03-12-2006, 12:24 PM
சர்ச்சையைக் கிளப்பியுள்ள நியமனம்!
அஜாதசத்ரு
இராணுவக் கெடுபிடி மற்றும் ஆயுதம் தாங்கிய பல்வேறு தரப்பினரின் அச்சுறுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கல்விச் செயற்பாடுகள் முழுமையாக செயலிழந்துள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் மீண்டுமொரு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட இலத்திரனியல் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் உட்பட வடக்கு, கிழக்கு கல்விச்சமூகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், இந்த நியமனத்தை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு அண்மையில் நடைபெற்றபோது பேராசிரியர்களான எஸ்.கந்தசாமி, ஆர்.குமாரவடிவேல், இரத்தினஜீவன் ஹூல் ஆகியோர் முறையே தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களில் பேராசிரியர் ஆர்.குமாரவடிவேலை யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு சிபார்சு செய்தது.
எனினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபார்சினை நிராகரித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரத்தினஜீவன் ஹூலை யாழ். பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக நியமித்து பெரும் சர்ச்சையொன்றை எதிர்கொண்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தமிழ் மாணவர்களின் விருப்பதிற்கு முற்றிலும் நேர்மாறானதோர் போக்கொன்றையே கடைப்பிடித்துள்ளதாகவும் இந்த நியமனத்தை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லையென்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பெரும் நெருக்கடிகளுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் கட்டிக்காக்கப்பட்டுவரும் தமிழ் மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் நோக்குடனேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவே நாம் கருதவேண்டியுள்ளது.
எனவே, தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகளுக்கு முற்றிலும் எதிர்மாறான இந்த நியமனத்தை ரத்துச் செய்யாவிட்டால் யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது.
தமிழ் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை சீர்குலைக்க முற்படும் இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.
அதேநேரம், யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான செய்தி வெளியான வியாழக்கிழமையன்றே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேரடியாக சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன் இந்த நியமனத்தை உடன் ரத்துச் செய்யுமாறும் கோரியுள்ளனர்.
இரத்தினஜீவன் ஹூல் யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பான நிலைமையொன்றைத் தோற்றுவித்துள்ளது.
அது மட்டுமன்றி, இந்த நியமனமானது யாழ்.குடாநாட்டின் தற்போதைய இயல்புநிலைமையைக்கூடச் சீரழித்துவிடலாமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் காவலரண்கள், அதிகரித்துள்ள படையினரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களால கல்விச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ள யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் மீளமுடியாத மீண்டுமோர் நெருக்கடியான நிலைமையை தோற்றுவித்துள்ளது என்பதையும் தமிழ்க் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்ற பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்க்கமானதோர் முடிவெதையும் எடுக்காமலிருப்பது வடக்கு,கிழக்கு கல்விச் செயற்பாடுகளில் பெரும் பாதகமானதோர் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாமென்றே கருதப்படுகின்றது.
இராணுவ கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மட்டுமன்றி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உள்ளக செயற்பாடுகளும் சீராக இயங்கமுடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் நல்லூரிலுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலகத்திற்கு மகஜர் கையளிப்பதற்காக ஊர்வலமாகச் சென்ற வேளையில் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்தே கல்விச் செயற்பாடுகள் முற்றாக சீர்குலைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைவிட, திருகோணமலை உட்துறைமுக வீதியில் வைத்து 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு இரு மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் அது தொடர்பாக பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொழும்பிலிருந்து பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதிபெற்று திருகோணமலைக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினரே 5 தமிழ் மாணவர்கள் மீதான படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேரடியாகச் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தபோதும்கூட அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
மாறாக, அந்த 5 மாணவர்களும் அரச படையினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை நிரூபிக்கும் வகையில் புகைப்படமெடுத்து வெளியுலகிற்கு வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜன் சில தினங்களில் படுகொலை செய்யப்பட்டார்.
சாவகச்சேரி பகுதியிலுள்ள பல பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், படைத்தரப்பினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இதெல்லாவற்றிற்குமப்பால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பலர் கடந்த சில மாதங்களாக அங்கிருந்து படிப்படியாக வேறிடங்களுக்கு அச்சம் காரணமாக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகவும் அறிய வருகிறது.
வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகத்தினர் மீதான கல்விச் செயற்பாடுகளில் இவ்வாறானதோர் நெருக்கடியான நிலைமைகள் தோன்றியுள்ள இவ்வேளையில்தான் யாழ். பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக இரத்தினஜீவன் ஹூல் நியமனம் பெற்று மீண்டுமோர் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைகழகத்தின் சிரேஷ்ட இலத்திரனியல் பேராசிரியரான இரத்தினஜீவன் ஹூல், பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணம் (UTHR) என்ற அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான ராஜன் ஹூல் ,என்பவரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.thinakural.com/New%20web%20site...2/Article-3.htm
அஜாதசத்ரு
இராணுவக் கெடுபிடி மற்றும் ஆயுதம் தாங்கிய பல்வேறு தரப்பினரின் அச்சுறுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கல்விச் செயற்பாடுகள் முழுமையாக செயலிழந்துள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் மீண்டுமொரு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட இலத்திரனியல் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் உட்பட வடக்கு, கிழக்கு கல்விச்சமூகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், இந்த நியமனத்தை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு அண்மையில் நடைபெற்றபோது பேராசிரியர்களான எஸ்.கந்தசாமி, ஆர்.குமாரவடிவேல், இரத்தினஜீவன் ஹூல் ஆகியோர் முறையே தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களில் பேராசிரியர் ஆர்.குமாரவடிவேலை யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு சிபார்சு செய்தது.
எனினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபார்சினை நிராகரித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரத்தினஜீவன் ஹூலை யாழ். பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக நியமித்து பெரும் சர்ச்சையொன்றை எதிர்கொண்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தமிழ் மாணவர்களின் விருப்பதிற்கு முற்றிலும் நேர்மாறானதோர் போக்கொன்றையே கடைப்பிடித்துள்ளதாகவும் இந்த நியமனத்தை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லையென்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பெரும் நெருக்கடிகளுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் கட்டிக்காக்கப்பட்டுவரும் தமிழ் மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் நோக்குடனேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவே நாம் கருதவேண்டியுள்ளது.
எனவே, தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகளுக்கு முற்றிலும் எதிர்மாறான இந்த நியமனத்தை ரத்துச் செய்யாவிட்டால் யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது.
தமிழ் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை சீர்குலைக்க முற்படும் இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.
அதேநேரம், யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான செய்தி வெளியான வியாழக்கிழமையன்றே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேரடியாக சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன் இந்த நியமனத்தை உடன் ரத்துச் செய்யுமாறும் கோரியுள்ளனர்.
இரத்தினஜீவன் ஹூல் யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பான நிலைமையொன்றைத் தோற்றுவித்துள்ளது.
அது மட்டுமன்றி, இந்த நியமனமானது யாழ்.குடாநாட்டின் தற்போதைய இயல்புநிலைமையைக்கூடச் சீரழித்துவிடலாமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் காவலரண்கள், அதிகரித்துள்ள படையினரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களால கல்விச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ள யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் மீளமுடியாத மீண்டுமோர் நெருக்கடியான நிலைமையை தோற்றுவித்துள்ளது என்பதையும் தமிழ்க் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்ற பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்க்கமானதோர் முடிவெதையும் எடுக்காமலிருப்பது வடக்கு,கிழக்கு கல்விச் செயற்பாடுகளில் பெரும் பாதகமானதோர் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாமென்றே கருதப்படுகின்றது.
இராணுவ கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மட்டுமன்றி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உள்ளக செயற்பாடுகளும் சீராக இயங்கமுடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் நல்லூரிலுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலகத்திற்கு மகஜர் கையளிப்பதற்காக ஊர்வலமாகச் சென்ற வேளையில் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்தே கல்விச் செயற்பாடுகள் முற்றாக சீர்குலைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைவிட, திருகோணமலை உட்துறைமுக வீதியில் வைத்து 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு இரு மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் அது தொடர்பாக பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொழும்பிலிருந்து பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதிபெற்று திருகோணமலைக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினரே 5 தமிழ் மாணவர்கள் மீதான படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேரடியாகச் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தபோதும்கூட அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
மாறாக, அந்த 5 மாணவர்களும் அரச படையினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை நிரூபிக்கும் வகையில் புகைப்படமெடுத்து வெளியுலகிற்கு வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜன் சில தினங்களில் படுகொலை செய்யப்பட்டார்.
சாவகச்சேரி பகுதியிலுள்ள பல பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், படைத்தரப்பினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இதெல்லாவற்றிற்குமப்பால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பலர் கடந்த சில மாதங்களாக அங்கிருந்து படிப்படியாக வேறிடங்களுக்கு அச்சம் காரணமாக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகவும் அறிய வருகிறது.
வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகத்தினர் மீதான கல்விச் செயற்பாடுகளில் இவ்வாறானதோர் நெருக்கடியான நிலைமைகள் தோன்றியுள்ள இவ்வேளையில்தான் யாழ். பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக இரத்தினஜீவன் ஹூல் நியமனம் பெற்று மீண்டுமோர் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைகழகத்தின் சிரேஷ்ட இலத்திரனியல் பேராசிரியரான இரத்தினஜீவன் ஹூல், பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணம் (UTHR) என்ற அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான ராஜன் ஹூல் ,என்பவரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.thinakural.com/New%20web%20site...2/Article-3.htm


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->