Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நித்தியா கவிதைகள்
#1
<b><span style='font-size:25pt;line-height:100%'>மறந்துவிட்டாயம்மா...!</span>

<img src='http://www.yarl.com/forum/files/marandhuvidai_176.jpg' border='0' alt='user posted image'>

நானும் கருப்பையில் தான்
கற்பம் தரித்தேன்
என்னையும் பத்து மாதம் தான்
சுமந்து பெற்றாள்
தாய்ப்பால் ஊட்டித்தான்
சீராட்டினாய்
இவர்தான் தந்தை என்றும்
அறிமுகப்படுத்தினாள்

இது ஆண்சாதி என்றும்
இது பெண்சாதி என்றும்
இது தாவரங்கள் என்றும்
இது விலங்கினம் என்றும்
அவள்தான் அன்று இனம்
காட்டினாள்!

ஆனால்...
சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்
அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்
பணம் உறவின் வேடம் என்றும்
மதம் பகையின் தோழன் என்றும்
சாதி காதலின் எதிரி என்றும்

ஏனே அன்று அவள்
அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!!

[b]எழுதியவர்: நித்தியா</b>


Reply
#2
நல்ல கவிதை
..
....
..!
Reply
#3
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்  
அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்  
பணம் உறவின் வேடம் என்றும்  
மதம் பகையின் தோழன் என்றும்  
சாதி காதலின் எதிரி என்றும்  

ஏனே அன்று அவள்  
அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மையான வரிகள்.
Reply
#4
Quote:சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்
அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்
பணம் உறவின் வேடம் என்றும்
மதம் பகையின் தோழன் என்றும்
சாதி காதலின் எதிரி என்றும்

ஏனே அன்று அவள்
அறிமுகப்படுத்த மறந்துவிட்டாள்...!!

உண்மைதான் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அருமையான வரிகள் ...
Reply
#5
நல்ல வரிகள் நன்றி


-----------------------
jothika
Reply
#6
தோèர உன் தாயின் காலத்தில் துரோகம் இல்லை
ஏமாத்து இல்லை நட்பின் அருமை புரிந்த காலம்
துரியோதனனுக்கு நல்லவர்கள் தெரியவில்லை
தருமனுக்கொ கொடியவர்கள் புரியவில்லை
மனது செய்யும் மாயம் தொèர இது
புரிந்து கொண்டால் அது தான் கீதை நண்பா.......

[/b]
inthirajith
Reply
#7
கவிதைக்கு நன்றி இளைஞன். எந்த நித்தியா? யாழ் கள நித்தியாவா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
ரொம்ப நல்ல கவிதை...

ஆனால்...
சிரிப்பு மனிதனின் மறுபக்கம் என்றும்
அசட்டுத்தனம் அவன் முகமூடி என்றும்
பணம் உறவின் வேடம் என்றும்
மதம் பகையின் தோழன் என்றும்
சாதி காதலின் எதிரி என்றும்

இந்த வரிகள் உண்மையா இருக்கு......
Reply
#9
உங்கள் கருத்துக்கள் உரியவரை போய்ச் சேரும். நன்றிகள். மதன், யாழ் களத்தில இருக்கிறது நித்திலாதானே? நித்தியா என்று யாரும் இருக்கிறார்களா?


Reply
#10
<b><span style='font-size:25pt;line-height:100%'>நான் ஆண்மகனாய் இருந்திருந்தால்...</span>

<img src='http://www.yarl.com/forum/files/sevv_193.jpg' border='0' alt='user posted image'>

தமிழிலே மோட்சம் கண்டு
என் காதலிக்காக கவி
பல்லாயிரம் பாடி இருப்பேன்!
இவ்வுலகையே போருக்கு
அழைத்து உன் புன்னகைக்காகப்
போராடி இருப்பேன்!

வன்முறையே வேண்டாமெனின்
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து
மகானாக தாரகை உன்
கரம்பற்றி இருப்பேன்!
உன் செவ்வாய் "நீதான் உலகம்" -என்று
ஒருவரி மொழிந்திருந்தால்..
தேவதை உன்னுடன் செவ்வாயில்
குடியேறி இருப்பேன்!

ம்.. ம்.. ம்..
போயும் போயும் -உன்
நிழலைக்கூட அணுக முடியாத -பெண்பிறவி
அல்லவா எடுத்திருக்கிறேன்!!!

[b]எழுதியவர்: நித்தியா</b>


Reply
#11
[quote=இளைஞன்]உங்கள் கருத்துக்கள் உரியவரை போய்ச் சேரும்

ஏன் அவரே வந்து எழுதாரோ....எழுதினால் பாராட்டாலாம்..இல்ல ஆளைப் பாராட்ட முடியாது....! வரி சுமந்து கருதந்த தமிழுக்கு பாராட்டுக்கள்...! இதையும் அங்கு சேர்த்துவிடுங்கள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
[size=18]<b>மனு

<img src='http://www.yarl.com/forum/files/manu_911.jpg' border='0' alt='user posted image'>

பேச மொழி இருந்தும்
பேச உதடுகள் இருந்தும்
பேச முடியாத ஊமையாக..

கேட்க பல விடயம் இருந்தும்
கேட்க செவிகள் இருந்தும்
கேட்க முடியாத செவிடாக..

பார்க்க பல வண்ணம் இருந்தும்
பார்க்க கண்கள் இருந்தும்
பார்க்க முடியாத குருடாக..

இரசிக்க பலவகை இருந்தும்
இரசிக்க மனது இருந்தும்
இரசிக்க முடியாத பாவியாக..

இறைவா!
உணர்வு எனும் மனுவை உன்னிடம்
சமர்ப்பிக்கிறேன்..
என்னவன் நினைவுகளை மட்டும் தந்து
நிசமாகவே என்னை
ஊனமுற்றவளாய் இருக்க விடு!!!

[b]எழுதியவர்: நித்தியா</b>

Quote:உங்கள் கருத்துக்களுக்கு எனது நன்றிகள்
என்று நித்தியா குறிப்பிடச் சொன்னார். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply
#13
Quote:ம்.. ம்.. ம்..
போயும் போயும் -உன்
நிழலைக்கூட அணுக முடியாத -பெண்பிறவி
அல்லவா எடுத்திருக்கிறேன்!!!
என்ன இப்ப தான் பெண்கள் என்ன என்னவெல்லாமோ செய்யிறாங்க. இவங்க இதுக்கே தயங்கிறாங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
அதானே? அதென்ன <b>பெண்பிறவி
அல்லவா எடுத்திருக்கிறேன்!!! </b> :?: :!:

பெண்களை பெண்களே தாழ்த்திக்கலாமா
நித்தியா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#15
இளைஞன் Wrote:உங்கள் கருத்துக்கள் உரியவரை போய்ச் சேரும். நன்றிகள். மதன், யாழ் களத்தில இருக்கிறது நித்திலாதானே? நித்தியா என்று யாரும் இருக்கிறார்களா?

இளைஞன் இதோ

<img src='http://img359.imageshack.us/img359/6204/nithiya8vv.png' border='0' alt='user posted image'>

:roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#16
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அருவி...
இப்பொழுதுதான் எழுதப் பழகுகிறார் போல. விரைவில் தானே எழுதுவார் என்று நம்புகிறேன்.


<b><span style='font-size:25pt;line-height:100%'>ஒரு மொழி</span>

<img src='http://www.yarl.com/forum/files/an_684.jpg' border='0' alt='user posted image'>

அன்று உன் உதடு உரைந்த
மொழியினையே
செவிமடுத்த என் செவிகள்

இன்று இரங்கியும், தவறிக்கூட
உன் உதடு
ஒரு மொழியேனும்
உரைக்க மாட்டாதா
என தவம் கிடக்கின்றன...!

[b]எழுதியவர்: நித்தியா</b>


Reply
#17
<b><span style='font-size:25pt;line-height:100%'>கண்கள்</b></span>

<img src='http://www.yarl.com/forum/files/123333111_763.jpg' border='0' alt='user posted image'>

என் காதலன்
கண்ணைவிட்டு
ஒருபோதும் நீங்குவதில்லை..
ம்.. ஆமாம்
மிக நுட்பமான வடிவத்தில்
கண்ணோடு மணியானதால்
நான் தவறிக்
கண்ணிமைத்தாலும்
அதனால்
அவன் வருந்துவதில்லை

<b>எழுதியவர்: நித்தியா</b>


Reply
#18
<span style='font-size:25pt;line-height:100%'><b>காட்டுப் பூவே</b></span>

<img src='http://www.yarl.com/forum/files/kaadu-poove3_452.jpg' border='0' alt='user posted image'>

பெயர் அறியாத
அழகான மலரே..
நான் கண்ட மலர்களுக்குள்
நீ மிருதுவான மலர்
என்பதில் கொஞ்சம்கூட
ஐயம் இல்லை
ஆனால்...
என் மனம் திருடிய
தமிழ் பேசும்
அழகான என் காதலன்
உன்னைவிட மிகவும்
மிருதுவானவன்
தயவுசெய்து உன்
செருக்கை
விட்டொழி...

<b>எழுதியவர்: நித்தியா</b>


Reply
#19
யார் இந்த நித்தியா? :roll:
Reply
#20
ம்ம் கவிதைகள் நன்றாக உள்ளன

என் மனம் திருடிய
தமிழ் பேசும்
அழகான என் காதலன்
உன்னைவிட மிகவும்
மிருதுவானவன்
தயவுசெய்து உன்
செருக்கை
விட்டொழி...

இந்த வரிகள அழகாக உள்ளன <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)