08-31-2005, 11:37 AM
அநுராதபுரியின் புனித வெள்ளரசு மரம் மக்கள் தரிசனத்துக்கு
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132559bodhi203e.jpg' border='0' alt='user posted image'>
<b>புனித வெள்ளரசு மரம்</b>
இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரச மரத்தைப் பார்ப்பதற்காகப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, கடந்த ஒரு வாரகாலமாக மக்கள் வெள்ளம் அங்கு அலைமோதுகின்றது.
எண்பது வருடங்களுக்குப் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நாடெங்கிலும் இருந்து பௌத்தர்கள் அநுராதபுரத்திற்குப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
எங்கு நோக்கினும் வெண்ணிற ஆடையணிந்த பக்தர்களே அதிகமாகக் காணப்பட்டனர்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132545bodhi203d.jpg' border='0' alt='user posted image'>
<b>வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் </b>
புனித வெள்ளரசுமரம் அமைந்துள்ள புனிதநகரப் பிரதேசத்தில் சுமார் 4, 5 கிலோ மீற்றர் தொலைவிற்கு வளைந்து நெளிந்து நிற்கும் நீண்ட கியூ வரிசையில் மக்கள் காத்திருக்கின்றார்கள்.
தங்க முலாம் பூசப்பட்ட வேலியின் அடைப்புக்குள் புனிதமாக வைக்கப்பட்டுள்ள வெள்ளரசு மரத்தினைப் பார்ப்பதற்கு அதன் புனிதத்துவம் கருதி எவருக்கும் இலகுவில் அனுமதி வழங்கப்படமாட்டாது.
இராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் மாத்திரமே தரிசித்த இந்தப் புனித வெள்ளரசு 3 ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதீசன் என்ற மன்னன் அநுராதபுரத்தை ஆண்ட காலத்தில் இந்தியாவை ஆண்ட அசோகச் சக்கரவர்த்தியின் மகளாகிய சங்கமித்தை என்னும் பிக்குனியினால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது வரலாறு.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132535bodhi203c.jpg' border='0' alt='user posted image'>
<b>காணிக்கை வைத்து வழிபடுகிறார்கள்</b>
விசேடமாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மேடைகளில் ஏறிச்சென்று பக்தர்கள் புனித வெள்ளரசைப் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
தங்க சரிகை வேலைப்பாடு கொண்ட பட்டும், மஞ்சள் அங்கியும் போர்த்தப்பட்ட அரச மரக்கிளையை விசேடமாக நிறுத்தப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் கையிலேந்தியிருக்கும் மலரினால் சுட்டிக்காட்ட, மலர்களையும் காணிக்கையையும் செலுத்தி பக்தர்கள் அதனை வணங்கிச் செல்கின்றார்கள்.
கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பத்து மணித்தியாலங்களுக்கு மேலாக பக்தர்கள் புனித தரிசனத்திற்காகக் வரிசையில் காத்திருக்கின்றார்கள்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132514bodhi203a.jpg' border='0' alt='user posted image'>
<b>தங்க முலாம் பூசப்பட்ட வேலிகள்</b>
அநுராதபுரம் புனித வெள்ளரசு மரக்கிளையுள்ள பகுதியின் தலைமை பிக்குவாக இருப்பவர் அட்டமஸ்தானாதிபதி ஆச்சார்ய பள்ளேகல சிறிநிவாச நாயக்க தேரர்.
அவர் இந்த ஒருவார கால நிகழ்வு பற்றி கூறுகையில், புனித போதிமரத்தைப் பல வருடங்களுக்குப் பின்னர் பொதுமக்கள் தரிசிப்பதற்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; மன்னன் தேவநம்பியதீசன் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தப் புனித அரசமரக்கிளையானது வெண்ணிறக் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் வெண்ணுடை தரித்த மக்கள் திரண்டு நின்று வணங்க, ஊர்வலமாக இங்கு கொண்டு வரப்பட்டது; அதேபோன்றதொரு காட்சியை இப்போது நாங்கள் காணக்கூடியதாக உள்ளது; இந்தப் புனித வெள்ளரசைப் பொதுமக்கள் தரிசித்ததன் மூலம் நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் நாட்டில் அமைதியும் கிட்டும் என்று நம்புகிறோம் என கூறினார்.
வாழ்க்கையில் அரிதாகக் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள் சிலர் புனித வெள்ளரசைத் தரிசிப்பதற்கு கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை ஒரு பெரும் பேறாக கருதுவதாகவும், நீண்ட காலத்திற்குப் பின்னர் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பம் உண்மையிலேயே நன்மையானது என்றும், இத்தகைய சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறினர்.
BBC தமிழ்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132559bodhi203e.jpg' border='0' alt='user posted image'>
<b>புனித வெள்ளரசு மரம்</b>
இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரச மரத்தைப் பார்ப்பதற்காகப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, கடந்த ஒரு வாரகாலமாக மக்கள் வெள்ளம் அங்கு அலைமோதுகின்றது.
எண்பது வருடங்களுக்குப் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நாடெங்கிலும் இருந்து பௌத்தர்கள் அநுராதபுரத்திற்குப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
எங்கு நோக்கினும் வெண்ணிற ஆடையணிந்த பக்தர்களே அதிகமாகக் காணப்பட்டனர்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132545bodhi203d.jpg' border='0' alt='user posted image'>
<b>வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் </b>
புனித வெள்ளரசுமரம் அமைந்துள்ள புனிதநகரப் பிரதேசத்தில் சுமார் 4, 5 கிலோ மீற்றர் தொலைவிற்கு வளைந்து நெளிந்து நிற்கும் நீண்ட கியூ வரிசையில் மக்கள் காத்திருக்கின்றார்கள்.
தங்க முலாம் பூசப்பட்ட வேலியின் அடைப்புக்குள் புனிதமாக வைக்கப்பட்டுள்ள வெள்ளரசு மரத்தினைப் பார்ப்பதற்கு அதன் புனிதத்துவம் கருதி எவருக்கும் இலகுவில் அனுமதி வழங்கப்படமாட்டாது.
இராஜதந்திரிகள், முக்கியஸ்தர்கள் மாத்திரமே தரிசித்த இந்தப் புனித வெள்ளரசு 3 ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதீசன் என்ற மன்னன் அநுராதபுரத்தை ஆண்ட காலத்தில் இந்தியாவை ஆண்ட அசோகச் சக்கரவர்த்தியின் மகளாகிய சங்கமித்தை என்னும் பிக்குனியினால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது வரலாறு.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132535bodhi203c.jpg' border='0' alt='user posted image'>
<b>காணிக்கை வைத்து வழிபடுகிறார்கள்</b>
விசேடமாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு மேடைகளில் ஏறிச்சென்று பக்தர்கள் புனித வெள்ளரசைப் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
தங்க சரிகை வேலைப்பாடு கொண்ட பட்டும், மஞ்சள் அங்கியும் போர்த்தப்பட்ட அரச மரக்கிளையை விசேடமாக நிறுத்தப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் கையிலேந்தியிருக்கும் மலரினால் சுட்டிக்காட்ட, மலர்களையும் காணிக்கையையும் செலுத்தி பக்தர்கள் அதனை வணங்கிச் செல்கின்றார்கள்.
கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் பத்து மணித்தியாலங்களுக்கு மேலாக பக்தர்கள் புனித தரிசனத்திற்காகக் வரிசையில் காத்திருக்கின்றார்கள்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050830132514bodhi203a.jpg' border='0' alt='user posted image'>
<b>தங்க முலாம் பூசப்பட்ட வேலிகள்</b>
அநுராதபுரம் புனித வெள்ளரசு மரக்கிளையுள்ள பகுதியின் தலைமை பிக்குவாக இருப்பவர் அட்டமஸ்தானாதிபதி ஆச்சார்ய பள்ளேகல சிறிநிவாச நாயக்க தேரர்.
அவர் இந்த ஒருவார கால நிகழ்வு பற்றி கூறுகையில், புனித போதிமரத்தைப் பல வருடங்களுக்குப் பின்னர் பொதுமக்கள் தரிசிப்பதற்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; மன்னன் தேவநம்பியதீசன் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தப் புனித அரசமரக்கிளையானது வெண்ணிறக் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் வெண்ணுடை தரித்த மக்கள் திரண்டு நின்று வணங்க, ஊர்வலமாக இங்கு கொண்டு வரப்பட்டது; அதேபோன்றதொரு காட்சியை இப்போது நாங்கள் காணக்கூடியதாக உள்ளது; இந்தப் புனித வெள்ளரசைப் பொதுமக்கள் தரிசித்ததன் மூலம் நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் நாட்டில் அமைதியும் கிட்டும் என்று நம்புகிறோம் என கூறினார்.
வாழ்க்கையில் அரிதாகக் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பம் குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள் சிலர் புனித வெள்ளரசைத் தரிசிப்பதற்கு கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை ஒரு பெரும் பேறாக கருதுவதாகவும், நீண்ட காலத்திற்குப் பின்னர் கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பம் உண்மையிலேயே நன்மையானது என்றும், இத்தகைய சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறினர்.
BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றி மதன் அண்ணா. பெளத்தர்கள் போல் நம் மதத்தினர் அமைதியாக இறைவனை வழிபட்டதை நான் கண்டதேயில்லை. அவர்களின் இறை பக்தியை பார்த்தாலே ஆசையாக இருக்கும்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->