10-21-2005, 03:01 PM
ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவின் " மக்கள் நிகழ்ச்சி நிரல்' என்ற தேர்தல் விஞ்ஞாபனமும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் " மஹிந்தவின் சிந்தனை' என்ற தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியாகி விட்டன.
இரண்டிலுமே மோசமான ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை தொக்கி நிற்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
பெரும்பான்மையினரின் விருப்பம்தான் நீதியும், நியாயமும் என்ற தோரணையில் அந்தத் தவறான கொள்கையை அடிப்படையாக வைத்தே இந்த விஞ்ஞாபனங்கள் இரண்டும் கட்டப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
அதனால்தான், இந்த இரண்டு தலைவர்களாலுமே தங்களுக்கு நீதி செய்யப்படமாட்டாது என்ற முடிவுக்கு வர வேண்டியவர்களாகத் தமிழர்கள் இருக்கின்றார்கள்.
இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுமே தாங் கள் தேர்தலில் வென்று அதிகாரத்துக்கு வந்தால் இரண்டு சர்வஜன வாக்கெடுப்புகளைத் தாங்கள் நடத்துவார்கள் என்று கூறுகின்றார்கள்.
விடுதலைப் புலிகளுடன் பேசி, இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் கண்ட பின்னர், அது குறித்து மக்களின் அனு மதி பெற ஒரு சர்வஜன வாக்கெடுப்பையும்
அதைப் பெற்ற பின்னர், அந்தத் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு மற்றொரு சர்வஜன வாக்கெடுப்பையும்.
தாம் நடத்துவார் என்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க.
ஆனால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ, தாம் புலிகளுடன் பேச முன்னரே தேசிய கருத்தொருமைப்பாடு ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவார் என்றும், பின்னர் புலிகளுடன் பேசி இணக்கத் தீர்வு ஒன்று எட்டப்பட்டதும் அதனை நடைமுறைப் படுத்தும் புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு மக் களின் அனுமதியைப் பெறுவதற்காக அடுத்த சர்வஜன வாக் கெடுப்பைத் தாம் நடத்துவார் என்றும் கூறுகிறார்.
அது மட்டுமல்ல, "" பெரும்பான்மையினரின் கொள்கை யுடன் நான் உடன்படுகிறேன். எனது தனியான கருத்துக் குப் பதிலாகப் பெரும்பான்மையினரின் கருத்தை நான் ஏற் கிறேன்.'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் பிர தமர் மஹிந்த.
அதாவது, எந்தத் தீர்வும் சகலருக்கும் நீதி, நியாயமாக இருப்பதை விட, பெரும்பான்மையினரின் அதாவது, தென் னிலங்கைச் சிங்களவரின் விருப்பத்தை நிறைவு செய் வதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்ற கருத்தியலில்தான் இரண்டு பிரதான கட்சிகளினதும் வேட் பாளர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அந்தக் கொள்கை நிலைப்பாட்டைத்தான் அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். அதிலிருந்து வெளியே வரப்போகின்றவர்களாக அவர்களின் கருத்து நிலைப்பாடோ, போக்கோ இல்லை.
பெரும்பான்மையினரின் தீர்மானத்தைச் சிறுபான்மை யினர் மீது திணிக்கும் அடாத்துச் செயலே காலங்காலமாக அரங்கேறியது. அதன் மூலமே சிறுபான்மையினர் இலங் கைத் தீவில் அடக்கி, ஒடுக்கி உரிமைகள் பறிக்கப்பட்டனர். அதுவே இனப்பிரச்சினையாக இந்த நாட்டில் பேயுருக் கொண் டது.
நாட்டின் இன்றைய தேசியப்பிரச்சினைக்கு அடிப் படையே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைச் சிறுபான்மை யினர் மீது வலிந்து புகுத்தியது ஆகும். மீண்டும் அதே வழி யில் தீர்வு காண்பார்கள் என்று தென்னிலங்கைத் தலைவர் கூறுவது சாத்தியப்படப் போவதில்லை.
இலங்கையில் பெரும்பான்மையினர் என்ற வாக்குப் பலத்தை வைத்துக் கொண்டு, சிறுபான்மையினர் மீது அவர் களை அடக்கி, ஒடுக்கும் சட்டங்களைத் திணித்த சிங்களத் தலைமைக்கு அந்த வாக்குப்பலம் மூலம் சரியான பதிலைத் தர முடியாத நிலைமை காரணமாகத்தானே ஆயுதங்களைத் தூக்கும் நிலைமை தமிழர்களுக்கு ஏற்பட்டது?
பெரும்பான்மையினரான சிங்கள மக்களை பௌத்த சிங்கள பேரினவாத சகதிக்குள் தூண்டி விழுத்திவிட்டு, அதில் இன்று வரை வெளிவராமல் தொடர்ந்து புதைந்து, அழுந்திப் போய்க் கிடக்கும் சிங்கள சமூகத்தின் இணக்கத் துடன் கிடைக்கும் தீர்வுதான் உங்களுக்குத் தரப்படும் எனத் தமிழர்களைப் பார்த்துக் கூறினால் அதை அப்படியே ஏற் பதற்குத் தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லர்.
பெரும்பான்மையினரின் கருத்து என்பது ஜனநாயகத் துக்கும், தேர்தலுக்கும் பொருத்தமான தீர்வாக இருக்கலாம். ஆனால், நீதி செய்யும் விடயத்தில் பெரும்பான்மையினரின் கருத்து அல்ல, நீதி நியாயத்துக்கே முன்னுரிமையும், தனி யுரிமையும் அளிக்கப்பட வேண்டும். அதுதான் ஒழுங்கு முறையாக இருக்கும்.
தங்களது நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய் யும்படியே உரிமையுடன் கேட்கிறார்கள் தமிழர்கள். பெரும் பான்மைச் சிங்களவரின் விருப்புக்குரிய "பிச்சையை' அல்ல அவர்கள் எதிர்பார்ப்பது.
எனவே, இன்று இலங்கையில் ஜனாதிபதிப் பதவிக்கு வரு வதற்கு பொருத்தமானவர் பெரும்பான்மையினரின் விருப்பத் தீர்வை நடைமுறைப்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுப்பவர் அல்லர். சகல சமூகங்களுக்கும் தமிழர்கள், முஸ் லிம்கள், மலையகத் தமிழர்கள் உட்பட அனைத்து இனங் களுக்கும் நீதியான, நியாயமான தீர்வை எந்த எதிர்ப்பு வந் தாலும் நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்ற உறுதியும், திடமும் கொண்ட தலைவர்தான் இன்று தேவைப்படு கின்றார்.பெரும்பான்மைக்கு "சலாம்' வைத்து, "சல்யூட்' அடிக்கும் தலைவரால் நியாயம், நீதி நிலைநாட்டப்படுவது சாத்தியமானதல்ல.
இன்று ஜனாதிபதித் தேர்லில் நிற்கும் பெரும்பான்மை யினரின் இரண்டு பிரதான கட்சிகளினதும் இரு வேட்பாளர் களுமே இந்த நேர்மைத் திறத்துக்குள் தேறுபவர்கள் போல நமக்குத் தோற்றவில்லை.
http://www.uthayan.com/editor.html
இரண்டிலுமே மோசமான ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை தொக்கி நிற்பதை நாம் அவதானிக்க வேண்டும்.
பெரும்பான்மையினரின் விருப்பம்தான் நீதியும், நியாயமும் என்ற தோரணையில் அந்தத் தவறான கொள்கையை அடிப்படையாக வைத்தே இந்த விஞ்ஞாபனங்கள் இரண்டும் கட்டப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
அதனால்தான், இந்த இரண்டு தலைவர்களாலுமே தங்களுக்கு நீதி செய்யப்படமாட்டாது என்ற முடிவுக்கு வர வேண்டியவர்களாகத் தமிழர்கள் இருக்கின்றார்கள்.
இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுமே தாங் கள் தேர்தலில் வென்று அதிகாரத்துக்கு வந்தால் இரண்டு சர்வஜன வாக்கெடுப்புகளைத் தாங்கள் நடத்துவார்கள் என்று கூறுகின்றார்கள்.
விடுதலைப் புலிகளுடன் பேசி, இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் கண்ட பின்னர், அது குறித்து மக்களின் அனு மதி பெற ஒரு சர்வஜன வாக்கெடுப்பையும்
அதைப் பெற்ற பின்னர், அந்தத் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு மற்றொரு சர்வஜன வாக்கெடுப்பையும்.
தாம் நடத்துவார் என்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க.
ஆனால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ, தாம் புலிகளுடன் பேச முன்னரே தேசிய கருத்தொருமைப்பாடு ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவார் என்றும், பின்னர் புலிகளுடன் பேசி இணக்கத் தீர்வு ஒன்று எட்டப்பட்டதும் அதனை நடைமுறைப் படுத்தும் புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு மக் களின் அனுமதியைப் பெறுவதற்காக அடுத்த சர்வஜன வாக் கெடுப்பைத் தாம் நடத்துவார் என்றும் கூறுகிறார்.
அது மட்டுமல்ல, "" பெரும்பான்மையினரின் கொள்கை யுடன் நான் உடன்படுகிறேன். எனது தனியான கருத்துக் குப் பதிலாகப் பெரும்பான்மையினரின் கருத்தை நான் ஏற் கிறேன்.'' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் பிர தமர் மஹிந்த.
அதாவது, எந்தத் தீர்வும் சகலருக்கும் நீதி, நியாயமாக இருப்பதை விட, பெரும்பான்மையினரின் அதாவது, தென் னிலங்கைச் சிங்களவரின் விருப்பத்தை நிறைவு செய் வதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்ற கருத்தியலில்தான் இரண்டு பிரதான கட்சிகளினதும் வேட் பாளர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அந்தக் கொள்கை நிலைப்பாட்டைத்தான் அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். அதிலிருந்து வெளியே வரப்போகின்றவர்களாக அவர்களின் கருத்து நிலைப்பாடோ, போக்கோ இல்லை.
பெரும்பான்மையினரின் தீர்மானத்தைச் சிறுபான்மை யினர் மீது திணிக்கும் அடாத்துச் செயலே காலங்காலமாக அரங்கேறியது. அதன் மூலமே சிறுபான்மையினர் இலங் கைத் தீவில் அடக்கி, ஒடுக்கி உரிமைகள் பறிக்கப்பட்டனர். அதுவே இனப்பிரச்சினையாக இந்த நாட்டில் பேயுருக் கொண் டது.
நாட்டின் இன்றைய தேசியப்பிரச்சினைக்கு அடிப் படையே பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைச் சிறுபான்மை யினர் மீது வலிந்து புகுத்தியது ஆகும். மீண்டும் அதே வழி யில் தீர்வு காண்பார்கள் என்று தென்னிலங்கைத் தலைவர் கூறுவது சாத்தியப்படப் போவதில்லை.
இலங்கையில் பெரும்பான்மையினர் என்ற வாக்குப் பலத்தை வைத்துக் கொண்டு, சிறுபான்மையினர் மீது அவர் களை அடக்கி, ஒடுக்கும் சட்டங்களைத் திணித்த சிங்களத் தலைமைக்கு அந்த வாக்குப்பலம் மூலம் சரியான பதிலைத் தர முடியாத நிலைமை காரணமாகத்தானே ஆயுதங்களைத் தூக்கும் நிலைமை தமிழர்களுக்கு ஏற்பட்டது?
பெரும்பான்மையினரான சிங்கள மக்களை பௌத்த சிங்கள பேரினவாத சகதிக்குள் தூண்டி விழுத்திவிட்டு, அதில் இன்று வரை வெளிவராமல் தொடர்ந்து புதைந்து, அழுந்திப் போய்க் கிடக்கும் சிங்கள சமூகத்தின் இணக்கத் துடன் கிடைக்கும் தீர்வுதான் உங்களுக்குத் தரப்படும் எனத் தமிழர்களைப் பார்த்துக் கூறினால் அதை அப்படியே ஏற் பதற்குத் தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லர்.
பெரும்பான்மையினரின் கருத்து என்பது ஜனநாயகத் துக்கும், தேர்தலுக்கும் பொருத்தமான தீர்வாக இருக்கலாம். ஆனால், நீதி செய்யும் விடயத்தில் பெரும்பான்மையினரின் கருத்து அல்ல, நீதி நியாயத்துக்கே முன்னுரிமையும், தனி யுரிமையும் அளிக்கப்பட வேண்டும். அதுதான் ஒழுங்கு முறையாக இருக்கும்.
தங்களது நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய் யும்படியே உரிமையுடன் கேட்கிறார்கள் தமிழர்கள். பெரும் பான்மைச் சிங்களவரின் விருப்புக்குரிய "பிச்சையை' அல்ல அவர்கள் எதிர்பார்ப்பது.
எனவே, இன்று இலங்கையில் ஜனாதிபதிப் பதவிக்கு வரு வதற்கு பொருத்தமானவர் பெரும்பான்மையினரின் விருப்பத் தீர்வை நடைமுறைப்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுப்பவர் அல்லர். சகல சமூகங்களுக்கும் தமிழர்கள், முஸ் லிம்கள், மலையகத் தமிழர்கள் உட்பட அனைத்து இனங் களுக்கும் நீதியான, நியாயமான தீர்வை எந்த எதிர்ப்பு வந் தாலும் நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்ற உறுதியும், திடமும் கொண்ட தலைவர்தான் இன்று தேவைப்படு கின்றார்.பெரும்பான்மைக்கு "சலாம்' வைத்து, "சல்யூட்' அடிக்கும் தலைவரால் நியாயம், நீதி நிலைநாட்டப்படுவது சாத்தியமானதல்ல.
இன்று ஜனாதிபதித் தேர்லில் நிற்கும் பெரும்பான்மை யினரின் இரண்டு பிரதான கட்சிகளினதும் இரு வேட்பாளர் களுமே இந்த நேர்மைத் திறத்துக்குள் தேறுபவர்கள் போல நமக்குத் தோற்றவில்லை.
http://www.uthayan.com/editor.html
" "


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
![[Image: 05110403.gif]](http://www.uthayan.com/images/news/05110403.gif)