Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திரை மொழி
#1
[Image: FillmMaking.gif]<b><span style='font-size:30pt;line-height:100%'>திரை மொழி</b></span>
__________________________________அஜீவன்

<b>[highlight=red:551cd0cc65]திரை.1[/highlight:551cd0cc65]</b>

எந்த ஒரு மொழிக்கும் ஓர் இலக்கண முறை உண்டு.இலக்கணம் தவறி எழுதும்,அல்லது பேசும் ஒருவரது கருத்துகளை மற்றொருவரால் ஒழுங்காக கிரகித்துக் கொள்ள முடியாது.பேச்சு வழக்கில் (அனைத்து மொழிகளிலும்) எல்லோருமே பேசினாலும் அதை அந்த வரையறைக்குள் இருப்பவர்களால் மாத்திரமே முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரே மொழி பேசும் மக்களிடையே வேறுபட்ட ஒயில்களில் (சிலாங்)பேசும் போது,அவர் என்ன சொல்கிறார் என்று புரியவேயில்லை என்று நாமே
ஒருவரது கருத்தை வித்தியாசமாக புரிந்து கொண்ட நேரங்கள் ஏற்படாமலில்லை.

நாம் , நமக்குப் புரிகிறதே என்று எதையாவது தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருப்போம். அது ஒரு சிலருக்கு அல்லது சம்பந்தப்பட்டவருக்கு மாத்திரம் புரியலாம். எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை.எல்லோருக்கும் புரிய வேண்டும் என்றால்,அடுத்தவர் நிலையில் நாம் இருந்து பார்த்தால்தான் புரியும்.

குடும்பங்களில் கூட நாம், "நான் சொல்றது இந்த மர மண்டைக்கு புரியுதேயில்லை" என்று யாராவது ஒருவரை வீடுகளில் வசைபாடுகிறோம்.

ஒரே குடும்பத்தில் இப்படியிருக்கும் போது ,எந்த மொழிக்காரராக இருந்தாலும்,எந்த நாட்டவராக இருந்தாலும் புரியக் கூடிய விதத்தில் உருவாக்கும் ஒரு கலையே சினிமா............அதை புரிய வைப்பதற்கு அதிகூடிய அவதானமும்,கரிசனையும் தேவை.

அந்த சினிமா மொழிக்கென்று ஒரு இலக்கணம் உண்டு.

ஒரு திரைப்படத்தை அல்லது ஒரு குறும்படத்தை உருவாக்க ஒருவர் முயலும் போது அந்த சினிமாவின் இலக்கணம் அவருக்கு சரிவரத் தெரியாது போனால் அவரால் ஒரு முழுமையான படைப்பைத் தருவது சிரமம்.

சினிமா பற்றிய இலக்கணத்தில் தேர்ச்சி பெற்ற, பல கலைகளை ஆட்சி செய்யும் தலைவனே இயக்குனர்.

இயக்குனரைத்
தவிர்த்து
திரைக்கதை எழுதுபவர்
ஒளிப்பதிவாளர்
தொகுப்பாளர்
ஆகியோருக்கும் நிச்சயம் இவ் இலக்கணம் பற்றிய பரந்த அறிவும் , ஆற்றலும் , கலைநயமும் அவசியம்.

சினிமாவில் உள்ள ஏனையோருக்கும் தேவைதான். அது பற்றிய முழு அறிவு மேலே குறிப்பிட்டவர்களுக்கு இல்லாவிடில் அவர்கள் செய்யும் படைப்பு முழு வெற்றியை தராது.

எனவே இது பற்றி தெரிந்து கொள்ள
<span style='font-size:25pt;line-height:100%'>Shots (ஷாட்ஸ்) [பகுதி]</span>
எனும் பகுதியை முதலில் பார்க்கலாம்.

ஒரு திரைப்படத்தின் பல shots கள் சேர்ந்தோ,சில காட்சிகள் சேர்ந்தோ பல் வேறு பகுதிகளில் ஒளிப்பதிவு செய்யப்படும் ஒன்றை ஒரு sequuence ( சீக்வன்ஸ்) [நிகழ்வு] என்று கூறுகிறோம்.

அதாவது
பல (shots)ஷாட்ஸ்களின் கோர்வையை (scene) சீன் என்றும்,
சில அல்லது பல (scene)சீன்களின் கோர்வையை (sequuence)சீக்குவென்ஸ் என்றும்,
சில அல்லது பல(sequuence) சீக்குவென்ஸ்களின் கோர்வையை (film or movie or cinema)திரைப்படம் என்றும் சொல்கிறோம்.

[u]<span style='font-size:25pt;line-height:100%'>Shots (ஷாட்ஸ்) [பகுதி]
</span>


[quote]<span style='font-size:22pt;line-height:100%'><b>close-up shot (அண்மைப்பகுதி)</b>
</span>

[Image: leo-closeup.jpg]
ஒரு கதாபாத்திரத்தின் அல்லது ஒரு பொருளின் அவதானத்தை உருவாக்க CU (closeup) எனும் ஷாட் பயன்படுத்தப்படுகிறது.

[Image: self-closeup.jpg][Image: cornish-closeup.gif]

உதாரணமாக ஒருவர் நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் போது,அவர் எமது பேச்சை கேட்காமல் எங்கோ அவதானத்தை செலவிடுகிறார் என்றோ, அல்லது அவரது எண்ணம், நிலையை அறிய முடிவதாகவோ (புரிவதாக) எண்ணுங்கள்.

அப்போது அதை அவரது கண்கள் அல்லது அவரது பதட்டம் அல்லது அவரது செய்கை நமக்குக் காட்டிக் கொடுக்கிறது.

அப்போது அந்தப் பகுதிக்கு நம்மை நமது புலன் நம்மை அறியாமலேயே இட்டுச் சென்று அவதானிக்க வைத்து விடுகிறது. அது சாதாரணமாக நமக்கு புரிவதில்லை.காரணம் நாம் அதற்கு பழக்கப்பட்டு விட்டோம்.

ஆனால் ஒரு சினிமாவில், பார்வையாளனுக்கு அப்படியான ஒரு நிகழ்வை உணர்த்துவதற்கு அந்த கதாபாத்திரத்தின் அண்மைப்பகுதியை காட்டினால்தான் புரியும்.

<img src='http://www.yarl.com/forum/files/food.jpg' border='0' alt='user posted image'>[Image: ethan_eat.jpg]
அதுபோலவே ஒரு மேசையில் அழகிய உணவுத் தட்டொன்று இருக்கிறதென்று நினையுங்கள்.அப்போதும் இதே CU (closeup) எனும் ஷாட் பயன்படுத்தப்படுகிறது.
[Image: closeup.jpg][Image: doglip%252001%2520closeup.jpg]

ஒரு மனிதருக்காக மட்டுமல்ல , எந்தவொரு அண்மைக் காட்சியில் எதாவது ஒன்றை பார்வையாளனுக்கு உணர்த்துவதற்கு CU (closeup) எனும் ஷாட் பயன்படுத்தப்படுகிறது.

இனி உங்கள் கற்பனையில் எதையெல்லாம் கனவு கண்டு செய்யலாம் என்று பாருங்கள்....................

கனவு தொழிற்சாலை பயணம் தொடரும்............அஜீவன்

<span style='color:red'>(உங்களுக்கு புரியாத கேள்விளைத் தொடுக்கலாம்.எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வேன்.)
<img src='http://www.yarl.com/forum/files/ajros.jpg' border='0' alt='user posted image'>
[size=12]திரைக்கலையை உலகுக்களித்த மேதைகளுக்கும்,என் திரை ஆசான்களுக்கும்,நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.</span>
AJeevan

www.ajeevan.com
Reply
#2
நல்லவிடயம் தொடருங்கள
Reply
#3
தொடருங்கள் அஜீவன்.. ஒரு கதையையும் இணைத்து.. அதை எவ்வாறு சோட்டுக்கு பிரிப்பது.. அதில் எவ்வாறு லோங்சோட்.. குளோஸ்அப் வரும்.. என்ற விபரங்களை விளக்கினால்.. இன்னும் நல்லது.. என்னவோ.. உங்களின் சேவை தொடரட்டும்.. காத்திருக்கிறேன்.
.
Reply
#4
sOliyAn Wrote:தொடருங்கள் அஜீவன்.. ஒரு கதையையும் இணைத்து.. அதை எவ்வாறு சோட்டுக்கு பிரிப்பது.. அதில் எவ்வாறு லோங்சோட்.. குளோஸ்அப் வரும்.. என்ற விபரங்களை விளக்கினால்.. இன்னும் நல்லது.. என்னவோ.. உங்களின் சேவை தொடரட்டும்.. காத்திருக்கிறேன்.
உங்கள் தேவைகளை முன் வைத்து தொடர்ந்து எழுதுவேன்.ஆனால் அடிப்படை பற்றிய விளக்கங்கள் முடியும் வரை.....................பொறுமையோடு இருங்கள்.
நன்றிகள்.............

(சோழியன்,நீங்கள் கேட்டிருப்பது போன்ற கேள்விகள் வரும் போது உடனே பதில் அளிக்க தாமதமானாலும், எது எம்மவருக்கு தேவை என்பதை தெரிந்து கொண்டு எழுதுவதற்கு எனக்கு ஒரு பொறியாகலாம். )
Reply
#5
எழுதிக் கொண்டு வரும் பொதுதான் அண்ண, எங்களுக்கு பிரச்சனை வரும். தொடருங்கோ!
Reply
#6
[Image: FillmMaking.gif]<b><span style='font-size:30pt;line-height:100%'>திரை மொழி</b></span>
__________________________________அஜீவன்

<b>[highlight=red:7b637405e0]திரை.2[/highlight:7b637405e0]</b>


திரைக்கலையில் அனைத்துமே முக்கிய பகுதிகளாகத்தான் கருத வேண்டும் .காரணம் ஒரு மனிதனின் உடலில் உள்ள அவயவங்களில் எது குறைந்தாலும் அது அங்கவீனம்தான்.அது போலவே சினிமா என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட கலையல்ல. ஆனால் இயக்குனர் கலையாக கருதுவதற்கு காரணம், இவற்றை தேர்வு செய்வதிலிருந்து, அப் படைப்பின் வெற்றி , தோல்வி கூட இயக்குனர் கைகளில் தங்கியிருப்பதால்தான். இயக்குனர் என்பவர் ஒரு திரைப்படத்தின் தாயாகவே கருத வேண்டும். ஒரு குழந்தையின் பிறப்பு முதல் வளர்ப்பு வரை தாய்க்குத்தான் முக்கிய பங்கு உண்டு.

அடிப்படையில் ஏழு சுவரங்களுக்குள் இசை அமைவதைப் போல , ஒரு திரைப்படமும் ஒரு சில குறிப்பிட்ட வட்டத்துக்கள்தான் சுற்றிச் சுழல்கிறது. அதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.ஆனால் அது எப்படி வேறுபடுகிறது என்றால் , அது இயக்குனர் படைக்கும் விதத்தில்தான் தங்கியிருக்கிறது. ஒரு மனிதனால் அனைவரையும் 100 சதவிகிதம் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் ஒரு திரைப்படத்தில் அல்லது படைப்பில் 60 சதவிகிதமாவது திருப்திப் படுத்த முடிந்தால் அதுவே ஒரு பெரு வெற்றிதான்.

இது எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது என்றால் ஒரு கதையை இயக்குனர் தேர்ந்தெடுப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. அது இயக்குனரது கதையாகவோ அல்லது இன்னொரு எழுத்தாளரின் கதையாகவோ இருக்கலாம். ஆனால் இயக்குனருக்கு , அந்த கதையைப் பற்றிய ஒரு அனுபவம் இருந்தால் மட்டுமே அவரால் முழுமையாக செயலாற்ற முடியும்.
கதை அழகாக சொல்லப் பட்டிருக்கிறதே என்று இயக்குவதற்கு முயல்வது தோல்வியைத்தான் தரும்.

காரணம் ஒரு குழந்தைப் பிரசவத்தைக் காணாத , அதுபற்றித் தெரியாத ஒருவரால், யதார்த்தமாக ஒரு பிரசவத்தை திரையில் செதுக்க முடியாது. அதை நேரடியாகக் காணா விட்டாலும் , அது பற்றிய விஞ்ஞான ரீதியான மருத்துவ திரைப்படம் ஒன்றையாவது பார்த்து , அது தொடர்பானவர்களுடன் பேசி பல தகவல்களை சேகரித்த பின்னரே அதற்கு இறங்க வேண்டும். நான் திரைப்படங்களில் பார்த்ததற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்வாக பிரசவம் நடப்பதை கண்டேன். அது எனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. அதாவது சுவிசின் சுகாதார அமைச்சுக்காக ஒரு டாக்யுமன்றி படத்தை ஒளிப்பதிவு செய்யக் கிடைத்த போதுதான் அது எனக்குக் கிடைத்தது.

அதுவரை தமிழ் சினிமாவில் பார்த்து வந்த விடயமே என் மனதில் படிந்திருந்தது. இவர்கள் ஒரு மென்மையான விடயத்தைக் கூட அதி மேதாவித்தனமாக நடிக்க வைத்து சாதாரண மக்களையே பயமுறுத்துவது போன்று காட்சிகளை அமைப்பதால், அக் காட்சி வாயிலாக சம்பந்தப்பட்டவர்களது மனதை கவர முடியும் என்ற கருத்து இவர்களிடமுண்டு.அது மக்கள் மத்தியில் உண்மைக்கு புறம்பான பீதியை உருவாக்க ஏதுவாகிறது. அதை யதார்த்தமாக தேவையான அளவு மாத்திரமே சுவையோடு கலை நயத்தை சேர்ந்தால் அது சம்பந்தப்பட்டவர்களைக் கவருவதுடன்,அடுத்தவர்களுக்கும் ஒரு முன் மாதிரியாக அமைய வாய்ப்புண்டு.

எனவே ஒரு இயக்குனரது முக்கிய பணி தனக்கு பரிச்சயமுள்ள , தான் வாழ்ந்த பிண்ணனியுள்ள கதையை அல்லது கதைக்கருவை தேர்வு செய்வதேயாகும். அப்படி இல்லாவிட்டால் அதைத் தவிர்ப்பதே சிறந்தது.

திரையில் மக்கள் காணும் சினிமாவை முதன் முதலில் மனத்திரையில் காண்பவன் கதாசிரியன் எனும் முதல் ரசிகனாகும். இவர் தனிமையில் ரசித்து , சிரித்து , அழுது , துவண்டு , வேதனைப்பட்டு எத்தனையோ வித விதமான மாற்றங்களை செய்து இறுதியில்தான் கடுதாசியில் தன் எண்ணங்களை வடிக்கிறார்.

இவர் தன் வாழ்வில்லோ, பிறர் வாழ்விலோ நடந்த சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அல்லது அறிந்த செய்திகளை வைத்து அவர் புனையும் விதத்திலேயே கதைக்கு மெருகேறுகிறது. இதுதான் ஒரு திரைப்படத்தின் விதியாகிறது.

நீங்கள் தெரிந்து கொள்ள
<span style='color:brown'>Shots (ஷாட்ஸ்) [பகுதி] சிலவற்றை
இணைக்கிறேன்.

<img src='http://www.yarl.com/forum/files/ariel_view.jpg' border='0' alt='user posted image'>
[size=15]Ariel Shot</span>

<img src='http://www.yarl.com/forum/files/very_long_shot.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>Very Long Shot</span>

<img src='http://www.yarl.com/forum/files/long_shot.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>Long Shot</span>

<img src='http://www.yarl.com/forum/files/mid_shot.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>Mid Shot</span>

<img src='http://www.yarl.com/forum/files/midshot.gif' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>Mid Shot</span>

<img src='http://www.yarl.com/forum/files/rai.jpeg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>Mid Shot</span>

<img src='http://www.yarl.com/forum/files/nala.ajeevan.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>Close up</span>

<img src='http://www.yarl.com/forum/files/big_closeup.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>Big Close up</span>

<img src='http://www.yarl.com/forum/files/mediaback.jpeg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>Big Close up</span>

மேலேயுள்ள Shots (ஷாட்ஸ்) [பகுதி] பற்றிய விபரங்களை அடுத்து எழுதுகிறேன்.

கனவு தொழிற்சாலை பயணம் தொடரும்............அஜீவன்

<span style='color:red'>(உங்களுக்கு புரியாத கேள்விளைத் தொடுக்கலாம்.எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்வேன்.)
<img src='http://www.yarl.com/forum/files/ajros.jpg' border='0' alt='user posted image'>
[size=12]திரைக்கலையை உலகுக்களித்த மேதைகளுக்கும்,என் திரை ஆசான்களுக்கும்,நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.</span>
AJeevan

www.ajeevan.com
Reply
#7
நல்லாயிருக்கு அஜீவன் அண்ணா, நாங்களும் வந்து சேர்ந்து படிக்கலாமே? நீங்க எழுத வெகு நாள் எடுக்கிறீங்கள்.
Reply
#8
<!--QuoteBegin-vanathi+-->QUOTE(vanathi)<!--QuoteEBegin-->நல்லாயிருக்கு அஜீவன் அண்ணா, நாங்களும் வந்து சேர்ந்து படிக்கலாமே? நீங்க எழுத வெகு நாள் எடுக்கிறீங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கொஞ்சம் வேலையாக இருந்து விட்டேன். ஏதாவது புரியாவிட்டால் கேளுங்கள்.நிச்சயம் , எனக்கு தெரிந்த விதத்தில் விளக்குவேன். ஒரு வாரத்தில் அல்லது 10 நாட்களுக்குள் ஒரு பகுதியாக எழுதுவேன்.தேவைப்படின் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

www.ajeevan.com
info@ajeevan.com
+41792091249
Reply
#9
யாவற்றுக்கும் நன்றிகள்
Reply
#10
ganesh Wrote:யாவற்றுக்கும் நன்றிகள்

நன்றிகள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)