Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நூல் அறிமுகம்
#1
நூல் அறிமுகம் - ஒரு ஒன்றுகூடல்
12.10.2003


<b>ஊடறு : </b>

2002 இல் வெளிவந்த தொகுப்பு. பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்,
கட்டுரை கவிதை சிறுகதை விமர்சனம் ஓவியம் என தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
<b>தொகுப்பாளர்கள் : றஞ்சி(சுவிஸ்), தேவா(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), நிருபா(ஜேர்மனி) </b>


<b>மட்டக்களப்புத் தமிழகம் :</b>

பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்களால் 1964 இல் எழுதப்பட்டு வெளிவந்த இந் நூல் இப்போ எக்ஸில் வெளியீடாக இரண்டாம் பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் தனித்தன்மையை பண்பாடு, கலை வடிவங்கள், கவி மற்றும் நாட்டுப்பாடல்கள், பேச்சுவழக்குகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கை சார்ந்த விடயங்கள்... என பல தளங்களிலும் பேசும் நூலாக -அதாவது ஓர் ஆய்வுநூலாக- எழுதப்பட்டுள்ளது.

இவ் இரு நூல்களும் அறிமுகம் செய்யப்பட்டு அவை தொடர்பானதும் தொடர்பாகவுமான திறந்த கலந்துரையாடலாக இவ் ஒன்றுகூடல் அமைவுறும்.

அத்தோடு அரசியல், இலக்கியம், தலித்தியம், பெண்ணியம்... போன்ற விடயங்களில் பேசப்படும் நூல்களாக அண்மையில் வெளிவந்த நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.

இச் சந்தர்ப்பத்தை உங்களுக்கானதாக அமைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் பங்குபற்றல் இதுபோன்ற நிகழ்ச்சிகளை உற்சாகப்படுத்துதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும் என்ற புரிதலுடன்...
இந் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

<b>நிகழ்ச்சி நடைபெறும் இடம் : </b>

VOLKSHAUS
Stauffacherstrasse 60
8004 Zurich
Switzerland

12.10.2003 ஞாயிற்றுக்கிழமை
13.30 இலிருந்து 20.00 வரை

தொடர்புகளுக்கு: ரவி, ranr@bluewin.ch


Reply
#2
தகவலுக்கு நன்றி திரு. இளைஞன் அவர்கட்கு.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#3
நிகழ்ச்சிகள்

<b>தலைமை</b>
கண்ணன் (சுவிஸ்)

<b>அறிமுக உரைகள்</b>
வி.சிவலிங்கம் (லண்டன்)
ஏ.ஜி.யோகராஜா (சுவிஸ்)
செ.சந்திரவதனா (ஜேர்மனி)

<i>தொடர்பாகவும் தொடர்ந்தும்
திறந்த கலந்துரையாடல்</i>

---------------------------------------------------
ஊடறு நூலினை வாசித்தவர்கள், நிச்சயமாக உங்கள் விமர்சனங்களை இங்கே வைக்கவும்.


Reply
#4
[url=http://www.geotamil.com/pathivukal/chandraselvakumaran_uudaru.html][b]ஊடறு எனது பார்வையில்..
Nadpudan
Chandravathanaa
Reply
#5
ஊடறு - ஓர் பார்வை
<b>ரதன்</b>

பொதிகை - ஜெகதீசன் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இந்த இதழுக்காக ஒரு தடவை நந்திகேசன் - வாசுகி ஆகியோரைப் பேட்டி எடுத்திருந்தேன். பேட்டியின் முடிவில் நந்திகேசனிடம் அவரது அப்பா பெயரைக் கேட்டேன். பத்தி£¤கையில் பிரசு£¤க்கும் பொழுது போடுவதற்காக .... நந்திகேசன் அது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு எனவே போடவேண்டாம் என்று கூறிவிட்டார். அவர் அமெரிக்கா திரும்பியபின் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதை உறுதிப்படுத்தினார். அப்படியே தான் பேட்டியும் வெளிவந்தது.


பெண்ணியம், பெண்விடுதலை பற்றிய பல்வேறு பார்வைகள் உண்டு. இவற்றிலும் மேலும் பல பி£¤வுகள் உண்டு. இவை பற்றி சுருக்காமாகக் கூறிவிட்டு நு£லுக்கு செல்வது நல்லது. ஏனெனில் இந்த நு£லையும் அவ்வாறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றேன்.


முற்போக்கு:

ஏற்கனவே நடைமுறையில் உள்ள அமைப்புக்குள்ளேயே சமத்துவத்தைக் கொண்டுவரமுடியாது.


தீவிரவாத பெண்ணியம்:

அனைத்து சமூகநிலைகளிலும், புரட்சிகரமற்றதை விரும்பினாலும், பல்வேறுபட்ட ஒடுக்குதல்களையும் முதன்மையாகப் பார்க்கின்றது.


சோஷலிச பெண்ணியம்:

இது பிற வழி ஒடுக்குதலை ஆய்வுசெய்வதுடன், சித்தார்த்தத்துடன் இணைந்து செய்ய முற்படுகிறது.


சமூகப் பெண்ணியம்:

சமுதாய சமத்துவமின்மையுடன், சுரண்டலையும் இணைத்துப் பார்க்கின்றது. முழுமையாக விடுதலை பெற்ற ஒரு சமுதாயத்தை நோக்கி தீவிரமாகக் குரல் கொடுக்கிறது.


பின் நவீனத்துவ பெண்ணியம்:

இது கலாச்சாரத்தில் உள்ள மொழி ஒழுக்கு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறுகிறது.


இங்கு தலித் பெண்ணியம் என்ற மற்றொரு கூறும் உண்டு. அருகில் உள்ள அமெரிக்காவின் கறுப்பு இன பெண்ணியவாதிகள், தங்களை வெள்ளை இன பெண்ணியவாதிகளில் இருந்து பிரித்தே பார்த்தனர். இதற்கான பல காரணங்களை நந்திகேசன், வாசுகி தமது பேட்டியிலும் கூறி இருந்தனர். வெள்ளை இனப் பெண்கள் - வன்புணர்ச்சி எதிர்ப்பு இயக்கம் ஒன்றை நடாத்தியபொழுது, கறுப்பு இனப் பெண்கள், கறுப்பின படுகொலை எதிர்ப்பு இயக்கத்தை நடாத்தினர். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்த Anti-Rype சட்டம் கறுப்பு இன ஆண்களுக்கு எதிராகவே செயல்படுத்தப்பட்டது.


அடுத்ததாக, பொருளாதார, சமூக £¦தியில் வெவ்வேறு தளங்களில் இவ் இரு இனங்களும் உள்ளன.

இந்நிலையில் இன்று மேலும் பல புதிய பெண்ணிய போக்குகளும் உள்ளன.

(1) ஓரின குழுக்கள்

(2) குடும்பம் என்ற அமைப்பை உடைத்தல்

போன்றன.



ஓரின குழுக்கள் பற்றிய சில அவதானிப்புக்கள்

(1) இவர்களுக்குள்ளும், ஒருவர் மற்றொருவரை ஆக்கிரமிக்கும் தன்மை உண்டு.

(2) பல ஆண் ஓரினச் சேர்க்கையாளர், பெண் வெறுப்பாளர்களாக இருக்கின்றனர்.



<b>ஊடறு</b>

நூலின் முன்னுரையில் கூறியதுபோல் முற்றும் முழுதாக பெண்களாலே பதிவு செய்யப்பட்டுள்ள நு£ல் இது.

இந்த நு£லை ஒரு பின் நவீனத்துவ பெண்ணிய தொகுப்பாக காணமுடிகிறது. வழமையான பெண்ணிய வாதத்திலிருந்து விலகி, மொழி, சமூகம், தலித்தியம் என விரிந்துசெல்கின்றது.

இங்கு கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஓவியம் எனப் பல படைப்புக்கள் உள்ளன.

அருந்ததி, வாசுகி, றஞ்சினி ஆகியோரது ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக பக்கம் 59ல் உள்ள வாசுகியின் ஓவியம், பக்கங்கள் 15, 99ல் உள்ள அருந்ததியின் ஓவியங்கள், பல சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றை விட அதிகமாகவே தெரிவிக்கின்றன. இவ்வாறான ஓவியங்களை ஓவியம் தெரிந்த ஒருவரைக் கொண்டு ஆய்வுசெய்வது நல்லது.


<b>சிறுகதைகள்</b>


(1) ஸ்பிரைக்-பாலரஞ்சினி - தோட்டத் தொழிலாளரது வாழ்வியல் பற்றிய சிறப்பான கதை, பொதுவாகவே இவ்வாறான கதைகள், இவ்வாறான தொகுப்பு ஒன்றில் வெளிவருவது அரிது.

(2) ஒரு முற்போக்குவாதி காதலிக்கின்றான் - இது ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தினால் எழுதப்பட்டது. பல தடவைகள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். பல பதிய விடயங்கள், புதிய பிரச்சனைகள் உள்ளன. அவற்றை இவரைப்போன்ற எழுத்தாளர்களால்தான் கொண்டுவர முடியும். பிரதீபா தில்லைநாதன் போன்றவர்களது படைப்புக்களை வாசித்தாலாவது தங்களைத் திருத்திக்கொள்வார்களா?

(3) சத்தமில்லா யுத்தங்கள் - சந்திரவதனா செல்வகுமாரன். இக்கதையும் ஒரு பூட்டிவைக்கும் முயற்சியே. இதுபோன்ற கதைகளை இத்தொகுப்பிலிருந்து தவிர்ப்பது நல்லதே.

(4) பாமா - ஒத்த- பாமா இன்று குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களும் ஒருவர்.


இங்கு பாமாவின் கதை ஏனைய சிறுகதை ஆசி£¤யர்களி (இங்கு வெளிவந்துள்ள) டமிருந்து பிரித்துக் காட்டும் அம்சங்கள்....

(1) தாங்கள் முகமிழந்து, சுயமிழந்தவர்களாக ஆக்கப்படும்பொழுது கூட நம்பிக்கையும், மனஉறுதியும் கொண்டு எதிர்நீச்சல் போடும் தன்மையுள்ளவர்களாகக் காட்டுவது.

(2) குறிப்பாக பெண்களிடம் உள்ள பலம். பலவீனம் இரண்டையும் வெளிப்படுத்தும். பாமா, பலவீனத்தைப் பலமாக மாற்றவேண்டும் என்கிறார். இக்கதையில் வரும் லு£ர்து பாட்டி போல் பலர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பாமாவின் சுருக்கு, சந்ததி போன்ற நு£ல்களில் இவ்வாறான பலரைக் காணலாம்.


நீ எதுக்காக அழுகுறே, இப்படிச் செஞ்சாத்தான் பயல்களுக்கு புத்தி வரும்? லூர்து பாட்டியின் அழுத்தமான சொற்கள்..... மீண்டும், மீண்டும் ஒலிக்கின்றன.


<b>கவிதைகள்</b>


மிகவும் பலவீனமான நிலையில் உள்ள படைப்புக்கள் என்றே கூறலாம். (மாலதி மைத்ரி, ஆழியான் ஆகியோரது கவிதைகள் தவிர்ந்த)

<b>சாமதியின் கவிதை</b>

<b>பக்கம் 36-37</b>

பாமதிக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. அதை அவர் பாமா போல் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லலாம். எத்தனை நாளைக்கு, இவ்வாறு அழுது புலம்பிக்கொண்டிருப்பது. இன்று பெண்கள் அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார்கள். இனிமேலாவது அழுது புலம்புவதை விட்டு விட்டு எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்று பாமதிகளைக் கற்றுக்கொள்வாரா?


<b>பக்கம் 92 - ஆழியான் கவிதை</b>


நீயும் நானும்

வரையறைகளை கடக்க வேண்டும் - நான்

உன் விவேகத்தோடும்

நீ என் வீ£¤யத்தோடும்

கடக்க வேண்டும்

எனினும்

என் கருவறையை

நிறைப்பது உன் குறியல்ல

என்று புரிதலோடு

வா

ஒன்றாய் கட்டுவோம்

நீ என் விவேகத்தோடும்

நான் உன் வீ£¤யத்தோடும்..... என்று


ஆழியான் அழைப்பு விடுவது குறிப்பிடத்தக்கது.


பாலரஞ்சினி


என் சுதந்திரம்

என் முடிவுகள்

என் ஆசைகள்

என் கையில்

இப்போதும்

எப்போதும்

என்று கூறும் தன்னம்பிக்கை

கலாச்சாரம்

அந்நியம் ஆக்குவோம்

அந்நியத்தை ஆள்வோம்


என்கிறார் கோசல்யா.

இவை பெண்களை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லும் முயற்சிகள்.


<b>கட்டுரைகள்</b>


இந்த நூலின் மிகப்பொ¤ய வெற்றி கட்டுரைகளே.

(1) பெண்கள் சில வெளியீடுகள் - சில பகிர்தல்கள் றஞ்சியின் கட்டுரை பல பெண்ணியப் படைப்பாளிகளின் பல்வேறு தளங்களைக் காட்டி நிற்கின்றன.

(2) அந்த எரிந்த இதயம் - ஆப்கான் போராளியின் புலம் பெயர் கவிதைகள். ஓர் சிறந்த கட்டுரை - ஆப்பான் அகதியின் அவலந்தான் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

(3) யுத்தம் எதற்காக - அருந்ததி ராயின் கட்டுரை. Out look ல் முன்பும் வாசித்துள்ளேன். பெண்ணியத்தைவிட்டு விலகிச் சென்றாள் படைப்பு. எனினும் ஒரு சிறந்த பெண் விமர்சகராகக் காட்டிச் செல்கிறது.

(4) Pornography இன்பமும், அபாயமும் இவ்விரண்டு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் பாலியல் £¦தியான பெண்ணிய பாகுபாடுகளை சிறப்பாகக் கூறுகின்றன.

(5) பாரம்பரியமற்ற தொழில்களில் பெண்கள் இக்கட்டுரை மேலோட்டமாக உள்ளது. பல பி£¤வுகளை மட்டும் காட்டிச் செல்கிறது. அதன் கூறுகள் ஆராயப்படவில்லை.


(6) அடுத்து புனித விழா - நிரூபாவின் கட்டுரை குறிப்பிடத்தக்கது. இது போன்ற புனித விழாக்கள் தவிர்க்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல. இவை சட்டா¦தியாக தடுக்கப்பட வேண்டும். மாயா என்னும் திரைப்படம். இதன் உச்சக் கட்ட அவலங்களைச் சொல்லி நிற்கிறது!. ஒரு தடவை இக்கட்டுரையை வாசிப்பதுடன், இச் சடங்கை அடியோடு நிறுத்த ஆவண செய்யுங்கள்.


(7) அடுத்ததாக இலக்கியம் ஃ மொழி பற்றிய இரண்டு கட்டுரைகள். தலித்தியமும், தமிழ் இலக்கியமும், மொழியும் ஆண் வழிச் சமூக அமைப்பும் மிகவும் முக்கியமான மற்றொரு கட்டுரை. மொழியில் உருவாக்கத்தில் பெண்கள் பற்றிய சிறப்பான பார்வை ஒன்று இது.

கற்பு - போன்ற சொற்கள் சமூகத்திலிருந்து மட்டுமல்லாமல் அகராதியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்.


(8) இறுதியாக - விஐ¤யின் நூல் விமர்சனக் கட்டுரை குறுக்கு வெட்டு - சிவகாமி எழுதியுள்ள இந்த நாவலை Metro / Markham Library ல் இரவல் வாங்கி இரு தடவைக்கு மேல் வாசித்துள்ளேன். குடும்பம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சிவகாமி குடும்பம் என்ற அமைப்பு பற்றி இவ்வாறு குரல் கொடுக்கிறார்.

குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், குடும்பத்துக்கு மாற்று என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் உபமானம் இதற்கும் சான்று. "நடுவீட்டில் மலமிருந்தால் துடைத்தெறி என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்று கேட்கிறீர்கள்" என்கிறார்.

Jamica போன்ற இடங்களில் பெண்ணும், பிள்ளைகளும் குடும்பமாகக் கருதப்படுகிறார்கள். இங்கு பிள்ளையைக் கொடுத்துவிட்டு ஆண்கள் பிள்ளை வளர்த்ததிலிருந்து தப்பி விடுகிறார்கள்.

சமூகம் அல்லது அரசு பிள்ளையை வளர்க்க வேண்டும் என்று கருத்தும் உண்டு. ஆனால் விஐ¤ சிவகாமியின் நு£லை பல்வேறு தளங்களிலிருந்து சிறப்பாகப் பார்த்துள்ளார். நு£லின் பலவீனங்களையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

குடும்பத்துக்கு வெளியே உள்ள ஆண், பெண் உறவுகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் சிவகாமி.

நிச்சயமாக ஒரு தடவை அனைவரும் படிக்கவேண்டிய நாவலிது.

குடும்பம் என்ற அமைப்பு உடைக்கப்படும் பொழுது ஆணைத் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது.


<b>ஊடறு</b>

(1) மறு உற்பத்தியில் பெண்களுக்கு சுதந்திரமளிக்கப்பட வேண்டும். அது பெண்களின் உரிமை.

(2) தொழில் ரீதியான வேறுபாடுகள் கலைக்கப்படவேண்டும்.

(3) மொழி கலாச்சார £¦தியாக அவலங்கள் மாற்றங்கள் வேண்டும்.

(4) சமூகத்துக்குள் ஆணும், பெண்ணும் சமமான அங்கமாக கருதப்பட வேண்டும்.

என்ற கருத்துக்களை நிலை நிறுத்துகிறது. இறுதியாக Woman Kardok என்ற கவியின் ஓர் கவிதை


இருளின் படையை அழித்துவிட்டு

வானையும், நிலவையும் நட்சத்திரங்களையும் தேடு

வெளிச்சம் உனக்குள் உள்ளது

வெளிச்சம் உனக்கும் உள்ளது

நாளை சூரியன் நீயே.


{இக்கட்டுரை November 16, 2002, Scarborough Civic Ctr. அரங்கில் நடைபெற்ற ஊடறு விமர்சன அரங்கில் ரதனால் வாசிக்கப்பட்டது.}


****
raathan@pathcom.com
****

நன்றி: திண்ணை


Reply
#6
பெண்படைப்பாளிகளின் தொகுப்பு - ஊடறு பற்றி...
<b>கோசல்யா சொர்ணலிங்கம் (ஜெர்மனி)</b>


ஜரோப்பாவில் மட்டுமல்லாது உலகளாவிய பார்வையில் இன்று பெண்ணியம் பேசப்பட்டு வருகின்றது. பெண்ணியம் சம்பந்தமாக அமைப்புகள் மகளிர் அமைப்புகள், ஊடகங்கள் மூலமாகவும் தத்தமது கருத்துக்களை தொ¤விக்கின்றார்கள். பேசுகிறார்கள். ஒரு பத்தி£¤கையில், சஞ்சிகையில் இன்னும் வானொலியில் தொலைக்காட்சியில் பெண்கள் பக்கமிது, மகளிர் மட்டும் என்று நேரம் ஒதுக்கி விட்டு அதற்கென முக்கியம் தராது இறுதிப்பக்கத்தில் ஓர் மூலையிலும் நேரங்கெட்ட நேரங்களிலும் பிரசு£¤த்து ஒலிபரப்புவது பெண்ணியத்தில் பெண்களின் பிரச்சினைகளில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லையே.

அந்த வகையில் ஊடறுவை நான் கையில் எடுத்தபோது எனக்கு மிகவும் வித்தியாசமாகத் தொ¤ந்தது. அண்மையில் முற்றிலும் பெண் படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தாங்கி வெளிவந்தது ஊடறு. இந் நு£லை கையில் எடுத்தபோது புனித உணர்வேற்பட்டது. கனதியாகவும் பெண்களின் விழிப்புணர்வையும் ஊடறு உரிமைகோரி நிற்கிறது. பொருத்தமானதொரு அட்டைப்படத்துடன் ஏறக்குறைய முப்பதுற்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புகளாக, கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் நு£ல் விமர்சனங்கள் என ஊடறு உரைத்து நிற்கிறது பெண்ணியத்தை என்றால் அது மிகையாகாது.

ஊடறுவை கொண்டு வருவதற்கு பொறுப்பாக இருந்தவர்கள் றஞ்சி(சுவிஸ்), தேவா(ஜெர்மனி), விஐ¤(பிரான்ஸ்), நிருபா(«ஐர்மனி) ஆகியோராவார். இவர்கள் ஜரோப்பிய நாடுகளில் வாழும் பெண்கள். பெண்ணியத்தில், பெண்கள் பிரச்சினைகளில் அக்கறை கொண்டவர்கள். ஜரோப்பிய ஆசிய நாடுகளில் வாழும் பெண் படைப்பாளிகளின் ஆக்கங்களைத் திரட்டி ஊடறுவை ஊடறுப்பாக்கியுள்ளனர். பெண்களின் உணர்வை இலக்கியங்களை அறியாமையை விழிப்புறச் செய்யும் நோக்கத்துடன் ஊடறுக்கப்பட்டுள்ளது ஊடறு என்றால் அது மிகையாகாது.

எல்லாவகையிலும் எந்த வடிவத்திலும் படைப்பிலக்கியங்கள் வந்தபோதும், பெண்கள் நிலை எடுத்துப் பேசி உலக அரங்கில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. போர்க்கால சூழலில் பெண்ணை மானபங்கப்படுத்துவதன் மூலம் அந்நாட்டின் சுதந்திர வேட்கையை அந்தரமாக்கலாம், நலிவுறச் செய்யலாம் என்ற வக்கிரத்தை உண்மையாகவே ஊடறு கண்டிக்கிறது. ஒட்டுமொத்தமாக பெண்களின் மீதான சமூக அநீதிகளை அம்பலப்படுத்தியும் நாங்கள் புத்திஐ¦விகள் பெண்கள் எங்களிடம்தான் புத்திபெற வேண்டியவர்கள் ஆண்களாகிய நாங்கள் பெண்களின் வழிகாட்டிகள் என்றதான ஆதிக்க உணர்வை கேள்வியாக்கி ஊடறுத்தும் உரைசூட்டியும் உள்ளது ஊடறு.

கவிதைக்கு என்ன இடம் சிறுகதைக்குரிய இடம் எது? கட்டுரைக்கான இடமேது? ஓவியத்திற்கான பாகமேது? எதை எங்கெங்கு இணைக்கலாம் என்பதை அறிந்து அதற்கான தரங்கொடுத்து படைப்பாளிக்கு உற்சாகம் கொடுத்துள்ளனர்.

இடமில்லா இடத்தின் ஓர் மூலையில் கவிதையைச் செருகியும் கதை நீண்டுள்ளது என்பதற்காகவே சொற்களைத் துண்டாக்கி சுருக்கியும் அர்த்தம் வேறுபட ஆளுமை கொள்வது போன்ற தவறுகள் ஊடறுவில் காணமுடியாது. கட்டுரைகள் மொழியாக்கம்பெற்றும் கனதியான மொழிநடையில் இருப்பதைக் காணலாம். இளைய தலைமுறையினரிடம் ஊடறவை கையளிக்க வேண்டும் என்பது என் கருத்து. நூலினுள் சில இடங்களில் (மிக அரிதாகவே) எழுத்துப்பிழைகள் இருக்கவே செய்கின்றன. கவிதைகள் நீண்டதாகவும் சொன்னதையே திருப்பிச் சொல்வது போன்றும் சுருதியற்றும் இருக்கின்றது. மல்லிகாவனே¢ வெட்கம், அனாரின் நான் நானாக மட்டும், கலைமகளின் பால்யம், நளானியின் எனக்கான தேடலில், பாமதியின் தலைப்பில்லாத கவிதை, ªஐயந்தியின் தேடல்வலி, வாசுகியின் உ£¤மைகளின் கருவானவள் போன்ற கவிதைகள் சிந்திக்க வைக்கிறது. மிகச் சாதாராண விடயங்கள் என்று நாம் கருதினாலும் சிந்திக்கத்தக்க வகையில் இக் கவிதைகள் அமைந்துள்ளன. நிருபா புனிதவிழா பற்றி -தன்னையே முன்வைத்து யதார்த்தமாக பூப்புனித நீராட்டுவிழா பற்றி- அற்புதமாக எழுதியுள்ளார். சிறுகதைகளாக சந்திரவதனாவின் சத்தமில்லா யுத்தம், பாமாவின் ஒத்த ஆகிய கதைகளை குறிப்பிட்டுக் கூறலாம். ரா«ஐஸ்வா¤யின் முற்போக்குவாதி காதலிக்கிறான் என்ற சிறுகதை சாதாரணமாகவே உள்ளது.


அதைவிட தங்களின் து££¤கை மூலமாக ஓவியங்களை வரைந்துள்ளனர் அருந்ததி, வாசுகி, றஞ்சினி(பிராங்போர்ட்) ஆகியோ£¤ன் ஓவியங்கள் அனைவா¤னதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் பெண்களின் வெளியீடுகளை விமர்சனம் செய்துள்ளார் றஞ்சி. அந்த வகையில் ஆழியாளின் உரத்துப்பேச, சல்மாவின் ஒருமாலையும் இன்னொருமாலையும், பாலரஞ்சனிசர்மாவின் மனசின் பிடிக்குள், சூ£¤யா பெண்கள் அமைப்பின் வெளிப்படுதல், கோசல்யாவின் கோசல்யா கவிதைகள் இரண்டாம் பாகம் ஆகிய பெண்படைப்புக்களை ஊடறு ஊள்வாங்கியுள்ளது. எனவே இப்படி பல ஊடறுக்கள் பெண்கள் மத்தியில் வெளிவரவேண்டும் என்பது என் வேண்டுகோளாகும்.


(பிரான்ஸிலிருந்து ஒலிபரப்பாகும் ஏபிசி தமிழ்ஒலி வானொலியில் பெண்ணின் குரல் நிகழ்ச்சியில் ஊடறு பற்றிய எனது இவ் விமர்சனம் ஒலிபரப்பட்டது. -கோசல்யா சொர்ணலிங்கம்)


***
rran@bluewin.ch
***

நன்றி: திண்ணை


Reply
#7
ஊடறு : பெண் அனுபவங்களின் திரட்சி
<b>மூர்</b>

தமிழில் புலம்பெயர்வு இலக்கியம் என்ற வகைப்பாடு இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈழத்தில் ஏற்பட்ட யுத்த நெருக்கடி ஈழத்தமிழர்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமது வாழ்வியல் அனுபவங்களை இலக்கியமாக்கும் முயற்சியில் கவனம் செலுத்துகின்றனர்.

தமிழில் நடைபெறும் சிந்தனைப் பரிமாற்றங்கள் விவாதங்கள் புலம்பெயர் பின்னணியில் மிகுந்த தாக்கம் செலுத்துபவவையாகவும் உள்ளன. மறுபுறம் புலம்பெயர்ந்த வாழ்வியல் அனுபவங்கள் தமிழுக்கு புதுவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.

தமிழ்ச் சிந்தனை முறையில் கோலோச்சும் ஆதிக்க அதிகார கூறுகளுக்கு எதிரான உரையாடல் பன்முக தளங்களில் ஊடுபாவு கொண்டு வருவது தவிர்க்க முடியாததாயிற்று. மார்க்சியம், அமைப்பியல், பின்அமைப்பியல், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் போன்ற சிந்தனாவளங்களின் ஊடாட்டம் தமிழில் புதிய பொருள்கோடல் மரபை உருவாக்கி வருகிறது.

பெண்ணியத்தின் வருகை நமது இதுகாறுமான சமூக அசைவியக்கத் தொழிற்பாட்டிலும் மொழிக்கட்டமைப்பிலும் அதிகாரம் செலுத்தும் ஆணாதிக்கச் சிந்தனைக்கு எதிரான பெண்ணிய நோக்குவயப்பட்ட பார்வையை வளர்தெடுக்கின்றது.

பெண் எழுத்துக்கள், பெண் விமரிசனம், பெண்ணியக்கோட்பாடுகள் யாவும் புதுவகையான பார்வைக்கும் சிந்தனைக்குமான தளத்தை உருவாக்குகின்றன. அந்தவகையில் பெண் எழுத்துக்கள் பெண் படைப்புகள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்திருக்கும் தொகுப்புதான் 'ஊடறு'.

இது பெண்படைப்புகளின் பதிவாக தமிழ் இலக்கிய உலகுடன் ஊடறு செய்ய முனையும் தொகுப்பு. தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை ஆண் நோக்கிலான கட்டமைப்பிலிருந்து விடுவித்து பெண் நோக்கு வயப்பட்ட பார்வையின் அடியாகவும், ஊடறுத்துச் செல்லும் செல்நெறிப்போக்கை வளர்த்தெடுக்கும் முயற்சியின் பாற்பட்டதுதான் ஊடறு தொகுப்பு.

பெண் அனுபவங்கள், பெண்மொழி, பெண்நோக்கு யாவும் தமிழ் இலக்கியப் பரப்பை விஸ்தரிக்கும் நிலையிலும் முன்னைய பாரம்பரியங்களை கேள்வி கேட்கும் உந்துதல்களையும் தரக்கூடிய தொகுப்பாக அதன் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. பெண் நோக்கு பற்றிய விழிப்புணர்வுக்கு பிரக்ஞைக்கும் உந்துதலாகவும் இத்தொகுப்பு நூல் உள்ளது.

கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், இதழியல் பிரிவுகள், ஓவியங்கள் என்று பெண் அனுபவங்களின் ஆளுமைகளின் திரட்சியாகவே ஊடறு வெளிப்பட்டுள்ளது. தமிழுக்கு இது புதுவரவு. தமிழ்ச் சிந்தனையின் தமிழ்ப்படைப்புலகின் அகற்சிப் பரிமாணமாகவும் உள்நோக்கிய விசாரணைகான கூறுகளைக் கொண்டதாகவும் உள்ளது.

பெண் அனுபவம் பலதரப்பட்டதாகவே உள்ளது. ஆண் அதிகாரத்தால் பாதிக்கப்படும் பெண் அனுபவம் விரிவாக அவரவர் அனுபவத்துக்கும் ஆளுமைக்கும் ஏற்ப பதிவாகியுள்ளன. இன்னொருபுறம் யுத்தம் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிக சுமைகளை அனுபவங்களை கொடுத்துள்ளது. புலம்பெயர்வதிலும் பெண்கள் அனுபவங்கள் வித்தியாசமாகவும் நெருக்கடிமிக்கதாகவும் உள்ளது. இவை யாவும் 'ஊடறு' தொகுப்பில் பதிவாகியுள்ளன.

படைப்புகளின் மொத்த அனுபவங்களின் திரட்சியில் உள்ளீடாக அரசியல் நோக்கும், ஜனநாயகவேட்கையும், கலகத்தன்மையும், எதிர்ப்பும், இழையோடியிருக்கிறது. இவை வெறும் பெண்களின் புலம்பல் என்று ஒற்றைவரியில் நிராகரிக்கக்கூடியவை அல்ல. சமூகம் பால் நேயமும், சமூகம் பற்றிய விமரிசனமும், விடுதலை அரசியலும் என பன்முகக் குரல்கள் ஒலித்துக் கொள்ளக்கூடிய தொகுப்பாகவே 'ஊடறு' வெளிப்பட்டுள்ளது.

மொத்த மானுட அனுபவங்களை பெண் அனுபவங்கள் ஊடறுத்துப் பார்க்கும் முயற்சிக்கான அவசியத்தை வலியுறுத்திக் கொள்ளும் விதத்தில் ஊடறு வெளிப்பட்டுள்ளது. காலத்தின் அவசியம் கருதியும் சமூகப் பொறுப்புடனும் ஊடறு தொகுக்கப்பட்டுள்ளமை கவனிப்புக்குரியது. இத்தொகுப்பின் தொகுப்பாளர்கள் தமிழ்ச்சூழலுக்கு புதிய தளமாற்றம் உருவாக்கப்பட வேண்டியதற்கான பாதையை அமைத்துள்ளனர்.

நன்றி: ஆறாம்திணை


Reply
#8
ஊடறு ஒரு பார்வை
<b>சந்திரவதனா செல்வகுமாரன்</b>

ஊடறு. அருமையானதொரு தலைப்பு. தேவா(யேர்மனி), நிரூபா(யேர்மனி), விஜி(பிரான்ஸ்) றஞ்சி(சுவிஸ்) ஆகியோ¡¢ன் கடின உழைப்பில் முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களைத் தன்னகத்தேயும், அருந்ததிராஜ் இன் கைவண்ணத்தை முன் அட்டைப் படமாகவும், வாசுகி ஜெயசங்கா¢ன் கைவண்ணத்தை பின் அட்டைப் படமாகவும் கொண்டு பதிவானதே ஊடறு.
இப் பதிப்பின் வடிவமைப்புக் கூட வழமையான வெளியீடுகளிலிருந்து வித்தியாசமாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. றஞ்சிக்கு ஒரு பாராட்டு கொடுக்கத்தான் வேண்டும். பெண்களின் ஆக்கங்களை மட்டும் கொண்டு சக்தி வெளியீடான ..புது உலகம் எமை நோக்கி.. புலத்தில் வெளி வந்த போது ஆண்கள் மத்தியில் இருந்து சற்று அதிருப்தியான கண்டனங்கள் வரத் தவறவில்லை.அது ஏன்..? பெண்களுக்கென்று மட்டுமாக ஒரு தொகுப்புத் தேவைதானா...? என்று சினக்கவும் அவர்கள் பிந்தவில்லை. இது ஒன்றும் பெண்களைப் பொறுத்த வரையில் புதிதில்லை. தம்மைத் தாண்டி பெண்கள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆண்களிடமிருந்து எழும் அச்சத்துடனானன அதிகார மிரட்டல்கள்தான் இவை. .

ஏதோ.... எழுத்தும் இலக்கியமும் ஆண்களுக்கு மட்டுந்தான் சொந்தமானவை என்பது போலத்தான்; எமது சமூகத்தின் மத்தியில் ஒரு மாயை ஏற்படுத்தி வைக்கப் பட்டுள்ளது. ஆனால் சங்க காலத்திலேயே நிறையப் பெண்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழ் மொழியில் வழங்கும் அறத்துறை இலக்கியங்கள் போன்று உலகில் வேறு எங்கும் இல்லையென்று மேல் நாட்டு அறிஞர்களாகிய பெஸ்கி, போப் முதலியோரால் பாராட்டப் பட்ட எமது பழந்தமிழ் இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் பெண்பாற் புலவர்களும் இருந்திருக்கின்றார்கள்.

பொதுவாக இலக்கிய உலகப் பெண்களை நினைத்தால் எம் மனதில் உடனே தோன்றுபவர் அவ்வையார்தான். மிஞ்சிப் போனால் ஆண்டாள், காக்கை பாடினியார், காரைக்கால் அம்மையார்... போன்ற ஒரு சிலரே. உண்மை நிலையோ வேறு. எந்த நாட்டு இலக்கிய வரலாற்றிலும் இல்லாதபடி சங்க காலத்தில், ஒன்று சேர்ந்த நேரத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள்; கவிபாடியுள்ளனர் என்பது நம்ப முடியாத உண்மை. ஆதி மந்தியார், குறமகள் இளவெயினி, வெறிபாடிய காமக் கண்ணியார், கீரன் எயிற்றியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், நப்பசலையார், வெள்ளி வீதியாரபூதப்பாண்டியனின் உள்ளங் கவர்ந்த பெருங்கோப்பெண்டு, பாரி மகளிர்.. என்று எமது பெண்பாற் புலவர்களின் பட்டியல் நீளமானது.

ஆனாலும் ஆண் கவிக்கு முன் பெண் கவி சளைத்தவளில்லை என்று கூறி அறிவுத் திமிரோடு ஆண்களுக்கு நிகராக நின்று பாடல்களாலேயே சவுக்கடி கொடுத்த அவ்வையாருக்கு இணையாக பலகாலமாகப் படைப்புலகில் பெண்கள் யாரும் இடம் பிடிக்கவில்லைத்தான். அனேகமான எல்லாப் பெண்களுமே குடும்பச் சூழலிலும், பல்வேறு சமுதாயச் சிக்கல்களிலும் அகப்பட்டுக் கொண்டு இலக்கிய உலகத்திலிருந்து எட்டவே இருந்து விட்டார்கள்.

கவிக்குயில் சரோஜினியின் காலத்தில் கூடத் தமிழில் பெண்கள் யாரும் பெரிய அளவில் கவிதை எழுதியதாகச் செய்திகள் இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இரா.மீனாட்சி கவிஞராக உருவெடுத்தார். இரா. மீனாட்சி கவிதை எழுத வந்த காலத்தில் மாலதி ஹரீந்திரன், தேவமகள், ரோகிணி ஆகிய கவிஞர்களும் இருந்தனர். அதன் பின் ஆங்காங்கு 1970 பகுதியில் தனது சில கவிதைகளைத் தொகுப்பாக்கிப் பிரசூ¢த்த திருமதி செளந்தரா கைலாசம் போன்ற பெண் எழுத்தாளர்கள் தோன்றினர். ஆயினும் இப் பெண்கள், கவிஞர்கள் எனறு அழைக்கப் பட்டனரேயன்றி இலக்கிய எழுத்தாளர் பட்டியலில் சேர்க்கப் படவில்லை. இவர்களுக்குப் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதத் தொடங்கி இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் குறிப்பிடத் தக்க வகையில் பெண் எழுத்தாளர்கள் தலைகாட்ட ஆரம்பித்தனர்.

இந்த ஆரம்பத்தின் சில படிகளைத் தாண்டிய ஒரு வடிவமே இன்று நாம் எடுத்துக் கொண்ட பெண்களின் படைப்புக்களைத் தாங்கிய ஊடறுவும்.
இதனுள்ளே 13 கட்டுரைகளும், 5 சிறுகதைகளும், 24 கவிதைகளும், 3நூல் விமர்சனங்களும் 5 ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் கட்டுரைப் பகுதிக்குள் அடங்கிய கண்டகாரை நோக்கிய ஒரு பயணம் திரைப்படம் பற்றியதொரு அருமையான விமர்சனம். இடப் பெயர்வின் போது இடம் பெயராது ஆப்கானிஸ்தானிலேயே தங்கி விட்ட தங்கையைத் தற்கொலையிலிருந்த காப்பாற்ற கனடாவில் பத்தி¡¢கையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் நவாஸ் கண்ட காரை நோக்கிப் பயணிக்கும் போது, எதிர் கொள்ளும் இன்னல்களையும், காணும் தலிபான் பெண்கள் படும் துயர்களையும் சித்தா¢ப்பதாகவே இப்படம் அமைந்துள்ளது. உமா அதை மிகவும் அருமையாக விமர்சித்திருந்தார். இன்னொருவனின் மனைவி போல நவாஸ் நடித்தே பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் தற்காலிகக் கணவன் கூட தனது மா¢யாதைக்காக இவளை பர்தா அணியச் சொல்வதும், வைத்தியா¢டம் காண்பிக்கும் போது திரைமறைவின் பின் பெண் நிற்க ஒரு சிறிய துவாரத்தினூடு வைத்தியர் அவளைப் பா¢சோதிப்பதும்... பெண்கள் மீதான தலிபானின் அடக்குமுறைகளை உணர்த்துகின்றன. இன்னும் ஆப்கானிஸ்தான் பெண்கள் படும் பல துயரங்கள் இதில் பதிவாகியுள்ளன.

அடுத்து யசோதா மொழிபெயர்த்த வேசிகளைப் பற்றிய சித்திரம் பெண்களை மிகவும் கீழ்தரமாகச் சித்தா¢க்கும் Phonography பற்றிச் சொல்லியுள்ளது. இதிலே யசோதா - மொழிபெயர்ப்பினால் கட்டுரையின் தன்மையில் எந்த விதமான மாற்றமும் ஏற்படாதவாறு இருப்பதற்காகவும், கட்டுரையின் வீச்சும், தாக்கமும் வெளித் தொ¢வதற்காகவும் இத் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் எப்படி அழைக்கப் படுகிறார்களோ.. அல்லது எப்படி விளிக்கப் படுகிறார்களோ... அச் சொற்களையே பாவித்து கட்டுரையையும் எழுதியிருந்தார்.

இது புத்தகம் வெளி வந்த காலத்தில் சிறிதான சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாது எதிர் விமர்சனத்தையும் தோற்றுவித்தது. ஆனாலும் கட்டுரையை வாசிக்கும் போதுதான் யசோதாவின் வார்த்தைப் பிரயோகத்தின் அவசியம் புரிகிறது.

தலித்தியமும் தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பின் கீழ் அரங்கமல்லிகா சங்கஇலக்கியத்திலிருந்து இன்று வரையுமான தலித்திய மக்களது வாழ்வியலோடும் தாழ்வுகளோடும் பயணித்திருந்தார்.

நிரூபா எண்பதுகளில் பூப்புனிதவிழா கண்ட பெண்ணின் மனதையும், அவள் கண்ட அசெளகா¢யங்களையும், இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு புலம் பெயர் பெண் அதை வேறு கோணத்தில் வரவேற்றுக் கொள்வதையும் தனக்கே உ¡¢ய யதார்த்த பாணியில் ஒப்பீடு செய்திருந்தார். இன்றும் சாமத்தியச் சடங்கின் மூலம் பெண் பிள்ளைகளைக் காட்சிப் பொருளாக்க முனையும் பெற்றோர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கட்டுரை இது.

ஏழு ஆண்டுகள் விவாகரத்துப் பெற்று வாழ்ந்த இரு குழந்தைகளுக்குத் தாயான சபீயாவை அபூபக்கர் என்பவர் பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதால் அவள் கருவுற்றாள். இதற்காக நையீரிய இஸ்லாமிய நீதி மன்றம் அவளுக்கு மரண தண்டனையும், வல்லுறவுக்கு அவளை ஆளாக்கிய அபூபக்கருக்கு தண்டனைகளெதுவுமின்றி விடுதலையும் கொடுத்தது. இந்த விந்தையான ஒரு பட்சமான தண்டனைத் தீர்மானம் பற்றியும், மனித உரிமைகள் அமைப்புகள் இதனுள் தலையிட்டதாலும் சபீயாவின் மேல் குற்றம் நிரூபிக்கப் பட முடியாமல் போனதாலும் அவள் விடுதலை அடைந்ததையும் சபியா ஒரு முடிவல்ல, அவள் ஒரு தொடர் என்பதன் மூலம் ஜெயந்திமாலா தந்திருந்தார்.

மேலும் பால் நிலை கருதி பாராம்பா¢யமற்ற தொழில்களில் பெண்கள் ஈடுபடுத்தப் படுவதை பாரதியும், அரசியல் விமர்சகரும், புகழ் பெற்ற எழுத்தாளரும், போராட்டக் காரருமான அருந்ததி ராய் இன் கருத்துக்களோடு யுத்தம் எதற்காக என்பது பற்றியதொரு கண்ணோட்டத்தைத் தேவாவும், ஒரு தேவதாசியின் கதையை மட்டுமல்லாமல் முத்துப்பழனி, நாகரத்தினம்மாள்... போன்ற கணிகையா¢ன் மறுபக்கங்களை ஞானபாரதியும்,மொழியும் ஆண்வழிச் சமூகமும் எப்படிப் பெண்களை அடக்கப் பயன் பட்டிருக்கிறது என்பது பற்றி, பெண்கள் சம்பந்தமான பன்நோக்குக் கருத்துக்களை எமக்குத் தந்து வந்த செல்வி திருச்சந்திரனும், முன்னைய சோவியத்திலிருந்து இன்றைய அமொ¢க்கா வரையான ஒரு பெண்ணிலைப் பயணத்தினூடு கிழக்கு ஐரோப்பியப் பெண்களின் பின் தங்கிய நிலையையும், அவர்கள் மீதான ஆணாதிக்க அழுத்தங்களையும் ஆதார பூர்வமான கணக்கீடுகளுடன் றஞ்சியும், தொழில் நுட்பமும் பெண்விடுதலையும் என்ற தலைப்பின் கீழ் மடலாடற்குழுக்களின் பயன் பற்றியும், வீட்டுக்குள் குடி வந்த கணினியால் வெளியுலகத்துக்குப் பெண்கள் செல்ல முடிந்தது பற்றியும், அதன் அவசியம் பற்றியும் சுபாவும்... கூறியிருந்தார்கள்.

இப் பதிப்பில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் அரசியல், சமூகம், பொருளாதாரம்.. என்று பன்முகத் திடல்களிலுமிருந்து நடைமுறைப் படுத்தப்படும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை மையப் படுத்தியே பேசியிருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றும் பல் வேறு தளத்திலான பல தகவல்களை எம்மோடு பா¢மாறியிருந்தன.

கட்டுரைகள் போலவே இப்பதிப்பில் இடம் பெற்ற அனேகமான கவிதைகளும் பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பதியப் பட்டிருந்தன. சில கவிதைகள் போர் தந்த பாதி;ப்புக்களையும், அதனாலான வடுக்களையும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட பி¡¢வின் துயர்களையும் பேசியிருந்தன. எல்லாக் கவிதைகளிலுமே ஏதோ ஒரு சோகம் மெதுவாகவேனும் இளையோடியிருந்தன. சில கவிதைகளில் ஏமாற்றத்தின் ரேகைகள் பதிந்திருந்தன.

கவிதைகளை யேர்மனியிலிருந்து - உமா, கோசல்யா சொர்ணலிங்கம், சாந்தி ரமேஸ் வவுனியன், மல்லிகா ஆகியோரும்,
பிரான்ஸிலிருந்து - ஜெயந்தி சாம்சனும் ,
சுவிஸிலிருந்து - நளாயினி, தாமரைச்செல்வனும்,
லண்டனிலிருந்து - சந்திரா ரவீந்திரனும்
அவுஸ்திரேலியாவிலிருந்து - பாமதி, ஆழியாள் ஆகியோரும்
இந்தியாவிலிருந்து - திலகபாமா, மாலதி ஆகியோரும்
இலங்கையிலிருந்து - ஜெயந்தி தளையசிங்கம், அருட்கவிதா, அனார், கி.கலைமகள், விஜயலட்சுமி சேகர், வாசுகி குணரத்தினம், மஸாஹிறா பாயிஸ், சிறிவதி, ஆகியோரும் தந்திருந்தார்கள்.

சிறுகதைகள் என்ற உடனேயே சந்திரா ரவீந்திரனின் பால்யமும், கருக்கு பாமாவின் ஒத்தயும் நினைவில் வந்து மோதுகின்றன. ராஜேஸ்வா¢ பாலசுப்ரமணியத்தின் ஒரு முற்போக்குவாதி காதலிக்கிறான்- ஒரு கோப அலையை மனதில் தோற்றுவிக்கிறது. பாலரஞ்சனி ஜெயபாலனின் ஸ்டிரைக் சோகத்தைத் தருகிறது.

சந்திரா ரவீந்திரனின் பால்யம் சிறுகதை சின்ன வயசுப் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துர்ப்பிரயோகம் பற்றிப் பேசியுள்ளது. கதையில் வந்த பத்மாவும், விசாலியும் மிகவும்; அழகாக நகர்த்தப் படுகிறார்கள். சொல்லப் படாமலே போய் விட்ட ஒரு அசிங்கத்தை மிக அழகாக இலக்கியம் கலந்து சொல்லியிருக்கிறார் சந்திரா ரவீந்திரன்..........பத்மாவதி விறகு பொறுக்கச் செல்லும் பனந்தோப்பிற்குள் ஒளிந்து கிடக்கும் பொத்தல் விழுந்த ஓலைக் கொட்டிலில் வேலனின் சீவற் கத்திகளும், கள்ளுமுட்டிகளும் மட்டும்தான் இருக்குமென்பது ஊரறிந்த உண்மை. ஆனால் அதே கொட்டிலில் பத்மாவதி என்ற பன்னிரண்டு வயதுச் சிறுமியின் வாழ்க்கை நாளும் பொழுதும் சீவப் பட்டுக் கொண்டே இருப்பது யாருக்குத் தொ¢யும். தலை வி¡¢த்தாடும் இந்தப் பனைகளுக்குத் தொ¢யுமா? அலையெறிந்து மோதும் அந்தச் சமுத்திரத்துக்குத் தொ¢யுமா? இந்தக் காற்றுக்குத் தொ¢யுமா? நட்சத்திரங்களுக்குத் தொ¢யுமா? ஓடிக் கொண்டே தி¡¢யும் இந்த முகில்களுக்குத் தொ¢யுமா? யாருக்குத் தொ¢யும்? யாருக்குப் புரியும்? பத்மாவதி சமைந்து போனால் மட்டும் இந்த ஊருக்குத் தொ¢யும். சமைய முன்பே அவள் வாழ்வு கரைந்து கொண்டிருப்பது யாருக்குத் தொ¢யும்.

எனக்குள் கண்கள் முட்டி வழிந்தன..........

கதைக்குள் இருந்த சந்திரா ரவீந்திரனின் கவித்துவமான இக் கதைச் சொற்களை வாசிக்கும் போது மனசை என்னவோ செய்கிறது. எத்தனையோ பத்மாவதிகள்... எழுதப் படாமலே போன அவர்களது பால்யங்கள்.......... மனசை முட்டுகின்றன.

பாட்டி என்னை விடு பாட்டி எனக்குக் கணக்கும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்... விசாலியின் குரல் கதை படித்துக் கன நாளாகிய பின்னும் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

அடுத்து வாழ்க்கையும் எழுத்தும் வேறல்ல என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கருக்கு பாமாவின் கதை சொல்லல் மிகவும் வித்தியாசமானது. புதிய... வழக்கத்தில் அதிகமில்லாத ஏதோ ஒரு கிராமத்துக்குச் சொந்தமான பேச்சுத் தமிழ். யதார்த்தத்தினூடான கதை நகர்த்தல். ஒத்த மார்பை இழந்த இல்லாமல்லியின் வாழ்வையும், அவளை பாலியல் துர்ப்பிரயோகம் செய்ய முனைந்த காட்டுக்காரனை அவள் ஒற்றைக் கண்ணன் ஆக்கியதையும், லூர்து பாட்டி ஆறுதல் சொன்னதையும் கோர்வையாக்கி கருக்கு பாமா நகர்த்திய விதம் மிகவும் அருமை.

ராஜேஸ்வா¢ பாலசுப்ரமணியத்தின் ஒரு முற்போக்குவாதி காதலிக்கிறான்
நாங்கள் தமிழர்கள், இது எங்கள் கலாச்சாரம் என்று பேசும் முற்போக்குவாதிகளின் பிற்புலத்தைப் பற்றிச் சொல்லியிருந்தது. கண்ணியம் பற்றிப் பேசும் குமார் மனைவிக்குத் தொ¢யாமல் 35 வயது நிரம்பிய பழைய காதலியை படுக்கைக்கு அழைப்பது.......... எமது தமிழ்சமூகத்துள்ளே நடமாடும் கலாச்சாரப் போலிகளைப் படம் பிடித்துக் காட்டி மனசுள் கோப அலையை உண்டு பண்ணியது.

வெள்ளைக்காரனோடு வெளியில் போனால் கண்ணியம் கெட்டு விடுமாம். ஆனால் யாருக்கும் தொ¢யாமல் அவர்களோடே படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேணுமாம். இது எமது தமிழ் ஆண்கள் சிலரின் கண்ணியம். வழமை போலவே ராஜேஸ் பாலாவின் கதை நாவிலொன்றும் செயலிலொன்றுமாய் வாழ்பவர்களின் செயலை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருந்தது.

பாலரஞ்சனி ஜெயபாலன் ஸ்டிரைக்கினால் பரீட்சைக் கொப்பி வேண்ட முடியாமலே போய் விட்ட ராசுவின் சின்ன மனசின் ஏக்கம் நிறைந்த சோகத்தினூடு தோட்டத் தொழிலாளர்களின் குடும்பப் பின்னணியையும், அந்த சமூகத்துள் நிறைந்துள்ள அன்றாடப் பணப் பிரச்சனைகளையும் மனசைத் தொடும் படியாக எடுத்துக் காட்டியிருந்தார்.

அடுத்து மிகவும் நன்றாக அமைந்திருந்தவை இதழியப் பதிவுகள்.
நூலுருவில் வந்த பெண்களின் கவிதைத் தொகுப்புகளில் இருந்து ஆழியாளின் உரத்துப்பேசு - சல்மாவின் கவிதைத் தொகுப்பு - பாலரஞ்சனி சர்மாவின் மனசின் பிடிக்குள் - பதினெட்டுப் பெண்களின் கவிதைகளை உள்ளடக்கிய வெளிப் படுதல் - கோசல்யா சொர்ணலிங்கத்தின் கோசல்யாவின் கவிதைகள் - போன்றவைகளை ஆய்ந்து மிகவும் சுவையான முறையில் எம்மோடு பகிர்ந்திருந்தார் சுவிஸ் றஞ்சி.

றஞ்சியைப் போலவே பிரான்ஸிலிருந்து விஜி எமது குடும்ப அமைப்பு முறையையும், அதன் புனிதத்துவத்தையும், அதனூடாக தக்க வைக்கப் பட்டிருக்கும் ஆண் அதிகார மையத்தினையும் கேள்விக்குட்படுத்தும் சிவகாமியின் குறுக்குவெட்டு நாவலின் ஒரு வெட்டு முகத்தை மிக அருமையாகத் தந்திருந்தார்.

தயாநிதி ஆப்கான் பெண்ணியப் போராளியும் பெண்கவிஞையுமாகிய அஸிமியின் முதல் வெளியீடான அந்த எ¡¢ந்த இதயத்தை அறிமுகம் செய்திருந்தார்.

றஞ்சி, விஜி போலவே தயாநிதியின் இதழியப் பதிவும் இவ் இதழ்களைத் தேடிச் சென்று வாசிக்கும் வேட்கையை எமக்குள் ஏற்படுத்தின.

அடுத்து ஊடறுவுக்கு அழகு சேர்த்தவை ஓவியங்கள். ஓவிய உலகில் எமது தமிழ்ப்பெண்களின் ஈடுபாடு எந்தளவுக்கு இருக்கின்றது என்பது என்வரையில் கேள்விக் குறியாகவே உள்ளது. பெரும்பாலும் எம் மத்தியில் ஆண் ஓவியர்களைத்தான் நாம் அதிகம் காண்கிறோம்.
பெண் ஓவியர்கள் என்று பார்க்கும் போது எண்ணிச் சொல்லக் கூடிய வகையில் பிங்கலை, அருந்ததி ரட்ணராஜ், புங்கா விருது பெற்ற வாசுகி, போன்றோரே இருக்கிறார்கள். இன்னும் இலைமறைகாயாக எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ தொ¢யாது. அவர்களும் வெளிச்சத்துக்கு வர வேண்டும். றஞ்சினி யின் ஓவியத்தை இவ்விதழில்தான் நான் முதல் முதலாகப் பார்த்தேன். சுவிஸ் றஞ்சி கூறியது போல பெண்களிடையேயான எழுத்தாற்றல் வலுப்பெற்றது போல உணர்வுகளின் கோலங்களான ஓவியங்களும் வலுப்பெற வேண்டும். ஓவியத்திற்கான தளமாக மட்டுமல்லாமல் பல பெண்களின் ஒன்றிணைவுக்கும் பாலமாக ஊடறு பதிந்ததில் சந்தோசம்.இன்னும் இப்படியான பதிவுகளும், பெண்களின் ஒத்துழைப்புகளும் தொடர வேண்டும்

<b>சந்திரவதனா செல்வகுமாரன்
chandra1200@yahoo.de
6.10.2003</b>

நன்றி: பதிவுகள்


Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)