09-06-2005, 01:07 PM
கிளிநொச்சி மாவட்டம், நாலாம் வாய்க்கால், மருதநகர் பகுதியில் பல்லாயிரம் ஆண்டு காலம் பழமை வாய்ந்த தொல்லியல் சான்றுகள் தமிழீழ அரும்பொருள் காப்பகத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
விசுவநாதன் என்பவரது காணியில் புதிதாக கிணறு வெட்டிக் கொண்டிருக்கும் போது மட்பண்டங்கள் தெரியத் தொடங்கியதை அடுத்து, இவ்விடயத்தை தமிழீழ அரும்பொருள் காப்பகத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து தமிழீழ அரும்பொருள் காப்பக பொறுப்பாளர் திரு. ஆதித்தவர்மன், தொல்லியல் ஆர்வலர் திரு.ந.குணரட்ணம் மற்றும் தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. இளங்குமரன் ஆகியோர் அங்கு விரைந்து காலையில் இருந்து மாலை வரை நடாத்திய ஆய்வில் இருந்து நான்கு கால்களையுடைய கருங்கல் அம்மி, சுடுமண்ணினால் ஆன மட்பாண்டங்கள் சமையல் பாத்திரங்கள் முன்னோர் பாவித்த மணிகள் அணிகலங்கள் என பல பொருட்களை மீட்டனர்.
இவ்வாறு எமது பிரதேசங்கள் எங்கும் தொல்பொருள் சான்றுகள் உள்ளதால் அவற்றை காணும் மக்கள் தமிழீழ அரும்பொருள் காப்பகத்திற்கு அறியத்தருமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
விசுவநாதன் என்பவரது காணியில் புதிதாக கிணறு வெட்டிக் கொண்டிருக்கும் போது மட்பண்டங்கள் தெரியத் தொடங்கியதை அடுத்து, இவ்விடயத்தை தமிழீழ அரும்பொருள் காப்பகத்திற்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து தமிழீழ அரும்பொருள் காப்பக பொறுப்பாளர் திரு. ஆதித்தவர்மன், தொல்லியல் ஆர்வலர் திரு.ந.குணரட்ணம் மற்றும் தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. இளங்குமரன் ஆகியோர் அங்கு விரைந்து காலையில் இருந்து மாலை வரை நடாத்திய ஆய்வில் இருந்து நான்கு கால்களையுடைய கருங்கல் அம்மி, சுடுமண்ணினால் ஆன மட்பாண்டங்கள் சமையல் பாத்திரங்கள் முன்னோர் பாவித்த மணிகள் அணிகலங்கள் என பல பொருட்களை மீட்டனர்.
இவ்வாறு எமது பிரதேசங்கள் எங்கும் தொல்பொருள் சான்றுகள் உள்ளதால் அவற்றை காணும் மக்கள் தமிழீழ அரும்பொருள் காப்பகத்திற்கு அறியத்தருமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............


hock: