Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசியக்காரி.... பகுதி-3
#1
[b][size=24]வசியக்காரி.... பகுதி-3

மல்லிகைமேனி
முல்லை ரணி...
நீ
மலர்வாசம்..!
உன்னுள்த்தான் என்
மனவாசம்...!

©க்கள்
பொறாமைப் படுகிறது
வண்டுகள்
உன்னைத்தேடி வருவதனால்..!

தங்கத்தடாகத்தில்
©த்த கமலா....!
அல்லி உந்தன் அன்னை
மல்லி உந்தன் தங்கை
முல்லை உந்தன் மாமி
றோஜா...
செவ்வந்தியெல்லம்
உனக்கு...
சித்தியும் பெரியம்மாவும்...!


இருள்
பயந்தோடி பதுங்குகிறது
உன்
கூந்தல் என்ற...
இருண்ட தேசத்தைக்கண்டு...!


உன் கொலுசுகள்
பாதத்தை தழுவும்...
ஏதாவது
திருவிழா என்னால்த்தான்
அப்போதெல்லாம்
என் காதுகளுக்கு...
திருவிழா அல்ல
பெருவிழா...!


நீ
சேலைகட்டி சாலையில்
நடந்துசெல்கிறாய்
கொலுசும்...
பாதத்தில் தாளம்தட்டி
பாடிக்கொண்டு செல்கிறது
தீப்பிடித்து எரிகிறது
என் இதயம்...!


காதுகளுக்கு
விருந்துபடைக்கும்
வேணுகானமே...
நீ
பேசினால் ©பாளம்
சிரித்தால் சிவரஞ்சினி
பாடினால் மோகனம்...!


என் மனதுக்குள்
மிருதங்கச்சத்தம்
அப்போது நீ...
நடந்துசெல்லும் நேரம்...!
என் இதயத்தில்
ஜலதங்கச்சத்தம்
அப்போது நீ...
நடனமாடும் நேரம்...!

ஒருதடவையல்ல
ஒன்றுக்குப் பலதடவை
உன் அசைவுகளையும்
நெழிவுகளையும்
ஆலாபனை செய்துகொண்டே
ஒவ்வொரு வினாடியும்
நகர்கிறது...!


அலைகள்
எப்போது ஓய்ந்தது..?
உன்
நினைவுகள்
எப்போது அழிந்தது..?


மனசு
தவிக்கிறது
நுரையீரல்
புகைக்கிறது
உள்ளுக்குள்
ஏதோ ஒன்று
கொடிய முள்ளாய்
குத்திக்கொண்டிருக்க
உணர்வையெல்லாம்
கவிதையாக
வெளியேற்றவென்று
எழுதத்தொடங்கினேன்....
உன்
பெயரை மட்டும்...!
இதைவிட
நல்ல கவிதையெழுத...
என்னால் முடியவில்லை...!


மொழிவடிவில் சொல்லமுடியாது
என் உணர்வுகளை...!
அதற்கு அத்தகைய
சக்தி இல்லையே என்று
மிகவும் வருந்துகிறேன்
பிறகு...
எப்படி சொல்வது
நான்
உன்னைப்பற்றி
சிந்திப்பதை....?
அதையும்...
சிந்தித்துக்கொண்டே
இருக்கிறேன்...!!!


நல்லவேளை நீ
இராமாயாண காலத்தில்
பிறக்கவில்லை...!
இல்லையேல்...
இதிகாசத்தில் ஒன்று
இல்லாமலே போயிருக்கும்...!
இராவணன்
சீதைக்குப் பதிலாய்
உன்னைத்தான்
கடத்திச் சென்றிருப்பான்...!


சக்தியில்லையேல்
சிவமில்லை
ஆண்பாதி
பெண்பாதி என்றெல்லாம்
ஏதேதோ சொல்கிறார்கள்..!
ஆனால்...
நானும் நீயும்
அப்படியல்ல...
உன் சிரிப்புக்கு
சதவீதம் அதிகம்...!
நான் கால்ப்பாதிதான்...!!!


நான் உன்னிடம்
தோற்றுவிட்டேன்...!
தோல்வியை
ஒப்புக்கொள்கிறேன்..!
வா.......
வந்து என்னை
கைதுசெய்து உந்தன்
மனக்கூண்டில் அடைத்துவிடு...!
.........................................


(இன்னும் வரும்...)

த.சரீஷ்
01.11.2003 (பாரீஸ்)
sharish
Reply
#2
வாழ்க உங்கள் கவி ஆற்றல்
Reply
#3
வாலிக்குப்போட்டியாய்
வார்த்தைகள் கோர்க்கின்றீர்கள்
வாழ்த்துக்கள்

புதியதோர் இலக்கியம் படைக்கப்புறப்பட்டிருக்கும் உங்களிற்கு எமது வாழ்த்துக்கள் என்றும் உண்டாகும்

Quote:நல்லவேளை நீ
இராமாயாண காலத்தில்
பிறக்கவில்லை...!
இல்லையேல்...
இதிகாசத்தில் ஒன்று
இல்லாமலே போயிருக்கும்...!
இராவணன்
சீதைக்குப் பதிலாய்
உன்னைத்தான்
கடத்திச் சென்றிருப்பான்...!
[b] ?
Reply
#4
நல்லதொரு கற்பனை .


நல்லவேளை நீ
இராமாயாண காலத்தில்
பிறக்கவில்லை...!
இல்லையேல்...
இதிகாசத்தில் ஒன்று
இல்லாமலே போயிருக்கும்...!
இராவணன்
சீதைக்குப் பதிலாய்
உன்னைத்தான்
கடத்திச் சென்றிருப்பான்...!


த.சரீஷ்
01.11.2003 (பாரீஸ்)[/quote]
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)