Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்
#1
<b>பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்</b>


<img src='http://img74.imageshack.us/img74/5342/pk1a5gz.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img74.imageshack.us/img74/8451/pk1b5nn.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<b>பட்டுக்கோட்டையா? பாட்டுக்கோட்டையா? </b>
-<i>சின்னராசு</i>

துரோணரை நேரிலே கண்டு அவரிடம் பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து அதில் தலை சிறந்தவானாய் விளங்கிய ஏகலைவன் மாதிரி, பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று பாரதிதாசனே வியந்து பாராட்டும் விதம் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதை பறிகொடுத்து அவரிடம் மரியாதை செலுத்தி பழகியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். அதே மாதிரி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் அலாதியான அன்பை செலுத்தி வந்தார்.

கண்ணதாசன் சொந்தமாக படம் தயாரித்தபோது, அப்போது முன்னணியில் இருந்த ஒரு திரைப்பட கவிஞரிடம் தனது படத்திற்கு பாடல் எழுதித்தர கேட்டபோது, அந்த கவிஞர் மிக அலட்சியமாக, 'எனக்கு புதிதாக எழுத நேரமில்லை. இதில் ஏதாவது பாடல் தேறினால் எடுத்துக்கொண்டு போ' என்று பழைய காகிதங்களை தூக்கித் தந்ததாக வேதனையுடன் கண்ணதாசன் கூறினார்.

அதேசமயம் அந்த காலக்கட்டத்தில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை கண்ணதாசன் நேரில் பார்த்து, ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டபோது, அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

அந்த நாளில் தமிழ் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சில திரைப்பட கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்து வந்தார். அந்த ஆசிரியரின் ஏளனத்துக்கு பலியானவர்களில் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர்.

ஒரு சமயம் ஒரு விழாவிற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் வந்திருந்தார்கள். ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்த நேரம், அப்பக்கமாக குறிப்பிட்ட அந்த சினிமா பத்திரிகையின் ஆசிரியர் வரவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திடீரென பாய்ந்து அந்த சினிமா பத்திரிகை ஆசிரியரின் சட்டை கழுத்தை பிடித்துக் கொண்டார். அந்த ஆசிரியர் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி ஏளனமாக அந்த வாரத்தில் தன் பத்திரிகையில் எழுதி இருந்ததை பட்டுக்கோட்டையார் குறிப்பிட்டு, <b>'என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?''</b> என்று கேட்டு உதைக்கப் பொய்விட்டார்.

தனக்காக ஒரு மனிதரிடம் சண்டைக்கு போகிற அளவு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நடந்து கொண்டார் என்றால் அவருக்கு தன் மீதுள்ள மதிப்பு எவ்வளவு என கண்ணதாசன் நெகிழ்ந்து போனார்.

அதனால்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திடீர் மறைவுச் செய்தியை கண்ணதாசனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. <b>'பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக் கோட்டையே சாய்ந்ததம்மா!'</b> என்று கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் மறைவு குறித்து மிக உருக்கமாக பாடினார்.

சுமார் 29 வயதிலேயே காலமாகிவிட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது எழுத்தைப் போலவே உயர்ந்த சுபாவங்களை கொண்ட மனிதராவார். பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.

ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடப்பதை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், <b>'எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்'</b> என்றார்.

பொதுவுடமை லட்சியம் என்றால் வாழ்க்கையில்லாதவர்களை முதலில் கை தூக்கி விடுகின்ற பணிதான் முக்கியமானது. அந்தப் பணியில் நாட்டம் உள்ளவர்கள் சொந்த துன்பங்களை பெரிதுபடுத்தமாட்டார்கள்.

ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.

<b>'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'</b>

இந்த பாடலை கேட்டு மகிழ்ந்து அவரது குழுவினர், <i>'அண்ணே பாட்டு ரொம்ப அருமையா இருக்கு. இந்தப் பாட்ட அப்படியே ஒரு படத்துக்கு குடுங்கண்ணே''</i> என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படியே அந்தப் பாடலை மாடர்ன்ஸ் தியேட்டர் தயாரித்த 'ஆரவல்லி' படத்திற்கு தந்துவிட்டார் பட்டுக்கோட்டையார்.

பட்டுக்கோட்டையார் சிறந்த தத்துவப் பாடல்கள் மட்டுமல்லாமல் நகைச்சுவையான பாடல்களும் எழுதுவதில் வல்லவர். அவரும் அந்த காலத்தில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி பாடல்கள் எழுதுவதுண்டு. ஆனால் அர்த்தம் விளங்குமாறு பாடல்கள் எழுதியதுதான் சிறப்பு!

<b>'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!'</b>


என்று மிக நயமாக பட்டுக்கோட்டை நையாண்டி செய்கிறார். 'நான் வளர்த்த தங்கை' என்ற படத்திலே போலி பக்தர்களை விநயமாகக் கேலி செய்கிறார்.

<b>'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை'</b>

வெறும் கேலி கிண்டல் என்றில்லாமல் ஒரு சிறந்த சிந்தனைவாதியின் சீற்றமும் பட்டுக்கோட்டையார் பாடலிலே காணலாம். 'பாண்டித் தேவன்' என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலில் சில வரியை இங்கே காணலாம்.

<b>'சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
என்ன பண்ணி கிழிச்சீங்க!'</b>

என்று ஆத்திரமாய் கேட்கிறார். அதேமாதிரி 'கண்திறந்தது' என்ற படத்தில் மிக புரட்சிகரமான வரிகளை பட்டுக்கோட்டையார் பாடலாக்கி இருக்கிறார்.

<b>'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...' </b>

என்கிறார் வேதனையுடன். இதே போல் 'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில் தொழிலாளர் மேன்மையை சொல்லுகிற ஒரு அருமையான பாடலை பட்டுக்கோட்டையார் எழுதி இருந்தார்.


<b>'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
எதற்கும் உழைப்பு தேவை!</b>

என்கிறார். 'பாண்டித்தேவன்' என்ற திரைப்படத்தில் இன்றைய நாட்டு நடப்பை சொன்னதுபோல பட்டுக்கோட்டையார் எழுதியுள்ள பாடல் சில வரிகள்.

<b>'நாடு முன்னேற பலர்
நல்ல தொண்டு செய்வதுண்டு
நல்லதை கெடுக்கச் சிலர்
நாச வேலையும் செய்வதுண்டு
ஓடெடுத்தாலும் சிலர்
ஒற்றுமையாய் இருப்பதில்லை - இந்த
உண்மையை தெரிந்தும், நீ
ஒருவரையும் வெறுப்பதில்லை!' </b>

என்கிறார். 'திருடாதே' திரைப்படத்தில் குழந்தைக்கு புத்தி சொல்வது மாதிரி பெரியவர்களுக்கே பொதுவுடமை தத்துவத்தின் சாறு எடுத்து கவிதையாக்கி ஊட்டி இருக்கிறார். அதில் சில வரிகளை பாருங்கள்.

<b>'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற வேலையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது மனம்
கீழும் மேலும் புரளாது</b>


பட்டுக்கோட்டையாரின் சிந்தனை செல்வமான அற்புதமான பாடல்களை குறைந்த காலத்திலேயே நிறைந்தளவு எழுதி இருக்கிறார். .


vikatan


<b>தொடரும்...</b>
Reply
#3
நன்றி வசி. பட்டுக்கோட்டையைப்பற்றி அறிவம் தொடர்ந்து போடுங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
நன்றி வாசி அண்ணா

Reply
#5
நன்றி வசி தகவலுக்கு

Reply
#6
நன்றி வசி ..அந்த பொதுவுடமை சிந்தனையுள்ள கவிஞனை நினைவு கூர்ந்ததுக்கு...

அவருடைய பாடல் வரிகளில் எனக்கு பிடித்ததில் ஒன்று

வேப்பமரத்து உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுது என்று சொல்லிவைப்பார்கள்

இந்த வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வாத்தைகளை

வேடிக்கையாயினும் நம்பிவிடாதே
Reply
#7
<img src='http://img50.imageshack.us/img50/9595/26mayaip15tl.jpg' border='0' alt='user posted image'>
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


<img src='http://img217.imageshack.us/img217/20/pk3a6kq.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களில் பெரியவர்களாகிய நமக்கே அறிவைச் சுடுகிற மாதிரி ஆழ்ந்த கருத்துக்களை அவர் தந்தாலும் அவர் தன்னைவிட சிறியவர்களுக்கு அறிவு புகட்டியது மாதிரியே அடக்கமாக பாடி இருக்கிறார்.

<i>'சின்னப் பயலே சின்னப்பயலே</i>' என்று சிறுவயது பையனை அழைத்துப் பாடுவது போலவும் <i>'தூங்காதே தம்பி தூங்காதே</i>' என்று தம்பிக்கு கூறுவது போலவும் <i>'திருடாதே பாப்பா திருடாதே' </i>என்று குழந்தைகளுக்கு சொல்வது போலவுமே அவர் பெரும்பாலும் அறிவுப் போதனையான பாடல்களை பாடி இருக்கிறார். அவர் சின்னப் பயலே என்று சிறு குழந்தையை அழைத்துப் பாடுவதுபோல தோன்றினாலும் அவர் பாடும் கருத்துக்கள் பெரியவர்களே மன வளர்ச்சியில் சின்னவர்களாய் வாழ்வதைப் பார்த்து பாடுவது போலவே அவர் கருத்துக்கள் அமைந்தன.

<b>தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா - நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா!</b>


இவ்வாறு பாடுகிற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனியுடமை கொடுமைகள் தீர தொண்டுசெய் என சின்னப் பயலிடம்தான் கூறுவாரா? சின்னப் பயலாகிய சிறு குழந்தைக்கு அது புரியுமா? ஆக அறிவில் சிறுவரான பெரியவர்களுக்கே இதை கூறுகிறார்..


-தொடரும்-
Reply
#9
http://astro.temple.edu/~dnavanee/PattuKal.../biography.html
Reply
#10
http://www.tamilnation.org/literature/lyri...????,_????????_ இதோ சில பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் கேளுங்கள் http://www.tamilnation.org/literature/lyri...i/padalkal0.htm
Reply
#11
பட்டுக்கோட்டையின் பாடல்களை அறிய தந்தமைக்கு நன்றி வசி, தொடர்ந்து அறிய தாருங்கள். நல்ல அர்த்தமுள்ள பாடல் வரிகள்.

பாடல் இணைப்புக்கு நன்றி ஸ்டாலின்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
மிக நல்ல பதிவு. பட்டுக்கோட்டையார் கட்டியது பல பாட்டுக் கோட்டைகள்... அறியத் தந்தமைக்கு நன்

.
Reply
#13
http://www.thinakural.com/New%20web%20site...8/Article-2.htm பொதுவுடைமைத் தத்துவங்களை சினிமாவில் வெளிக் கொணர்ந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

கனிவுமதி

கவிஞர் ஒருவர் தன் நண்பரோடு பேருந்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வேகமாக சென்ற வண்டி சிறிது மெதுவாகப் போக ஆரம்பித்தது. ரோட்டை எட்டிப் பார்த்த கவிஞர் "என்ன செங்கொடி தெரிகிறது?" என்று தன் நண்பரிடம் கேட்டார். அதற்கு நண்பரும் ரோட்டை பார்த்துவிட்டு "தண்ணீர் குழாய் பழுது பார்ப்பதற்காகப் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். அதற்காக எச்சரிக்கை செய்யும் முறையில் அபாயக் கொடி போட்டிருக்கிறார்கள்" என்று கவிஞரைப் பார்த்து சொன்னார். அதைக் கேட்ட கவிஞர் "ஓஹோ... ஏற்றத்தாழ்வு எங்குண்டோ அங்கெல்லம் இந்தக் கொடி உயர்ந்து விடும் போலிருக்கிறது" என்று கூறி சிரித்தாராம். ஆனால், கவிஞர் சொன்னது நண்பரை வெகுநேரம் சிந்திக்க வைத்துவிட்டது. ஆம், எவ்வளவு கருத்தாழமான வசனம். இந்தக் கருத்தினை சொன்னவர் வேறுயாருமில்லை நம் நெஞ்சவயலெங்கும் நிறைந்த; நிலைத்த `மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தான்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கத் தமிழ்க் கவிதைகள் இன்றும் நம் முன்னோரின் வாழ்வியல் முறைகளை எண்ணிப் பார்த்து இன்புறத்தக்க கருத்துக் கருவூலங்களாக உள்ளன. நம் நாகரிக வளர்ச்சியின்- சமுதாய அமைப்பின் பல்வேறு பரிணாமங்களை, அகம்- புறம் எனப் பிரித்து அற்புதமான பாடல்களைச் சங்கப் புலவர்கள் யாத்துள்ளனர். அவர்களுள்ளும் நால்வர் குறிப்பிடத்தக்கவர்கள். பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார் மற்றும் கண்ணதாசன். இந்நால்வருள் பாரதியைத் தவிர்த்து மற்ற மூவரும் ஓரளவில் சமகாலச் சந்திப்புக்கு உரியவர்களே.

ஆனாலும், முற்போக்குக் கவிஞன் பாரதியின் தாக்கம் மற்ற மூவரிடமும் உண்டு. `சுப்புரத்தினம்' என்கிற தன் பெயரை `பாரதிதாசன்' என்று மாற்றிக் கொள்ளும் அளவிற்குப் புரட்சிக் கவிஞரிடம் பாரதியின் ஆதிக்கம் இருந்திருக்கிறது. பாரதியைப் பட்டுக்கோட்டையார் நேரில் சந்திக்கும் வாய்ப்பை வரலாறு தரவில்லை. பாரதி 1921 இல் மறைந்தார். பட்டுக்கோட்டையாரோ 1930 ஆம் ஆண்டு தோன்றினார். இருப்பினும், பீடுமிக்க கவிஞர்களை எந்தக் கால இடைவெளிகளும் பிரிப்பதில்லை.

... பாரதிக்கு நிகர் பாரதியே- மண்ணில்

யாரெதிர்த்தாலும் மக்கள்

சீருயர்த்தும் பணியில்...( பாரதிக்கு நிகர்)

இதேபோல் தன் குருவான புரட்சிக் கவி பாரதிதாசனுக்குப் பாமாலை சூட்டவந்த பட்டுக்கோட்டையார்;

...நல்ல குடும்பம் ஒரு

பல்கலைக்கழகம் என்றும்

தெள்ளு தமிழ்க் கவிஞன்

தெளிவுரை சொன்னதுண்டு...

பட்டுக்கோட்டையாரின் திரை உலகப் பிரவேசத்திற்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் செய்த உதவியைப் பார்ப்போம். அதாவது, மாடர்ன் தியேட்டரில் கதை, வசனம், பாடல்கள் ஆகிய பணிகளை ஏற்றுக் கொண்டிருந்த பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தையும் தன்னுடன் அழைத்துச் சென்று பாடல் எழுதப்பழக்கினாராம். அச்சமயம், மாடர்ன் தியேட்டர் நிறுவனத்துடன் பாரதிதாசனுக்கு ஏற்பட்ட பிண க்கின் காரணமாக அதை விட்டு விலகி வெளியேறியபோது, அவருடனே, கல்யாண சுந்தரமும் புறப்படத் தயாரானார். அப்போது பாரதிதாசன் தன் சீடரான பட்டுக்கோட்டையாரைத் தட்டிக் கொடுத்து, "நீ முன்னேற வேண்டியவன், பொறுத்துக் கொண்டு இங்கேயே இரு" என்று அறிவுரை வழங்கினாராம்.

முறையான பள்ளிப் படிப்பு ஏதுமில்லா நிலையில், தஞ்சை தரணியில் பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள செங்கப்படுத்தான் காடு என்ற ஒரு சின்னஞ் சிறிய கிராமத்தில், மிகவும் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் அருணாசலம் பிள்ளை - விசாலாட்சி தம்பதியினருக்கு 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதியன்று கல்யாண சுந்தரம் பிறந்ததார். அவரது தந்தை அருணாசலம் பிள்ளை, சிறந்த நாட்டுப் புறக் கவிஞராகப் புகழ் பெற்றவர். கவிதை எழுதத் தொடங்கிய நிகழ்வுகளைப் பட்டுக்கோட்டையாரே இவ்வாறு நினைவு கூருகிறார்.

"நான் கவிதை எழுத ஆரம்பிக்கு முன் பறவை, மிருக, தாவர இனங்களைக் கண்டு ரசிப்பேன். விளைவதற்ற தரிசு நிலங்களை எனக்குப் பிடிக்காது. அதுபோல் அன்பில்லாத முகங்களையும் அறிவில்லாத செயல்களையும் எனக்குப் பிடிக்காமல் போனதில் வியப்பில்லை என்றே எண்ணுகிறேன்" என்று பாட்டு பிறந்த விதம்' என்ற தான் கட்டுரையில் பட்டுக்கோட்டையார் நினைவு கூருகிறார். இத்தோடு தன் படைப்பிற்காக உந்துதல்களைப் பட்டுக்கோட்டையாரே உரையிட்டு விளக்குகிறார்.

"நான் நன்றாகப் பழகிய என்னுடைய அனுபவவாயிலாகக் கண்ட நண்பர்களின் நடைமுறைகளை ஆதாரமாக வைத்துக் கவிதை எழுதுவேன். அரை வயிற்றுக் கஞ்சி குடித்தாலும், முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு இவற்றை கை விடாமல் வாழ்க்கையில் எதிர் நீச்சலடித்துக் கொண்டு, என்றாவது ஒரு நாள் நாம் எதிர்பார்த்த வாழ்வு கிடைக்கும் என்று எண்ணி, மனங் கொண்டது மாளிகையாக, மரத்தடியே வீடாக வாழும் மக்களைப் பற்றி என் உள்ளம் அதிகமாக ஆராயும் தகுதியை பெற்றிருக்கிறது. அழகிய பூங்காவிலும், பெருங்காடுகளிலும் வயல்வெளிகளிலும் வாழும் பறவையினங்களும் என் மனதைக் கவருவதுண்டு. அவை இரை தேடி வந்து தம் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதைக் கண்டு மெய்மறந்து ரசிப்பேன். அவை கொஞ்சிக் குலவிக் கத்தும் ஒலிகள் தான், எந்த வாத்தியத்தி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)