொடரும் எம் சமூகத்தில் நடக்கும் விடயங்களைத் தொட்டுச் செல்கிறது.
உங்களின்பணி மேலும் தொடரணும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
முகத்தார் வீடு
அங்கம் 11

முகத்hரின் வீட்டு தொலை பேசி அடிக்கிறது முகத்தார் எடுக்கிறார்

முகத்தார் கலோ ஓ ஓ நான் வெளிக்கிட்டன் இந்தா 5 நிமிசத்திலை வாறன்

பொண்ணம்மா அதுதானே பாத்தன் என்னடா பொழுது பட்டிட்டிது இன்னும் உங்களிற்கு ரெலிபோன் வரேல்லையே எண்டு யோசிச்சன் யாரது சாத்திரியோ இல்லாட்டி சின்னப்புவோ?

முகத்தார் இஞ்சாரும் ஏன் சத்தம் போடுறீர் இரவுக்கு இடியப்பம் அவிச்சு சொதியும் வைச்சிட்டன் பிறகு நான் வந்த உடைனை டக்கெண்டு கிறைண்டரிலை சம்பல் அடிச்சா சரி

பொண்ணம்மா அதுக்கில்லையப்பா நீங்கள் நல்ல பிள்ளையா வீட்டிலை இருந்தாலும் உந்த சாத்திரியும் சின்னவும் தான் உங்களை பழுதாக்கிறது

முகத்தார் அதில்லையப்பா 2 நாளைக்கு பிறகு இண்டைக்குதான் மழை விட்டு கொஞ்சம் வெய்யில் அடிக்கிது அதுதான் பக்கத்திலை உள்ள பார்க்கிலை போய் கதைப்பம் எண்டு கூப்பிட்டாங்கள் உடைனை வந்திடுவன்

பொண்ணம்மா சரி சரி வரேக்கை நிதானமா 2 காலிலை வாங்கோ நீங்கள் வந்துதான் சம்பல் அரைக்கவேணும்

முகத்தார் பார்க்கிற்கு வர சின்னப்புவும் தோழில்: ஒருபையுடன் வருகிறார் இருவரும் கைகளை உயர்த்தி மாறி மாறி தட்டி கொள்கின்றனர்

முகத்தார் எட உதென்னடா உன்ரை காதிலை கிடந்த வளையத்தை காணேல்லை புதிசா ஒரு தோடு போட்டிருக்கிறாய் மினுங்கிது

சின்னா அதையேன் கேக்கிறாய் என்ரை பேர பெடியோடை விழையாடி கொண்டிருக்கேக்கை எங்கையோ விழுந்திட்டிது அதுதான் சின்னாச்சி ஒரு வைர ழூக்குத்தயொண்டு போடாமல் வைச்சிருந்தவள் அதை எடுத்து மாட்டிட்டன் வடிவா இருக்கே

முகத்தார் உன்ரை வயசுக்கு உது தோவை இப்ப அந்தா சாத்திரி வாரான் அதாரது ஒரு சின்ன பிள்ளையோடை ஊமை பாசையிலை கதைச்சு கொண்டு வாறான். உவன் திடீரெண்டு ஊமையாயிட்டானா இல்லாட்டி அந்த பிள்ளை ஊமையோ தெரியாது

சாத்திரி என்னடாப்பா எப்பிடி சுகங்கள் எனக்காக ஒரு அஞ்சு நிமிசம் பொறுக்க ஏலாதோ? அதுக்கிடையிலை தொடங்கிட்டியள்

சின்னா சே சாத்திரி ஊமையாகேல்லை அந்த பிள்ளை தான் ஊமை போல பாவம் சின்ன வயது

சாத்திரி என்டாப்பா கதைக்கிறியள் யார் ஊமை எங்கை ?

முகத்தார் இல்லை சாத்திரி நீ அந்த பிள்ளையோடை ஊமை பாசையிலை கதைச்சு கொண்டு வந்தாய் அதுதான்

சாத்திரி அட கறுமம் நானும் ஊமையில்லை அந்த பிள்ளையும் ஊமை இல்லை இது என்ரை மருமகளடா என்ரை தங்கச்சி ஒருத்தி யெரமனியிலை இருக்கிறாள் தெரியும்தமானே அவளின்ரை மகள்

முகத்தார் ஓ பிறகேன் மருமகளோடை கையை காலை ஆட்டி ஊமை மாதிரி கதைச்சு கொண்டு வந்தனி

சாத்திரி அதையேன் கேக்கிறாய் வெளியிலை சொன்னாலும் வெக்ககேடு பிள்ளைக்கடாப்பா தமிழ் தெரியாது எனக்கு டொச்சு தெரியாது தமிழும் கொஞ்சம் பிறெஞ்சும்தான் எனக்கு தெரியும் அதுதான் சர்வதேச மெழியான கை பாசையிலை கதைச்சு கொண்டு வந்தனாங்கள்

சின்னா எட தமிழ் தெரியாதோ ஏன் தாய் தகப்பன் படிப்பிக்கேல்லையே இப்ப இஞ்சை தமிழ் பிள்ளையளிற்கு தமிழ் தெரியாதெண்டிறது ஒரு ஸ்ரைலா போச்சுது

முகத்தார் இது இஞ்சை கனபேர் இப்பிடித்தான் சின்னனிலை அந்த நாட்டு மொழியோடை தமிழையும் சேத்து படிப்பிச்சா பிள்ளைக்கு குழம்பி விளங்காதாம் எண்டினம் அதெல்லாம் சும்மா புலுடா

சாத்திரி உண்மையாவோ அப்ப தமிழ் விளங்கும் எண்டிறியா சின்ன பிள்ளையளிற்கு

முகத்தார் ஓமடாப்பா ஒரு எட்டுவயது பிள்ளைக்கு ஆறு மொழியை கிரகிக்க கூடிய தன்மை இருக்கெண்டு விஞ்ஞான ரீதியாவே சொல்லுறாங்கள் அதை விட குழந்தையளிற்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழியை பழக்கிறதாலை எந்த பிரச்சனையும் இல்லையெண்டு குழந்தையளிற்கான வைத்தியர் மாரே சொல்லினம்

சின்னா அதெண்டா உண்மைதான் இஞ்சை பார் ஒரு குடும்பத்திலை ஒவ்வொரு சகோதரங்களும் ஒவ்வொரு நாட்டிலை இருக்கினம் அதுகள் ஒரு நல்லநாள் பெரு நாளிற்கு ஒண்டா சேரேக்கை அதுகளின்ரை பிள்ளையள் பாவங்கள் ஒண்டுக்கு இங்கிலிஸ் தான் தெரியும் மற்றதுக்கு டொச்சு மற்றது பிரெஞ்சு ஒண்டோடை ஒண்டு கதைச்சு விழையாட ஏலாது என்ன கொடுமை

முகத்தான் பாவங்கள் பிள்ளையள் தங்கடை சகோரங்களோடையே கதைக்கேலாத நிலைமை இவையளிற்கு உள்ள ஒரேயொரு தெடர்பு மொழி தமிழ் மட்டும்தான் அதை பழக்காமல் விட்டிட்டு நாளைக்கு ஊருக்கு போனல் கூட அதுகளின்ரை சொந்தங்களோடை பேரன் பேத்தியோடை ஆசையா கதைக்க கூட முடியாது

சின்னா அதை அவையளின்ரை அப்பர் அம்மா யோசிக்க வேணும் இஞ்சை அவையளிற்கும் நேர பிரச்சனைதான் எண்டாலும் கொஞ்சம் எண்டாலும் முயற்சி எடுத்து பிள்ளையளிற்கு தமிழை சொல்லி குடுக்கலாம்

சாத்திரி எங்கை எனக்கு இன்னொரு பெக் ஊத்து வீட்டை போய் தங்கைச்சிக்கு போடுற போடிலை பிள்ளை தமிழ் கதைக்கவேணும் இல்லாட்டி நான் சாத்திரி இல்லை
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
ம் நல்ல விடயம் எடுத்து அழகாய் சொல்லியிருக்கிறியள் சாத்திரி. சின்னப்பிள்ளையளுக்கு 12 மொழிக்கு கிட்ட கிரகிக்கும் தன்மை இருக்கு என்று எங்கையோ கேட்ட நினைவு.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஓமடாப்பா ஒரு எட்டுவயது பிள்ளைக்கு ஆறு மொழியை கிரகிக்க கூடிய தன்மை இருக்கெண்டு விஞ்ஞான ரீதியாவே சொல்லுறாங்கள் அதை விட குழந்தையளிற்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழியை பழக்கிறதாலை எந்த பிரச்சனையும் இல்லையெண்டு குழந்தையளிற்கான வைத்தியர் மாரே சொல்லினம்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ஆகா தமிழ் படிப்பிக்க வைக்கதா பெற்றோர்களுக்கு அடி இன்று.... நல்லாயிருக்கு..

Reply
சாத்திரி

பிள்ளைகளின் மொழி விடயத்தில் நீங்கள் எழுதியது அனைத்தும் உண்மை.
Reply
சாத்திரி நல்லா இருக்கு நீங்கள் எழுதியது. புலம்பெயர் நாடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு கட்டாயம் தமிழ் படிப்பிக்க வேண்டும்.
<b> .. .. !!</b>
Reply
<span style='color:green'><b>முகத்தார் வீடு அங்கம் 12</b>

(முகத்தாருக்கு இன்னும் உடம்பு சுகமில்லாதபடியால் டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டது. . . . . ஆஸ்பத்திரியில்)

டாக்டர் : எத்தனை நாளா கால் வலி உங்களுக்கு இருக்கு

முகத்தார் : பொட்டுக்கிலாலை புகுந்த நாளிலை இருந்து ஜயா. .

டாக்டர் : என்ன பொட்டுக்கிலாலையோ ?

பொண்ணம்மா: (என்ன லூஸ் மாதிரி சொல்லுறீயள்) இல்லை டாக்குத்தர் இவருக்கு இப்பிடித்தான் சம்மந்த சம்மந்தமில்லாமல் பேசுறார் கால் தடக்கி விழுந்து போனார்

டாக்டர் : சரி வாயைத் திறவுங்கோ பாப்பம் என்ன ஒரே இருட்டாக் கிடக்கு இன்னும் கொஞ்சம் திறவுங்கோ. . . அம்மா நீங்கள் ஒருக்கா வெளியிலை போறீயளே நீங்கள் நிக்கிறதிலை மனுசன் வாயை திறக்கப் பயப்படுகுது

முகத்தார் : என்ன ஜயா காலிலை அடிபட்டதுக்கு வாய்க்கை பாக்கிறீயள்

டாக்டர் : எல்லாம் எங்களுக்குத் தெரியும் சேட்டை கழட்டுங்கோ செக் பண்ணனும் . . . . .என்ன நெஞ்சிலை வைச்சுப்பாக்க பாட்டுச் சத்தம் கேக்குது

முகத்தார் : ஜயா காதிலை மாட்டியிருக்கிற வோக் மன்னை கழட்டுங்கோ முதலிலை

டாக்டர் : எல்லா ரெஸ்டும் செய்யாமை வடிவா எதுவும் சொல்லேலாது எதுக்கும் நீங்கள் கொழுப்பை பக்கத்துக்கு சேர்க்காம பாத்துக் கொள்ள வேணும் உங்கடை வயசு அப்படி.?

முகத்தார் : அப்ப ஜயா நான் மனுசியை கொஞ்ச நாளைக்கு கொழும்புக்கு அனுப்பி விடுறன் என்ன

டாக்டர் : அது உங்கடை இஷ்டம் முதலிலை ரெஸ்ட் எடுக்கிறதுக்குஎழுதித்தாறன் அதை எடுத்துக் கொண்டு வாங்கோ என்ன

முகத்தார் : இப்ப ஜயா கொஞ்சம் வலி குறையிற மாதிரி எதாவது குளிசை எழுதித் தந்தீங்கள் எண்டா நல்லம்

டாக்டர் : குளிசை தேவையிலை ஊசி ஒண்டு போட்டு விடுறன் டக் கெண்டு வலி குறைஞ்சிடும்

முகத்தார் : அப்ப ஜயா நான் வேட்டியை கொஞ்சம் இறக்கி விடட்டே. . .

டாக்டர் : அது உங்கடை விருப்பம் ஆனா நான் ஊசியை கையிலைதான் போடப் போறன்

முகத்தார் : ஜயா இந்த ரெஸ்ட்டுகள் எல்லாம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியிலை எடுக்கலாம் தானே

டாக்டர் : அங்கையெல்லாம் ஏன் போறீயள் என்ரை சொந்தக்கார பெடியள் லாப் வைச்சிருக்கிறான் அங்கை போய் எடுங்கோ டக் எண்டு றிசல்ஸ் தெரியும் இந்தாங்கோ

(முகத்தார் துண்டையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். . . . வீட்டில். . .)
முகத்தார் : பாத்தியே ஒண்டுமில்லை எண்டு சொல்லக் கேக்காம கூட்டி வந்தாய் டாக்குத்தர் காய்ஞ்சு போய் இருக்கிறார்போல எல்லா ரெஸ்ட்டையும் எடுக்கட்டாம்

பொண்ணம்மா: நல்லம் என்ன வியாதிகள் இருக்கு எண்டு அறியலாம்தானே இப்ப கொஞ்ச நாளா நீங்கள் என்னோடை எதிர்த்துக் கதைக்கேக்கையே எனக்கு சாதுவா விளங்கினது இப்ப நல்லாதாப் போச்சு. . .

முகத்தார் : என்னப்பா என்னை வைச்சு அந்த மனுசன் வியாபாரம் செய்யப் பாக்குது நீர் என்னடா எண்டா சேர்;ந்து பாடுறீர்

பொண்ணம்மா: படிச்ச மனுசர் சொல்லேக்கை கேக்க வேணும் எல்லாம் உங்கடை நன்மைக்குத்தானே சொன்னவர்

முகத்தார் : அப்ப என்னதுக்கு மனுசன் பிறைவேட்டா திறந்து வைச்சுக் கொண்டு கவுண்மேட் ஆஸ்பத்திரியிலை ரெஸ்ட்டும் எடுக்க வேண்டாமாம் உழைப்புக்கெல்லோ

பொண்ணம்மா : இப்ப என்ன. . . நான் பொட்டு வைச்சு கலர் சீலை உடுக்கிறது உங்களுக்கு பிடிக்கேலை எண்டா ரெஸ்ட் ஒண்டும் எடுக்காம இருங்கோ

முகத்தார் : என்னடியப்பா சும்மா கால் வருத்தம் இதுக்குப் போய் என்னை பாடேலை ஏத்தப் பாக்கிறியே சரி. . .சரி. . .போய்தான் பாப்பம்

(கொஞ்ச நேரம் அலுப்பாக்கிடக்கெண்டுட்டு றோட்டிலை போய் நிக்கிறார் முகத்தார் அந்த நேரம் சின்னப்பு அதாலை வாறது தெரியுது )

சின்னப்பு : முகத்தான் என்ன றோட்டிலை சாத்திரி சொன்னவன் நான் சின்ன வருத்தம் எண்டு நினைச்சன் கால் வீக்கம் சரிவரேலை போலக்கிடக்கு

முகத்தார் : இப்பதான் ஆஸ்பத்திரிக்கு போட்டு வந்தனான் எல்லா ரெஸ்ட்டும் எடுக்கவேணுமாம் அது சரி யார் உதிலை சைக்கிலை வாறது தெரிஞ்ச பெடினாக்; கிடக்கு

சின்னப்பு : இவர் எங்கடை மாஸ்டரின்ரை பெடியன் மாலன்போலக் கிடக்கு. பெடி டாக்குத்தருக்கு படிக்கிறான்; பொறு. . .பொறு மறிப்பம் ஆளை தம்பி நிப்பாட்டு அப்பு எங்கை இஞ்சாலை?

மாலன் : என்னப்பு நடு றோட்டிலை சைட்டிலை வாங்கோ. .

சின்னப்பு : தம்பியை பாக்கிறதே வலு கஷ்டம் இப்ப ஹாயா வாறீர் என்ன மாதிரி படிப்புகள் எல்லாம் முடிஞ்சுதோ?

மாலன் : இந்த வருஷத்தோடை சரியப்பு முடிச்ச கையோடை அவுஸ்ரேலியாவுக்கு போறதுக்கு றை பண்ணுறன்

முகத்தார் : ஏனப்பு எதாவது மேற்படிப்பு படிக்கிறதுக்கோ

மாலன் : அப்படியில்லை ஜயா நாங்கள் இஞ்சை முடிச்சபடியாலை வடக்கு கிழக்கிலைதான் வேலை செய்ய வேணும் இஞ்சத்தைய ஆஸ்பத்திரிகளிலை எங்கடை அறிவை வளர்க்கிற மாதிரி வசதிகள் இல்லையே

முகத்தார் : தம்பி வசதி எண்டு எதைச் சொல்லுறீர் இங்சை இருக்கிற சனங்களுக்கு ஒரு சேவை செய்தாலே மனநிறைவுதானே

மாலன் : என்ன சேவை எண்டு சொல்லுறீயள் எங்களை போடுறதெண்டால் கிராமத்து ஆஸ்பத்திரிக்குத்தான் போடுவங்கள் இங்கை காய்ச்சலுக்கும் தடிமனுக்கும் குளிசை எழுதிக் குடுத்துக் கொண்டிருந்தால் எங்கை முன்னேறுறது.

முகத்தார் : தம்பி கிராமத்தில் வேலை செய்ய குடுத்து வைச்சிருக்கனும் அப்பு அந்த படிப்பறிவு குறைந்த மக்கள் உங்களை மாதிரி படிச்ச ஆட்களுக்கு தருகிற மரியாதையும்; அன்பும் எந்த இடத்திலும் கிடைக்காது.

சின்னப்பு : ஓம் தம்பி கடவுளை கண்ணாலை காணுறமோ இல்லையே உங்களை மாதிரி டாக்குத்தர்மாரைத்தானே கடவுளா நினைச்சுப் பாக்கிறம்

மாலன் : நீங்கள் இப்பிடிச் சொல்லுறீயள் அப்பர் சொல்லுறார் எங்கையன் வெளியிலை போய் செட்டில் ஆகிவிடச் சொல்லி. . . .

முகத்தார் : பாத்தியே சின்னப்பு பெடியளுக்கு கொஞ்சமெண்டாலும் மனமிருந்தாலும் இந்த பெத்ததுகள் சுயநலத்தோடை நடக்கிறது ரொம்பச் சரியில்லை கண்டியோ

சின்னப்பு : தம்பி படிப்பை முடிக்க கஷ்டப்பட்ட எத்தனையோ சனம் வெளியிலை போய் படிச்சிட்டு எங்கடை ஈழத்துக்கு சேவை செய்ய விருப்பப் பட்டிருக்கினம் இஞ்சை இருக்கிற நீங்கள் போக வெளிக்கிடுகிறீயள்

முகத்தார் : தம்பி இதிலை நீர்தான் முடிவெடுக்க வேணும் அப்பர் அம்மாக்கு எடுத்துச் சொல்ல வேணும்

சின்னப்பு : அதோடையப்பு இந்த தொழிலை தேர்ந்தெடுத்த நீங்கள் சேவை மனப்பாங்கு இருக்கவேணும் பணத்துக்கு அடிமையாகப்பிடாது தம்பி

மாலன் : நீங்கள் சொல்லுறது விளங்குது கூடப் படிச்சவங்கள் எல்லாம் வெளியிலை போக வெளிக்கிடேக்கை நாங்களும் போண என்ன எண்டுதான.;. . .

முகத்தார் : தம்பி நீர் எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு பெடியன் மற்றாக்களைப் பற்றி பிறகு பாப்பம் அப்பரோடை கதையும் வசதி கிடைச்சா நானும் சொல்லுறன்

சின்னப்பு : சரி முகத்தான் தம்பிட்டை கேளன் கால் வருத்ததுக்கு என்ன செய்ய வேணுமெண்டு ஏதோ ரெஸ்ட்டுகள் எடுக்க வேணுமெண்டாய்

மாலன் : எதுக்கும் ஜயா ஒரு எக்ஸ்ரே எடுத்து காலைப் பாருங்கோ பெரிசாத் தெரியாட்டிக்கும் பாத்தால் பயமில்லைத்தானே

முகத்தார் : தம்பி சின்ன வருத்தமெண்டு மனுசிக்கு கேக்க சொல்லிப் போடாதையப்பு இப்பதான் கொஞ்சம் றெஸ்ட்டா இருக்கிறன்

சின்னப்பு : சரி தம்பி உம்மையும் வழியிலை மறிச்சு குழப்பிப்போட்டம் போட்டு வாரும்; என்ன . . . . . .

[size=9](இது எவரையும் குத்திக் காட்டுவதற்காகவல்ல எமது படித்தவுறவுகள் 90 வீதம் நாட்டுக்கு சேவை செய்யத்தான் இருக்கிறார்கள் ஆனா ஒரு 10 வீதம் எண்டாலும் சுயநலத்துக்காக வெளியிலை போவது கவலையான விடயமல்லவா)</span>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:தம்பி படிப்பை முடிக்க கஷ்டப்பட்ட எத்தனையோ சனம் வெளியிலை போய் படிச்சிட்டு எங்கடை ஈழத்துக்கு சேவை செய்ய விருப்பப் பட்டிருக்கினம் இஞ்சை இருக்கிற நீங்கள் போக வெளிக்கிடுகிறீயள்

சரியாச் சொன்னீர்கள் தாத்தா,
இங்கு பல இளைஞர்கள் தாம் படித்து முடித்தபின் தமிழீழத்திற்குப் போகவேண்டும் என்ற கனவுடனே பல்கலைக்கழகம் போகிறார்கள். இவ்வளவத்திற்கும் இவர்கள் தம் 4,5 வயதில் இங்கு வந்தவர்கள் அல்லது இங்கேயே பிறந்தவர்கள். இவ்வருட தலைவரின் உரையின் பின் தமது கனவு நனவாகப்போகின்றது என்பதில் மிகவும் மகிழ்வாக உள்ளார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
மனசைக் கனக்க வைக்கிற விடயத்தைத்தான் முக்கத்தார் கையில எடுத்திருக்கிறீங்கள். நாங்களும் காரணம் தெரியாம நாடு விட்டு நாடு வந்தாச்சு... எதையோ கடமை எண்டு ஆரம்பித்து அதுவே வாழக்கையும் ஆச்சுது... ஆனால் ஊருக்குப் போகவேணும் எண்ட ஏக்கம் மட்டும் குறைய இல்லை.... அதுவும் ஒருக்கா ஊருக்குப் போய்வந்தாப் போல இன்னும் அதிகமாயிட்டுது...
::
Reply
முகத்தார் வீடு றோட்டுக்கு வந்திட்டுது நல்ல கருப்பொருளோட. ஊரில இருக்கிற ஆக்களே கொழும்பு போன்ற இடங்களிற்கு தங்களுக்கு வேலைவாய்ப்பத்தேடினம் என்று எங்கோ வாசித்த நினைவு. நல்லாய்த்தான் சொல்லியிருக்கிறியள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Ó¸ò¾¡÷à Üò¨¾ Äñ¼É¢ø ¦ÅÇ¢Å¡È "Ò¾¢Éõ" Àò¾¢Ã¢¨¸Â¢Ä ¸ñ¼ §À¡Ð ºó§¾¡ºÁ¡¸×õ ¦ÀÕ¨Á¡¸×õ þÕó¾¢îÍ. Å¡úòÐì¸û «ôÒ.
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Reply
நல்லா இருக்கு அங்கிள் தொடர்ந்து எழுதுங்க...படிக்க ஆவாலாய் இருக்கிறோம்....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
வாழ்த்துக்கள் முகத்தாரண்ண, பெரியப்பு அந்த சுட்டியை தந்தால் நாமும் பார்ப்போமே.
.

.
Reply
நல்ல கருப்பொருள் முகத்தார்.

தாயகத்தில் சொந்த தெரிவால் இருந்து சேவையாற்றுபவர்கள், வெளிநாடு சென்று பின்னர் பங்களிப்பு செய்வேண்டும் என்று ஆர்வத்தோடு திரும்பி தாயகத்து அதிகரித்த நிபுணத்துவத்தோடு வருபவர்கள் என இரு தரப்புமே தேவை.

ஏல்லோருமே தாயகத்திலிருந்து விட்டால் மருத்துவத்துறை மாத்திரமல்ல பல துறைகளில் நிபுணத்துவங்கள், தொழில்நுட்ப வழர்ச்சிகளை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் இன்று எமது சமுதாயத்திற்கு கிடைத்திருக்காது.

சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் ஊரில் ஏனோ தானே என்று மாட்டுப்பட்டு கிடக்கிறோம் என்று புழுங்கிக் கொண்டு பொறுப்பில் இருப்பவர்கள் சில வேளைகளில் மாற்றங்களின் முன்நேற்றங்களிற்கு தடையாக இருக்கிறார்கள். இவர்களை விட புலத்தில் பிறந்து, அல்லது சிறு வயதில் வந்து வழர்ந்தவர்கள் தாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கும் போதும் தாயகத்திற்கு பங்களிப்பு செய்ய என செல்பவர்கள் பல மடங்கு மேல்.
Reply
முகத்தார் வீடு அசத்தல்..! வெளிநாடுகளில் கற்கும் பெறும் அறிவு மற்றும் அநுபவங்களை தாயகத்தோடு பகிர்ந்து கொளப்படுவது அவசியம்..! இன்று பல்கலைக்கழகங்களே நேரடியா பல கல்விசார் சாரா துறைகளில் ஒருவருக்கு ஒருவர் சேவைகள் மற்றும் விடயங்களைப் பகிர்ந்துகொள்கின்றன....!

மேலும் சிங்கள மாணவர்கள் தாய் நாட்டின் மீது வைத்திருக்கும் அக்கறை போல தமிழ் மாணவர்களிடம் இல்லை..! வெறும் சுயநலப்போக்குக்தான் அதிகம்..! மற்றவர்களுக்கு ஆலோசனையும் அறிவுரையும் சொல்ல தமிழர்கள் பின்னிற்பதில்லை..! ஒரு சிலரே தங்களை செயல்வீரர்கள் ஆக்குகிறார்கள்..! அவர்கள் அமைதியாக அதை சாதித்தும் விடுவார்கள்..! அப்படியான தமிழ் மாணவர்களையே தமிழர் கல்விச் சமூகம் உருவாக்க வேண்டும்...! வெறும் பெயருக்கும் புகழுக்கும் சேவை அளிக்க வருபவர்களிடம் தாயகப்பற்று என்பது கிடைக்க வாய்ப்பில்லை...! அவர்களிடமிருந்து அவசியமான சேவைகள் நேர்த்தியாகப் பெறப்படலாம் என்றும் எதிர்பார்க்க முடியாது..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
குருவி அக்காவின்ட அறிவுரை மெத்தச் சரி, எங்கட ஆக்கள் அறிவுரை செய்வினம் அதுவும் இலவசமா இணயத்தில பிளந்து கட்டுவினம்.போராட்டத்திற்கு ஒரு சதமோ இல்லாடி அவயின்ட உழப்பயோ குடித்திருக்க மாட்டினம்.
இன்றய இணய யுகத்தில புலத்தில இருந்து கொன்டே கன வேலை களத்தில செய்யலாம்.எதுவுமே செய்யாம தங்கட சொந்த வேலயப் பாத்துகொண்டு ,இணயத்துக்க பதுங்கி இருந்துகொண்டு மற்றவைக்கு அறிவுரையும் ,ஆலோசனையும் பிளந்து கட்டுவினம் எங்கட தமிழ் ஆக்கள்.
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)