10-04-2005, 08:38 PM
ஜே.வி.பி உறுப்பினரான வீரவங்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரும் விசேட மனுவொன்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரச சார்பற்ற அமைப்பொன்றின் இயக்குனரான கலாநிதி குமார் ரூபசிங்க இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியும் சட்டமா அதிபரும் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். 1987 முதல் 92ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியோடு இணைந்த தேஷபிரேமி மக்கள் அமைப்பு மற்றும் தேஷபிரேமி ஆயுதப் படையணியில் ஒன்றிணைந்த கட்டளைத் தலைமையகம் எனும் பெயர்களில்; 6557 மனித படுகொலைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் அரச ஊழியர்கள் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கவாதிகள் பேராசிரியர்கள் பாடசாலை அதிபர்கள் தோட்டத் துரைமார்கள் புத்தி ஜீவிகள் என பலதரப்பட்டவர்கள் இந்த அமைப்பினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஜனாதிபதியின் கணவரான விஜய குமாரதுங்கவை கொலை செய்ததும் மக்கள் விடுதலை முன்னணியின் துப்பாக்கிதாரிகளே என குறிப்பிடப்பட்டுள்ள அந்த மனுவில் அரசாங்க சொத்துக்களான 613 பஸ் வண்டிகள் 16 பஸ் டிப்போக்கள் 16 ரயில்கள் 24 ரயில் நிலையங்கள் என்பனவற்றை தீ வைத்துக் கொளுத்தியுள்ளதாகவும் 294 கிராம சேவையாளர் அலுவலகங்கள் 73 தேயிலைத் தொழிற்சாலைகள் 79 பிரதேச செயலகங்கள் என்பனவும் அவர்களால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 680 தபால் நிலையங்கள் 103 விவசாய சேவை நிலையங்கள் 8 பாடசாலைகள் 16 கூட்டுறவுச் சங்கங்கள் என்பனவும் மக்கள் விடுதலை முன்னணியினரால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இந்த மனுவில் அந்தக் கட்சியினர் ஜனநாயக நீரோட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாக கூறியுள்ள போதிலும் அவர்களிடமிருந்த ஆயுதங்களை அரசாங்கத்திடம் இன்னமும் கையளிக்கவில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6ம் திகதி மாஹரகமையில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் தேசிய அமைப்பின் கூட்டமொன்றின் போது இலங்கையின் அரச சார்பற்ற அமைப்புகளை தொடர்பாகவும் மனுதாரர்கள் தொடர்பாகவும் அபாயகரமான கருத்துக்கள் வெளியிட்டதாகவும் இந்தக் குழுவினர் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிக்கார துரோகிகள் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தன்னியக்கத் துப்பாக்கிகள் உட்பட அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியினர் அவற்றை அரசாங்கத்திடம் இன்னமும் கையளிக்காததால் அவர்களால் பயங்கர விளைவுகள் ஏற்படலாம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக மஹாரகமை பொலிஸாருக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென மனுவில் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தண்டனைச் சட்டக் கோவை மற்றும் குற்ற வழக்கு விதிமுறைகளுக்கு அமையவும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் விமல் வீரவங்சவிற்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான உத்தரவை பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பிக்குமாறும் இந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
சுட்டது லங்காசிறியிலிருந்து
மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரும் விசேட மனுவொன்று மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரச சார்பற்ற அமைப்பொன்றின் இயக்குனரான கலாநிதி குமார் ரூபசிங்க இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியும் சட்டமா அதிபரும் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். 1987 முதல் 92ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியோடு இணைந்த தேஷபிரேமி மக்கள் அமைப்பு மற்றும் தேஷபிரேமி ஆயுதப் படையணியில் ஒன்றிணைந்த கட்டளைத் தலைமையகம் எனும் பெயர்களில்; 6557 மனித படுகொலைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் அரச ஊழியர்கள் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் தொழிற்சங்கவாதிகள் பேராசிரியர்கள் பாடசாலை அதிபர்கள் தோட்டத் துரைமார்கள் புத்தி ஜீவிகள் என பலதரப்பட்டவர்கள் இந்த அமைப்பினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஜனாதிபதியின் கணவரான விஜய குமாரதுங்கவை கொலை செய்ததும் மக்கள் விடுதலை முன்னணியின் துப்பாக்கிதாரிகளே என குறிப்பிடப்பட்டுள்ள அந்த மனுவில் அரசாங்க சொத்துக்களான 613 பஸ் வண்டிகள் 16 பஸ் டிப்போக்கள் 16 ரயில்கள் 24 ரயில் நிலையங்கள் என்பனவற்றை தீ வைத்துக் கொளுத்தியுள்ளதாகவும் 294 கிராம சேவையாளர் அலுவலகங்கள் 73 தேயிலைத் தொழிற்சாலைகள் 79 பிரதேச செயலகங்கள் என்பனவும் அவர்களால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 680 தபால் நிலையங்கள் 103 விவசாய சேவை நிலையங்கள் 8 பாடசாலைகள் 16 கூட்டுறவுச் சங்கங்கள் என்பனவும் மக்கள் விடுதலை முன்னணியினரால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இந்த மனுவில் அந்தக் கட்சியினர் ஜனநாயக நீரோட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாக கூறியுள்ள போதிலும் அவர்களிடமிருந்த ஆயுதங்களை அரசாங்கத்திடம் இன்னமும் கையளிக்கவில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6ம் திகதி மாஹரகமையில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் தேசிய அமைப்பின் கூட்டமொன்றின் போது இலங்கையின் அரச சார்பற்ற அமைப்புகளை தொடர்பாகவும் மனுதாரர்கள் தொடர்பாகவும் அபாயகரமான கருத்துக்கள் வெளியிட்டதாகவும் இந்தக் குழுவினர் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிக்கார துரோகிகள் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தன்னியக்கத் துப்பாக்கிகள் உட்பட அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியினர் அவற்றை அரசாங்கத்திடம் இன்னமும் கையளிக்காததால் அவர்களால் பயங்கர விளைவுகள் ஏற்படலாம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக மஹாரகமை பொலிஸாருக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென மனுவில் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தண்டனைச் சட்டக் கோவை மற்றும் குற்ற வழக்கு விதிமுறைகளுக்கு அமையவும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் விமல் வீரவங்சவிற்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான உத்தரவை பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பிக்குமாறும் இந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
சுட்டது லங்காசிறியிலிருந்து


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->